Page 5 of 400 FirstFirst ... 345671555105 ... LastLast
Results 41 to 50 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #41
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like

    நமது நண்பர்கள் அனைவருக்கும் நடிகர் திலக&

    gkrishna

  2. Thanks vasudevan31355 thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #42
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like


    அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்.

    நன்றாக நினைவில் இருக்கிறது.

    ஜூன் 8 2014.

    ஒரு விளையாட்டாக திடீரென்று பாடல்களுக்கென்று ஒரு திரி துவங்கப்பட்டது. என்ன ஆகும் ஏது ஆகும் என்றெல்லாம் அப்போது கவலை இல்லை. நண்பர்கள் நல்மனதுடன் ஆதரவு தந்தனர். அப்படியே அந்த சிறிய விதைக்கு அனைவரும் தத்தம் பங்கிற்கு தண்ணீர் ஊற்றி எருவிட்டு கண்ணும் கருத்துமாக வளர்த்தனர். யாருக்கும் எவர்க்கும் எந்த சுயநலமுமில்லை. பலன் எதிர்பாராது இரவும் பகலும் கண் விழித்து உயிராக அனைவரும் வளர்த்த இந்த செடி இப்போது ஆலவிருட்சமாக அண்ணாந்து பார்க்குமளவிற்கு வளர்ந்து மரமாகி நிற்கிறது. இந்த மரத்தின் கீழ் யார் வேண்டுமானாலும் சண்டை சச்சரவு இன்றி அமர்ந்து இளைப்பாறலாம். ஓய்வெடுத்துக் கொள்ளலாம். அழகான அரட்டைகள் அளக்கலாம். அணைத்து மகிழ்ந்து இன்புறலாம். செல்லமாக சீண்டியும் கொள்ளலாம். ஒவ்வொருவரின் பலன் பாரா உழைப்பு இம்மரத்திற்கு உண்டு. நீ,நான்,பெரியவன், சின்னவன் என்ற பேதமெல்லாம் இம்மரத்தை வளர்த்தவர்களுக்குக் கிடையாது.

    இன்னும் ஒரு வருடம் கூட முடியவில்லை. அதற்குள் 4 பாகங்கள். எவ்வளவு தகவல்கள்! எத்தனை பாடல்கள்! எத்தனை பாடுபடல்கள்! எத்துணை விஷயங்கள்!

    பழைய பாடல்களுக்கு 'போக வேண்டியதுதானே மதுர கானத்திற்கு' என்று சொல்லுமளவிற்கு அவ்வளவு விஷயங்கள், அம்சமான தொடர்கள்.

    அனைவரும் இன்பம் பெற வேண்டும் என்றே வளர்க்கப்பட்ட மரம். பிரதிபலன் பாராமல் இம்மரத்தின் வளர்ச்சிக்கு ராப்பகலாக பாடுபட்ட நல் இதயங்கள் அனைத்துக்கும் என் இதயம் நெகிழ்ந்த நன்றி! நன்றி!
    Last edited by vasudevan31355; 22nd May 2015 at 07:29 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  5. #43
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    திரு K .V - உங்களுக்குப் பிடித்த பாடல் - இதை நீங்களே போற்றிருந்தால் இன்னும் மகிழ்ச்சி அடைந்திருப்போம் . ( பிறகு தவறாக போட்டு விட்டேன் என்று கூட சொல்லியிருக்கலாம் - 5 நிமிடமாவது சந்தோஷப்பட்டிருப்போம் ) . எண்ணங்கள் இணையும் போது ஏன் மனங்கள் இணைவதில்லை என்று புரியவில்லை . அந்த மாதவ கண்ணன் சற்றே வளர்ந்தவுடன் திருடுவதை அதிகமாக தொடரவில்லை - ஆனால் நம்ம ( சின்ன ) கண்ணனோ இன்னும் திருடுவதை நிறுத்தவில்லை - xray/scan செய்து பார்த்தால் , நம் எல்லோருடைய இருதயங்களும் அவரால் என்றோ திருடப்பட்டது வெளிச்சத்திற்கு வரும் . திருடப்பட்ட இடங்களில் இன்று மலர்ந்துகொண்டு இருப்பது பூக்களின் கூட்டமே !!

    அன்புடன்


  6. Likes Russellmai, adiram, kalnayak liked this post
  7. #44
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    வாங்க நெல்லை மைந்தர் கிருஷ்ணா அவர்களே வாங்க.

    உங்களை அழைத்து வந்த வாசுதேவனுக்கும் நன்றி. அவர் அழைப்பை ஏற்று வந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரிக்கு கலகலப்பைக் கொண்டு வந்ததற்கும் நன்றி. எதோ நீங்கள் எல்லாம் திட்டம் போட்டு ஓய்வெடுத்துக்கொண்டு மீதம் இருக்கும் என்னைப் போன்றவர்களை எழுத விட்டு (உடன் சி.க.வை மட்டும் அனுப்பி விட்டீர்கள். அதற்காக நன்றி.) வேடிக்கை பார்த்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். வாய்ப்பிற்கு நன்றி. நீங்கள் எல்லாம் உடன் எழுதி நான் எழுத தொடர்ந்து வாய்ப்பு வழங்குவீர்கள் என்று வேண்டுகிறேன்.

    ராஜ்ராஜும், கோகுல் அவர்களும் வரவேண்டும். அவர்கள் இருவரும் வந்தால் எல்லா உறுப்பினர்களும் மீண்டும் இணையும் உற்சாகத் திரியாகும்.
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  8. Thanks gkrishna thanked for this post
  9. #45
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post

    அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்.

    நன்றாக நினைவில் இருக்கிறது.

    ஜூன் 8 2014.

    ஒரு விளையாட்டாக திடீரென்று பாடல்களுக்கென்று ஒரு திரி துவங்கப்பட்டது. என்ன ஆகும் ஏது ஆகும் என்றெல்லாம் அப்போது கவலை இல்லை. நண்பர்கள் நல்மனதுடன் ஆதரவு தந்தனர். அப்படியே அந்த சிறிய விதைக்கு அனைவரும் தத்தம் பங்கிற்கு தண்ணீர் ஊற்றி எருவிட்டு கண்ணும் கருத்துமாக வளர்த்தனர். யாருக்கும் எவர்க்கும் எந்த சுயநலமுமில்லை. பலன் எதிர்பாராது இரவும் பகலும் கண் விழித்து உயிராக அனைவரும் வளர்த்த இந்த செடி இப்போது ஆலவிருட்சமாக அண்ணாந்து பார்க்குமளவிற்கு வளர்ந்து மரமாகி நிற்கிறது. இந்த மரத்தின் கீழ் யார் வேண்டுமானாலும் சண்டை சச்சரவு இன்றி அமர்ந்து இளைப்பாறலாம். ஓய்வெடுத்துக் கொள்ளலாம். அழகான அரட்டைகள் அளக்கலாம். அணைத்து மகிழ்ந்து இன்புறலாம். செல்லமாக சீண்டியும் கொள்ளலாம். ஒவ்வொருவரின் பலன் பாரா உழைப்பு இம்மரத்திற்கு உண்டு. நீ,நான்,பெரியவன், சின்னவன் என்ற பேதமெல்லாம் இம்மரத்தை வளர்த்தவர்களுக்குக் கிடையாது.

    இன்னும் ஒரு வருடம் கூட முடியவில்லை. அதற்குள் 4 பாகங்கள். எவ்வளவு தகவல்கள்! எத்தனை பாடல்கள்! எத்தனை பாடுபடல்கள்! எத்துணை விஷயங்கள்!

    பழைய பாடல்களுக்கு 'போக வேண்டியதுதானே மதுர கானத்திற்கு' என்று சொல்லுமளவிற்கு அவ்வளவு விஷயங்கள், அம்சமான தொடர்கள்.

    அனைவரும் இன்பம் பெற வேண்டும் என்றே வளர்க்கப்பட்ட மரம். பிரதிபலன் பாராமல் இம்மரத்தின் வளர்ச்சிக்கு ராப்பகலாக பாடுபட்ட நல் இதயங்கள் அனைத்துக்கும் என் இதயம் நெகிழ்ந்த நன்றி! நன்றி!
    வாசு சார், திரியை தொடங்கி வளர்க்க முக்கிய காரணமாக நீங்கள் இருந்தாலும் அந்த வளர்ச்சிக்கான பெருமையை எல்லாருக்கும் பகிர்ந்தளிக்கும் உங்கள் பெருந்தன்மைக்கு நன்றி.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  10. Thanks vasudevan31355 thanked for this post
  11. #46
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    [QUOTE=g94127302;1227571]திரு K .V - உங்களுக்குப் பிடித்த பாடல் - இதை நீங்களே போற்றிருந்தால் இன்னும் மகிழ்ச்சி அடைந்திருப்போம் . ( பிறகு தவறாக போட்டு விட்டேன் என்று கூட சொல்லியிருக்கலாம் - 5 நிமிடமாவது சந்தோஷப்பட்டிருப்போம் ) . எண்ணங்கள் இணையும் போது ஏன் மனங்கள் இணைவதில்லை என்று புரியவில்லை . அந்த மாதவ கண்ணன் சற்றே வளர்ந்தவுடன் திருடுவதை அதிகமாக தொடரவில்லை - ஆனால் நம்ம ( சின்ன ) கண்ணனோ இன்னும் திருடுவதை நிறுத்தவில்லை - xray/scan செய்து பார்த்தால் , நம் எல்லோருடைய இருதயங்களும் அவரால் என்றோ திருடப்பட்டது வெளிச்சத்திற்கு வரும் . திருடப்பட்ட இடங்களில் இன்று மலர்ந்துகொண்டு இருப்பது பூக்களின் கூட்டமே !!

    அன்புடன்


    நன்றி திரு.ரவி சார். மன்னிக்கவும். எனக்கு இந்த பாடலை தரவேற்றக் கூடாது என்ற எண்ணம் கிடையாது. உண்மையில், எனக்கு பாடல்களை தரவேற்றத் தெரியாது. தெரிந்தால் நானே பதிவிட்டிருப்பேன். இதுவரை எந்தப் பாடலையும் நான் தரவேற்றியதும் இல்லை. வாசு சார், சின்னக்கண்ணன், கல்நாயக் ஆகியோர்தான் நான் சொல்லும் பாடல்களை தரவேற்றி உதவியிருக்கிறார்கள். இருந்தாலும் விரைவில் கற்றுக் கொண்டு தரவேற்ற முயற்சிக்கிறேன். எனக்காக நீங்கள் தரவேற்றியதற்கு நன்றி.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  12. Likes adiram, vasudevan31355, Gopal.s liked this post
  13. #47
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    [quote=raghavendra;1227550]கலை..
    இதோ நீங்கள் கேட்ட ஒரு தாய் மக்கள் பாடல்..


    நன்றி திரு. ராகவேந்திரா சார். ஒருதாய் மக்கள்பாடல் கிடைக்கவில்லை என்று சின்னக்கண்ணன் சொன்னதும் கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. சிரமப்பட்டு தேடி கண்டுபிடித்து தரவேற்றியதற்கு மிக்க நன்றி சார்.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  14. #48
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    சி.க. சார்
    பாகம் நான்கினை வெற்றிகரமாகத் துவக்கி கிருஷ்ணாவையும் வரவைத்து விட்டீர்கள். கண்ணனை நினைத்தால் சொன்னது நடக்கும் என்ற பாட்டு உண்மையாகி விட்டது பார்த்தீர்களா.
    தங்களுக்கு என் உளமார்ந்த வாழ்த்துக்கள்.
    பாகம் மூன்றினை மிகச் சிறப்பாக நடத்திச்சென்றதற்கும் உளமார்ந்த பாராட்டுக்கள். நடுவில் கணினியின் கோளாறால் பல நாட்கள் பங்கேற்க முடியவில்லை என்றாலும் மிகவும் விறுவிறுவென பாகம் மூன்று பறந்து விட்டது. இதற்கு பெரிதும் துணை நின்றவர் பெயரில் மட்டும் கல்லை வைத்துக்கொண்டு உள்ளத்தில் மென்மையை வைத்திருக்கும் கல் நாயக் அவர்களே. அவருக்கே பெரும் பங்கு பாராட்டு சேரும். நிலாத் தொடரைத் தொடர்ந்து மலரைத் துவக்கி, மதுர கானம் திரி நிலவும் மலரும் பாட, நினைவில் தென்றலை வீச வைத்தார்.

    முதலில் அவருக்குப் பாராட்டாக ஒரு பூப் பாடல்..

    இந்தப் பூவின் மனசில் என்னவோ குழப்பம். அதை அவன் அறிவானா தெரியவில்லை. அவனே கேட்கிறான், பூவே என்ன போராட்டம்...நாமும் அறிந்து கொள்ள முயல்வோமே..

    குலதெய்வம் ராஜகோபால் அவர்களின் புதல்வர்கள் சம்பத் மற்றும் செல்வன் இருவரும் இணைந்து இசையமைத்து, மறைந்த இயக்குநர் அமீர்ஜான் இயக்கிய ஓடங்கள் படத்திலிருந்து இனிமையான பாடல்...
    ராகவேந்திரா அவர்களே,

    எனக்குப் பாராட்டாக தாங்கள் வழங்கிய ஓடங்கள் படத்திற்கு நன்றி. சென்ற திரியில் வாசுதேவன் அவர்கள் பூக்கள் விடும் தூது படத்தைப் பற்றி சொன்னபோது இந்த படம் நினைவிற்கு வந்தது ஆனால் பெயர் உறுதியாக தெரியவில்லை. ஆனால் பி.எஸ். வீரப்பா அவர்களின் தயாரிப்பு என்பது நினைவில் இருந்தது. நான் வாசுதேவனிடம் கேட்கவில்லை. இப்போது எனக்கு பாராட்டாக கொடுத்துவிட்டீர்கள். இந்த பாடலை கொடுத்தபின்புதான் இங்கே நடப்பதை பார்கிறோமே... வாசுதேவனும், கிருஷ்ணா அவர்களும் தகவலுக்கு மேல் தகவலாக தந்து அசத்திக் கொண்டு இருக்கிறார்கள்.
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  15. Thanks gkrishna, vasudevan31355 thanked for this post
    Likes RAGHAVENDRA liked this post
  16. #49
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    ரவி,
    நிலவுக் கோளை கல்நாயக் சுற்ற, ஆதவனைத் தாங்கள் சுற்ற, நாங்கள் உங்களைச் சுற்றிச் சுற்றிப் பாடல்களைப் பெற்று மகிழ்கிறோம்.
    இந்த வரிசையில் அடுத்த கோள் எதுவோ...
    புதனோ, அங்காரகனோ, குருவோ...

    ஆம்.. குருவை எடுத்துக் கொள்ளலாமே..

    குருவின் பெருமையைத் தாங்கள் அழகாக எடுத்துரைப்பீர்களே...
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  17. #50
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    பூவின் பாடல்கள் 10: "பூமாலை ஒன்று பூவோ இரண்டு"
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

    பத்து மாத பந்தத்தில் இப்படி பாடுகிறார்கள்!!! ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? நடித்தவர்கள் ராஜ்ஸ்ரீயும், சரோஜாதேவியும்.

    முழு படத்தையும் இங்கே பார்க்க பொறுமையில்லை. பார்த்தவர்கள் அல்லது பார்கின்றவர்கள் ஏன் இப்படி 'பூமாலை ஒன்று பூவோ இரண்டு' பாடிக்கொள்கிறார்கள் என்று சுருக்கமாக சொன்னால் தேவலை.



    சரி நம்ப பூமாலை பாட்டுக்கு மட்டும் வரலாமா?

    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  18. Thanks vasudevan31355 thanked for this post
Page 5 of 400 FirstFirst ... 345671555105 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •