Page 91 of 400 FirstFirst ... 41818990919293101141191 ... LastLast
Results 901 to 910 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #901
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    கருவின் கரு - பதிவு 71

    "வீரசு" & ஷுஸ்ரூ


    ஸ்ரீ அகஸ்திய முனிவர் தான் தொடுத்த ஸ்ரீ லலிதா நவரத்ன மாலையில் அன்னையை ஒன்பது நவரத்தின , விலை உயர்ந்த கற்களுடன் ஒப்பீடு அகமகிழ்கிறார் . நான் அவரிடமிருந்து சற்றே மாறுபட விரும்பிகிறேன் - நம் தாய் இந்த கற்களுடன் ஒப்பிடவே முடியாது - ஏனென்றால் அவள் இந்த கற்களை காட்டிலும் மிகவும் உயர்ந்தவள் ; எதனுடனும் ஒப்பிட முடியாதவள் - ஒவ்வொரு கல்லின் அருமையையும் அதைவிட ஒரு தாய் எவ்வளவு சிறந்தவள் என்பதையும் என் பதிவுகளில் பார்க்கப்போகிறோம் - பதிவிடும் பாடல்கள் இந்த கற்களின் பெயர்களைத் தாங்கி வரும் - அதனிடம் இருந்து வேறுபடும் படி என் கருத்துக்கள் அமையும் - ஒரு சிறிய வித்தியாசமான கோணம் - உங்கள் மனம் நிறையும் என் நம்புகிறேன் . முதலில் சில விட்டுப்போன பாடல்கள் :

    incredible song from Kaithapram and Music Maestro Johnson Mash..

    Lyrics : Kaithapram Damodaran Namboothiri
    Music : Johnson
    Singer : KS Chitra








  2. Likes kalnayak liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #902
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    கருவின் கரு - பதிவு 72


    நம் அன்னைக்கு ஒரு நவரத்தின மாலை - 1

    முதலில் நவரத்தினம் என்று சொல்லப்படுபவை என்ன என்ன கற்கள் என்று பார்ப்போம் - பிறகு அதன் உயர்வுகளைப்பார்ப்போம் - நம் அன்னையர்களோடு ஒப்பிடும் போது எப்படி அவைகளின் ஜொலிப்பு குறைகிறது என்பதையும் பார்ப்போம் ----

    1. வைரம்
    2. நீலம்
    3. முத்து
    4. பவளம்
    5. மாணிக்கம்
    6. மரகதம்
    7. கோமேதகம்
    8. பதுமராகம்
    9. வைடூரியம்

    1. வைரம்

    The name diamond is derived from the ancient Greek αδάμας (admas), "proper", "unalterable", "unbreakable", "untamed", from ἀ-(a-), "un-" + δαμάω (damō), "I overpower", "I tame". Diamonds are thought to have been first recognized and mined in India, where significant alluvial deposits of the stone could be found many centuries ago along the rivers Penner, Krishna and Godavari. Diamonds have been known in India for at least 3,000 years but most likely 6,000 years.

    Diamonds have been treasured as gemstones since their use as religious icons in ancient India. Their usage in engraving tools also dates to early human history. The popularity of diamonds has risen since the 19th century because of increased supply, improved cutting and polishing techniques, growth in the world economy, and innovative and successful advertising campaigns.






    அகஸ்தியரின் நவரத்தின மாலை - வைரம்
    " பற்றும் வயிரப்படை வான் வயிரப்
    பகைவர்க் கெமனாக எடுத்தவளே "
    அன்னையே - நீ வைரம் - நீ எங்கள் பகைவர்க்கு எமன் - பாதங்களில் சரணடைகிறோம் . எங்களை காப்பாற்று .......


    நம் அன்னையர் - வையிரத்திர்க்கும் வையிரமானவர்கள் - நம்மை சுற்றி வரும் பகைவர்கள் , வியாதிகள் , சூது வாதுகள் . திருஷ்ட்டிகள் அனைத்தையும் தவிடு பொடியாக்குபவர்கள் - அவள் பாதங்கள் பூஜிக்க வேண்டியவைகள் - அவர்களை விட்டு விட்டு ஆலயம் செல்வதில் ஒரு பயனும் இல்லை


    Vennilavu song from malayalam movie Vairam. Yesudas, M. Jayachandran






    எனக்கு ஒண்ணு ஆனதுனா, உனக்கு வேற பிள்ளை உண்டு,
    உனக்கு ஒண்ணு ஆனதுனா எனக்கு வேற தாயும் உண்டா ?????

    நாம் கருவறையில் உள்ளபோது நேசித்த ஒரே ஜீவன் தாய் மட்டுமே தாயின் அன்பு கரு உருவான உடன் வந்திடும் ஆனால் தாயின் மீது நாம் கொண்ட அன்பு எப்போவரும் என்று சொல்லி தெரிய கூடாது. .


  5. Likes kalnayak liked this post
  6. #903
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Courtesy:Tamil Hindu

    உருமாறும் ஏவிஎம் ஸ்டுடியோவின் முக்கியப் பகுதிகள்!

    தமிழ் சினிமாவின் மிக முக்கியமான அடையாளம் ஏவிஎம் ஸ்டுடியோ.

    உலக உருண்டையுடன் இருக்கும் ஏவிஎம் ஸ்டுடியோவில் சினிமா, சீரியல், ரியாலிட்டி ஷோ என எல்லாவிதமான படப்பிடிப்புகளும் நடந்து வருகின்றன.

    தற்போது ஏவிஎம் ஸ்டுடியோ மெய்யப்ப செட்டியாரின் மகன்கள் ஏவிஎம் சரவணனுக்கும், பாலசுப்பிரமணியனுக்கும் சொந்தமாக உள்ளது.

    இதில், பாலசுப்பிரமணியனுக்கு சொந்தமான பகுதிகள் மட்டும் இடிக்கப்படுகின்றன. அந்தப் பகுதியில் பாலசுப்பிரமணியன் அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்டலாம் என்று திட்டமிட்டுள்ளார்.

    ஸ்டுடியோக்களால் வருமானம் இல்லை என்பதாலேயே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

    கோயில், பூங்கா, காவல் நிலையம், நீதிமன்றம், பேருந்து நிலையம் என்று சினிமாவுக்குத் தேவையான எல்லா செட்டும் போடுவதற்கு வசதியாக இருந்த ஏவிஎம் ஸ்டுடியோ பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகி வருவதால், இனி சின்ன பட்ஜெட்டில் சினிமா எடுப்பவர்கள் லொக்கேஷனுக்காக கொஞ்சம் மெனக்கெட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

  7. #904
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    வாசு - உங்கள் " மாய மோதிரம் " பதிவிலிருந்து மீளவே இல்லை - மோதிரத்தை எங்கோ வைத்து விட்டு வீடு முழுவதும் தேடினேன் - உங்கள் பதிவும் , பாரதியும் சற்றே என் நினைவில் நிழலாடினார்கள் - மோதிரம் உடனே கிடைத்துவிட்டது - மனைவியின் சொல்லடியில் இருந்து தப்பித்துக்கொண்டேன் .....

    உங்கள் பதிவை மேலாக முதலில் படித்தேன் - பாரதி என்றவுடன் , சுப்பிரமணி பாரதி தான் நினைவிற்கு வந்தது - ஒரே குழப்பம் - இவர் எப்போது நீச்சல் உடையில் வந்தார் என்று - எனக்கு நானே சற்று சமாதானம் செய்துகொண்டேன் - வறுமையில் இருந்தார் - அதிக ஆடைகள் உடுத்திக்கொள்ள வறுமை தடை போட்டிருக்கும் - பிறகு இரண்டாவது தடவை படித்தபின் தான் , நான் நினைத்த பாரதி அவரல்ல என்று உணர்ந்தேன் . உங்கள் பதிவை படித்தவுடன் ஒரு சின்ன சம்பவத்தை பகிர்ந்து கொள்ளலாமா ?? Ck விற்கும் உதவியாக இருக்கும் .

    (மனைவியுடன் பொது இடங்களுக்கு செல்லும்போது உஷார்.)

    ஒரு கணவனும் மனைவியும் லிப்ட் ல 10 வது மாடியிலிருந்து கீழே வந்து் கொண்டிருக்கிறார்கள். 5வது மாடியில் அழகான இளம்பெண் ஒருத்தி லிப்ட் ல ஏறி அந்த கணவன் பக்கத்தில் நிற்க, அவன் அவளின் அழகில் மயங்கி ஜொள் விடுகிறான். சிறிது நேரத்துக்குப்பின் அவள் இவனது கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டு "இனி இப்படி செய்தால் செருப்பு பிஞ்சிரும்" னு சொல்லிட்டு அவனிடமிருந்து விலகி நிற்கிறாள். இவனுக்கோ தன் மனைவி முன்னிலையில் அடிவாங்கிய அவமானம். லிப்ட் ல இருந்து இறங்கி வெகுநேரமாகியும் மனைவியிடம் பேச வெட்கி வாயடைத்தான். வீட்டிற்கு நடக்கிறார்கள்.

    மனைவி : ஏங்க அதையே நினைச்சிகிட்டு. விடுங்க. ஏதாவது பேசிட்டு வாங்க.

    கணவன் : இல்லடி, நான் லிப்ட் ல...

    மனைவி : அட, அத தான் விடுங்க னு சொன்னேன். நீங்க ஜொள் விடுறத பொறுக்காம நான்தான் அவ இடுப்பைக் கிள்ளுனேன்.

    கணவன் : (மீண்டும் வாயடைத்தான்)

  8. Likes kalnayak, JamesFague liked this post
  9. #905
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    குட் மார்னிங்க் ஆல்

    அப்புறம் ஹிந்தி ஏக் துஜே கேலியே மேரே ஜீவன் சாத்தி ப்யார் கியா ஜாய் ஜவானி திவானி என கமல் ரத்தி லிஃப்டில் பாடுவார்..மரோசரித்ராவில் அப்படி இருக்கா என்ன..
    அவுனண்டி... அமெரிக்க அம்மாயீஈஈஈ. ரோஜுலு மாராயி... இக்கட சூடண்டி.. சிக்கா பாபோய்...


  10. Thanks chinnakkannan thanked for this post
    Likes kalnayak liked this post
  11. #906
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ஆதி காலத்தில் ராமன் திரியில் திரி நாயகரை 'தலைவர்' என்று புகழ்ந்து எழுதியவர்கள் எல்லாம் இன்று எதுவுமே என்னவென்று புரியாமல் யோக்கிய நியாயம் பேசுவது வியப்பாக உள்ளது, திடீர் திடீர் என்று காணமல் போவதும், திடீரென்று தலைவர் மேல் வந்து அக்கறை பாசம், வேஷம் காட்டுவதும், பின் வருவதும், சம்பந்தமே இல்லாமல் உளறுவதும், அப்புறம் வாங்கிக் கட்டிக் கொள்வதும் பாலம் கட்டாத இந்த ராமருக்கு ரொம்ப பழக்கமாகிவிட்ட விஷயம்தான். அதான் ஒவ்வொரு நாளும் 'லாகின்' ஆகி ஆகி, ஓடி ஓடி, மறைந்து மறைந்து, ஒளிந்து வாழும் முகமூடி விஷயம்தான் கண்கூடாகத் தெரிகிறதே. இதுகளெல்லாம் எதையுமே புரிந்து கொள்ளாமல் பெண் பிள்ளைத்தனமும், பேடித்தனமும் கொண்டு அப்பப்போ வந்து வீரம் காட்டுவதை அறியாமலா இத்தனை நாள் இங்கே குப்பை கொட்டுகிறோம்? போனால் போகுது என்று விட்டால்...எதனிடம் எப்படி குரைக்க வேண்டுமோ அதனிடம் அப்படிக் குரைத்தால்தான் அடங்குமோ!
    Last edited by vasudevan31355; 11th June 2015 at 05:59 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  12. Thanks adiram thanked for this post
    Likes adiram liked this post
  13. #907
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வாசு சார்,

    எல்லாரிடமும் நான் அன்போடு பழகினாலும், உங்கள் மீதும் ராகவேந்திரா சார், கிருஷ்ணா சார் மீதும் எனக்கு மதிப்பும் மரியாதையும் அன்பும் கூடுதலாக உண்டு. ஆரம்பத்தில் இருந்தே எங்கள் வளர்ச்சியை ஊக்குவித்தவர்கள் நீங்கள். எங்கள் திரியின் 2வது பாகம் நிறைவு பெற்றதை முன்னிட்டு ‘சர்டிபிகேட் ஆப் அச்சீவ்மென்ட்’ என்று நீங்கள் போட்டிருந்த பதிவை எல்லாம் படித்து மகிழ்ந்திருக்கிறேன். (அப்போதெல்லாம் நான் திரியில் இல்லை. பார்வையாளர் மட்டுமே)

    சில நாட்களாக (அதுவும் இன்று காலையில் இருந்து) என்னடா இது? தர்மசங்கடம் என்று மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல், பதில் சொல்லலாமா? பேசாமல் விட்டுவிடலாமா? உங்களைப் போன்றவர்கள் தவறாக நினைப்பார்களோ? எந்த வகையில் சொல்வது? (பணிகள் வேறு விரட்டுகிறது) என்று குழம்பிக் கிடந்தேன். மிக்க நன்றி சார். நமது அன்புப் பாலத்தை யாரும் உடைக்க முடியாது.

    கணவன் பட பாடல் பற்றிய உங்கள் பதிவு சிற்றின்பம் என்றால், இந்தப் பதிவு பேரின்பம்.

    அப்பாடா.... இன்னும் ஒரு 3 மாதத்துக்கு தொல்லை இல்லை.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  14. Thanks vasudevan31355 thanked for this post
    Likes vasudevan31355 liked this post
  15. #908
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ரவி சார்,
    மனதில் மிக உயர்ந்த சிந்தனைகள் இருந்தால்தான் இதுபோன்று எழுத வரும். அன்னைக்கு நவரத்ன மாலை பதிவு அருமை. அம்மா, அப்பா வேறல்ல என்பதை நீங்கள் விளக்கியிருக்கும் விதம் அற்புதம்.

    சின்னக்கண்ணன்,
    //மனசும் மெல்ல மெல்ல முரசு தட்ட ஆரம்பிக்கும் சந்தோஷத்தில்..

    ஹப்புறம் என்ன ஆகும்//

    ஹப்புறம் என்பதில் ‘அ’ வுக்கு பதில் ‘ஹ’ போட்டிருக்கிறீர்கள் பாருங்கள். அங்குதான் நிற்கிறீர்கள். குழந்தை பாட்டோடு விரைவில் வரேன். (சிக்குமங்கு இல்லை).

    திரு.ராஜேஷ்,

    //பக்தி என்பது தமிழ் மொழிக்கு மட்டும் சொந்தமல்ல.
    எல்லா மொழிகளிலும் வழிபடுதல் எல்லாம் வல்ல இறைவனை வேண்டியே ..//

    முற்றிலும் உண்மை. திரையில் பக்தி தொடர் ரசிக்க வைக்கிறது.

    ராகவேந்திரா சார்,

    தங்கள் புகழ் முகநூலிலும் பரவுவது மகிழ்ச்சி. பாராட்டுக்கள்.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  16. Thanks uvausan thanked for this post
    Likes chinnakkannan, vasudevan31355 liked this post
  17. #909
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    நன்றி கலை சார்!

    மடியில் கனம் இருந்தால்தானே வழி நெடுக நான் பயப்படுவதற்கு? சும்மாவா பாடினான் பாரதி.

    'நெஞ்சில் உரமுமின்றி......வாய்ச் சொல்லில் வீரரடி என்று'

    மனது தூய்மையாய் இருக்கும் போது கிலேசத்துக்கு இடமில்லை. ஆனால் 'மானம் அழிந்து விட வில்லையடா மறத்தமிழனுக்கு' என்று கட்டபொம்மன் கொக்கரித்தானோ இல்லையோ நான் வணங்கும் என் தெய்வம் கொக்கரித்ததே! அது மறந்து போகவில்லை. அந்த மானம் அழிந்து போகவில்லை கலை சார். நியாயம் என்றால் நியாம்தான். அநியாயம் என்றால் அநியாயம்தான்.
    Last edited by vasudevan31355; 11th June 2015 at 06:09 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  18. Likes rajeshkrv liked this post
  19. #910
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    //மனைவி : அட, அத தான் விடுங்க னு சொன்னேன். நீங்க ஜொள் விடுறத பொறுக்காம நான்தான் அவ இடுப்பைக் கிள்ளுனேன்.

    கணவன் : (மீண்டும் வாயடைத்தான்)//

    ரவி சார்,

    Last edited by vasudevan31355; 11th June 2015 at 06:15 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •