Page 7 of 40 FirstFirst ... 5678917 ... LastLast
Results 61 to 70 of 398

Thread: பாகுபலி -A SS Rajamouli Film

  1. #61
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    A candid shot of Prabhas & @RanaDaggubati from the sets of #Baahubali. #BaahubalionJuly10th #LiveTheEpic


  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #62
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like

  4. #63
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    ஒரு ”ஈ’ய வெச்சி மொத்த சினிமாவையும் திருப்பீட்டீங்களே! கரண் ஜோஹர் , ராஜ மௌலியின் சுவரஸ்யமான உரையாடல்!

    பாகுபலி படத்தின் ரிலீஸை மொத்த இந்தியாவும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது.
    பிரம்மாண்ட பொருட் செலவு, டாப் நடிகர்கள், தமிழ் , தெலுங்கு, இந்தி, மலையாளம் என நான்கு மொழி ரிலீஸ், உலக சாதனை படைத்த போஸ்டர் என படக்குழு தினம் தினம் ஒரு சர்ப்ரைஸை கொடுத்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் அப்படத்தின் இயக்குநர் ராஜமௌலியிடம் இந்தி பாகுபலியின் விநியோகஸ்தர், இந்தியின் பிரபல இயக்குநர், தயாரிப்பாளர் நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகங்கள் கொண்ட கரண் ஜோஹர் மனம் விட்டு பேசியுள்ளார்.

    கரண் : எப்படி இப்படி ஒரு படத்தை எடுத்து இந்தியாவையே ஒரு ஈர்ப்புக்கு ஆளாக்கிட்டு இவ்ளோ அமைதியா இருக்கீங்க. என்ன யோகா பண்றீங்க?
    ராஜமௌலி: நடிக்கிறேன்னு கூட சொல்லலாம்.

    கரண் : உங்க பேரு ஸ்க்ரீன்ல வரும் போது ஃபேன்ஸ்ல கைதட்டி , விசில் குடுக்கறாங்க? அப்படி என்ன செஞ்சீங்க?
    ராஜமௌலி: எல்லாமே டாப் ஹீரோக்களோட படங்கள், கமர்ஷியல், டாப் ஹீரோக்களுக்கும் ஹிட் கொடுக்கற படங்கள், அதுதான் அப்படியே ரிஃப்லெக்ட் ஆகுது.

    கரண் ; இது உங்க தன்னடக்கத்த காட்டுது. ஒரு இயக்குநரா டாப் ஹீரோக்களுக்கு ப்ளாக்பஸ்டர் படங்கள் குடுக்கறது அவளோ ஈஸி இல்லையே. அப்படி பார்த்தா அந்த ’ஈ’ படம் எப்படி. திடீர்னு ஒரு ’ஈ’ டாப் கேரக்டரா சினிமாக்குள்ள சுத்த ஆரம்பிச்சிடுச்சே. எப்படி அந்த தீம் உங்களுக்கு தோணுச்சு. நடிகர்கள் மேல இருந்த வெறுப்பா?
    ராஜ மௌலி: அய்யய்யோ அப்படி இல்லை.நடிகர்கள் ரொம்பப் பெரிய ஆயுதம். அவங்களால உங்க கதையைவே 100 மடங்கு உயர்த்த முடியும். என்னோட கெரியரே அவங்களால தான்.அவங்க மேல நான் எப்படி வெறுப்பாவேன். இந்த கான்செப்ட் எனக்கு ரொம்ப கஷ்டமாவோ, இல்லை ஒரு பிராஜெக்டாவோ தோணலை. அதே சமயம் ஆடியன்ஸை ஈஸியா கனெக்ட் பண்ண முடியும்னு தோணுச்சு. நான் இதை செய்ய முடியுமான்னு யோசிச்சிருந்தாலே கண்டிப்பா என்னால இந்த கான்செப்ட் வெச்சி பெரிய ப்ளாக்பஸ்டர் கொடுத்திருக்க முடியாது.

    கரண்:
    ஆனாலும் ஒரு ஈ யை சூப்பர் ஸ்டாராக்கி, இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வெச்சிட்டீங்க. அடுத்து கரப்பான் பூச்சிய வெச்சி படம் பண்ணி ப்ளாக் பஸ்டர் குடுத்துருவீங்க போலன்னு எல்லாரும் கேட்க ஆரம்பிச்ச்சிட்டாங்க. ஆனால் அடுத்து ’பாகுபலி’ இது உங்க சினிமா வாழ்க்கையில முக்கியமான படம், எப்படி இந்த கான்செப்ட் தோணுச்சு.
    ராஜ மௌலி: ஒரு மொமெண்ட்ல தோணுன படம் தான் இது. மண்டைக்குள்ளையே பல வருஷம் மேக்கிங் பண்ணிட்டு இருந்தேன். எனக்கு ஃபிக்*ஷன்ல படம் பண்றது ரொம்பப் பிடிக்கும். பெரிய சூழல், பெரிய பெரிய பாத்திரங்கள், சவாலான காட்சிகள்.இப்படி சொல்லப்போனா அதுதான் என்னோட உலகம். சரி நீங்க எப்படி உள்ள வந்தீங்க.
    கரண்: எனக்கு உங்க வேலை ரொம்ப பிடிக்கும். உங்க படைப்புக்கு நான் ரசிகன் . அதனால நான் உள்ள வந்துட்டேன். நீங்க காமிச்ச சின்ன ஷாட்லயே நான் இம்ப்ரஸ் ஆயிட்டேன். முக்கியமா உங்கள நம்பினேன். என்னொட கேரியர்ல இது முக்கியமான படம். அதான் படத்தோட ரிலீஸ்ல நானும் பங்கெடுத்துக்கிட்டேன்.
    ராஜமௌலி: எத்தனையோ இயக்குநர்கள் தர்மா புரடக்*ஷன்ல படம் பண்ண வெயிட் பண்றாங்க எனக்கு இந்த வாய்ப்பு குடுத்தது ரொம்ப பெரிய மரியாதையா நினைக்கிறேன். ஒரு தயாரிப்பாளரா நீங்க இயக்குநர்கள் கிட்ட என்ன எதிர்பார்க்கறீங்க.

    கரண்: நாம என்ன நினைக்கிறோம்னு இல்ல. இப்போ உங்களையே எடுத்துக்கோங்க ரொம்ப அமைதியா இருக்கீங்க. ஆனால் உங்க செயல் ரொம்ப பெரிசா இருக்கு. அதுதான் வேணும். என் உள்ளுணர்வுக்கு தோணனும், ஒரு சில படம் ஃபெயிலாகலாம், ஹிட்டடிக்கலாம் அதெல்லாம் வேற, ஆனால் என்னப் பொருத்தவரைக்கும் உள்ளுணர்வுக்கு தோணனும். ஏன்னா ஒரு சினிமாவை ப்ளாக் பஸ்டர் ஆக்கணும்னா அது டைரக்டரால மட்டும் தான் முடியும். மத்ததெல்லாம் ஒண்ணுமே இல்ல. அதே போல என் கிட்ட நாலு கதை இருக்குன்னு வருவாங்க. எனக்கு அதெல்லாம் தேவையே இல்லை.ஒரு ஐடியா அதுதான் உன்னோட மூச்சா இருக்கணும். என்னால இதை புரிஞ்சிக்கவே முடியல. ஒரு டைம்ல எப்படி மூணு நாலு படம் பண்றது. ஆனால் ஒரு விஷயம் எனக்கு ரொம்ப பிடிக்கும். இந்திப் படங்கள்ல எந்த படம் ரிலீஸ் ஆனால் படம் நல்லா இருந்தா செம அப்ளாஸ், அதே ஃபெயில்னா அவ்ளோ தான் அட்டாக் பண்ண ஆரம்பிச்சிடுவாங்க. இதே மாதிரி சௌத் சினிமாவுலயும் இருக்குமா?
    ராஜ மௌலி: என் படம்னு இல்லை எந்த படம் ரிலீஸ்னாலும் மக்கள் ரெடியா இருப்பாங்க. ஃபெயில் ஆச்சுன்னா அட்டாக் தான். இது நல்ல விஷயமா தான் நான் பாக்குறேன்.

    கரண்:
    உங்க படங்கள்ல பெஸ்ட் விமர்சனம் எந்த படத்துக்கு கிடைச்சிது.
    ரா.மௌ: என் படங்கள்ல ’ஈகா’(ஈ) , ’மார்யாத ராமண்ணா’ ரெண்டு படத்துக்கும் நல்ல விமர்சனங்கள் கிடைச்சது. ஆனால் எனக்கு தெரியலை பாகுபலி படம் மேல ஏன் இவ்ளோ ஆர்வமா இருக்காங்க ஒவ்வொருத்தரும் பாஸிட்டிவ்வான கமெண்ட்ஸ். மீடியா, மக்கள், எல்லாருமே.

    கரண் :
    ஒரு கஷ்டமான கேள்வி நீங்க திருப்தியா இருக்கீங்களா?
    ரா.மௌ: கண்டிப்பா இல்லை. இருக்க மாட்டேன்.

    கரண்:
    படம் ரிலீஸ்க்கு அப்பறம் பெரிய பிஸினஸ் பண்ணாலுமா?
    ரா:மௌ: பிஸினஸ் ஒரு பார்ட்தான. ஆனா என் மனசுக்கு திருப்தி கண்டிப்பா இருக்காது.

    கரண்:
    ஒருவேளை நீங்க நடிகர்களை வெச்சு சொல்றீங்களா. ரொம்ப டார்ச்சர் பண்ணீட்டாங்களா?
    ரா.மௌ: கண்டிப்பா நிறைய பண்ணியிருக்காங்க. ஆனா என்னன்னு தெரியலை படம் முடியற நேரத்துல மொத்த யூனிட்டும் கொஞ்சம் டவுன் ஆக ஆரம்பிச்சிட்டாங்க. சின்ன நடிகர்கள்ல ஆரம்பிச்சு டெக்னீஷியன்ஸ், அடித்தள வொர்க்கர்கள் வரைக்கும் எல்லாரும் கொஞ்சம் சோர்வுதான்.

    கரண்:
    அப்போ ரொம்ப சவாலா இருந்துருக்குமே. ஒரு கப்பலோட கேப்டன் மாதிரி மொத்த டீமையும் எனர்ஜியாக்கி வேலை வாங்கணுமே?
    ரா.மௌ: ஆமா என்னோட கேமரா மேன் எனக்கு நல்ல நண்பனும் கூட அவர் கிட்ட நான் சொன்னேன் டீம் எனர்ஜி குறையுதுன்னு. அதுக்கு அவர் கவலைப் படாதிங்க உங்கட்டருந்து எனர்ஜிய இழுத்துப்பாங்கன்னு சொன்னாரு. எனக்கு புது மாஸ்கே தேவைப்பட்டிச்சு.

    கரண்:
    இந்திப் படம் எல்லாமே பாப்பீங்களா?
    ரா.மௌ: எல்லாப் படமும் பாக்க மாட்டேன். ஒரு சில படங்கள். அதுலயும் ராஜ் குமார் ஹிராணி படங்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.இந்திப் படங்கள பொருத்த வரைக்கும் நடிகர்கள் ஒரு நடிப்பு கட்டுக்குள்ள மாறிடுறாங்க.

    கரண்:
    சரி நீங்க எப்படி நடிகர்கள செலக்ட் பண்றீங்க?
    ரா.மௌ: அதேதான் நான் சொல்ல வரேன். ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு ஸ்பெஷல் குவாலிட்டி நடிப்பு இருக்கும் ஒருவேளை என்கிட்ட இருக்கற கதைக்கு அந்த ஹீரோ கரெக்ட்னா கண்டிப்பா நான் அவர செலக்ட் பண்ணிடுவேன்.என்னோட கதைதான் என்ன அந்த நடிகர் கிட்ட கூட்டிட்டுப் போகும். அதுக்காக நடிகருக்காக ஒரு கதைய ரெடி பண்ணி நடிக்க வைக்கிறதுல எனக்கு உடன்பாடில்ல. 90கள்ல அஜய் தேவ்கன் படங்கள்லாம் என்ன ரொம்ப இம்ப்ரஸ் பண்ணும், ‘தபாங்’ படத்துல சல்மான் அம்மா கேரக்டர் முன்னாடி அழும் போது சல்மான் மேல ஒரு தனி ஈடுபாடு இருந்துச்சு. லகான் பார்த்தப்ப அமீர்கான். ஆனா என்னப் பொருத்தவரை என்னோட கதைக்கு ஒரு நடிகரை செலக்ட் பண்ணிட்டா அவரை கதைக்கேத்த மாதிரி மாத்திடுவேன்.

    கரண்: ஒரு இயக்குநரா இந்தி, தெலுங்கு, தமிழ் , இதுல உள்ள வித்தியாசங்கள் என்ன?
    ரா.மௌ: பெரிய வித்யாசங்கள்லாம் எதுவுமே இல்லை. ஒரே விஷயம் தான் சென்ஸ் கொஞ்சம் வித்தியாசப்படும். கலாச்சாரம் அதனால சின்ன சின்ன சேஞ்ச், அவ்ளோதான். மத்தபடி பெரிய வித்தியாசம்லாம், இல்ல. ஆனா இந்தி படங்கள் சமீபமா கொஞ்சம் வெரைட்டியா வருது. இதே மாதிரி தமிழ்ல கொஞ்சம் அதிகமாவே வெரைட்டி படங்கள் வருது. கமர்ஷியலும் வருது, அதே சமயம் எக்ஸ்பெரிமெண்டல் படங்களும் வருது. இந்த மாற்றம் இப்பதான் இந்தி படங்கள்ல நான் பாக்கறேன்.

    கரண்: ஆனா அதே தெலுங்கு படங்கள் ரொம்ப கலர்ஃபுல்லா, கமர்ஷியலா இருக்கே?
    ரா.மௌ: ஆமா கமர்ஷியல் அளவுல தெலுங்கு படங்கள் நல்ல முன்னேற்றம் தான் ஆனா எக்ஸ்பரிமெண்டல் படங்கள்ல கொஞ்சம் கேப் இருக்கு. இந்தி மிக்ஸிங் தான் ரெண்டுமே இருக்கு தமிழ் மாதிரி.

    கரண்
    : இங்கயும் சில பிரச்னைகள் இருக்கு. ஒரு ’பிகு’ படம் வந்தா எல்லாரும் அதே பிகு, அல்லது தணு வெட்ஸ் மணுன்னா உடனே அந்த லிஸ்ட் படம் இது ஒரு ஜெனியூன் மிஸ்டேக் இங்க பண்றாங்க. தெலுங்கு ரீமேக் சக்ஸஸ் ஆனா அடுத்து ஒரே தெலுங்கு ரீமேக். இது இங்க பொதுவாவே நடந்துட்டு இருக்கு. சரி நீங்க சொல்லுங்க பாகுபலி முடிச்சவுடனே உங்களுக்கு என்ன கிடைச்சிது.
    ரா.மௌ: எல்லாத்துலயும் கேர்ஃபுல்லா இருக்கணும். கடைசி நேரத்துல எதையும் செய்யக் கூடாது இப்படி நிறைய கத்துக்கிட்டேன். பெரிய பட்ஜெட் படங்கள் பண்ணும் போது எல்லாத்தையும் திட்டமிடணும் இப்படி நிறையா லெசன்ஸ்.

    கரண்:
    கண்டிப்பா உங்களுக்கு ஃபர்ஸ்ட் டே, லாஸ்ட் டே அனுபவம் ரொம்ப நல்லா இருந்துருக்கும். எப்படி ஃபீல் பண்ணினாங்க. எல்லாரும் ச்சே.. முடிஞ்சிடுச்சேன்னா?
    ரா.மௌ: எல்லாரும் பெரிய ரிலீஃபா நினைச்சாங்க. அப்பாடா முடிஞ்சிடுச்சுன்னு. ஆனா மிஸ்ஸிங் ஃபீல் புரமோஷன் டைம்ல எல்லாருக்கும் தொணுச்சு. ரெண்டு வருஷம் சேர்ந்து வேலை செஞ்சது. எமோஷனல் கூட ஆனோம்.

    கரண்:
    நல்லது. எனக்கும் படம் பார்க்கணும். என்னால காத்திருக்க முடியல. உங்களாலயும் தான் நினைக்கிறேன். மொத்த டீமுக்கும் வாழ்த்துகள்.

  5. #64
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    இளையராஜாவின் கோபம் தொடர்கிறது!- மதன் கார்க்கி சிறப்பு பேட்டி

    எழுதும் ஒவ்வொரு பாட்டுக்கும் ஒரு ரோல் இருக்கிறது. அதை மிகச் சரியாகச் செய்ய வேண்டும் என்ற முயற்சியைத்தான் ஒவ்வொரு பாடல் எழுதும்போதும் செய்துவருகிறேன்’’ என்கிறார், பாடலாசிரியர் மதன் கார்க்கி. ‘பாகுபலி’ படத்துக்குப் பாடல்கள் மற்றும் வசனம் எழுதுவதை முடித்த கையோடு பாரதிராஜா நடித்து இயக்கவிருக்கும் புதிய படத்துக்கு வசனம் எழுதும் வேலையைத் தொடங்கியிருக்கிறார். பாடல்கள், வசனம் ஆகியவற்றைத் தாண்டிக் கதை விவாதம், கணினி வழி மொழி ஆளுமை என்று எப்போதும் பிஸியாக இருப்பவரை ‘தி இந்து’ தமிழ் நாளிதழுக்காகச் சந்தித்தோம்.

    ‘பாகுபலி’ படத்தில் பங்களிக்கும் வாய்ப்பு எப்படி அமைந்தது?
    ‘நான் ஈ’ படத்துக்குப் பாடல்கள் எழுதினேன். அப்போது தெலுங்குப் பாடல்களைவிடத் தமிழ்ப் பாடல்கள் நன்றாக இருப்பதாகக் கூறிவிட்டு, ‘‘வசனம் எழுதுவீங்களா?’’ என்று கேட்டார். செய்யலாமே, என்றேன். அடுத்த படத்தில் இணைவோம் என்றார். பிறகு ‘பாகுபலி’ தொடக்க நிலையில் இருந்தபோது ‘இது ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கதை. முழுவதும் கற்பனை’ என்று கதையைச் சொன்னார். அவரது எதிர்பார்ப்பையும் தேவையையும் புரிந்துகொண்டு எழுத ஆரம்பித்ததும் அவருக்கு என் எழுத்து பிடித்துப்போய்விட்டது.

    ‘பாகுபலி’ இரண்டாம் பாகத்திலும் எழுதுகிறீர்களா?
    இது ஒரே கதைதான். அதை 3 மணி நேரத்துக்குள் சொல்ல முடியாது என்பதால்தான் இரண்டாம் பாகம் உருவானது. முதல் பாகத்தைப் பார்த்துவிட்டு வெளியே வரும்போது சில கேள்விகள் எழும். அந்தக் கேள்விக்கான விடைகள்தான் இரண்டாம் பாகத்தில் உள்ளன. அதன் 40 சதவீத எழுத்து மற்றும் படப்பிடிப்பு பணிகள் முடிந்துவிட்டன. அடுத்த ஆண்டு வெளியாகும்

    ‘பாகுபலி’ படத்துக்காக புதிய மொழி ஒன்றை உருவாக்கியிருக்கிறீர்களாமே?
    படத்தில் ஆதிவாசி மக்கள் கூட்டம் படை எடுத்து வருவதுபோல சில காட்சிகள் வருகின்றன. அவர்கள் பேசுவதுபோல ஒரு புதிய மொழியை உருவாக்கலாமே என்ற எண்ணம் உருவானது. அதை இயக்குநரிடம் கூறினேன். அவரும் சம்மதித்தார். புதிய ஒலியமைப்புடன் உருவாக்கிய அந்த மொழிக்கு ‘கிளிக்கி’ என்று பெயரும் வைத்தேன். இப்படியொரு முறையை ‘அவதார்’ உள்ளிட்ட சில ஆங்கிலப் படங்களிலும் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

    மென்பொருள் துணையுடன் நீங்கள் பாடல்கள் எழுதிவருவதாகச் சொல்கிறார்களே?
    அப்பா பாட்டு எழுதிக்கொடுக்கிறார் என்றும், என் பாட்டை கம்ப்யூட்டர் எழுதுவதாகவும் என் மீது இப்போதும் குற்றச்சாட்டுகள் இருந்துவருகின்றன. அப்பா எழுதிக்கொடுத்தால் நான் இந்நேரம் தேசிய விருது வாங்கியிருப்பேன். பாடலை எழுதும் கம்ப்யூட்டரை உருவாக்கியிருந்தால் நோபல் பரிசே வாங்கியிருப்பேன். தற்போதுள்ள டெக்னாலஜியை எனக்குத் துணையாக வைத்துக்கொள்ளும் ஒரு முயற்சியைத்தான் எல்லோரும் வேறு மாதிரி உணர்ந்துகொள்கிறார்கள்.
    ஒரு வார்த்தைக்காக மண்டையை உடைத்துக்கொண்டு யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை. உதாரணத்துக்கு மஞ்சம் என்று ஒரு வார்த்தை எழுதிவிட்டு அதற்கு எதுகை மோனை வார்த்தையை தேடிக்கொண்டிருக்கும்போது, இந்த டெக்னாலஜியைப் பயன்படுத்தினால் ஒரு வினாடியில் தமிழில் அதற்குப் பொருத்தமான வார்த்தைகளைக் கொட்டிவிட்டுப்போகும். அதிலிருந்து எடுத்து எழுதலாம். இதைத்தான் அந்த டெக்னாலஜி செய்யும். நேரத்தை எனது கருவிகள் மிச்சம் செய்து கொடுப்பதால் இதை உபயோகித்துவருகிறேன். அவ்வளவுதான்.

    அப்பா வைரமுத்து உங்களது வளர்ச்சியை எப்படிப் பார்க்கிறார்?
    கதை, பாடல்கள், எழுத்து இதிலெல்லாம் எனக்கு ஆர்வம் உள்ளது என்பதை ஒரு கணம்கூட அப்பா நினைத்துக்கூடப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. காரணம், நானும் பாடப் புத்தகங்களைத் தாண்டி எதையும் படித்ததில்லை. நான் கணினி சார்ந்து இயங்க வேண்டும் என்பது மட்டும்தான் அப்பாவின் விருப்பம். தம்பி கபிலன்தான் சின்ன வயதிலிருந்தே வாசிப்பு, எழுத்து என்று தீவிரமாக இருந்தான்.
    அவன்தான் அதில் வருவான் என்று அவர் நம்பினார். ஒரு கட்டத்தில் இதுதான் சரியாக இருக்கும் என்று மனம் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே இருந்தது. அதனால்தான் அப்பாவின் சிபாரிசு இல்லாமல், அவருடைய பெயரை நானும் எங்கும் பயன்படுத்தாமல் வாய்ப்பு தேடிப் பெற்றேன். இப்போது என் பயணத்தைப் பார்த்து அப்பா மகிழ்ச்சி அடைகிறார்.

    எப்போது இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றப்போகிறீர்கள்?
    நான் அவருடன் இணைந்து பணியாற்றுவதில் ஆர்வமாகத்தான் இருக்கிறேன். ஆனால், அதில் அவருக்கு விருப்பம் இல்லை. ‘உன் சமையல் அறை’ படத்துக்குப் பாடல் வேண்டும் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் என்னிடம் கேட்டார். நானும் அதற்கான வேலைகளில் இறங்கினேன். நான்தான் பாடல் எழுதப்போகிறேன் என்றதும், ‘நான் இசையமைக்க மாட்டேன்’ என்று கூறிவிட்டார். அதேபோல சமீபத்தில் ‘ருத்ரமாதேவி’ படத்தின் வசனம், பாடல்கள் எழுத கேட்டார்கள். வசனம் எழுத நேரம் வேண்டும். தற்போது அந்த சூழல் இல்லை. பாடல்கள் மட்டும் எழுதுகிறேன் என்று கூறினேன். ‘நீங்க பண்ண வேண்டாம்’ என்று ராஜா சார் கூறியதாக வந்து அவர்களே சொன்னார்கள். நான் அவருடன் பணியாற்ற விருப்பமாகத்தான் இருக்கிறேன். அப்பா மீது ராஜா சாருக்கு உள்ள கோபம் அடுத்த தலைமுறை வரைக்கும் இருக்கிறது.

    பாடல், வசனம், அடுத்து நடிப்பா?
    புகழ், பணம் எல்லாமும் அதிகம் ஈட்டும் துறைதான் நடிப்பு. அதன் பின்னால் போக எனக்கு விருப்பமில்லை. பல வாய்ப்புகளைத் தவிர்த்துவிட்டேன். . பாடல், வசனத்தை அடுத்து இப்போது கதை விவாதத்தில் ஈடுபட்டுவருகிறேன்.
    அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு ஆண்டு இடைவெளி எடுத்துக்கொண்டு இயக்கம் குறித்துப் படிக்கத் திட்டமிட்டிருக்கிறேன். அந்தப் படிப்பை முடித்துவிட்டு இங்கே உள்ள இயக்குநரிடம் ஒரு படத்தில் உதவி இயக்குநராக வேலை பார்த்த கையோடு சினிமா இயக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது.
    

  6. #65
    Junior Member Veteran Hubber paranitharan's Avatar
    Join Date
    Oct 2011
    Posts
    2
    Post Thanks / Like
    Quote Originally Posted by ilayapuyalvinodh_kumar View Post
    Digg
    //

    As If u Guys get your getup so perfect in almost all films !!! A bloated wear to cover the bloated body !!
    We always do better. Naanga kaakka muttai bodykku ponds powder pottu try panrathillae
    Real Ulaga Naayagan and Oscar Naayagan ARR

  7. #66
    Junior Member Veteran Hubber paranitharan's Avatar
    Join Date
    Oct 2011
    Posts
    2
    Post Thanks / Like
    Quote Originally Posted by VinodKumar's View Post
    // Thangamae thangamae ennachu ...//
    Jinginamani jinginamni, chinna thamarai anti-man getup eenaachu
    Real Ulaga Naayagan and Oscar Naayagan ARR

  8. #67
    Junior Member Veteran Hubber paranitharan's Avatar
    Join Date
    Oct 2011
    Posts
    2
    Post Thanks / Like
    Quote Originally Posted by selvakumar View Post
    // *clowns acting in period films*. Again, who is acting in period films? Chellamae chellmae Enna aachu? Why this nervous problem? //


    Sent from my iPhone using Tapatalk
    Ithu naveena period films so french cut la varuvom, nadikka try pannuvom. Kandukkathinga. Normala female mannerisms thaan ovvoru movielayum varuthu. Ithila athai thaan konjam improve panna try panrom. Namma eangeku athu thane acting. Paarthittu kannu vitarkira maathiri kindal pannidathinga pls
    Real Ulaga Naayagan and Oscar Naayagan ARR

  9. Likes Russellvzp liked this post
  10. #68
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ippothaiku intha padam TNla nalla porathu konjam kastamnu nenaikiren.. PN seems going strong and most likely screen count may increase during next weekend..

  11. #69
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    சுரேஷ் எழுப்பிய 'பாகுபலி' சர்ச்சைக்கு ராஜமெளலி பதில்

    'பாகுபலி' தொடர்பான நடிகர் சுரேஷின் கேள்விக்கு, இயக்குநர் ராஜமெளலி ஒரு பேட்டியில் பதிலளித்திருக்கிறார்.
    ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, சத்யராஜ், ராணா, தமன்னா, அனுஷ்கா, நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'பாகுபலி'. Arka மீடியா தயாரித்திருக்கும் இப்படத்துக்கு கீராவானி இசையமைத்து இருக்கிறார். ஜூலை 10ம் தேதி அனைத்து மொழிகளிலும் இப்படம் வெளியாகிறது. தமிழில் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் இப்படத்தை வெளியிட இருக்கிறது.

    சில நாட்களுக்கு முன்பு, “ராஜமௌலிக்கும், ‘பாகுபலி’ படத்திற்கும் நான் ஆதரவு தர மாட்டேன். ஜெகபதி பாபு, சுமன், சாய்குமார் போன்ற நடிகர்கள் குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு உரிய திறமை மிக்கவர்கள் என கருதவில்லை" என தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்திருந்தார் நடிகர் சுரேஷ். அவரது கருத்து பெரும் சர்ச்சைக்குள்ளானது.

    இக்கருத்து குறித்து 'பாகுபலி' படக்குழு கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருந்தது. 'பாகுபலி' படத்திற்காக அளித்த ஒரு வீடியோ பேட்டியில் இயக்குநர் ராஜமெளலி சுரேஷின் கருத்துக்கு பதிலளித்திருக்கிறார்.
    "நான் எப்போதுமே எனது படத்தில் நடிக்கும் நடிகர்களின் மொழியைப் பற்றி கவலைப்பட்டதில்லை. மற்ற மொழி நடிகர்கள் என் படத்தில் நடிப்பது இது முதல் முறையல்ல. போஜ்புரி நடிகர்கள், இந்தி நடிகர்கள், தமிழ் நடிகர்கள் என பலருடன் பணியாற்றி இருக்கிறேன். யாருக்குமே தெரியாத தெலுங்கு நடிகர்களுடனும் பணியாற்றி இருக்கிறேன்.

    எனது படம் மூலமாக பல நல்ல நடிகர்கள் உருவாகி இருக்கிறார்கள். அதற்கு நான் தான் காரணம் என்று எப்போதும் சொன்னதில்லை. எப்போதுமே நடிகர்களின் வரிசையில் என்னுடைய பாத்திரத்திற்கு எந்த நடிகர் பொருத்தமானவராக இருப்பார் என்று மட்டும் தான் பார்ப்பேன். எனக்கு நடிகர்களின் தமிழ், தெலுங்கு, இந்தி என்றெல்லாம் பிரிக்க தெரியாது.

    ஒரு இயக்குநராக என்னுடைய பாத்திரத்திற்கு யார் சரியாக இருப்பார் என்று பார்ப்பது எனது பணி. மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதற்காக எல்லாம் நான் கவலைப்பட முடியாது" என்று தெரிவித்திருக்கிறார் இயக்குநர் ராஜமெளலி.

  12. #70
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    பாகுபலி பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ராஜமெளலி

    இந்தியத் திரையுலகே எதிர்பார்க்கும் பிரமாண்ட படம் பாகுபலி வரும் 10ம் தேதி வெளியாகவிருக்கிறது. பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், நாசர் உள்ளிட்ட பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
    பாகுபலி படம் வெளியாவதைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமும் வெளியாகும் என்று ஏற்கெனவே படத்தின் இயக்குநர் ராஜமெளலி தெரிவித்திருந்தார். அதனபடி 35% பட வேலைகள் முடிந்துவிட்டதாம். இன்னும் 1 வருட படப்பிடிப்பு நடத்தினால் அடுத்த வருடம் பாகுபலி பார்ட் 2 வெளியாகும். முதல் பாகத்தில் வரும் வசூலை மையப்படுத்தே அடுத்த பாகத்திற்கான செலவுகளும், தொடர்ந்து வெளியீடும் இருக்கும் என்று தெரிவித்திருந்தனர்.

    இதற்கிடையே பாகுபலி பாகம் இரண்டில் சூர்யா நடிக்கவிருப்பதாக பல செய்திகள் கோலிவுட் வட்டாரத்தில் வட்டமடித்தன. இதைப்பற்றி ராஜமெளலி பேசும் போது, “ பாகுபலி படத்தில் சூர்யா இல்லை. அவ்வாறு வரும் செய்திகள் அனைத்தும் வதந்தியே. நாங்கள் பாகுபலி படத்தை வெளியிடும் வேலைகளில் இருக்கிறோம்” என்று சொல்லி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ராஜமெளலி.

    சமீபத்தில் சென்சாருக்கு சென்று யூ/எ சான்றிதழுடன், தணிக்கை அதிகாரிகளின் பாராட்டுகளும் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து ஜூலை 10ம் தேதி சுமார் 4000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் உலகளவில் பாகுபலி வெளியாகவிருக்கிறது.

Page 7 of 40 FirstFirst ... 5678917 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •