-
11th September 2015, 06:34 PM
#1
Junior Member
Senior Hubber
சிவாஜி பாட்டு-7
அந்த
எட்டையபுரத்தான் போல்
முறுக்கி விட்ட
மீசையில்லை.
அந்தப்
பாட்டுக் கோயிலின் மேல்
வெண் கோபுரமாய் எழுந்த
முண்டாசில்லை.
அவனைப் போல்
எப்போதும்
கண்களில் கோபமில்லை.
கனல் பறக்க
அவன் எழுதிய காலத்தில்
இவரில்லை.
அவனைப் போல
கவியெழுதும் தொழில்
இவருக்கில்லை.
"சிந்து நதியின் மிசை"
பாடுவதாய்
சினிமாத் திரை காட்டிய
அந்த ஒரு பாடலன்றி,
வேறெந்தப் படத்திலும்
இவரை,
அவனாகப் பார்த்ததில்லை.
ஆனாலும்...
தேனிலுஞ் சிறந்த
தமிழை வளர்த்ததிலும்,
தேசத்தின் செழுமை காண
நெஞ்சு துடித்ததிலும்,
பசியை, வறுமையை
கலை கொண்டு
ஜெயித்ததிலும்..
மாசற்ற திறமைகளால்
மக்கள் மனம்
நிறைத்ததிலும்..
அந்த
மகாகவி போலத்தானே
எங்கள்
மதிப்புக்குரிய
அய்யாவும்..!?
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
11th September 2015 06:34 PM
# ADS
Circuit advertisement
-
11th September 2015, 07:18 PM
#2
Dear Sailesh Sir,
Don't get offended. That (சரடு) was not meant at you. Sorry if it sounded like that.
Regards
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
Bookmarks