-
26th October 2015, 04:53 PM
#3791
Senior Member
Diamond Hubber
நாதஸ்வர அறிஞர் காருகுறிச்சி அருணாசலத்தின் தீவிர ரசிகர் இயக்குநர் ஏ.பி.நாகராஜன். தன்னுடைய இசைக்கு சினிமாவில் ஒரு சிறந்த வாய்ப்பினை ஏற்படுத்தித் தருமாறு காருகுறிச்சி, ஏ.பி.என்.னிடம் வேண்டுகோள் விடுத்தார்.
இதையடுத்து நாதஸ்வர இசையை பிரதானமாக கொண்ட திரைப்படம் ஒன்றினை இயக்க கதை தேடினார் ஏ.பி.என். ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த ‘தில்லானா மோகனாம்பாள்’ கதையை படமாக எடுத்தால், அதில் காருகுறிச்சியின் இசையை பயன்படுத்த முடியும் என்று அவருக்கு தோன்றுகிறது.
கதையின் உரிமை ஆனந்த விகடன் அதிபரிடமே இருக்கிறது என்று தெரிந்துகொண்டு அவரை தொடர்பு கொண்டார். “நானே அதை படமா எடுக்கலாம்னு இருக்கேன்” என்று சொல்லிவிட்டார் வாசன்.
இதையடுத்துதான் ‘திருவிளையாடலை’ கையில் எடுத்தார் நாகராஜன். ‘திருவிளையாடல்’ வெளியானவுடன் ஏ.பி.என்.னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டுகிறார் வாசன். இதுதான் சமயமென்று அவரிடம் மீண்டும் தில்லான மோகனாம்பாளை கேட்கிறார். மீண்டும் மறுக்கிறார் வாசன்.
வேறு வழியில்லாமல் ‘சரஸ்வதி சபதம்’ எடுக்கப் போய்விட்டார் ஏ.பி.என். இந்த படமும் சூப்பர்ஹிட் ஆக மீண்டும் வாசனை அணுகுகிறார். “வேணும்னா பார்ட்னர்ஷிப் போட்டு பண்ணலாமா?” என்று கொஞ்சம் இறங்கி வந்தார் ஆனந்த விகடன் அதிபர். ஏ.பி.என்.னுக்கு அதில் உடன்பாடு இல்லை என்பதால், திரும்பவும் ‘திருவருட் செல்வர்’ செய்ய போய்விட்டார்.
அதுவும் வெளியான பிறகு, தன் முயற்சியில் சற்றும் மனம் தளரா விக்கிரமாதித்தனாக மீண்டும் வாசனிடம் வந்து, ‘தில்லானா மோகனாம்பாள்’ என்று இழுக்கிறார்.
வாசனுக்கு இம்முறை மறுக்க மனமில்லை. ஐந்து ஆண்டுகளாக ஒரு பெரிய இயக்குனர், இந்த கதையை கேட்டு திரும்பத் திரும்ப வந்து நிற்கிறாரே என்று ஆச்சரியம்.
“அந்த கதையை என்னாலே சரியா திரைக்கதை அமைக்க முடியலை. நீங்களே எடுத்துக்கங்க. ஒரு பத்தாயிரம் மட்டும் கொடுத்துடுங்க” என்றார். ஐம்பதாண்டுகளுக்கு முன்பு ஒரு கதைக்கு இது பெரிய தொகைதான்.
ஐம்பதாயிரம் கேட்டாலும் கொடுக்க தயாராகதான் இருந்தார் ஏ.பி.என். உடனே ஒரு பத்தாயிரத்துக்கு செக் கிழித்து விஜயலட்சுமி பிக்சர்ஸ் சார்பில் கொடுத்துவிட்டார்.
அடுத்து கதை எழுதிய கொத்தமங்கலம் சுப்புவை தேடிப் போனார். சுப்பு அப்போது கண் அறுவைச் சிகிச்சை செய்துக் கொண்டு மருத்துவமனையில் இருந்தார். மருத்துவமனையில் தேடிப்போய் ஒரு தொகையை கொடுத்து ஆசிர்வாதம் வாங்கினார் நாகராஜன். “இந்த காலத்துலே அதுவும் சினிமாத்துறையிலே இப்படிப்பட்ட ஆளா இருக்கியேய்யா... உன் படம் நல்லா வரும்” என்று வாழ்த்தினார் சுப்பு.
ஏ.பி.என். கொடுத்த தொகையை வாங்க மறுத்து, ”என் கதைக்கு எனக்கு ஏற்கனவே சம்பளம் வந்தாச்சி” என்றார்.
இவருக்கு ஆச்சரியம். எப்படி என்று கேட்டபோது பாக்கெட்டில் இருந்த செக்கை எடுத்து நீட்டினார். இவரிடம் வாசன் வாங்கிய செக், அப்படியே சுப்பு பெயருக்கு endorse செய்யப்பட்டிருக்கிறது. இருந்தும் ஏ.பி.என். தன் திருப்திக்காக வற்புறுத்தி சுப்புவுக்கு ஒரு பெருந்தொகை கொடுத்தார்.
எந்த காருகுறிச்சிக்காக ‘தில்லானா மோகனாம்பாள்’ எடுத்தே ஆகவேண்டும் என்று ஏ.பி.என். அடமாக நின்றாரோ, அந்த காருகுறிச்சி ’தில்லானா மோகனாம்பாள்’ வெளிவருவதற்கு ஐந்து ஆண்டுகள் முன்பே காலமாகிவிட்டார்.
படம் பிரமாதமான வெற்றியை பெற்றபிறகு அதற்கான கிரெடிட்டை ஏற்றுக்கொள்ளவும் ஏ.பி.என். மறுத்துவிட்டார். “அந்த கதையில் நடித்த நடிக நடிகையரின் வெற்றி அது” என்றார்.
அந்த காலத்தில் மனிதர்கள் ஒருவருக்கு ஒருவர் பெருந்தன்மை காட்டுவதில்தான் போட்டியாக இருந்திருக்கிறார்கள்.
- யுவகிருஷ்ணா
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
26th October 2015 04:53 PM
# ADS
Circuit advertisement
-
26th October 2015, 06:11 PM
#3792
Junior Member
Senior Hubber
நினைப்போம்.மகிழ்வோம்-22
"பராசக்தி".
ரங்கூனிலிருந்து படாத பாடு
பட்டு கப்பலில் நம் தாயகம்
வந்து சேர்ந்து, எதையோ
வென்று விட்ட நிம்மதி மிகுந்த
பெருமிதப் புன்னகையுடன்
கப்பலிலிருந்து இறங்கி
வருவாரே.. !?
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
26th October 2015, 06:19 PM
#3793
Junior Member
Senior Hubber
நினைப்போம்.மகிழ்வோம்-22
"பராசக்தி".
ரங்கூனிலிருந்து படாத பாடு
பட்டு கப்பலில் நம் தாயகம்
வந்து சேர்ந்து, எதையோ
வென்று விட்ட நிம்மதி மிகுந்த
பெருமிதப் புன்னகையுடன்
கப்பலிலிருந்து இறங்கி
வருவாரே.. !?
-
26th October 2015, 06:24 PM
#3794
Junior Member
Senior Hubber
நினைப்போம்.மகிழ்வோம்-23
"நவராத்திரி".
'இரவினில் ஆட்டம்' பாடலில்
அலட்சியப் புன்னகையுடன்,
அடர்ந்த ஒற்றைப் புருவம்
மட்டும் உயர்த்திக் கொண்டு
"பகலினில் தூக்கம்" பாடி விட்டு, விரலிடுக்கில் புகையும் துண்டு சிகரெட்டை சுண்டி விடுவாரே..!?
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
26th October 2015, 06:28 PM
#3795
Junior Member
Senior Hubber
நினைப்போம்.மகிழ்வோம்-24
"பார்த்தால் பசி தீரும்"
"உள்ளம் என்பது ஆமை"
பாடலின் இடையே 'தண்ணீர்
தணல் போல் எரியும்..' என்கிற
வரி இரண்டாம் முறையாக
பாடப்படும் போது,பக்கவாட்டில்
அழகு முகம் காட்டி, தத்ரூபமாய் செய்யும் வாயசைப்பு.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
26th October 2015, 06:38 PM
#3796
Junior Member
Diamond Hubber
சிவா சார்
Originally Posted by
sivaa
புத்தம் புதிய காப்பி போல் இருக்கிறது. பெயரை ரூபாய் நோட்டில் வரும் வாட்டர் மார்க் போல் பயன்படுத்தினால் போட்டோக்களின் முழு பரிணாமத்தையும் ரசிக்க ஏதுவாக இருக்கும்.
Last edited by senthilvel; 26th October 2015 at 06:46 PM.
-
26th October 2015, 06:55 PM
#3797
Junior Member
Diamond Hubber
வாசு சார்
ஆவணங்களைப் பற்றி ஒவ்வொருவரிடமும் பேசும் பொழுது பல விஷயங்கள் தெரியமுடிகிறது.அவரை பிரிண்ட்செய்த காகிதங்களும் கட்டுரைகளும்தான் தனிமனிதரைப்பற்றிய அதிகமான ஆவணங்களாக தமிழில் அவர் கோலோச்சிய காலகட்டங்களில் இருந்திருக்கும். ஓவ்வொருவரிடமும் உரையாடும் போதும் நமக்குத் தெரியாத கேள்விப்படாத விஷயங்களை அவர்கள் கூறுவதிலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது.
தங்களின் உயர்ந்த பாராட்டிற்கு நன்றி.
Last edited by senthilvel; 26th October 2015 at 08:38 PM.
-
27th October 2015, 03:01 AM
#3798
Junior Member
Platinum Hubber
-
27th October 2015, 03:03 AM
#3799
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
27th October 2015, 03:03 AM
#3800
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
Bookmarks