-
8th September 2015, 05:14 PM
#1571
Senior Member
Seasoned Hubber
ஆஹா.. அற்புதம் வாசு சார்..
ஒவ்வொரு ஃப்ரேமிலும் தலைவரின் சூப்பர் ஸ்டைல் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும். மஞ்சுளாவின் இரு தோள்களிலும் கைகளைப் போட்டு மிகவும் நளினமாக ஒரு Oscillation, மலைத்தேன் ஒன்று வரியின் போது இடது கையை மட்டும் பயன்படுத்தி வெளிப்படுத்தும் அட்டகாசம்...
இந்த ஜோடியும் தூள் கிளப்பியது.
இன்னோர் சூப்பர் டூப்பர் பாடலில் ந.தி. மஞ்சுளா.. என்ன அமர்க்களமான ஸ்டைல். என்ன அருமையான உடையலங்காரம்.. தலைவரின் முகம் காணக் கண் கோடி வேண்டும்.
நாளை நாளை ... உத்தமன் படத்திலிருந்து..
கையைப் பின்னால் கட்டிக்கொண்டே பாடும் அழகு.. பார்த்துக்கொண்டே இருக்கலாம்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
8th September 2015 05:14 PM
# ADS
Circuit advertisement
-
8th September 2015, 05:43 PM
#1572
Senior Member
Diamond Hubber
Originally Posted by
RAGHAVENDRA
ஆஹா.. அற்புதம் வாசு சார்..
ஒவ்வொரு ஃப்ரேமிலும் தலைவரின் சூப்பர் ஸ்டைல் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும். மஞ்சுளாவின் இரு தோள்களிலும் கைகளைப் போட்டு மிகவும் நளினமாக ஒரு Oscillation, மலைத்தேன் ஒன்று வரியின் போது இடது கையை மட்டும் பயன்படுத்தி வெளிப்படுத்தும் அட்டகாசம்...
இந்த ஜோடியும் தூள் கிளப்பியது.
இன்னோர் சூப்பர் டூப்பர் பாடலில் ந.தி. மஞ்சுளா.. என்ன அமர்க்களமான ஸ்டைல். என்ன அருமையான உடையலங்காரம்.. தலைவரின் முகம் காணக் கண் கோடி வேண்டும்.
நாளை நாளை ... உத்தமன் படத்திலிருந்து..
கையைப் பின்னால் கட்டிக்கொண்டே பாடும் அழகு.. பார்த்துக்கொண்டே இருக்கலாம்.
பொறக்கணும் சார். இன்னொருத்தன் பொறக்கணும். அதுவும் முடியாது. இறைவனே இறைவனைப் படைத்தான்.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
8th September 2015, 07:33 PM
#1573
Junior Member
Senior Hubber
Originally Posted by
Muthaiyan Ammu
கண்மூடித்
தவமிருக்கும்
கலைஞானி.
கண்டிப்பாய்
இதுதான்
ஆண் வடிவக்
கலைவாணி.
Sent from my GT-S6312 using Tapatalk
-
Post Thanks / Like - 0 Thanks, 4 Likes
-
8th September 2015, 07:58 PM
#1574
Junior Member
Devoted Hubber
Today's Junior vikatan
பாரதிமுருகன், மணலூர்பேட்டை.
சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசு சார்பாக மணிமண்டபம் கட்டப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துவிட்டாரே?
சென்னை கடற்கரை சாலையில் தி.மு.க ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட சிவாஜி சிலையை எப்படியாவது எடுத்தாக வேண்டும். அதற்காகத்தான் இந்த மணிமண்டபம் அறிவிப்பு. மணிமண்டபம் பூஜையில் கலந்துகொண்டது சிவாஜி குடும்பம். சிலை திறப்பு விழாவில் கலந்துகொண்டது சிவாஜி குடும்பம். மணிமண்டபத்தை இத்தனை ஆண்டுகள் கட்டாதது பற்றி எதுவும் கேட்கவில்லை. ஜெயலலிதா அறிவித்ததும் நன்றி சொல்ல மொத்தமாகப் போயிருக்கிறார்கள். சிலையை எடுக்கப் போகிறோம் என்று நீதிமன்றத்தில் சொன்னபிறகும் அதற்கு எந்த விமர்சனத்தையும் செய்யவில்லை அவர்கள். இப்படித்தான் ‘ஜாக்கிரதை’யாக வாழணும். புரிஞ்சுக்கோங்க.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
8th September 2015, 08:52 PM
#1575
Senior Member
Seasoned Hubber
Puthiya Thalaimurai editorial
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
8th September 2015, 09:13 PM
#1576
Junior Member
Senior Hubber
சிவாஜி பாட்டு-4
மனசு மறக்காத பாட்டு.
எண்பதுகளில் வீசிய
காற்றுக்கு இனிமை சேர்த்த
பாட்டு.
நம் நடிகர் திலகத்தின் சிம்மக்
குரலோடு கச்சிதமாய்ப் பொருந்தி வியப்பூட்டிய பாட்டு.
தன்னுடன் பிறவாதவளை
தங்கையாக ஏற்றுக் கொண்டு,
அவளது பிள்ளைக்கு மாமனாக
தன்னை வரித்துக் கொண்டு
அந்தக் குழந்தையின் நல்வாழ்வைக் கனவு காணுகிற
ஒரு மாமனிதனின் பெருமை
பேசும் பாட்டு.
கருகருவென அடர்ந்து செரிந்த
இரு புருவங்களுக்கும் ஒரு
மெல்லிய இணைப்புக் கொடுத்து ஒப்பனை செய்தால்
பளீரென்று ஒரு இஸ்லாமியர் வந்து நிற்கிற அதிசயம்..
நடிகர் திலகத்தால் மட்டுமே
நிகழ்கிறது.
துவங்கிய பாடல் முடியும்
வரைக்கும் நடிகர் திலகத்தின்
முகத்தில் நீடித்துத் தொடரும்
கனிவு..
அழகோ அழகு.
"கருணை பொங்கி வரும் எனது காவல் தெய்வம்"-என்று
தங்கைக்காரி பாடும் போது
புன்னகை முகம் காட்டும் பெருமிதம்..
அதை விட அழகு.
"தீபம்" எனும் சிறு வார்த்தையை சங்கதிகளோடு
பாடும் போது, நடிக மாமேதை தோள் குலுங்கச் செய்கிற
வாயசைப்பு..
அழகுக்கெல்லாம் அழகு.
ரவிவர்மன்தான் வரவேண்டும்..
அந்த அழகுகளையும் வரைய.
-
Post Thanks / Like - 0 Thanks, 4 Likes
-
8th September 2015, 10:19 PM
#1577
Senior Member
Seasoned Hubber
இமைக்காமல் இமைகளைக்
காண வைத்த இதய தெய்வம்
ஏழேழு பிறப்பினிலும் -
எங்களுக்கு நீதான் எல்லாம்
ஐம்பதிலும் ஆசை வரும் -
இல்லை இல்லை...
எங்கள் தெய்வத்தின் மேல்
எண்பதிலும் ஆசை வரும்...
என்பதிலும் ஆசை வரும்..
அரிதான பாடலை
அழகாகத் தந்திட்ட
ஆதவனார் ரவி என்ற
அற்புத நட்பிற்கு
அழகான தமிழில்
நன்றி சொல்ல விரும்புகிறேன்.
ஆனால் அதற்கேற்ற புலமையும்
ஆதவனே, நீதான் தர வேண்டும்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
8th September 2015, 10:51 PM
#1578
Junior Member
Junior Hubber
அன்பு நண்பர்களே !
சிவந்தமண் நம்நாடு பட விவகாரம் குறித்து சில விளக்கங்கள் அளிக்கிறேன்!
முதல் விளக்கம் வசூல் பற்றியது! வழக்கம் போல் ரசிகர்மன்ற பிட் நோட்டீஸ் தான்! சிவந்தமண் தான் தமிழ்நாட்டில் அதிக இடங்களில் 100 நாட்கள்
ஓடியது என்று அவர்களே ஒப்புகொள்கிரார்கள்! சென்னையில் சிவந்தமண் நான்கு திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடியது! நம்நாடு மூன்று திரைகளில் 100 நாட்கள் ஓடியது ! பின்பு எப்படி வசூல் நம்நாடு அதிகம் வரும்? கொஞ்சம் கூட லாஜிக் இல்லையே? எங்கள் ரசிகர் மன்ற நோட்டீஸ் பார்த்து சிவாஜி ரசிகர்கள்
சும்மா இருந்திருப்பார்களா? என்று கேட்கிறார்கள்! நிச்சயம் அன்று எதிர்வினை புரிந்திருப்பார்கள்! எல்லா ஆதாரங்களும் எல்லா நேரமும் நம் கைகளுக்கு
கிடைத்து விடாது! இப்பவும் உறுதியாக சொல்கிறேன்! சிவந்தமண் தான் நம்நாட்டை விட வசூல் அதிகம்!
இரண்டாவது முக்கிய பிரச்சனைக்கு வருகிறேன்! இயக்குனர் ஸ்ரீதர் சிவந்தமண் வசூல் குறைவு என்று கல்கி வார பத்திரிகையில் கூறவேயில்லை! சிவந்தமண் நல்ல வெற்றிப்படம் என்றே திரும்பிபார்கிறேன் என்று அவர் கல்கியில் எழுதிய தொடரில் குறிப்பிட்டார்! அந்த தொடரை அப்போது நானும்
படித்திருக்கிறேன் அந்த தொடர் கல்கியில் 1991-1994 காலகட்டங்களில் வந்ததாக நினைவு! வருடங்களில் நிச்சயம் மாற்றமிருக்காது! மாற்று முகாம்
நண்பரே! நீங்கள் பதிவிட்ட புத்தகத்தில் உள்ள வாசககங்கள் கல்கியில் ஸ்ரீதர் எழுதிய வார்த்தைகளே இல்லை! நான் உங்களை குறை சொல்லவில்லை!
நீங்கள் கூறும் புத்தகத்தின் எழுத்தாளர் ஸ்ரீதர் இல்லை நண்பரே! அந்த எழுத்தாளர் சந்திரமௌலி சிவந்தமண் குறித்து கல்கியில் ஸ்ரீதர் சொன்னதை முற்றிலும் மறைத்து பொய் எழுதியுள்ளார்! அந்த புத்தகத்தில் சிவாஜியை மட்டம் தட்டி உங்களவரை வானளாவ புகழ்ந்து எழுதியுள்ளதை பார்த்தாலே
அந்த எழுத்தாளரின் உண்மை முகம் தெரியவில்லையா? மாற்று முகாம் நண்பருக்கு ஒரு கேள்வி! சிவந்தமண் வெற்றி குறித்து கல்கி யில் ஸ்ரீதர் எழுதிய வாக்கியங்களும் நீங்கள் பதிவு செய்த புத்தகத்தின் ஆசிரியர் எழுதிய வாக்கியங்களும் ஒன்று தான் என்று உறுதியாக உங்களால் கூறமுடியுமா?
உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்!
மிக்க நன்றி !
-
8th September 2015, 11:05 PM
#1579
Junior Member
Regular Hubber
டிகர் திலகம் சிவாஜி அவர்கள் தான் முதன் முதலில்1959 ல் அரசின் சத்துணவு திட்டத்திற்கு ருபாய் ஒரு லட்சம் பிரதமர் திரு நேரு அவர்களிடம் அளித்தார்.தற்போதைய மதிப்பு ருபாய் 20.28 கோடி.
1960 ல் வீர பாண்டிய கட்டபொம்மன் நாடகம் 116 முறை நடத்தி எல்லா நாடக நடிகர்களுக்கும் கொடுத்தது போக தன பங்கு ருபாய் 42 லட்சத்தை கல்விக்காகவும் நூலகத்திற்கும் நன்கொடையாக வழங்கினார்.அதன் மதிப்பு தெரியுமா ருபாய் 600 கோடிக்கும் மேல்.உண்மையான படிக்காத மேதை.அவர் நினைதிர்ந்தால் 40 சாந்தி திடேர்கள் கட்டி இருக்கலாம்..
இந்திய சீன போர் மூடபோது தன்னிடம் இருந்த 600 பவுன் நகைகளை திரு லால் பகதூர் சாஸ்திரி அவர்களிடம் அளித்தது போக நிதி வசூல் செய்து கொடுத்தார்.
வெல்ல நிவாரண நிதி ,புயல் நிதி,கல்லூரிகள் கட்ட நிதி ,நூலகங்கள் அமைக்க நிதி என்று கணக்கில் அடங்க நன்கொடைகளை அளித்த வள்ளல் அவர்.
தங்கபதகத்தின் நாடகம் மூலம் வசூலித்து திரு கக்கன் அவர்களுக்கு RETIREMENT BENEFIT வழங்கிய வள்ளல் .
ஒருவரை பற்றி எழுதுவதற்கு முன்பு தெரிந்து கொண்டு எழுதுங்கள்.இல்லையேல் அமைதியை இருங்கள் .எங்கள் பொறுமையை SOTHIKKATHEER
12 mins · Like · 1
Chandrasekaran Veerachinnu 1967 இல் கொய்னா பூகம்பத்தின் பொது ஒய்.பி.சவானிடம் ருபாய் 11.00 லட்சங்கள் நடிகர்திலகம் கொடுத்தாரே அது நாட்டுக்கா அல்லது வீட்டுக்கா .எழுதுமுன் பார்த்து எழுதுங்கள் புதிய தலைமு
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
8th September 2015, 11:07 PM
#1580
Junior Member
Regular Hubber
Chandrasekaran Veerachinnu நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் தான் முதன் முதலில்1959 ல் அரசின் சத்துணவு திட்டத்திற்கு ருபாய் ஒரு லட்சம் பிரதமர் திரு நேரு அவர்களிடம் அளித்தார்.தற்போதைய மதிப்பு ருபாய் 20.28 கோடி.
1960 ல் வீர பாண்டிய கட்டபொம்மன் நாடகம் 116 முறை நடத்தி எல்லா நாடக நடிகர்களுக்கும் கொடுத்தது போக தன பங்கு ருபாய் 42 லட்சத்தை கல்விக்காகவும் நூலகத்திற்கும் நன்கொடையாக வழங்கினார்.அதன் மதிப்பு தெரியுமா ருபாய் 600 கோடிக்கும் மேல்.உண்மையான படிக்காத மேதை.அவர் நினைதிர்ந்தால் 40 சாந்தி திடேர்கள் கட்டி இருக்கலாம்..
இந்திய சீன போர் மூடபோது தன்னிடம் இருந்த 600 பவுன் நகைகளை திரு லால் பகதூர் சாஸ்திரி அவர்களிடம் அளித்தது போக நிதி வசூல் செய்து கொடுத்தார்.
வெல்ல நிவாரண நிதி ,புயல் நிதி,கல்லூரிகள் கட்ட நிதி ,நூலகங்கள் அமைக்க நிதி என்று கணக்கில் அடங்க நன்கொடைகளை அளித்த வள்ளல் அவர்.
தங்கபதகத்தின் நாடகம் மூலம் வசூலித்து திரு கக்கன் அவர்களுக்கு RETIREMENT BENEFIT வழங்கிய வள்ளல் .
ஒருவரை பற்றி எழுதுவதற்கு முன்பு தெரிந்து கொண்டு எழுதுங்கள்.இல்லையேல் அமைதியை இருங்கள் .எங்கள் பொறுமையை SOTHIKKATHEER
14 mins · Like · 1
Chandrasekaran Veerachinnu 1967 இல் கொய்னா பூகம்பத்தின் பொது ஒய்.பி.சவானிடம் ருபாய் 11.00 லட்சங்கள் நடிகர்திலகம் கொடுத்தாரே அது நாட்டுக்கா அல்லது வீட்டுக்கா .எழுதுமுன் பார்த்து எழுதுங்கள் புதிய தலைமுறை நண்பரே
4 mins · Like
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
Bookmarks