-
14th September 2015, 12:09 PM
#1741
Junior Member
Veteran Hubber
Originally Posted by
RAGHAVENDRA
Image sent by NTFAN Sriram through Whatsapp. Posting on request.
Page from Chitralaya Gopu's book "Gnyabakam Varuthe".
.....
-
14th September 2015 12:09 PM
# ADS
Circuit advertisement
-
14th September 2015, 12:10 PM
#1742
Junior Member
Veteran Hubber
Originally Posted by
vasudevan31355
பிரபல கல்கண்டு பத்திரிக்கையின் ஆசிரியர் தமிழ்வாணன் தான் எழுதிய 'நடிகர்திலகம் சிவாஜி கணேசன்' எனும் நூலில் 'சிவந்த மண்' படத்தை பிரம்மாண்ட வெற்றிப் படம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இரண்டாவது ஸ்ரீதர் 'தர்த்தி' நன்றக ஓட வில்லை என்று கூறியிருப்பதே சரியில்லை என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.
'தர்த்தி' வட மாநிலங்களில் கிட்டத்தட்ட 8 திரையரங்குகளில் 200 நாட்கள் தாண்டி ஓடியிருக்கிறது. வசூலில் டல் அடித்திருந்தால் நிச்சயம் அது இத்தனை திரையரங்குகளில் இவ்வளவு நாட்களை எட்டியிருக்க முடியாது.
கலை சார்,
பொதுவாக நான் வசூல் போன்ற விவரங்களில் அதிகம் தலையிடுவதில்லை. வாக்குவாதங்களிலும் ஈடுபடுவதில்லை. ஆனால் சமீபத்திய 'சிவந்த மண்' பற்றிய தங்களது பதிவுகள் என்னையே நோக வைத்தது என்பது உண்மை. 'ஓஹோ' என்று ஓடிய ஒரு படத்தை, வசூலில் பிரளயம் நடத்திய ஒரு படத்தை, கண்கூடாக அதன் வெற்றியை நம்மைப் போன்றவர்கள் நேரிடையாக பார்த்த ஒரு படத்தை நஷ்டமடைய வைத்த படம் என்றும், தோல்விப் படம் என்றும் அதுவும் நீங்கள் முத்திரை குத்த முயற்சிப்பது வருத்ததிற்குரியது. ஆயிரம் ஆதாரங்கள் கிடக்கட்டும். நாம் அந்தக் காலக் கட்டத்தில் அதன் வெற்றியை நேரிடையாகப் பார்த்தவர்கள். அதை நாம் இப்போது உள்ள தலைமுறைக்கு சரியான முறையில் சொல்லுவதே சிறந்த கடமையாகும். பைத்தியக்காரத்தனமாக செட்களைப் போட்டு, வரைமுறை இல்லாமல் செலவு செய்து விட்டு அத்தனை செலவுகளுக்கும் 'சிவந்த மண் 'ஓடி, 'நடிகர் திலகம்' என்ற அட்சயப் பாத்திரம் வசூல் செய்து, அதற்கு மேல் லாபம் ஈட்டி, கல்லா நிறைய வேண்டும் என்பது ஸ்ரீதரின் ஆசை. அந்த ஆசையை அவருடைய எதிர்பார்ப்புகளுக்கு மேலாகவே ஈடு செய்தது 'சிவந்தமண்'.
இதற்கெல்லாம் மேலே ஒன்று.
'நடிகர் திலகம்' பொய் பேச மாட்டார். மனதில் பட்டதை சரியென்றாலும், தவறென்றாலும் முகத்துக்கு நேரே உண்மையை உரைத்து விடுவார். அவருடன் பழகியவன் என்ற முறையில் இதை நன்கறிந்தவன் நான்.
அவர் 'சிவந்தமண்' படத்தைப் பற்றி சொல்லியிருக்கும் கருத்து.
'அள்ளி அள்ளிக் கொடுத்த மக்களுக்கு கை சிவந்தது
ஆனந்தந்தால் ஸ்ரீதருக்கு கண் சிவந்தது'.
......
-
14th September 2015, 12:16 PM
#1743
Junior Member
Veteran Hubber
இனிய நண்பரே ........வசுதேவரே .........பாஸ்கர் போல மானம் காத்த தெய்வமே....
உன் பதிவை பார்த்து அதன் பிறகு பல விளக்கங்கள் பலரிடம் இருந்து வரலாம் ...
அதற்க்கு உந்துதலாக இருந்தது உனது விளக்கு நீ ஏற்றிய விளக்கு , கலங்கரை விளக்கு !
தமிழ் நெஞ்சங்கள் உன்னை வாழ்த்தும் !
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
14th September 2015, 12:37 PM
#1744
நான் சொல்ல நினைத்ததை நண்பர் ரவிகிரண் சூர்யா அவர்கள் சொல்லி விட்டார். அதை வழிமொழிகிறேன்.
ஒரு முக்கிய விவாதம் அதற்கான ஆதாரங்களுடன் நடைபெற்றுக்கொண்டு இருக்கும்போது, திரைப்பட ஸ்டில் பதிவுகளைத் தவிர்ப்பது நல்லது என்பது என்னுடைய வேண்டுகோளும் கூட.
இதனால் சம்மந்தப்பட்ட ஆதாரப்பதிவுகள் பல பக்கங்கள் பின்தங்கிப்போக நேரிடும்.
-
14th September 2015, 04:11 PM
#1745
Junior Member
Veteran Hubber
உலக தமிழ் மாநாட்டிற்கு நமது நடிகர் திலகம் தமது வியெட்னாம் வீடு நாடகத்தை நடத்தி அதில் வசூலான தொகை முழுவதையும் நன்கொடையாக கொடுத்தார். அதன் அடையாளமாக நடிகர் திலகம் அவர்களை அமைப்பாளர் கௌரவிக்கும் அறிய புகைப்படம் - உபயம் முகநூல்
உலக தமிழருக்கு தமிழர் பெருமையை உலகிற்கு புரியவைத்த மண்ணின் மைந்தராக...தேசியத்திற்கு நாட்டின்வித்தாக இருந்தவர் நடிகர் திலகம் !
நடிகர் திலகம் சமுதாயத்துக்கு என்ன செஞ்சார்...என்ன செஞ்சார் ...என்று விஷயம் தெரியாமல் கேள்வி மட்டும் வக்கணையாக கேட்பவர்களுக்கு ஒரு சிறு ஆதாரம்
Last edited by RavikiranSurya; 14th September 2015 at 04:24 PM.
-
14th September 2015, 04:19 PM
#1746
Junior Member
Veteran Hubber
தேசியத்தை ஒவ்வொரு மனிதனிடம் விதைத்ததில் முதல் இடத்தில் இருப்பவர் நடிகர் திலகம். விடுதலைக்காக பாடுபட்டவர்களை திரையிலும் நிஜத்திலும் உலகறிய செய்ததோடு மட்டும் அல்லாமல் அவர்களுக்கு உரிய மரியாதையை செய்வதில் முன்னணியில் உள்ள ஒரே கலைஞர் நடிகர் திலகம் சிவாஜி அவர்கள்.
விடுதலை போரில் ஆங்கிலேயர்களால் தூக்கில் இடப்பட்ட மறைதிரு வீரர் பகத்சிங் அவர்களின் தாயார் அவர்களுக்கு நடிகர் திலகம் அவர்கள் மரியாதை செய்யும் அரிய புகைப்படம் - உபயம் முகநூல் -
எந்த வரலாற்றிலாவது இந்த பூகோளத்தில் இது போல கடமை உணர்ச்சியை ஒரு நடிகர் காட்டியுள்ளாரா என்ற கேள்வி எழும்போது, நடிகர் திலகம் தவிர ஒருவரும் இல்லை என்பதே பதிலாக இருக்கும். தேசத்தை தனது கண்ணாக பாவித்த ஒரே தேசிய நடிகர் நமது நடிகர் திலகம் !
Last edited by RavikiranSurya; 14th September 2015 at 04:26 PM.
-
14th September 2015, 04:49 PM
#1747
Junior Member
Diamond Hubber
அன்னை இல்லத்தில்
நேற்று விக்ரம்பிரபுவை பார்த்து பேசியபோது எடுத்தபடம்.
படங்களுக்கு போதிய விளம்பரமின்மை,ரசிகர்களுக்கு சரியான தகவல்கள் தகுந்த நேரத்தில் சென்றடையாதிருத்தல்,
ரசிகர்களின் மனநிலைஎடுத்துச் சொன்னோம்.கவனத்தில் கொள்வதாகவும்,சிறிது சிறிதாக மாற்றம் ஏற்படும் என்று கூறினார்.
Last edited by senthilvel; 14th September 2015 at 05:24 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
14th September 2015, 05:07 PM
#1748
Junior Member
Diamond Hubber
சாந்தி திரையரங்கில் நேற்றுமாலை 4 மணி முதல் 7மணி வரை காத்திருந்தோம்.ரசிக நண்பர்கள் யாராவது வந்தால் பேசிவிட்டு வரலாம் என்று இருந்தோம்.யாரும் வரவில்லை யாதலால் தியேட்டரை சுற்றி பார்த்துவிட்டு வந்து விட்டோம்.
அங்கிருக்கும் நினைவுச்சின்னங்கள் தியேட்டர் இடித்து கட்டியபின் இடம் பெறலாம் இல்லை இடம் பெறாமலும் போகலாம்.எல்லாரும் பார்த்ததுதான்,இருப்பினும் பின்னாளில் நினைவு கூற இந்த பொக்கிஷங்களைபதிவிடுகிறேன்.
Last edited by senthilvel; 14th September 2015 at 05:26 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
14th September 2015, 05:26 PM
#1749
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
14th September 2015, 05:26 PM
#1750
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
Bookmarks