Page 186 of 401 FirstFirst ... 86136176184185186187188196236286 ... LastLast
Results 1,851 to 1,860 of 4003

Thread: Nadigar_Thilagam_Sivaji_Ganesan_Part 16

  1. #1851
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Dear Neyveli Vasudevan Sir,

    My heart felt congratulations for your 8000th Special Post.

    Pottu Vaiththa Mugamo - One of the best song of SPB.

    If you notice, In Pottu Vaiththa Mugamo , when SPB sung the voice of the young SPB was little bold. SO, Nadigar Thilagam will also equally mime inline with the voice of SPB.

    In films like Raja, SPB voice was little more matured and Nadigar Thilagam if you notice would have changed his style of Miming inline with SPB's matured Voice.




    In Thirisoolam Era, SPB voice became more refined and Nadigar Thilagam would have mimed in a totally different way inline with the soothing voice of SPB....




    At all stages, Nadigar Thilagam has clearly noticed the voice change of SPB and would have equally matched miming of SPB.

    That's the greatness of NT.

    Excellent workings vasudevan sir . Advance Congrats for your 10,000 post.

    Regards
    RKS

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1852
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

    சிவாஜி பாட்டு-13

    கலையரசரும்,கவியரசரும்
    கைகோர்த்து ஜெயித்த
    எண்ணற்ற பாடல்களில் இதுவும் ஒன்று.

    விறகுவெட்டியாக மாறி வரும்
    இறைவன், வீதியில் வந்து
    பேசும் எளிமைத் தத்துவம்
    இப்பாடல்.

    மனிதர்களை வாழ்விக்கிற
    மகேசன், மனிதர்களின் உலகத்தில் கலக்கிற அதிசயம்
    பேசுகிறது, இந்தப் பாடல்.

    ஒன்றில் சந்தன வாசனை,
    ஒன்றில் ஜவ்வாது வாசனை
    என்று தலைவர் தலை சுமந்து வரும் விறகுகள் போலே பாடல் வரிகளும், ஒன்றில் சிந்தனை வாசனை,ஒன்றில்
    தத்துவ வாசனையென்று
    மணக்கின்றன.

    "பத்துப் பிள்ளை பெத்த
    பின்னும் எட்டு மாசமா?
    இந்தப் பாவி மகளுக்கெந்த
    நாளும் கர்ப்ப வேஷமா?"

    -பிரசவ வலி காணுதலே தொழிலெனக் கொண்டோர்..
    குறும்பான இந்தப் பாடல் வரிகள் தரும் ரகசிய வலியையும் தாங்கித்தான்
    தீர வேண்டும்.

    தன்னுடன் ஆடும் இளமங்கை, பாடல் முடியும் தருவாயில் கை
    பிடித்திழுத்து காதலுங்
    காமமுமாய்ப் பார்க்க...

    பாடல்வரிகளிலிருந்து கவனம்
    மாறாமல், "எனக்கு மணமாகி
    இரண்டு மனைவியருண்டு.
    என்னை விட்டு விடம்மா" என
    சைகையிலேயே நடிகர் திலகம்
    சொல்வாரே..

    அதற்காகவே இந்தப்பாடலை
    ஆயிரம் முறை காண வேண்டும்.

    இந்தப் பாடல் -ஆணி.

    நம் இதயம்- பசுமரம்.


  4. Likes Russellbzy, Russellmai liked this post
  5. #1853
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    ஒப்பீடு என்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஏனெனில் அது பெரும்பாலும் சார்பு நிலைக் கோட்பாட்டுக்குள் சென்று விடும் வாய்ப்பு மிகவும் அதிகம். அதுவும் இந்தக் கணிப்பினைப் பார்த்த பின் என்னுடைய நிலைப்பாடு இன்னும் நியாயமாகிறது. இவர்கள் இந்தக் கருத்துக்கணிப்பிற்கு எடுத்துக்கொண்ட அளவுகோல் என்ன, அல்லது கேட்கப்பட்ட கேள்விகள் என்ன போன்ற விவரங்கள் முழுதும் தெரிய வேண்டும். நடிகர் திலகத்தின் சதவீதத்திற்கும் எம்.ஜி.ஆர். அவர்களுக்கும் கிடைத்துள்ள சதவீதம் இவ்வளவு அதிக வித்தியாசம் இருக்க வாய்ப்பே இல்லை. அதிக பட்சம் ஒன்று அல்லது இரண்டு விழுக்காடுகளுக்கு மேல் இருக்கக்கூடிய வாய்ப்பு என்னுடைய தனிப்பட்ட கருத்தின்படி இல்லை. 50-50 தான் உண்மையான அந்தக் கால நிலவரம். இது ஒன்று அல்லது இரண்டு விழுக்காடுகள் மட்டுமே FLUCTUATION எனப்படும் ஊசலாட்டத்தில் இருந்திருக்க முடியும். ஒரேயடியாக 14 விழுக்காடு வித்தியாசம் என்றால் மனம் ஏற்க மறுக்கிறது. அப்படியே அதிகம் என்றால் கூட அது 48-52 அல்லது 47-53 என்ற அளவிற்கு மேல் இருக்க முடியாது. அது மட்டுமல்லாமல் இது 1980வரை என்பதையும் ஏற்க முடியாது. இப்போது இருக்கக்கூடிய இளைஞர்கள் 1980ல் பிறந்திருக்கக்கூட மாட்டார்கள். அப்படிப்பார்த்தால் 1980ல் சிவாஜி-எம்.ஜி.ஆர். அபிமானத்தைப் பற்றிக் கருத்துக் கூற வேண்டுமானால் 1980ல் சுமார் 20 வயதாவது நிரம்பியவர்களால் தான் தெளிவாக சொல்ல முடியும்.

    அப்படி இருக்கும் போது 1980 கால ஹீரோக்களைப் பற்றிச் சொல்லியிருக்கக் கூடியவர்கள் 1960ல் அல்லது அதற்கு முன்போ பின்போ தான் பிறந்திருக்க முடியும். அந்த பிராயத்தில் இருவருக்குமே ரசிகர்களின் அளவு மிகத் துல்லியமாக யூகிக்க வேண்டுமென்றால் 50-50 அளவில் தான் இருக்க வேண்டும்.

    மணிமண்டபம் அரசு செலவில் கட்டக் கூடாது என்ற விவாதத்திற்கும் இந்த கருத்துக்கணிப்பிற்கும் ஏனோ மனம் முடிச்சுப் போட்டுப் பார்க்கிறது. அப்படி இருக்கக் கூடாது என மனம் விரும்புகிறது.

    இதில் இன்னோர் விஷயமும் இருக்கிறது. சிவாஜி, எம்.ஜி.ஆர். இவர்களுக்கு சமமாக மூவேந்தராக ஜெமினியும் சேர்த்து தமிழ்த்திரையுலக ரசிகர்கள் கொண்டாடினர் என பல பத்திரிகைகள் எழூதின. அப்படியென்றால் அந்தக் காலத்தில் ஜெமினிக்கு அபிமானம் மிகவும் குறைவு 9 சதம் என கருத்துக் கணிப்புக் கூறுகிறதே.

    இதில் எது உண்மை. ஜெமினி மூவேந்தரில் ஒருவராக விளங்கினார் என்பதா அல்லது அப்படியில்லை, சிவாஜி-எம்.ஜி.ஆர். இருவர் மட்டுமே கோலோச்சினர் என்பது உண்மையா என்பது தெரியவில்லை.

    நண்பர்களே இது ஒரு தனிப்பட்ட எண்ணமாகத்தான் கூறுகிறேன். எந்த ஒரு கருத்து மோதலுக்காகவும் அல்ல என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
    Last edited by RAGHAVENDRA; 18th September 2015 at 11:15 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #1854
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. Thanks vasudevan31355 thanked for this post
    Likes Russellmai liked this post
  8. #1855
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வாசு சார்
    ஒவ்வொரு இயக்குநருக்கும் ஒரு கனவுப்படம், ஒவ்வொரு கதாநாயகன் அல்லது கதாநாயகிக்கு ஒரு கனவுப்படம் என்று, திரையுலகைப்பொறுத்த மட்டில் ஒவ்வொரு பாலருக்கும் ஒரு கனவுப்படம் ஒன்று உண்டு. அப்படி ஒவ்வொரு ரசிகருக்கும் ஒரு கனவுப்படம் உண்டென்று ஒரு நியதி வகுத்தால் அதில் என்னுடைய கனவுப்படமாக நான் நினைத்துச் சுட்டிச்சொல்லக் கூடியது

    சுமதி என் சுந்தரி

    திரைக்காவியமே..

    எண்ணற்ற முறைகள், சில நூறுகளைத் தொட்டிருக்கும் அளவிற்கு இப்படத்தைப் பார்த்து அதில் மூழ்கிப் போனவன் என்ற வகையில் தங்களுடைய 8000வது பதிவினை எனக்காக தாங்கள் வழங்கியதாகவே நான் நினைக்கிறேன்.

    தங்களுடைய அட்டகாசமான விளக்கவுரை இப்படத்தின் மேல் மக்கள் ஏன் இவ்வளவு வெறித்தனமான மோகம் கொண்டிருக்கிறார்கள் என்பதை மிகத்துல்லியமாக எடுத்துரைத்துள்ளது.

    தங்களுக்கு என் உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. #1856
    Junior Member Senior Hubber
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    22
    Post Thanks / Like
    EXCELLENT WORK S SUNDARI PHOTOGRAPHS AND ALL YOUR 8000 PLUS POSTINGS
    VASU SIR No words to describe your hardwork continue and all the best
    nlessings
    ramajayam

  10. Thanks vasudevan31355 thanked for this post
    Likes vasudevan31355 liked this post
  11. #1857
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    Dear Vasudevan Sir,

    CONGRATULATIONS FOR AMAZING 8000 POSTS and Amazing write-up on "Pottu vaitha mugamo" song, especially about various signature styles of NT.

    Hats off!

  12. Thanks vasudevan31355 thanked for this post
  13. #1858
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'சுமதி என் சுந்தரி' படத்தின் 'பொட்டு வைத்த முகமோ' பாடல் பதிவைப் படித்துப் பாராட்டிய திரு. கோடல் ஸ்டார், வாசுதேவன் சார், கோபால் சார், சந்திரசேகரன் சார், ராதாகிருஷ்ணன் சார், பார்த்தசாரதி சார், சிவாஜி தாசன் சார், செந்தில்வேல் சிவராஜ் சார், முத்தையன் அம்மு சார், அருமைக் கவிஞர் ஆதவன் ரவி சார், ரவிகிரண் சூர்யா சார், ராகவேந்திரன் சார், பெரியவர் ராமஜெயம் சார், தம்பி ராகுல்ராம், மற்றும் 'லைக்'குகள் அளித்த பரணி சார், சுந்தரபாண்டியன் சார், சைலேஷ்பாசு சார் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
    நடிகர் திலகமே தெய்வம்

  14. Thanks Russellbpw thanked for this post
  15. #1859
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    முத்தையன் அம்மு சார்,

    தங்களது பாராட்டுக்கு நன்றி. அது போலவே படத்தின் ஸ்டில்களை எடுத்து அவற்றிலிருந்து தேவையானவற்றை செலெக்ஷன் செய்து பின் ஒவ்வொன்றாக tiny pic-ல் அப்லோட் செய்வதும் சாதாரண காரியமல்ல. பல நாட்களில் இரவெல்லாம் தூங்காமல் நீங்கள் நடிகர் திலகத்தின் படஸ்டில்களை தரவேற்றுவதை நான் அடிக்கடி கண்டதுண்டு. மிகவும் கஷ்டமான வேலை. நீங்கள் அதை எங்களுக்காகச் செய்யும் போது மனம் மகிழ்கிறது. தங்கள் உடல்நலனையும் பேணுங்கள். தூக்கம் ரொம்ப முக்கியம். அதைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம். எப்போதுமே தங்களது ரசனையான நடிகர் திலகத்தின் ஸ்டில்களை ரசிப்பவர்கள் மத்தியில் நானும் ஒருவன்.நன்றி!
    நடிகர் திலகமே தெய்வம்

  16. #1860
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சிவராஜ் சார்,

    தாங்கள் அளித்த யுவராஜாவின் பச்சை,ரோஸ் நிறங்களில் மாறும் gif ஸ்டில்லை அப்படியே அள்ளிக் கொண்டேன். நன்றிகள்.
    நடிகர் திலகமே தெய்வம்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •