Page 272 of 401 FirstFirst ... 172222262270271272273274282322372 ... LastLast
Results 2,711 to 2,720 of 4003

Thread: Nadigar_Thilagam_Sivaji_Ganesan_Part 16

  1. #2711
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Mr Neyveliar,


    Supero Super.

  2. Thanks vasudevan31355 thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #2712
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    அவர் உத்தமன்(ஆதவன்)
    இவர் உயர்ந்த மனிதன்(வாசு)

    உத்தமபுத்திரர்கள்

    இதற்கு மேல் வார்த்தை ஏது?

  5. Thanks vasudevan31355 thanked for this post
  6. #2713
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    இரண்டு நாட்களாக வேலை பளுவால் வர முடியவில்லை. வந்து பார்த்தால் திரி நிரம்பிக் கிடக்கிறது. பார்த்து, படித்து முடிப்பதற்குள் பரவசம் உடலெங்கும் தொற்றிக்கொண்டது. ஒவ்வொன்றாக வருவோம்.

    டியர் வாசுதேவன் சார்,

    இதெல்லாம் ரொம்ப அநியாயம், ஒரு பாடலில் இப்படியா தலைவரின் ஒவ்வொரு அசைவையும் ரசிப்பது?. ரசித்தாலும் அதை பன்மடங்கு மெருகேற்றி வார்த்தைகளில் கொண்டு வருவது?. ராகவேந்தர் சார் சொன்னது ரொம்ப பொருத்தம். ஒரு பாடலை எப்படி ரசிப்பது என்பதற்கு இலக்கணம் வகுக்கிறீர்கள் ஒவ்வொரு பதிவிலும்.

    மதுர கானத்தில் யார் யாருடைய பாடல்களுக்கெல்லாமே ரொம்ப சிரத்தையெடுத்து செதுக்குவீர்கள். இதுவோ நம் தலைவரின் பாடல். உங்கள் அட்டகாசத்துக்கும், சாமியாட்டத்துக்கும் கேட்கணுமா என்ன.

    'வெள்ளிக்கிண்ணம்தான்' பாடல் தமிழில் வந்த சிறந்த முதலிரவுப் பாடல்களில் ஒன்று என்பதில் சந்தேகமில்லை. அந்த அளவுக்கு அனைவரின் மனதையும் நிறைத்த பாடல். தனது பேட்டிகளில் நடிகர்த்திலகத்தைப் பற்றி கொஞ்சமாகவே பேசும் மறைந்த கவிஞர் வாலி அவர்கள், தனது நிகழ்ச்சிகளில் தவறாமல் குறிப்பிடும் பாடல் இது. (முதலில் 'வெள்ளித்தட்டுதான்' என்று எழுதி பின்னர் மாற்றிய கதை எல்லோருக்கும் தெரிந்ததுதான்).

    ஆனால் படம் வருவதற்கு முன் இசைத்தட்டுக்களில் பாடல்களைக் கேட்ட ரசிகர்கள், ரொம்ப எதிர்பார்த்தது "என் கேள்விக்கென்ன பதில்" பாடலில் நடிகர்திலகம் எப்படியெல்லாம் ஸ்டைலில் கலக்கப்போகிறாரோ என்பதுதான் என்றும், படத்தில் பாடலைப் பார்த்து அதிர்ச்சி, ஏமாற்றம் மற்றும் விரக்தியின் உச்சத்துக்குப் போனதை இங்கே பலமுறை பேசியிருக்கிறோம்.

    வெள்ளிக்கிண்ணம்தான் போன்ற அருமையான பாடல்களெல்லாம் வண்ணத்தில் அமையாமல் போனது இன்னொரு ஏமாற்றம்.

    உங்கள் பதிவை எப்படி பாராட்டுவது என்று தெரியாமல்தான் இப்படியெல்லாம் கிறுக்கிக் கொண்டிருக்கிறேன் என்பது உங்களுக்கும் புரியுமென்று நினைக்கிறேன். ராஜேஷைப்பார்த்து, "வணக்கம் ஜி, நலமா?" என்று கேட்கும் பதிவுகள் மட்டும்தான் உங்களிடமிருந்து வரும் சாதாரண பதிவுகள் என்பது என் எண்ணம்.

  7. Thanks vasudevan31355 thanked for this post
  8. #2714
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    வாசு சார்,

    அடடா 'இல்லற ஜோதியை' மறந்துவிட்டேனே. என்னவொரு அற்புதமான ஆய்வு. நானும் பலவருடங்களுக்கு முன் பார்த்ததுதான். உங்கள் விவரிப்பு ஒவ்வொரு காட்சியையும் கண்முன்னே கொண்டுவந்தது.

    நடிகர்திலகம் தன ஆரம்பகால படங்கள பெரும்பாலானவற்றுள் நெகடிவ் ரோலாகவே நடித்துதான் முன்னேறியிருக்கிறார். இது ஒரு கலைஞனுக்கு மிகப்பெரிய சவால். நல்ல கதாநாயகனாகவோ, கெட்ட வில்லனாகவோ நடித்து முன்னேறுவது சுலபம். நெகடிவ் கதாநாயகனாக நடித்து முன்னேறுவது மிகக்கடினம். அதிலும் சாதனை படைத்துவிட்டார் நம் மன்னன்.

    அப்படி ஒரு படத்தை எடுத்து அருமையாக அலசியிருக்கிறீர்கள்.

    என்ன செய்யலாம்?. எல்லாவற்றுக்கும் சேர்த்து உங்களுக்கு பெரிய பாராட்டுவிழாவுக்கு ஏற்பாடு செய்யலாமா?.

  9. Thanks vasudevan31355 thanked for this post
  10. #2715
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நண்பர்களுக்கு வணக்கம்,

    மக்கள் திலகம் திரியில் புதிதாக பங்கேற்ற திரு.மயில்ராஜ் அவர்கள் பிரச்சினைக்குரிய விதத்தில் பேசினார் என்று கூறி அவருக்கு நிரந்தரமாக தடை விதித்திருக்கிறார்கள். அவர் என்ன தனிநபர் தாக்குதலில் ஈடுபட்டாரா? ஒருவேளை அவர் ஆட்சேபகரமான சிலவற்றை சொல்லியிருக்கலாம். அவருக்கு எச்சரிக்கை விடுத்திருக்கலாமே? அல்லது அடையாளமாக ஒரு சில நாட்கள் மட்டும் தடை விதித்திருக்கலாம். ஆனால், நிரந்தரமாக நீக்கும் அளவுக்கு இங்கு சிலர் சொல்லாததை அவர் என்ன பெரிதாக சொல்லி விட்டார்?

    மக்கள் திலகத்தைப் பற்றி திரு.கோபால் கூறாதவற்றையா திரு.மயில்ராஜ் கூறிவிட்டார்? அல்லது தனிப்பட்ட நபர்களை, நண்பர்களை திரு.கோபால் மோசமாக விமர்சித்ததைப் போல விமர்சித்தாரா? சமீபத்தில் கூட திரு.எஸ்.வி. அவர்களை ‘பசுத்தோல் போர்த்திய நரி’ என்றார். என்னைப் பார்த்து ‘பொய் சொல்கிறேன்’ என்று குற்றம் சாட்டினார். வயதில் தன்னைவிட மூத்தவர்களை நாய், சொறிநாய் என்றெல்லாம் பேசினார். திரு.சிவாஜி கணேசன் அவர்களையே, ‘கிழட்டு மூஞ்சி’ என்று விமர்சித்தார். ‘அவரது பிற்காலப் படங்களை எப்படி பார்க்கிறாய்?’ என்று என் மனைவி கேட்கிறாள் என்றார். நேருவை பெண் பித்தன் என்றார். அவர் நிரந்தரமாக நீக்கப்படவில்லை.

    திருச்சி பாஸ்கர் என்பவர் திரு.சிவாஜி கணேசன் அவர்களை அரசியலில் முட்டாள் என்றார். நேற்று கூட சுமூக சூழ்நிலையை கெடுக்கும் வகையில் மீண்டும் பதில் சொல்வேன் என்று எச்சரிக்கிறார். ‘குள்ளநரிகள்’ என்கிறார். ‘கொக்கரிக்காதே வேதகிரி’ என்கிறார். அவர்களை எல்லாம் அனுமதிக்கிறார்கள். அவர்கள் கூறிய வார்த்தைகளும் இன்னும் அப்படியே இருக்கின்றன.

    செல்வி. ஜெயலலிதாவை பார்த்து விட்டு வந்த சிவாஜி குடும்பத்தினரை ‘துரோகம் செய்யாதீர்களடா, இனத்துரோகிகளா’ என்றும் ஒரு மாநிலத்தின் முதல்வரை ‘பாம்பு’ என்றும் பல்வேறு அர்ச்சனைகள். அதற்காக நான் அவரது ஆதரவாளர் அல்ல. எப்படி எல்லாம் மோசமான தாக்குதல்கள் என்பதற்கு சொல்கிறேன். அவர்கள் மீது நடவடிக்கை இல்லை. இந்த வார்த்தைகள் எல்லாம் நீக்கப்படவும் இல்லை.

    ஆனால், இப்படி எல்லாம் வரைமுறை கடந்து எதுவும் கூறாத திரு.மயில்ராஜை நிரந்தரமாக நீக்கியிருக்கிறார்கள். நல்ல நியாயம்.

    இப்படி பாரபட்சமாக மாடரேட்டர்களும் மய்யம் இணையதள நிர்வாகிகளும் நடந்து கொள்வது வேதனையளிக்கிறது. இங்கு நீதியில்லை. ஒருவன் கையை கட்டிப்போட்டு விட்டு இன்னொருவன் கையில் ஆயுதம் கொடுத்து இரண்டு பேரும் மோதிக் கொள்ளுங்கள் என்று சொல்வதும் கைகள் கட்டப்பட்ட நிராயுதபாணிகளை தாக்குவதும் கோழைத்தனம். நியாயவான்கள் என்றால் எங்களுக்கும் முழு சுதந்திரம் அளித்துப் பாருங்கள். திரு.மயில் ராஜ் அவர்களை நிரந்தரமாக நீக்கியது அநீதி.

    இப்படி பாரபட்சமாக செயல்படும் இந்த இணையதளத்தில் நான் நீடிக்க விரும்பவில்லை. இப்படி நியாயத்தை கேட்பதற்காகவே என்னையும் நிரந்தரமாக தடை செய்யலாம். நீங்கள் என்ன என்னை தடை செய்வது? நானே வெளியேறுகிறேன்.

    தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்று நினைத்துக் கொண்டு எப்போதும் உண்மைக்கு மாறானதை மட்டுமே பேசிக் கொண்டிருக்கும் திரு.கோபால், உங்கள் பொய்களுக்கு பல ஆதாரங்கள் என்னிடம் உள்ளது.

    உதாரணத்துக்கு ஒன்று மட்டும் சொல்கிறேன். உங்களை எல்லாரும் தெரிந்து கொள்ளட்டும்.

    பேராசிரியர் திரு.செல்வகுமார் அவர்களை கடுமையாக தாக்கினீர்கள். அதற்காக, உங்களுக்கு நான் கண்டனம் தெரிவித்தேன். உடனே, அவர்தான் என்னை முதலில் தாக்கினார் என்று கூசாமல் பொய் சொன்னீர்கள். நான் அதை மறுத்து ஆதாரத்தோடு என்ன நேரத்தில் இருவரும் பதிவுகளை வெளியிட்டீர்கள் என்று பதிலளித்தேன். உடனே, நீங்கள் பல்டியடித்து ‘நான் திமுக பேராசிரியரை (அதாவது திரு.அன்பழகன் அவர்களை, அடைப்புக்குறிக்குள் இருப்பது என் விளக்கம்) சொன்னேன் என்று வழிந்தீர்கள்.

    மக்கள் திலகம் திரி பாகம் 15 பக்கம் 328 பதிவு 3271.

    http://www.mayyam.com/talk/showthrea...ART-15/page328

    -----------------------------
    Quote Originally Posted by KALAIVENTHAN View Post
    திரு.கோபால்,

    ‘‘பேராசிரியர் உங்களை அத்துமீறி விமர்சித்த பிறகுதான், உங்கள் கருத்தை அவர் பெயர் குறிக்காமல் வெளியிட்டேன்’’ என்று கூறியிருக்கிறீர்கள். இதுவே தவறு.

    //பேராசிரியர்களே புளுகித்தள்ளும் கலிகாலமாயிற்றே// என்று உங்கள் திரியில் 14-ம் தேதி காலை 11.27 மணிக்கு பதிவிட்டு (பதிவு எண் 2979) நேரடியாக அவரை அத்துமீறி முதலில் தாக்கியது நீங்கள்தான்.

    அதன் பிறகே பேராசிரியர் அவர்கள், அதற்கு பதில் சொல்லும் வகையில் உங்களை பெயர் குறிப்பிடாமல் பதிவு போட்டார். அவர் பதிவிட்டது 14ம் தேதி இரவு 8.58 மணிக்கு, எங்கள் திரியில் பதிவு எண்.3104.

    இதிலிருந்தே யார் சொல்வதில் உண்மை உள்ளது என்பது எல்லாருக்கும் புரியும். பேராசிரியர், பேராசிரியர்தான்.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
    நான் மேலே சொல்லியிருந்த பதிலுக்கு திரு.கோபால் அவர்களின் விளக்கம் இது....

    //கலைவேந்தன்,

    அடடா ,அப்படி ஒரு அர்த்தம் வந்து விட்டதா? அது கலைஞர் பாடல் சம்பந்த பட்ட பதிவு என்பதால் தி.மு.க பேராசிரியர் ஞாபகம் வந்து விட்டார்.// ......(அவர்கள் திரியில் பதிவு எண்.3173)

    ஓ... ஹோ....அப்படியா விஷயம்? மன்னிக்கவும் கோபால். இன்று காலையில் நீங்கள் போட்டிருந்த பதிவில்,(உங்கள் திரியில் பதிவு எண்.3166) திமுக பேராசிரியரின் பயோ டேட்டாவை கேட்கிறீர்கள் என்று தெரியாமல் திரு. செல்வகுமார் அவர்களின் பயோ டேட்டாவைத்தான் கேட்கிறீர்களோ என்று நினைத்து பதிலளித்து விட்டேன். மீண்டும் மன்னிக்கவும். நன்றி.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

    -----------------------

    இனிமேலாவது உண்மையை மட்டுமே பேசுங்கள். மற்றவர்களை கண்ணியப்படுத்துங்கள். முக்கியமாக, எல்லாருக்கும் புரியும்படி எழுதக் கற்றுக் கொள்ளுங்கள். நான் வெளியேறுகிறேன். எனவே என்னை தடை செய்தாலும் கவலையில்லை என்ற நிலையில் நான் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் உங்களை பேசிவிட்டு வெளியேற முடியும். குறிப்பாக, திரு.ராகவேந்திரா சாரையும் திரு.சிவாஜி செந்தில் அவர்களையும் நீங்கள் என்ன வார்த்தை கொண்டு தாக்கினீர்களோ, அதை விடவும் மோசமாக பேசமுடியும். ஆனால், உங்கள் அளவுக்கு தரக்குறைவாக கீழிறங்க நான் தயாரில்லை.

    விடை பெறுகிறேன் நண்பர்களே. இந்தப் பதிவும் கூட நீக்கப்படலாம். அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. பார்க்கும் நண்பர்கள் நியாயத்தை புரிந்து கொண்டால் போதும்.

    வாழ்க ஜனநாயகம்.

    எந்தக் கொம்பன் நினைத்தாலும் எக்காலத்திலும் அழிக்க முடியாத புரட்சித் தலைவர் புகழ் ஓங்குக!

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  11. #2716
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    டியர் செந்தில்வேல் சார்,

    உங்கள் ஆவணப்பதிவுகளின் அணிவகுப்பு வெகுஜோர். நடிகர்திலகத்தின் கடந்தகால நிகழ்வுகளை நினைவூட்டும் காகிதக் கல்வெட்டுக்களை தற்போது நீங்கள் இணையதள கல்வெட்டுக்களாக மாற்றி வருகிறீர்கள். பாராட்டுக்கள்.

    ஏற்கெனெவே நான் சொன்ன 'வாட்டர்மார்க்' பதிவைப்பற்றி நீங்கள் தந்துள்ள விளக்கம் ஏற்றுக்கொள்ள தக்கதாக மட்டுமல்லாமல் உங்கள் பெருந்தன்மையைக் காட்டுவதாகவும் அமைந்துள்ளது.

    நடிகர்திலகத்துக்கு ஒரு இளைய திலகம் போல, பம்மலாருக்கு நீங்கள் 'ஆவண இளையதிலகமாக' திகழ்கிறீர்கள்.

    சிவந்த மண் ஷூட்டிங்கில் நம்பியாருடன் அமர்ந்திருக்கும் நடிகர்திலகம் என்னவொரு அழகு. உடையை வைத்துப்பார்க்கும்போது விமான விபத்தில் தப்பித்து மன்னரைக்காண வரும் காட்சியென நினைக்கிறேன்.

    இருதுருவம் பேசும்பட காட்சிகளும் அருமை. பத்திரிகை செய்திகளோடு அவற்றில் வந்த நடிகர்திலகத்தின் பட விளம்பரங்களையும் பதிவிடுங்கள். உங்களைப்போன்ற ஆவணச் செம்மல்கள்தான் திரிக்கு எப்போதும் தேவை.

    உங்கள் சேவை சிறக்க வாழ்த்துக்கள்.

  12. Thanks vasudevan31355 thanked for this post
    Likes Russellbzy, vasudevan31355 liked this post
  13. #2717
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    தொலைக்காட்சி சேனல்களில் திரைப்படங்களை / பாடல்களை தொகுத்து வழங்குபவர்கள் நடிகர்திலகத்தின் படங்கள், பாடல்கள் பற்றி தப்பும் தவறுமாக தகவல்களை சொல்வது தொடர்ந்து வருகிறது. இவர்களை யார் இதெல்லாம் சொல்லச்சொன்னது?. முழுமையாக உண்மையான விவரம் தெரிந்தால் சொல்லுங்கள். அல்லது சும்மா ஒளிபரப்பிவிட்டு போங்கள். எல்லாம் தெரிந்த மேதாவிகள் போல தகவல்களை தப்பும் தவறுமாக உளறிக்கொட்ட வேண்டியது. காம்பியர்கள் இப்படி தகவல்களை சொன்னாலும், அவர்களுக்கு ஸ்க்ரிப்ட் எழுதிக்கொடுப்பவர்கள் செய்கின்ற தவறு இது.

    சமீபத்தில் ஒரு பெண் காம்பியர் ஒரு பாடலை ஒளிபரப்புமுன் தகவல் சொல்லும்போது "இந்தப்படம் வெளியானபோது சரியாகப்போகாமல் கையைக்கடித்து விட்டது" என்று உளறினார். கடிபட்ட கைக்கு இவர்தான் மருந்து போட்டாரா?. உண்மையில் அந்தப்படம் பெரிய வெற்றியை பெறாவிட்டாலும் நன்றாக ஓடி தயாரிப்பாளருக்கும் விநியோகஸ்தர்களுக்கும் லாபத்தையே தந்தது.

    எனக்கு இந்தப்படம் கையைக்கடித்து விட்டது என்று அன்புக்கரங்கள் தயாரிப்பாளர் இவர்களிடம் வந்து சொன்னாரா?. எதற்கு தெரியாமல் உளறுகிறார்கள்?. தொலைக்காட்சி தொகுப்பாளர்கள் இனியாவது தங்களை திருத்திக்கொண்டு உண்மை தகவல்களை மட்டுமே தரவேண்டும். உண்மை விவரம் தெரியவில்லையா?. உங்கள் விளக்கமும் வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம். பாடலை சும்மா ஒளிபரப்பிவிட்டுப் போங்க.

  14. #2718
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    நடிகர் திலகம் 87வது பிறந்த நாள் விழா 87 நிழற்படங்கள் அணிவகுப்பு ... தொடர்ச்சி

    79

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  15. Likes Russellmai liked this post
  16. #2719
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    80

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  17. Likes Russellmai liked this post
  18. #2720
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    81

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  19. Likes Russellmai, Harrietlgy liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •