Page 78 of 401 FirstFirst ... 2868767778798088128178 ... LastLast
Results 771 to 780 of 4009

Thread: Makkal Thilagam MGR - PART 17

  1. #771
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

    Mr.Rajkumar - chennai is now at thiruvannamalai with makkal thilagam fans to attend the celebration on the occassion of makkal thilagam Mandram function. He came in the van fixed with the above banner.
    Last edited by ravichandrran; 25th September 2015 at 02:48 PM.

  2. Thanks orodizli thanked for this post
    Likes mgrbaskaran liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #772
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  5. Thanks orodizli thanked for this post
    Likes mgrbaskaran liked this post
  6. #773
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by jaisankar68 View Post
    ஒளிவிளக்கு மக்கள் திலகத்தின் மகத்தான காவியம் 100வது படம்.பூல் அவுர் பத்தர் ஹிந்திப் படத்தின் ரீமேக். இவையெல்லாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் இந்தப் படத்தில் தலைவரின் ஒவ்வொரு அசைவும் (Movement) ஒரு கவிதை . ஒலியே இல்லாமல் பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டே இருக்கலாம் . அவ்வளவு அமர்க்களமாக இருக்கும். மக்கள் திலகத்தின் ஸ்டைல் எல்லா படங்களிலும் அருமையாக இருக்கும் என்றாலும் ஒளிவிளக்கு, நினைத்ததை முடிப்பவன் இரண்டு படங்களும் அதன் உச்சங்கள்.
    இயல்பான நடிப்பு மனதைத் தொடும். மரத்தடியில் இருக்கும் ஏழைக் கிழவியிடம் அவர் காட்டும் அன்பு அவ்வளவு இயல்பாக இருக்கும். அந்தக் காட்சியில் அந்தத் தாய்க்கு உணவளிக்காத ஜஸ்டினை அவர் பார்க்கும் பார்வை கிளாஸ்.
    சோ பண்ணையார் வீட்டு நகைப் பெட்டியைப் பற்றிப் பேசும் போது டிக்கு நொடிக்கு நொடி மாறும் அவரது நளினமாக முகபாவங்கள் அபாரம். கொடிய நோய் பாதித்த கிராமத்தில் அஞ்சாமல் உள்ளே நுழையும் துணிச்சல். திருட வந்த இடத்தில் ஏமாற்றம். பின்னர் பண்ணையார் மருமகளிடம் பரிவு, அவள் தன்னைப் பற்றி விசாரிக்கும் போது சிறிதும் தயங்காமல் தன்னை திருடன் என்று அறிமுகப்படுத்திக் கொள்ளும் அலட்சிய மனோபாவம்,எதுவுமே கிடைக்கவில்லையே என்னும் அங்கலாய்ப்பு, மோதிரம் ஒன்றைக் கொடுத்து விட்டு தன்னைக் கொன்றுவிடச் சொல்லி சௌகார் ஜானகி வேண்டும் போது திகைப்பு, வைத்தியரை மிரட்டி அழைத்து வரும் தோரணை என அத்துணை பாவங்களையும் அழுத்தமாகவும் அழகாகவும் இயல்பாகவும் வெளிப்படுத்தி நடிகர் பேரரசர் என்பதை நிரூபித்திருப்பார்.
    மதுப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்த கவிஞர் வாலியை தனது மனசாட்சியோடு பேச வைத்து அதை ஒரு அருமையான பாடலாக்கியிருப்பார் எம்.ஜி.ஆர். அது தான் தைரியமாகச் சொல் நீ மனிதன் தானா. அந்தப் பாடல் காட்சியில் ஐந்து எம்.ஜி.ஆர் தோன்றும் காட்சி அருமையிலும் அருமை. மேலும் அந்த ஒரே பாடல் காட்சியில் அத்தனை தந்திரக் காட்சிகளையும் பயன்படுத்தி அழகூட்டியிருப்பார் எம்.ஜி.ஆர். இதை எழுதும் போது ஆனந்த விகடன் வார இதழில் பாலா பாக்கம் என்ற தலைப்பில் ஆனந்த விகடன் ஆசிரியர் எழுதிய தொடர் நினைவுக்கு வருகிறது. இரவு இரண்டு மணி வரை படப்பிடிப்பும் அதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட காட்சிகளை உடனுக்குடன் பிரிண்ட் போட்டு பார்த்து அந்தக் காட்சியை மெருகூட்டுவதும் மாற்றி எடுப்பதுமாகப் பொழுது கழிந்து அனைவரும் களைப்படைந்திருந்த தருணத்தில் எல்லோரையும் ஓய்வெடுக்கச் சொல்லி அனுப்பி விட்டு தான் மட்டும் ஓய்வெடுக்காமல் பலவிதமான யுக்திகளை யோசித்து வைத்து அனைவரும் அடுத்த நாள் காலை படப்பிடிப்புக்கு வரும் போது முன்னரே காத்திருந்து அனைவரையும் அசத்திய நிகழ்ச்சியை ஆனந்த விகடன் ஆசிரியர் வர்ணிக்கும் நேர்த்தி இன்றும் மனதில் நிழலாடுகிறது. அந்தப் பொக்கிஷத்தை பாதுகாத்து வைத்திருப்போர் யாராவது அதை இந்தத் தருணத்தில் பதிவிட்டால் பொருத்தமாக இருக்கும்.சாதாரணமாக ஒரு எம்.ஜி.ஆரின் உடலிலிருந்து மற்றொரு எம்.ஜி.ஆர் தோன்றவதாக அமைக்காமல் வெளிவரும் மற்றொரு உருவம் சுற்றிச் சுழன்று வரும் தந்திரக் காட்சி ஒரு புரட்சி தான். இதற்கு முன் அப்படி வந்ததில்லை.
    சௌகார் ஜானகியை கேவலமாகப் பேசிய ஜஸ்டினை புரட்டி எடுக்கும் காட்சியும் வேகமும் , உடனேயே சௌகார் ஜானகி அடித்தவுடன் திகைத்துப் போய் அறைக்குத் திரும்பிய தருணத்தில் மன்னிப்புக் கேட்கும் அவரிடத்தில்தன்னை அவமானப்படுத்தியதாகக் குமுறுவதும், உடனேயே இப்படி சிறுவயது முதலே தன்னைத் தட்டிக் கேட்க ஆளிருந்திருந்தால் தான் இப்படித் தடம் மாறிப் போயிருக்க மாட்டேன் என வருந்துவதாகட்டும் அபாரமாக இருக்கும். நீ யாரு உனக்கு என்ன வேணும்னு கேட்க பூமியில நடக்கிற மனுசனுக்கு மனசில்லை. மேலிருக்கிற ஆண்டவனுக்கு நேரமில்லை. நான் திருடினேன். எனச் சொல்லி உருகுமிடம் உருக்கும். திருடன் திருடன் எனச் சொல்லித் துரத்தும் மனிதர்களிடம் தன் நிலையைச் சொல்லி அப்பாவித் தனமாக வேலை கேட்பதும் அவர்கள் விரட்டியவுடன் மனம் வெதும்பி விலகுவதும் அத்தனை பாந்தமாக இருக்கும்.
    நாங்க புதுசா கட்டி கிட்ட ஜோடி தானுங்க சூப்பர் டூப்பர் ஹிட் . நடனமும் மிகச் சிறப்பாக இருக்கும். இந்த நடனக் காட்சியைப் பார்க்கம் போது ஏச்சி பிழைக்கும் தொழிலே சரிதானா நடனம் ஞபாகத்துக்கு வரும். ஆனால் குண்டடிபட்டதன் காரணமாக ஏற்பட்ட உடல் நலிவு உருக்கு உடலை சற்று குலைத்து கண்ணீரை வரவழைக்கும். தேக்கு மரத் தேகத்திற்கா இந்த கதி என கலங்க வைக்கும்.
    சௌகார் ஜானகியைத் தேடி வரும் போலீசை ஏமாற்ற பெண் வேடமிட்டு அமர்ந்திருக்கும் சோவை கண்டவுடன் கட்டுப்படுத்தமுடியாமல் வரும் சிரிப்பை துணியை வாயில் வைத்து மறைத்தபடி கட்டுப்படுத்தி சிரிக்கும் சிரிப்பை காணக் கண் கோடி வேண்டும். வங்கியில் கொள்ளையடித்தவர்களைக் கண்டுபிடிக்க உதவ வேண்டும் என வி.எஸ்.ராகவனிடம் கேட்கு முன் நடந்து வருவாரே அந்த நடையழகை எப்படி வர்ணிப்பதென்றே தெரியவில்லை. சைலேஷ் பாசு அவர்களைக் கொண்டு ஒரு புதிய தொடரே தொடங்கலாம் மக்கள் திலகத்தின் விதவிதமான நடையழகுகளை மட்டும் பதிவு செய்து.
    ருக்குமணியே பாடலில் அந்தரத்தில் தொங்கியபடியே பாடி நடித்திருப்பது புதுமை. நெருப்புக்குள் நுழைந்து குழந்தையைக் காப்பாற்றும் காட்சி பரபரப்பான விறுவிறுப்பு. திரில்லிங்கான காட்சி. மனம்மாறி பாவச் செயல் செய்யக்கூடாது என முடிவெடுத்திருந்த எம்.ஜி.ஆர் நிர்பந்தத்தின் காரணமாக மீண்டும் திருடச் செல்லும் போது தடுத்தாட்கொண்ட இறைவன் செயல்தானோ அந்த தீவிபத்து. குருட்டுப்பாட்டியின் மறைவு கேட்டுத் துடிக்கும் போது கலங்காத மனம் கல்மனமாகத் தான் இருக்க முடியும்.
    மாம்பழத் தோட்டம் மல்லிகைக் கூட்டம் சீர்காழி கோவிந்தராஜனின் குரலில் ஒலிக்கும் போது துள்ளாட்டம் போட வைக்கிறது. இறைவா உன் மாளிகையில் ... ... பி.சுசீலாவின் குரலில் நெஞ்சை நெகிழச் செய்து இந்தத் திரைப்படத்தில் மக்கள் திலகத்தைப் பிழைக்க வைத்தது 1968ல். அதே பாடல் பட்டி தொட்டியெல்லாம் ஒலித்து மற்றொரு பிறப்பைத் தந்தது 1984ல். உலகில் அதிக முறை ஒலிபரப்பப்பட்ட பாடல் என்ற சாதனையைப் படைத்தது அந்தப் பாடல். 1984ஆம் ஆண்டு அத்தனை திரையரங்குகளிலும் எந்தப் படம் திரையிடப்பட்ட போதும் முதலில் இந்தப் பாடலை ஒளிபரப்பிய பின்னரே மெயின் படம் ஓட்டப்பட்டது. வீதியெங்கும் ஒலிபெருக்கிகளில் இந்தப் பாடல் ஒலிபரப்பப்பட்டது. ஊரே கூடி வந்து உனக்கு என்ன வேண்டும் என்று கேட்கும் காட்சி நல்லதொரு பாசிட்டிவ் அப்ரோச்.
    தான் கஷ்டப்பட்டு சம்பாதித்த ஐந்து ரூபாயை எட்டி உதைத்த மனோகரைப் புரட்டி எடுக்கும் காட்சியில் உழைப்பின் உயர்வை அருமையாக கண்முன் கொண்டு வந்திருக்கிறார். மொத்தத்தில் தித்திக்கும் திரைவிருந்து மக்கள் திலகத்தின் ஒளிவிளக்கு. பூல் அவுர் பத்தர் படத்தை தமிழில் எடுக்கிறார்கள் எனக் கேள்விப்பட்டவுடன் மக்கள் திலகத்தைத் தொடர்பு கொண்டு அந்தக் கதாபாத்திரம் தனக்கு வேண்டும் என்று கேட்டு வாங்கினேன். நான் கேட்டு வாங்கிய ஒரே வாய்ப்பு அதுதான் என்று பெருமையுடன் பேட்டியளித்துள்ளார் சௌகார் ஜானகி அவர்கள். அந்தப் பெருமை மிகவும் நியாயமானது தான். சௌகார் ஜானகி நடித்த படங்களிலேயே , ஏற்ற பாத்திரங்களிலேயே மிகவும் அற்புதமான கதாபாத்திரம், அற்புதமான நடிப்பாற்றல் வெளிப்பட்ட படம் இதுதான் என்று சொன்னால் அது மிகையாகாது. பூல் அவுர் பத்தர் படத்தில் விதவைக்கு வாழ்வளிப்பான் கதாநாயகன். ஆனால் எம்.ஜி.ஆருக்கு அப்படிப்பட்ட முற்போக்கான சிந்தனை இல்லை எனவே அந்தக் காட்சி மாற்றப்பட்டு அவர் இறந்து போவதாக அமைக்கப்பட்டது என சமீப காலம் வரை சில வாரஇதழ்கள் குறைகூறின. (என்ன செய்வது அவர்களுக்கு எதாவது ஒரு காரணத்தைத் தேடிக் கண்டுபிடித்து மக்கள் திலகத்தைக் குறைகூற வேண்டும்.) அந்தமான் கைதி திரைப்படத்திலேயே விதவைக்கு வாழ்வளித்து முற்போக்கு எண்ணங்களுக்கு வித்திட்டவர் நம் தலைவர். மேலும் அதைக் காட்டிலும் இந்த கதையில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றமானது அந்தக் கதாபாத்திரத்தை மேலும் உயர்வாகக் காட்டுகிறது. இவ்வளவு அருமையான படம். அதன் சிறப்பான பிரிண்ட் நம்மிடம் இல்லை என்பது தான் மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. வண்ணம் மங்கி சிதைவடைந்த நிலையில் தான் டிவிடி கூட கிடைக்கிறது.
    ஒளிவிளக்கு சிறப்பு கட்டுரை அட்டகாசம் திரு.ஜெய்சங்கர் சார். நன்றி.

    நேற்று முன்தினமே விரிவாக எழுத நினைத்தேன். நேரமின்மையால் முடியவில்லை.

    சவுகார் ஜானகியிடம் அவரது கதையைக் கேட்டுக் கொண்டே கத்தியை நீ்ட்டி மடக்கியபடி இருக்கும் தலைவரின் ஸ்டைல். பின்னர், சவுகாரிடம் ‘நான் கெட்டவன்தான், ஆனா கேவலமானவன் இல்ல’ என்று ஐந்தே வார்த்தைகளில் தனது கேரக்டரை அலட்சியப் பார்வையுடன் விளக்குவாரே. அது ஒன்றே போதும்.

    ‘இந்த கிராமத்துக்கு நீ எதுக்கு வந்துருக்கேன்னு தெரியும்’ என்று தலைவரிடம் சோ அவர்கள் சொல்ல, அதற்கு தலைவர், நாக்கை லேசாக துருத்தி முன் பல்லால் கடிக்கும் பாவத்தின் மூலமே ‘திருடுவதற்காக வந்த விஷயத்தை கண்டுபிடிச்சிட்டியா?’ என்று கேட்கும் நுட்பமான நடிப்பு.

    திருடுவதை விட்டுவிட்டு, தான் உழைத்து சம்பாதித்து கிடைத்த நாணயங்களை திரு.மனோகர் எட்டி உதைத்ததால் அந்த காசுகள் அருகே உள்ள குளத்தில் விழும். மனோகரை தலைவர் புரட்டி எடுப்பார். அதற்கு முன்னதாக, குளத்தருகே ஓடி காசுகள் விழுந்த இடத்தை அவை திரும்பக் கிடைக்குமா? என்று தண்ணீரை ஏக்கமும் பரபரப்புமாக பார்க்கும் பரிதாபம். காசைப் பறிகொடுத்த ஏழை உழைப்பாளியின் மனநிலையை உணர்த்தும். காசு திரும்பக் கிடைக்குமா? என்ற பதைபதைப்புதான் முதலில் ஏழைக்கு தோன்றும். பிறகுதான் தட்டி விட்டவனுக்கு அடியெல்லாம். அதை அற்புதமாக காட்டியிருப்பார் தலைவர்.

    நீங்கள் குறிப்பிட்டுள்ளபடி, ஆனந்த விகடனில் வெளியான கட்டுரையை நானும் படித்திருக்கிறேன். அதிலும் 5 மக்கள் திலகம் தோன்றும் பாடல் காட்சி மாஸ்க் ஷாட்டில் முழுமையாக எடுக்கப்பட்ட பின்னர், நன்றாக வந்திருக்கிறதா என்று ஆனந்த விகடன் ஆசிரியர் ரஷ் போட்டு பார்க்க ஏற்பாடு செய்திருக்கிறார். ஏற்பாடுகள் தொடங்கும் முன்பே, நள்ளிரவில் களைப்பாக இருந்த தலைவர், ‘பார்த்து விட்டு எப்படி வந்திருக்கிறது என்று சொல்லுங்கள். நான் வீட்டுக்கு புறப்படுகிறேன்’ என்று சொல்லி விட்டு சென்றிருக்கிறார்.

    பாடலை பார்த்து விட்டு திருப்தியடைந்த விகடன் ஆசிரியர் அவர்கள், ‘‘பாடல் காட்சி நன்றாக வந்திருக்கிறது. எம்ஜிஆருக்கு போன் போட்டு சொல்லிடுங்கப்பா’’ என்று கூறியிருக்கிறார். அப்போது பின்னால் இருந்து, அவரது தோள் மீது விழுந்த கை தலைவரின் கை.

    என்னவென்றால், புறப்பட்டு போவதாக சொல்லிய தலைவர், ஆர்வம் காரணமாக மீ்ண்டும் வந்திருக்கிறார். விகடன் ஆசிரியரை தொந்தரவு செய்யாமல் அவருக்கு பின்னாலேயே அமர்ந்து தானும் அந்த பாடல் காட்சியை பார்த்துள்ளார். அந்த அளவுக்கு தொழிலில் அக்கறை. ஆர்வம். இதை கட்டுரையில் ஆசிரியர் குறிப்பிட்டிருப்பார்.

    இப்படி எல்லாம் மையம் திரி வரப்போகிறது என்று யாருக்குத் தெரியும்? நண்பர்கள் தங்களிடம் அந்த பொக்கிஷம் இருந்தால் பதிவிட வேண்டும் என்று திரு.ஜெய்சங்கர் சாரைப் போலவே நானும் வேண்டுகிறேன்.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  7. Thanks orodizli thanked for this post
    Likes orodizli, ujeetotei, mgrbaskaran liked this post
  8. #774
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    அபூர்வமான பொக்கிஷப்பதிவுக்கு நன்றி திரு.ரூப் குமார் சார். திண்டுக்கல் தேர்தல் கால நினைவுகளை அசைபோட வைத்துவிட்டது உங்கள் பதிவு. நன்றி.

    ஏற்கனவே, நான் ஒரு பதிவில் இந்திரா காங்கிரஸ் சார்பில் தலைவருடன் சமரசம் பேசி தேர்தலில் அதிமுக போட்டியிடாமல் தடுக்க முயற்சித்தபோதும் தலைவர் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை என்று கூறியிருந்தேன். அதற்கு ஆதாரமாக அமைந்துள்ளது திரு.பக்தவச்சலம் அவர்களின் பேட்டி. உலகம் சுற்றும் வாலிபன் அந்நிய செலாவணி பிரச்சினையால் மத்திய அரசின் மிரட்டலுக்கு பயந்துதான் திமுகவை தலைவர் உடைத்தார் என்றும் அதிமுகவை குட்டிக் காங்கிரஸ் என்றும் அப்போது விமர்சனங்கள் எழுந்தன. அந்நிய செலாவணி பிரச்சினை ஏதும் எம்ஜிஆர் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு இல்லை என்று மத்திய நிதியமைச்சராக இருந்த சதீஷ் அகர்வால் மாநிலங்களவையிலேயே அறிவித்தார்.

    இது தொடர்பாக அப்போது வந்த பத்திரிகை செய்தியை பேராசிரியர் செல்வகுமார் அவர்கள் நமது திரியில் ஏற்கனவே வெளியிட்டார். (பாகம் 15, பக்கம் 386, பதிவு.3855) இந்திரா காங்கிரசின் வேண்டுகோளை மறுத்து தேர்தலில் அதிமுகவை போட்டியிடச் செய்ததன் மூலம் தலைவர் தனது தனித்தன்மையை நிலைநாட்டியிருக்கிறார். அதற்கு பக்தவச்சலம் அவர்களின் பேட்டியே சான்று.

    அற்புதமான ஆவணப் பதிவுக்கு மீண்டும் நன்றி திரு.ரூப் குமார் சார்.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
    Last edited by KALAIVENTHAN; 25th September 2015 at 07:58 PM.

  9. Thanks orodizli, ujeetotei thanked for this post
    Likes orodizli, mgrbaskaran liked this post
  10. #775
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    திண்டுக்கல் தேர்தல் பிரசாரத்தில் தலைவர் என்னமாய் உழைத்திருக்கிறார். பல கூட்டங்களில் பேசிவிட்டு சோழவந்தானுக்கு அவர் வந்தபோதே நள்ளிரவு 12 மணி ஆகியிருக்கிறது. பின்னரும், பல ஊர்களுக்குச் சென்று விடிய விடிய பிரசாரம் செய்துள்ளார். இதை பத்திரிகை செய்தி தெரிவிக்கிறது. அப்போதெல்லாம் இரவு 10 மணிக்குள் பிரசாரத்தை முடிக்க வேண்டும் என்ற தேர்தல் கமிஷனின் கட்டுப்பாடுகள் கிடையாது. தலைவரின் அயராத உழைப்பும், அவர் மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையும்தான் அவரது வெற்றிகளுக்கு அடிப்படை. அரிய ஆவணப்பதிவுக்கு நன்றிகள் ரூப் குமார் சார்.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  11. Thanks orodizli, ujeetotei thanked for this post
    Likes orodizli, mgrbaskaran liked this post
  12. #776
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    திண்டுக்கல் தேர்தலில் இரண்டாவது இடத்தை ஸ்தாபன காங்கிரசும் 4வது இடத்தை இந்திரா காங்கிரசும் பிடிக்கும் என்று பேராசிரியர் திரு. அன்பழகன் அவர்கள் சரியாக கணித்துள்ளார். திமுக, அதிமுக பற்றிய கணிப்புகள்தான் மாறிவிட்டது. பாரபட்சமில்லாத உங்கள் பதிவுக்கு நன்றி ரூப் குமார் சார்.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  13. Thanks orodizli, ujeetotei thanked for this post
    Likes orodizli, mgrbaskaran liked this post
  14. #777
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by ravichandrran View Post

    Mr.Rajkumar - chennai is now at thiruvannamalai with makkal thilagam fans to attend the celebration on the occassion of makkal thilagam Mandram function. He came in the van fixed with the above banner.
    திருவண்ணாமலையில் இன்று நடக்கும் தலைவர் விழாவுக்காக சகோதரர் திரு.ராஜ்குமார் அவர்கள் அங்கு சென்றுள்ளார் என்பது திரு.ரவிச்சந்திரன் அவர்களின் பதிவில் இருந்து தெரிகிறது. திரு.ராஜ்குமார் சென்ற வேனில் தலைவரின் படங்கள் கொண்ட பேனரை கட்டி சென்றிருப்பதும், அதில் ‘விரைவில் தலைவரின் நூற்றாண்டு விழா’ என்பதை விளம்பரப்படுத்தியிருப்பதும் பாராட்டுக்குரியது.

    நமது நண்பர்கள், சகோதரர்கள் எந்த விழாவாக இருந்தாலும் நோட்டீஸ், போஸ்டர்கள் அச்சடித்தாலும் அதில் தலைவரின் நூற்றாண்டு விழாவை முன்னிறுத்தி இப்போதிலிருந்தே விளம்பரப்படுத்த வேண்டும். சென்னையில் இருந்து திருவண்ணாமலை வரை 190 கி.மீ. தூரத்துக்கு இந்த பேனரை எத்தனை லட்சம் பேர் பார்த்திருப்பார்கள். இப்படி தொடர்ந்து நூற்றாண்டு விழாவை முன்னிறுத்தி விளம்பரப்படுத்தும்போது மக்கள் மனதில் இது பதியும். தலைவரின் படம் போதுமே மக்களின் கண்களை கவர்ந்திழுக்க. தானாகவே நூற்றாண்டு விழா பற்றிய வரிகளை படிப்பார்கள். சகோதரர் ராஜ்குமார் அவர்களுக்கு பாராட்டுக்கள். நன்றிகள்.

    பதிவிட்ட திருப்பூர் திரு.ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றிகள்.

    தலைவர் நூற்றாண்டு விழாவை நாம் விளம்பரப்படுத்தினால்தான் உண்டு.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  15. Thanks orodizli, oygateedat thanked for this post
    Likes orodizli, oygateedat liked this post
  16. #778
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    இனிய நண்பர் திரு ரூப் சார்

    1973 திண்டுக்கல் இடைதேர்தல் நேரத்தில் வெளியான நவமணி இதழ்களின் ஆவணம் - மிகவும் அருமை .
    திண்டுக்கல் இடைதேர்தல் முடிவு - இந்திய அரசியலில் மாபெரும் திருப்பத்தை உண்டாக்கியது உண்மை .
    1972 அக்டோபரில் திமுகவிலிருந்து மக்கள் திலகம் எம்ஜிஆர் நீக்கியதும் தமிழகத்தில் ஏற்பட்ட புயல் , எம்ஜிஆர் ரசிகர்கள் , பொது மக்களின் பேராதரவு அலை சரித்திர புகழ் வாய்ந்தது . 1972ல் எம்ஜிஆர் ரசிகர்கள் எடுத்த சபதம்
    1973ல் திண்டுக்கல் இடைதேர்தலில் முழு மூச்சுடன் உழைத்து வெற்றி கனியை பறித்தார்கள் .தேர்தலுக்கு முன் வந்த உலகம் சுற்றும் வாலிபன் பிரமாண்ட வெற்றி , இடைதேர்தல் வெற்றி என்ற இரட்டை இலை விருந்து கண்டார்கள் .

    1972ல் அக்டோபரில் நடந்தது தர்ம யுத்தம் .
    1973ல் கிடைத்து வெற்றி சரித்திரம் .
    யுத்தத்திலும் , சரித்திரத்திலும் தோற்றவர்கள் விரக்தியின் உச்சத்தில் சென்றார்கள் .
    மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களின் லட்சியம் வென்றது .

  17. Thanks orodizli, ujeetotei thanked for this post
    Likes orodizli, ujeetotei, mgrbaskaran liked this post
  18. #779
    Junior Member Senior Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by ravichandrran View Post
    ........................................

  19. #780
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •