-
31st October 2015, 07:13 AM
#2391
Junior Member
Junior Hubber
எப்படி கவர்ந்தார்...? ஏன் இவ்வளவு பக்தி....? யாராலும் வரையறுத்து சொல்ல முடியாத ஒரு மந்திரமே...... அந்த மூன்றெழுத்து .... அவர் பாடியது போல அந்த மூன்றெழுத்தில் அவர் மூச்சு மட்டும் அல்ல.... இன்று வரை எங்கள் மூச்சும் அந்த மூன்றெழுத்தில் தான் சுவாசித்து கொண்டு இருக்கிறது.....
-
31st October 2015 07:13 AM
# ADS
Circuit advertisement
-
31st October 2015, 07:16 AM
#2392
Senior Member
Seasoned Hubber
8000 பதிவுகளைக் கடந்த திரு முத்தையன், 9000 பதிவுகளைக் கடந்த திரு லோகநாதன் இருவருக்கும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
31st October 2015, 11:14 AM
#2393
Junior Member
Regular Hubber
என்னை வரவேற்ற ரத்தத்தின் ரத்தங்களுக்கு நன்றி.
-
31st October 2015, 11:22 AM
#2394
Junior Member
Regular Hubber
நடிகர் சங்க வளர்ச்சிக்கு எட்டாவது வள்ளல், கலியுக கர்ணன், பொன்மனச் செம்மல் ஆற்றிய பணிகள்
http://nadigarsangam.org/index.php/sifa/thodakkam
தொடக்கமும் வளர்ச்சியும்
1930 மற்றும் 1940 வருடங்களில் புகழ் பெற்ற திரைப்பட தயாரிப்பாளரும் மற்றும் இயக்குனருமான திரு கே சுப்பிரமணியம், 1950 ஆம் ஆண்டு 'தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை' என்ற அமைப்பினை மேலும் சில திரை துறை சார்ந்த வல்லுனர்களுடன் சேர்ந்து நிறுவினார். இதுதான் நடிகர்களை ஒன்றிணைக்க அவர்தம் வாழ்வு சிறக்க இடப்பட்ட முதல் விதை ஆகும். அவர் இன்று நாட்டிய உலகில் தலை சிறந்து விளங்கும் பத்ம பூஷன் பத்மா சுப்ரமணியம் அவர்களின் தந்தை என்பது குறிப்பிட தக்கது.
இந்த அமைப்பை பின் தொடர்ந்து, நடிகர்களின் நல்வாழ்வை மனதில் கொண்டு, திரு தி என் சிவதாணு, மற்றும் ஆர் எம் சோமசுந்தரம் போன்ற கலைஞர்களால் 1952 ஆம் ஆண்டு 'தென்னிந்திய துணை நடிகர்கள் சங்கம்' என்ற அமைப்பு தொடங்கப்பட்டது.
இந்த அமைப்பை பற்றியும் அதன் உயர்ந்த குறிக்கோளையும் பற்றி, அப்போது முன்னணி கதாநாயகனாக இருந்த மக்கள் திலகம் திரு எம் ஜி ராமசந்திரன் அவர்களிடம் எடுத்து உரைக்கப்பட்டது. அவரிடம் இருந்து வந்த உடனடி கேள்வி அமைப்பின் செயலாளர்களை திகைப்படைய செய்தது. அவர் கேட்ட கேள்வி 'நானும் இந்த அமைப்பில் உறுப்பினர் ஆகலாமா?' இந்த மாபெரும் மனிதர் கேட்ட ஒரு கேள்வியின் விளைவுதான் 'தென்னிந்திய நடிகர் சங்கம்' என்ற மாபெரும் அமைப்பு. இன்று வரை இந்த அமைப்பு இசை நாடக நடிகர்கள், சமூக நாடக நடிகர்கள், திரைப்பட நடிகர்கள் என அனைத்து வகை கலைஞர்களையும் உள்ளடக்கி அவர்கள் வாழ்க்கை மேம்பட சிறப்புடன் செயல்படுகிறது.
திரு எம் ஜி ஆர் அவர்கள், தானும் ஒரு உறுப்பினராக ஆனதோடு மட்டுமல்லாமல், 1952 ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்கம், சங்கங்களுக்கான சட்டத்திற்கு உட்பட்டு, பதிவு செய்யப்படுவதற்கு வேண்டிய அனைத்தையும் செய்து உதவினார்.
இவ்வாறு தொடங்கப்பட்ட 'தென்னிந்திய நடிகர் சங்கம்' சுருக்கமாக, நடிகர் சங்கத்தின் அலுவல்களை கவனிக்க இடம் இல்லாத சூழ்நிலை. இப்போது லாயிட்ஸ் சாலையில் அமைந்துள்ள அ.இ.அ.தி.மு.க. அலுவலகம் அன்று திரு எம் ஜி ஆர் அவர்களின் இல்லமாக இருந்தது. அந்த இல்லத்திலேயே ஒரு பாகத்தை சங்கத்தின் பணிகளை மேற்கொள்ள, எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி பெரும் மனதுடன் ஒதுக்கி தந்தார். 1952 முதல் 1954 வரை சங்கப்பணிகள் அங்கிருந்தே மேற்கொள்ள பட்டன. திரை வானில் கொடிகட்டி பரந்த அனேக கலைஞர்கள் சங்கத்தின் உறுப்பினர் ஆனார்கள்.
சங்கத்தின் பணிகள் மேலும் சிறக்க நிரந்தர இடம் தேவை என்பதை உறுப்பினர்கள் உணர்ந்து, இடம் தேட ஆரம்பித்தனர். ஜெமினி மேம்பாலம் அருகில் இருந்த 'சன் தியேட்டர்ஸ்' இடமும் தற்போது உள்ள ஹபிபுல்லா சாலை இடமும் பரிசீலிக்கப்பட்டது. மேம்பாலமும் அருகிருந்த பிரதான சாலையும் பின்னாளில் விரிவு படுத்தப்படும்போது, சிரமம் வரலாம் எனக் கருதி, ஹபிபுல்லா சாலையில் உள்ள இடமே முடிவு செய்யப்பட்டது. சுமார் 22 கிரவுண்டுகளை உள்ளடக்கிய இந்த இடம் பதிவு கட்டணம் உட்பட ரூபாய் 75,000 மதிப்பில் வாங்கப்பட்டது. இந்த இடத்தை வாங்குவதற்கு ரூபாய் 35,000 அனேக கலைஞர்களிடம் இருந்து நன்கொடையாக பெற பட்டது. மேலும் தேவையான ரூபாய் 40,000 த்தை திரு எம் ஜி ஆர் அவர்கள், தன்னுடைய 3 திரைப்படங்களின் சம்பளத்தை 'கிருஷ்ணா பிக்சர்ஸ்' நிறுவனத்திடம் இருந்து பெற்று, நெருக்கடியான சூழ்நிலையில் இந்த சங்கத்துக்கு உதவினார். இப்படி ஒரு தனிமனிதனின் தியாகத்தையும் ஏனைய பல முன்னணி நடிகர்களின் உழைப்பையும் தாங்கி இந்த மாபெரும் சங்கம் வளர்ந்தது.
1972 வரை நடிகர் சங்கம் ஒரு கூரை வேய்ந்த கட்டிடத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்தது. நடிகர் திலகம் திரு சிவாஜி கணேசன் அவர்கள், தலைவராக பொறுப்பேற்ற பின், நடிகர் சங்கத்திற்கு நிரந்தர கட்டிடம் தேவை என்பதை உணர்ந்து அனைவரும் சேர்ந்து ஒரு மனதாக முடிவு செய்து வங்கியில் ரூபாய் 22 லட்சம் கடன் வாங்கப்பட்டது. கட்டிடமும் கட்டி முடிக்கப்பட்டது.
காலபோக்கில் நிரந்தர அல்லது தொடர்ந்த வருமானம் இல்லாத நிலையில், கடனை திருப்பி செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டது. அந்த தருவாயில் கூட, திரு எம் ஜி ஆர் அவர்கள் ரூபாய் 5 லட்சம் கொடுத்து உதவினார் மேலும் பலர் தன்னால் இயன்ற அளவு உதவி செய்து இந்த அமைப்பு சிறந்து விளங்க பாடுபட்டனர்.
-
31st October 2015, 11:22 AM
#2395
Junior Member
Regular Hubber
http://nadigarsangam.org/index.php/sifa/nigalvugal
1971 - 1985
1971 வரை தென்னிந்திய நடிகர் சங்கம் ஒரு கொட்டகை (Shed) மட்டும் இருந்தது. அங்கே சின்னதாக ஒரு அலுவலகம் செயல்பட்டு வந்தது. 1971 ல் திரு. சிவாஜி கணேசன் தலைமை பதவியேற்று, புரட்சி தலைவர் 'பாரத்' பட்டம் பெற்றதற்காக பாராட்டு விழா நடத்தும் போது சங்கத்திற்கு கட்டிடம் கட்டப்பட வேண்டும், அதுவரை திரு. சிவாஜி கணேசன் அவர்கள் தான் தலைவராக இருக்கவேண்டும் என்று மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் கூடியிருந்த உறுப்பினர்கள் மத்தியில் கேட்டுக் கொண்டார்.
திரு. சிவாஜி கணேசன் அவர்கள் தலைவராகவும், திரு மேஜர் சுந்தர்ராஜன் அவர்கள் பொதுச் செயலாளராகவும், திரு வி கே ராமசாமி அவர்கள் பொருளாளராகவும், பொறுப்பேற்று, சங்க கட்டிடம் கட்ட ஸ்டேட் வங்கியில் ரூ 18,00,000/- கடனாக பெறப்பட்டது. வங்கியில் கடன் வாங்கும் போது, வங்கி கடனை அடைக்க மாதா மாதம் ரூ 8000/- மும், வருடத்திற்கு ஒரு முறை ஸ்டார் நைட் நிகழ்ச்சி நடத்தி ரூ 1,00,000/- கொடுப்பதாகவும் எழுத்து மூலமாக கொடுத்து இருக்கிறார்கள். ஆனால் சங்கத்தில் சரியான வருமானம் இல்லாத காரணத்தால் சங்க கடனை அடைக்க முடியாமல் நாளுக்கு நாள் வட்டியும், அசலும் அதிகமானது. வங்கியில் கடன் பெற்று இப்போது இடிக்கப்படும் முன்பு இருந்த கட்டிடத்தை கட்டினர். ஆகஸ்ட் மாதம் 1979 ல் " புரட்சி தலைவர் " முதலமைச்சர் ஆனவுடன் கட்டிடம் அவர் கையால் திறந்து வைக்க பட்டது.
1979ல் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்கள் கடனை அடைக்க அரசிடம் நிதி கோரப்பட்டது. அரசு மூலம் அவரும் ரூ.5 லட்சம் நிதி வழங்கினார். இருப்பினும் கடன் அடைக்கப்படவில்லை. அசலுடன் வட்டி நாளுக்கு நாள் அதிகம் ஆகியது. ஏன் கடன் அடைக்கப்படவில்லை என்றால் வங்கி கடன் கட்டும் அளவுக்கு கட்டப்பட்ட கட்டிடத்தினால் வருமானம் வரவில்லை. வட்டியும் அசலும் கட்டாமல் கடன் வளர்ந்து வந்தது. 1400 பேர் அமரக் கூடிய அரங்கம், பிரிவியு தியேட்டர் இருந்தும் வங்கி கடனை திருப்பி செலுத்த வருமானம் வரவில்லை.
பின்னர் திரு. எஸ் எஸ் ராஜேந்திரன் தலைமை பொறுப்புக்கு வந்தார். நடிகர் சங்க சொத்து தானமாக நடிகர் சங்க அறக்கட்டளைக்கு வழங்கப்பட்ட பத்திரத்தை ஆய்வு செய்து அதில் நடிகர் சங்க நிலத்திற்கு நடிகர் சங்கத்திற்கு எந்த பாத்தியதையும் இல்லை என்பதை கண்டுபிடித்து, திரு சிவாஜி கணேசன் அவர்களிடம் அதை தெரிவித்து, அந்த தான பத்திரத்தை பொதுக்குழு தீர்மானம் மூலம் ரத்து செய்து, நிலத்தை மீட்டார். அப்போது கட்டப்பட்டுள்ள கட்டிடத்தில் போதிய வருமானம் வராததால் வங்கி கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில், கடன் தொகை வளர்ந்து கொண்டே வந்தது.
1952 - 1970
1952 நவம்பர் மாதம் தென்னிந்திய நடிகர் சங்கம் ஆரம்பம். 'South Indian Artistes' Association' என்ற பெயரில் பதிவு துறையில் பதிவு செய்யப்பட்டது. ஆரம்பிக்க யோசனை சொன்னவர் அப்போது தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பாளர், இயக்குனர் திரு. கே சுப்பிரமணியம் அவர்கள். முதல் தலைவர் திரு. சுந்தரம் அவர்கள். கலைவாணர் திரு என் எஸ் கிருஷ்ணன் அவர்கள் அட்வான்ஸ் தொகை கொடுத்து வைத்திருந்த தற்போது உள்ள நிலம் உள்பட பிரகாசம் சாலை வரை சுமார் 40 கிரவுண்ட் நிலம் வாங்க 1957ல் விற்பனை ஒப்பந்தம் போடப்பட்டது. பின்னர் நிதி பற்றாகுறை காரணமாக 20 கிரவுண்ட் வாங்கப்பட்டது. இந்த நிலத்தை வாங்க பல முன்னணி நடிகர்கள் நிதி வழங்கினார்கள். பெரும்பகுதி நிதி மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களால் வழங்கப்பட்டது. பதிவு செய்ய மொத்த பணமும் திரு. எம்.ஜி.ஆர். வழங்கியுள்ளார். திரு. எம்.ஜி.ஆர், திரு. நாகேந்திர ராவ், திரு. நாகையா, திரு. எஸ் எஸ் ராஜேந்திரன், திரு. கே ஆர் ராமசாமி, திரு. சிவாஜி கணேசன் போன்ற முக்கிய நட்சத்திரங்கள் திரு. ராதாரவி அவர்களுக்கு முன்பு தலைமைப் பதவி வகித்துள்ளனர்.
தமிழகத்திலும் இந்தியாவிலும் ஏற்பட்ட பல முக்கிய இன்னல்களை போக்க மக்களுக்காக நட்சத்திர இரவு, நட்சத்திர கிரிக்கெட் நிகழ்ச்சிகள் நடத்தி இந்திய அரசுக்கு தமிழக அரசுக்கு நிதி வசூல் செய்து கொடுத்துள்ளனர். ஆரம்பத்தில் தென்னிந்திய திரையுலகின் அனைத்து திரைப்பட தயாரிப்பாளர்கள், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் உறுப்பினராக இருந்தினர். அதைப்போல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளின் அனைத்து நடிகர்களும் சங்கத்தின் உறுப்பினர்கள். முக்கிய இசை கலைஞர்கள், இசையமைப்பாளர்கள் ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தில் உறுப்பினராக இருந்துள்ளனர்.
-
31st October 2015, 02:11 PM
#2396
Junior Member
Diamond Hubber
Courtesy : The Hindu (Tamil) - Diwali Malar 2015
-
31st October 2015, 02:13 PM
#2397
Junior Member
Diamond Hubber
-
31st October 2015, 02:14 PM
#2398
Junior Member
Diamond Hubber
-
31st October 2015, 02:17 PM
#2399
Junior Member
Diamond Hubber
-
31st October 2015, 02:19 PM
#2400
Junior Member
Diamond Hubber
Bookmarks