-
2nd November 2015, 09:13 AM
#2481
Junior Member
Seasoned Hubber
Originally Posted by
Sathya VP
Excellent sir, வார்த்தைகள் கிடைக்கவில்லை. நேரில் பார்த்த உணர்வை ஏற்படுத்திவிட்டீர்கள். எப்படி நன்றி சொல்வது, எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை. தங்களது திறமை ஏற்கனவே தெரிந்தது தான் இருப்பினும் தற்போது எல்லா சிகரங்களையும் கடந்து விட்டீர்கள்.... .... .... ....
-
2nd November 2015 09:13 AM
# ADS
Circuit advertisement
-
2nd November 2015, 09:16 AM
#2482
Junior Member
Platinum Hubber
எம்ஜியார் ரசிகர்கள் எல்லாம் விளிம்பு நிலை மனிதர்களாகவே இருப்பார்கள் அதற்க்கு காரணம் கொடுங்கோலனான வீட்டு உரிமையாளர் நம்பியார் சின்னத்தப்புக்கே சாட்டையை உருவி வேலைக்காரர்களை போட்டு உதைப்பார். அவரையே எம்ஜியார் போட்டு புரட்டி புரட்டி எடுப்பார், அது எல்லா வேலைக்காரர்களும் தன் முதலாளியை புரட்டி எடுப்பது போல் மனதில் உருவகப்படுத்தி கொள்வார்கள் அதனால் அவர்கள் மத்தியில் எம்ஜியார் போற்றபட்டார்.
எம்ஜியார் எல்லா தவறுகளையும் தன் படங்களில் தட்டிக்கேட்டவர், அதனாலே அவர் எல்லோருக்கும் பிடித்து போனார். அதே போல் அவர் ஏற்ற பாத்திரங்கள் அனைத்தும் விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வியல் பிரச்சனைகளை மையப்படுத்தியே இருக்கும். படகோட்டி ,ரிச்சாக்காரன் போன்ற படங்களை உதாரணமாக சொல்லலாம்.
courtesy - net
-
2nd November 2015, 09:25 AM
#2483
Junior Member
Platinum Hubber
விளிம்பு நிலை என்கிற போது எனக்கு ஜேகேயோடு எம்ஜியார் ஞாபகமும் சேர்ந்தே வருகிறது. எம்ஜியாரும் விளிம்புநிலை மக்களைப் பற்றித்தானே படம் எடுத்தார்? நாடோடி மன்னனில் எம்ஜியார் தன் முகத்தருகே ஸ்டைலாக விரலை வெட்டி ஒரு நீண்ட வசனம் பேசுவாரே, அது அப்படியே கார்ல் மார்க்ஸின் கம்யூனிஸ்ட் அறிக்கையில் உள்ளதுதானே? உழைப்பவனுக்கே நிலம் சொந்தம். ஆஹா ஆஹா… கார்ல் மார்க்ஸையும் எம்ஜியாரையும் தவிர வேறு யார் சொன்னது இதை? அதனால்தானே மக்கள் அவரை – எம்ஜியாரை – புரட்சித் தலைவர் என்று அழைக்கிறார்கள்? படகோட்டி என்ற படத்தைப் பார்த்திருக்கிறீர்களா? என் தலைவனுக்கு முன்னால் படகோட்டிகளைப் பற்றி யார் கவலைப்பட்டார்? எனவே எம்ஜியாரும் ஜெயகாந்தனும்தான் தமிழில் முதல் முதலாக விளிம்பு நிலை மக்களைப் பற்றிப் பேசியவர்கள்.
Courtesy - net
-
2nd November 2015, 09:28 AM
#2484
Junior Member
Platinum Hubber
படகோட்டி’ படம் மூலம் மீனவ சமுதாயத்திடம் அவர் ஏற்படுத்திய தாக்கம் இன்றுவரை அவருடைய கட்சிக்கான வாக்கு வங்கியாக நிலைபெற்றிருக்கிறது. தொழிலாளி, விவசாயி, எங்க வீட்டுப் பிள்ளை உள்ளிட்ட பல படங்களும் அவருடைய அரசியல் செல்வாக்கிற்குத் துணை நின்றன. தி.மு.கவிலிருந்து அவர் நீக்கப்பட்டு, தனிக்கட்சியான அ.தி.மு.கவைத் தொடங்கிய சூழ்நிலையில் வெளியான ‘படத்திற்கு நெருக்கடி வந்தபோது, பல ஊர்களிலும் அந்தப் படத்திற்கு பாதுகாப்பாக இருந்து, திரையிடச் செய்தனர். எம்.ஜி.ஆரின் தயாரிப்பு- இயக்கத்தில் அன்றைய சூழலில் பெரும்பொருட்செலவில் வெளிநாடுகளில் உருவாக்கப்பட்ட ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தின் வெளியீட்டின்போது, தி.மு.க ஆட்சி கொடுத்த நெருக்கடியால் சென்னையில் சுவரொட்டி ஒட்டமுடியாத நிலை ஏற்பட்டது. அதற்குப் பதிலாக ஸ்டிக்கர்கள் மூலம் விளம்பரம் செய்யப்பட்டது. அதனை வாகனங்களிலும் கடைகளிலும் ஒட்டும் பணியில் அவருடைய ரசிகர் மன்றத்தினர் முழுமையாக ஈடுபட்டனர்.
தனது ரசிகர்களை மன்றங்கள் என்ற அமைப்பின் கீழ் ஒன்றிணைத்து அதனை அரசியல் தளத்திற்கு நகர்த்தி வெற்றி கண்டவர் எம்.ஜி.ஆர். 1972ல் அ.தி.மு.க என்ற தனிக்கட்சியைத் தொடங்கியபிறகு, திரைப்படத்தின் சில காட்சிகளையும், பாடல்களையும் நேரடி அரசியல் பிரச்சாரமாக்கி, 5ஆண்டுகளில் ஆட்சியையும் பிடித்தவர் அவர். முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். மும்முறை தொடர்ச்சியாக அவரது கட்சி தேர்தலில் வென்றது. 11ஆண்டுகாலம்(1977ஜூன்-1987டிசம்பர்) தமிழகத்தின் முதலமைச்சராக செயல்பட்டார்.
திரைப்படங்களை தன்னுடைய பிரச்சார ஊடகமாக, அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தி வெற்றி கண்டவர் எம்.ஜி.ஆர். அவரது இந்த அணுகுமுறையைக் கடுமையாக விமர்சிப்பவர்களும் உண்டு. எனினும், திரைப்படங்களை நுட்பமாகப் பயன்படுத்தி அவர் வெற்றி பெற்றார் என்பது மறுக்கமுடியாதது. எம்.ஜி.ஆருடைய படங்கள் சில, வெளியான காலத்தில் வணிகரீதியில் தோல்வியடைந்துள்ளன. ஆனால், பின்னர் அவை திரும்பத் திரும்ப வெளியிடப்பட்டு வசூலைக் குவித்தன. அவரது படப்பாடல்கள்தான் இன்றளவும் மக்களிடம் செல்வாக்கு பெற்றிருப்பதுடன் கட்சிக்கு வாக்கு சேகரிக்கும் பிரச்சாரப் பாடல்களாகவும் நிலைத்திருக்கின்றன. தொலைக்காட்சி, இணையதளம் என நவீனத் தொழில்நுட்பங்கள் வளர்ந்த நிலையிலும் எம்.ஜி.ஆரின் புகழ் ஒளிவீசுகிறது.
எம்…ஜி….ஆர்… என்ற ஆங்கில எழுத்துகள், இங்கே தமிழுக்குரிய எழுத்துகளைப்போல ஆகிவிட்டன..
courtesy - nakkeeran
-
2nd November 2015, 12:56 PM
#2485
Junior Member
Junior Hubber
பாட்டுக்கொரு படம் படகோட்டி...... இன்று.... 52 - ஆம் ஆண்டு தொடக்கம்.....
-
2nd November 2015, 03:11 PM
#2486
Junior Member
Platinum Hubber
PADAKOTTI- 3.11.1964
BANGALORE-RELEASE ADVT.
-
2nd November 2015, 03:13 PM
#2487
Junior Member
Platinum Hubber
-
2nd November 2015, 03:14 PM
#2488
Junior Member
Platinum Hubber
-
2nd November 2015, 03:15 PM
#2489
Junior Member
Platinum Hubber
-
2nd November 2015, 03:20 PM
#2490
Junior Member
Platinum Hubber
Bookmarks