Page 64 of 337 FirstFirst ... 1454626364656674114164 ... LastLast
Results 631 to 640 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

  1. #631
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    வாழ்த்துங்களில் அருள்வடிவே பரம்பொருள் வடிவே தவிர வேறு எதையும் கேட்டதில்லை.. எனக்கு வாணி பாட் பிடித்திருந்தது.. எஸ்பிபி..ரேடியோவிலும் நான் கேட்டதிலலியே ..ஜானகி சோ சோ தான்..விவரங்கள் விளக்கங்கள் அளித்த ராஜேஷ் ஜி, ராகவேந்த்ர் சார் மதுண்ணா வாஸ்ஸூ அனைவருக்கும் ஒரு க்ரூப் தாங்க்ஸ்.. தப்போ..சரி ஒரு டோட்டல் தாங்க்ஸ்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #632
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    கிச்சு கிச்சு தாம்பாளம் 1

    In fond memory of Manorama!

    Gap filler / Monotony breaker! Just for a change!!

    தமிழ்த்திரை தந்தி மகாத்மியம் ! / Telegram Thrills in Tamil Cinema !

    தந்தி சேவை என்பது தற்காலத்தில் செல்போன் தொழில்நுட்பங்கள் போட்ட போட்டில் நிரந்தர நினைவுச் சின்னமே ஆகி விட்டது !

    தமிழ்த் திரையில் தந்தி என்பது பெரும்பாலும் கெட்ட சேதி தாங்கி வரும் ஊடகமாகவே பய(ன்)ப்படுத்திக் கொண்டிருந்தது திரைக் கதையோட்டத்தில் ஒரு சுவாரஸ்யம் திடுக் திடுக் திரில் வேண்டியே !!
    Last edited by sivajisenthil; 13th October 2015 at 11:05 PM.

  4. Likes Russellmai, chinnakkannan liked this post
  5. #633
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //ஒரு இடத்தில் நாகேஷுக்கு சாய்பாபா குரல் இல்லாமல் பாலா குரல் பின்னணி ஆகி விடும். இது தவிர்க்கப்பட்டிருக்கலாம். கன்டின்யூட்டியில் விடும் கோட்டை. இது போல 'கலாட்டா கல்யாணம்' படத்தின் 'எங்கள் கல்யாணம்' பாடலிலும் குரல்கள் நடிகர்களுக்கு ஒரு சில இடத்தில் மாறும்.

    நடப்பது சுகமென நடத்து
    வரும் நாளை உனதென நினைத்து
    வாழ்வே பெரிதென மதித்து
    நாம் வாழ்வோம் மனம் விட்டு சிரித்து//

    நெசம்மாவே மறந்து போன பாடல் வாஸ்ஸு..அவ்வளவாக நெஞ்சில் நிற்கவில்லை எனலாம் படம் தியேட்ட்ரில் பார்த்த போதும் சரி.. பின்னர் வீடியோ டிவிடி எனப் பார்த்த போதும்சரி.. நின்றவை.. முதல் பாடல் மீன்ஸ் வெங்கடேசன்பாடல் அப்புறம் தாயெனும் செல்வங்கள்..ஆனால் அதில் எஸ்.பி.பி பாடியிருக்கிறார் எனத் தெரியாது.. வழக்கம்போல கலர்ஃபுல் நேர்ரேஷன்.

    கன் டின்யூட்டி நீங்கள் குரலில் சொல்கிறீர்கள்.. நான் திரையிலேயே சொல்வேனாக்கும்..அதற்கு முன் (வேறு வழியில்லை..கதை கேட்டுத்தான் ஆகணும் )

    கதை என்றவுடன் ரா.கி.ரங்கராஜன் எழுதிய கன் டின் யூட்டி என்ற கதை நினைவில்..

    *

    அவர் ஒரு ஆகச் சிறந்த டைரக்டர்..சிம்மன் என வைத்துக் கொள்ளலாம்.. அவருக்கு எல்லாமே பெர்பெக்டாக இருக்கவேண்டும்.. ப்ளஸ் கன் டின்யூட்டி அவருக்கு ரொம்ப முக்கியம்..பார்த்துப் பார்த்துத் திரையில் செதுக்குவார் அவர்..

    ஒரு தடவை ஷூட்டிங்கில் ஏதோ தகராறு வர ஷூட்டிங் எடுத்த இடத்துக்குப் பக்கத்து வீட்டில் இருந்த ராம சுப்பிரமணியன் என்பவர் அந்தப் ப்ராப்ளத்தை சால்வ் செய்கிறார்..

    ஏற்கெனவே சிம்மனுக்கு எடுக்கும் படக்கதை சரியில்லையோ என ஒரு சின்னக் குழப்பம் .. அந்தக் குழப்பத்துடன் ராம சுப்பிர மணியனுடன் பேசுகையில் எதிர் வீட்டில் ஒரு ஐந்து வயது சிறுவனைப் பார்க்கிறார்..

    மனதுக்குள் ஃப்ளாஷ்.. கதையின் க்ளைமாக்ஸில் நாயகிக்கு மணமாகி குழந்தையாய் இந்த ச் சிறுவன் இருப்பது போலக் காட்டலாம்..முன்னாள் காதலனான கதா நாயகன் ஹெல்ப் பண்ணுவது போலவும் செய்யலாம்..ஒக்கார்ந்துயோசித்தால் நன்றாகவே வருமே..

    ராமசுப்பு..அந்தப் பையன் நடிப்பானா..

    ஓ.. நீங்க யாரைப் பத்திக் கேக்கறீங்க தெரியுமா

    யாரு

    திரிலோக சுந்தரி தெரியுமா அந்தக்காலக் கனவுக்கன்னி

    யா..

    அவங்களோட பேரன் தான் இவன்.. பாட்டியும் பேரனும் இப்ப இருக்கறது அமெரிக்கால.. இங்க ஹாலிடேக்காக வந்திருக்காங்க..

    ஓய் கேட்டுப் பாருமேன் - சிம்மனுக்குமகிழ்ச்சி மனதில்..ஆகா நடிப்புக் குடும்பம்.. ஸோ நடிப்பு ஜீன் ல இருக்கும் எடுத்துடலாம்..

    கேட்டால் இரண்டு மாத லீவ் என்பதாகவும் அதற்குள் முடித்து விட வேண்டும் என்றும் சரி இன்ன தொகை என தி.சு சொல்லி அதற்கு சிம்மனும் ஒத்துக்கொள்ள மடமடவென ஷூட்டிங்க் பத்து நாட்கள் தொடர்ந்தன

    தி.சு பேரனும் சூப்பராகவே நடித்தான்.. ரொம்ப அழகு..

    பதினோராவது நாள் ஷூட்டிங்க்கிற்கு பையன் வரலை..

    வீட்டிற்கு ப் போய்ப்பார்த்தால் வீடு பூட்டி...

    ராம சுப்பு..

    ஓ.. தெரியலீங்களே..

    சோர்வாய் ஸ்டூடியோ வந்தால் அமெரிக்காவிலிருந்து ஃபோன் தி.சு தான்.. பேரனின் அம்மாவிற்கு - அவள் மாட்டுப்பெண்ணிற்கு திடீரென உடம்பு சரியில்லாததால் உடனே புறப்பட வேண்டிவிட்டதாம்.. சாரிங்க.. பேரனை இப்பதைக்கு அனுப்ப முடியாது.. நீங்க வேற ஏற்பாடு பண்ணிக்கோங்க..

    சிம்மன் மனதில் பிரளயம்.. க்ளைமாக்ஸ் மாத்தலாமா.. ச்சே ச்சே வேணாம்.. நல்ல கதை முக்காலே மூணுவீசம் முடிஞ்சாச்சு..இப்ப இப்படியா ஆகணும்..


    ஒரு உ.டைரக்டர் உதவிக்கு வந்தான்..சார்.. என்னோட ரில்லேடிவ்க்கு ஒரு பையன் அவனுக்கும் அஞ்சு வயசு..கொஞ்சம் பாருங்க..

    பார்த்தால் அசந்துபோனார் சிம்மன்..

    அப்படியே தி.சுவின் பேரன்.. கொஞ்சூண்டு தான் வித்யாசம்..அதுவும் தெரியவில்லை..

    தாங்க்ஸ் உதவி.. எனச் சொல்லி படத்தின் சில பல ஷாட்களை மடமடவென் எடுத்து படத்தை முடித்து... ரிலீஸ் செய்தால்...

    படம் எக்கச்சக்க ஹிட்..

    ஒரே புகழ் மழை தான்.. அதுவும் க்ளைமேக்ஸ் சூப்பர் .. முன்னாள் காதலனை பையனோட அம்மா கண்கலங்க கண்மை கரையப்பார்க்க, பையன் சிரித்தபடி டாட்டா அங்க்கிள் என்பது வெகு அழுத்தம், எதார்த்தம் என தமிழ் கூறும் நல்லுலகெல்லாம் உயரத் தூக்கிக் கொண்டாடினார்கள்..படத்தையும்..சிம்மனையும்..

    படம் ரிலீஸான மறு நாள் எதேச்சையாக ராம சுப்புவைப் பார்த்தார் சிம்மன்..

    ஹலோசார் செளக்கியமா

    செளக்கியம் ராம சுப்பு.. நீங்க எப்படி இருக்கீங்க.. கண்ணிலே நின்றவள் பார்த்தீங்களா

    ஓ.. பார்க்காம ரொம்ப ஜோர் சிம்மம் சார்.. கடைசியில வேற பையனை எடுத்துப்படத்தை முடிச்சுட்டீங்க போல இருக்கே

    சிம்மம் அதிர்ந்தார்.. யாருக்கும் தெரியாமல் ரகசியமாய் மூச்சே விடாமல் படத்தின் டைட்டிலில் கூட முன்னாள் திரிலோக சுந்தரியின் பேரன் என்று மட்டும் போட்டு எடுத்த படம்..எப்படி இவருக்குத் தெரிந்தது.. யார் சொல்லியிருப்பார்கள்..

    அவர் முகமாற்றத்தைப் பார்க்காமலேயே பேசிக்கொண்டு போனார் ராம சுப்பு..

    ரொம்ப அழகாத்தான் பிடிச்சுருக்கீங்க.. கூர்ந்துபார்த்தா தான் ரெண்டு பசங்களுக்கும் டிஃபரன்ஸ் தெரியும்..ஆனா ஒரே ஒரு விஷயத்துல நீங்க கோட்டை விட்டுட்டீங்க.. நல்லவேளை யாரும் அதைப் பத்திப் பேசலை..ஆனா நான் கவனிச்சேன் சிம்மம் சார்

    என்னய்யா கவனிச்ச.. வாய்வரை வந்த கத்தல் அடங்கி சிரித்து...என்ன கவனிச்சீங்க ராம சுப்பு சார்..

    பட ஆர்மபக் காட்சியில ஹீரோவோட ஒரு பாட்டு அந்தப் பையன் பாடறான் இல்லியா அப்புறம் எண்ட்ல டாட்டா காட்டறான் இல்லியா..

    ஆமா..

    பாட்டில அந்தப் பையனுக்கு ஆறு விரல்.. டாட்டா காட்டறச்சே அஞ்சு விரல்..எப்படி கன் டின்யூட்டிய மிஸ் பண்ணீங்க..சிம்மம் சார்..

    வாழ்க்கையே வெறுத்து விட்டது சிம்மத்திற்கு....எனக் கதையைமுடித்திருப்பார் ரா.கி. ரங்கராஜன்..

    *
    ம.தி. தேவிகா பாடும் வெகு அழகான பனியில்லாத மார்கழியா பாடல்

    லாங்க்*ஷாட்டில் எல்லாம் தேவிகாவிற்கு பொட்டு இருக்காது. க்ளோஸப் ஷாட்டில் அவர் முகம் மாதிரியே கோபிப் பொட்டு இருக்கும்.. தென் ஆ ஆ அ அ..என்ற ஹம்மிங்கில் நோ பொட்டு, அடுத்த ஷாட் பொட்டு..

    நிலையில்லாமல் ஓடுவதும் நினைவில்லாமல் பாடுவதும்
    பகைவர் போலே பேசுவதும் - நோ பொட்டு


    பருவம் செய்யும் கதையல்லவா? - பொட்டு இஸ் தேர் வித் சேஞ்ச் ஆஃப் ஹேர் ஸ்டைல் ஹி..ஹி..




  6. Likes Russellmai liked this post
  7. #634
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    மனோரமா நினைவாக ( நிஜமாத் தாங்க..சொன்னா நம்பணும்.. )

    அடடா மன்னன் கண்ணனடி
    ஆயிரம் கலையில் மன்னனடி
    பருவம் கவரும் கள்ளனடி
    பள்ளியில் பாடும் கவிஞனடி


    அறியாத பெண்ணிடம் அவன்
    சொன்ன வார்த்தை
    விரிவாகச் சொல்லவோ அறியேனே தோழி
    ஹோ என்னை அவன் மெல்ல
    தன் கையிரண்டில் அள்ள
    நான் மெல்ல மெல்லத் துள்ள
    ஓ என்னவென்று சொல்ல

    அவனைக் கண்டால் வரச் சொல்லடி
    அன்றைக்குத் தந்ததை தரச் சொல்லடி
    தந்ததை மீண்டும் பெறச் சொல்லடி
    தனியே நிற்பேன் எனச் சொல்லடி

    இரு வல்லவர்கள் மனோரமா, எல்விஜயலஷ்மி மற்றும் பலர்..


  8. Likes Russellmai liked this post
  9. #635
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    என்னமோ போங்க – 27

    அக்னி நட்சத்திர வெயிலடித்த இரவில் ஆடியோடி வீடு வந்து சேர்ந்து – அதாவது மதுரையில் இருந்த பொழுது - கண்ணை மூடிப் படுக்கையில் தூங்குவதற்கு முயற்சிக்கும் போதே பொசுக்கென கரெண்ட் போய்விடும்..தடுமாறி எழுந்து கொஞ்சம் அந்தப்பக்க ப் பலகையில் வைத்திருக்கும் மெழுகுவர்த்தி அதன் பக்கத் தீப்பட்டி எடுத்து மெல்ல உரசி சின்னதாய் வைத்து,பின் இங்கிட்டு தானே பார்த்தோம் எங்குபோச்சு எனவிசிறியைத் தேடி எடுத்து படுத்தவாக்கிலேயே இரண்டு ஆட்டு ஆட்டினால் விசிறிவழி வரும் காற்று இருக்கிறதே பரம சுகம்.. காற்று தழுவத் தழுவ கண்ணுறக்கம் எப்போது வந்தது என்றே தெரியாது..

    விசிறி – கரெண்ட் இல்லாமல்காற்று தரும்
    விசிறி ( நடிக, நடிகையரின்) - சொந்தம் இல்லாமலே புகழ் பரப்புவர்

    விசிறி – தூண்டி விடக் கைகள் வேண்டும்
    விசிறி – ( ந, ந) – துண்டிவிட நடிப்பு வேண்டும்


    வேறென்னவெல்லாம் சொல்லலாம்.. ஆமா இதை எதற்குச் சொல்றேன்.. அட.. ஏன் இப்படிப் பார்க்கறீங்க

    அங்கே ஏனிந்தப் பார்வை அய்யய் அய்யய்ய..
    ஆசைக்கென்ன காசா பணமா ஆடிப் பார்ப்போம் வாங்க
    ஆடும் போதே துள்ளித் துள்ளிப் பாடிப் பார்ப்போம் வாங்க மாட்டீங்களா.. ம்ம் என்னமோ போங்க


  10. Likes Russellmai liked this post
  11. #636
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like

    Jugalbandi 56 - muthu kuLikka vaareegaLaa

    From anubhavi raja anubhavi (1967)

    muthu kuLikka vaareegaLaa......




    From the Hindi remake, Do Phool (1973)

    muthu kodi kawari hada.....

    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  12. Likes Russellmai, chinnakkannan liked this post
  13. #637
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    Cika
    here is another fatafat song ..


  14. Likes madhu, chinnakkannan liked this post
  15. #638
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    Hi good morning all..

    Thanks rajesh.

    நேற்றெழுதிய பாடல் கேசவ்வின் படத்திற்கு

    மாலன் மடிதனில் மாறாத புன்னகையில்
    ஆழ உறங்கும் அழகியலே – காலமும்
    கண்ணன் மடியினில் கண் துஞ்ச நீயுந்தான்
    என்னதவம் செய்தாய் இயம்பு..

    https://fbcdn-sphotos-b-a.akamaihd.n...b795465ed21395

    கண்ணன் வருவான் கதை சொல்லுவான்..



  16. Likes Russellmai, vasudevan31355 liked this post
  17. #639
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    சரி மக்கள் பிஸியாக இருக்காங்க போல..ஸோ...

    ஜூலி அறிமுகமான முதல் படம் பருவ ராகம் ..கன்னட நடிகர் ரவிச்சந்திரனின் ஜோடியாய் வந்து பின்னர் ஹிந்தியில் ஜூஹி சாவ்லா என பெயர் மாற்றி பல படங்களில் நடித்தவர்..

    முதல் படத்தின் அழகே தனி.. நிறைய நல்ல பாடல்கள்.. ஒரு மின்னல் போல் என் முன்னால் போவதுயாரு.. அப்புறம் பூவே உன்னை நேசித்தேன்..

    பூ.உ. நே திடீர்னு நினைவுக்கு வந்து தலைக்குள் ஒலித்துக் கொண்டே இருக்கிறது


    பூவே உன்னை நேசித்தேன்
    பூக்கள் கொண்டு பூஜித்தேன்
    கண்ணில் பாட்ம வாசித்தேன்
    காதல் வேண்டும் யாசித்தேன்
    சொல்லத்தான் வார்த்தை இல்லை கண்ணே
    உள்ளத்தில் ஓசை இல்லை
    ஊமைக்கு பாஷை இல்லை
    கண்மணியே மெளனம் தானே தொல்லை..

    நீயா என்னை நேசித்தாய் பூக்கள் கொண்டு பூசித்தாய்
    உண்மை சொல்ல யோசித்தாய் கோழை போல யாசித்தா
    ஏன் கண்ணா மீசை மேலே ஆசை

    ஆணென்றால் வீரம்வேண்டும்
    ஆண்மையினால் பெண்மை வெல்ல வேண்டும்

    நல்ல பாட்..ஈவ்னிங்க் போய் பாக்கணும்.. பக்கெட்ல பழைய போட்டோ கொடுத்தா தேவலை



    ஹம்ஸ லேகா எஸ்பிபி.. எஸ் ஜானகி..

  18. Likes vasudevan31355 liked this post
  19. #640
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    //சரி மக்கள் பிஸியாக இருக்காங்க போல//

    ஆமா! காலையில இருந்து நடிகர் திலகம் திரியில் நடுவில் நின்னு போய் இருந்த சண்டைக் காட்சி தொடரை மறுபடி எழுதி தொடங்கியாச்சு. அதான் வர முடியல.
    நடிகர் திலகமே தெய்வம்

  20. Likes chinnakkannan liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •