செந்தில் சார் , நீங்களும் வாசுவும் என்ற தலைப்பில் உங்கள் சந்திப்பைப்பற்றி நீண்ட தொடர் உங்களிடம் இருந்து வரும் என்று எதிர்ப்பார்த்தேன் . சற்று ஏமாற்றமே !!
பூனைக்கும் புலிக்கும் வித்தியாசமுண்டு...எலி பெருச்சாளி பன்றி நீர் யானை மற்றும் யானை வித்தியாசமுண்டு....மனிதனுக்கும் குரங்குக்கும் கரடிக்கும் வித்தியாசமுண்டு ......
ஆவி, பேய், பிசாசு ,பூதம், குட்டிசாத்தான், வேதாளம் ...இவற்றை எப்படிப் பகுத்தறிவது?
அவற்றால் எப்படி மதுர கானங்கள் பாட முடியும் ?
திகில் பாண்டிகள் / குறுந்தொடர்
பகுதி 1 ஆவி
(ஆத்மா விடைபெறுதலே சுருக்கமாக ஆவி என்று அழைக்கப் படுகிறது !)
காயமே இது பொய்யடா காற்றடைத்த பையடா...இந்தக் காற்று ஆத்மாவாக உடலில் தங்கியிருந்து உடல் உயிரற்றதானதும் ஆவியாகப் பிரிகிறது!
ஆவி புகை போன்று எந்த உருவமாகவும் ஷேப்பை மாற்றிக் கொள்ளும்; நடக்காது ஆனால் மிதக்கும் பறக்கும் பரவும்! கால்கள் கிடையாது!! முகம் போன்ற முகமூடிக் குழிக்குள் ஞானக்கண் கொண்டு எல்லோரையும் பார்க்கும்! டெர்மிநேடர் 2 வில்லன் மாதிரி எல்லாப் பொருள்களையும் ஊடுருவ வல்லது!!
குமுதம் படத்தில் அய்யா தெரியாதையா ராமாராவ் இந்தக் கால சிம்ரனுக்கே முன்னோடியாக இடுப்பாட்டி டான்ஸ் ஆடுவதையும் பதிலுக்கு சரக்கடிப்பது பற்றி எம் ஆர் ராதா குதித்தாடிப் பாடுவதையும் ஆவியுடன் சம்பந்தப் படுத்த இயலவில்லை ! ஆனால் சரக்கடித்தவர் கால்கள் பூமியில் பதியாமல் ஆவி போல தள்ளாடுவர்!
சரக்கு உள்ளே போனால் ஆவிக்கும் கேடே !
கள்ளச்சரக்கு உள்ளே போனால் உடலை விட்டு ஆவி பிரிந்து விடும் !!
Ghostbusters!
[url]https://www.youtube.com/watch?v=OiC5_qROyMw
Last edited by sivajisenthil; 5th October 2015 at 07:56 AM.
செந்தில் சார் , நீங்களும் வாசுவும் என்ற தலைப்பில் உங்கள் சந்திப்பைப்பற்றி நீண்ட தொடர் உங்களிடம் இருந்து வரும் என்று எதிர்ப்பார்த்தேன் . சற்று ஏமாற்றமே !!
ரவிஜி
திகில்பாண்டிகள் தொடர் முடிந்த பிறகு...நீங்களெல்லாம் நடுநிசியிலும் நிம்மதியாக தூங்கும் நிலைக்கு திரும்பும் போது.....நானும் வாசுவும்நெடுந்தொடர் ஆ'ரம்பமாகும்' !!
அன்பு எனும் நல்ல தேன் கலந்து இங்கு நான் கொடுத்தேன் இந்த நல்விருந்து
இந்த மன்னனைத் தேடிய பாவை ஒரு மாடி வீட்டு ஏழை
அறுசுவை அன்னம் அரண்மனை வாசம் நீ இல்லை என்றால் யார் கேட்டது
ஒரு பிடி சோறு ஒரு முழ ஆடை உன் கைகள் தந்தால் பொன் போன்றது
உன் கைகள் தந்தால் பொன் போன்றது
(அன்பு)
கூந்தலில் போவும் குங்குமச் சாந்தும் நீங்காத செல்வம் நீ தந்தது
குறு நகை என்னும் ஒரு நகை போதும் ஆனந்த வெள்ளம் நான் கண்டது ஆனந்த வெள்ளம் நான் கண்டது (அன்பு)
கடல் வழி செல்லும் படகுகள் ரெண்டும் காலங்கள் வந்தால் கரையேறலாம்
இலையுதிர் காலம் ஒரு சில மாதம் இளவேனில் பின்னால் எதிர்பார்க்கலாம்
இளவேனில் பின்னால் எதிர்பார்க்கலாம்
(அன்பு)
படம் : மாடி வீட்டு ஏழை
குரல் : P சுசீலா
இசை : எம்.எஸ்.வி. நடிகை : சுஜாதா
Bookmarks