-
7th October 2015, 08:10 AM
#1
Junior Member
Seasoned Hubber
செந்தில் வேல் - ஒரு வரி ராமாயணம் அருமை !!. உங்களைப்பற்றி பல நல்ல விஷயங்களை வாசுசார் சொல்லக்கேட்டிருக்கிறேன் . உங்களையும் , செந்தில் சாரையும் விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன் - உங்கள் உழைப்பில் எனக்கு என்றுமே ஒரு பொறாமை உண்டு . அரிமா எப்படி செல்கிறது? - சிங்க நடையைப்பற்றி என்ன சொல்ல வேண்டும் என்று கேட்க்கிறீர்களா ?? உங்களுக்காக 16 வார்த்தைகளில் இராமாயணம் -இதோ !!
16 வார்த்தை ராமாயணம்
******************************
பிறந்தார் வளர்ந்தார் கற்றார் பெற்றார்
மணந்தார் சிறந்தார் துறந்தார் நெகிழ்ந்தார்
இழந்தார் அலைந்தார் அழித்தார் செழித்தார்
துறந்தார் துவண்டார் ஆண்டார் மீண்டார்
விளக்கம்:
************
1. பிறந்தார்: ஸ்ரீராமர் கௌசல்யா தேவிக்கு தசரதரின் ஏக்கத்தைப் போக்கும்படியாக பிறந்தது.
2.வளர்ந்தார்: தசரதர் கௌசல்யை சுமித்திரை கைகேயி ஆகியோர் அன்பிலே வளர்ந்தது
3.கற்றார்: வஷிஷ்டரிடம் சகல வேதங்கள் ஞானங்கள் கலைகள் முறைகள் யாவும் கற்றது.
4.பெற்றார்: வஷிஷ்டரிடம் கற்ற துனுர்வேதத்தைக் கொண்டு விஸ்வாமித்ரர் யாகம் காத்து விஸ்வாமித்ரரை மகிழ்வித்து பல திவ்ய அஸ்திரங்களை பெற்றது.
5.மணந்தார்: ஜனகபுரியில் சிவனாரின் வில்லை உடைத்து ஜனகர்-சுனயனாவின் ஏக்கத்தை தகர்த்து மண்ணின் மகளாம் சீதையை மணந்தது.
6.சிறந்தார்: அயோத்யாவின் மக்கள் மற்றும் கோசல தேசத்தினர் அனைவர் மனதிலும் தன் உயரிய குணங்களால் இடம் பிடித்து சிறந்து விளங்கியது.
7.துறந்தார்: கைகேயியின் சொல்லேற்று தன்னுடையதாக அறிவிக்கப்பட்ட ராஜ்ஜியத்தை துறந்து வனவாழ்வை ஏற்றது.
8. நெகிழ்ந்தார்:
*அயோத்தியா நகரின் மக்களின் அன்பைக் கண்டு நெகிழ்ந்தது.
*குகனார் அன்பில் நெகிழ்ந்தது.
*பரத்வாஜர் அன்பில் நெகிழ்ந்தது.
*பரதரின் அப்பழுக்கற்ற உள்ளத்தையும் தன் மீது கொண்டிருந்த பாலனைய அன்பினையும் தன்னலமற்ற குணத்தையும் தியாகத்தையும் விசுவாசத்தையும் கண்டு நெகிழ்ந்தது.
*அத்ரி-அனுசூயை முதல் சபரி வரையிலான சகல ஞானிகள் மற்றும் பக்தர்களின் அன்பிலே நெகிழ்ந்தது.
*சுக்ரீவர் படையினரின் சேவையில் நெகிழ்ந்தது.
*விபீஷணரின் சரணாகதியில் நெகிழ்ந்தது.
*எல்லாவற்றுக்கும் மேலாக ஆஞ்சநேயரின் சேவையைக் கண்டு, 'கைம்மாறு செய்ய என்னிடம் எதுவுமில்லை. என்னால் முடிந்தது என்னையே தருவது' எனக் கூறி ஆஞ்சநேயரை அணைத்துக் கொண்டது.
9.இழந்தார்: மாய மானின் பின் சென்று அன்னை சீதையை தொலைத்தது.
10.அலைந்தார்: அன்னை சீதையை தேடி அலைந்தது.
11.அழித்தார்: இலங்கையை அழித்தது.
12.செழித்தார்:
*சீதையை மீண்டும் பெற்று அகமும் முகமும் செழித்தது.
*ராஜ்ஜியத்தை மீண்டும் பெற்று செல்வச் செழிப்பான வாழ்க்கைக்கு திரும்பியது.
13.துறந்தார்:
அன்னை சீதையின் தூய்மையை மக்களில் சிலர் புரிந்து கொள்ளாத நிலையில் மக்களின் குழப்பத்தை நீக்குவதற்காக அன்னை சீதையை துறந்தது.
13.துவண்டார்:
அன்னை சீதையை பிரிய நேர்ந்தது சீராமருக்கு மிகுந்த வலியை தந்தது. அந்த வலி அவரை சில காலம் மனதளவில் துவள செய்தது.
15.ஆண்டார்:
என்ன தான் மனதினுள் காயம் இருந்தாலும் மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் அனைத்தையும் குறைவற செய்து மக்கள் உடலால், மனதால் ஆரோக்கியமானவர்களாகவும் செல்வச் செழிப்புடன் வாழும்படியும் பார்த்துக் கொண்டது.
16.மீண்டார்:
பதினோறாயிரம் ஆண்டுகள் நல்லாட்சி செய்து மக்கள் அனைவரையும் ராமராகவும் சீதையாகவும் மாற்றி தன்னுடனே அழைத்துக் கொண்டு தன் இருப்பிடமான வைகுண்டம் மீண்டது.
ஜெய் ஸ்ரீராம்.
Last edited by g94127302; 7th October 2015 at 08:30 AM.
-
Post Thanks / Like - 2 Thanks, 3 Likes
-
7th October 2015 08:10 AM
# ADS
Circuit advertisement
-
8th October 2015, 08:56 AM
#2
Junior Member
Diamond Hubber
[QUOTE=g94127302;1257856]செந்தில் வேல் - உங்களையும் , செந்தில் சாரையும் விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன் - உங்கள் உழைப்பில் எனக்கு என்றுமே அரிமா எப்படி செல்கிறது? - சிங்க நடையைப்பற்றி என்ன சொல்ல வேண்டும் என்று கேட்க்கிறீர்களா ?? உங்களுக்காக 16 வார்த்தைகளில் இராமாயணம் -
தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.வாசு சாரையும் அழைத்து வாருங்கள்.
16 வார்த்தை ராமாயணம் அருமை.
[
-
8th October 2015, 12:16 PM
#3
Junior Member
Seasoned Hubber
ஒரு வார்த்தை பல லட்சம் புண்ணியங்கள் !!!
மது சார் - இந்த பதிவு உங்களுக்காக !
ஒரே வார்த்தையைக்கொண்டு மாயா ஜாலம் செய்தவர்கள் நம் முன்னோர்கள் - அதில் புதைந்திருக்கும் கருத்துக்கள் நம்மையெல்லாம் இன்னும் வாழ வைத்துக்கொண்டிருக்கின்றன .
பதிவு 1
கிருஷ்ணம் , கிருஷ்ணாஷிரியம் கிருஷ்ணம்
கிருஷ்ணம் , கிருஷ்ணாஷிரியம் ததா
கிருஷ்ணம் , கிருஷ்ணாஷிரியம் கிருஷ்ணம்
கிருஷ்ணம் , கிருஷ்ணாஷிரியம் பஜே
ஒவ்வொரு கிருஷ்ணனுக்கும் ஒவ்வொரு அர்த்தம் . கிருஷ்ணம் என்ற சொல்லுக்கு பல வேறு அர்த்தங்கள் உண்டு . இந்த பாடலை எடுத்துக்கொள்ளுங்கள் - எவ்வளவு கிருஷ்ணர்கள் ஒளிந்து கொண்டிருக்கின்றார்கள் என்று தெரிய வரும் . நம் கண்ணதாசனும் இந்த பாடலைக்கேட்டபின் தான் " கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா " என்ற காலத்தினால் அழிக்க முடியாத உன்னத பாடலை தந்துள்ளார் . ஒரு வித்தியாசம் - கண்ணதாசனின் அந்த பாடலில் கிருஷ்ணன் ஒன்று ஆனால் கோரிக்கைகள் பல . நாம் எடுத்துக்கொண்ட இந்த பாடலில் கோரிக்கை ஒன்று , கிருஷ்ணர்கள் பல .
இந்த பாடலில் 8 மொத்தம் கிருஷ்ணர்கள்
1. கிருஷ்ணன் : மஹா பாரதத்தை எழுதிய வியாசரின் பெயரும் "கிருஷ்ணன் " தான் .
2. அர்ஜுனனுக்கும் " கிருஷ்ணன் " என்ற பெயர் உண்டு .
3. திரௌபதிக்கும் " கிருஷ்ணா " என்று பெயர் .
4. யமுனை நதிக்கும் " கிருஷ்ணா " என்று பெயர் உண்டு .
5. கிருஷ்ணன் என்றால் " சியாமள வர்ணன் " - கருமை நிறம் கொண்டவன் .
6. கிருஷ்ணன் என்பதற்கு " மற்றவர்களை மயங்க வைப்பவன் " என்றும் ஒரு பொருள் உண்டு .
7. சதானந்த ரூபன் - எப்பவும் ஆனந்தமாக இருப்பவன் ஆனந்தத்தை மற்றவர்களுக்கும் அள்ளி அள்ளித் தருபவன் என்பதால் பெயர் "கிருஷ்ணன் . "
8. பரமாத்மாவானவன் என்பதால் கிருஷ்ணன்
அவனை பூஜிக்கிறேன் .
பதிவு 2
யாம் ஆமா? நீ ஆம் ஆம்; மாயாழீ! காமா! காண் நாகா!
காணா காமா! காழீயா! மா மாயா! நீ, மா மாயா!
இந்த வரிகள் திருஞானசம்பந்தர் - திருக்கடைக்காப்பில் , கௌசிகம் , மூன்றாம் "திருமுறையில் " வருகிறது .
யாம் - ஆன்மாக்களாகிய நாங்கள் கடவுளென்றால்.
ஆமா - அதுபொருந்துமா?
நீ : நீயே கடவுளென்றால்.
ஆம் ஆம் - முற்றிலும் தகுவதாகும்.
மாயாழீ - பேரியாழ் என்னும் வீணையை வாசிப்பவனே.
காமா - யாவரும் விரும்பத்தக்க கட்டழகனே.!
காண் - (தீயவும் நல்லவாம் சிவனைச் சேரின் என்பதை யாவரும்) காணுமாறு பூண்ட---
நாகா - பாம்புகளையுடையவனே. !
காணா காமா - கை, கால் முதலிய அவயவங்கள் காணாதனவாச் செய்தகாமனையுடையவனே. (காமனை யுருவழித்தவனே.)
காழீயா! : சீர்காழிப் பதியில் எழுந்தருளியிருப்பவனே!!
மாமாயா - இலக்குமிக்குக் கணவனான திருமாலாகவும் வருபவனே (நான்க னுருபும்பயனும் தொக்க தொகை) “நாரணன்காண் நான்முகன்காண்” என்பது திருத்தாண்டகம்.
மா - கரியதாகிய.
மாயா - மாயை முதலிய மலங்களினின்றும். நீ - எம்மை விடுவிப்பாயாக.
Last edited by g94127302; 9th October 2015 at 08:04 AM.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
madhu thanked for this post
-
8th October 2015, 01:15 PM
#4
Senior Member
Senior Hubber
இது நேற்று கேஷவ் வரைந்த ஓவியத்திற்கு எழுதிய பாடல்..
https://scontent-fra3-1.xx.fbcdn.net...85743538_o.jpg
இக்கோலம் தான்பார்க்க வேண்டி நின்ற
..இளநங்கை யாரென்று கூறும் கண்ணா
தக்கனவாய் அரசனெனக் கூறும் வண்ணம்
..தங்கநகை மின்னுமுடைத் தோற்றங் கொண்டே
வக்கணையாய்க் கைகளையே இடுப்பி லூன்றி
...வாகாகப் பார்க்கின்ற பார்வை என்ன
இச்சுவையை இங்குதந்தாய் எந்தன் கண்ணா
..ஈரேழு ஜன்மமெல்லாம் எனக்கு இல்லை..
Last edited by chinnakkannan; 8th October 2015 at 01:20 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
8th October 2015, 01:18 PM
#5
Senior Member
Senior Hubber
இது இரு நாட்களுக்கு முன்பு எழுதிப் பார்த்தேன்..
https://fbcdn-sphotos-b-a.akamaihd.n...7dc86d21579ccb
தனியாக நானாடத் தாங்குமா பூமி
அணியாக வந்த அழகும் - பனியென
இல்லாமல் போனதால் ஏதெண்ணும் பாமர
நல்லதிற்க் காடினேன் நான்..
கோபியர் கூட்டமும் கோமாதா இல்லையென
மேதினியில் என்னையே யாரெனப்- பேசியே
ஆசையாய்ச் சொன்னாய் அரன்நானும் ஒன்றெனவுன்
பாசம புரியுதப் பா..
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
Bookmarks