-
30th September 2015, 11:11 AM
#361
Senior Member
Senior Hubber
வாசுவின் அனுமதியில்லாமலேயே அவர் போட்ட ஒரு பாடலின் மீள் பதிவு..
***
சின்னக் கண்ணன் சார்!,
ஹோம் வொர்க் கொடுத்துட்டீங்க. ஆனா சந்தோஷமான ஹோம் வொர்க். கடலை மிட்டாய் சாப்பிட கசக்குமா?
அதுவும் நடிப்பின் தெய்வம் நடித்த பாடல் வேறு. போதாக் குறைக்கு என் அழகு மஞ்சுளா மைனா வேறு.
தலைவர் என்னா ஒரு பியூட்டி! வெரி ஸ்மார்ட். வெறி பிடிக்க வைக்கும் ஸ்மார்ட். மஞ்சுளா கண்ணுக்கு நிறைவாக கவர்ச்சிக் கன்னி. பாவாடை தாவணி இந்தப் பச்சைக் கிளிக்கென்றே பிறந்ததோ.
நடிப்புச் சரித்திரம் காதல் சரசம் புரிந்த அவன் ஒரு சரித்திரம்.
http://i1.ytimg.com/vi/Dcjg3f6aEhA/maxresdefault.jpg
இணையத்திலும் சரி, வெளி இடங்களிலும் சரி, மிகச் சிறந்த நடிகர் திலகத்தின் முதல் 10 காதல் பாடல்களில் இப்பாடல் இடம் பிடித்துள்ளது.
இப்பாடலைத் தெரியாதவர்களே இருக்க முடியாது. படத்தைக் கேட்டால் மறந்திருப்பார்கள். ஆனால் பாடலின் முதல் வரியைக் கேட்டதும் பச்சக்'கென்று பிடித்துக் கொள்வார்கள்.
ரொம்ப நாகரீகமான பாடல். தமிழின் அருமை பெருமையை உணர்த்தும் பாடல். முழுவதும் தூய தமிழிலேயே! வாணி, பாடகர் திலகம் அருமையான காம்பினேஷன். மெல்லிசை மன்னர் தன் பட்டப் பெயரை மீண்டும் தக்க வைத்துக் கொள்வார்.
அதிலும் பெண்மணிகளுக்கு மிகவும் பிடித்த பாட்டு. வாசலில் கூட்டிக் கொண்டிருந்த எங்காத்து அம்மா இப்பாடலைக் கேட்டதும் அப்படியே ஓடி வந்து கேட்டுவிட்டுதான் போனார்கள்.
இந்தாங்க புல் மீல்ஸ்.
அம்மானை
அழகுமிகும் கண்மானை
ஆடிவரும் பெண்மானை
தேடிவரும் பெருமானை
தேடிவரும் பெருமானை
(அப்பாடி! எத்தனை 'னை')
(அழகான கண்களைக் கொண்ட பெண்மான் அவளுடைய பெருமானைத் தேடி வருகிறாளாம். நட்சத்திரம் நம்பியிருப்பது வானைத்தானே! மண்ணும் விண்ணும் மாறிவிடலாம். உன்னை நேசிக்கும் இந்தப் பெண்ணின் மனம் மாறிவிடக் கூடுமோ!)
நம்பிய பெண் ஒரு தாரகை
அவள் நாடிய நீ ஒரு வானகம்
நம்பிய பெண் ஒரு தாரகை
அவள் நாடிய நீ ஒரு வானகம்
விண்ணகம் மாறிய போதிலும்
இந்தப் பெண்ணகம் மாறுவதில்லையே
விண்ணகம் மாறிய போதிலும்
இந்தப் பெண்ணகம் மாறுவதில்லையே
அம்மானை
அழகுமிகும் கண்மானை
ஆடிவரும் பெண்மானை
தேடிவரும் பெருமானை
தேடிவரும் பெருமானை
காதலன் சிலாகிக்கிறான் .
(பாலில் சுவை மறைந்துள்ளது கண்ணே! அதே மாதிரி என் விழியில் நீ ம(நி)றைந்திருக்கிறாய். ஆழியில் மணி மறைந்திருக்கிறது. அதுபோல நீ என்மேல் கொண்ட ஆசையில் என் மனம் மறைந்திருக்கிறது. )
பாலினுள் மறைந்துள்ள சுவையென
விழி பளிங்கினுள் மறைந்தது உன் முகம்
பாலினுள் மறைந்துள்ள சுவையென
விழி பளிங்கினுள் மறைந்தது உன் முகம்
ஆழியில் மறைந்துள்ள மணியென
உன் ஆசையில்
மறைந்துளதென் மனம்
ஆழியில் மறைந்துள்ள மணியென
உன் ஆசையில்
மறைந்துளதென் மனம்
(இந்தக் கன்னிக்கு அச்சம், மேடம், நாணம், பயிர்ப்பு குணங்கள் உண்டு. நான் பா(ப)த்திரமாக உன் வசம் இருக்கிறேன். அதில் தேன் மழையாய் உன் முகம் மட்டுமே இருக்கிறது.)
கன்னியின் நால்வகை சாத்திரம்
தன் காதலன் கண்களில் மாத்திரம்
உன்னிடம் நான் ஒரு பாத்திரம்
அதில் ஊற்றிய தேன்மழை உன் முகம்
உன்னிடம் நான் ஒரு பாத்திரம்
அதில் ஊற்றிய தேன்மழை உன் முகம்
(தலைவர் பேண்ட்டை மடித்து விட்டு தண்ணீரை கால்களால் உதைத்தபடி நடக்கும் அழகும் தனிதான்)
அம்மானை
அழகுமிகும் கண்மானை
ஆடிவரும் பெண்மானை
தேடிவரும் பெருமானை
தேடிவரும் பெருமானை
பொன்னிற வண்டுகள் பாடின
அவை பூவெனும் மெத்தையில் கூடின
என்னிரு கண்களும் தேடின
அவை ஏக்கத்தில் உன்னிடம் ஓடின
மங்கலச் சங்குகள் அழைத்தன
இரு மந்திர முல்லைகள் இழுத்தன
உன்னுடன் உடல் உயிர் கலந்தன
(நடிகர் திலகத்துடன் எங்கள் உயிர் கலந்தது போல)
இங்கு ஒன்றுமில்லை இனி எனக்கென
(எல்லாம் நீயே! பிறகென்ன கவலை?!)
அம்மானை
அழகுமிகும் கண்மானை
ஆடிவரும் பெண்மானை
தேடிவரும் பெருமானை
தேடிவரும் பெருமானை
-
30th September 2015 11:11 AM
# ADS
Circuit advertisement
-
30th September 2015, 10:51 PM
#362
Senior Member
Diamond Hubber
கலையுலகின் பிதாமகருக்கு பிறந்த நாள்.
மதுர கானங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறது.
-
Post Thanks / Like - 1 Thanks, 5 Likes
-
30th September 2015, 11:00 PM
#363
Senior Member
Seasoned Hubber
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 4 Likes
-
1st October 2015, 12:21 AM
#364
Senior Member
Senior Hubber
ராகவ் ஜி
அருமையான புகைப்படம். வாழ்த்துக்கள்
நடிகர் திலகத்தின் பிறந்த தினத்தை நினைவூட்டியமைக்கு நன்றிகள்
மற்ற திரியில் உங்களை வம்புக்கு இழுக்கும் சிலரை மன்னித்து நீங்கள் எப்பொழுதும் போல் கல கலவென இருங்கள்
-
1st October 2015, 12:33 AM
#365
Senior Member
Senior Hubber
வாசு, ராகவ் ந.தி பிறந்ததினம் நினைவூட்டியமைக்கு நன்றிகள்..
ந.தி பங்கு பெற்ற உற்சாகப் பாடல்கள் பத்து அதைப் பற்றி ஒரே ஒரு சின்ன பாரா மாதிரி போடலாமா..
ந.தியின் இளமை த்துள்ளலில் பிடித்த படம் நிறைய உண்டு கொஞ்சூண்டு லிஸ்ட் போட்டால்
ராதே உனக்குக் கோபம் ஆகாதடி
ஒரு தரம் ஒரே தரம்
அங்கே மாலை மயக்கம் யாருக்காக
தேவன் வந்தாண்டி ஒரு சேதி சொன்னாண்டி.
ஹெ லிட்டில் ஃப்ளவர்
இருந்தாலும்... விடிய விடிய கதைகள் சொல்ல வருவேன் நான்கல்யாணப் பெண்ணாக..
மனம் இனிக்க இனிக்க வருவாய் நீ கல்யாணப் பெண்ணாக...பிடிக்க்கும்..
சிவகாமியின் செல்வன் ஸ்ரீதேவியில் ரிலீஸான புதிதில் பார்த்த போது ரொம்பச் சின்ன சிறுவன்.. படம் புரிந்து கொள்ளுமளவிற்கெல்லாம் தெரியாது.. மொத சிவாஜி செத் போய்டறார்..குட்டி சிவாஜி அழகா இருக்கால்லம்மா என்று கேட்டிருப்பேன் என நினைக்கிறேன்..( ஆராதனா சகோதரிகளுடன் (ஆண்பிள்ளைத் துணை) என மீனாட்சியில் பார்த்த நினைவு (சரியா முரளி (எங்கே ரொம்ப நாள் காணோம்))
அப்புறம் வ.வ.பிறகு ரொம்ப நாள் கழித்து - கல்லூரி முடித்த பின் தான் பார்த்துப்புரிந்த நினைவு..(ஜெகதா என நினைக்கிறேன்)
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
1st October 2015, 12:21 PM
#366
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
1st October 2015, 06:03 PM
#367
Junior Member
Veteran Hubber
நடிகர்திலகத்தின் பிறந்தநாள் நினைவலைகள் !
இன்று முதியோர் பாதுகாப்பு தினமும் கூட!!
ஆலமரம் போல விழுதுகளுடன் வேரூன்றி நிலைத்து நிற்க எடுத்துக் காட்டான கூட்டுக் குடும்ப வாழ்வியலை வாழ்ந்தே காட்டியவர் நடிகர் திலகம் !!
பெத்தமனம் பித்து பிள்ளைமனம் கல்லு என்பதை வியட்நாம் வீடு விளங்க வைத்தது !
முதுமைப் பருவத்திலும் சுய மரியாதையையும் தன்னம்பிக்கையையும் இழக்கக் கூடாது என்பதை எங்க ஊர் ராஜாவாக எடுத்துரைத்தார்!
சிறகு முளைக்கும் பறப்பது இயல்பாயினும் முதுமையிலும் கௌரவத்தை நிலை நாட்டினார் பாரிஸ்டர் ரஜினிகாந்த்தாக!!
நான் பெற்ற செல்வம் நலமான செல்வமே ..நான் அவனுக்காக உழைத்து சம்பாதித்து படிப்பித்து அவனை உயர்த்தும் வரை.....
வயதாகி விட்டால் ...அவனும் தனிக் குடும்பஸ்தனாகி விட்டால்....
தென்னையைப் பெத்தா இளநீரு ..பிள்ளையைப் பெத்தா கண்ணீரே!
முதியோரை இல்லத்தில் வைத்திராது முதியோரில்லத்திற்கு அனுப்பி வைக்கிறதே கல்மனம் !!
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
1st October 2015, 06:13 PM
#368
Senior Member
Diamond Hubber
எத்தனை எத்தனையோ கதாபாத்திரங்களில் நடிகர் திலகம் நடித்திருக்கிறார். ஆனால் இந்தப் படத்தைப் பார்த்தபோது
முதலில் இருந்தே அது ஒரு மாதிரியான டாக்டர் என்று மட்டுமே தோன்றியதே தவிர சிவாஜி கணேசன் என்றோ மிகப்
பெரிய கதாநாயகன் என்றோ எதுவுமே தோன்றவில்லை... இது எனக்கு மட்டுமல்ல... என்னை இந்தத் திரைப்படத்துக்கு
அழைத்துச் சென்ற என் பெற்றோருக்கும்தான்..
அதன் பின் எத்தனையோ தடவை என் அப்பா "எப்படி நினைத்துப் பார்த்தாலும் அது சிவாஜி என்றே தோன்றவில்லையே" என பல முறை வியந்திருக்கிறார்.
படம் எத்தனை நாள் ஓடிச்சோ தெரியாது.. இந்தப் பாட்டு இன்னைக்கு வரை மனசுக்குள் ஓடிக்கிட்டேதான் இருக்கு..
கரஹரப்ரியா கொஞ்சம் வெள்ளித்திரை வண்ணத்துடன்...
-
Post Thanks / Like - 1 Thanks, 4 Likes
-
2nd October 2015, 07:47 AM
#369
Senior Member
Veteran Hubber
Jugalbandi 55 -- songs for Gandhi Jayanthi
From Thiruttu Raman (1956)
bhale saadhu engal Bapuji......
From Dong Ramudu(1955), Telugu version of Thiruttu Raman
Bhale Thatha Mana Bapuji.........
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
2nd October 2015, 08:28 AM
#370
Junior Member
Veteran Hubber
காந்தி ஜெயந்தி நினைவலைகள் !
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
Bookmarks