-
7th June 2016, 04:02 PM
#2971
Junior Member
Platinum Hubber
மனதை கவரும் மதுர கானங்கள் - மூன்றாவது ஆண்டு விழா துவக்கம் . 8.6.2016
கடந்த இரண்டு ஆண்டுகளில் இத்திரியில் பல அருமையான பழைய பாடல்கள் , காட்சிகள் ,வீடியோ
கவிதைகள் , கட்டுரைகள் , என்று நண்பர்கள் அனைவரும் தங்களின் பங்களிப்பை தந்து சிறப்பித்து
இருப்பது மிகவும் பெருமையாகும் . அனைவருக்கும் நன்றி. வாழ்த்துக்கள்
-
Post Thanks / Like - 4 Thanks, 6 Likes
-
7th June 2016 04:02 PM
# ADS
Circuit advertisement
-
7th June 2016, 06:51 PM
#2972
Junior Member
Veteran Hubber
Heartfelt congratulations to this thread on mind scintillating nectar filled immortal songs for the achievements hitherto crossing into its third year and yet to accomplish much more!
Warm thanksgiving to all contributors!!
with regards, senthil
Last edited by sivajisenthil; 7th June 2016 at 06:55 PM.
-
Post Thanks / Like - 3 Thanks, 6 Likes
-
7th June 2016, 07:12 PM
#2973
Senior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 2 Thanks, 6 Likes
-
7th June 2016, 09:22 PM
#2974
Senior Member
Seasoned Hubber
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 4 Thanks, 4 Likes
-
8th June 2016, 07:48 AM
#2975
Junior Member
Veteran Hubber
Reverse Osmosis lands in an Oasis!
மாற்றி யோசித்தால் ..மதுரகான மக்களே!
வாழ்க்கை என்னும் கூட்டல் கழித்தல் பெருக்கல் வகுத்தல் கணக்கேட்டில் இறுதிப் பக்கத்தில் மிஞ்சுவது பூஜ்ஜியமே !
எனவே இந்த நீர்க்குமிழி வாழ்க்கையை இனிமையாக அனுபவித்திட அப்படி இருந்த நாம் இப்படி மாறலாமே என்று யோசித்து முடிவெடுக்கிறார்கள் திரையுலக மூவேந்தர்கள் !
பற்றற்றவராக புண்பட்ட மனதை ஆற்றி ஆற்றி பண்படுத்திட்டநடிகர்திலகம் ......!
எப்படியிருந்த நடிகர்திலகம் ஜெமினி கணேசனின் வாழ்க்கை வாழ்வதற்கே போஸ்டரைப் பார்த்து இப்படியும் இனிமையாக வாழ ஏன் அப்படியிருக்கணும்?...ஏன் ஏன் ஏன் என்று ஞானோதயம் வந்தவுடன் இப்படி ஆ(கி)டிவிட்டாரே !
என்ன இந்த கட்டழகான வஞ்சிக்கோட்டை வாலிபன் இவ்வளவு இல்லற பற்றற்றவராக இருக்கிறாரே என்று சாம்பார் என்ற பட்டப்பெயரை ஆழமாக முத்திரை குத்தி தமிழ் மக்கள் இட்லிதோசை மீல்ஸ் சாப்பிடும் போதெல்லாம் என்னையே நினைத்து சிரித்து தொலைக்கிறார்களே என்ற விரக்தியில் இருந்த மன்னர்.....
வாழ்க்கை பொருட்காட்சியில் வாங்கி நடந்துகொண்டே தின்று தீர்க்கும் பஞ்சுமிட்டாய் மற்றும் டெல்லி அப்பளமே என்ற ஞானோதயம் வந்ததும் .. ஒன்றுக்கு ரெண்டாகவே ஜோடி தேடுகிறாரே
உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு கொண்டாந்து போட்டவர்கள் நாலுபேரு என்றெல்லாம் தத்துவ முத்தெடுக்கும் மக்கள் திலகம் ....
ருக்குமணியே பரபர ....பறபற.....வாழ்க்கையில் குறிக்கோளை அடைய எத்தனை சக்கர வியூகங்களுக்குள் புகுந்து மீண்டு வரவேண்டியிருக்கிறது !......வண்ணமயமாக தொங்கலாட்ட வாழ்க்கையை ஒளிவிளக்கின் ஞானோதயத்தில் உணர்ந்து அனுபவிக்கிறாரே!
Last edited by sivajisenthil; 8th June 2016 at 07:28 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 5 Likes
-
8th June 2016, 09:34 AM
#2976
Junior Member
Newbie Hubber
சிவாஜி செந்தில்,
வாழ்த்துக்கள். நீங்கள் retire ஆனதில் பலன் ஜெமினிக்கு நிறைய. கொஞ்சம் நடிகர்திலகத்துக்கு.
வாசு,
இந்த திரியை ஆரம்பித்து பிறந்த நாள் கொண்டாடுவதில் மகிழ்ச்சியே. ஆனால் இப்போ ரொம்ப போரடிக்குது. எல்லாம் செஞ்சதையே செய்வதை போன்ற உணர்வு. இரண்டே பங்காளர்கள்.
பொதுவாக மையம் ரொம்பவே நமத்து கொண்டு வருகிறது. இது வலை தள மாற்றங்களின் அறிகுறியோ?
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
8th June 2016, 07:25 PM
#2977
Senior Member
Diamond Hubber
ஆஹா! இப்போதுதான் ஆரம்பித்தது போல் இருக்கிறது. அதற்குள் வருடங்கள் ஓடியே விட்டன! 'தத்தக்கா பித்தக்கா' என்று ஆரம்பித்த மதுர கானம் இப்போது பாய்ச்சலில் கலக்கிக் கொண்டிருக்கிறது. இந்த மதுர கான வயலுக்கு உரம் போட்டு, நீர் பாய்ச்சி, விதை நட்டு, செழிக்கச் செய்த அத்துணை பேருக்கும் என் மனமார்ந்த நன்றி.
மதுரகானங்களுக்கு மயங்கி உடனே ஓடோடி வந்த கிருஷ்ணா சார், அற்புத அரிய பாடலகளை இரவு பகல் பாராமல் வழகிய ராகவேந்திரன் சார், அளப்பரிய ராகக் கட்டுரைகளை அள்ளித் தந்த கோபால் சார், கொஞ்சமே வந்தாலும் 'நச்'சென்று பதிவுகளைத் தந்த முரளி சார், 'கான்செப்ட்' புகழ் சிவாஜி மற்றும் ஜெமினி செந்தில் சார், பத்திரிகைகளில் இருந்து கட்டுரைகள் வழங்கி சிறப்பிக்கும் சித்தூர் வாசுதேவன் சார், மலையாளக் கரை பாடல்களில் தனி ஆர்வம் காட்டி அற்புதமான இளையராஜா படலகளைத் தேடி எடுத்துத் தரும் ராகதேவன் சார், எங்களுக்கெல்லாம் குருவாக விளங்கும் அற்புத பழைய இந்தி, தமிழ்ப் பாடல்களை தனக்கே உரிய பாணியில் அள்ளி வழங்கும் ராஜ்ராஜ் சார், எந்த நேரம் எந்த பாடல் கேட்டாலும், எந்த பாடல் வரிகளைக் கேட்டாலும் சிறிதும் கால தாமதமின்றி அள்ளித் தரும் அற்புத மனிதர்... என் கண்ணான அண்ணன் மது அண்ணா, இசையரசியின் புகழ் பாடும் என் உயிரான ஜி, கிடைக்காத பாடல்களை 'சுக்ரவதனி' யிலிருந்து அள்ளி வழங்கும் சுந்தர பாண்டியன் சார், எப்போதோ ஒருமுறை வந்தாலும் நல்ல ரசனை மனம் கொண்ட காட்டுப் பூச்சி சார், சிறந்த ராஜாவின் பாடல்களைத் தந்து அசத்திய வெங்கிராம் சார், வெண்பா, விருத்தம், கவிதை புதுக்க்கவிதை, நகைச்சுவை, நயமான கட்டுரை, ரசிக்கத்தக்க சந்தேகங்கள் என்று பல்வேறு விஷயங்களை அள்ளித் தரும் பல்துறை விற்பன்னர் என் ஆருயிர் சின்னக் கண்ணன் சார், பத்திரிக்கைகளில் இருந்து அபூர்வ நிழற்படங்களை அள்ளி வழங்கும் இனிய நண்பர் வினோத் சார், நல்ல விளம்பரங்ளை தந்து சிறப்பித்த குமார் சார், அத்தனை பேருக்கும் 'லைக்'குகள் தந்து உற்சாகப்படுத்தி வரும் கோபு சார், தற்போது திரிக்கு வராவிட்டாலும் அந்தக் நாளைய திரைப்படங்களைப் பற்றிய விவரங்களை விரல் நுனியில் வைத்திருக்கும் கிருஷ்ணா சார், நல்ல ரசனை பிளஸ் நல்ல சினிமா அறிவு இரண்டையும் ஒரு சேரப் பெற்ற அருமை ஆதிராம் சார், என் கடலூர் பாசக்கார 'பூ' புகழ் நண்பர் கல்நாயக் சார், ஆரம்ப காலங்களில் மதுர கானங்களில் பெரும் பங்காற்றிய உயிர் நண்பர் கார்த்திக் சார், அத்தனை பதிவுகளையும் இடைவிடாமல் படித்து வரும் ஸ்டெல்லா மேடம், முத்தான பாடலகளை சத்தாக தந்த கலை வேந்தன் சார், (பெயர் வீட்டுப் போன நண்பர்கள் பொறுத்தருள்க) இன்னும் மதுர கானங்களில் பங்கு கொண்ட அன்பு நண்பர்கள் ஏராளம்...அளித்த ஆதரவுகளும் தாராளம்.
மதுர கானங்கள் தழைக்கப் பாடுபட்ட அத்துணை நல் இதயங்களுக்கும், திறமைசாலிகளுக்கும் என் கோடானு கோடி நன்றிகள்.
இதே ஆதரவோடு கானங்கள் தொடர வேண்டும்...அனைவரும் களிப்புற வேண்டும் என்பதே என் விருப்பம்.
நன்றி! நன்றி! நன்றி!
இதோ மதுர கானங்கள் தொடங்கிய இதே நாளில் பதித்த பதிவு. மீண்டும் இங்கே நினைவு படுத்தலுக்காக
8th June 2014, 08:21 AM
மனதை மயக்கும் மதுர கானங்கள்
அனைவருக்கும் வணக்கம்.
அதுவும் பழைய பாடல்கள் விரும்பிகளுக்கு என் ஸ்பெஷல் வணக்கங்கள்.
இது ஒரு புது இழை.
'மனதை மயக்கும் மதுர கானங்கள்'
தமிழ்ப் படங்களில் நம் மனதில் என்றும் நீங்கா இடம் பெற்ற மதுர கானங்களைக் கண்டும், கேட்கவும், மகிழவும் இந்த இழை தொடங்கப்பட்டுள்ளது.
நம் மனதில் பல பாடல்கள் எப்போதும் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கின்றன. சில பாடல்களை நம்மை அறியாமல் வாய் முணுமுணுத்துக் கொண்டே இருக்கும். ஆனால் படம் என்னவென்று தெரியாது. படத்தின் பெயர் தெரியும். பாடல் நினைவுக்கு வராது.
இதற்கெல்லாம் இந்த இழை ஒரு தீர்வாக அமையும் என்று நினைக்கிறேன்.
இதில் இன்னொன்று. மிடில் சாங்ஸ் என்று நாம் செல்லமாகப் பெயரிட்டு அழைக்கும் பல பாடல்களை நாம் இங்கே நினைவு கூற இருக்கிறோம். அவ்வளவு அற்புதமான பாடல்கள் இருக்கின்றன. திரையிசைப் பாடல்களைப் பற்றி அறிந்த ஜாம்பவான்கள் பலர் நமது ஹப்பில் இருக்கிறார்கள். நிச்சயம் அவர்கள் இந்த இழையில் பங்கு கொண்டு தங்களுக்குத் தெரிந்த பல அபூர்வ விஷயங்களை நம்முடன் பகிர்ந்து கொள்வார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்..
வெறுமனே யூ டியூபிலிருந்து பாடலை இழுத்துப் போட எனக்கு உடன்பாடில்லை. அது போரடிக்கவே செய்யும். அப்பாடல்களைப் பற்றிய சுவையான தொகுப்புகளை நாம் நமக்குத் தெரிந்தவற்றை மற்றவர்களுக்கு தெரிவித்தால் இத்திரியின் சுவாரஸ்யம் வெகுவாகக் கூடும். மேலும் அரிய, மிக அரிய பாடல்களை நாம் இங்கே அலசலாம்.
அனைவரது ஒத்துழைப்பும் இங்கு கிடைக்கும் என்று பரிபூரணமாக நம்புகிறேன்.
முதலில் 'மறுபிறவி' படத்திலிருந்து ஒரு பாடல்.
முதலில் இந்தப் படத்தைப் பற்றிய சிறு குறிப்பு. 1973-இல் வெளியான இத்திரைப்படம் விஜயா சூரி கம்பைன்ஸ் தயாரிப்பு.
முத்துராமன், மஞ்சுளா, அசோகன், தேங்காய் ஸ்ரீனிவாசன் போன்றோர் நடித்திருந்த இத்திரைப்படம் நிஜமாகவே ஒரு புதுமைத் தயாரிப்புதான். டாக்டர் கோவூர் அவர்களும் இப்படத்தில் மனநல மருத்துவராகவே நடித்திருந்தார்.
அப்போதே 'அடல்ட்ஸ் ஒன்லி' அதாவது 'A' செர்டிபிகேட் பெற்ற படம் இது. மலையாளத்தில் வந்து பெரும் வெற்றி பெற்ற 'புனர்ஜென்மம்' என்ற திரைப்படத்தின் தமிழாக்கமே 'மறுபிறவி' ஆகும். மலையாளத்தில் பிரேம்நசீர், ஜெயபாரதி பிரதான பாத்திரங்களில் நடித்திருந்தனர்.
சிக்கலான முள் மேல் நடப்பது போன்ற கதையமைப்பு கொண்ட அருமையான திரைப்படம் இது.
ஒரு வரியில் கதையை சொல்ல வேண்டுமென்றால்
கல்லூரி பேராசிரியர் ஒருவர் அக்கல்லூரி மாணவியை விரும்பியே மணந்து கொள்கிறார். ஆனால் அவளுடன் தாம்பத்ய உறவு கொள்ள மட்டும் அவர் உடலும், மனமும் நடுங்குகின்றது. உடலில் அவருக்குக் குறையில்லை. தனக்கு உடல்சுகம் தேவைப்படும் போது தன் வீட்டு வேலைக்காரியுடன் அவர் உறவு வைத்துக் கொள்கிறார். மனதில்தான் அவருக்குக் குறை. மனைவியோ தன் கணவனின் போக்கை எண்ணி செய்வதறியாது திகைக்கிறாள். கண்ணீர் வடிக்கிறாள்.
இறுதியில் மருத்துவரை நாடும் போது கணவனின் பலவீனத்துக்குக் காரணம் புரிகிறது. கணவனின் தாயின் உருவமும், அவன் தாரத்தின் உருவமும் ஒத்துப் போவதால் அவன் தன் தாரத்தை நெருங்கும் போதெல்லாம் மனைவியின் முகத்தில் தன் அன்னையின் உருவத்தைப் பார்க்கிறான். அதனால் மனைவி உறவு கொள்ள வரும்போதெல்லாம் அவளை விட்டு விலகுகிறான்.
இறுதியில் அருமையான மனநல மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு நார்மலாகிறான் கணவன்.
அன்றைய காலகட்டத்தில் "அய்யய்யோ! 'மறுபிறவி' மோசமான படமாயிற்றே!" என்று பொய்யாக எல்லோரும் வெறுத்த படம் இது.
ஏனென்றால் படத்தின் கதை அமைப்பிற்குத் தேவையான காட்சி அமைப்புகள். இளமை பொங்கும் மனைவியாக மஞ்சுளா தன் தாம்பத்ய உறவிற்காக கணவன் முத்துராமனிடம் ஏங்கும் காட்சிகள் அப்போது மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டன. மஞ்சுளாவும் சற்று தாராளமாக நடித்திருந்தார். முத்துராமனுக்கு முற்றிலும் புதுமையான வேடம். அமிர்தம் அவர்களின் ஒளிப்பதிவு பௌர்ணமி நிலவின் ஒளி போல பளிச்சோ பளிச்.
18 வயதுக்குக் கீழே வரும் சிறுவர், சிறுமிகள், மாணாக்கர்களுக்கு தியேட்டரில் டிக்கெட் தர மாட்டார்கள்.
இந்த லிஸ்டில் சேர்ந்த வேறு இரண்டு படங்கள். ஒன்று 'அவள்'. இன்னொரு படம் பாலச்சந்தரின் 'அரங்கேற்றம்'.
இலங்கையை சார்ந்த 'டாக்டர் கோவூர்' எழுதிய இந்த கதையை அற்புதமாகப் படமாக்கியிருந்தார் இயக்குனர் ராமண்ணா. டி .ஆர் பாப்பா என்ற அற்புத இசையமைப்பாளரின் பங்கை இப்படத்தில் என்னவென்று சொல்ல!
ஒவ்வொரு பாடலும் தேன் சொட்டும் ராகம்.
டி.என்.பாலு வசனம் எழுதிய இப்படத்தை இப்போது பார்க்கும் போது மிகவும் ரசிக்க முடிந்தது. அப்போது ஆபாசம் மட்டுமே தென்பட்டது. இப்போது மனநல ரீதியாக பல விஷயங்கள் இப்படத்தின் மூலம் புரிய வந்தது.
படத்திலிருந்து சில காட்சிகள்.
இப்போது பாடலுக்கு வருவோம்.
படத்தின் நாயகன் சிறுவனாக இருக்கும்போது கணவனை இழந்த அவனது தாய் தன் மகனைக் கொஞ்சிப் பாராட்டுவது போல் அமைந்த இந்தப் பாடலில்
விஷேசங்கள் சில உண்டு.
அந்த இளம் வயதிலேயே எந்த ஈகோவும் பார்க்காமல் நெற்றியில் விபூதி அணிந்து விதவைத் தாயாக மஞ்சுளா நடித்திருந்தார். (இப்போதுள்ள ஹீரோயின்கள் அப்படி நடிக்கத் துணிவார்களா!?)
மஞ்சுளாவின் சிறுவயது மகனாக வருபவர் நடிகர் பப்லு. என்ன ஒரு அழகு இந்த சிறுவன்!
இந்தப்பாடலைப் பாடியவர் சூலமங்கலம் ராஜலஷ்மி. ஆஹா! ஒரு தாயின் பரிவையும் பாசத்தையும் இக்குரல் என்னமாய் பிரதிபலிக்கிறது! கேட்க கேட்க அவ்வளவு சுகம். மனதை தாலாட்டும் இப்பாடலைக் கேட்டு மயங்காதவர் இருக்கவே முடியாது.
காவேரி மாந்தோப்புக் கனியோ!
கண்கள்
கல்யாண மண்டபத்து மணியோ!
நல்ல பாவேந்தர் பாராட்டும் மொழியோ!
பண்பாடும் தென்பாங்கு கிளியோ!
நீங்களே பார்த்து உங்கள் கருத்துக்களைப் பதியுங்கள்.
vasudevan.
Last edited by vasudevan31355; 8th June 2016 at 07:29 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 2 Thanks, 3 Likes
-
8th June 2016, 08:46 PM
#2978
Senior Member
Diamond Hubber
மதுர கானங்களின் பிறந்த நாளுக்கான என்னுடைய பரிசு.
'ராஜா' நினைவுகள்
புதிய பதிவு
நேற்று முன்தினம் என்னைப் பொறுத்தவரை வருடம் மீண்டும் 1972. தேதி 26 ஜனவரி. 'ராஜ'போக தினம். காலை ஷிப்ட் முடிந்து வந்து மதியம் 2.15 க்கு சாப்பிட உட்கார்ந்தால் ஜெயா மூவிஸில் 'ராஜா'. அப்புறம் சாப்பாடு இறங்குமா? முழு கவனமும் நம் 'ராஜா' மீதே. கூடவே விஸ்வத்தின் மீதும். அந்தக் கணமே கோபாலும், கிருஷ்ணாவும், கார்த்திக் சாரும், முரளி சாரும், ஆதிராம் சாரும் நெஞ்சில் 'டபக்'கென புகுந்து குந்திக் கொண்டார்கள். 'சாப்பிடுங்க...சாப்பிடுங்க' என்று மனைவி படுத்த, கைவிரல்கள் தட்டில் கோலம் போட, எதையுமே செய்யத் தோணாமல் மெய் மறந்து 'மெய்யழ'கனை இமையாமல் மெய்யாக ரசித்துக் கொண்டிருந்தேன். என்னவோ அப்போதுதான் பார்ப்பது போல அனைத்துக் காட்சிகளையும் புத்தம் புதுமையாக உணர முடிந்தது. பிரிண்ட் வேறு பளிங்கு போல இருந்ததால் பேராண்மை மிக்க 'ராஜா' பேரழகன் இன்னும் நங்கூரமிட்டு நெஞ்சில் புதைந்தார்.
'ராஜா'வின் ஹேர் ஸ்டைலும், டிரெஸ் கலக்கல்களும், குறும்பு கொப்பளிக்கும் கண்களும், நீள்கிருதாவும் ஒரு காதலி அவள் காதலனை இன்ப இம்சை செய்வதை விடவும் அதிகமாக நம்மை இம்சை செய்பவை. பிறந்தால் 'ராஜா' போல பிறக்க வேண்டும். வாழ்ந்தால் அவனைப் போல ஜாலியாக வாழ வேண்டும். கிருஷ்ணனின் குறும்பும், சகுனியின் தந்திரமும் கலந்த வித்தியாசக் கலவை 'ராஜா'. 'தேவி சொர்க்க'த்தின் ஒரே வசூல் ராஜாவும் இவனே.
எந்தக் காட்சியை சொல்வது?
எத்தனயோ முறை அலசி விட்டாலும் அலுக்காத காட்சிகள். ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல. 'ராஜா'வுக்கு கீழே ராஜாங்கம் பண்ணும் விஸ்வம், நாகலிங்க பூபதி, தர்மலிங்க பூபதி, தாரா டார்லிங், 'ராஜா'வின் ராதா டார்லிங், குமார், பட்டாபி, சீதா, ஜானகிராமன்கள், எதிரணி 'கவர்ச்சி வில்லன்' ஜம்பு, செம்பட்டைத்தலை பின்தொடர்பவர், சந்தர் என்ற பாபு, அந்த வயசிலும் கூட ஊசியில் நூலைக் கோர்த்து விடும் நம்பிக்கை கொண்ட தாய் பண்டரி, காரியத்தில் கண்ணாயிருக்கும் போலீஸ் கமிஷனர் சி.கே.பிரசாத் என்று பார்த்து பார்த்து செதுக்கப்பட்ட ராஜேந்திரன் சி.வி.ஆரின் வார்ப்புகள். சொல்லாமல் விட்டதும் நிறைய.
உண்மை அசலை விட இந்த நகலுக்கு பவர் ஜாஸ்தி. வசூல் ஜாஸ்தி. வரவேற்பும் ஜாஸ்தி. அசலை நகலாக்கவும், நகலை அசலாக்கவும் என் 'ராஜா'வுக்குத் தெரியாதா என்ன! கை தேர்ந்த கில்லாடி கிட்டு அல்லவா அந்த அழகன்! 'ஜானி'யை மண்ணைக் கவ்வச் செய்தவன் இந்த 'ராஜா'.
பார்க்கும் போதே பரவசத்தின் உச்சத்தில் டைப் செய்ய கை பரபரத்தது. 'மெல்லிசை மன்னரி'ன் வல்லிசையில் கேப் அணிந்த பச்சைக் கலர் உருவ கார்ட்டூன் மனிதர்கள் திகிலூட்ட டைட்டிலில் ஓடிவரும் போதும், 'ராஜா ராஜா ராஜா ராஜா' என்ற ஆண்களின் பின்னணி கோரஸ்களின் மத்தியில் 'ததததததம் ததததததம் தஜதம்...'ததததததம் ததததததம் தஜதம்' என்ற ஆரவார சத்தங்களுக்கிடையில் மன்னரின் பிரம்மாண்ட இசைப் பின்னணி புகுந்து விளையாட, இதுவரை நாம் அனுபவிக்காத இன்பமெல்லாம் ஒன்று சேர அனுபவிப்பது போன்ற பிரமை இந்த ராஜாவின் டைட்டிலில் மட்டும்தான் கிடைக்கும். மன்னரின் பேங்கோஸ் உருட்டல்கள் மிரட்டல்கள்தானே? அப்படியே 'ஜெமினி கலர் லேப்' என்று டைட்டில் பச்சை நிற பட்டை சூர்யக் கதிர்களுக்கிடையில் ஒளிரும்போது அந்த பிரம்மாண்ட இசை அப்படியே தடம் புரண்டு வெறும் விசில் ஒலியாக பியானோவுடன் மட்டுமே இணைந்து மாயாஜாலங்கள் செய்யுமே! விதவிதமான வண்ண வண்ண சுழலும் கட்டங்களுக்கிடையே டைட்டில் ஏற்படுத்தும் பரவசத்தை இதுவரை உலகில் எந்தப் படத்திலுமே நான் கண்டதில்லை. டைட்டில் என்றால் அது 'ராஜா' மட்டுமே. அது போல 'ராஜா' என்ற டைட்டிலுக்கு 'அவர்' ஒருவர் மட்டுமே.
முக்கியமாக அந்த வீராணம் குழாய் வடிவிலான தொடர் வட்ட வளையங்கள் படுவேகமாக நம்மை நோக்கி நகரும் காட்சி. 'கலை R.B.S.மணி, தோட்டா' என்ற டைட்டில் வரும் போது இந்த அற்புத காட்சி நம் கண்களுக்குள்ளே விரியும். அதே போல 'மெல்லிசை மன்னர்' என்று டைட்டில் போடும்போது வந்து அலங்கரித்து படுக்கை வாக்கிலும், குறுக்கிலும், நெடுக்கிலுமாக அசையும் ரிங்குகள் இன்னும் பிரமாதம். சி.வி.ஆருக்கு பருந்து ஷேப்பில் வடிவங்கள். நடிகர் திலகத்துக்கும் அப்படியே.
டைட்டில் முடிந்து சேகரும், சந்தரும் சிறுவர்களாய் 'பாக்ஸிங்' மோதும் அந்த ஆரம்ப நொடிக் காட்சியிலிருந்து இறுதியில் ஒன்று சேர்ந்து இளைஞர்களாக நடிகர் திலகமும், 'சுஜாதா சினி ஆர்ட்ஸ்'காரரும் முன்னம் மோதிய விளையாட்டை மீண்டும் ஒரு தடவை 'லெப்ட்.. ரைட்' சொல்லி விளையாட்டாக மோதிப் பார்க்கும் அந்த 18 ரீல்களுமாகிய 4543.34 மீட்டர் படச் சுருள்களும் நம்மை அப்படியே சுகத்தில் சுருள வைப்பவை.
அந்த திகிலான பயமுறுத்தும் இரவுப் பின்னணியில் நாயகர்களின் இன்ஸ்பெக்டர் தந்தையை அவர்கள் கண்முன்னமேயே கருப்பு கம்பளி அணிந்த, சின்னப்ப தேவரை முக ஜாடையில் ஞாபகப்படுத்தும் வில்லனின் கையாள் தன் கையால் கூர்வாள் கொண்டு முதுகில் குத்தும் போது அதைப் பார்க்கும் பலரில் ரத்தம் உறையாமல் இருப்பவர்கள் குறைவு. அந்த கத்தியின் கூர்மை போலவே அர்த்தம் பொதிந்த ரசமான வசன கூர்மைகள் நம்மை அவை வசமாக்குகின்றன.
நடிகர் திலகம் அறிமுகமாகும் காட்சிக்கு முன்னர் வரை 'மன்னர்' என்னவோ நம் 'விஸ்வம்'தான். ஆரம்பக் காட்சிகளை அப்படியே குத்தகை எடுத்துக் கொள்வார். மீதியை பின்னணியில் 'மெல்லிசை மன்னர்' பார்த்துக் கொள்வார். ரீரிக்கார்டிங் காதுகளில் இன்றும் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கும்.
விஸ்வம் சூயிங்கம் மென்றபடி tennis racquet டைப் பிடித்து 'இண்டர்நேஷனல் டிபார்ச்ச'ருக்கு வெளியே 'சிகப்பு விக்' களவாளி போலிஸ் எச்சரிக்கை செய்ததும் கொஞ்சமும் பதறாமல் சர்வ அலட்சியமாக டாக்ஸியில் ஏறும் 'கெத்'தே தனிதான் போங்கள்.
தங்கியிருக்கும் ஹோட்டலின் பால்கனியிலிருந்து தன்னை கழுகாக வட்டமிடும் காவலர்களை நோட்டமிட்டு அவர்களுக்கு தண்ணி காட்டும் 'தண்ணி' மாஸ்டர் விஸ்வம் செய்யும் விபரீத விளையாட்டுத்தனங்கள் விழுந்து விழுந்து ரசிக்கக் கூடியவை. டென்னிஸ் பிளேயர் உடையில் ஹோட்டலிலிருந்து வெளியே டென்னிஸ் கோர்ட்டுக்கு வந்து அவர் எம்.எஸ்.வியின் 'டடடடடடங் டங் டங் டங்' கிடார் பிரம்மாண்டங்களுக்கு நடுவே கவலையில்லாமல் டென்னிஸ் விளையாடுவது ஜோரான ஜோர்.
காவலாளிகள் விஸ்வத்தின் அறையை 'செக்' செய்து ஏமாந்து திரும்புகையில் tennis விளையாடிவிட்டு வரும் விஸ்வம் 'ராஜா'வை இயக்கிய இளம் ராஜேந்திரன் பில்லியர்ட்ஸ் பார்வையில் பட்டு, அங்கு விளையாடிக் கொண்டிருக்கும் ஒருவருக்கு விளையாட்டு நுட்பத்தை சொல்லிக் கொடுத்து செல்வது ஆபத்து சூழ்ந்திருக்கும் விஸ்வத்துக்கு இருக்கும் மகா நெஞ்சுத் துணிவை நமக்கு உணர்த்தும்.
Racquet ஸ்டாண்டில் அந்த குறிப்பிட்ட சிகப்பு கைப்பிடி போட்ட tennis racquet டை வைத்துவிட்டு கண்ணாடியில் வேறு தன்னைப் பார்த்து வேர்வையை ரிலாக்ஸாக டவலால் துடைத்துக் கொண்டு, கழுத்திலும் மப்ளர் அணிந்து, ஸ்டாண்டிலிருந்து வேறு ஒரு racquet டை எடுத்து யாராவது கவனிக்கிறார்களா என்று கவனிக்கும் விஸ்வத்தின் ராஜ்ஜியம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
தன் ரூமை சோதனை செய்து விட்டு கேண்டீனில் ஜூஸ் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் 'மப்டி' காவலர்கள் இருவர்களுக்கு மத்தியில் அனாயாசமாக புகுந்து, வாயில் சிகெரெட்டை வைத்து, அவர்களிடமே சிகரெட்டுக்கு நெருப்பு கேட்கும் விஸ்வத்தின் துணிவை அவன் கெட்டவன் என்றாலும் அவனுடைய சாமர்த்தியத்திற்காக அவனை மனதார பாராட்டலாம். சற்று வயதான வழுக்கைக் காவலர் ஒன்றும் செய்யத் தோன்றாமல் விஸ்வத்தின் சிகரெட்டுக்கு மேட்சஸ் கொண்டு நெருப்பு பற்ற வைக்க, அருகில் இருக்கும் பரிதாபமான அந்த இளம் காவலரைப் பார்த்து வாயில் சிகரெட்டுடன் விஸ்வம் விடும் நக்கல் நையாண்டி சிரிப்பு ஓஹோஹோ! அந்த காவலர்கள் இருவருமே விஸ்வத்தின் கிண்டலால் படா பரிதாபம்.
அதே போல விஸ்வத்தை ஏதாவது காரணம் காட்டி உள்ளே தள்ள போலீஸ் கமிஷனர் பிரசாத் ஐடியாவின்படி கான்ஸ்டபிள் பட்டாபி, இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் இருவரும் விஸ்வம் மதுவிலக்கின் போது பெர்மிட் இல்லாமல் குடித்துக் கொண்டு இருக்கையில் அவனிடம் செய்யும் கலாட்டாக்கள்.... அதையும் மீறி விஸ்வம் முதலில் செய்யும் புத்திசாலித்தனமான தப்பித்தல் முறை கையாளுமை முயற்சிகள் ...(கான்ஸ்டபிள் பட்டாபி சரக்குக்கு ஆசைப்படுவதை 'சட்'டெனப் புரிந்துகொண்டு "நீங்களும் சாப்பிடுங்களேன்...ஆளுக்கொரு பெக்!" என்று குழைந்து பின் அதைத் தனக்கு சாதகமாக்கி கொள்ள பின்னும் சாமர்த்தியத் தந்திர வலை)
பின் கான்ஸ்டபிள் பட்டாபியின் எரிச்சல் போக்கை தாங்க முடியாமல் ('டியூட்டில நான் குடிக்கறதே இல்ல...டியூட்டி ஆர் நோ டியூட்டி..--நாம குடிக்கறதே இல்லே') விஸ்வரூப விஸ்வமாய் மாறி கோபத்தில் தன்னையே இழந்து, போலீஸை அடித்து 'ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு' என்று அந்த இடத்தில் மட்டும் ஆத்திரம் காட்டி மாட்டிக் கொள்ளும் (பின்னால் கிளைமாக்ஸிலும் படுபுத்திசாலித்தனமாக நடக்கும் விஸ்வம் இதே போல கோபத்தில் அவசரப்பட்டு ராஜா, கமிஷனர் இவர்களின் சிலந்தி வலைப் பின்னலில் மாட்டும் ஈயாக கொஞ்ச நேரம் மாட்டி, நாகலிங்க ரங்காராவின் நம்பிக்கையை தற்காலிகமாக இழப்பது விஸ்வத்தின் கேரக்டரை ஆரம்பத்திலிருந்து முடிவு வரை ஒரே சீராக அழகாக நமக்கு உணர்த்தும். அதற்கேற்றார் போன்று அருமையான காட்சி அமைப்புகள் தப்பு தவறு என்னவென்றே தெரியாமல் அழகாக பொருள்பட எடுக்கப்பட்டிருக்கும்) என்று அதுவரை நம்மை ஆளும் விஸ்வத்தின் ஆளுமையை தகர்த்தெறிய வருவார் தோன்றும் முதல் சிறைக் காட்சியிலே எல்லாவற்றிலும் சிகரம் தொட்டுவிடும் நம் ஸ்டைல் 'ராஜா'. ஆர்ப்பாட்ட அறிமுகம். அப்புறம் விஸ்வமென்ன?... யாராயிருந்தாலும் என் 'ராஜா'விடம் 'பஸ்பம்'தான்.
என்னடா இது 'ராஜா' திலகத்தைப் பற்றி எழுதுவான் என்று பார்த்தால் 'நாடகக் காவலரை'ப் பற்றி எழுதுகிறானே என்று நினைக்கிறீர்களா? எப்படி திரையுலகிற்கு ஒரே ஒரு 'ராஜா'வோ அது போல விவகாரமான வில்லனுக்கு ஒரே ஒரு சுவாரஸ்ய 'விஸ்வம்'தான். அதனால்தான் தலைவர் படத்திலும் கூட அவனுக்கு மட்டும் ஸ்பெஷல் கவனிப்பு. இரண்டாவது படத்தின் ஓப்பனிங் காட்சிகள் விறுவிறுப்பு விஸ்வத்தை நம்பியே.
நடிகர் திலகத்தின் நடிப்பு பிளஸ் ஸ்டைல் அக்கிரமங்களைப் பற்றி எழுத நாள் போதுமா என்ன! ஒரு ஆள் போதுமா என்ன! அதுவும் 'ராஜா'வாக அவர் செங்கோலோச்சும் போது கேட்கவும் வேண்டுமோ!
தொடருகிறேன் விரைவில்.
-
Post Thanks / Like - 2 Thanks, 4 Likes
-
8th June 2016, 08:50 PM
#2979
Senior Member
Senior Hubber
அலங்கார் தியேட்டரில் அந்தப் படத்தைப் பார்த்து விட்டு வந்த நண்பன் சொன்னான்.. ரொம்ப நல்லா இருக்கு கண்ணா.. ப்ளஸ்டூ பருவம் என நினைக்கிறேன் முதலாவதோ இரண்டாவதோ நினைவில்லை..
ஆனால் அவன் பார்த்த மறு நாளே விகடனில் வந்த விமர்சனத்தால் கிளர்ந்தெழுந்தது கூட்டம் அந்தப் படத்திற்கு.. இரண்டு நாள் கழித்து சென்ற எனக்கு நல்ல வேளை சைக்கிள் டிக்கட் கிடைத்தது..போய் ப்பார்க்க லொங்கு லொங்கு என்று அவ்வளவு தூரம் போன கஷ்டம் தெரியவில்லை ..(ரொம்ப தூரம் எனச் சொல்லமுடியாது.. இரண்டு மூன்று கிலோ மீட்டர்கள் மேபி) படமும் பிடித்துத் தான போனது..பின் அது ஓடிய ஓட்டத்தில் அலங்கார் தியேட்டரில் சீட், பெய்ண்ட் எல்லாம் மாற்றினார்கள்.என நினைவு..படம் ஒரு தலை ராகம்..
பல பாடல்கள் இருந்தாலும் கவர்ந்தது கூடையில கருவாடுகூந்தலிலே பூக்காடு.. ஒரு அழகான மெலடிகொண்ட கோரஸ் பாட்டு..சலசலவெனச் செல்லும்..
இசை டி.ராஜேந்தர் ஏ.ஏ. ராஜ் எனப் போட்டிருந்தார்கள்..பின்னால் நான் தான் இசைத்தேன் என டி.ஆர் சொல்லி பல படங்கள் எடுத்து இசை கொடுக்க ஆரம்பித்தார்..ஆனால் இருவரும் சேர்ந்து இசை அமைத்த பாடல்களைக் கொண்ட ஒ த ரா போல இல்லை அதுவும் எஸ்பெஷலி போதோடு கோழி கூவுற வேலை மெலடி..
காரணம் ஏ.ஏ.ராஜ் எனப் புரிந்தது நேற்று இந்தப் பாட்டைக் கேட்ட போது
நம் மக மகா வில் போடாத பாடல்கள் இல்லை எனும் அளவிற்கு ஆகிவிட்டது.. அந்தப் பாடலின் வரிகளுக்காக கூகுளிட்டால் மமகா முதல்பாகம் பேஜ் என வர வந்து பார்த்தால் கிருஷ்ணா வரிகள் மட்டும்கொடுத்திருந்தார்.. பின்னூட்டத்தில் மிஸ்டர் கார்த்திக் அந்தப் படம் தண்டம் என எழுத நான் பாட்டைத்தானே சொன்னேன் என கிருஷ்ணா பதில் சொல்லியிருந்தார்..பட் பாடல் காணொளி இல்லாததினால் நான் கேட்கவில்லையோ என்னமோ..பட் சின்ன வயதில் இந்தப் பாட் கேட்டிருக்கிறேன்.. நன்றாகவும் இருக்கும்..
ஏ.ஏ. ராஜ் இசையமைத்த படம் தணியாத தாகம்.. பி. நா. கொண்டாட்டத்திற்காகத் தேடியதில் அகப்பட்ட பாடல் இது. இதுவரை மூன்று முறை கேட்டுவிட்டேன்..காலையிலிருந்து இது ஒரு பின்னணியாய் மனதிற்குள் ஓடிக் கொண்டே இருக்கிறது..
ஏ.ஏ ராஜ் பற்றியும் இந்தப் பாடலைப் பற்றியும் எழுத்தாளர் ஜெயமோகனின் பதிவு..
http://www.jeyamohan.in/42900
http://www.jeyamohan.in/43064
பாடல் வரிகளைப் பார்க்கலாமா..(க்ருஷ்ணா ஜியிடமிருந்து கட் பேஸ்ட்)
நடிப்பு டெல்லி கணேஷ்..சுபத்ரா..
மலேசியா ஜானகி
ஜானகியின் சிரிப்பு சிலிர்ப்பு
பூவே …நீ ...
யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்
நான் பருவ தோட்டத்தில் ஒரு மலர்
நான் பருவ தோட்டத்தில் ஒரு மலர்
உன்னோடு பாடிட வந்த புது மலர் .. புது மலர்
பூவே …நீ ...
யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்
இவள் பருவ தோட்டத்தில் ஒரு மலர்
இவள் பருவ தோட்டத்தில் ஒரு மலர்
உன்னோடு பாடிட வந்த புது மலர் .. புது மலர்
(பூவே)
நீ கோவில் கொண்ட அந்த கண்ணனுக்கோ
நான் ...
என் நெஞ்சில் வாழும் இந்த மன்னனுக்கோ
(நீ கோவில் )
என் தேவன் தேர் ஏறி வருகின்றான்
என் தேவன் தேர் ஏறி வருகின்றான்
புன்னகையில் உன்னை அள்ளி தருகின்றான்
(பூவே )
கோவில் கலசம் போல் என் தேவி
ஆஹ (ஜானகி யின் சிலிர்ப்பு )
இவள் கூந்தலில் ஆடிடும் உன் மேனி
(கோவில்)
பூவிலும் பூ அவள் பொன் மேனி
(ஜானகியின் சிரிப்பு)
பூவிலும் பூ அவள் பொன் மேனி
இவள் புது உடல் தழுவிடும் என் மேனி
(பூவே)
மாங்கனி இளந்தென்றல் தாலாட்டு
என் மைவிழி மயங்கிட சீராட்டு
(மலேசியவின் சிரிப்பு)
பூப்போல் சிரிக்கிறாள் இளஞ்சிட்டு
(ஜானகியின் சிரிப்பு)
பூப்போல் சிரிக்கிறாள் இளஞ்சிட்டு
இவள் பொன்னுடல் சிவக்கட்டும்
என் கரம் பட்டு
அஹ (மீண்டும் ஜானகியின் சிலிர்ப்பு )
(பூவே)
இவள் பருவ தோட்டத்தில் ஒரு மலர்
நான் பருவ தோட்டத்தில் ஒரு மலர்
உன்னோடு பாடிட வந்த புது மலர் ..
புது மலர் புது மலர் ..
**
இன்னொரு அற்புதமான பாடல் கேட்டு என் கண்கள் கலங்கின.. வீணையும் புல்லாங்குழலும் ஜுகல் பந்தி செய்தபாடல்..கண்கள் கலங்கியகாரணம் என்னவென்றால்...
அது ….
*
பின்ன வாரேன்..
-
Post Thanks / Like - 1 Thanks, 4 Likes
-
8th June 2016, 10:57 PM
#2980
Junior Member
Veteran Hubber
Third Year Postings...begin with this Good Morning song!
பட்டிக் காட்டானின் மிட்டாய்க்கடை: மனம் இனித்திடும் தேன்மதுர கானங்களின் தனித்துவ காணொளிப் பெட்டகம் !
Part 1 : Singing in the Rain (1952) with Gene Kelly!
சிறுவயதில் நமது தமிழ் படப் பாடல் காட்சிகள் அவ்வப்போது காந்தாராவின் தெலுங்கு டப்பிங் மற்றும் ஷம்மிகபூர் போன்ற இந்தித்திரை மின்னல்களின் இசை நடன பாடல்கள் எப்போதாவது அபூர்வமாக செம்மீன் போன்ற மானச மயிலான மலையாள மதுரங்கள் ....இப்படிச் சென்றுகொண்டிருந்த இந்தப் பாமர ரசிகனுக்கு பிரமிப்பூட்டும் வண்ணம் வந்து சேர்ந்தன பொக்கிஷமான சில ஆங்கில இசை நடன பாடல் கோர்வைகள் ....பிரபஞ்சத்தின் மாபெரும் நடனமேதைகள்
பிரெட் ஆஸ்டையர் மற்றும் ஜீன் கெல்லியின் பங்களிப்பில் ...பட்டிக்காட்டான் மிட்டாய்க்கடை பார்த்து வாய்பிளந்தது போல....அந்தக் காலத்திலேயே (1952!) அதிதுல்லியமான வண்ணக்குழைவில் அதிரடி இசையமைப்பில் இணையற்ற நளினநடன அசைவுகளில் அபாரமான கேமிரா கோணங்களில்......
சிங்கிங் இன் தி ரெயின் போன்ற வாழ்நாளில் மறக்க முடியாத ஆராதனைக்குரிய ஆங்கிலத் திரைப்படங்கள் !
இப்படத்தின் எல்லாப் பாடல் நடனக் காட்சிகளுமே இன்றுவரை ஈடு இணையற்றவையே.....நிச்சயம் நமக்குப் பட்டிக்காட்டானின் மிட்டாய்க்கடைகளே!
பருவமழை தொடங்கி விட்டதே..... நமது மனதிலும் மழையில் குடை மடக்கி குதூகலமாக சிறு குழந்தைகளாக மாறி நனைந்து ஆடிப்பாடி மகிழும் ஆசையை தூண்டிவிட்டாரே ஜீன் கெல்லி !
Titbits on the evergreen celluloid saga Singing in the Rain!
Singin' in the Rain is a 1952 American musical comedy film directed and choreographed by Gene Kelly and Stanley Donen, starring Kelly, Donald O'Connor and Debbie Reynolds. It offers a lighthearted depiction of Hollywood in the late 1920s , with the three stars portraying performers caught up in the transition from silent films to "talkies."
The film was only a modest hit when first released, with only Donald O'Connor's win at the Golden Globe Awards, Betty Comden and Adolph Green's win for their screenplay at the Writers Guild of America Awards, and Jean Hagen's nomination at the Academy Awards for Best Supporting Actress being the only major recognitions it received. However, it was accorded its legendary status by contemporary critics. It is now frequently regarded as the best movie musical ever made, and the best film ever made in the "Arthur Freed Unit" at Metro-Goldwyn-Mayer. It topped the AFI's Greatest Movie Musicals list, and is ranked as the fifth greatest American motion picture of all time in its updated list of the greatest American films in 2007.
In 1989, the United States Library of Congress selected the film for preservation in the National Film Registry.
All songs have lyrics by Freed and music by Brown! Some of the songs, such as "Broadway Rhythm", "Should I?", and most notably "Singin' in the Rain," were featured in numerous films. The films listed below mark the first time each song was presented on screen.
"Fit as a Fiddle (And Ready for Love)" from College Coach (1933) (music by Al Hoffman and Al Goodhart)
"Temptation" (instrumental only) from Going Hollywood (1933)
"All I Do Is Dream of You" from Sadie McKee (1934)
"Singin' in the Rain" from The Hollywood Revue of 1929 (1929)
"Make 'Em Laugh" considered an original song, but bearing close relation to Cole Porter's "Be a Clown", used in another Freed musical, The Pirate (1948).
"Beautiful Girl Montage" comprising "I've Got a Feelin' You're Foolin'" from Broadway Melody of 1936 (1935), "The Wedding of the Painted Doll" from The Broadway Melody (1929), and "Should I?" from Lord Byron of Broadway (1930)
"Beautiful Girl" from Going Hollywood (1933)[10] or from Stage Mother (1933)
"You Were Meant for Me" from The Broadway Melody (1929)
"You Are My Lucky Star" from Broadway Melody of 1936 (1935)
"Moses Supposes" (music by Roger Edens, lyrics by Comden and Green)
"Good Morning" from Babes In Arms (1939
"Would You?" from San Francisco (1936)
"Broadway Melody Ballet" composed of "The Broadway Melody" from The Broadway Melody (1929) and "Broadway Rhythm" from Broadway Melody of 1936 (1935) (music by Nacio Herb Brown and Arthur Freed)
Courtesy : Wikipedia and You Tube
Last edited by sivajisenthil; 9th June 2016 at 01:35 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
Bookmarks