-
3rd October 2015, 09:12 AM
#381
Senior Member
Diamond Hubber
'காதல் என்றாலே தேனல்ல்லவா!' பாடலும் நன்றாகவே இருக்கும்.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
3rd October 2015 09:12 AM
# ADS
Circuit advertisement
-
3rd October 2015, 09:23 AM
#382
Senior Member
Senior Hubber
-
3rd October 2015, 09:40 AM
#383
Senior Member
Diamond Hubber
இதே கவிதா 'வசந்த மாளிகை' படத்தில் நடிகர் திலகத்துடன் ஒரு காட்சியில் நடித்து வாழ்நாள் முழுக்க தனக்கு பெருமை சேர்த்துக் கொண்டார். ('அத்தானைப் பத்திக் கேள்விப் பட்டிருக்கேன். இப்போ நேரிலேயே பார்த்துட்டேன்')
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
3rd October 2015, 09:40 AM
#384
Senior Member
Diamond Hubber
வணக்கம்ஜி! எங்கே ஆளையே காணோம்?
-
3rd October 2015, 10:37 AM
#385
Senior Member
Senior Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
3rd October 2015, 07:56 PM
#386
Senior Member
Senior Hubber
காணாமல் போய்விட்ட அன்பு நண்பர் கல் நாயக்கின் நினைவாக ச் சில நிலவுப் பாடல்கள்..
தேடிடுதே வானமிங்கே.. தேன் நிலவே நீ போனதெங்கே...
பாடுது பார் ஒரு வானம்பாடி
வாடுது பார் அதன் ஜீவ நாடி..
உத்தமி பெற்ற ரத்தினம் யாராக்கும்..
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
3rd October 2015, 07:59 PM
#387
Senior Member
Senior Hubber
வாணிஸ்ரீயின் முதல் படத்தில் வெள்ளி நிலா வானத்திலே வந்து போகுதுங்க..
வெள்ளி நிலா வானத்திலே வந்து போகுதடா
அது வந்து போன சுவடு அந்த வானில் இல்லையடா..( காதலனை டா போட்டுக் கூப்புடறது அந்தக்காலத்திலேயே இருக்கு போல )
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
3rd October 2015, 08:10 PM
#388
Senior Member
Senior Hubber
எப்போ கேட்டாலும் என்னமா பாடியிருக்காங்க என பிரமிக்க வைக்கும் பாடல்.. இப்போ தான் வீடியோவில் பார்க்கிறேன்..வாவ்..
தேசுலாவுதே தேன்மலராலே.... தேசுலாவுதேன்னா வாசம் உலவுகிறதுன்னு அர்த்தமா..
ஓடி வா வெண்ணிலாவே
இங்கு ஓடி வா வெண்ணிலாவே
வருவாய் நிலாவே
வாழ்வினிலே ஒரு நாள் இதுவே நிலவே
ஓடி வா வெண்ணிலாவே
கண்ணால் பேசும் காவியமே
கண்ணால் பேசும் காவியமே
காவியமே புகழ் காதல் இன்பமே
காவியமே புகழ் காதல் இன்பமன
ஊஞ்சல் ஆடுவோம் உல்லாசமாய் சல்லாபமாய் .. ஆ. ஆ ..ஆ ..ஆ
தேசுலாவுதே தேன் மலராலே...
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
3rd October 2015, 08:22 PM
#389
Senior Member
Senior Hubber
மஞ்சள் மகிமை படம் பார்த்ததில்லை..பட் இந்தப் பாட் எக்கச்சக்கமா கேட்டிருக்கிறேன்..
இன்னலாகத் தோன்றும் மின்னல்
இடை மறித்தாலும் இடி எதிர்த்தாலும்
கண்மணித் தாரகை தன்னைக் கைவிடேன் என்றே
களிப்பொடு சென்றே
அலங்காரத் தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே
ஆனந்தம் தேடுதே
ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா
அலங்காரத் தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே
ஆனந்தம் தேடுதே
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
3rd October 2015, 10:26 PM
#390
Junior Member
Seasoned Hubber
வாசு , உங்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போது ஒரு அருமையான தகவலை எனக்குத் தந்தீர்கள் - மது சார் உங்கள் இல்லம் வந்ததையும் , நலமுடன் இருப்பதையும் - கேட்பதற்கு மிகவும் மகிழ்ச்சி யாக இருக்கிறது . அவர் தொடங்கி வைத்த இந்த திரி இன்னும் வேகமாகவும்,சிறப்புடனும் செல்லவும் , இங்கு பதிவிடும் , படிக்கும் அன்பர்கள் அனைவரும் எல்லாம் பெற்று இன்புடன் வாழவும் இந்த பதிவை ஒரு காணிக்கையாக சமர்ப்பிக்கிறேன் .
வாழ்த்தும் பயனும்
பிறர் நலமாக வாழ வேண்டும் என்ற நினைவோடு எழும் ஓர் ஒலியே வாழ்த்து என்ற வார்த்தையாகும். வாழ்த்து என்றாலே அதை நினைக்கும்போதும், அதை சொல்லும்போதும் மனத்திலே ஓர் அமைதியான இயக்கம் ஏற்படும்.
"வாழ்க வளமுடன்" என்று மற்றவரைப் பார்த்து சொல்லும்போது எல்லாப் செல்வங்களையும் உங்களுடைய வாழ்க்கையில் பெற்று சிறப்பாக வாழ வேண்டும் என்று கருத்தை உள்ளடக்கியதாக அமைகிறது என்று வேதாத்திரியம் கூறுகிறது.
வாழ்க என்ற வார்த்தையில் உள்ள 'ழ்' என்ற சிறப்பான எழுத்தை உச்சரிக்கும்போது நமது நாக்கு மடிந்து மேலண்ணத்தில் நன்கு தொட்டு அழுத்துகிறது. இந்த அழுத்தம் உள்ளே இருக்கும் பிட்யூட்டரி சுரப்பியையும், பீனியல் சுரப்பியையும் நன்கு இயக்குவதற்குத் தூண்டுகிறது. உடலியக்கத்திற்குத் தலைமைச் சுரப்பி பிட்யூட்டரி சுரப்பி. மன இயக்கத்திற்கு தலைமைச் சுரப்பி (Master Gland) பீனியல் சுரப்பி. இவ்விரு சுரப்பிகளுகம் இயக்கம் பெறுவதால் நமது உடல்நலமும், மன நலமும் சிறப்படைகின்றன. பீனியல் சுரப்பியை 'மனோன்மனி' என்றும் அழைக்கின்றனர். மனத்திற்குரிய ஒரு நல்ல ஆற்றல் உள்ள கருவி என்பதற்காக மன+உள்+மணி என்ற 3 வார்த்தைகளைச் சேர்த்து மனோன்மனி என்று சொல்லப்படுகிறது. மனத்திற்கு உட்பொருளாக உள்ள இரத்தினம் என்பது பொருள். அதனால் நாம் வாழ்த்தும்போது மனோன்மனியோடு தொடர்பு கொண்டு எண்ணற்ற பலன்களை பெறுகிறோம்.
வாழ்த்தின் நன்மை
1 "வாழ்க வளமுடன்" என்று சொல்லும்போது பிறர் உள்ளத்திலே நமது கருத்தும் உயிராற்றலும் ஊடுருவி இரண்டு பேருக்குமிடையே ஓர் இனிய நட்பை வளர்க்கிறது.
2 இந்த வாழ்த்துப் பயிற்சியினால் சினம் அடிக்கடி வருவதைத் தவிர்க்கலாம்.
3 அப்படி வாழ்த்தி, வாழ்த்தி எப்பேர்பட்டவர்களையும் நண்பர்களாக மாற்றி பகைமையைத் தவிர்க்கலாம். அவர்களுடைய செயல்களைத் திருத்திவிட முடியும்.
4 ஒரு செடியைப் பார்த்துக் கூட "வாழ்க வளமுடன்" என்று சொன்னால், அந்தச் செடியில் இருக்கக் கூடிய பலவீனம் நீங்கி அது நல்லதாக மாறும்.
வாழ்க வளமுடன் என்ற மந்திரத்திற்கு வலு அதிகம். தவம் செய்த முடிக்கின்ற போது சொல்லும்போது வாழ்த்துக்கு இன்னும் வலிமை கூடுகிறது. உதாரணமாக ஒரு வில்லில் அம்பு எய்வதற்கு எவ்வளவு தூரம் நாணை இழுக்கிறோமோ, அந்த அளவுக்கு அம்புக்கு வேகம் கூடும். அதுபோன்று மனம் எவ்வளவு அமைதி நிலையிலிருந்து வாழ்த்துகிறதோ அந்த வேகத்தில் அந்த வாழ்த்து செயலுக்கு வரும்.
வாழ்த்து அலை
வாழ்த்து என்பது அலை. இந்தச் சீவகாந்த அலைக்கு 5 வகையான இயக்கங்கள் உள்ளன.
1 மோதுதல் (Clash)
2 பிரதிபலித்தல் (Reflection)
3 சிதறுதல் (Refraction)
4 ஊடுருவதல் (Penetration)
5 இரண்டிற்கும் இடையே ஓடிக் கொண்டிருத்தல் (Interaction)
ஒருவர் மற்றவரை வாழ்த்தும்போது அந்த வாழ்த்து இருவருக்கிடையே ஓடிக் கொண்டே இருக்கும். இவ்விருவருக்கும் இடையே ஓர் உயிரோட்டம் உண்டாகி விடுகிறது. அது ஆயுள் முழுவதும் இருக்கும். நீங்கள் அன்போடு நல்ல எண்ணத்தோடு பாய்ச்சி விட்டால் போதும். அவர் உங்களை பார்த்தாலும், பார்க்காவிட்டாலும் அவரது உயிரிலிருந்து நன்மையான அலை வீசிக் கொண்டே இருக்கும்.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
Bookmarks