-
8th October 2015, 01:11 PM
#11
Senior Member
Senior Hubber
ஓவியர் கேஷவ் தினமும் முக நூலில் ஒரு கிருஷ்ணர் படம் இடுகிறார்.. அதற்கு இன்னொரு நண்பர் வெகுசுவையாக விளக்கம் எழுதி வெண்பாவும் தருகிறார்..
இன்று வரைந்த படம்
பின்னணி முழுக்கச் சிகப்பு..அதில் கிருஷ்ணன் கண்மூடி நிற்க கைகளில் ஒரு பசு..அதுவும் கண் மூடித்தூங்குகிறது..
நான் எழுதிப் பார்த்த வெண்பா முயற்சி
அந்தியில் மாடுகளை மேய்த்துவிட்டுத் திரும்பும் கண்ணன் சோர்வுறறிருக்கும் பசுவைப் பார்த்துக் கருணையுடன் அந்தப் பசுவையே கைகளில் ஏந்திக் கொள்கிறான்..அதுவும் கண்ணன் ஸ்பரிசத்தில் சுகமாகக் கண் துஞ்சுகிறது..
வாலைச் சுருட்டிவைத்து வண்ணமுடன் கண்ணுறங்கும்
வேலையைச் செய்திடும் வெண்பசுவே - மாலையில்
கண்ணனின் கைகளிலே கட்டுற நீசெய்த
புண்ணியஞ் சொல்லிவிட்டுப் போ
https://fbcdn-sphotos-f-a.akamaihd.n...71ddb55c207f00
Last edited by chinnakkannan; 8th October 2015 at 01:21 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
8th October 2015 01:11 PM
# ADS
Circuit advertisement
Bookmarks