-
10th October 2015, 11:11 AM
#1
Junior Member
Seasoned Hubber
நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை !!
பதிவு 3
""அன்றைய ராமன்தான் இன்றைய கண்ணன்!'' என்று சிரித்துக் கொண்டே சொன்ன கண்ணபிரான், உன் கையிடுக்கில் உள்ள என் சேவகர்களை விட்டுவிடு. அவர்கள் ஆணவம் இன்றோடு ஒழிந்தது!'' என்றான்.
""அப்படியே ஆகட்டும் பிரபோ!'' என்ற அனுமன் தன் பிடியில் இருந்த கருடனையும் சக்கரத்தையும் விடுவித்தார்.
கடவுள் பணி செய்பவர்களுக்கு அகந்தை ஆகாது! என அறிவுறுத்திவிட்டு, "ஜெய்ஸ்ரீராம்'⚡ என்றவாறே விண்ணில் தாவி மறைந்தார்.
ராமனாக மாறிய கண்ணனும். சீதையாக மாறிய ராதையும் பழைய உருவத்தை அடைந்தனர்.
""நாங்கள் அடங்கிவிட்டோம்!'' என்று கருடனும் சக்கரமும் கண்ணனைப் பணிந்தபோது, ""நாங்களும் அடக்கத்தைக் கற்றுக் கொண்டுவிட்டோம்!'' எனக் கண்ணனின் ராணிகளும் ராதையைப் பணிந்து வணங்கினார்கள்.
""நீங்கள் அனைவரும் என் காலில் விழுந்து வணங்கும் இந்தப் பெருமையும் கூடக் கிருஷ்ணார்ப்பணம்!'' என்று ராதை கண்ணனை நோக்கிக் கைகூப்பியபோது அவனது மனம் நிறைவடைந்தது.
( தொடரும் )
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
10th October 2015 11:11 AM
# ADS
Circuit advertisement
Bookmarks