Page 79 of 337 FirstFirst ... 2969777879808189129179 ... LastLast
Results 781 to 790 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

  1. #781
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    Quote Originally Posted by rajraj View Post
    Did it rain?
    நான் இருக்கும் ரூவியில் ம்ஹூம்.. உள் நாட்டில் பெய்ததாகக் கேள்வி.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #782
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Scene Stealers

    இச்சையின் பச்சை அடையாளம் !
    Tattoos !

    மனதுக்குப் பிடித்தவர்களின் பெயரையோ உருவத்தையோ மனம் கவர்ந்த வாசகங்களையோ மேனியில் பச்சை குத்திக் கொள்ளும் கலாசாரம் நியாண்டர்தால் வம்சா வழியாக இன்றும் ஏதோ ஒரு ரூபத்தில் அழிக்கமுடியாத கலாசாரமாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது !
    ஊசிகளில் வண்ணக்கலவைகளை ஏற்றி பச்சை குத்துவது சற்று வலி தரும் முறையே !
    மருதாணி மாதிரி தடவிக் கொள்ளும் பச்சை நாள்பட நாள்பட தேய்ந்து அழிந்து விடும்!!
    காதல் இனிக்கும்போது அழியாவண்ணம் காதலி பெயரை இச்சையோடு பச்சை குத்தும் எத்தனையோ காதல் புரவலர்கள் காதல் கசந்தவுடன் அதை அழிக்கப் படாத பாடு படுவதும் .....பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம் !
    இங்கே ஒருவர் தனது காதலி சோனாவை கையில் பச்சை பதித்து மானசீக வாழ்வில் உல்லாச உலகில் சல்லாபித்துஅடிக்கும் கூத்து காலங்கள் கடந்தும் நினைவுகளில் பதிந்து விட்ட பசுமையே !!


    Watch from 21:00! Enjoy Thangavelus Monkey shadow comedy elements daringly copied by Vivek!!

    Last edited by sivajisenthil; 18th October 2015 at 12:22 AM.

  4. Thanks vasudevan31355 thanked for this post
  5. #783
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    அக்கரைப் பச்சை ! / Thunderball
    Foreigners' Tattoo Mania!
    வெளிநாட்டினரிடம் அக்காலம் தொட்டே பச்சை குத்திக் கொள்ளும் பாஷன் மோகம் அதிகம் !
    தனக்குப் பிரியமானவர் மட்டுமன்றி தான் சார்ந்திருக்கும் நிறுவனம் சார்ந்த சின்னங்களையும் பச்சை குத்திக் கொள்வதுண்டு !
    ஜேம்ஸ் பாண்ட் படமான தண்டர்பாலில் வில்லன் கோஷ்டியை சேர்ந்த ஒருவர் சார்ந்திருக்கும் இயக்கத்தின் பச்சையைக் கையில் பதித்திருப்பது கண்டு
    ஜேம்ஸ் பாண்ட் சீன் கானரி தனது அலுவலக தனிச் செயலாளரான மணிபென்னியிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளும் காட்சி சுவாரஸ்யமானதே!

    அதே பச்சை முத்திரை வில்லியின் மோதிரத்திலும் இருப்பதை உன்னிப்பாகக் கவனிப்பார் பாண்ட் !

    Last edited by sivajisenthil; 18th October 2015 at 02:41 AM.

  6. Likes raagadevan liked this post
  7. #784
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சிவாஜி செந்தில் சார்,

    பச்சை குத்துவதைப் பற்றி அப்போதே தமிழில் ராட்சஸி அழகா பாடிட்டாரே! இதை விடவா?

    வாழ்க்கை வாழ்வதற்குத்தானே!

    'பச்ச குத்தலயோ...
    பச்ச குத்தலயோ'....

    'அழகான மலையாளம்
    மலையாளக் கரையோரம்
    கரையோரம் மேற்கு மலை
    மேற்கு மலை எங்க மலை'

    அடடா! இந்தப் பாடகிதான் மேற்கண்ட வரிகளை எவ்வளவு அழகாகப் பாடி ஆனந்தப்பட வைக்கிறார்! இப்படியெல்லாம் பாட முடியுமா!

    'ஊசியிலைக் காடுகளில் வாசம் செய்யும் ஜாதியம்மா
    மாசுபட சம்மதியோம் மான் ஜாதிக் கூட்டம் அம்மா'

    Pollution பற்றியும் அப்போதே பாடி வச்சாச்சு.

    ராட்சஸியின் 'அழகா...ன' உச்சரிப்பைக் கவனியுங்கள். அவ்வளவு அழகாக இருக்கும்.

    பல்லவி முடிஞ்சதும் வரும் அந்த 'டங்கு டங்கும் டங்கு டங்கும் டங்கு டங்கும்' இசை நெஞ்சிலே பாய்ந்து துள்ளும்.

    தொடரும் அந்த 'ஒஒஒஓ...ஹோய்' ஹம்மிங் இன்னும் மயக்கும். ஹம்மிங் தருவது ஈஸ்வரியா சுசீலாவா என்று குழப்பம் நேரும்.

    பச்சை குத்துவது எப்படி என்ற விளக்கங்கள் வேறு.

    'பச்சை இலை வெட்டி வந்து
    பாலெடுத்து மை வடித்து
    அச்சடிக்கும் முத்திரைகள் மாறாதம்மா'

    என்னென்ன உருவங்கள் பச்சை குத்தப்படும் என்ற விவரம்.

    'மானெழுதி மீனெழுதி வண்ண மயில் பாம்பெழுதி
    நானெழுதும் ஓவியங்கள் போகாதம்மா

    நீரினிலே கரைவதில்லை
    நெருப்பினிலே கரைவதில்லை'

    (கல்விக்குப் போட்டியோ)

    'இளமையிலே தீட்டிய பச்சை
    இறுதி வரை அழிவதில்லை'

    தொலைந்து போன பிள்ளைகளை கண்டு பிடிக்க உதவுவது பச்சைக் குத்தாம். குடும்பப் பாட்டு போல குடும்பப் பச்சை.

    'பெற்றவரை விட்டு விட்டு சென்றுவிட்ட பிள்ளைகளை
    கண்டு கொள்ளப் போடுவது பச்சையம்மா'

    காத்து, கருப்புகள் அண்டாதிருக்கவும் பச்சைதான் குத்தணுமாம். அதில் கூட 'சுற்றிவரும் தேவதைகள்' என்று எவ்வளவு கண்ணியம் வார்த்ததைகளில்!

    'சுற்றிவரும் தேவதைகள் பற்றாமலே இருக்க
    குத்தி வைக்கும் மந்திரமே பச்சையம்மா'

    'சாமி பேர் எழுதி வைத்தால் தலைமுறைக்குக் காவல் வரும்
    தேவி பெயர் எழுதி வைத்தால் தினம் தினமும் துணையிருக்கும்'

    'அழகான மலையாளம்
    மலையாளக் கரையோரம்
    கரையோரம் மேற்கு மலை
    மேற்கு மலை எங்க மலை'

    'டாட்டூ' எல்லாம் நம்ம தமிழ் கல்ச்சர்கிட்டே டப்பா ஆடிடும் சார். எல்லாவற்றுக்கும் முன்னோடி முத்தமிழ்தானே!

    எது இல்லை தமிழிலே? பச்சை குத்துவதைப் பற்றியே ஒரு முழு திரைப்படப்பாட்டு. கவிஞரின் கைவண்ணத்தில். பச்சை பச்சையான பாடல்கள் புழங்கும் இக்காலத் திரைப்படப் பாடல்களை ரசிக்கும் சிகாமணிகள் யாராக இருந்தாலும் சரி... பச்சை குத்துவதைப் பற்றிய, பசுமையான நெஞ்சில் நிறைந்த இந்தப் பாடலை, வளமான குரல் வளத்தோடு இப்போது ஒருமுறை கேட்டுப் பாருங்கள். வெட்கித் தலை குனிவீர்கள்.

    இப்படி ஒரு பாடலை இதற்கு முன்னும் கேட்டிருக்க முடியாது. பின்னும் கேட்க முடியாது. 'மெல்லிசை மன்னர்' தரும் அந்த துள்ளலிசை புல்லாங்குழல் ஓசை ஒன்று போதும்.

    அதுதான் கோல்டன் டேய்ஸ். திரும்ப வரவே வராது.


    Last edited by vasudevan31355; 18th October 2015 at 08:16 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  8. Thanks adiram, eehaiupehazij thanked for this post
  9. #785
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    why are tattoos permanent?



    tattoo processes

    Last edited by sivajisenthil; 18th October 2015 at 06:02 PM.

  10. Likes chinnakkannan liked this post
  11. #786
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like
    tatto is like our marudhani. We do it during DeepavaLi time! Good topic for the season !
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  12. Likes rajeshkrv liked this post
  13. #787
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    வாசுஜி..

    சத்தியம் தவறதே பாட்டு பாடியவர் கண்டிப்பாக எம்.எஸ்.ஆர் இல்லை.. அந்தக் குரல் இப்பவும் என் காதில் கேட்குது. ஒரு வேளை நீங்க சொல்லும் பிரேமாவாக இருக்கலாம். its unique.. ... பாலு பாடல்கள் மெதுவாகவே ( சிக்கா ? ) பதியுங்கள். சிறப்பாக இருக்க அதுவும் ஒரு காரணம்.

    அழகான மலையாளம்.... ஈஸ்வரியின் பாடல்களில் என் மனசுக்குள் பச்சை குத்திய ஒன்று.

    தொடரும் அந்த 'ஒஒஒஓ...ஹோய்' ஹம்மிங் இன்னும் மயக்கும். ஹம்மிங் தருவது ஈஸ்வரியா சுசீலாவா என்று குழப்பம் நேரும்.
    அட..அட..அட... நான் அது பி.சுசீலாவேதான் என்று முன்னொரு காலத்தில் ரேடியோ மேல் காதை அழுத்தி வைத்து கண்டு பிடிக்க முயற்சி செய்ததுண்டு..
    இன்னும் சில பாடல்களில் கூட இது போன்ற சந்தேகங்கள் வந்ததுண்டு.

    இது டைட்டில் பாட்டு ... இதோ வீடியோ

    ( படக்காட்சியில் "ஊசியிலை வரிகளைக் காணும்.. வெட்டிட்டாங்களோ ?)


  14. Thanks vasudevan31355 thanked for this post
    Likes vasudevan31355, rajeshkrv liked this post
  15. #788
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    சத்தியம் தவறாதே பாடலைப் பாடிய பெண் பாடகி பிரேமா தான் என எனக்கும் நினைவு.

    சத்தியம் தவறாதே படத்தின் இசையமைப்பாளர் சி.என்.பாண்டுரங்கன் அவர்களுடைய வீட்டின் மாடியில் என் நண்பன் தன் பெற்றோருடன் வசித்து வந்த போது அடிக்கடி அவனைப் பார்க்கப் போவதுண்டு. அப்போது ஒரு முறை அவன் கூறிய செய்தி, தன்னுடைய உறவுக்காரப் பெண் ஒருவரை ரவிச்சந்திரன் படத்தில் பாட வைத்திருக்கிறார் என்பதாகும். அப்போது படத்திற்குப் பெயர் வைத்திருக்கவில்லை. ஒரு வேளை அதுதான் இந்தப்பாடலாக இருக்கலாம்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  16. Thanks vasudevan31355 thanked for this post
    Likes vasudevan31355 liked this post
  17. #789
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    அழகான மலையாளம் பாடல் அருமை அருமை

    அதே போல் இதோ ஒரு மலையாளப்பாடல் .. தமிழ் தெலுங்கு கன்னடா பற்றி பேசுகிறது


  18. Likes vasudevan31355 liked this post
  19. #790
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஹாய் குட் மார்னிங்க் ஆல்..

    ஆஹா பச்சை குத்துதல் பாடல்கள் விளக்கங்கள் எல்லாவற்றிற்கும் தாங்க்ஸ் சி.செ வாசு.. ஈவ்னிங்க் போய்ப் பார்க்கறேன்

    பச்சைன்னவுடனே நினைவுக்கு வர்றது லேட்டஸ்ட் ஸாங்க் தான்

    பச்சை த் தீயே ந்னு தமன்னா தாவும் டூயட் பாகுபலி

    பச்சை நிறமே பச்சை நிறமே அலைபாயுதே மேடி

    பச்சை மாமலை போல் மேனி - ந.தி திருமால் பெருமை

    பச்சை வண்ண சேலைகட்டி முத்தம் சிந்தும் நெல்லம்மா - ந.தி

    பச்சை வண்ணக் கிளிவந்து பழம் கொடுக்க - கண்ணன் வருவான்

    பச்சை மூக்குத்தி வைரம் நீராடி ப் படிக்கும் பண்பாட்டுக் கவிதை - மதனமாளிகையில்..

    ஓஹ்.. நிறப் பாட்டு இல்லியோ..பச்சை குத்தி எனத் தேடினால் இந்தப் பாட் வருதே..

    ஒரு தேவதை வந்து விட்டாள் உன்னை தேடியே
    கொஞ்சும் கிளியே உன்னை நெஞ்சில் உறங்கசொல்லி
    தென்றல் என்னும் பாடிசைப்பார்
    நெஞ்சம் நோகும் என்றால் மேகம் கொண்டு வந்து
    மெத்தை செய்து பூ விரிப்பார்
    வானத்து வானத்து நட்சத்திரம்
    வாசலில் வாசலில் புள்ளி வைக்க
    வானவில் வானவில் கொண்டு வந்து
    வண்ணத்தில் கோலங்கள் இட்டு வைக்க
    உள்ளங்கையில் பச்சை குத்தி
    உன் பெயரை உச்சரிக்க




    paat eppadi irukkum.. veet pOi ketkaren

  20. Likes eehaiupehazij, vasudevan31355 liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •