Page 139 of 337 FirstFirst ... 3989129137138139140141149189239 ... LastLast
Results 1,381 to 1,390 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

  1. #1381
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    மதுண்ணா! சின்னா! ஜி!

    subject to change

    எம்.ஜி.ஆர் அவர்களின் பல பாடல்கள் ஹிட் அடித்திருந்தாலும் அவரின் ஒரு சில அதிகம் புகழ் பெறாத பாடல்களும் உண்டு. இந்தப் பாடல்களும் கொஞ்சமும் சுவை குன்றாதவை. அந்த மாதிரி பாடல்களில் எனக்கு ரொம்ப பிடித்த பாடல் இது.

    சுறுசுறுப்பாக எம்.ஜி.ஆரை அதிகம் அங்கும் இங்கும் ஓட விடாமல் அவரை கட்டிப்போட்ட கெட்டிப் பாடல். அடக்கியே வாசிக்க வைக்கப்பட்டிருப்பார். பல்லவிக்கும், சரணங்களுக்குமான இடையிசை ஓஹோ! மாமா கெட்டி.

    மேடத்தின் 'முகராசி' ஓஹோ! கொள்ளை அழகு.

    டி எம்.எஸ், சுசீலாவின் கிரேட் ஜாப்.

    சுசீலா அமைதியாக விட்டுவிட்டு எடுக்கும் அந்த

    'என்னென்ன என்னென்ன எண்ணங்கள் உண்டாகு...மோ'

    பல்லவி வரி பலே பலே ஜோர். திரும்ப திரும்ப காதிலேயே ஒலித்துக் கொண்டிருக்கும் பலம் வாய்ந்தது.

    'ஹோ'!

    மறுபடி மறுபடி கேட்டாலும் தாளாத இன்பங்கள் தொடர்ந்து உண்டாகுதே!

    பாடலின் முடிவில்

    'சொன்னாலும் தாளாத இன்பங்கள் கொண்டாடுமோ'

    என்று கண்கள் சொக்கி மெய்மறந்த நிலையில் மேடம் பாடும்போது ஜெயாவின் தோள்பட்டையில் கண்மூடி முகம் புதைத்திருக்கும் எம்.ஜி.ஆர் அது படப்பிடிப்பு என்பதையும் சற்றே மறந்து அந்தப் பாடலின் வரிகளை, அதற்கான இசையை தன்னையறியாமல் லயித்து, ரசித்து, தலையாட்டி

    'கொண்டாடுமோ' வில்

    'மோ' என்ற வார்த்தையை மனம் மயங்கி மேடத்துடனேயே சத்தமில்லாமல் உச்சரிப்பது கண்கூடாகத் தெரியும். நல்ல ரசனைக்காரர். நீங்களே பாருங்கள்.

    Last edited by vasudevan31355; 5th November 2015 at 10:37 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1382
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'காலம் வெல்லும்' படப் பாடலின் கெட் -அப் போலவே 'அஞ்சல் பெட்டி 520' பட

    'ஆதி மனிதன்
    காதல் புரிந்தான்
    ஆடை அணிந்தான்
    ஜாடை புரிந்தான்'

    பாடலின் கெட்-அப்பில் விஜி.



    பாடலின் ஆரம்பத்தில், முடிவில் ஒலிக்கும் பியானோ இசை புகழ் பெற்ற வேறு ஒரு பாடலில் அப்படியே வரும்..சின்னா! எஸ்கேப் ஆக முடியாது.

    Last edited by vasudevan31355; 5th November 2015 at 11:05 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  4. #1383
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by adiram View Post
    பாலா சார், சரியாக சொன்னீர்கள்.

    மெல்லிசை மன்னர் இதுபோன்ற விஷயங்களில் சமர்த்தர். பாலாஜி தயாரித்த 'சுஜாதா' படத்தின் "நீ வருவாயென நானிருந்தேன்" பாடலின் ட்யூனை அதற்கு ஓராண்டு முன்பே வந்த நமது 'ரத்தபாசம்' படத்தின் டைட்டில் இசையாக தந்திருப்பார்.

    அதுபோல மன்மதலீலை படத்தின் "மன்மத லீலை மயக்குது ஆளை" பாடல் ட்யூனை அதற்கு இரண்டாண்டுகளுக்கு முன் வந்த நமது தங்கப்பதக்கம் படத்தின் தீம் மியூசிக்காக தந்திருப்பார்.
    நடிகர் திலகமே தெய்வம்

  5. #1384
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    பாடலின் ஆரம்பத்தில், முடிவில் ஒலிக்கும் பியானோ இசை புகழ் பெற்ற வேறு ஒரு பாடலில் அப்படியே வரும்..சின்னா! எஸ்கேப் ஆக முடியாது.
    எந்தப் பாட்டுன்னு தெரியலியே... ! ஒரு வேளை என் அங்கிளுக்கு தெரிஞ்சிருக்கலாம்..

  6. #1385
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //மறுபடி மறுபடி கேட்டாலும் தாளாத இன்பங்கள் தொடர்ந்து உண்டாகுதே!

    பாடலின் முடிவில்

    'சொன்னாலும் தாளாத இன்பங்கள் கொண்டாடுமோ'

    என்று கண்கள் சொக்கி மெய்மறந்த நிலையில் மேடம் பாடும்போது ஜெயாவின் தோள்பட்டையில் கண்மூடி முகம் புதைத்திருக்கும் எம்.ஜி.ஆர் அது படப்பிடிப்பு என்பதையும் சற்றே மறந்து அந்தப் பாடலின் வரிகளை, அதற்கான இசையை தன்னையறியாமல் லயித்து, ரசித்து, தலையாட்டி

    'கொண்டாடுமோ' வில்

    'மோ' என்ற வார்த்தையை மனம் மயங்கி மேடத்துடனேயே சத்தமில்லாமல் உச்சரிப்பது கண்கூடாகத் தெரியும். நல்ல ரசனைக்காரர். நீங்களே பாருங்கள். //

    வாசு.. தூள்.. இந்தப் பாட் எனக்கும் பிடித்த ஒன்று..பட்.. இதை இங்கு போட்டாச்சா இல்லையான்னு தெரியாம லிங்க் எடுத்து வச்ச்ருந்து அப்படியே மறந்தும் விட்டேன்.. அதுவும் நன்மைக்கே.. நீங்க ரசிச்சா என்ன நான் ரசிச்சா என்ன நைஸ்.. இதுல பாருங்க.. இன்னொரு பாட் டும் இந்த டைப் ஃபேமஸா இல்லியான்னு தெரியாது.. நானும் அவ்வளவாக க் கேட்டிராத ஆனால் இளமை இளமை ம.தி சர்ரூ நன்னாவே ஆடவும் பாடவும் செய்றாங்க..

    என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா
    உங்கள் கைகளில் வரவும் வேண்டுமா..

    மெளத் ஆர்கன் ஒலி.. மிக அழகு...



    ஆசைகள் தொடங்கும் நெஞ்சத்திலே
    ஆடி அடங்கும்… மஞ்சத்திலே..

    மாந்தளிர் மேனி என்னருகே..
    மன்னவன் தோள்கள் என்னருகே (

    (ம்ம் இந்த மாதிரி நாசூக்கான வரிகள் தான் என் காதுல விழுது.. நான் என்ன பண்ணுவேன் )
    Last edited by chinnakkannan; 5th November 2015 at 10:15 PM.

  7. Likes adiram, Russellmai, vasudevan31355 liked this post
  8. #1386
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    எதையோ தேடித் துழாவினா இந்தப் பாட் (போட்டாச்சில்லைன்னா என்னோட லக்) கிடைச்சது..

    ராசாவீட்டுப்பிள்ளை – ஜெய் – ஜெயலலிதா..

    நல்லாத் தான் இருக்கு..உடனே வரிகளை டைப்பினேன்..
    *

    ஊருக்கெல்லாம் பூச்சூட்டும் மீனா மீனா
    உன் உள்ளத்திலே உள்ளவனும் நானா நானா

    ஊருக்கெல்லாம் காரோட்டும் ராஜா ராஜா
    உன் உள்ளத்திலே உள்ளதிந்த ரோஜா ரோஜா..
    ( அப்ப படத்துல ஹீரோ பேரு ராஜா ஹீரோயின் பேரு மீனா சரிதானே)

    குங்குமச் சிவப்புக் கன்னத்திலே ஒரு கோலம் வரையட்டுமா (ரொம்பக் குட்டியா இருக்குமோ..எத்தனை புள்ளி)

    இடை கொஞ்சி நடக்கும் வஞ்சிக் கொடிக்குக் கோவில் எழுப்பட்டுமா.. (இப்பத் தாங்க புரியுது.. பிற்காலத்துல ஏன் ஒரு நடிகைக்கு கோவில் வந்ததுன்னு…இந்தப் பாட்டு பார்த்து இன்ஸ்பயர் ஆகி இருக்கணும்ம்..)

    அத்தை மகனுக்குப் பள்ளி கொள்ள ஒரு மெத்தை விரிக்கட்டுமா (அதுக்கெதுக்கு இவ்வளவு ராகம் இழுக்கணும்)
    அவன் சந்தனமேனி சொந்தம் கொண்டாட விட்டுக்கொடுக்கட்டுமா..( ஓஹோ)

    பருவத்தின் பாட்டுக்குமுதன் முதலாகப் பல்லவி சொல்லட்டுமா
    அந்தப் பல்லவி சொன்ன நல்லவர்கைகளில் சரணம் ஆகட்டுமா (ஆஹா என்னா சிலேடை)

    தென்றல் காற்றே தென்னங்கீற்றே
    இன்னும் ஏனடி அச்சம்
    அச்சம் என்பது பெண்மை மறந்தால் என்ன இருக்கும் மிச்சம் (அதுஞ்சரிதேன்)

    ஊருக்கெல்லாம் காரோட்டும் ராஜா ராஜா
    உன் உள்ளத்திலே உள்ளதிந்த ரோஜா ரோஜா(ஹச்சோ கார் பின்னாடியே போகுது..பாருங்க ப்ரதர்..)


  9. Thanks adiram, vasudevan31355 thanked for this post
    Likes adiram, Russellmai, vasudevan31355 liked this post
  10. #1387
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வாசு சார்
    ஆதி மனிதன் பாடலில் பியானோ மட்டுமல்ல, அக்கார்டின் அப்படியே மீண்டும் இன்னோர் பாடலில் ஒலிக்கிறது...
    ஆனால் வேறு தாள கதியில்...

    ஒரு க்ளூ.. அது ரயிலில் பாடும் பாட்டு...
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. Likes adiram, vasudevan31355 liked this post
  12. #1388
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பெண் ஒரு கண்ணாடி பாடலில், சொல்லப்போனால் சங்கர் கணேஷ் இசையமைத்த இது போன்ற பல பாடல்களில், முக்கிய இடம் பெற்ற இசைக்கருவி,



    TROMBONE

    இந்த இசைக்கருவியை சுலபமாக அடையாளம் கண்டு கொள்ள வேண்டுமென்றால், உயர்ந்த மனிதன் படத்தில் என் கேள்விக்கென்ன பதில் பாடலின் துவக்கத்தில் ஒலிக்கும்.

    ஒரு ஆர்க்கெஸ்ட்ராவின் Brass Section எனப் படும் பிரிவில் இது இடம் பெறும். ட்ரம்பெட், சாக்ஸஃபோன் போன்ற இசைக்கருவிகள் இதில் அடங்கும்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  13. Thanks adiram, vasudevan31355 thanked for this post
  14. #1389
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    பெண் ஒரு கண்ணாடி பாடலில், சொல்லப்போனால் சங்கர் கணேஷ் இசையமைத்த இது போன்ற பல பாடல்களில், முக்கிய இடம் பெற்ற இசைக்கருவி,



    TROMBONE

    இந்த இசைக்கருவியை சுலபமாக அடையாளம் கண்டு கொள்ள வேண்டுமென்றால், உயர்ந்த மனிதன் படத்தில் என் கேள்விக்கென்ன பதில் பாடலின் துவக்கத்தில் ஒலிக்கும்.

    ஒரு ஆர்க்கெஸ்ட்ராவின் Brass Section எனப் படும் பிரிவில் இது இடம் பெறும். ட்ரம்பெட், சாக்ஸஃபோன் போன்ற இசைக்கருவிகள் இதில் அடங்கும்.
    raghavji super

  15. #1390
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //பாடலின் ஆரம்பத்தில், முடிவில் ஒலிக்கும் பியானோ இசை புகழ் பெற்ற வேறு ஒரு பாடலில் அப்படியே வரும்..சின்னா! எஸ்கேப் ஆக முடியாது// ஹச்சோ தெரியலையே.. ராகவேந்திரர் வேற சஸ்பென்ஸ் கூட்டறாரு..நான் இந்த விஷயத்திலெல்லாம் அப்பாவிக் குட்டிக் கண்ணன்...

  16. Likes adiram, Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •