Page 181 of 337 FirstFirst ... 81131171179180181182183191231281 ... LastLast
Results 1,801 to 1,810 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

  1. #1801
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Courtesy: Tamil Hindu

    திரை வெளிச்சம்: பேரன்பின் பிரதிபலிப்பு!


    ‘ஆபத்துன்னா ஒடி வந்து உதவுறது சினிமாவுல மட்டும்தாம்பா’ என்ற கிண்டலைப் பொய்யாக்கி இருக்கிறது இந்த மாமழை. சினிமாவில் மட்டுமல்ல நிஜத்திலும் ஓடி வருவோம் என்று செயலில் காட்டி நெகிழ்ச்சியில் ஆழ்த்திவருகிறார்கள் நம் திரையுலகினர்.

    கனமழையில் நகரே சிக்குண்டு கிடக்கையில் அடுத்த தெருவில் இருக்கும் வீட்டிற்குச் செல்ல ஆட்டோவுக்கு ரூ.300, குடிநீர் கேன் ரூ.100 என்று முறையற்று சிலரின் அடாவடித்தனம் தொடரவே செய்தது. இப்படி ஒரு சூழ்நிலையில் தங்கள் கார்களையும், நண்பர்களின் வாகனங்களையும் கொண்டு வந்து கொஞ்சமும் விளம்பரம் இல்லாமல் மழையில் பாதிக்கப்பட்டவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்து நிஜ ஹீரோக்களாக வெளிப்பட்டார்கள் பல நடிகர்கள்.

    தன் வீட்டிற்குள் வெள்ளம் புகுந்த அடுத்த சில மணி நேரங்களிலேயே, ‘ நான் நடிகன். வசதி படைத்தவன். எனக்கே இந்த நிலை என்றால், ஏழைகளின் நிலை என்னவாக இருக்கும்?’ என்று ட்விட்டரில் பதிவிட்டு நண்பன் ஆர்.ஜே.பாலாஜியை சேர்த்துக்கொண்டு களத்தில் இறங்கினார் நடிகர் சித்தார்த்.

    “நடப்பதை வீட்டில் இருந்துகொண்டு பார்த்துக்கொண்டிருக்க முடியலை. அதனாலதான் தெருவில் இறங்கினோம். இரண்டு பேராக இருந்தோம். நான்கு நாட்களில் 500 பேராக மாறினோம். உடனடியாக என்ன தேவையோ அதைத்தான் செய்தோம். இனி, குழந்தைகள் பள்ளிக்குப் போக வேண்டும். மக்களை இயல்பு நிலைக்கு மாறச் செய்ய வேண்டும். இன்னும் இன்னும் செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் உள்ளன. அதற்கு நாம் எல்லோரும் சேர வேண்டும்” என்று 5 நாட்கள் நிவாரணப் பணிகளை முடித்துவிட்டு சித்தார்த்தும், ஆர்.ஜே. பாலாஜியும் சேர்ந்து சொன்னபோது ‘நடிகர்களை ஏன் கொண்டாடுகிறோம் என்று தெரிகிறதா?’ என்று முகநூலில் ரசிகர்கள் வாழ்த்து மழை தூவத் தொடங்கினார்கள்.

    இசையமைப்பாளர் இளையராஜா, ஒரு படகு முழுக்கப் போர்வையோடும், உணவுப் பொட்டலங்களோடும் பள்ளிக்கூட விடுதிகளை நோக்கியும், மத்திய சென்னை, வட சென்னைப் பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களைத் தேடியும் பயணம் செய்தார். விஷால், கார்த்தி இருவரும் நடிகர் சங்க சகாக்களை அழைத்துக் கொண்டு ‘ரெஸ்க்யூ சென்னை’ என்ற பெயரில் குழுவை உருவாக்கித் தெருக்களில் இறங்கினார்கள்.

    வாத்துகளை வாங்கி, தான் நடைப்பயிற்சி செய்யும் சாலிக்கிராமம் பூங்காவில் விட்டு அனுதினமும் அதற்கு உணவளித்துவரும் நடிகர் மயில்சாமி இப்படி ஒரு பேய் மழைக் காலத்தில் ஜன்னல்களைப் பார்த்துக்கொண்டு இருந்துவிடுவாரா என்ன? கலங்கிய கண்களோடு களத்தில் நின்று உதவிகள் தொடர்ந்தார். கவிஞர் வைரமுத்து, நடிகர்கள் விதார்த், பார்த்திபன், சேரன், மோகன், சூர்யா, தனுஷ், ஜெயம்ரவி, விக்ரம் பிரபு, ராகவா லாரன்ஸ், சசிகுமார், இமான் அண்ணாச்சி, பிரசன்னா, நடிகை குஷ்பு, ஆர்யா, கோவை சரளா, வரலட்சுமி, ஹன்சிகா, ஷாலினி அஜித், இயக்குநர் இரா. சரவணன் இப்படி அடுக்கடுக்காகத் திரைப் பட்டாளங்கள் சென்னை மழை வெள்ளத்தில் ராணுவம்போல் இறங்கி மனதைக் குளிரச் செய்தனர்.

    ‘அப்பாவுடைய ஆசீர்வாதத்தாலும், கடவுளின் ஆசீர்வாதத்தாலும் வீட்டைச் சூழ்ந்த வெள்ள நீர் கொஞ்சம் கொஞ்சமாக வடிகிறது!’ என்றார் நடிகர் பிரபு. நடிகர் ராஜ்கிரண், நடிகை லட்சுமி உள்ளிட்ட திரையுலகினர் இந்த வெள்ளத்தில் சிக்கி சினிமாவில் மீட்கப்படுவதைப் போலத்தான் மீட்கப்பட்டனர்.

    மின்சாரம் இல்லாமல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டபோது, பாதிப்புக்குள்ளான இடங்களை அடையாளம் காட்டியது சமூக வலைதளம்தான். ‘ஜாபர்கான் பேடடையை அடுத்த சூளைப்பள்ளம் பகுதிக்கு உடனடியாக 500 உணவுப் பொட்டலங்கள் வேண்டும்’, ‘அனகாபுத்தூர், பொழிச்சலூர் பக்கம் யாருமே உதவிக்குப் போகலையாம்... உடனே அங்கு ஒரு குழுவை அனுப்புங்க...’ இப்படி உடனடி நிவாரணத் தேவைகள் எங்கெங்கு, என்னென்ன வேண்டுமோ அதைச் சரியாகப் பட்டியலிட்டுத் துரிதப்படுத்தினார்கள் நம் திரைப் பட்டாளங்கள். அவர்களை ஒரு குடையின் கீழ் நின்று குழுக்களாக வேலை செய்ய வைத்தது முகநூல், டிவிட்டர் ஆகியவைதாம்.

    வெளி மாநில நடிகர்களிடமிருந்தும் உதவிகள் குவிந்தன. சென்னையில் இருக்கும் தன் வீடுகளையும், நண்பர்கள் வீட்டு முகவரியையும் கூறி, ‘அங்கே சென்று தங்கிக்கொள்ளுங்கள்’ என்று மனமார ஆதரவுக் கரம் நீட்டினார், நடிகர் மம்முட்டி. ‘மன மெட்ராஸ் கோசம்’ என்ற பெயரில் நிவாரணப் பொருட்களைச் சேகரித்துவரும் தெலுங்குத் திரையுலகின் உதவி மெய்சிலிர்க்க வைக்கிறது. இங்கே சித்தார்த் இறங்கி வேலை பார்ப்பதைப்போல அங்கே ராணா, நானி உள்ளிட்ட தெலுங்குத் திரையுலகினருடன் சேர்ந்து நிதி திரட்டுவது, அத்தியாவசிய பொருட்களை சேகரிப்பது போன்ற வேலைகளை நடிகை சமந்தா கையில் எடுத்துக்கொண்டுள்ளார். ‘சென்னையில் இருக்கிற அப்பாகிட்ட பேசவே ஒரு வாரம் ஆச்சு. எப்படி எங்க மக்களை பார்த்துகிட்டு சும்மா இருக்க முடியும்?’ என்று படப்பிடிப்புக்கு விடுமுறை விட்டுக் களத்தில் இருக்கிறார் சமந்தா. தெலுங்குத் திரையுலகிலிருந்து முதலமைச்சர் நிவாரணநிதிக்கு நீண்ட முதல்கரம் அழகான நடிகர் என்று புகழப்படும் அல்லு அர்ஜுனுடையது.

    பாலிவுட் முன்னணி நடிகரான ஷாருக் கான் மழை பாதிப்புக்காக ஒரு கோடி நிவாரண நிதி கொடுத்திருக்கிறார். ‘இன்னைக்கு பால் வாங்கக்கூட முடியலை. பாலாபிஷேகம், வானுயர கட் அவுட் என்று நம்ம தலைவனை கொண்டாடித் தீர்த்தோம்’என்று எட்டிப் பார்க்காத முன்னணி நடிகர்கள் சிலர் மீது ரசிகர்களுக்கு ஆதங்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது, இந்த கன மழை.

    முதல்வர் நிவாரண நிதிக்குக் காசோலை ஒன்றைக் கொடுத்துவிட்டுப் புகைப்படம் எடுத்துக்கொண்டால் தானும் பங்கெடுத்திருக்கிறோம் என்பது பதிவாகிவிடும் என்று நினைக்காமல் களத்தில் இறங்கி வேலை பார்த்த நடிகர்களை மக்களுக்கு அடையாளம் காட்டிக்கொடுத்திருக்கிறது, இந்த மழை.

    ‘மனைவி, குழந்தைகளோடு 15 நிமிடங்கள் செலவிட்டதில்லை’, ‘அடுக்குமாடிக் குடியிருப்பில் இருக்கும் எதிர் வீட்டுக்காரர் என்ன பிசினஸ் செய்கிறார் என்பதுகூட தெரியாது’ என்று ஓடிக்கொண்டே இருந்த சென்னை வாசிகளை இந்த மழை ஒன்று சேர்த்து உலுக்கி உறைய வைத்திருக்கிறது. இந்தச் சூழலில், பெரிய அளவில் முதலீடு போட்டு, ஒவ்வொரு மணி நேரமும் வேலை வேலை என்று பம்பரமாய் சுழன்று கொண்டிருப்பவர்தான் திரை நட்சத்திரங்களும். அவர்களில் ஒரு சிலர் இந்த மழைப் பொழுதுகளை ஓய்வுக்கான நேரமாக எடுத்துக்கொள்ளாமல் பாதிக்கப்பட்டவர்களோடு நின்றது, தொடர்ந்து நிற்பது ரசிகனுக்கும், நடிகனுக்கும் இடையே உள்ள பேரன்பின் பிரதிபலிப்பே.

  2. Thanks Russellmai thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #1802
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like

    Frank Sinatra's birthday -- Dec 12th

    A song in his memory: Winchester Cathedral......



    This was a popular song in mid 60s. His daughter Nancy Sinatra also sang this song. I used to listen to it in 1966 as a student in Chicago area !
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  5. #1803
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Courtesy: Dinamani


    பானுமதி: 8. ஒன் உமன் ஆர்மி!

    நமது மிகச் சிறந்த டாக்கிகளெல்லாம் வங்காளத்தில் இருந்து வந்தவையே. தமிழ் சினிமா என்று கூறுவதைவிட, தழுவல் சினிமா என்பதே மிகப் பொருத்தமாக இருக்கும்.

    டாக்டர். நிரஞ்சன் குப்தாவுக்கு நன்றி! ஏவி.எம். படைப்பான அன்னை, ‘மாயா ம்ருகா’ என்ற பெயரில் நிரஞ்சன் எழுதிய நாடகம். வங்க மக்களிடையே மிகப் பிரமாதமான வரவேற்பைப் பெற்றது.

    செல்வச் சீமாட்டி அக்கா சாவித்ரி. தனக்குப் பிள்ளைப்பேறு இல்லாததால், உடன்பிறந்த ஏழைத் தங்கை சீதாவின் குழந்தையைத் தத்தெடுக்கிறாள்.

    ‘என் பிள்ளையிடம் எக்காரணம் கொண்டும் ‘நான்தான் உன் தாய்’ என்று சொல்லிவிடாதே’ என்று தன் சகோதரியிடம் சத்தியமும் வாங்கிக்கொள்கிறாள்.

    பெற்றவளை மகன் சந்திக்கவிடாமல் தடுக்கிறாள். நிஜம் வெளிப்பட்டு, தன் சுவீகாரப் புத்திரன், தங்கையிடமே போய்விடுவானோ என ஒவ்வொரு நொடியும் தவிக்கிறாள். முடிவில், உண்மை வெளிப்படுகிறது. திருக்குறள் போன்று ரத்தினச் சுருக்கமான இலக்கியம்!

    முழு கவனம் செலுத்தி மெய்யப்பன் உருவாக்கிய உன்னதச் சித்திரம்! மறக்க முடியாத செல்லுலாயிட் காவியமாக, ‘அன்னை’ இன்றுவரை சின்னத்திரைகளில் பூரண நிலவாக ஒளி வீசி உலா வருகிறது.



    86 ஆண்டு காலத் தமிழ் சினிமாவில், உண்மையாகவே ஒரு குறிஞ்சி மலர் ‘அன்னை’.

    நடிப்பின் எல்லைக்கே சென்று, தாய்ப்பாசத்தில் உருகி, பிள்ளைக்காகப் போராடி வெற்றிபெறும் ‘சாவித்ரி’யாக பானுமதி வாழ்ந்து காட்டினார்.

    சுயமரியாதைச் சுடர் பானுமதி, ஏவி.எம்.மின் ‘அன்னை’யை ஒழுங்காகப் பூர்த்திசெய்து தருவாரா? தினந்தோறும், திகிலோடு ஷூட்டிங் நடந்தது.

    பானுமதியுடன் எஸ்.வி.ரங்காராவ், சவுகார் ஜானகி, சந்திரபாபு ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துக்கொண்டிருந்தார்கள். ஒரு நாள் படப்பிடிப்பின் இடையில், அன்னை பட டைரக்டர்களான கிருஷ்ணன் - பஞ்சு இருவரையும் பானுமதி அழைத்தார்.

    ‘என்னடா இது அவஸ்தை! வேதாளம் மறுபடியும் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறுகிறதோ?’ முன்பே, பானுமதியை ரத்னகுமார், நல்லதம்பி படங்களில் இயக்கியவர்கள்.

    ‘சார், இந்தப் படத்தில் தொடர்ந்து நடிக்க எனக்கு இஷ்டமில்லை. என்னை கேன்ஸல் செய்துவிடுமாறு மிஸ்டர் செட்டியாரிடம் சொல்லிவிடுங்கள். இனிமேல், ஏவி.எம்.முக்குள் நான் வரமாட்டேன்’ என்றார். ஏவி.எம். முதலும் கடைசியுமாக அதிர்ந்தது.

    பானுமதியால், தாங்கள் ரணப்பட்ட அனுபவத்தை 1977 ஜூலையில் ஒரு சினிமா இதழில் பதிவு செய்துள்ளனர்.



    ‘அழகு, கவர்ச்சியைக் காட்டி, நாயகன் அல்லது நாயகிக்கு எதிராக இருப்பது மட்டும் வேம்ப் ரோல் அல்ல. முற்றிலும் மாறுபட்ட வகையில், இப்படியும் இருக்க முடியும் என்று அன்னையில் செய்துள்ளோம்.

    பானுமதி ஏற்ற கேரக்டர், ‘வில்லி மீது அனுதாபம் ஏற்படுவதோ, வேம்ப் ஆக நடிப்பவர்களைக் கண்டு கண்ணீர் வடிக்கும்படிச் செய்வதோ முடியாது...’ என்பதை மாற்றி அமைத்தது.

    எதையும் புரிந்துகொண்டு தன்னிச்சையாக நடிக்கக்கூடியவர் பானுமதி. உன்னதமான அவரது நடிப்பாற்றலால் அந்தக் கதாபாத்திரம் சிறப்பாகச் சித்தரிக்கப்பட்டு, படம் பார்ப்பவர்கள் மனத்தை உருக்குமாறு செய்துவிட்டோம்.

    பானுமதி எவ்வளவு பெரிய நடிகை. அதோடு மிகவும் புத்திசாலி! அந்தக் காட்சியில் தனக்கே முக்கியத்துவமும் பாராட்டும் கிடைக்க வேண்டும் என்ற ஆசையின் காரணமாக, பானுமதியின் ஒத்துழைப்பு குறைந்தது.

    நாங்கள் எதிர்பார்க்காத இந்தச் செயல், பானுமதி மீது எங்களை ஆத்திரப்பட வைத்தது. எங்கள் எண்ணம் ஈடேறாத வகையில் அவரது நடவடிக்கைகள் அமைந்தன’ - கிருஷ்ணன் - பஞ்சு.

    அடுத்து, தட்டுத் தடுமாறி, தயங்கிக்கொண்டே அப்பச்சியிடம் பானுமதியின் முடிவைத் தெரிவித்தார்கள்.

    ‘இத்தனை நாள்கள் அருமையாக நடித்து, அற்புதமாக ஒத்துழைத்த பானுமதி நடுவில் விலகுகிறேன் என்றால், அதற்கு ஏதாவது காரணம் இல்லாமல் இருக்காது. எதற்காக அவர் செட்டை விட்டுப் போனார்? அதை அவரிடமே கேட்டுத் தெரிந்துகொண்டு வாருங்கள்’ என்று சொல்லி, படைப்பாளிகளையும், வசனகர்த்தா கே.எஸ். கோபாலகிருஷ்ணனையும் பானுமதியின் வீட்டுக்கு அனுப்பினார்.

    தூரம் அதிகமில்லை. ஏவி.எம்.முக்கு அடுத்தது பானுமதியின் பரணி ஸ்டுடியோ. அதன் உள்ளேயே, நீச்சல் குளத்துடன் கூடிய சொகுசு பங்களாவில் பானுமதி குடியிருந்தார்.



    பானுமதியை அவரது சொந்த வீட்டிலேயே சந்திக்கப்போவது குறித்து, அந்த மூன்று மீசைகளுக்கும் உதறல், அச்சம், பயம், நடுக்கம், தயக்கம், தடுமாற்றம், பதற்றம் அத்தனையும் முகத்தில் படர்ந்தது. ஏதோ தப்பு செய்துவிட்டு, ஹெட்மாஸ்டரிடம் சிக்கிக்கொண்ட பள்ளிப்பிள்ளைகளாக வியர்வையைத் துடைத்தார்கள்.

    நல்லவேளை. அவர்கள் நினைத்த மாதிரி, 111 டிகிரி உச்சி வெய்யிலாக பானுமதி தகிக்கவில்லை. அவர்களுக்குக் குடிக்கக் குளிர்ச்சியாக பானங்கள் தந்து அன்புடன் உபசரித்தார்.

    லேசாகத் தெம்பு வந்தது. ஆனாலும் எப்படிப் பேச்சை ஆரம்பிப்பது என்கிற யோசனையில் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

    வருஷக்கணக்கில் ஓடிய வெற்றிப்படங்களை வழங்கியவர்கள். பானுமதி என்கிற நடிப்புப் பிரவாகத்துக்கு அணை போட முடியாமல், அவர்கள் நாற்காலியின் நுனியில் அமர்ந்திருந்தார்கள்.

    பானுமதியே பேச்சை தொடங்கினார்.

    ‘என்ன விஷயமா வந்திருக்கீங்க...?’

    மூவரில், பஞ்சு மெல்ல ஆரம்பித்தார்.

    ‘காலையில், நீங்கள் இனி அன்னையில் நடிக்கமாட்டேன் என்று சொன்னீர்கள். அதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்ள செட்டியார் எங்களை அனுப்பி இருக்கிறார்...’

    ‘யாருக்குப் பாசம் அதிகம்? பிள்ளையைப் பெற்றவளுக்கா, இல்லை வளர்த்தவளுக்கா. இதானே அன்னை கதையோட மெயின் மேட்டர்?’ என்று சீரியஸாக கேட்டார் பானுமதி.

    ‘இன்னிக்கு என்ன சீன் எடுத்தீங்க...? அதுல சவுகார் ஜானகி கடைசியா பேசின டயலாக் என்ன?’

    ‘‘என் புருஷன் உயிருக்குப் போராடிட்டு இருக்கிறப்ப, நீ என் பிள்ளையைக் கூட்டிக்கிட்டு வெளியூர் போறதா சொல்லி கிளம்பிப்போனியே... அப்ப, நான்தாண்டா உன்னைப் பெத்த அம்மான்னு ஒரே ஒரு வார்த்தை சொல்லி இருந்தா, நான் பெத்த புள்ள உன்கூட வந்திருப்பானா...?

    அந்த நேரத்தில்கூட என் தாய்ப்பாசத்தை அடக்கிக்கொண்டேனே. அவன் என் பிள்ளைன்னு சொல்லிக்க, அதைவிடவா எனக்கு ஒரு சந்தர்ப்பம் வரப்போகுது..!’’

    ‘எனக்குத் தங்கையா நடிக்கிற சவுகார் ஜானகி. அந்த வசனங்களை அற்புதமான பாவத்தோட சொல்லி அனாயாசமா நடிச்சிட்டாங்க. நான் அதுக்கு ஈடுகொடுக்க முடியாம சிலை மாதிரி நின்னுட்டேன். அதோட அந்தக் காட்சியை நீங்க முடிச்சிட்டீங்க.

    ‘இனிமே படத்துல என் அக்கா கேரக்டர் நிக்கவே நிக்காது. அது காலையிலேயே சவுகார் நடிப்புல சுக்கு நூறாயிடுச்சி.

    ‘அடுத்து என்னதான் நான் உசுர கொடுத்து நடிச்சாலும், படத்துல அது எடுபடாது. அங்கேயே என் கேரக்டர் டம்மியாயிடுச்சி. அக்காவா நான் தொடர்ந்து நடிச்சி, இனிமே எந்தப் பிரயோசனமும் கிடையாது’.

    பானுமதி, சாமி வந்தவர்போல் ஓர் ஆட்டம் ஆடித் தீர்த்ததும், மூன்று வேட்டிகளும் சுனாமியில் அவிழ்ந்ததுபோல், பிரக்ஞையற்றுப் போனார்கள்.

    நிஜத்தில், தன் சாதூர்யமான வாதத்தால், அம்மூவரையும் பானுமதி கொன்றேவிட்டார்.

    இன்றோடு அன்னை அவ்வளவுதானா? தமிழ் சினிமாவுக்கே மகுடம் சூட்டப்போகும் உன்னத சித்திரத்தை உறையில் போட்டு மூடிவிடச் சொல்லுகிறாரா பானுமதி...?

    பஞ்சுவுக்குப் பற்றி எரிந்தது. ஆனாலும், தேன் தடவிய சொற்களால் பானுமதிக்கு உடுக்கை அடித்தார்.

    ‘மேற்கொண்டு அன்னையை உயர்த்திக் காண்பிக்க என்ன செய்யலாம். அதையும் நீங்களே சொல்லுங்கள்...?’

    ‘இப்ப நான் சொல்லப்போறதை நீங்க நல்லா புரிஞ்சிக்கணும். ‘அன்னை’ நீங்க நினைக்கிற மாதிரி சக்ஸஸ் ஆகணும்னா, என் கேரக்டர் நிச்சயம் ஜெயிச்சாகணும். சவுகாராடோ தங்கச்சி வேஷத்துக்கு முன்னால என் ரோல் தோத்துச்சின்னா, மொத்தப் படமும் சின்னாபின்னமாகி ஃபெயிலியர் ஆயிடும்.

    ‘ஜானகி பேசின வசனத்துக்கு மேலே, நிறைய ஸ்கோப்புள்ள டயலாக்கை பேசி நான் பதிலடி கொடுத்தால் ஒழிய, ஜனங்க ரசிக்க மாட்டாங்க’.

    பானுமதியின் எதிர்பார்ப்பு நியாயமானது. ஆனால், அதற்கு ஏற்கெனவே அமைத்த திரைக்கதையில் சாத்தியம் கிடையாது. புதிதாக யோசிக்க வேண்டும்.

    ‘தங்கையான ஜானகி, தாய்ப் பாசத்தின் வீரியத்தைக் கொட்டித் தீர்த்த பின்பு, அக்கா பானுமதி பேசி ஜெயிக்க என்ன இருக்கிறது...! எங்களை மன்னித்துக்கொள்ளுங்கள்’ என்றார் பஞ்சு, நிதானமாக.

    பானுமதி விடவில்லை.

    ‘எனக்கு நம்பிக்கை இருக்கிறது. கோபாலகிருஷ்ணனால் இன்னும் சிந்தித்து நன்றாக எழுத முடியும். நீங்க அனுமதிச்சா, அவரிடமிருந்து அக்காவுக்கான டயலாக் பேப்பரை நான் வரவழைத்துக் காட்டுகிறேன்’.

    ‘சண்டிராணியாகி’ பானுமதி சவால் விட்டார். ஏவி.எம்.முக்கு பானுமதியின் ஃபோனிலிருந்தே தகவல் போனது. மெய்யப்பனுக்கு இழந்த ஐஸ்வர்யம் திரும்பி வந்ததைப்போல் இருந்தது.

    கோலிவுட்டில் மிகப்பெரிய கர்வி, மகா திமிர் பிடித்தவர், அகம்பாவம் நிறைந்தவர், ஆணவக்காரி என்று எல்லோராலும் சகஜமாக விமர்சிக்கப்பட்டவர் சாட்தாத் பானுமதி.

    கதாசிரியருக்குக் கற்பனைச் சிறகுகள் விரிய வேண்டும் என்பதற்காக, மிகச் சிறந்த திரை ஆவணம் ஒன்று உருவாக வேண்டும் என மெனக்கெட்டு,

    ‘உங்களுக்கு என்ன தேவை என்றாலும் சொல்லுங்கள். என் சொந்த செலவில் வாங்கித் தருகிறேன். நல்ல விஷயம் வந்தாக வேண்டும்’ என்று சொல்லி,

    கோபாலகிருஷ்ணனிடம், காபி, வெற்றிலைப் பாக்கு, மூக்குப் பொடி இம்மூன்றையும் தனது கைகளாலேயே எடுத்து மாறி மாறி நீட்டி, அவரை உற்சாகப்படுத்திக்கொண்டிருந்தார்.

    மெய்யப்பன் உள்பட அவரது மொத்த சகாக்களும், அதுவரையில் சரித்திரம் காணாத மிக அபூர்வமான காட்சியைக் கண்டு ஆச்சரியத்தில் மூழ்கினர்.

    ‘அன்னை’ செட்டில் மீண்டும் லைட்ஸ் ஆன்.



    ‘ஒரு தாய் பல பிள்ளைகளைப் பெறலாம். அத்தனை பேருக்கும் தனது அன்பையும் பாசத்தையும் பகிர்ந்தளிக்கலாம். அப்படியொரு சக்தி மாதாவுக்கு உண்டு.

    ‘ஆனால், ஒரு பிள்ளைக்கு இரண்டு அம்மாக்கள் இருக்கவே முடியாது. அவர்கள் இருவராகப் பொழியும் நேசத்தை, ஒற்றை மகனால் சுமக்கவே முடியாது.

    ‘அந்தப் பிள்ளை ஜீவனோடு நடமாட வேண்டுமானால், ஒரே ஒரு தாயார் மட்டுமே இருக்க முடியும். அந்த ஒரே ஒரு அம்மா நம்மில் யார், நீயா… நானா...? என்பதை நீயே முடிவெடுத்துக்கொள்’.

    மனக்கொந்தளிப்பில் உண்டான அனல் விநாடிகளின் உச்சக்கட்டத்தில், அக்கா பானுமதியின் எரிமலைத் தாக்குதலால், தங்கை சவுகார் ஜானகி திடுக்கிட்டு நின்றுவிடுவதாக அக்காட்சி முடிந்தது.

    கோபாலகிருஷ்ணன் எழுதிய வசனங்களை தெளிவு, தீர்க்கம், அழுத்தம் திருத்தமாக, ஆவேசத்துடன் பேசி நடித்த பானுமதியை, செட்டியார் உள்பட ஒட்டுமொத்த அரங்கமும் கைத்தட்டல்களால் உள்ளம் குளிரச் செய்தது.

    1962, டிசம்பர் 15. வெலிங்டன் தியேட்டரில், முந்தானைகள் கண்ணீர் மழையில் முழுக்க நனைந்தன. அழுது அழுது தாய்க்குலங்களின் கண்களும் முகமும் சிவந்தன.

    யுவதிகள், கிழவிகள் என்றெல்லாம் விதிவிலக்கு கிடையாது. அங்குமாத்திரம் அல்ல. ஒட்டுமொத்த தமிழக மகளிரும், ஒரேயடியாக பானுமதி நடித்த அன்னை படத்தைப் பார்த்துவிட்டு பகிரங்கமாகவே விம்மினர்.

    சிவாஜி - சாவித்ரிக்கு எப்படி பாசமலரோ, அப்படி பானுமதிக்கு அன்னை. பாசமலரிலாவது இரு திலகங்களும் வெற்றியைப் பகிர்ந்துகொண்டார்கள். அன்னை, ஒன் உமன் ஆர்மி!

    அதிலும், வளர்ப்பு மகன் விபத்துக்குள்ளாகி வீட்டிலேயே சிகிச்சை பெறும் நேரத்தில் - பானுமதியின் நடிப்பு, இனி வரும் நூற்றாண்டுகளுக்கும் கட்டாயக் கலைப்பாடம்!

    1. உறங்கும் பிள்ளையின் காதுகளில் சத்தம் விழக்கூடாது என்று டக்டக் பூட்ஸுடன் வரும் நர்ஸை, சிடுசிடுப்புடன் விரலைக் காட்டி வெளியேற்றுவதும்…

    2. ரயில் சத்தம் கேட்கக் கூடாது என்று மெல்லப் போய் ஜன்னலைச் சாத்திவிட்டு வருவதும்…

    3. கடிகாரத்தில் டிக் டிக் ஒலி கேட்டுத் திடுக்கிட்டு, அடி மேல் அடி வைத்துச் சென்று, பெண்டுலத்தை நிறுத்திவிட்டு வருவதுமாக…

    ‘பானுமதி, நடிப்புக்கு இலக்கணம் வகுத்த நடிகை’ என்று பேரறிஞர் அண்ணாவை வாயார மனமார சொல்லவைத்தார்.

    ‘சிவாஜிக்கு ஈடு யார் என்று எங்கெங்கோ தேடினோமே, இதோ நான் இருக்கிறேன் என்கிறார் பானுமதி. க்ளைமாக்ஸில் மகனுக்கு உண்மை தெரியும்போது, தூணைப் பிடித்துக்கொண்டு அழுகிறாரே… அந்த ஒரு இடத்தில்தான் நடிப்பை மறந்துவிட்டார். அன்னை மெல்ல ஊர்கிறாள். ஆனால், பானுமதி வேகமாக உயர்ந்துவிட்டார்’

    என்று ‘குமுதம்’ தனது அன்னை பட விமர்சனத்தில், பானுமதியை சிகரத்தில் தூக்கி நிறுத்தியது.



    அவர்கள் மாத்திரம்தானா?

    அன்னையின் ஹிந்திப் பதிப்பில், எஸ்.வி. ரங்காராவ் வேடத்தில் நடிக்க வந்தவர், வடக்கின் பிரபல குணச்சித்திர நடிகர் பால்ராஜ் சஹானி. அன்னை படத்தைப் பார்த்துவிட்டு, பானுமதிக்கு அவர் கடிதம் எழுதினார்.

    ‘அன்னை படத்தை நான் பார்ப்பது இது மூன்றாவது முறையோ என்னவோ. எனக்குத் தமிழ் மொழி தெரியாவிட்டாலும், இன்னும் ஒரு டஜன் தடவையாவது அன்னை படத்தைப் பார்ப்பேன் - உங்களது சிறப்பான நடிப்புக்காகத்தான்.

    ‘நீங்கள் வேறு படங்களில் இதைவிடச் சிறப்பாக நடித்து வரலாம். அது எனக்குத் தெரியாது. ஆனால், அன்னை படத்தில் உங்கள் நடிப்பு சிறப்பானது மட்டுமல்ல; மிக மிக உயர்வானது.

    ‘அநேக காட்சிகளில் வாய் திறந்து வசனம் எதுவும் பேசாமல், பார்வையாலும், நடை உடை பாவனைகளாலும் நீங்கள் வழங்கியிருக்கும் நடிப்பு பற்றி தரமான விமர்சகன் ஒரு புத்தகமே எழுதலாம். எனது பாராட்டுதல்கள் மட்டும் உங்கள் நடிப்புக்கு ஒரு பரிசாகி விடாது. மேல் நாட்டுப் படங்களில்கூட, மிக அபூர்வமாகத்தான் இம்மாதிரியான உயர்தரமான நடிப்பை நான் பார்க்க முடிந்திருக்கிறது’.

  6. Likes Russellmai liked this post
  7. #1804
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like

  8. #1805
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    எஸ்.வாசுதேவன், ராஜேஷ் நன்றி.. சற்றே மூட் அவுட் தான்..அதுக்காக அப்படியே இருக்க முடியுமா..அப்புறம் மக்கள்ஸ்லாம் சந்தோஷமா இருக்க ஆரம்பிச்சுடுவாங்களே

    நெய்வேலி வாசுதேவன்., மதுண்ணா எப்படி இருக்கறீங்க .. நான் அனைவருக்கும் ப்ரே பண்ணிக் கொண்டே இருந்தேன்.. ராகவேந்தர் சார் முரளி சார் எப்படி இருந்தது வெள்ளம்..

    *

    சரி முன்னாலே எழுதியிருந்த கண்ணீர் போஸ்ட்ல இருந்து ஆரம்பிக்கட்டா..

    *

    மீள் பதிவு..

    **

    கண்ணீர்க்காக 4 வரி நோட் டைப்பில் எழுதிப் பார்த்தது

    **

    கைகேயி “யூ ஹாவ் டு கோ டு ஃபாரஸ்ட் மை பாய்” எனச் சொல்லிவிட ராமர் காட்டிற்குப் புறப்படுகிறார்.. அவர் புறப்படுவதை சோகத்துடனும் அழுகையுடனும் பார்க்கும் மக்கள் எப்படி இருக்கிறார்களாம்..

    *

    வால்மீகி ராமாயணத்தில் இவ்வாறு வருகிறது…

    *

    ஒரு பெரிய தாமரைக் குளம்..தண்ணீர் முழுதும் நிரம்பி இருக்கின்றது.. அங்கே சின்ன,பெரிய, நடுத்தர மீன்களெல்லாம் கூட்டம்கூட்டமாய் வந்து அங்கு நிரம்பியிருக்கும் தாமரைத் தண்டுகளில் மோதுகின்றதாம்..அப்போது என்ன ஆச்சாம்.. குளத்திலிருந்து தண்ணீரெல்லாம் பலதிசையில் சிதறுகிறதாம்.. அது போல மக்களின் கண்ணீர் சிதறின.. என்கிறார் வால்மீகி..

    *

    சரி கம்பன் என்ன சொல்கிறார்..

    *
    ஆவும் அழுத அதன்கன்று அழுத;; அன்றலர்ந்த
    ..பூவும் அழுத;புனல்புள் அழுத கள் ஒழுகும்
    காவும் அழுத: களிறு அழுத; கால்வயப்போர்
    ..மாவும் அழுத;- அம்மன்னவனை மானவே

    ராமனுடைய பிரிவால் துன்பமுற்ற தசரதனைப் போல் பசுக்கள் அழுதன; பசுக்கள் ஈன்ற கன்றுகள் அழுதன;அப்போது மலர்ந்த பூக்கள் கூட அழுதன;யானைகளும் அழுதன\; காற்றின் வலிமை கொண்ட குதிரைகள் கூட அழுதன..
    *
    எனில் எதற்காக இவையெல்லாம்..ம்ம் கண்ணீர்.. இந்தக் காலத்துக் கவிஞன்(ம்க்கும்! ) என்ன சொல்றான்..
    *
    உன்னதத்தில் பொங்குகின்ற உணர்விலே தான்வரும்
    கண்ணீரும் தருமோர் காட்சி – திண்ணமாய்
    நெஞ்சிலே பட்டவலி நேர்படக் கண்ணீராய்த்
    துஞ்சுவதும் ஓர்காட்சி தான்….
    *
    உன்னதம்..மகிழ்ச்சியிலும் கண்ணீர் வரும்; சோகத்திலும் கண்ணீர் வரும்.. ஆமாம்..இதே
    ஸிம்ப்பிளா திரைப்பாடலில் வந்துருக்கே.
    .
    *
    சிரித்தாலும் கண்ணீர் வரும் அழுதாலும் கண்ணீர் வரும்
    உறவினிலே சிரிப்பு வரும் பிரிவினிலே அழுகை வரும்..
    சிரித்தாலும் அழுதாலும் சுகமாக அமைதி வரும்..

    அதெப்படி அமைதி..ஆமாம் வாய்விட்டு சிரிச்சா மட்டுமில்லை வாய்விட்டு அழுதாலும் பாரம் குறையும்..மனசு பாரம் கொஞ்சம் குறையும்..
    *
    திரைப்பாடல்கள்ல பார்த்தா காதல் க்கு மட்டும் தான் கண்ணீர் குத்தகை எடுத்திருக்காங்க..
    இந்தாள் என்ன சொல்றார்…

    கண்ணோரம் காதல் வந்தால் கண்ணீரும் தித்திப்பாகும்
    வேறுஒன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்
    என்னோடு நீயும் வந்தால், எல்லாமே கையில் சேரும்
    வேறுஒன்றும் தேவையில்லை, நீ மட்டும் போதும் போதும்
    (காதலிக்கறப்ப இப்படித்தான் இருக்கும் குரு..கல்யாணம் ஆச்சுன்னா..ம்ம்பார்க்கலாம்!!)
    *
    இன்னொரு பொண்ணு..கண்ணனை நினச்சு தன்னோட கொழுக் மொழுக் உடம்பு உருக உருகப்பாடுது...

    கண்ணன் முகத்தோற்றம் கண்டேன் கண்டவுடன் மாற்றம்கொண்டேன்
    கண்டவுடன் ஏங்கி நின்றேன் கன்னிசிலையாக நின்றேன்
    என்ன நினைந்தேனோ தன்னை மறந்தேனோ கண்ணீர் பெருகியதே.
    .
    கண்ணனைப்பார்த்துட்டாளாம்..பேச்சு வல்லை..மூச்சு மட்டும் ஓரிழையாய் வர எல்லாமே மறந்துபோகுது.. கண்ணுக்குள்ள இருந்து வாட்டர் டேங்க்ல தண்ணீர் ஜாஸ்தியா ஏறிச்சுன்னா கொட்டறாப்புல பொலபொலன்னு கண்ணீரா வருதாம்..ம்ம் இது ஆனந்தக் கண்ணீர்

    *

    சமத்தா பொண்டாட்டியோட சந்தோஷமா இருக்க வந்த ஆள பொசுக்குன்னு கடத்திட்டுப் போய்டறாங்க தீவிர வாதிங்க..பாவம்..சின்னப் பொண்ணாச்சே .. என்ன கஷ்டப் படறாளோ..வாழ்க்கையோட ஆரம்பத்திலேயே இப்படி ஆச்சே..ம்ம்னு நினச்சு மனசுக்குள்ள தேடிப்பாக்கறது பாட்டா திரையில் வருது..
    *

    காதல் ரோஜாவே , எங்கே நீஎங்கே
    கண்ணீர்வழியுதடி கண்ணே
    : கண்ணுக்குள் நீ தான், கண்ணீரில் நீ தான்

    ம்ம் நல்ல பாட்டுதேன்..

    *
    கண்ணீர்ங்கறது என்ன பிரிவின் வேதனை உள்ளத்தின் வலியை உடல் வெளிப்படுத்தும் முறை..அது வந்து ஒரு அழுகை போட்டுக்கிட்டா கொஞ்சம் ரிலாக்ஸீம் ஆகலாம்..இல்லியோ.

    *

    இங்க பாருங்க இந்தப் பையன் புலம்பறத.. அந்தக் கண்ணீர் கண்ணுக்குள்ளயே தங்கிடுதாம்..அதோட வெப்பம் கண்ணையே சுட்டுப்பொசுக்குதாம்...

    *

    விழியில்லை எனும்போது வழி கொடுத்தாய்
    விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய்
    நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம்
    சிந்தும் சந்தம் உந்தன் சொந்தம்
    தத்திச்செல்லும் முத்து சிற்பம் கண்ணுக்குள்ளே கண்ணீர் வெப்பம்
    இன்னும் என்ன நெஞ்சில் அச்சம் கண்ணில் மட்டும் ஜீவன் மிச்சம்
    முல்லை பூவில் முள்ளும் உண்டோ கண்டு கொண்டும் இந்த வேஷம் என்ன

    *

    நல்ல சிச்சுவேஷ்னல் பாட்டு.. ஆனா ஹீரோயினா இன்னும் நல்லா ஆடத்தெரிந்த யாரையாவது போட்டிருக்கலாம்..

    *

    காதலில் சோகம்னா சிவாஜி தான் முதலில் கண் முன் வர்றார்.. கண்ணதாசன் வரி, டிஎம் எஸ் குரல், நடிகர் திலக நடிப்பு..ம்ம் மறக்க முடியுமா இந்தப் பாட்டை..

    *

    காதல் கிளிகள் பறந்த காலம்
    கண்ணில் தெரியும் நெஞ்சம் உருகும்
    கண்ணீர் கலங்கி கண்ணில் இறங்கி
    நெஞ்சில் விழுந்தால் சொந்தம் புரியும்

    *

    ம்ம் ஒரே பாடல்..உள்ளத்தைக் கவ்வும்..

    *

    அட இந்தக் காலப் பாட்டிலும் வந்துருக்கே.. என்ன கொஞ்சம் வித்தியாசமாக.

    *
    .
    மார்கழித் திங்களல்லவா...
    இதயம் இதயம் எரிகின்றதே இறங்கிய கண்ணீர் அணைக்கின்றதே
    உள்ளங்கையில் ஒழுகும் நீர்போல் என்னுயிரும் கரைவதென்ன
    இருவரும் ஒரு முறை காண்போமா இல்லை
    நீ மட்டும் என்னுடல் காண்பாயா

    **

    நல்ல சாங் தானில்லை..

    **
    கடைசியா நம்மை விட்டுக் குறுகியகாலத்திலேயே பிரிந்த ஸ்வர்ணலதாவோட பாட்டு..

    போறாளே பொன்னுத்தாயி பொல பொலவென்று கண்ணீர் விட்டு
    தண்ணீரும் சோறும் தந்த மண்ணை விட்டு
    பால் பீச்சும் மாட்ட விட்டு
    பஞ்சாரத்து கோழியே விட்டு
    போறாளே பொட்ட புள்ள ஊரை விட்டு

    *

    ம்ம் நிறையக் கண்ணீர் விட்டுட்டேன்னு நினைக்கறேன்..இன்னும் விடுபட்டுப் போயிருக்கும்.. நீங்கதான் இருக்கீங்களே..சொல்றதுக்கு..

  9. Likes Russellmai, rajeshkrv liked this post
  10. #1806
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Sir Humphrey Bogart - Ingrid Bergman starrer Casablanca remains a hallmark movie of Romance till today!
    In Kalathoor Kannamma GG reprised the charisma of Bogart in his 'love failure' / misunderstanding scenes!!






    GG at his best...excels and wins hearts!



    ஜெமினி கணேசனின் அற்புதமான உள்ளத்தை உலுக்கும் நடிப்பின் வீச்சை அருகிலிருந்து குருகுல வாசமாக உன்னிப்பாக கவனித்துக் கற்றுக்கொண்ட குழந்தை கமல்ஹாசன் !
    திரைத் தந்தை ஜெமினியே......என்னவொரு வாத்சல்யமான அன்பை இனிமையாக இதமாக வெளிப்படுத்தியிருக்கிறார் ஜெமினி!!



    Last edited by sivajisenthil; 17th December 2015 at 03:19 AM.

  11. Thanks Russellmai thanked for this post
    Likes chinnakkannan, Russellmai liked this post
  12. #1807
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like

    Welcom Margazhi

    A song from Sangamam

    margazhi thingaL madhi niraindha.......




    Hope we don't get any more rains as we did last Tamil month.
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  13. Thanks Russellmai thanked for this post
    Likes chinnakkannan, Russellmai liked this post
  14. #1808
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,200
    Post Thanks / Like
    வணக்கம் ராஜ்! Here's another song that starts with "மார்கழி"; but not in Tamil...



    Note: Kamalahasan acted in several Malayalam movies in his early days/years before becoming famous in Tamil and the rest of India!

  15. Thanks Russellmai thanked for this post
    Likes Russellmai liked this post
  16. #1809
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    RD. in 70's he acted both in tamil and mal ( many good movies in malayalam.. ponni, kanyakumari , eeta and many more

  17. #1810
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,200
    Post Thanks / Like
    Yes, Rajesh; I agree!

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •