-
17th April 2016, 06:45 AM
#2381
Senior Member
Seasoned Hubber
மது
ரொம்ப ரொம்ப நன்றி. காதில் வைத்துக் கேட்கும் பொழுது ஒரு சில வார்த்தைகள் தவறாக கேட்டு எழுதியிருக்கிறேன். போலும். பிழை திருத்தி சரியான வரிகளைத் தந்தமைக்கு உள்ளபடியே உளமார்ந்த நன்றி.
சரியான வரிகளைப் படிக்கும் போது தான் பாடலின் பரிமாணம் முழுமையாகத் தெரிகிறது.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
madhu thanked for this post
-
17th April 2016 06:45 AM
# ADS
Circuit advertisement
-
17th April 2016, 06:50 AM
#2382
Senior Member
Seasoned Hubber
கோபால்
ஆர்.கே. சேகர் எ குலசேகர் தமிழில் தனியாக இசையமைத்து ஓரிரு படங்கள் உள்ளன. கிராமஃபோன் ரிக்கார்டுகள் பார்த்த ஞாபகம். அதில் இந்தப் பாடல் இடம் பெற்ற படமும் இன்னும் ஓரிரு படங்களும் உள்ளன.
வி.குமாரைப் பொறுத்த மட்டில் குணசிங்கும் சேகரும் இல்லையென்றால் இந்த அளவிற்கு அவரால் வந்திருக்க முடியாது. எம்.எஸ்.வி.க்கு கோவர்தன் போல குமாருக்கு குணசிங். துரதிருஷ்டவசமாக அதிகம் வெளியே அறியப்படாமலே இருந்து விட்டார். சங்கு புஷ்பங்கள் படம் என்றும் குணசிங்கின் பெயர் சொல்லும்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
17th April 2016, 06:51 AM
#2383
Senior Member
Seasoned Hubber
வாசு சார்
இனிமேல் கடிகாரத்தில் காலை 10 மணியானால் போதும் அந்தக் காலம் மீண்டும் நினைவுக்கு வரும் அளவிற்கு எழுதி அசத்தி விட்டீர்கள்.
எப்படிப் பாராட்டுவது..
யூ ஆர் கிரேட்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
17th April 2016, 06:55 AM
#2384
Senior Member
Seasoned Hubber
மிகப் பெரும்பாலான காலைக் காட்சிகளில் நான் பார்த்தது நடிகர் திலகத்தின் படங்கள் மட்டுமே. அது மட்டுமின்றி காலைக் காட்சிகளில் சென்னை நகரைப் பொறுத்த மட்டில் டப்பிங் படங்கள் அதிகம் போட மாட்டார்கள். பழைய தமிழ்ப்படங்கள் மட்டுமே. அதனால் இந்தப் படங்களின் பெயர்களெல்லாம் கேள்விப்பட்டதுண்டே தவிர பார்க்கும் வாய்ப்பு ...ம்ஹ்ம்... கிடைக்கவேயில்லை...ஒரு சில மட்டும் ரெகுலர் ஷோவில் வெளியாகும். அசல் தமிழ்ப்படங்களைப் பார்ப்பதற்கே முன்னுரிமை கொடுத்துப் பழகிவிட்ட காரணத்தால் மேற்கூறிய படங்களெல்லாம் பெயரோடு நெஞ்சில் நிலைத்து விட்டன. பார்ப்பதற்கு மனம் செல்லவில்லை..
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
17th April 2016, 07:27 AM
#2385
Junior Member
Newbie Hubber
Originally Posted by
RAGHAVENDRA
வாசு சார்
இனிமேல் கடிகாரத்தில் காலை 10 மணியானால் போதும் அந்தக் காலம் மீண்டும் நினைவுக்கு வரும் அளவிற்கு எழுதி அசத்தி விட்டீர்கள்.
எப்படிப் பாராட்டுவது..
யூ ஆர் கிரேட்
வாசு,
சொன்னால் நம்புவாயோ என்னவோ, ராகவேந்தர் டென்ட் கொட்டாய் என்று ஒன்று ஆரம்பித்ததாய் ஞாபகம்.(இவர் ஆரம்பித்து தபேலென்று விட்டு விட்ட திரிகளின் புள்ளி விவர கணக்கை வைக்க இனி ஒரு பிலிம் நியூஸ் ஆனந்தன் பிறந்து வந்தால் மட்டுமே சாத்தியம்)
அதில் எழுத நினைத்தவை இந்த பத்து மணி காட்சிகள். நெய்வேலி அமராவதி திரையரங்கில் ,மாதம் இரு சனி ,ஞாயிறுகளில் ஆங்கில படங்கள்.(கன்ஸ் ஆப் நவரான்,டோரா டோரா டோரா,கிளியோ பாத்ரா போன்று).மீண்ட இரு சனி,ஞாயிரு நம் டப்பிங் படங்கள். கான்வென்டில் படித்த பொறியியலாள தந்தை(தாத்தா ,அப்பா,நான் எல்லோருமே கிண்டி பொறியியல் கூடமே) ஆங்கில படங்களையும்,என்.எல்.சி பாய்ஸ் ஹை ஸ்கூல் ,திடீர் குப்ப நண்பர்களை கொண்ட தனயன் டப்பிங் படங்களையும்தேர்வு செய்தது இயற்கையே. நானும் என் தந்தை வழியில் ஆரம்பம் முதல் சென்றிருந்தால்,இந்த திரி நல்ல சில எழுத்துக்களை இழக்க நேர்ந்திருக்கலாம்.
நிற்க, எனது டப்பிங் தேர்வுகள். மாய மோதிரம்(இந்தா இந்தா எடுத்துக்கோ),கப்பல் தீவு காதல் ராணிகள்,மாய மன்னன்,பல்லவ செல்வங்கள்,கோவாவில் சி.ஐ.டி 999(லட்சுமி நீச்சல் உடையில்),
நைட் கிளப் மோகினி (நான் குளு குளு தாரகை),அவளோட ராவுகள் (எல்பின்ஸ்டன்),சத்திரதண்டே ஒரு ராத்திரி (பெருத்த ஏமாற்றம்),மழு (மாமனாரின் இன்ப வெறி),தூமம் (இண்டர்வல் முடிந்து ஐந்து நிமிட சொர்க்க காட்சிகள்),நடுவில் சுதேசி கொள்கைக்காக ஜம்பு (சென்சாரின் கண்ணில் மண் பரங்கி மலை ஜோதி),ஆடதண்டே அலசா (என் வீடு எங்கே தெரியுமா ,நேரா போனா ரெண்டு மலை ,ஒரு பால் கடை, அதையும் தாண்டினா சின்ன பள்ளம், அதையும் தாண்டினா காட்டிற்கு நடுவில் பெரிய பள்ளம்,தங்குவதற்கு வா) ,தேவிகாவின் நிஜமு செப்பிதே நம்மரு, சுஜாதாவின் 60 நம்பூதிரிகளை பழி வாங்கும் வீர வரலாறு, சாவித்திரி அம்மாவாக ,சுஜாதா மகளாக ஒரு மலையாள படம்.
80 வாக்கில் டெக் வந்து விட்டதால் ,பேசாத, நல்ல பின்னணி இசை கொண்ட (ஒ யா , ஹாங் ,ஹாங் ,ஆஆஆஆஒ, டக் டக் டக் ,ஆங்கிலம் பக்கம் திரும்பி விட்டாலும், 90 களில் அறுபது நாடுகளிலும் அவர்கள் கலாசார பெருமை அறிய ஒவ்வொரு நாட்டு படங்களையும் தேர்வு செய்து ,கண்டு களித்து ,உண்டு,உயிர்த்து ,உற்றறிந்தேன்.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
17th April 2016, 07:42 AM
#2386
Junior Member
Newbie Hubber
காலம் எனக்கொரு பாட்டெழுதும் போன்ற பாடல்கள் ,மலையாள ரசிகர்களின் போற்றுதலுக்குரிய மெட்டுக்கள்.
ஞாபகம் இருக்கா ,தேவராஜன் மாஸ்டர் இதே அடித்தளம் கொண்ட இசையில் ,டி.எம்.எஸ் ஐ வைத்து கொடுத்த துலாபார சிரிப்போ,இல்லை நடிப்போ ? எனது பிடித்தங்களில் ஒன்று.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
17th April 2016, 07:45 AM
#2387
Senior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
17th April 2016, 07:57 AM
#2388
Senior Member
Diamond Hubber
Originally Posted by
Gopal,S.
காலம் எனக்கொரு பாட்டெழுதும் போன்ற பாடல்கள் ,மலையாள ரசிகர்களின் போற்றுதலுக்குரிய மெட்டுக்கள்.
ஞாபகம் இருக்கா ,தேவராஜன் மாஸ்டர் இதே அடித்தளம் கொண்ட இசையில் ,டி.எம்.எஸ் ஐ வைத்து கொடுத்த துலாபார சிரிப்போ,இல்லை நடிப்போ ? எனது பிடித்தங்களில் ஒன்று.
ஏற்கனவே எழுதியது நினைவுக்கு வந்தது கோ.
இன்றைய ஸ்பெஷல் (61)
நேற்றைய விடுமுறைக்கும் சேர்த்து 'இன்றைய ஸ்பெஷலி'ல் ஓர் அருமையான பாடலைப் பார்க்கப் போகிறீர்கள்.
உங்களுக்கு மனது சரியில்லையா? சோகமாய் இருப்பது போல் உணருகிறீர்களா? போரடிக்கிறதா? உறசாகம் குறைந்து களையிழந்து காணப்படுகிறீர்களா?
கவலையே படாதீர்கள்.
இன்றைய இந்தப் பாடலை 'புக்மார்க்' செய்து வைத்துக் கொள்ளுங்கள். தேவைப்படும் போது 'கிளிக்'குங்கள். கரை புரண்ட உற்சாக வெள்ளம் உங்களை சூழ ஆரம்பிப்பதை நீங்கள் உணரலாம்.
நான் மிக மிக அனுபவித்து ரசித்து ரசித்து எழுதிய பதிவு இது. 'இன்றைய ஸ்பெஷலி'ல் மிக மிக சந்தோஷமாக நான் இட்ட பதிவும் கூட.
படம்: துலாபாரம்
மூலக்கதை: தோப்பில் பாஸி
வசனம்: 'சவாலே சமாளி' புகழ் 'மல்லியம்' ராஜகோபால்.
இசை: தேவராஜன்
ஒளிப்பதிவு: நம்முடைய பி.என்.சுந்தரம்.
தயாரிப்பு: ராமண்ணா
இயக்கம்: வின்சென்ட்
'துலாபாரம்' படத்தில் டேம் பிக்னிக் செல்லும் கல்லூரி மாணவ மாணவிகள். இளமை பொங்கத் துள்ளும் கல்லூரி மாணவன் 'நவரசத் திலகம்' முத்துராமன். படு கியூட்டாக. இதுவரை எந்தப் படத்திலும் பார்த்திராத வகையில் படு ஸ்டைலாக, உற்சாகம் கரைபுரண்டோட செம ஜோர் அண்ணாச்சி. அருமையாக 'tuck in' செய்யப்பட்ட சிறுசிறு கட்டங்கள் அடங்கிய கைகள் மடித்துவிடப்பட்ட செக்டு ஷர்ட். அதற்கு தோதாக 'நச்'சென்று பொருந்தும் வகையில் பிளிட் வைத்து தைக்கப்பட்ட டைட் பேன்ட். பேண்டின் சைடு பாக்கெட்டுகள் இரண்டும் விரிந்து கொடுத்து கொள்ளை அழகாக இருக்கும் முத்துராமனுக்கு. முத்துராமன் அதைவிட அருமையான அழகாக, படு ஸ்லிம்மாக, கல்லூரி மாணவனைப் போல் இருப்பார் இந்தப் பாடலில்.
கண்களை கசக்கி கசக்கிப் பார்த்தேன். முத்துராமனா அது?! அடேங்கப்பா! என்ன ஒரு துள்ளல்! என்ன ஒரு உற்சாகக் கொண்டாட்டம்! என்ன ஒரு சுறுசுறுப்பு! துறுதுறுப்பு! இப்படி இவரைப் பார்ப்பதே அபூர்வம். சிருங்கார ரசம் சொட்ட சொட்ட, ஜாலியாக ஆடிக் கொண்டும் பாடிக்கொண்டும், இளசுகளைக் கலாய்த்துக் கொண்டும் மனிதர் அமர்க்கள அநியாயம் பண்ணி விட்டார் போங்கள். சில இடங்களில் எம்ஜிஆர் அவர்களை ஞாபகப்படுத்தும் விதமாக அவர் ஸ்டைலில் ஆக்ஷன்கள், கை அசைப்புகள் வேறு.
'இளம் கொடிவிட்ட பூவென இடைவிட்ட பூவுக்கு
ஆசையை விரிப்பேனா'
இந்த வரிகள் வரும் இடத்தில் பேண்ட் சைட் பாக்கெட்டுகளின் இரு பக்கங்களிலும் கட்டைவிரல்களால் கிடுக்குப் பிடி பிடித்து, ஸ்டைலாக துள்ளாட்டம் போட்டபடியே ஒரு அருமையான நடை நடப்பார் பாருங்கள் முத்துராமன். நிஜமாகவே அசந்து போவீர்கள். ராஜாங்கம் நடத்துவார் 'நவரசத் திலகம்' அவர்கள். (அப்படியே பின்னாட்களில் அவர் மகன் கார்த்திக் நடப்பது போலவே குறும்பு கொப்பளிப்பதை நன்றாக கவனிக்கலாம்! விதை ஒன்று போட்டால் துரை ஒன்றா முளைக்கும்?) அதே போல பாடலின் இடையிசையின் போது ஓட்டமும், நடையுமாக அவர் நடப்பது இன்னும் அருமை.
கல்லூரி மாணவிகளாக ஊர்வசி சாரதாவும், கட்டழகி காஞ்சனாவும். இணைபிரியா தோழிகளாக இருவரும் கைகளை இணைத்தபடியே.
முத்துராமன் தங்களை சுற்றி சுற்றி வந்து பாடும் போதெலாம் அதுவும் இரட்டை அர்த்தம் தொனிக்க அவர் பாட, அதை தோழியர் இருவரும் புரிந்து கொண்டு வெட்கப்பட்டு ஓடுவதும், திரும்பிக் கொள்வதும் சுகமோ சுகம். 'சிரிப்போ இல்லை நடிப்போ' என்று முத்து பாடும் போதெல்லாம் காஞ்சனாவும் சாரதாவும் 'இல்லை' என்பது போல ஜாலியாக தலையாட்டுமிடம் அப்படியே அள்ளும் சுகம். அதுவும் 'விழிப்போ... வலை விரிப்போ' என்னும் போது காஞ்சனா நாக்கைத் துருத்தி, சற்று வெளியே நீட்டி முத்துவை பழித்துக் காட்டி கேலி செய்யும்போது பார்க்கும் அனைவரும் அம்பேல்! என்ன அழகான பழிகாட்டல்!
'பார்க்கின்ற நெஞ்சுக்கு பால் தருவாள்
என்று பாத்திரம் படைத்தானோ'
என்ற கவிஞனின் பொல்லாக் காம வரிகளின் போது அதைப் புரிந்து கொண்டு காஞ்சனா வெட்கத்துடன் முன்னழகை மறைத்து பின்னழகைக் காட்டி, அதே சமயத்தில் சட்டென்று சாரதாவையும் திருப்பிவிடுவது ரசமான இடம்.
'அந்த பனிமுத்துத் துளிகளைப் பருகிடவே
எனை மாத்திரம் படைத்தானோ'
என்று முத்துராமன் பாடும்போது அதைப் புரிந்து கொண்டு காஞ்சனா சாரதாவிடம் 'பார்த்தியா?' என்பது போல ஒரு பார்வை பார்த்து, பின் வெளியே எதையும் காட்டிக் கொள்ளாமல் பெண்மைக்கே உண்டான வெட்க அமைதி காப்பார். காஞ்சனா கொடிகட்டுவார் இந்தக் காட்சியில்.
இப்பாடலுக்கு அர்த்தம் கேட்டீர்களானால் வண்டி வண்டியாக எழுதலாம். அவ்வளவு அர்த்தங்கள் புதைந்து கிடக்கின்றன இந்தப் பாடலில். காமரசம் சொட்டும் இப்பாடலை சற்றும் விரசமில்லாமல் எடுத்திருப்பது பாராட்டுக்குரியது. அதே சமயத்தில் கவிஞனும் பாடகனும், நடித்தவர்களும், இசையமைப்பாளரும் ஒருசேர வெற்றி பெற்ற பாடல் இது.
மலையாள தேவராஜனின் மயக்கும் இசையில் பாடல்கள் அனைத்தும் மாம்பழச் சுவை.
இப்படத்தின் டைட்டில் பாடல் வாழ்விலே மறக்க முடியாத மகோன்னதப் பாடல்.
சாரதாவும், காஞ்சனாவும் 'கல்லூரி' விழாவில் பாடும்
'வாடி தோழி கதாநாயகி'
ஜேசுதாசின் எவர்க்ரீன் பாடல்
'காற்றினிலே பெருங்க காற்றினிலே'
பாடகர் திலகமும், பாடகியர் திலகமும் அருமையாகப் பாடி அமைதியாக நம் கண்களில் நம்மையறியாமலேயே கண்களில் நீரை வரவழைத்த, நம் நெஞ்சில் ஆழ ஊடுருவிய காவியப்பாடல்
'பூஞ்சிட்டுக் கன்னங்கள் பொன்மணி தீபத்தில்
பால் பொங்கல் பொங்குது கண்ணீரிலே'
'சங்கம் வளர்த்த தமிழ் தாய்ப் புலவர் காத்த தமிழ்'
என்று நம் மனதில் ஆழமாய் ஊறிவிட்ட பாடல்கள்.
இன்னொன்று.'ஊர்வசி' விருது என்றாலே சாரதாதான் என்று உடனே நாம் நினைக்குமளவிற்கு மலையாளத்திலேயும்,தமிழிலேயும் 'துலாபாரத்'தில் அருமையாக நடித்து சிறந்த தேசிய நடிகை விருது
பெற்ற, நடிகர் திலகம் தமிழில் நாயகியாக 'குங்கும'த்தில் அறிமுகப்படுத்திய சாரதாவை மறக்க முடியுமா?
சரி! 'இன்றைய ஸ்பெஷல்' பாடலுக்கு வந்து விடுவோம்.
பாடகர் திலகத்தின் பட்டை கிளப்பும் 'கணீர்'க் குரலில்,
இனி பாடலின் வரிகள்
சிரிப்போ இல்லை நடிப்போ
இது சிங்காரப் பொன்னூஞ்சல் அழைப்போ
விழிப்போ வலை விரிப்போ
எனை விருந்து பருகச் சொல்லும் துடிப்போ
சிரிப்போ இல்லை நடிப்போ
இது சிங்காரப் பொன்னூஞ்சல் அழைப்போ
விழிப்போ வலை விரிப்போ
எனை விருந்து பருகச் சொல்லும் துடிப்போ
சிரிப்போ ஹோஹோஹோஹஹோ
கோபுரக் கலசத்தைக் கூந்தலில் மறைக்கும்
கோலத்தை ரசிப்பேனா
கோபுரக் கலசத்தைக் கூந்தலில் மறைக்கும்
கோலத்தை ரசிப்பேனா
இளம் கொடிவிட்ட பூவென இடைவிட்ட பூவுக்கு
ஆசையை விரிப்பேனா
இளம் கொடிவிட்ட பூவென இடைவிட்ட பூவுக்கு
ஆசையை விரிப்பேனா
அந்த ஆற்றினில் மிதப்பேனா
ஆ....ற்றினில் மிதப்பேனா
சிரிப்போ இல்லை நடிப்போ
இது சிங்காரப் பொன்னூஞ்சல் அழைப்போ
விழிப்போ வலை விரிப்போ
எனை விருந்து பருகச் சொல்லும் துடிப்போ
சிரிப்போ ஹோஹோஹோஹஹோ
ஊர்வலம் போகின்ற தேவியர் மேனியை
நான் வலம் வருவேனா
ஊர்வலம் போகின்ற தேவியர் மேனியை
நான் வலம் வருவேனா
அவர் ஒரு பக்க ஜாடையை கலைவட்ட மேடையை
ஓவியம் வரைவேனா
அவர் ஒரு பக்க ஜாடையை கலைவட்ட மேடையை
ஓவியம் வரைவேனா
அதில் என் உள்ளத்தை வரைவேனா
உள்...ளத்தை வரைவேனா
சிரிப்போ இல்லை நடிப்போ
இது சிங்காரப் பொன்னூஞ்சல் அழைப்போ
விழிப்போ வலை விரிப்போ
எனை விருந்து பருகச் சொல்லும் துடிப்போ
சிரிப்போ....ஹோஹோஹோஹோ
பார்க்கின்ற நெஞ்சுக்கு பால் தருவாள்
என்று பாத்திரம் படைத்தானோ
பார்க்கின்ற நெஞ்சுக்கு பால் தருவாள்
என்று பாத்திரம் படைத்தானோ
அந்த பனிமுத்துத் துளிகளைப் பருகிடவே
எனை மாத்திரம் படைத்தானோ
அந்த பனிமுத்துத் துளிகளைப் பருகிடவே
எனை மாத்திரம் படைத்தானோ
இதுதான் வாழ்க்கை என்றுரைத்தானோ
வா...ழ்க்கை என்றுரைத்தானோ
சிரிப்போ இல்லை நடிப்போ
இது சிங்காரப் பொன்னூஞ்சல் அழைப்போ
விழிப்போ வலை விரிப்போ
எனை விருந்து பருகச் சொல்லும் துடிப்போ
ஹஹ்ஹஹ்ஹஹ்ஹ ஹோ.
Last edited by vasudevan31355; 17th April 2016 at 09:20 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
17th April 2016, 08:12 AM
#2389
Junior Member
Newbie Hubber
திருச்சியில் நான் படித்த (.p .u .c )ஒரு வருடம்(1974-1975),திருச்சி ராஜா திரையரங்கில் 30 சிவாஜி படம் காலை காட்சி பார்த்துள்ளேன். (நண்பன் ராஜா குண சிங் உடன்.பஞ்சாபி அல்ல திருநெல்வேலி பாத்திரக்கடை நாடார்)அருணோதயம்,தங்கைக்காக,எங்க ஊர் ராஜா, வளர்பிறை,பார்த்தால் பசி தீரும்,தங்க மலை ரகசியம் இப்படி சில)
அருணோதயம் பார்த்து வெறுத்து போனேன். சிவாஜி-சரோஜாதேவி,மதுரை திருமாறன் ,கே.வீ.மகாதேவன் இப்படி பல திறமைசாலிகள் உழைப்பு வீண். சிவாஜி கொள்ளை அழகு. திராவிட மன்மதனின் அழகு பொற்காலம். (1968-1974)1971 இல் இருதுருவம்,தங்கைக்காக,அருணோதயம் ,குலமா குணமா(ஓடி விட்டதால் மன்னிக்கலாம்),பிராப்தம் என்று அவர் அழகின் வீரியத்தை வீணடித்த படங்கள். சி.வீ.ஆர் வாழ்க. சுமதி என் சுந்தரி வந்து அழகு கோட்டையை கொடி நாட்ட வைத்தது. தொடர்ந்த சவாலே சமாளியில் வேட்டி கட்டிய திராவிட மன்மதனை ஆயுட்காலம் முழுதும் கண் கொட்டாமல் ரசிக்கலாம். வேட்டிக்கே ஒரு தனி களை வந்து விடும்.(சங்கு மார்க் லுங்கிகளுக்கு எங்க மாமா, பைசன் பனியன்களுக்கு ஊட்டி வரை உறவு)
அருணோதயத்தின் ஆச்சர்யங்களில் ஒன்று. தங்கை கணவனை திருத்த திட்டமிட்டு (கொக்கு தலையில் வெண்ணை-உபயம் முக்தா சூத்திரம்) தன்னுடைய பெயரை கெடுத்து கொண்டு ,உலகம் தன்னை பழிக்கிறதே என்ற கதாநாயக புலம்பல்.(தண்ணி பாம்புக்காக படம் முழுதும் மகுடி)
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
17th April 2016, 08:17 AM
#2390
Junior Member
Newbie Hubber
வாசு,
எப்படி ரஜினியின் அத்தனை படங்களின் நடிப்பும் ,உத்தம புத்திரன் விக்ரம்,நவராத்திரி டீ .ஐ.ஜி ,எங்கள் தங்க ராஜா பைரவனிடம் மையம் கொண்டே இயங்குகிறதோ , அதே போல கார்த்திக்கின் அத்தனை படங்களின் ஈர்ப்பு நடிப்பும் முத்துராமனின் துலாபாரம்,உறவு சொல்ல ஒருவன் (ஹை கவிதா, ஹ ஆங்)நடிப்பை மையம் கொண்டது.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
Bookmarks