Page 31 of 337 FirstFirst ... 2129303132334181131 ... LastLast
Results 301 to 310 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

  1. #301
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    முடிவைத் தவிர வேறு எங்கும் அழாமல் நம் எல்லோரையும் அழவைத்த நாகேஷ். 'ஆடி அடங்கும் வாழ்க்கை'யை விடவும். வித்தியாச விஸ்வரூபம். ஜெயகாந்தனின் அழியாத ஓவியம். உள்ளம் உடைந்து எவரும் அழாமல் இருக்கவே முடியாது. இவன் யாருக்காக அழுதனோ ஆனால் நம்மை நெஞ்சடைத்து அழ வைத்துக் கொண்டே இருக்கிறான்.

    உருவத்திலே இவன் மனிதன்
    கொண்ட உள்ளத்திலே ஒரு பறவை
    பருவத்திலே ஒரு குழந்தை
    நெஞ்சில் பாசத்தில் உலகத்தின் தந்தை

    தேஸட்டனின் ஆதி கால 'பொம்மை'க் குரல். நாகேஷின் நிழலுருவங்கள் நெஞ்சில் என்றும் நிழலாடும்.

    நடிகர் திலகமே தெய்வம்

  2. Likes Russellmai, chinnakkannan liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #302
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    hi good morning all..

    ore nagesh collections aa irukku...தாங்க்ஸ் வாசு, மதுண்ணா..

    இருந்தாலும்

    உன்னைத்தொடுவது இனியது மறக்க முடியுமா என்ன

    கண்ணே பூர்வ ஜன்மம்...

    ஹப்புறம் திக்குவாயாக நீல வானத்தில் நகைச்சுவை..

    ம்ம் அப்புறம் வர்றேன்..

  5. #303
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கிறுக்கு நாகேஷ் அழகு ஜெயந்தியிடம் திக்குவாய் கொண்டு திக்கி திக்கி தப்புத் தப்பாக பாடும் பாடல். வழக்கமான ராகவன் குரலில்.

    என்ன இல்லை எனக்கு
    எதுதான் உந்தன் கணக்கு
    சின்ன வயசு சிரிக்கிற மனசு
    டிப்டாப் கண்டிஷன் ஒடம்பு

    நாகேஷின் புது புராணம்

    பகல் கொள்ளைக்காரன் வால்மீகி
    அவன் பாரத்க் கதையை எழுதலையா

    பாவலனாம் கவி காளிதாசன் ஒரு பார்த்திபன் கனவை வரையலயா?

    (நடுவில் திக்கும் போது 'மன்னிச்சுக்க ...ஸ்ட்ரக் ஆய்ப் போச்சு... ஆரம்பத்திலிருந்து வரேன்' என்று ரிப்பீட் வேற)

    ஜெயந்தி 'எல்லாம் தலைகீழாய் சொல்றீயே' என்றதும்,

    'அது நான் சிரசானனம் போட்டுகிட்டு படிச்சது'

    என்று நாகேஷ் சமாளிப்பது ஆஹா! ஓஹோ! பேஷ்! பேஷ்!

    Last edited by vasudevan31355; 28th September 2015 at 10:26 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  6. Likes chinnakkannan, Russellmai liked this post
  7. #304
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    //ஹப்புறம் திக்குவாயாக நீல வானத்தில் நகைச்சுவை//

    அதான் போட்டுகிட்டு இருக்கோம்ல. அவசரம்...எல்லாத்துலேயும் அவசரம்.

    அது நீலவானம் இல்ல சின்னா!. அன்னை இல்லம்.

    ஆமா! கை சரியாயிடுச்சா? வலி பரவாயில்லையா? ரெஸ்ட் எடுங்க சின்னா! நேத்து நைட் செம அரட்டை இல்லே....என்ஜாயிபிளா இருந்தது. தேங்க்ஸ்.
    நடிகர் திலகமே தெய்வம்

  8. Likes chinnakkannan liked this post
  9. #305
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Hot Discussion Topics

    A brief study on the Cholas (Cholar) of the Medieval Period
    Tamils of Tamil Nadu should unite as "Tamilians" - and not under their 'Caste Names'
    Thala Ajith's 56th Film-Vedhalam-Veeram Siva-AMRathnam - Anirudh - Winning combo
    Few Basics in preventing the death of Tamil Language & Culture in Tamil Nadu itself 2
    A brief historical study of Thiruppathi Venkateswarer temple
    Battle of the Brick !
    ஓவியப் போட்டி
    ஊதாரி
    மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5
    Brief historical study of Mathurai (Madurai) Meenaakshi Amman Temple
    "Super Star" Rajinikanth in & as "கபாலி" - Ranjith**Santhosh Narayan**
    Chicken Quesadilla - recipe
    Tamil movie Reviews - Yatchan?
    A brief study on the Pandiyas (Paandiyar) of the "early" Period of Tamil Nadu
    A brief study on the Pandiyas (Paandiyar) of the "early" Period of Tamil Nadu
    I am the song the best composers of India. Flac, lossless, Wav
    A brief study on the Paandiya kings after the fall of Madurai to Muslim Invaders
    Few Basics in preventing the death of Tamil Language & Culture in Tami Nadu itself
    நட்புக்கு அப்பால்!
    Evolution of Saivaism and it's development in Tamil Nadu
    A Brief Study on the Actual Age of the Sanskrit Raamaayana of Sage/Poet Vaalmiki
    A Brief Study on the Actual Age of the Sanskrit Raamaayana of Sage/Poet Vaalmiki
    “Thirukkural” an ancient Tamil treatise on Code of Ethics
    வனஜா என் தோழி!
    A brief study on the Tamil Dalits (Untouchables) of Tamil Nadu
    The Seaport Cities of Kotkai, Thondi & Kaayalpattinam of the Paandiyan Kingdom
    Demise of Ex-President of India - a Tamilian of Tamil Nadu
    A brief study on the Pandiyas (Paandiyar) of the post third Sangam Period
    Re-name the Chennai Airport as "Rajaraja Cholan International Airport"
    A brief study on the Tamil Chettiyaars (Vanikars) of Tamil Nadu
    A brief study on the Tamil Thevars (Devars) of Tamil Nadu
    A brief historical study of Singapore (A.D.1025-1275)
    Where I Can Download Telugu & Hindi Music
    A brief study on the Tamil Vanniyar of Tamil Nadu
    A brief study on the Tamil Vanniyar of Tamil Nadu
    விளங்கவில்லை விமலாவிற்கு!
    A brief study on the Tamil Naadaar (Naadaalvaar) of Tamil Nadu
    A brief study on the Tamil Gounders (Tamil Kaamundan) of Tamil Nadu
    A brief study on the Tamil Gounders (Tamil Kaamundan) of Tamil Nadu
    No Murder Tonight
    A brief study on the 63 - Tamil Saiva Saints (Naayanmaars) of Tamil Nadu and Kerala
    A brief study on the 63 - Tamil Saiva Saints (Naayanmaars) of Tamil Nadu and Kerala
    Best of tamil cinema in 2015
    My Choice – Raga based Songs
    Tamil Nadu - Studies in it's History, Culture, and Traditions
    Hotels in Kanyakumari
    Introducing a food blogger
    நன்றே செய் ! அதுவும் இன்றே செய் !
    A Brief Study on the Significance of Thaali among the Tamils
    நடிகர் திலகமே தெய்வம்

  10. Likes rajeshkrv, chinnakkannan liked this post
  11. #306
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //ஆமா! கை சரியாயிடுச்சா? வலி பரவாயில்லையா? ரெஸ்ட் எடுங்க சின்னா! நேத்து நைட் செம அரட்டை இல்லே....என்ஜாயிபிளா இருந்தது. தேங்க்ஸ்.// konjam ippo thaevalai. Me too enjoyed the arattai. Thanks for the jeyanthi song. Will come after some time.

  12. #307
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    சிக்கா...

    சமீபத்தில் இந்தப் பாட்டை ரெஃபர் செஞ்சு எதையோ சொன்னீங்க இல்லையோ ?

    மறுபடியும் ஹீரோயின் யாருன்னு கேட்டு வாசுஜியின் ரத்த அழுத்தத்தை அதிகமாக்காதீங்க.. அது கன்னட மஞ்சுளாவேதான்


  13. Thanks chinnakkannan thanked for this post
    Likes Russellmai liked this post
  14. #308
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //சமீபத்தில் இந்தப் பாட்டை ரெஃபர் செஞ்சு எதையோ சொன்னீங்க இல்லையோ ?

    மறுபடியும் ஹீரோயின் யாருன்னு கேட்டு வாசுஜியின் ரத்த அழுத்தத்தை அதிகமாக்காதீங்க.. அது கன்னட மஞ்சுளாவேதான்// நன்றி மதுண்ணா.. எப்படி உங்களுக்கு மட்டும் கிடைக்குது..

    ஹப்படியே உன் கண்களிலோ கனிகளும் கொடுங்க..

  15. #309
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்

    (நெடுந்தொடர்)

    39

    'உள்ளங்கள் பலவிதம்...எண்ணங்கள் ஆயிரம்'

    'திருமகள்'



    இன்றைய பாலாவின் தொடரில் கோவிந்தராஜா பிலிம்ஸ் 'திருமகள்' (1971) படத்தில் மிக மிக அற்புதமான ஒரு அழகான பாடல். ஏ.எஸ்.ஏ.சாமி இயக்கத்தில் 'திரை இசைத் திலகம்' கே.வி.மகாதேவன் இசையில் மலர்ந்த மொ(மெ)ட்டு. கவிஞரின் கை வண்ணத்தில்.



    ஜெமினி, ஏ.வி.எம்.ராஜன், சிவக்குமார், பத்மினி, லஷ்மி, நாகேஷ், மேஜர், குமாரி பானுமதி, எஸ்.வரலஷ்மி, ஜெயகுமாரி நடித்த இத்திரைப்படம் தனக்கு நிச்சயமான காதலன் (அத்தான் உறவு முறைதான்) தற்செயலாக விபத்தில் இறந்துவிட, அவன் தயவில் படித்து வரும் இளைஞன் ஒருவனிடம் தன்வசப்பட்டு கற்பைப் பறி கொடுப்பதால் ஏற்படும் சிக்கல்களைப் படம் பிடித்தது.

    ஜெமினி பத்மினி ஆதர்ஷ தம்பதிகள். ஜெமினிக்குத் தங்கை லஷ்மி. பத்மினிக்கு தம்பி ஏ.வி.எம்.ராஜன். வக்கீலுக்குப் படிக்கும் ராஜனுக்கு அக்கா பெண் லஷ்மி மீது காதல். லஷ்மிக்கும், அவ்வாறே அத்தானிடம் காதல். ராஜன் தன்னுடன் படிக்கும் ஏழையான சிவக்குமாரை தன்னுடன் தங்க வைத்து அவருக்கு சகல விதங்களிலும் உதவுகிறார். அவர் ஏழை என்ற தாழ்வு மனப்பான்மை வராமல் பார்த்துக் கொள்ளச் சொல்லி லஷ்மியிடமும் கூறுகிறார். இதனால் லஷ்மி சிவக்குமாரிடம் சகஜமாகப் பழகுகிறார். இதை ராஜன், பத்மினி வேறு மாதிரி புரிந்து கொள்கின்றனர். ராஜன் ஒருமுறை சிவாவிடம் 'நீ லஷ்மியைக் காதலிக்கிறாயா?' என்று கேட்டுவிட, துடிதுடித்துப் போகிறார் சிவா. 'என்னை எப்படி சந்தேகப்படப் போயிற்று?' என்று குமுறுகிறார். அவரது நல்ல உள்ளத்தைப் புரிந்து கொண்ட ராஜன் அவரிடம் மன்னிப்பும் கேட்கிறார். லஷ்மியின் தூய்மையான உள்ளத்தை அண்ணி பத்மினியும் புரிந்து கொள்கிறார்.

    இப்போது ராஜனுக்கும், லஷ்மிக்கும் திருமணம் நடைபெறப் போகிறது. இதற்கிடையில் நீச்சல் குளத்தில் குளிக்கப் போகின்றனர் நண்பர்கள். அங்கு எதிர்பாராவிதமாக நீச்சலுக்காக டைவ் செய்யும் போது அடிபட்டு இறந்து விடுகிறார் ராஜன்.

    லஷ்மி மற்றும் அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாகின்றனர். ஜெமினி சிவாவை ஜூனியர் வக்கீலாக அங்கேயே தங்க வைத்து விடுகிறார். விதவை போன்று இளம் லஷ்மியும், இளமையான சிவக்குமாரும் ஒரே வீட்டில் இருப்பதை ஏற்க மறுக்கிறார் பத்மினி. அவர் பயந்தது போலவே ஒரு குளிர் இரவில் பஞ்சும் நெருப்பும் தங்களையறிமலேயே பற்றிக் கொள்கின்றன. குளுமையில் இளமை வலிமையாக வளமை வேலையைக் காட்டிவிட லஷ்மி கர்ப்பமாகிறார்.

    அப்புறம் லஷ்மி, சிவக்குமாரின் குற்ற உணர்ச்சி. சிவாவின் அம்மா வரலஷ்மி கல்யாணத்திற்கு எதிர்ப்பு, கர்ப்ப விஷயம் வெளியே தெரிவதற்கு முன் லஷ்மிக்கு பத்மினி சிவக்குமாருடன் கல்யாண ஏற்பாடு, பல போராட்டங்களுக்கிடையே இறுதியில் திருமணம், செய்த தவறுக்கு லஷ்மி பிரசவ நேரத்தில் அனைவருக்கும் தான் செய்தது துரோகம் என்று கருதி ஒரு லெட்டர், உயிருக்குப் போராட்டம், இறுதியில் உயிர் பிழைப்பு முடிவாக சுபம் என்று படம் முடியும்.

    நிச்சயமான ஒரு பெண்ணுடன் வேற்று இளைஞன் ஒருவன் பழகினால் என்னென்ன தீங்குகள் விளையும் என்பதை பகிரங்கமாக எடுத்துக் காட்டும் கதை. வசனம் ஆரூர்தாஸ்


    ஓரியண்டல் பிக்சர்ஸ் அளித்து, 'கோவிந்தராஜா பிலிம்ஸ்' தயாரித்த இப்படத்தில் 'திரை இசைத் திலக'த்தின் பாடல்கள் மறக்க முடியாதவை.

    'புன்னகையில் பூப்பூக்கும் திருமகளே'

    'காலாலே நிலம் அளந்து' (லஷ்மி, ராஜன் அருமையான் டூயட்)

    தொடரின் பாடலான,

    'உள்ளங்கள் பலவிதம்...எண்ணங்கள் ஆயிரம்'

    என்று பவர்ஃபுல்லான பாடல்கள்.

    லஷ்மி, அவர் அத்தான் ஏ.வி.எம்.ராஜன் இருவரும் ராஜனின் தயவில் படிக்கும் இளைஞனான சிவக்குமாருடன் பிக்னிக் போவது போன்ற காட்சி. (படத்தின் ஒளிப்பதிவாளர் நம் 'ஜம்பு' கர்ணன் தான்)



    அப்போது மூவரும் பாடும் பாடல் காட்சி.

    உள்ளங்களையும், உள்ளங்களால் ஏற்படும் உறவுகளையும் அழகாகச் சித்தரிக்கும் பாடல்.

    படத்தில் ராஜன் இறந்துவிட, சிவக்குமாரிடம் லஷ்மி தன்னை இழப்பது போன்ற காட்சி உண்டு. இதைக் கவிஞர் படத்தின் முன்பாதியில் வரும் இந்தப் பாட்டிலேயே நாசூக்காக எடுத்துரைத்து விடுவார்.


    'கிழக்கே ஓடும் நதி
    தெற்கேயும் பாயலாம்
    கிளி உண்ணக் கனிந்த கனி
    அணிலுக்கும் போகலாம்'


    என்ற வரிகளின் மூலமாக.

    அருமையான பேஸ் கிடார் இசையுடன் தொடங்கும் இப்பாடலை சுசீலா தன் இனிய குயில் குரலால் தொடங்க, 'பாடகர் திலகம்' அம்சமாகப் பின்னாலேயே வர,

    இவர்கள் இவருக்குப் பின்னால் வந்து நம் 'பச்சிளம் பாலகன்' பாலா சிவக்குமாருக்கு மழலையை விட குழைவான குரல் தந்து அசத்த,

    நமக்குக் கிடைத்ததோ என்றும் திகட்டாத விருந்து.

    பாடும் மூவரின் பங்களிப்பும் மிக அழகாக இருக்கும். சமமாக இருக்கும். அவரவர்களும் அவரவர் பாணியில் அசத்துவார்கள்.



    பாடலில் லஷ்மி வெகு இயல்பு. அழகு. ராஜன் அநியாத்துக்கு நடிகர் திலகத்தைக் காப்பியடிப்பார். பேன்ட் பாக்கெட்டுக்குள் விரல் கொக்கி, அணைக்கட்டு மேல் நடை, உடை, டான்ஸ் மூவ்ஸ் என்று தன்னை நடிகர் திலகமாகவே நினைத்துக் கொண்டு அநியாயத்துக்கு எரிச்சல் கிளப்புவார். சிவக்குமார் அமெச்சூர். பாடல் முழுதும் பார்க், அணைக்கட்டு என்று அவுட்டோரில் படம் பிடிக்கப் பட்டிருப்பது ஆறுதல்.

    பாடல்கள் பலவிதம். இந்தப் பாடல் ஒரு தனிரகம்.




    உள்ளங்கள் பலவிதம்
    எண்ணங்கள் ஆயிரம்
    உறவுகள் வளர்வதற்கு
    மனம்தானே காரணம்

    உள்ளங்கள் பலவிதம்
    எண்ணங்கள் ஆயிரம்
    உறவுகள் வளர்வதற்கு
    மனம்தானே காரணம்
    உள்ளங்கள் பலவிதம்

    மலையில் பிறந்த நதி
    கடலுக்குப் போவதேன்
    மண்ணில் பிறந்த மலர்
    கூந்தலில் வாழ்வதேன்

    மலையில் பிறந்த நதி
    கடலுக்குப் போவதேன்
    மண்ணில் பிறந்த மலர்
    கூந்தலில் வாழ்வதேன்

    எங்கோ பிறந்தவர்கள்
    இங்கே இணைவதேன்

    என்னவோ சொந்தமெல்லாம்
    கண்ணிலே தெரிவதேன்

    எங்கோ பிறந்தவர்கள்
    இங்கே இணைவதேன்

    என்னவோ சொந்தமெல்லாம்
    கண்ணிலே தெரிவதேன்

    உள்ளங்கள் பலவிதம்
    எண்ணங்கள் ஆயிரம்

    உறவுகள் வளர்வதற்கு
    மனம்தானே காரணம்
    உள்ளங்கள் பலவிதம்

    கிழக்கில் ஓடும் நதி
    தெற்கேயும் பாயலாம்
    கிளி உண்ணக் கனிந்த கனி
    அணிலுக்கும் போகலாம்

    நதிவழி போவது போல்
    மனவழி போகலாம்

    நடக்கும் வழிகளெல்லாம்
    நல்வழி ஆகலாம்

    நதிவழி போவது போல்
    மனவழி போகலாம்

    நடக்கும் வழிகளெல்லாம்
    நல்வழி ஆகலாம்

    உள்ளங்கள் பலவிதம்
    எண்ணங்கள் ஆயிரம்
    உறவுகள் வளர்வதற்கு
    மனம்தானே காரணம்

    மறைத்தால் மறைவதில்லை
    மங்கையின் கனவுகளே

    பிரித்தால் பிரிவதில்லை
    வளர்ந்திடும் உறவுகளே

    மறைத்தால் மறைவதில்லை
    மங்கையின் கனவுகளே

    பிரித்தால் பிரிவதில்லை
    வளர்ந்திடும் உறவுகளே

    அடித்தால் அழுவதில்லை
    ஆனந்த நினைவுகளே

    அன்பில் இணைந்தவர்கள்
    வார்த்தையில் ஊமைகளே

    அடித்தால் அழுவதில்லை
    ஆனந்த நினைவுகளே

    அன்பில் இணைந்தவர்கள்
    வார்த்தையில் ஊமைகளே

    உள்ளங்கள் பலவிதம்

    எண்ணங்கள் ஆயிரம்

    உறவுகள் வளர்வதற்கு
    மனம்தானே காரணம்

    உள்ளங்கள் பலவிதம்

    அஹ்ஹோஹோஹோஹோஹஹோ
    அஹ்ஹோஹோஹோஹோஹஹோ


    Last edited by vasudevan31355; 28th September 2015 at 01:44 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  16. Likes Russellmai, chinnakkannan, madhu liked this post
  17. #310
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வெற்றிக்கு ஒருவன்

    தோரணம் ஆயிரம் பாடல்

    பாடல் ஆரம்பித்து 37 விநாடிகள் வரை சூறாவளியைப் போன்ற இசையும் இயற்கை மிரட்டலை சார்ந்த
    ஒளிப்பதிவும் படம் பார்க்கும் எந்த ஒரு நபரையும் இருக்கையில் சற்று அழுத்தியும் நெஞ்சை நிமிர்த்தியும் பார்க்க வைக்கும்.

    ஒரே பிரேமில் பல முகங்ளைக் காட்டும் (MIRROR SHOT)ஆரம்ப ஷாட், அது டைரக்ஷன் SPமுத்துராமன் என்று
    அடையாளம் காட்டவோ?

    நீள செவ்வகத்தை குறுக்காக ஒரு கோடு கிழித்து (இடது கீழ் புறம் ,வலது மேல்புறம்)மேல் பகுதியில் ஆகாயமாகவும் கீழ் பகுதி புல்தரையாகவும் பார்க்கும்படி காமிரா கோணத்தில் அந்த பாடலின் ஆரம்பம் ஒளிப்பதிவு செய்யப்பட்டு பாடல் முழுவதும் வெவ்வேறு கோணங்களில் மிரட்டலாக படம் காட்சியாக்கப்பட்டிருக்கும்.



    லாலலா லாலலா லாலலா லாலலா
    லால லால லாலலா லால லால லாலலா

    தோரணம் ஆடிடும் மேடையில் நாயகன் நாயகி
    MIRROR SHOT
    ஸ்ரீப்ரியா பாடி ஆட.,நாயகன் என்னும் வார்த்தை வரும்போது சரியாக அந்த பிரேமுக்குள் நுழைவார்.
    தோரணம் ஆடிடும் மேடையில்
    நாயகன் நாயகி
    ௯ஸ்ரீப்ரியா ஆடிக்கொண்டே வர
    நடிகர்திலகம் மெல்ல நடந்து வர
    பின் நெடிய அந்த மரம்,விரிந்து பரந்த ஆகாயம் எல்லாம் அடக்கிய ஒரே பிரேம்.
    SUPER SNAP
    தரையை ஒட்டியோ அல்லது தரையிலிருந்து அதிக உயரம் இல்லாமல் காமிராவை வைத்து படம் பிடித்திருக்கலாம்.GLARE இல்லாமல் பளிச்சென இருப்பதுதான் சிறப்பு.

    மேளமும் ராகமும் நாலுபேர் ராஜ்ஜியம் சேருதே வாழ்விலே ஆனந்தம்
    (தோரணம்

    பக்கம் இருந்து காட்சியை படம் பிடித்த காமிரா அப்படியேபின்னால் சென்று லாங்சாட்டுக்கு மாறி மறுபடியும் பக்கம் வந்து படம் பிடித்து பின் லாங்ஷாட்டுக்கு மாறி மறுபடியும் பக்கம் வந்து படம் பிடித்திருப்பார் ஒளிப்பதிவாளர் பாபு. இந்த பாடலை வெவ்வேறு கோணங்களில் படம் பிடித்து பாடலை சிறப்பாக்க வேண்டும் என்பதில் அவரின் சிரத்தைதெரியும்.


    ஜோடி இது போலிருந்தால் ஆகா என பாராட்டுவார்

    ஓங்கி வளர்ந்த மரங்களை கொண்ட அந்த வனப்பகுதியை காமிரா காட்டுவது அழகு.
    வாழ்க என பண்பாடவா!வாழ்வோம் சுகம் நூறாகவே
    நாம் இன்று இங்கு பண்பாடவே
    வீணையின் நாதமும் பூவிலே வாசமும்போலவே சேர்ந்து நாம் வாழுவோம் வாழுவோம்
    (தோரணம்
    இருவரும் நடந்துவர காமிராவும் நகர்ந்து கொண்டே வரும் அந்த
    கிரேன் ஷாட் சூப்பர்.மலைப் பிரதேச அழகின் செழுமை கண்களுக்கு குளிர்ச்சி.

    ஆராரோ ஆராரிஆரோ ஆராரோ ஆராரிஆரோஆராரிராரி ஆரி ஆரி ஆரி ஆராரி ராரி ஆராரிரோ ஆராரி ஆரோ ஆராரோ
    தாலாட்ட வைக்கும் ஹம்மிங்.
    தாளம் போடவும் வைக்கும்.



    பேரன் கொஞ்ச வேண்டும் என்று அப்பா எந்தன் காதில் சொன்னார்
    நடிகர்திலகத்தின் அழகு மிகுந்த பாவனையை காட்டும் குளோசப் ஷாட்.




    பேத்தி கொஞ்ச வேண்டும் என்று அத்தை எந்தன் காதில் சொன்னார்
    போகட்டுமே ரெண்டும் பெத்துக்கொடு
    ரெண்டுதான்!போதுமே!அளவுடன் வாழ்வதே நாளுமே நல்லதே
    வாழ்விலே வாழ்விலே
    (தோரணம்

  18. Likes Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •