Page 35 of 337 FirstFirst ... 2533343536374585135 ... LastLast
Results 341 to 350 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

  1. #341
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வாசு சார்
    நீரும் நெருப்பும் படத்தைப் பொறுத்த மட்டில் மெல்லிசை மன்னர் இன்னும் பாடல்களில் கவனம் செலுத்தியிருக்கலாம் எனத் தோன்றுவது இயல்பே. ஆனால் உற்று கவனித்தால் அவரிடம் சொல்லப்பட்டிருக்கக் கூடிய காட்சியமைப்பை மனதில் வைத்தே அவர் பாடலை இசையமைத்திருப்பது நன்றாகத் தெரியும். பாடலின் இசைக்கேற்றவாறு காட்சியமைப்பு இருந்திருந்தால் இந்தக குறை தோன்றியிருக்காது.

    இது என் தனிப்பட்ட கருத்து.

    அப்படியும் இந்தப்பாடல் காட்சியில் அவர் ஃப்யூஷன் எனப்படும் கலப்பிசை அடிப்படையில் பாடலை அமைத்திருப்பதை உணராலம்.

    மெட்டு சற்று ஏமா்ற்றினாலும் பாடலின் பின்னணி இசை ஏமாற்றவில்லை.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. Thanks vasudevan31355 thanked for this post
    Likes Russellmai, vasudevan31355 liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #342
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like

    முத்து அடிக்கும் கூத்து.1

    நம்ம நவரசத் திலகம் திடீர் திடீரென பிகர்களுடன் பிக்னிக் போய் வியக்கத் தக்க வகையில் பாடி ஆடிடுவார். அப்படி சில பாடல்களைப் பார்ப்போம்.

    'பத்துமாத பந்தம்' படத்தில் பெரிய குரூப்பாக சரோஜாதேவி, ராஜஸ்ரீ, மனோரமா, மற்றும் இளம் சிட்டுக்களுடன் முத்துராமன் டிப்-டாப்பாக உடை அணிந்து அதுவும் கலரில் பாடி ஆடுவது கொஞ்சம் வியப்புத்தான். தேங்காயும் தொடை தட்டி உடன் ஆடுவார். முத்துராமனுடன் ஆடும் சிட்டுக்களில் ஒருவர் பின்னால் புகழ் பெற்ற நடிகையானார். சங்கர் கணேஷ் இசையில் பாடல் அமர்க்களம்.

    Last edited by vasudevan31355; 29th September 2015 at 09:53 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  5. #343
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like

    முத்து அடிக்கும் கூத்து.2

    இங்கே துலாபாரத்தில் முத்துராமன் காஞ்சனா, சாரதா சகிதம் கல்லூரி மாணவ மாணவிகளுடன் உல்லாசப் பயணம் போய் அட்டகாசமான பாடல் பாடி குறும்புத்தனத்தில் நம்மைக் குதூகலப் படுத்துவார். சற்றே விலகி நின்று முத்துவின் பாடலை ரசிக்கும் சாரதா, காஞ்சனாவின் கூச்சம் கலந்த இயல்பான வெட்கம் அருமை.

    பாடகர் திலகத்தின் திறமைக்கு ஒரு சான்று.

    முத்தான முத்துராமனின் பாடல். என் நெஞ்செமெல்லாம் நிறைந்து எந்நாளும் சுவை கூட்டி மகிழ்ச்சியடையச் செய்யும் பாடலும் கூட. தேவராஜன் தந்த தேவ ராகங்களில் ஒன்று.

    Last edited by vasudevan31355; 29th September 2015 at 09:54 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  6. #344
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like

    முத்து அடிக்கும் கூத்து.3

    இங்கே முத்து டூர் போக வில்லை. வசந்த மாளிகை நடிகர் திலகத்தின் 'ஒரு கிணத்தை ஏந்துகிறேன்' ரேஞ்சிற்கு இளம் மொட்டுக்களுடன் ஏழெட்டுப் பெண்கள் பக்கம் இருக்க அவர்களுடன் ப்ளே-பாயாக நீச்சல் குளத்தில் சுறுசுறு ஆட்டம். இதுவும் வண்ணமே.

    ஷப்னம், ரேணுகா, மீனா, விஜயலட்சுமி என்று துணை நடிகைகளுடன் 'பதிலுக்கு பதில்' தரும் 'ஜலசா'ராமன். ஜலக்கிரீடை ராமன்.(இந்தப் படத்தில் ஜெய்சங்கர் இருப்பதாக இணையத்தில் தவறான தகவல். கௌபாய் என்றால் அது ஜெய் தான் என கண்மூடித்தனமான முடிவு. 'நடிப்புச் சுடர்' கனைக்கும் குதிரையில் குந்தி 'கன்' ஏந்தி சுட மாட்டாரா?) 'குட்டி' பத்மினி இதில் குமாரி பத்மினி ஆகி விடுவார் டைட்டிலில். அப்போ ஏ.பி.நாகராஜனின் ஆஸ்தான 'குமாரி' பத்மினி?

    Last edited by vasudevan31355; 29th September 2015 at 09:54 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  7. #345
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like

    முத்து அடிக்கும் கூத்து.4

    இங்கே கொடியிடை ஜெயகுமாரி கிளப்பில் ஆட 'அநாதை ஆனந்தனை'த் தீர்த்துக் கட்டத் துடிக்கும் வில்லன் முத்துராமன் சரக்கு போட்டுக் கொண்டு போதையில் குமாரி மேல் 'குபீர்' என்று பாய ரெடியாய் இருகிறார். உடன் தள்ளாடி ஆடவும் செய்கிறார். இதுவும் கலரே.

    ஜெயகுமாரிக்கு மட்டுமே பாடல். பின்னணி? வேறு யார் இதற்கெல்லாம் சூட் ஆவார்கள்? ஒரே ஒரு ராட்சஸி தானே?

    ஆனால் பாடல் அமர்க்களமோ அமர்க்களம்.

    இங்கு பார்ப்பதை யாருக்கும் சொல்லாதே
    நீ பார்
    இனி பள்ளிக்கு வேறெங்கும் செல்லாதே
    என்னைப் பார்
    கண்ணைப் பார்
    ஹோ..பெண்ணைப் பார்.

    Last edited by vasudevan31355; 29th September 2015 at 09:55 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  8. #346
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வசந்தகால நதிகளிலிலே வைரமணி நீரலைகள்
    நீரலைகள் நீரினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள்
    நினைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெல்லாம் கனவலைகள்
    கனவலைகள் தொடந்து வந்தால் காமனவன் மலர்க்கணைகள்

    முதல் அடியின் முடிவெழுத்து
    அடுத்த அடியின் தொடக்க எழுத்தாக எழுதப்பட்ட து இப்பாடலின் சிறப்பு.
    இது போல் மற்றும் சில பாடல்கள் இருந்தால் கூறவும்.

  9. #347
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like

    முத்து அடிக்கும் கூத்து.5

    இது ரொம்ப அபூர்வம்.

    'குல கௌரவம்' காக்கும் தந்தை முத்துராமன் பெற்ற முத்து தோழி தோழர்களுடன் 'நான் வாழ்கிறேன்...தேன் இசையிலே' என்று வயலின் துணை கொண்டு பாடுகிறார். பாட்டு ரொம்ப நாளாச்சு கேட்டு.

    நடிகர் திலகமே தெய்வம்

  10. #348
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    enna ji
    vanakkam ji

  11. #349
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ஜேசுதாஸின் இனிமையான குரலில் அனைவரும் விரும்பப்படும் இந்தபாடல் இன்றைய இரவுத்தாலாட்டுக்கு...

    ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா
    ஏனடி நீராடுது...
    ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா
    ஏனடி நீராடுது...

    அதன் இதழ்களின் மீது பாண்டிய நாட்டு
    முத்துக்கள் யார் தந்தது..
    ஆ..ஆ..ஆ.. ஆ..*
    அதன் இதழ்களின் மீது பாண்டிய நாட்டு
    முத்துக்கள் யார் தந்தது..
    ஆ..ஆ..ஆ.. ஆ..*

    ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா
    ஏனடி நீராடுது...ஏனடி நீராடுது...


    மாலையிலே வரும் மன்னனுக்கென்று
    மன்மத ஆராதனை..
    ஆ ஆ ஆ ஆ*
    மாலையிலே வரும் மன்னனுக்கென்று
    மன்மத ஆராதனை..

    அந்த மகிழ்வினில் நெஞ்சம் மயங்கிட நின்று
    மங்கல நீராடுது..மங்கல நீராடுது..
    ஆ..ஆ..ஆ..ஆ..

    ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா
    ஏனடி நீராடுது...

    பார்வையில் கொஞ்சம் பருகிய அழகை
    கைகளும் சுவைத்துப் பார்க்கட்டுமே
    பாதத்தில் தொடங்கி கூந்தலின் வரையில்
    ஆனந்த ராகம் கேட்கட்டுமே
    கண்படும்போதே கசங்கிய மேனி
    கைபடும்போது என்னாகும்*
    கண்படும்போதே கசங்கிய மேனி
    கைபடும்போது என்னாகும்*

    காவலை மீறிப் போகிற வேளை
    செவ்விதழ் மேலும் புண்ணாகும்

    ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா
    ஏனடி நீராடுது...ஏனடி நீராடுது...


    பூரண கும்பம் ஏந்தி நடந்தால்
    நூலிடை பாவம் வருந்தாதோ
    காதலன் கைகள் தாங்கி நடந்தால்
    பாரமும் கொஞ்சம் குறையாதோ
    என்னென்ன சுகங்கள் எங்கெங்கு என்று
    சோதனை போட்டால் ஆகாதோ
    இரவினில் தோன்றி விடிந்த பின்னாலும்
    மோகன மயக்கம் தீராதோ

    ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா
    ஏனடி நீராடுது...ஏனடி நீராடுது...
    மாலையிலே வரும் மன்னனுக்கென்று
    மன்மத ஆராதனை..

    அந்த மகிழ்வினில் நெஞ்சம் மயங்கிட நின்று
    மங்கல நீராடுது..மங்கல நீராடுது..
    ஆ..ஆ..ஆ..ஆ..

    ஏரியிலே ஒரு..
    ஆ ஆ ஆ*
    காஷ்மீர் ரோஜா..
    ஆ ஆ ஆ ஆ
    ஏனடி நீராடுது...
    ஆ ஆ ஆ ஆ


    Eriyile Oru Kashmir Roja ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா:

  12. #350
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    vanakkam ji. nalamaa?
    நடிகர் திலகமே தெய்வம்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •