Page 77 of 337 FirstFirst ... 2767757677787987127177 ... LastLast
Results 761 to 770 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

  1. #761
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    அதத்தான் எண்ணி சிரிச்சேன்

    அப்புறம் வரும் வரி சின்னாவுக்கு

    ---கொஞ்சம் மெதுவாக மெதுவாகவே
    நடிகர் திலகமே தெய்வம்

  2. Likes rajeshkrv liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #762
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    அது இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜன் எழுதிய பாட்டுதானே சின்னா!
    இல்லீங்கோவ்.. படத்துல பாவலர் வரதராஜன்னுசொல்வாங்க.. பட் ஒரு இசை நிகழ்ச்சியில் எஸ்.பி.பி சொன்னார் கங்கை அமரன் எழுதினதுன்னு.. அதைக் கன்ஃபர்மும் பண்ணிக்கிட்டேன்..

    மெதுவாக மெதுவாக வே புரியலையே

    டி.பி முத்துலட்சுமி.. அதான் தெரியுமே தானே..

    முன்னாடியே ஒரு நகைச்சுவைக் காட்சி பற்றி எப்பவோ கேட்டிருந்தேன்..இங்கயா வேற எங்கன்னு நினைவில்லை..

    மியூசிக் டைரக்டர் கிட்ட சிச்சுவேஷன் சொல்றார் ஒருத்தர்

    தசரதன் செத்துப் போய்ட்டார் மக்கள்லாம் அழறாங்க

    மியூசிக் டைரக்டர் கண் மூடி உள்வாங்கி.. ஹே ஹே தசரதா ஹோ ஹோ தசரதா எனப் பாட்டுக் கொடுக்க..ப்ரொட்யூஸர் .. நல்லாத்தான் இருக்கு ஆனா தசரதர் போனதுக்கு மக்கள்லாம் சந்தோஷமாயிட்டாப்ல இருக்கே

    சரி என்று விட்டு ஓஓஓஒ தஸ்ஸ ரத்தா...ஆஆஆ தஸ்ஸா ரதா என ப் பாட எல்லாருக்கும் அழுகை வருகிறது..இது ரொம்ப உருக்கமால்ல இருக்கு என்பார் ப்ரொட்யூஸர்..

    இது எந்தப் படம்..இதை ஆடியோவில் சிலோன் வானொலியில் மட்டும் கேட்டிருக்கிறேன்..

  5. #763
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    ஜி
    இதோ தூங்க போகும் முன் உமக்காக ஒரு கன்னட பாடல்

    ஓ முகிலே பெள் முகிலே


  6. Thanks vasudevan31355 thanked for this post
    Likes vasudevan31355, chinnakkannan liked this post
  7. #764
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    இல்லீங்கோவ்.. படத்துல பாவலர் வரதராஜன்னுசொல்வாங்க.. பட் ஒரு இசை நிகழ்ச்சியில் எஸ்.பி.பி சொன்னார் கங்கை அமரன் எழுதினதுன்னு.. அதைக் கன்ஃபர்மும் பண்ணிக்கிட்டேன்..

    மெதுவாக மெதுவாக வே புரியலையே

    டி.பி முத்துலட்சுமி.. அதான் தெரியுமே தானே..

    முன்னாடியே ஒரு நகைச்சுவைக் காட்சி பற்றி எப்பவோ கேட்டிருந்தேன்..இங்கயா வேற எங்கன்னு நினைவில்லை..

    மியூசிக் டைரக்டர் கிட்ட சிச்சுவேஷன் சொல்றார் ஒருத்தர்

    தசரதன் செத்துப் போய்ட்டார் மக்கள்லாம் அழறாங்க

    மியூசிக் டைரக்டர் கண் மூடி உள்வாங்கி.. ஹே ஹே தசரதா ஹோ ஹோ தசரதா எனப் பாட்டுக் கொடுக்க..ப்ரொட்யூஸர் .. நல்லாத்தான் இருக்கு ஆனா தசரதர் போனதுக்கு மக்கள்லாம் சந்தோஷமாயிட்டாப்ல இருக்கே

    சரி என்று விட்டு ஓஓஓஒ தஸ்ஸ ரத்தா...ஆஆஆ தஸ்ஸா ரதா என ப் பாட எல்லாருக்கும் அழுகை வருகிறது..இது ரொம்ப உருக்கமால்ல இருக்கு என்பார் ப்ரொட்யூஸர்..

    இது எந்தப் படம்..இதை ஆடியோவில் சிலோன் வானொலியில் மட்டும் கேட்டிருக்கிறேன்..
    முத்துலெட்சுமி செய்யாத வேடமில்லை
    பாரடி கண்ணே கொஞ்சம் பாடலுக்கு முன் எல்லோரையும் வரவேற்பார் . அந்த 2 நிமிடத்திலேயே நகைச்சுவை கொட்டும்
    வாங்கோ வாங்கோ எங்களுக்கு ஆதரவு தாங்கோ தாங்கோ

  8. Likes vasudevan31355, chinnakkannan liked this post
  9. #765
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like

    'சத்தியம் தவறாதே'

    மதுண்ணா!

    என்னை ரொம்பவும் கவர்ந்த பாடல். பல சிறப்புக்கள் கொண்டது.

    'சத்தியம் தவறாதே' படத்தில் அதே தலைப்பை பல்லவியின் முதல் வார்த்தையாகக் கொண்டு பாடல் ஆரம்பிக்கும்.

    அடடா! இப்பாடலை எத்தனை முறை கேட்டிருப்பேன் என்று எனக்குத் தெரியாது. என் உள்ளத்தில் தனி இடம் பிடித்த பாடல். ஷோசலிஷக் கருத்துக்களை மிக எளிமையாக எடுத்துரைக்கும் பாடல்.

    'மாஸ்டர்' ஸ்ரீதர் மெரினாவில் சுண்டல் விற்றுக் கொண்டே பாட, வெகு சிம்பிளாக, பாடலுக்குத் தோதாக கொட்டாங்கச்சி வயலின் இசைக்கு ஜெயகுமாரி பாவாடை, தாவணியுடன், வறுமையைக் காட்டும் கட்டங்கள் போட்ட ஜாகெட் அணிந்து, குப்பத்துப் பெண்ணாக உடம்பை வளைத்து ஆடுவார். சி.என்.பாண்டுரங்கனின் அற்புதமான இசைப் பின்னணி. பெருந்தலைவர், பேரறிஞர், ஔவை, கண்ணகி, மகாத்மா சிலைகள் என்று பாடல் முழுதும் கடற்கரையில் உள்ள சிலைகளின் மத்தியிலேயே நகரும்.

    பாடலின் இடையில் வரும் 'தானே தந்தனா... தனே தந்தனா' என்று ஒலிக்கும் கிராமப் பின்னணி குரலும் இசையும் அப்படியே 'பாகப்பிரிவினை'யின் 'தாழையாம் பூமுடிச்சி' பாடலை அச்சு அசலாக ஒத்திருக்கும்.

    'களை எடுக்காத பயிர் போலே
    கடற்கரையில் கூடுது கூட்டம்'

    என்னும் அருமையான உதாரணம்.

    மீன் பிடிக்க கட்டுமரத்தில் பயணிக்கும் மீனவனுக்கு காற்று பலமாக, அதுவே புயலாக வீசினால் தொந்தரவு...அதனால் அவன் வாட்டமடைவான்' என்பதை அழகாக பாட்டில்

    'கட்டுமரத்தை நம்பும் மனிதருக்கு
    காற்று வீசினால் வாட்டம்
    புயல் காற்று வீசினால் வாட்டம்'

    என்று விளைக்கியிருப்பார் பாடலாசிரியர். (யார்?... சுரதாவா?)

    சூரியன், மழை, காற்று இவை எல்லாம் தெய்வம் தந்த சோஷலிசமாம் ! ஆனால் நாட்டை சுரண்டும் கூட்டத்திற்குப் பெயர் 'டோட்டலிச'மாம். என்ன அழகான நிஜமான விளக்கம்!

    ஆனால் எப்போது நிலைமை சரியாகுமாம்? குனிந்து கிடக்கும் ஏழை துடித்தெழுந்தால் சமரசம் கிடைத்து விடுமாம்.

    'தாய் நாட்டை மறக்கக் கூடாது...சத்தியம் தவறக் கூடாது...தன்மானத்தையும் இழக்கக் கூடாது....எவர் உரிமையையும் தட்டிப் பறிக்கக் கூடாது' என்று அம்சமான அறிவுரைகள் கொண்ட கருத்துப் பாடல்.

    பாடலைப் பாடியவர் யார் என்பது பெருங்குழப்பம். ஒரு இணையதளத்தில் எம்.எஸ்.ராஜேஸ்வரி என்று படித்த ஞாபகம். ஆனால் கண்டிப்பாக 'பாப்பா' இல்லை.

    ஆனால் டைட்டிலில் பிரேமா என்று ஒரு பெயர் போடுவார்கள். அவராகத்தான் இருக்குமோ என்று ஒரு சந்தேகம். ஆனால் இவரை சுத்தமாகத் தெரியாது. 'தானே தந்தனா' தருவது பொன்னுசாமி என்று நினைவு.

    எல்லாவற்றுக்கும் மேலே மிகப் பாடலுக்குப் பொருத்தமான அந்த பிஞ்சுக் குரல் நெஞ்சைச் சுண்டித்தான் இழுக்கிறது. மறப்பதற்கு வெகு நேரம் பிடிக்கிறது.

    'மாஸ்டர்' ஸ்ரீதரின் மாறாத அலட்டலில்,


    சுண்டல்...சுண்டல்...

    சத்தியம் தவறாதே
    சத்தியம் தவறாதே தாய் நாட்டினை மறவாதே
    சத்தியம் தவறாதே தாய் நாட்டினை மறவாதே
    தட்டிப் பறிக்காதே தன்மானம் இழக்காதே
    உரிமையைத் தட்டிப் பறிக்காதே
    தன்மானம் இழக்காதே

    (சத்தியம் தவறாதே)

    களை எடுக்காத பயிர் போலே
    கடற்கரையில் கூடுது கூட்டம்
    ஓ...........ஓ
    களை எடுக்காத பயிர் போலே
    கடற்கரையில் கூடுது கூட்டம்
    கட்டுமரத்தை நம்பும் மனிதருக்கு
    காற்று வீசினால் வாட்டம்
    புயல் காற்று வீசினால் வாட்டம்

    (சத்தியம் தவறாதே)

    சூரியன் ஒளியும் மழையும் காற்றும்
    தெய்வம் தந்த சோஷலிசம்
    சூரியன் ஒளியும் மழையும் காற்றும்
    தெய்வம் தந்த சோஷலிசம்
    நாட்டை சுரண்டும் கூட்டம்தான் டோட்டலிசம்
    ஏழை துடித்தெழுந்தால் வரும் சமரசம் (சத்தியம்)

    (சத்தியம் தவறாதே)

    ஊருக்கு உழைப்பவன் யாருங்க ஓ.....ஓ.....ஓ....

    (மகாத்மா காந்தி சிலையைக் காட்டிவிட்டு)

    ஊருக்கு உழைச்சவன் பாருங்க
    இங்கு ஊரை ஏய்ப்பவனும் உண்டுங்க
    சிறுவன் சொல்வதை கேளுங்க
    நீங்க சிந்தனை செய்து பாருங்க
    சுண்டலை கொஞ்சம் வாங்குங்க

    (சத்தியம் தவறாதே)


    மதுண்ணா!

    ஒரு ஜோக். ஒரு இணையத்தில் இப்பாடலின் வரிகளைக் கொலை செய்து வைத்திருந்தார்கள் வழக்கம் போல. அதில் முக்கியமான ஒன்று.

    'ஏழை துடித்தெழுந்தால் வரும் சமரசம்' என்னும் வரிகளை மாற்றி,

    'ஏழை குடித்திருந்தால் வரும் சமரசம்'

    என்று போட்டார்களே ஒரு போடு!

    தெரிந்து எழுதினார்களோ... தெரியாமல் எழுதினார்களோ.... இதுவும் நன்றாகத்தான் இருக்கிறது. அதில் உண்மையும் இருக்கிறது.

    இந்தப் பாட்டின் ஆடியோ, வீடியோ கேட்க, பார்க்க ஆவலாய் இருக்கிறேன். நண்பர்கள் ப்ளீஸ்.
    Last edited by vasudevan31355; 17th October 2015 at 02:22 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  10. Likes madhu, Russellmai liked this post
  11. #766
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    தமிழ் காமடி நடிகையர் பட்டியலில் விடுபட்டவர்கள்
    டி.ஏ.மதுரம்
    ரமா பிரபா
    கோவை சரளா
    குமாரி சச்சு

  12. #767
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    //மதுரம் தொடங்கி மதுமிதா வரையில் உலகில் தமிழ்நாடு போல் சிரிப்பு காட்டி திரைக்குச் சிறப்பு சேர்த்த பெண்கள் வேறு எங்கும் காணோம். அவர்களில் மனோரமா சிரஞ்சீவி. நிரந்தரமாகப் புகழ் மகுடம் சூட்டிக் கொண்ட ஒரே மகாராணி!//

    மீன்ஸ் தமிழ் சினிமாவில் நடித்த நகைச்சுவை நடிகைகள்..

    சின்னதாய் லிஸ்ட் போட்டால்

    டி.ஏ.மதுரம் - என் எஸ் க்ருஷ்ணன் - திரு நீலகண்டர்

    நாகேஷ் - மாதவி - ( அதே கண்கள்)

    மனோரமா

    கோவை சரளா

    நாகேஷ் சச்சு கா. நே

    நாகேஷ் ரமாப் ப்ரபா - உ.இ. உ வா..

    வெண்ணிற ஆடை மூர்த்தி - அந்தக் கூழாங்கல் மின்சார மோகினி - வெண்ணிற ஆடை படம் (பெயர் மறந்துவிட்டது)



    மதுமிதா ( ஒருகல் ஒரு கண்ணாடி)

    வேற யார் லாம் இன்பெட்வீன் இருக்காங்க..

    ஓ. தங்கவேலு சரோஜா
    தங்கவேலு - முத்துலட்சுமி (அதான் தெரியுமே)

    இவங்க தான் அத்தை நமஸ்காரம் பண்ணிக்கம்மா..என நாகேஷ் சொல்ல அத்தை தொபீல் என விழ தியேட்டர் அலறும் - கலாட்டா கல்யாணம் - அவர் பெயர் மறந்து விட்டத்..

    வேறு யாராக்கும் இருக்காங்க..
    கோபு சார்,

    விடுபடவில்லை. நீங்கள் கொடுத்திருக்கும் பட்டியலை சின்னா அழகாக முன்னமேயே தந்து விட்டாரே. நீங்கள் பார்க்கவில்லையா?
    நடிகர் திலகமே தெய்வம்

  13. #768
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    வாசு சார்,

    வீடியோவும் இல்லாமல் ஆடியோவும் இல்லாமல் எப்படி இவ்வளவு சுத்தமாக பாடல் வரிகளை டைப் செய்தீர்கள்?. பாட்டுப்புத்தகம் உதவி?.

    மாஸ்ட்டர் ஸ்ரீதர் என்றால் எனக்கும் எப்போதும் பயம். சமீபத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குறத்தி மகனின் 'அஞ்சாதே நீ அஞ்சாதே' பாடலில் ஸ்ரீதர் உடன் கோணவாய் ஜெயசித்ராவை பார்த்து நொந்து போனேன். இரண்டுமே அலட்டல் கேசுகள்.

    பாடல் வரிகள் கொலைபற்றி படித்ததும் சில நாட்களுக்கு முன் முகனூலில் ஒருவர் தில்லானா மோகனாம்பாள் பற்றி எழுதியிருந்த வரிகளும், படித்துவிட்டு நான் வயிறுவலிக்க சிரித்ததும் நினைவு வந்தது. அவர் எழுதியது..

    ' "மறைந்திருந்து பார்க்கும் மருமகனே" போன்ற இனிய பாடல்கள் இடம் பெற்ற படம்'.

  14. #769
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //உடன் கோணவாய் ஜெயசித்ராவை // அவங்க உணர்ச்சி வசப்பட்டா மட்டும் தான் வாய் கோணுவார்..என்று ஆன்றோர்கள் சொல்வார்கள்


    //"மறைந்திருந்து பார்க்கும் மருமகனே" //

  15. Likes rajeshkrv liked this post
  16. #770
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    காமெடியில் கலக்கிய கதாநாயகியர் பட்டியலில் 'தில்லுமுல்லு' சௌகாரை மறந்தது ஏனோ.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •