-
20th December 2015, 01:11 PM
#1791
Senior Member
Seasoned Hubber
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 2 Thanks, 4 Likes
-
20th December 2015 01:11 PM
# ADS
Circuit advertisement
-
20th December 2015, 01:11 PM
#1792
Senior Member
Seasoned Hubber
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
20th December 2015, 01:12 PM
#1793
Senior Member
Seasoned Hubber
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
20th December 2015, 01:13 PM
#1794
Senior Member
Seasoned Hubber
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
20th December 2015, 01:14 PM
#1795
Senior Member
Seasoned Hubber
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
20th December 2015, 01:14 PM
#1796
Senior Member
Seasoned Hubber
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 4 Likes
-
20th December 2015, 06:39 PM
#1797
Senior Member
Seasoned Hubber
செய்தி
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு உதவிடும் வகையில், நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில் இலவச மருத்துவ முகாம், சென்னை, (வியாசர்பாடி) M .K .B .நகர், முல்லை நகர் பேருந்து நிலையம் அருகிலுள்ள, M .S மகாலில், 20-12-2015, ஞாயிறு காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெற்றது.
தேர்ந்த மருத்துவர்களைக் கொண்டு நடத்தப்பட்ட இந்த மருத்துவ முகாமில் பொதுமக்கள் 723 பேருக்கு, மருத்துவ ஆலோசனைகளும், இலவசமாக மருந்துகளும், நிலவேம்பு கஷாயமும் வழங்கப்பட்டன.
நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை தலைவர் K.சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமை சென்னை மாநகராட்சி துணை ஆணையாளர் (பொது சுகாதாம் ) திரு.இரா.கண்ணன், IAS, தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில், சிவாஜி சமூகநலப்பேரவை நிர்வாகிகள் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, SKS,சாரதி, கமலக்கண்ணன், மாவட்டத் தலைவர்கள் குறிஞ்சி பாலாஜி, B.குபேரன், P.ஜெயக்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்
-
Post Thanks / Like - 3 Thanks, 6 Likes
-
20th December 2015, 07:29 PM
#1798
Junior Member
Senior Hubber
தரிசனம்-2.
-------------
தாவணிக் கனவுகள்.
---------------------
தொடர்கிறது...
-----------------
( 8 )
-------
வயது முதிர்வு மட்டுமல்ல..
அனுபவ முதிர்வும், அதனால்
ஏற்படுகிற பக்குவமும்,
கர்வமற்ற பெருந்தன்மையுமே
ஒரு வயசாளியை, 'பெரியவர்'
என மதிக்க வைக்கிறது.
கேப்டன், தன்னைப் 'பெரியவர்'
என அழுத்தமாக நிரூபித்த
விநாடியில், சுப்ரமணியம்
நெகிழ்ந்திருந்தான்.
'உன்னிலும் இளையவன்' என்று தன்னைத் தாழ்த்திக் கொண்டு உணர்ச்சி வசப்பட்ட கேப்டன் எனும் பெரியவரை
வியந்திருந்தான்.
சிந்திய கண்ணீரைத் துடைத்துக்
கொண்டு கேப்டன், சுப்ரமணியத்துடன் அவன்
வீடு நோக்கி நடக்கிறார்.
உள்ளத்தில் நிறைவோடு, ஒரு
எளிய குடும்பத்திற்கு தன்
மனப்பூர்வமான உதவியைத்
தரப் போகும் லட்சிய நடை
அது.
---------------
சுப்ரமணியத்தின் பெரிய தங்கையைப் பெண் பார்க்க
வந்தவர்கள் பூரிக்கிறார்கள்.
அவர்களுக்குப் பெண்ணைப்
பிடித்து விட்டதை அவர்களின்
திருப்திப் புன்னகைகள் தெரிவிக்கின்றன.
தந்தையில்லாத சுப்ரமணியத்தின் சார்பில் பெண்
பார்க்க வந்தவர்களிடம் பேசும்
பெரிய மனிதராகக் கேப்டன்
நடுக் கூடத்தில் ஆரோகணித்திருக்கிறார்.
"பொண்ணை எங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு."
-மாப்பிள்ளைப் பையனின்
அம்மா பளீரென்று தெரிவிக்க..
சபை சந்தோஷமாகிறது.
"என்னப்பா... சுப்ரமணியம்
எல்லாரும் மங்களகரமா பேசி
முடிச்சிட்டாங்க. நீ என்ன சொல்றே..?"
"இல்ல... மாப்பிள்ளை ஒண்ணும் சொல்லல.. அதான்."
என்று இழுக்கிறான்.. சுப்ரமணியம்.
"அட...ஆமா! மாப்பிள்ளை..
உங்களுக்குப் பொண்ணைப்
பிடிச்சிருக்கா?"- என்று
கனிவுடன் விசாரிக்கிறார்.
அந்த மாப்பிள்ளைப் பையன்
பதிலேதும் பேசாமல் வெட்கப்
புன்னகை புரிகிறான்.
"அடடடே... மாப்பிள்ளை வெட்கப்படுறாரு" என்று தன்
அருகிலிருக்கும் சுப்ரமணியத்தின் தொடையிலடித்துச் சிரிக்கும்
கேப்டன், திரும்பவும் மாப்பிள்ளையிடம் " சும்மா
கூச்சப்படாமப் பேசுங்க மாப்ளே" என்கிறார்.
"அவரு பேச மாட்டாரு" என்று
சத்தமாக, உறுதிபட
ஒலிக்கிறது... சுப்ரமணியத்தின்
தாயாரின் குரல்.
வீடு நிசப்தமாகிறது.
சுப்ரமணியம், கேப்டன் உள்ளிட்டோரின் முகங்களில்
கேள்விக்குறிகள்.
கேள்விக்குறிகளைத் தானே
முறிக்கிறார்.. சுப்ரமணியத்தின்
தாயார்.
"மாப்பிள்ளை.. ஊமை."
சுப்ரமணியம் அதிர்கிறான்.
கேப்டன் திகைக்கிறார்.
கதவுக்குப் பின்னால் நின்று,
தனக்கான விசேஷத்தை
ஆச்சரிய மகிழ்வோடு பார்த்துக்
கொண்டிருக்கும் சுப்ரமணியத்தின் பெரிய
தங்கை கண்ணீர் சிந்துகிறாள்.
கதவைப் பற்றியிருக்கும் அவள்
கையில் துள்ளி விழும் அவள்
கண்ணீர்த் துளிகள்-
கலங்கிய அவளது நீர் வடிவ
உள்ளம்.
அவளது கனவுகளை அழித்தொழித்து ஓடி வரும்
வெள்ளம்.
சுப்ரமணியம் அவமானத்தில்
குறுகிப் போகிறான்.
"என்னடா பாக்கிறே.. இத்தனை
நாள் பொண்ணு பாக்க வந்தவங்க, அது வேணும், இது
வேணும்னு கேட்டப்ப நாம
பேச முடியாம இருந்தோம்.
இப்ப அவரு பேசலேயேன்னு
நாம் வருத்தப்படறதுல்ல
என்னடா நியாயம் இருக்கு?"
ஏழ்மை, நியாயம் பேசுகிறது.
சுப்பிரமணியத்தின் இயலாமை,
அவனது தன்மானத்தின் குரல்வளையை நெறித்துப்
பேச விடாமல் செய்கிறது.
கேப்டன்,சூழ்நிலையைப் புரிந்து
கொள்கிறார். அங்கே பல
இதயங்களிலிருந்து வலிக்க,
வலிக்க வெளியேறி வரும்
ரத்தக் கண்ணீர் வெள்ளம்
அவரை அரூபமாய் நனைக்கிறது.
சும்மா அங்கே அமர்ந்திருப்பதில் அர்த்தமில்லை என்று முடிவெடுத்தவராய் "ஒரு
நிமிஷம்" என்று அனுமதி
கேட்டு, சுப்ரமணியத்தின்
தங்கை நின்றழுத இடம் நோக்கி
நடக்கிறார்.
அவளை அழைத்துக் கொண்டு
அறைக்குள் வந்த கேப்டன்,
அவள் இந்தத் திருமணத்திற்குச்
சம்மதித்து விட வேண்டாம்
எனக்கு கேட்டுக் கொள்கிறார்.
"இது..உன் வாழ்க்கைப் பிரச்சினைடா. சரின்னு சொல்லிடாதே".
அவள் அழுதபடி சொல்கிறாள்..
"கேப்டன்.. மனசுக்குப் பிடிச்ச
மாதிரி சட்டை தைச்சிப்
போடணும்னு எங்க அண்ணன்
ஆசைப்படுது. மானத்தை
மறைக்க ஏதோ ஒண்ணைப்
போட்டாப் போதும்னு எங்க
அம்மா நினைக்கிறாங்க. எங்க
நிலைமைக்கு, எங்க அம்மா
நினைக்கிறதுதான் சரி."
அந்தப் பெண்ணை அவளது
ஏழ்மை பக்குவப்படுத்தியிருக்கிறது.
குடும்பக் கஷ்டத்தின் மீதான
புரிதல் மிகுந்த அந்தப் பெண்,
ரணங்களுடன் வாழ்வதற்குக்
கூட கண்ணீரோடு தயாராகி
விட்டாள்.
கேப்டனுக்கு அந்தப் பெண்ணின் தியாகத்தில் சம்மதமில்லை.
" நோ.. சரி கிடையாது. நீ ஒத்துக்காதே. உங்கண்ணன்
வேலையில்லாதவன்கிற
ஒரே காரணத்துக்காக, அவனை
மதிக்காம.. அவன்கிட்ட ஒரு
வார்த்தை கூடக் கேக்காம
இந்தக் கல்யாணத்துக்கு
ஏற்பாடு பண்ணியிருக்கா,
உங்க அம்மா.
உங்க அண்ணனைப் பத்தி
உங்களுக்குத் தெரியாது.
எனக்குத்தான் தெரியும்.
உங்களை நினைச்சு, நினைச்சுதானே விஷம்
குடிக்கிறதுக்குப் பதிலா
சாராயத்தைக் குடிச்சிக்கிட்டிருக்கான்..? இப்ப
நீ இந்தக் கல்யாணத்துக்குச்
சம்மதிச்சிட்டேன்னு தெரிஞ்சுதுன்னு வச்சுக்க.. அவன் நிஜமாவே விஷத்தைக்
குடிச்சிட்டுச் செத்துப் போயிடுவான்.
இப்ப நான் போயி அவங்களை
பொண்ணு யோசிச்சுப் பதில் சொல்லுதுன்னு சொல்லி
அனுப்பி வைச்சிடுறேன். நாம
அப்புறம் பேசிக்கலாம்."
ஒரு தகப்பனின் பரிவோடு கேப்டன் சொல்வதைச் சரியென்று கேட்டுக் கொள்கிறாள்... அந்தப் பெண்.
கேப்டன் மீண்டும் கூட்டத்துக்கு
நடுவே வந்து " பொண்ணுக்கும்,
அவ அண்ணனுக்கும் தெரியாம
அவங்க அம்மாவா இந்த ஏற்பாட்டைப் பண்ணியிருக்காங்க. பொண்ணுகிட்ட கேட்டேன்.
சந்தோஷந்தான்..சந்தோஷந்தான். ஆனா..சின்னப் பொண்ணு இல்லையா?
ஒரு ரெண்டு நாள் அவகாசம்
குடுங்க. யோசிச்சுச் சொல்றேன்னு சொல்லுது..
அதனால.. " என்று இழுக்கிறார்.
கேப்டனையே முறைத்துக்
கொண்டிருந்த சுப்ரமணியத்தின்
அம்மா, எழுந்து புறப்படத்
தயாராகும் கல்யாணக் கூட்டத்தை நிறுத்தி, "இருங்க..
என் பொண்ணு என் பேச்சைத்
தட்ட மாட்டா. இப்பவே அவ
சம்மதத்தைத் தெரிஞ்சுட்டு
வந்துடுறேன்." என்கிறாள்.
மாப்பிள்ளை வீட்டார் மறுக்கிறார்கள். ஆற அமரப்
பேசி பெண்ணின் சம்மதம்
கிடைத்த பிறகே பதில் எழுதினால் போதும் என்று
சொல்லி விடைபெறுகிறார்கள்.
பெண் பார்க்க வந்தோர் போன
பிறகு, எல்லோரும் ஆளுக்கொரு பக்கமாய்ப் போய்
விட...
கேப்டன் மட்டும் சுப்பிரமணியத்தின் அம்மாவின்
கோபப் பார்வையிலிருந்து
விலக்கப்படாமல் கூடத்தில்
மாட்டிக் கொள்கிறார்.
எரிக்கும் அந்தப் பார்வைக்கும்,
நிச்சயமாய் அவளிடமிருந்து
தன்னை நோக்கிப் பாயவிருக்கும் கேள்விகளுக்கும் பயந்து, ஒரு
அசட்டுச் சிரிப்பும், பயத்தைக்
குறிக்கும் குறும்பான உடல்
மொழியுமாய் அவர் நடக்கும்
நடை...
"நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது நடிகர் திலகத்தின் படம்" என்பதான
ஒரு மௌன அறிவிப்பு.
சுப்ரமணியத்தின் அம்மாவைத்
தாண்டி நடக்கையில், "நில்லுங்க" என்று அவள் அதட்டுகிறாள்.
" ஒரு பெரிய கண்டத்திலிருந்து என் பொண்ணைக் காப்பாத்திட்டதா நினைப்பு..?" என்கிறாள்.
பயமென்றாலும், "ஆமாம்"
என்கிற மாதிரி தலையசைக்கிறார்,கேப்டன்.
"ஒரு ஆம்பளைக்குக் கல்யாணமாகலைன்னா..
எத்தனை வயசானாலும் பிரம்மச்சாரின்னு பெருமையாத்தான் பேசுவாங்க.
ஆனா.. ஒரு பொண்ணுக்குக்
கல்யாணம் ஆகலேன்னா
கேவலமாப் பேசுவாங்க. இதை
மனசில வச்சிக்கிட்டுப்
போங்க." எனப் பொரிகிறாள்
அந்த அம்மாக்காரி.
இந்தக் காட்சி முடியும் போது,
மிகப் பெரிய வியப்பு நம்மை
ஆட்கொள்கிறது.
ஒரு நடிகனுக்கு, அந்தத்
திரைப்படம் தொடர்பானவர்கள்
நடித்துக் காட்டுவதாலும், பேச
வேண்டிய வசனங்களைப்
படித்துக் காட்டுவதாலும்
மட்டுமே முழுமையான
நடிப்பைப் பெற்று விட முடியாது. அதற்கு அந்த
நடிகனின் புரிதல் மிகுந்த
உள்வாங்குதலும், மிக ஆழமான
நடிப்பனுபவமும் மிக முக்கியம் என்பதற்கு இந்தக்
காட்சி, மிகச் சிறந்த உதாரணம்.
அறிமுகமான 1952-லிருந்து
இந்தப் படத்தில் நடித்த
1984 வரையிலும், வருஷத்திற்கு எட்டுப் படம்
நடித்துக் கொண்டு, இமைக்கக்
கூட அவகாசமில்லாமல்
பரபரப்பாயிருந்த இந்த மகாகலைஞனுக்கு.. ஒரு
எளிய ஏழைக் குடும்பத்தில்
கல்யாணம் பேசப்படுமிடத்தில்
ஒரு பெரிய மனிதரின் பங்களிப்பு இப்படித்தான் இருக்கும் என்று பார்த்துத்
தெரிந்து கொள்ள நேரம்
எப்படி வாய்த்தது?
கற்பனையெனில்..
சரியாய்க் கணிக்கும் திறன்
அவருக்கு மட்டும்
எப்படி வாய்த்தது?
"இந்த இடத்தில் சிரியுங்கள்"
என்றுதான் இயக்குநர்
சொல்லியிருப்பார். "பொண்ணைப் பிடிச்சிருக்கா?"
என்று மாப்பிள்ளையைக் கேட்டு, அவன் வெட்கப்பட்டுச்
சிரித்தவுடன் "அடடடே" என்று
சிரிக்கும் சிரிப்பின் உண்மைத்
தன்மை இவரிடமிருந்து
மட்டும் எப்படி வெளிப்படுகிறது?
வியக்கும் நம்மைச் சூழ்கிறது..
எண்ணற்ற கேள்விக்குறிகள்.
நடிகர் திலகம் தொடர்பான
கேள்விக்குறிகளை உடைத்தால்...
எண்ணற்ற ஆச்சரியக் குறிகள்.
(... தொடரும்...)
-
Post Thanks / Like - 1 Thanks, 4 Likes
-
21st December 2015, 02:43 AM
#1799
Senior Member
Seasoned Hubber
Specially for Athavan Ravi for write up on Dhavani Kanavugal
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
21st December 2015, 08:02 AM
#1800
Senior Member
Devoted Hubber
என் வாழ்க்கையை திரும்பிப்பார்க்கிறேன்....
பராசக்தியில் கலைஞர் வசனம் எழுதியதுபோல...
கடந்துவந்த காட்டாறுகளே அதிகம்..
எதிர்ப்புகள் அதிகம்..
என் முன்னே முட்களும், பாறாங்கற்களும் அதிகம்..
முன்னேவிட்டு பின்னே காலைப்பிடித்து இழுப்பார்கள்
அதிகம் பின்னால் திரும்பியவுடன் முதுகில் குத்துவார்கள்
அதிகம் நம்பியவர்கள் நண்பர்கள்போல் நடித்தார்கள்
நண்பர்களாயிருந்து கலையுலகத்தில் என் காலை வாரிவிட்டவர்கள்தான் அதிகம்
இவை யாவும் அப்பட்டமான உண்மைகள்.
என் வாழ்க்கையில் ஆமாம் கலையுலக வாழ்க்கையில்எது அதிகம் என்று
எடுத்துச்சொல்ல வேண்டுமானால் 'கசப்பான அனுபவங்கள்' அதிகம்
(-நான் பேச நினைப்பதெல்லாம்.....சிவாஜி கணேசன்)
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
Bookmarks