Page 341 of 401 FirstFirst ... 241291331339340341342343351391 ... LastLast
Results 3,401 to 3,410 of 4010

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 17

  1. #3401
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  2. Thanks ifohadroziza, Russellmai thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #3402
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  5. Thanks ifohadroziza, Russellmai thanked for this post
  6. #3403
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  7. Thanks ifohadroziza, Russellmai thanked for this post
  8. #3404
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  9. Thanks ifohadroziza, Russellmai thanked for this post
  10. #3405
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like



  11. #3406
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Covai district Sivaji Fans .
    Poster

  12. Thanks ifohadroziza, Russellmai thanked for this post
    Likes Harrietlgy, ifohadroziza, Russellmai liked this post
  13. #3407
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    The Men in Blues....!

    ஞாலம் வென்ற நீலச் சீருடை ராணுவ அதிகாரிகள் ....! நடிகர்திலகம் சிவாஜிகணேசனும் ஜேம்ஸ் பாண்ட் ஷான் கானரியும்!

    பலதரப் பட்ட ராணுவம் சார்ந்த தரைப்படை கடற்படை, விமானப் படை, அதிகாரிகளின் சீருடையில் வீறு நடை போட்ட வீரக் கதாநாயகர்கள் !!

    மிடுக்கான காவல்துறை மற்றும் ராணுவ அதிகாரிகளின் சீருடைக்குள் புகுந்து துடுக்காக வலம் வர ஆசைப்படாத திரைக் கதாநாயகன் உண்டோ ?
    இந்த சீருடைகளில் பச்சை கலந்த காக்கி பயத்தையும் வெள்ளுடை மரியாதையையும் நமது மனதில் உருவாக்கும் வேளையில் நீலச் சீருடையோ மனதில் மிடுக்குடன் கூடிய மகிழ்வைப் பொங்கச் செய்யும்!

    இந்தவகை நீல நிற கடற்படை அதிகாரிக்குரிய மிடுக்கையும் நடை உடை பாவனைகளையும் கம்பீரத்தையும் உயிர் பெறச் செய்த பெருமை ஆறடி இரண்டங்குல ஆஜானுபாகுவான உடற்கட்டில் கச்சிதமான உடையலங்காரத்தில் ரசிகர்களின் மனத்தைக் கொள்ளை கொண்ட அகில உலகத்தின் இணையில்லாத ஒரிஜினல் ஜேம்ஸ் பாண்ட் OO7 ஷான் கானரியையே சாரும்!

    ஜேம்ஸ் பாண்ட் உளவுத்துறை சிங்கமானாலும் அடிப்படையில் கடற்படையில் Commander Bond என்ற அந்தஸ்தில் வலம்வந்தவரே! You Only Live Twice ஜேம்ஸ் பாண்ட் படத்தில் இந்த மிடுக்கான நடை உடை அலங்காரம் அவரது சுறுசுறுப்பான ஜேம்ஸ் பாண்ட் சாகசங்கள் ரசிகர்களை கிறங்கடித்தது !

    சிவகாமியின் செல்வன் திரைப்படத்திலும் பைலட் பிரேம்நாத் படத்திலும் நடிகர்திலகம் விமானப்படை சார்ந்த நீலநிற கோட்சூட் யூனிபார்மில் மின்னினார் ..
    நடிப்பில் பின்னினார் !


    Commander Bond! Naval Commander Sean Connery!








    Wing Commander Sivaji Ganesan!!



    NT in white Navy sailors uniform!!

    Last edited by sivajisenthil; 26th February 2016 at 09:58 PM.

  14. Thanks Russellmai thanked for this post
  15. #3408
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    சாரதா ஸ்பெஷல்

    நாளை மறுநாள் மதுரையில் கோலாகலமாக நடைபெறவிருக்கும் சிவகாமியின் செல்வன் ட்ரைலர் வெளியீட்டு விழாவிற்கு அழைப்பிதழ் கொடுக்க இயக்குனர் சிவிஆர் அவர்களை இரண்டு நாட்களுக்கு முன்பு சந்தித்தோம். மிகுந்த மகிழ்வோடு எங்களை வரவேற்ற அவர் பல விஷயங்களைப் பற்றி சுவையான நினைவுகளை பகிர்ந்துக் கொண்டார்.

    கலாட்டா கல்யாணம் முதல் வாழ்க்கை வரை நடிகர் திலகத்துடனான பயணத்தை அந்த குறுகிய நேர சந்திப்பிலும் அவர் பகிர்ந்துக் கொண்டதை சொல்ல வேண்டும்.

    ஸ்ரீதரிடம் உதவி இயக்குனராக இருந்தது பிறகு தனியாக வந்து அனுபவம் புதுமை செய்தது [அதில் மெல்லிசை மன்னரின் பங்களிப்பை மிகவும் சிலாகித்தார்] கலாட்டா கல்யாணம் படத்திற்கு தன்னை இயக்குனராக போட்டது இவை அனைத்தும் ஏற்கனவே கேள்விப்பட்ட விஷயங்கள் என்றாலும் அவர் வாயாலே கேட்டது ஒரு தனி சுவை

    ராகவேந்தர் சார் உடனே அவரது பேவரிட் படத்திற்கு தாவ அடுத்த சில பல நிமிடங்களுக்கு மதுவும் சுந்தரியும் பற்றிதான் பேச்சு. பெரும்பாலானோர் அந்த இடத்தில இருந்திருந்தால் கட்டம் போட்ட சட்டை பாடலை பற்றி பேசியிருப்பார்கள். நாம்தான் வித்தியாசமாயிற்றே! ஒயிட் அண்ட் ஒயிட் பாடல் பற்றி பேசினோம். பௌலிங் ஆக்க்ஷன், ஜெஜெ பக்கவாட்டில் நடனமாடி போக நேர்கோட்டில் நடிகர் திலகம் நடந்து வரும் ஷாட் பற்றியெல்லாம் பேசினோம். கலாட்டா கல்யாணம் படத்திற்கு போடப்பட்ட பாடலா என்ற கேள்விக்கு இல்லை என்ற பதில் வந்தது. வீட்டுக்கு வீடு படத்திற்காக போடப்பட்ட ட்யூன் என்றும் அதை இந்த படத்திற்காக டெவலப் செய்தோம் என்றார். பிறகு நமது அடுத்த பேவரிட் பாடலான இசையரசியின் பாடலுக்கு டிஸ்கஷன் போனது. நான் எப்போதும் குறிப்பிடும் தேயிலை தோட்டத்தின் மேலிருந்து காமிரா கீழே வெகு தூரத்தில் இருக்கும் ஹேர் பின் வளைவில் பஸ் திரும்புவதை துல்லியமாக படம் பிடித்திருக்கும் தம்புவின் தொழில் நேர்த்தியை பற்றி பேசினோம்.

    அடுத்து கோபாலின் பேவரிட் படமான பொன்னுஞ்சல். கதையின் அடிப்படை கான்செப்ட் பற்றி தனக்கு இருந்த தயக்கத்தையும் அதை நடிகர் திலகத்திடம் எடுத்துக் கூறியதையும் சொன்னார் சிவிஆர். ஆனால் தங்களது கிராமங்களில் இது போன்ற நடைமுறைகள் [யார் தாலிக்கு சொந்தகாரனோ அவனே அந்த தாலியை முடிந்துக் கொள்ளும் பெண்ணிற்கு கணவன்] இருந்ததை நடிகர் திலகம் சொன்னதையும் அதுவும் தவிர கதையாசிரியர் சக்தி கிருஷ்ணஸ்வாமி மேல் நடிகர் திலகத்திற்கு இருந்த பிரியமும்தான் அந்த கதையை எடுக்க காரணம் என்பதையும் குறிப்பிட்டார் சிவிஆர். ஆகாயப் பந்தலிலே பாடலின் இமாலய பாப்புலாரிட்டி பற்றி பேச்சு வந்தது அந்தளவிற்கு பாடல் பிரபலமாகி விட்ட பிறகு அந்த பாடலை எப்படி படமாக்கினால் மக்களுக்கு பிடிக்கும் என்பது எப்படி மலைப்பாக இருந்தது என்பதையும் சொன்னார். நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும், முத்து சரம் சூடி வரும் மற்றும் வருவான் மோகன ரூபன் பற்றியும் சிலாகித்து சொன்னவர் தன்னுடைய படங்களுக்கு எம்எஸ்வி கொடுத்த பாடல்கள் அனைத்தும் பிரமாதம் என்றார்.

    நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள் பாடலைப் பற்றி பேச்சு வந்தது. கண்ணதாசனின் தீர்க்கதரிசனத்தைப் பற்றி சொன்னார். இடையில் நில் கவனி காதலி பற்றி பேச்சு வந்தது. Under water படமாக்கம் பற்றி சொன்னார். கண்ணாடியால் செய்யப்பட்ட ஒரு டப்பில் ஒளிப்பதிவாளர் பி.என்.சுந்தரம் அவர்களை காமிராவோடு உட்கார வைத்து படமாக்க முற்பட்டதையும் நீச்சல் குளத்தில் இருந்த தண்ணீரின் அழுத்தம் தாங்காமல் கண்ணாடி விரிசல் விட்டு உடைந்து பிஎன் சுந்தரம் காலில் வெட்டியதையும் பற்றி சொன்னார். பிறகு பிளாஸ்டிக்கில் அதே போல் டப் [மிதவை] செய்து அதை படமாக்கியதையும் சுவையாக வெளிப்படுத்தினார்.

    அதே படத்தில் இடம் பெற்ற மற்றொரு பாடல். செட்டில் படமாக்காமல் முதன் முறையாக சென்னை மாநகரில் ஒரு வீட்டின் டெரசில் [terrace] அவர் படமாக்கியதை நான் புகழ்ந்து சொல்ல அவருக்கு சந்தோசம். இதையெல்லாம் இன்னும் நினைவு வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதே எனக்கு சந்தோஷமாக இருக்கிறது என்றார்.

    அவரை சந்திப்பதற்கு முதல் நாள்தான் திருச்சியில் ராஜாவின் வெற்றி செய்தி வந்திருந்தது. அதை அவரிடம் சொல்ல மிகவும் சந்தோஷப்பட்டார். நான் அப்போது டிசம்பர் மாதம் மதுரையில் சென்ட்ரலில் ராஜா தூள் கிளப்பியதை அவரிடம் சொன்னேன். ராஜா முதல் ரிலீசில் வெளியான அதே சென்ட்ரல் தியேட்டர் என்று சொன்னவுடன் சிவந்த மண் வெளியாயிற்றே அந்த அரங்கம்தானே என்று கேட்டார். 1969 சிவந்த மண் ஓபனிங் ஷோ மதுரை சென்ட்ரலில் பார்த்ததை நினைவு கூர்ந்தார். \

    இறுதியாக சிவகாமியின் செல்வன் பற்றி பேச்சு வந்தது. ஆராதனா ரீமேக் சாயலையும் மீறி படமாக்க வேண்டியிருந்ததைப் பற்றி சொன்ன அவர் அந்த விஷயத்தில் மெல்லிசை மன்னர் கொடுத்த அற்புதமான பாடல்களைப் பற்றியும் சொன்னார். படம் ஓடியதைப் பற்றி பேசும்போது பெரும்பாலானோருக்கு இருக்கும் அதே தவறான எண்ணம் அவருக்கும் இருக்கிறது என்பது தெரிய வந்தது. நான் படம் பல ஊர்களில் எப்படி ஓடியது என்பது பற்றி எடுத்து சொன்னேன். மதுரையில் தொடர்ந்து 104 காட்சிகள் அரங்கம் நிறைந்ததையும் 10 வாரத்தில் கிட்டத்தட்ட இரண்டரை லட்ச ருபாய் வசூல் வந்ததையும் விநியோகஸ்தர் பங்கு மதுரை நகரில் மட்டும் முக்கால லட்சம் வந்ததையும் சொல்லும்போது அவருக்கு ஒரே ஆச்சரியம். அப்படியா என்று கேட்டவரிடம் சென்னையில் தேவி பாரடைஸ் அரங்கில் 11 வாரங்கள் ஓடியது பற்றி சொல்லி விட்டு அந்த படம் எடுக்கப்பட்டதற்கு நீங்கள்தான் சார் வில்லன் என்றவுடன் என்ன சொல்லுகிறீர்கள் என்று கேட்டார். ஆமாம் சார். உங்கள் இயக்கத்தில் இதே சிவாஜி வாணிஸ்ரீ இணையாக நடித்த வாணி ராணி 1974 ஏப்ரல் 12-ந் தேதி அதே தேவி பாரடைஸ் அரங்கில் வெளியானது. அதனால்தான் இந்த படத்தின் 100- நாள் ஓட்டம் தடைப்பட்டது என்று விளக்கியவுடன் அப்படியா அப்படியா என்று கேட்டுக் கொண்டேயிருந்தார்.

    மதுரைக்கு விழாவில் கலந்து கொள்ள ஆசைதான். ஆனால் உடல் நிலை ஒத்துழைப்பதில்லை என்றார். படம் வெளியாகும்போது அவசியம் வருகிறேன் என்றார். மதுரையில் எந்த திரையரங்கில் விழா என்று கேட்டவரிடம் சினிப்ரியா வளாகம் என்று சொல்லிவிட்டு சார் அங்கேதான் சந்திப்பு வெள்ளி விழா கொண்டாடியது அந்த 175-வது நாள் விழா அந்த அரங்கில் நடந்ததே அதற்கு கூட நீங்கள் வந்திருந்தீர்கள் என்று நினைவுபடுத்தியவுடன் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். மக்களை காக்கும் பணியில் தன்னுயிர் நீத்த IAF Pilot பிரவீன் அவர்களுக்கு இந்த படம் dedicate செய்யபடுகிறது என்றவுடன் அவர் சற்று நேரம் உணர்ச்சிவசப்பட்டார். விழாவிற்கு வாழ்த்துக்களை சொன்ன அவரிடம் விடை பெற்று கிளம்பினோம்.

    வாசலில் அவரிடம் சொன்னேன் எங்கள் விவாத மன்றத்தில் ஒரு நடிகர் திலகத்தின் தீவிர ரசிகை இருக்கிறார். அவரைப் பொறுத்தவரை நடிகர் திலகத்தின் ரசிகர்களுக்கு நீங்கள்தான் டார்லிங் என்று சொன்னவுடன் தலை வணங்கி ஏற்றுக் கொண்டார்.

    எனவேதான் இந்த பதிவு சாரதா ஸ்பெஷல்

    அன்புடன்

  16. #3409
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    28.02.2016 ஞாயிறு நடைபெறும் மக்கள்தலைவரின் மாபெரும் வெற்றிக் காவியம் நவீன தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்ட சிவகாமியின் செல்வன் திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவிற்கு மதுரை தெற்கு தொகுதி சிவாஜி சமூகநலப் பேரவை சார்பில் ஒட்டபடஉள்ள பிரமாண்ட போஸ்டர்.
    மக்கள்தலைவரின் அன்பு கண்மணிகளே,
    கூடிடுவோம் சங்கத்தமிழ் வளர்த்த மதுரையில்
    சிங்கத்தமிழனின் விழாவிற்கு.




    சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

  17. #3410
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    2013ம் வருடம் உத்தராகாண்ட் பகுதியில் மாபெரும் வெள்ளம் ஏற்பட்ட போது, வெள்ளத்தில் சிக்கிய மக்களை காப்பாற்ற இந்திய அரசு விமானப்படையை அனுப்பியது. அதில் ஒரு இளைஞன் மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டான். மக்களைக் காப்பாற்றுவதில் மிகவும் அக்கறை கொண்டான். அவன் காப்பாற்றிய மக்களின் எண்ணிக்கை 650 ஐ தொட்டது.
    வானிலை சரியில்லாத காரணத்தினால் அவனது உயரதிகாரிகள் மீட்பு பணியை பிறகு தொடரலாம் என்று கூறுகின்றனர். ஆனால் அவன் காப்பாற்றச் சென்ற போது உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மக்கள் அவன் கண்முன் தெரிந்தனர். தனது உயரதிகாரிகளிடம் போராடி அனுமதி வாங்கிக் கொண்டு மேலும் மக்களை காப்பாற்றுவோம் என்ற நம்பிக்கையில் ஆகாயத்தில் பறந்தான்.
    நல்லவர்கள் நினைப்பது ஒன்று தான் நடப்பதில்லை இந்த நாட்டில் என்று நமது மக்கள்தலைவர் சிவாஜி அவர்கள் வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் கூறியது போல்,
    மக்களைக் காப்பாற்றச் சென்ற அந்த இளைஞன் விமான விபத்தில் உயிரிழந்தான். அந்த இளைஞன் தான் பிரவீன் என்ற விமானப்படை வீரன்.
    42 வருடங்களுக்கு முன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் நடித்து வெளிவந்த சிவகாமியின் செல்வன் திரைப்படத்தில், அவருடைய கதாபாத்திரமும் பிரவினுடைய வாழ்க்கையை பிரதிபலிப்பதாக இருக்கும்.
    எனவே தான் தற்போது சிவகாமியின் செல்வன் திரைப்படத்தை மதுரை சிவா மூவிஸார் நவீன தொழில்நுட்பத்தில் டிஜிட்டல் வடிவில் உருவாக்கியுள்ளனர்.
    நாட்டிற்காக தன் உயிரை நீத்த பிரவீண் அவர்களுக்கு சிவகாமியின் செல்வன் திரைப்படம் சமர்ப்பணம் செய்யப்படுகிறது. இநதப் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா மதுரை சினிப்பிரியா திரையரங்கில் 28.02.2016 அன்று பிரவீன் அவர்களின் தாயார் திரு.மஞ்சுளா அவர்கள் திருக்கரங்களால் குத்துவிளக்கேற்றப்பட்டு துவங்கப்படுகிறது.
    இதைப்படிக்கும் இளைஞர்களே. நீங்கள் இந்தப் படத்தைப் பார்த்தால். அது நம் நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த பிரவீன் அவர்களுக்கு செய்யும் மரியாதையாக இருக்கும்.
    மீண்டும் தொடருகிறேன் விரைவில்.....




    சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •