-
26th July 2016, 08:52 PM
#11
Junior Member
Senior Hubber
அன்புள்ள மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் அன்பு இதயங்களே,
21.07.2016 அன்று நமது தலைவரின் நினைவுநாள் ரசிகர்களின் சார்பில் தமிழகமெங்கும் அனுசரிக்கப்பட்டது. அதிலும் கட்சி பாகுபாடின்றி அனைத்துக்கட்சியினரும் நமது மக்கள்தலைவரின் சிலைக்கும், படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். நடிகர்திலகம் சிவாஜி அவர்கள் நாட்டை ஆண்டவர் இல்லை, ஆனால் உலகெங்கும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களை இன்று ஆண்டுக் கொண்டிருப்பவர். இவரால் பதவி சுகம் அனுபவித்தவர்கள் அவரை மறந்த போதும், இன்றும் அவரை மனதார நேசிக்கும் ரசிகர்கள் கூட்டம் உலகெங்கும் பரவிக் கிடக்கின்றனர்.
தன்னை வளர்த்துக் கொள்ள சிவாஜி அவர்களின் பெயரைப் பயன்படுத்திக் கொள்பவர்கள் சிலரின் மத்தியில், சிவாஜி அவர்களின் பெயரை உலகெங்கும் பரவச் செய்ய தன்னலம் கருதாமல் உழைக்கு பெரும்பாலான ரசிகர்களின் கூட்டம் இருக்கிறது என்பதை நிரூபிக்கும் வகையில் தமிழகத்தில் பட்டிதொட்டியெங்கும் மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது. இது ஒரு பகுதி தான். ஒவ்வொரு வீட்டிலும், தெருவிலும் நமது தலைவரின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டுள்ளது.
உலகில் எந்த ஒரு கலைஞனுக்கும் இப்படி ஒரு மரியாதை கிடைக்குமா என்பது சந்தேகம் தான். வருடாவருடம் அவரது ரசிகர்கள் அதிகரித்துக் கொண்டே போகிறார்களே ஒழிய குறைந்தபாடில்லை.
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
26th July 2016 08:52 PM
# ADS
Circuit advertisement
Bookmarks