-
15th February 2017, 11:47 AM
#1
Junior Member
Diamond Hubber
பூமிய நம்பி வாழறவனுக்கு மழ தான் சாமி.அது ஒண்ணுக்கு ஊத்தற மாதிரி ஊத்துனாலும் ஏதோ ஒரு சாண்
வயிறுனாச்சும் நெறையும். மழைங்கிறதே மாயமாகிப் போச்சு, அப்பிடிங்கிற நெலம வந்தா ஊர் சனம் என்ன செய்யும்? பஞ்சந்தா தல விரிச்சு ஆடயில பாவி மக்க எங்கிட்டு போவாங்க? கூலி வேல தான் நாதின்னு இருக்கிற கூட்டம் கூழ கும்பிடு போட்டுகிட்டு பஞ்சம் தேடி மறு தேசம் போவாங்க.
கஞ்சியோ, கூழோ ஏதோ ஒண்ணு கிடச்சாத்தானே வயிறு கேக்கும்.அதுக்கு கூட வக்கில்லாம குடல எத்தன நா(ள்) சாகடிக்கிறது.
இந்த நிலமையில தான் பாரபட்டிக்கு வராங்க குயிலும், அவங்கப்பனும்.
அவுக எந்த சாமிய நெனச்சு அந்த பூமிக்கு வந்தாங்களோ தெரியாது, ஆனாஅவுகளமுதலா
பாக்குறதுதென்னமோ மலைச்சாமிதான்.
வந்தவங்க வாழ்ந்த ஊரு பேரு "அரைக்குடித்தனம் பட்டி ".ஒரு வயசாள ஆளு, ஒரு கொமரிபுள்ள, அவங்களுக்கு ஒத்தாசையா ஒருத்தன்.வயலுக்கு அரணா போட்ட வேலிப்படல மிதிச்சுகிட்டு உள்ள வராங்க.பெரிசு பாத்துட்டு சத்தம் போடுது.
"எவண்டாவன், வேலிய மிதிச்சுகிட்டுஉள்ள வர்றது "
வயசான ஆளு சொல்றான்,
" அஞ்சாதிங்க சாமி , பஞ்சம் பொழைக்க வந்திருக்கோம் "னு.
பெரிசு கேக்குது,
" இங்கயே பஞ்சம் அவுத்துப் போட்டு அம்மணத்தோட ஆடுது.நீங்க வேற பஞ்சம் பொழைக்க வந்துட்டீங்களா ".
சித்த நேரம் யோசிக்கிறாரு.
பாக்கவும் பாவமா இருக்குது.இல்லாதவங்கள விரட்டியடிக்கவும் மனசில்ல.ஒரு மனசா, அவங்கள ஒரு ஓரமா குடிசையப் போட்டு தங்கிக்கவும் சொல்லுது பெரிசு.
அந்த "மழைச்சாமி "கை விட்டாலும், இந்த
"மலைச்சாமி "யால
பஞ்சம் பொழைக்க வந்தவங்களுக்கு ஒரு வழி பொறக்குது.
வந்தவங்கள்ள ஒரு கொமரி இருக்கா ல்ல.அவ பேரு குயிலு.அவளுக்கு பேருக்கேத்த குரலுதா.மனசுல ஒண்ணும் வச்சிக்கத் தெரியாது.ஆளு கருப்பு.மனசு வெள்ள.
அம்பா வந்தாலும், வம்பா வந்தாலும், வர்ற வார்த்தைக்கு சளைக்கமா பட்டுன்னு சொல்லிருவா பதில.
களங்கமில்லாத அவ பேச்சு பழக்கம் எல்லாம் பெரியசாமிக்கு புடிச்சுப் போச்சு.
அதே சமயம் அவர அப்பப்போ சீண்டி விட்டு விளையாட்டும் பண்றது அவளுக்கு பழக்கமாவும் போச்சு.
அப்பிடித்தான் ஒரு நா,
பேச்சு வாக்குல பெரிச கிழவன்னுட்டுர்றா.பெருசுக்கு பொத்துகிச்சே கோபம். என்னய்யா கிழவங்கற.உன்ன மாதிரி கொமரிக என் கையில ஊஞ்ச கட்டி ஆடலாம்னு தன் வீரத்த சலிக்க,
அதுக்கு அவ
பெரிய பாறாங்கல்ல தூக்க முடியுமா உன்னாலன்னு ஒரு கேள்விய கேட்டுப்புட்டா.கேட்டுப்புட்டு ஓடிப்புட்டா.வீரத்தப்பத்தி பொம்பள பழிச்சா பொட்டையனுக்கும் ரோஷம் வருமே.பெருசுக்கு சொல்லவா வேணும்.அவ கேட்டதுல நிலை கொள்ளல.வேட்டிய மடிச்சுக் கட்டிட்டு கல்லதூக்கிப் பார்க்கிறாரு..தூக்கறாரு. தூக்கறாரு..ம்கூம்.அரையடி தூக்குறதுக்குள்ள மூச்சு வாங்குது.இது சரிப்பட்டு வராதுன்னு அப்ப நடய கட்டுறாரு.இத அவளும் தூரத்திலிருந்து பாத்துகிட்டுதா இருக்கா.
பெருசு அந்த கல்லு வழியா தா அப்பப்போ வரும்.போகும்.கல்ல பாக்கையில அவ கேள்விதா மனசுல குடயும்.அப்பப்போ தூக்கிப் பாக்கும்.கொஞ்சம் தூக்குறதும் பின்ன வக்கிறதும் பல நா பொழப்பாப் போச்சு.
இது ஒரு சாதாரண விஷயந்தானே? பெரிசுக்கு ஏன் வயசுக்கு ஒப்பாத காரியம்.
என்ன ஆச்சு பெரிசுக்கு?
******
முதல் மரியாதை...
Last edited by senthilvel; 15th February 2017 at 04:05 PM.
-
15th February 2017 11:47 AM
# ADS
Circuit advertisement
Bookmarks