-
26th March 2016, 12:06 AM
#181
RKS,
This is again for you. I have already said that no more discussions on the impending Assembly elections here in this thread. Everyone whom I had mentioned have agreed. In spite of that if you are going to write about it again under whatever pretext, then it means that you have no inclination to adhere to the rules laid down. Sorry that cannot be allowed.
As I had mentioned earlier please debate about the election related matters in Current Affairs section. I sincerely hope that my moderating tools will not be put to use.
Thanks in advance
Regards
-
26th March 2016 12:06 AM
# ADS
Circuit advertisement
-
26th March 2016, 10:55 AM
#182
Junior Member
Veteran Hubber
Monotony Breaker!
அதிசய ஆடல் பாடல் இதயத் திருடர்கள்
தில்லா டாங்கு டாங்கு திருப்பிப் போட்டு வாங்கு ! தீம் தீம் ஜனக்தா ஜனக்தா அஜக்தா மஜக்தா ரையா ரப்பான் சையா சப்பான் டோலடிக்கிற பையா....
ஏதாவது புரிகிறதா ...என்னமோ போங்க!!
ஆனாலும் பாமரனுக்கும் பூமரமாகப் புரிகிற உடல்மொழியில் கைகால் அசைவில் முகபாவனைகளில் க க போவாக உற்சாகத்தைத் தூண்டும் தூண்டில் மீன் நடனமே டப்பாங்குத்து என்னும் சாகாவரம் பெற்ற அடி பின்னுகிற இடி மின்னுகிற ஆட்ட பாட்ட தோட்டக் கலையாகும் !
இந்த சண்டமாருத தெருக் கூத்து வாரிசுக் கலையில் நிகரற்ற சாம்ராஜ்யாதிபதி
நடிகர்திலகமே !அந்த உற்சாக துள்ளலை
கள்வனின் காதலியோடு சேர்ந்து சதாரமாக சேதாரமில்லாமல் கண் கொட்டாமல் ரசிப்போமே!
டப்பாங்குத்து அடி 1 : நடிகர்திலகத்தின் foot tapping steps in சதாரம்drama scene from Kalvanin Kaadhali!
பெண்ணாக அதகளம் பண்ணும் டி ஆர் ராமச்சந்திரன்!
உடலும் உள்ளமும் சோர்வடையும் கணங்களில் ஆற்றல் ஊற்றல் பானங்கள் தேவையில்லை!
நடிகர்திலகத்தின் இக்கான நடனமே நம்மை சுறுசுறுப்பாக்கிவிடும் கிரியா ஊக்கி!!
Even the demi-Gods of foot tapping dances of this Universe Gene kelly and Fred Astaire would envy upon NT's dancing to the tune shaking of legs!!
டப்பாங்குத்து இடி1
இதே தில்லா டாங்கு டாங்கு திருப்பிப் போட்டு வாங்கும் மனோரமா தில்லானாவில்....!
right before the eyes of NT as spectator enjoying at his original replayed!
டப்பாங்குத்து மின்னல்1 :
அதிசயத் திருடன் ஜெமினியும் டப்பாங்குத்து குத்துகிறாரே !
Sadhaaram Hero GG too tries a leg shaking as the Adhisaya Thirudan!
Last edited by sivajisenthil; 26th March 2016 at 12:56 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
26th March 2016, 02:33 PM
#183
Junior Member
Senior Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
26th March 2016, 02:40 PM
#184
Junior Member
Diamond Hubber
அதிர்ஷ்டம் ஒருமுறைதான் கதவைத் தட்டுமாம்....
அப்படி ஒரு தடவை கதவை தட்டும்போதே , அதை விட்டுடாம வீட்டுக்குள்ளே பிடிச்சு தள்ளி கதவை சாத்திடணும்..”
# ஹஹா... இன்று நான் ரசித்துச் சிரித்த நண்பரின் பதிவு இது...!
‘தூக்குத்தூக்கி’ என்று ஒரு படம்...சிவாஜி நடிப்பில் தயாராகிக் கொண்டிருந்தது...
அந்தப் படத்தில் மொத்தம் எட்டுப் பாடல்கள்..
சிவாஜிக்கு பின்னணி பாடுவதற்காக , அப்போது பிரபலமாக விளங்கிய பாடகர் திருச்சி லோகநாதனிடம் கேட்டபோது அவர் சொன்னார்...
“ஒரு பாடலுக்கு ஐநூறு ரூபாய். எட்டும் பாடுவதற்கு நான்காயிரம்”
.”எட்டாயிரமா..?கொஞ்சம் குறைச்சுக்கலாமே..?” என்று தயாரிப்பாளர்கள் கேட்க...
“அப்படி ரேட்டைக் குறைத்துக்கொண்டு என்னால் பாட முடியாது. வேணும்னா உங்களுக்கு ஒரு வழி சொல்கிறேன். மதுரையிலிருந்து செளந்தரராஜன் என்கிற புதுசா ஒரு பாடகர் வந்திருக்கிறார். அவரைக் கேட்டுப்பாருங்கள்” ...
திருச்சி லோகநாதனின் அந்த ஆலோசனையைக் கேட்டு ஆளுக்கு ஒரு பக்கம் தேடி, அடுத்த நாளே தொகுளுவ மீனாட்சி அய்யங்கார் செளந்தரராஜன் என்கிற டி.எம்.எஸ்.ஸைப் பிடித்தார்கள்.
“எட்டுப் பாடல்களையும் நீங்களே பாடுங்கள். மொத்தமாக இரண்டாயிரம் ரூபாய்தான் சம்பளம் தர முடியும்.... ஒப்பந்தம் போட்டுக் கொள்ளலாமா?” என்று தயக்கத்துடன் தயாரிப்பு தரப்பு கேட்க.... எவ்வளவு முடியுமோ அவ்வளவு வேகமாகத் தலையாட்டினார் டி.எம்.எஸ்.
காரணம்....மதுரை பஜனை மடங்களில் பாடி, அதற்குச் சன்மானமாக காப்பி ..காராச்சேவு, பக்கோடா மற்றும் இரண்டு ரூபாய் வாங்கிய காலம் அது...
ஆனால்..அந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நிலைக்கவில்லை.
“தூக்குதூக்கி” கதாநாயகன் சிவாஜி சொன்னார்.. "‘பராசக்தி’யில் குரல் கொடுத்த சி.எஸ். ஜெயராமன்தான் எனக்குப் பொருத்தமாக இருக்கும்... அந்த ஜெயராம பிள்ளையைப் பாடவைக்காமல், நேற்று வந்தவரை எல்லாம்…” என்று அதிருப்தியுடன் சிவாஜி இழுக்க...
பார்த்தார் டி.எம்.எஸ்..! கதவைத் தட்டும் அதிர்ஷ்டத்தை உள்ளே பிடிச்சு தள்ளி கதவை சாத்திடணும் என்று உறுதியான முடிவை உடனே எடுத்தார்...
. சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் சிவாஜியிடம் ஒரு சவால் விட்டார்...
“ நான் பாடுவதை ஒலிப்பதிவு செய்து கேளுங்கள். பிடிக்கவில்லை என்றால் நான் விலகிக்கொள்கிறேன்”
அசராமல் டி.எம்.எஸ். சொன்னதை , அரைகுறை மனதோடு ஒப்புக்கொண்டார் சிவாஜி.
மளமளவென்று மூன்று பாடல்களை ஒலிப்பதிவு செய்து சிவாஜிக்குப் போட்டுக்காட்டினார் இசையமைப்பாளர் ஜி.ராமநாதன்.
சிவாஜிக்கு ஒரே சந்தோஷம்... “அட..என் குரல் மாதிரியே பாடி இருக்காரே...நல்லா வந்திருக்கு. எல்லாப் பாட்டையும் நீங்களே பாடுங்க”
‘பெண்களை நம்பாதே…’, ‘ஏறாத மலைதனிலே…’ ..என தூக்குத்தூக்கியின் அத்தனை பாடல்களையும் டி.எம்.எஸ்ஸே பாடி அமர்க்களப்படுத்தினார்...!
# டி.எம்.எஸ்.வாழ்க்கையில் நடந்த இந்த சம்பவத்தை , அதிர்ஷ்டம் என்பதா..? தைரியம் என்பதா..?
# இதற்கு நண்பர் சொன்ன பதில் பொருத்தமாக இருக்கிறது...
“அதிர்ஷ்டம் என்பது ஒருதலைக்காதல் ..
தைரியசாலிகளை மட்டுமே அது எப்போதும் காதலிக்கிறது...!”
courtesy net
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
26th March 2016, 06:44 PM
#185
Junior Member
Senior Hubber
உலகமெல்லாம் உன்னைப்
புகழ வேண்டும்
என்கிறாள் அம்மா.
மதிப்பும்,மரியாதையுமாய்
நீங்கள் வலம் வரும்
இடங்களிலெல்லாம்
மகிழ்வுடன் உங்கள்
அருகிருக்க வேண்டும் நான்
என்கிறாள் மனைவி.
எல்லோரும் ஒன்றாக,
எல்லாமும் நன்றாக
என் தலைமைக்கு
ஏங்குகின்றன
சொந்த பந்தங்கள்.
எப்போதும் மாறாத
நேரந் தவறாமையையும்,
தொழில் பக்தியையும்
எதிர்பார்க்கிறது
வேலை பார்க்குமிடம்.
எல்லோரிடமும்
கேட்கிறேன்..
நானென்ன
நடிகர் திலகமா?
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
26th March 2016, 07:06 PM
#186
Junior Member
Diamond Hubber
22அல்லது 23 வருடங்களுக்கு முன்பு ஜுனியர்விகடனில் வெளியான செய்தி
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
26th March 2016, 07:37 PM
#187
Junior Member
Senior Hubber
அந்தக் குழந்தைக்கான
அன்புத் தூளிகள்,
அத்தனை
உத்திரங்களிலும்
தொங்கின.
அந்தக் குழந்தையை
முத்தமிட
அவனி முழுதும்
உதடுகள் குவிந்தன.
அந்தக் குழந்தை
அதிவேகமாக
வளர்ந்தது.
என்னென்னமோ
சாதனை விளையாட்டு
விளையாடிற்று.
எப்படியெப்படியோ
தன்னை
நிரூபித்தது.
அகவை முதிர்ந்த
எழுபத்து நான்கிலும்
இருந்தது-அது
குழந்தையாகவே..
எல்லோருக்கும்
பிரியமான
குழந்தையாகவே..!
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
26th March 2016, 07:42 PM
#188
Junior Member
Senior Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
26th March 2016, 08:20 PM
#189
Junior Member
Senior Hubber
பிறப்பென்பதென்ன..?
ஒரு அன்னை,
தன் பத்து மாத
வயிற்றுச் சுமையை
பூமியை நோக்கிப்
புறந் தள்ளுவதின்
வெளிப்பாடா?
பூமியில்
ஒரு மனிதனுக்கான
வெற்றிடத்தை நிரப்பும்
இறைவனின் செயல்பாடா?
ஆமாம்.. ஆமாம்
என்கின்றன
ஆயிரமாயிரம்
சராசரி பிறப்புகள்.
இல்லை.. இல்லை
பிறப்பென்பது
இலட்சியக் கோட்டைக்குச்
செல்லும் வழியென்றும்,
வாழ்வைப் பேசும்
ஆண்டவன் மொழியென்றும்
உணர்த்துகின்றன..
உங்களுடையதைப் போன்ற
சில சாதனைப் பிறப்புகள்.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
26th March 2016, 11:28 PM
#190
Senior Member
Seasoned Hubber
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
Bookmarks