-
19th May 2016, 07:19 PM
#1161
Senior Member
Seasoned Hubber
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 2 Thanks, 2 Likes
-
19th May 2016 07:19 PM
# ADS
Circuit advertisement
-
19th May 2016, 08:24 PM
#1162
Junior Member
Devoted Hubber
From Vikatan by Panju Arunchalam,
பவநாராயணாவைச் சந்திக்கப் போனேன். ‘செப்பன்டி குட் ஸ்டோரி’ - தெலுங்கு, ஆங்கிலம், தமிழ் என மும்மொழி கலந்து பேசினார். ‘நிறையக் கதைகள் வெச்சிருக்கேன் சார். யார் ஆர்ட்டிஸ்ட்?’ - எனக்கு அவர் அறிமுகம் இல்லாதவர் என்பதால், எந்தவித பயமும் இல்லாமல் பேசினேன். தவிர, அவர் பெரிய ஆள் என்பது அப்போது எனக்குத் தெரியாது. ‘நுவ்வே... அதெல்லாம் உனக்கு எதுக்கு. இட்ஸ் மை ப்ராப்ளம். யூ ஆர் தி ஸ்டோரி ரைட்டர். டெல் த ஸ்டோரி’ என்றார்.
‘யார்னு சொன்னீங்கன்னா, அவங்களுக்கு தகுந்த கதை சொல்வேன்’ என்றேன்.
`எம்.ஜி.ஆர்., சிவாஜி ரெண்டு பேரும் பெத்தவாடு. பட் சிவாஜி ஈஸி அப்ரோச். அதனால அவருக்கே செப்பு’ என்றார். எனக்கு சந்தோஷம். காரணம், எந்த நடிகருக்கு எப்போது வேண்டுமானாலும் கதை கேட்கலாம் என்பதால், நான் சிவாஜிக்கும் கதை பண்ணிவைத்திருந்தேன். அதைச் சொன்னேன்.
பிறகு, அவர் சிவாஜி வீட்டுக்குப் போய் அவரின் தம்பி சண்முகத்தைப் பார்த்துப் பேசியிருக்கிறார். சிவாஜியின் கால்ஷீட், சம்பளம் உள்ளிட்ட விஷயங்களை சண்முகம்தான் கவனிப்பார். ‘யார் பஞ்சுவா? நல்லா தெரியுமே, நம்ம பையன். வரச்சொல்லுங்க, கேட்ருவோம்’ எனச் சொல்லியிருக்கிறார். இதற்கு இடையில் படத்தின் இயக்குநராக கே.எஸ்.பிரகாஷ்ராவை முடிவுசெய்தனர். அவர் தெலுங்கில் மிகப் பெரிய இயக்குநர். (நடிகை ஜி.வரலட்சுமியின் கணவர். பிரகாஷ் ஸ்டுடியோ உரிமையாளர். அவர், மகன்கள் அனைவரும் இயக்குநர், ஒளிப்பதிவாளர் என சினிமா குடும்பம். சிவாஜி, வாணிÿ நடித்த ‘வசந்தமாளிகை’யை இயக்கியவர்.)
கதை சொல்ல சிவாஜி வீட்டுக்குப் போனேன். சிவாஜி புரொடக்*ஷனில் அப்போது கதை கேட்க சண்முகம் உள்பட நான்கைந்து பேர் இருந்தனர். எனக்கு என்றைக்கும் இல்லாத பதற்றம். காரணம், பவநாராயணா பெரிய தயாரிப்பாளராக இருந்தாலும் அறிமுகம் இல்லாதவர். அவரிடம் பயம் இல்லாமல் கதை சொல்லிவிட்டேன். ஆனால், கவிஞருடன் செல்கையில் சண்முகம் எனக்கு நல்ல அறிமுகம். என்ன சொல்வாரோ என்ற தயக்கம். உதவியாளராக இருந்த பையனை திடீரென கதாசிரியனாக உட்காரச் சொன்னால்? கதை கோர்வையாக வரவில்லை. நான் நினைத்ததுபோலவே உணர்ச்சியுடன் என்னால் கதையைச் சொல்ல முடியவில்லை. ‘இல்லண்ணே இதுக்கு அப்புறம்தான் அது, அதுக்கு அப்புறம்தான் இது’ - நான் சொதப்பியது எனக்கே தெரிந்தது.
‘சரி பஞ்சு, நான் புரொடியூசர்கிட்ட பேசுறேன்’ என்ற சண்முகம், பிறகு பவநாராயணாவிடம் பேசியிருக்கிறார். ‘நீங்களும் முதன்முதல்ல தமிழுக்கு வர்றீங்க. ஹெவி சப்ஜெக்ட்டா எடுத்து பண்ணலாம். பஞ்சு சொன்ன கதை, அண்ணணுக்கு சரியா வருமானு சந்தேகமா இருக்கு’ எனச் சொல்லியிருக்கிறார். பின்நாட்களில் நான் வளர்ந்த பிறகு, அந்தக் கதையின் ஒரு பகுதியை ஜெய்சங்கரையும் ÿகாந்தையும் வைத்து ‘உன்னைத்தான் தம்பி’ எழுதினேன். இன்னொரு பகுதியைக் கொஞ்சம் மாற்றி ரஜினியை வைத்து ‘ராஜா சின்ன ரோஜா’ எழுதினேன். ஏவி.எம் தயாரித்த அந்தப் படம் சூப்பர் ஹிட் ஆனது. இன்று உள்ள அனுபவத்தில் சொல்கிறேன்... அன்று அந்தக் கதையை சிவாஜி பண்ணியிருந்தால் நிச்சயம் சூப்பர் ஹிட் ஆகியிருக்கும்.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
21st May 2016, 12:16 AM
#1163
Junior Member
Senior Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
21st May 2016, 12:32 AM
#1164
Junior Member
Senior Hubber
அய்யா நடிகர் திலகத்தின் புகழ் காக்கும் ஆவணங்களைத் தான் காக்கும் ஆருயிர் நண்பர்
திரு.செந்தில்வேல் அவர்களின்
சந்தோஷ நல்வாழ்வை கடவுள்
காக்கட்டும்.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
-
21st May 2016, 07:04 AM
#1165
Senior Member
Seasoned Hubber
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
21st May 2016, 07:05 AM
#1166
Senior Member
Seasoned Hubber
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
21st May 2016, 08:21 AM
#1167
Junior Member
Veteran Hubber
Happy Birthday wishes Senthilvel!
Greetings for your continued service to NT's documentations
-
21st May 2016, 09:01 AM
#1168
Junior Member
Seasoned Hubber
Wish you many more happy returns of the day Mr Senthilvel
S Vasudevan
-
21st May 2016, 10:54 AM
#1169
Senior Member
Seasoned Hubber
இன்று (21-05-2016) பிறந்தநாள் காணும் திரு.செந்தில்வேல் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
21st May 2016, 11:59 AM
#1170
Junior Member
Devoted Hubber
From Dinamani,
பாலும் பழமும் நினைவினில் ஏந்தி சரோ கூறியவை-
‘பாலும் பழமும் படத்தில் நடிகர் திலகம் டாக்டராகவும், நான் அவரது காதல் மனைவியாகவும் நடிச்சோம். படப்பிடிப்பு முடிஞ்சதுக்கு அப்புறம் சிவாஜி என்னிடம், ‘சரோஜா... இந்தப் படத்துல நீ என்னை விட நல்லா நடிச்சிருக்கே’என்றார். நான் சிலிர்த்துப் போயிட்டேன்.
அவர் நடிப்புக்கு முன்னாடி நானும் கொஞ்சம் நடிச்சிருந்தேன். ஆனா என் நடிப்பை அவர் நடிப்புக்கும் மேலா வெச்சு சொன்னார் பாருங்க. அதுதான் அவரை மத்தவங்கக் கிட்டயிருந்து வித்தியாசப்படுத்துது.
அந்த கேரக்டருக்காக நானும் கொஞ்சம் கஷ்டப்பட்டுருக்கேன். அதில் நான் இரண்டு விதமாத் தெரிவேன். அதாவது டி.பி. பேஷண்டா இருக்கிறப்ப ரொம்ப வற்றி உலர்ந்து காணப்படுவேன். மத்த சீன்கள்ள வழக்கம் போல் தெரிவேன்.
டி.பி. பேஷண்ட் சீன்ல நான் அப்படி மெலிவா தெரியறதுக்கு காரணம் நான் கிடந்த கொலைப்பட்டினிதான். சாப்பாடு நேரத்துல கொஞ்சம் ஜூஸ் மட்டுமே சாப்பிட்டு உடலை இளைக்க வெச்சிருக்கேன்.
ஒரு வேளை என் கேரக்டர் மேலே நான் காட்டின அக்கறை சிவாஜி சாரை இப்படிச் சொல்ல வெச்சிருக்கலாம்’.
பாகப்பிரிவினையைத் தொடர்ந்து சரவணா பிலிம்ஸ் தயாரித்த படம் பாலும் பழமும். செப்டம்பர் 9ல் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியானது. சென்னையில் 20 வாரங்களைக் கடந்து ஓடியது.
1961ல் ஜனாதிபதி பரிசுக்காகச் சென்ற நாலு படங்களும் சிவாஜியுடவை. அவற்றில் மூன்று பீம்சிங் இயக்கியவை.
அவை மொத்தமாக மோதியதில், பாலும் பழமும் பரிசைத் தவற விட்டது.
அகில இந்தியாவிலும் பாவமன்னிப்பு மிகச் சிறந்த படம் என்கிற விருதையும், பாசமலர் சான்றிதழையும், கப்பலோட்டிய தமிழன் வெள்ளிப்பதக்கத்தையும் பெற்றது.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
Bookmarks