Page 234 of 400 FirstFirst ... 134184224232233234235236244284334 ... LastLast
Results 2,331 to 2,340 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part-18

Hybrid View

  1. #1
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  2. Likes Harrietlgy liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #2
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like




  5. Likes Harrietlgy liked this post
  6. #3
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    290
    Post Thanks / Like
    இன்று பராசக்தி வெளிந்த 64 வது வருடம்










    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. Likes Harrietlgy liked this post
  8. #4
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    QATAR
    Posts
    0
    Post Thanks / Like
    From Vikatan,

    கண்ணதாசனின் தத்துவப்பாடல்களும் சிவாஜிகணேசனின் கதாவிலாஸமும்!



    அறிஞர் என்றால், அண்ணா
    கலைஞர் என்றால், கருணாநிதி
    கவிஞர் என்றால், கண்ணதாசன்'

    என்று சொல்வார்கள். இன்று கண்ணதாசன் நினைவு நாள். பூமிப்பந்தின் வரலாற்றில், தனது சொந்த வாழ்க்கையையே ஒரு பரிசோதனைக்களமாக்கி அதில் பலதரப்பட்ட அவதாரங்களையும் அதற்கேற்ற பலவிதமான வாழ்க்கையையும் வாழ்ந்து பார்த்து, அதன் விளைவுகளை, அதன் முடிவுகளை வெளிப்படையாக எல்லோருக்கும் கூறிய பெருமை ஒருவருக்கு, ஒரே ஒருவருக்கு உண்டு என்றால், அது கவிஞர் கண்ணதாசனுக்கு மட்டுமே உண்டு.

    குழந்தையைப்போல் வெள்ளை உள்ளம் படைத்த அவர், மனிதனாக, ஞானியாக தன் வாழ்க்கையை ஆய்ந்து, அதில் இறைவனின் பங்களிப்பையும் கலந்து அவற்றைத் தன் பாடல்களின் மூலம் வெளிப்படுத்தினார். அதனால்தான் `வனவாசம்’என்னும் தனது சுயசரிதையின் முன்னுரையில், 'ஒரு பெருமிதம் எனக்குண்டு. என் தலைமுறையில் வாழும் எந்த மனிதனுக்கும் தலைவனுக்கும் கவிஞனுக்கும் இத்தகைய சுயசரிதம் அமையாதென்பதே அது. இப்படி ஒன்று அமையவேண்டும் என்றால், யாரும் நீண்டகாலம் முட்டாளாக இருக்க வேண்டும். அது எல்லோருக்கும் கைவரக்கூடிய கலை அல்ல! ‘எப்படி வாழவேண்டும்?’ என்பதற்கு இது நூலல்ல; ‘எப்படி வாழக்கூடாது!’ என்பதற்கு இதுவே வழிகாட்டி' என்று குறிப்பிடுகின்றார்.

    கண்ணதாசன், எழுத்தாளர், கவிஞர், நாவலாசிரியர், பத்திரிகையாளர், திரைப்படப் பாடலாசிரியர், கதை-வசனகர்த்தா, அரசியல் கட்சித் தலைவர், திரைப்படத் தயாரிப்பாளர், ஆன்மிகச் சொற்பொழிவாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவர். இதில், பலவற்றில் வெற்றியையும் சிலவற்றில் தோல்வியையும், நிறைய நண்பர்களையும், நிறைய எதிரிகளையும் அவர் சந்தித்தார். இப்படிப் பலதரப்பட்ட முகங்களை அவர் கொண்டிருந்தாலும், திரைப்படப் பாடலாசிரியராகத்தான் அவர் பெரும் வெற்றி பெற்றுள்ளார்.

    காலத்தால் அழியாத சாகா வரம் பெற்ற பாடல்களை வழங்கியதில், அவர் நேற்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் முடிசூடா மன்னனாக, ஒப்பாரும் மிக்காரும் இல்லாத கவிஞராகத் திகழ்கிறார். வாழ்க்கைப் படிப்பினைகளை, தோல்விகளை, துன்பங்களை சிக்கல்களை தானே அனுபவித்ததால் நெருப்பில் புடம்போட்ட தங்கமாக மின்னும் ஞானத்தை அவருக்கு இணையாக இன்றளவும் எவரும் பெறவில்லை என்றே சொல்லலாம்.

    55 வயது மட்டுமே வாழ்ந்த முத்தையா என்னும் கண்ணதாசனுக்கு கண்ணனின் மேல் அலாதிப் பிரியம். கண்ணனைப் பாடு பொருளாகக் கொண்டு சிலேடையுடன் சினிமா கதாபாத்திரங்களுக்கு எழுதிய பாடல்கள் எல்லாம் ஹிட் என்றாலும், 'வானம்பாடி' திரைப்படத்தில் அமைந்த இந்தப் பாடலில்,

    'கங்கைக் கரைத் தோட்டம் கன்னிப் பெண்கள் கூட்டம் கண்ணன் நடுவினிலே காலையிளங்காற்று பாடி வரும் பாட்டு
    எதிலும் அவன் குரலே... கண்ணன் முகத் தோற்றம் கண்டேன்... கண்டவுடன் மாற்றம் கொண்டேன்' என்பவர், 'கண்ணன் முகம் கண்ட கண்கள், மன்னன் முகம் காண்பதில்லை...கண்ணனுக்குத் தந்த உள்ளம் இன்னொருவர் கொள்வதில்லை' என மேலும் சொல்வது, ரொம்பவே சிறப்பு.

    நடிகர்திலகம் சிவாஜி கணேசனின் திரைக் கதாபாத்திரங்களுக்கும் கண்ணதாசனின் சொந்த வாழ்வு அனுபவங்களுக்கும் நிறையவே தொடர்பு இருப்பதுபோல் அவரது படத்தில் இடம் பெற்ற தத்துவப் பாடல்கள் அமைந்திருக்கும். அந்தப் பாடல்களுக்கான பின்னணி, கண்ணதாசன் வாழ்வின் ஏதோ ஒரு சம்பவத்துடன் தொடர்புள்ளதாக இருக்கும். சிவாஜி கணேசன் நடிக்க, கண்ணதாசன் பாட்டெழுத, டி.எம்.சௌந்தர்ராஜன் பாட எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைக்கவேண்டும். அதை இரவு நேரங்களில் கேட்க வேண்டும். இத்தனைக்கும் இந்தப் பாடல்களை எழுதும்போது கவிஞரின் வயது 35தான் என்பது மிகப்பெரிய ஆச்சர்யமான ஒன்றாகும். கண்ணதாசனின் தங்க வரிகளில் மின்னும் சில வைரங்கள்:

    படம்: பார்த்தால் பசி தீரும்
    'உள்ளம் என்பது ஆமை... அதில் உண்மை என்பது ஊமை...
    சொல்லில் வருவது பாதி... நெஞ்சில் தூங்கிக் கிடப்பது மீதி...
    தெய்வம் என்றால் அது தெய்வம்... அது சிலை என்றால் வெறும் சிலைதான்
    உண்டென்றால் அது உண்டு... இல்லை என்றால் அது இல்லை'

    படம்: பாவ மன்னிப்பு
    'வந்தா நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை...
    வான்மதியும் மீனும் கடல் காற்றும் மலரும் மண்ணும் கொடியும் சோலையும்
    நதியும் மாறவில்லை... மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்
    பறவையைக் கண்டான்... விமானம் படைத்தான்
    பாயும் மீன்களில் படகினைக் கண்டான்
    எதிரொலி கேட்டான்... வானொலி படைத்தான்
    எதனைக் கண்டான்... பணம்தனைப் படைத்தான்'

    படம்: பாவ மன்னிப்பு
    `எல்லோரும் கொண்டாடுவோம்... அல்லாவின் பெயரைச் சொல்லி
    நல்லோர்கள் வாழ்வை எண்ணி எல்லோரும் கொண்டாடுவோம்...
    நூறு வகைப் பறவை வரும்... கோடி வகைப் பூ மலரும்...
    ஆட வரும் அத்தனையும் ஆண்டவனின் பிள்ளையடா...
    கறுப்பில்ல வெளுப்பும் இல்லே... கனவுக்கு உருவமில்லே (2)
    கடலுக்குள் பிரிவும் இல்லை.... கடவுளில் பேதமில்லை...
    முதலுக்கு அன்னையென்போம்... முடிவுக்கு தந்தையென்போம்
    மண்ணிலே விண்ணைக் கண்டு ஒன்றாய்க் கூடுவோம்...’

    படம்: ஆலயமணி
    `சட்டி சுட்டதடா கை விட்டதடா! புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா!
    புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா! நாலும் நடந்து முடிந்த பின்னால்
    நல்லது கெட்டது தெரிந்ததடா! சட்டி சுட்டதடா கை விட்டதடா!
    பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக்கொண்டதடா
    மீதி மனதில் மிருகம் இருந்து ஆட்டிவைத்ததடா
    ஆட்டிவைத்த மிருகம் இன்று அடங்கிவிட்டதடா

    படம்: ஆண்டவன் கட்டளை
    ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
    தேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
    ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத் தெரிந்த மிருகம்
    அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம் - இதில்
    மிருகம் என்பது கள்ள மனம் உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம் - இந்த
    ஆறு கட்டளை அறிந்த மனது ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்’

    படம்: குங்குமம்
    `மயக்கம் எனது தாயகம், மௌனம் எனது தாய்மொழி
    கலக்கம் எனது காவியம், நான் கண்ணீர் வரைந்த ஓவியம்
    நானே எனக்குப் பகையானேன் - என்
    நாடகத்தில் நான் திரை ஆனேன், தேனே உனக்குப் புரியாது
    அந்த தெய்வம் வராமல் விளங்காது, விதியும் மதியும் வேறம்மா - அதன்
    விளக்கம் நான்தான் பாரம்மா, மதியில் வந்தவள் நீயம்மா - என்
    வழி மறைத்தாள் விதியம்மா’

    படம்: நிச்சயதாம்பூலம்
    'படைத்தானே, மனிதனை ஆண்டவன் படைத்தானே
    வளர்த்தானே வளர்த்தானே மனதினில் கவலையை வளர்த்தானே
    குரங்காய் இருந்த மனிதன் மனதில் குழப்பம் ஏதுமில்லை
    குடும்பம் மனைவி அண்ணன் தம்பி கூட்டம் சிறிதுமில்லை
    ஆசை பாசம் காதலில் விழுந்தான் அமைதியைக் காணவில்லை
    அலைந்தான் தவித்தான் துடித்தான் மடிந்தான் யாருக்கும் லாபமில்லை’

    படம்: புதிய பறவை
    'எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி?
    எங்கே மனிதன் யாரும் இல்லையோ அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
    அங்கே எனக்கோர் இடம் வேண்டும்...
    எனது கைகள் மீட்டும்போது வீணை அழுகின்றது
    எனது கைகள் தழுவும்போது மலரும் சுடுகின்றது
    என்ன நினைத்து என்னைப் படைத்தான் இறைவன் என்பவனே...
    கண்ணைப் படைத்து பெண்ணைப் படைத்த இறைவன் கொடியவனே!’

    படம்: பார் மகளே பார்
    அவள் பறந்து போனாளே
    என்னை மறந்து போனாளே
    நான் பாக்கும்போது கண்களிரண்டைக்
    கவர்ந்து போனாளே
    அவள் எனக்கா மகளானாள்? நான்
    அவளுக்கு மகனானேன் என்
    உரிமைத் தாயல்லவா என்
    உயிரை எடுத்துக்கொண்டாள்...

    படம்: பாலும் பழமும்
    போனால் போகட்டும் போடா
    போனால் போகட்டும் போடா - இந்த
    பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
    போனால் போகட்டும் போடா

    படம்: வசந்தமாளிகை
    கலைமகள் கைப்பொருளே உன்னை கவனிக்க ஆளில்லையோ...
    விலையில்லா மாளிகையில் உன்னை மீட்டவும் விரலில்லையோ...
    சொர்க்கமும் நரகமும் நம்வசமே - நான்
    சொல்வதை உன் மனம் கேட்கட்டுமே...
    சத்தியம் தர்மங்கள் நிலைக்கட்டுமே - இது
    தாய்மையின் குரலாய் ஒலிக்கட்டுமே...’

    படம்: அவன் தான் மனிதன்
    'மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
    இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று
    தந்தை தவறு செய்தான் தாயும் இடம் கொடுத்தாள்
    வந்து பிறந்துவிட்டோம் வெறும் பந்தம் வளர்த்துவிட்டோம்
    மனது துடிக்கின்றது மயக்கம் வருகின்றது
    அழுது லாபம் என்ன... அவன் ஆட்சி நடக்கின்றது...’

    கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் கண்ணதாசனுக்கும் சிவாஜிக்கும் திரைப்படத்துறை வாயிலாகவும் , அரசியல் ரீதியாகவும் தொடர்பிருந்தது. இருவருமே தி.மு.க-விலிருந்து காங்கிரஸுக்கு வந்தவர்கள். சிவாஜிகணேசன் ஏற்ற கதாபாத்திரங்களின் நகர்வுகளில் கண்ணதாசனின் பாடல்கள் கதையம்சத்துடன் ரொம்பவே நெருக்கமாக ஒட்டி உறவாடியவை. குறிப்பாக `வசந்த மாளிகை’யில் சிவாஜி ஏற்ற ஆனந்த் கதாபாத்திரம் கண்ணதாசனின் குணங்களோடு ரொம்பவே நெருக்கமானவை. அதனால்தான் காலங்கள் மாறினாலும், தரம் மாறாத பாடல்களாக இன்னமும் இனிக்கின்றன.

  9. #5
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    நடிகர் திலகம் நடிப்பில் தங்கச் சுரங்கம் என்றால் அவரது படங்கள் பட வெளியீட்டாளருக்கு தங்கச் சுரங்கம் என்பதில் ஐயமில்லை. சென்னை மகாலட்சுமிக்கு விஜயம் செய்த சி.பி.ஐ, ஆபிஸர் ராஜன் பொது மக்களின் மகத்தான ஆதரவைப் பெற்று வசூலையும் அள்ளியிருக்கிறார்.

    முதல் மூன்று நாட்களில் வெறும் 6 காட்சிகளில் [தினசரி 2] ராஜனை கண்டு களித்தவர்கள் 2000-2100 க்கும் அதிகம் மொத்த வசூல் ரூபாய் 55 ஆயிரத்திற்கும் அதிகம். ஆறே காட்சிகளில் அரை லட்சத்தை தாண்டுவது என்பது பெரிய வெற்றி.

    இதில் குறிப்பிட வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால் இதே தங்கச் சுரங்கம் திரைப்படம் கடந்த 2 வருடங்களில் எத்தனை முறை திரையிடப்பட்டிருக்கிறது என்பதை பார்த்தாலே அதன் வெற்றியின் வீச்சு புரியும். கடந்த 2 வருடங்களில் சென்னை பைலட் திரையரங்கில் வெளியாகி சாதனை புரிந்தது. பின் மகாலட்சுமியில் வெளியாகி வசூலை குவித்தது. பின் மீ ண்டும் ஓரு சிறிய இடைவெளியை நிரப்ப அதே மகாலட்சுமியில் திரையிடப்பட்டது. இப்போது மீண்டும் வெளியாகி சாதனை படைக்கிறது. நேற்றைய தினம் [ஞாயிறு அன்று] இந்திய அணி விளையாடிய ஒரு நாள் போட்டி தொலைக்காட்சியில் நேரடி ஒளிப்பரப்பு [மதியம் மற்றும் மாலை இரண்டு காட்சிகளையும் ஒரு சேர பாதிக்கும் கால அளவில்] இருந்தும் இந்த சாதனை. அதுதானே நமது நடிகர் திலகத்தின் பாக்ஸ் ஆபிஸ் பவர்.

    நடிகர் திலகம் திரையுலகில் உதயமான நாளன்று [அக்டோபர் 17] இந்த மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொள்வதில் பெருமையடைக்கிறேன்.

    அன்புடன்

  10. #6
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    QATAR
    Posts
    0
    Post Thanks / Like
    செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 148 – சுதாங்கன்.




    புதிய பறவை’ படத்தின் கிளைமாக்ஸ். இப்போது சிவாஜி வீட்டிற்கு வந்திருக்கும் சவுகார் ஜானகி தனது மனைவி அல்ல என்ற உண்மையை பொருட்டு, உணர்ச்சிவசப்பட்டுத் தன்னை மறந்த நிலையில் சிங்கப்பூரில் சவுகார் ஜானகியை ஆத்திரத்தில் அடித்ததன் காரணமாக அவர் இறந்த ரகசியத்தை கக்கிவிடுகிறார். அதன் பின்னர்தான் அவருக்குத் தெரிகிறது, தன்னைச் சூழ்ந்திருப்பவர்கள் காவல் துறையினர் என்பதும், அவர்கள் ஆடிய நாடகத்திலும் தந்திரமாக விரித்த வலையிலும் தான் வீழ்ந்துவிட்ட விஷயம்.
    இப்போது அவருடைய கவனம் முழுவதும் சரோஜாதேவி ஒருவர் மீதே செல்கிறது. காரணம் அவரை முழுமனதுடன் நம்பி, தன் உள்ளத்தை பறிகொடுத்து உண்மையாகக் காதலித்ததுதான். அதனால் அனைவரையும் விட்டுவிட்டுக் கை தட்டிய வண்ணம் சரோஜாதேவியின் அருகில் வந்து அவரைப் பார்த்துக் கூறுகிறார்.
    `ஆகா! எவ்வளவு அற்புதமான அமைப்பு! என்ன அருமையான நடிப்பு!
    லதா… பலகீனமான என் மேல படை எடுத்து என்னை வீழ்த்தறதுக்கு உன் கைக்குக் கிடைச்ச ஆயுதம், காதல்ங்கற மென்மையான மலர்தானா? அதை வச்சா நீ என்னை அடிச்சுட்டே?’
    இந்த வசனத்தைக் கேட்டு கண்கலங்கும் சரோஜாதேவி, `இல்லே இல்லே.ஒங்ககிட்டேயிருந்து உண்மையை வரவழைக்க காதலிக்கிற மாதிரி நடிச்சு கடைசியில் ஒங்களை கைது செய்யத்தான் நான் இங்க வந்தேன். ஆனா. என்னையறியாம ஒங்கே மேலே ஒரு அன்பு ஏற்பட்டு, உங்களை உண்மையா நான் காதலிச்சேன். என்னை நம்புங்க கோபால் – என்னை நம்புங்க’ என்று குமுறி குமுறி அழுது சிவாஜியின் காலில் விழுவார். கைது செய்யப்பட்ட சிவாஜி, கடைசியாக சரோஜாதேவியை அர்த்தமுள்ள ஒரு பார்வை பார்த்துவிட்டு செல்வார். இதுவரை பறந்த `புதிய பறவை’ இத்துடன் தன் சிறகுகளை மூடிகொண்டுவிட்டது.
    ஆரூர்தாஸும் கோப்பை மூடிவிட்டு, சிவாஜியின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தார். உணர்ச்சிவசத்தினால் சிவந்த அவரது அகன்ற விழிகளில் நீர் தேங்கி இருப்பதை பார்த்தார் ஆரூர்தாஸ்.
    `எப்படி இருக்கிறது?’ என்று தான் ஏன் கேட்க வேண்டும்? அவராகச் சொல்லட்டுமே என்று மவுனமாக இருந்தார் ஆரூர்தாஸ்.
    அந்த மவுன நிலையில் தனது வலது கரத்தை நீட்டி ஆரூர்தாஸின் வலது கையைப் பற்றி குலுக்கிவிட்டு சொன்னார்.
    `ஒங்கிட்ட நான் என்ன எதிர்பார்த்தேனோ – அதே மாதிரி – ஏன் அதுக்கு மேலேயும் ரொம்ப நல்லா எழுதி இருக்கே. `கங்கிராட்ஸ்’. இதுக்குத்தான் உன்னை வற்புறுத்தி எழுத வெச்சேன். ஒன்னோட முழு ஒத்துழைப்போட இந்த அண்ணனுக்காக சீக்கிரமாகவும் சிறப்பாகவும் எழுதி முடிச்சு கொடுத்திட்டே.தேங்க்ஸ். இதோடு கழண்டுக்கலாம்னு நினைக்காதே, நீ ராத்திரியெல்லாம் கண்ணு முழிச்சு கஷ்டப்பட்டு எழுதின இந்த வசனங்களை நீதான் ஷூட்டிங்குக்கு வந்து சொல்லிக் கொடுக்கணும். இல்லேன்னா நீ எழுதியும் பிரயோஜனமில்லாம போயிடும். டைரக்டர் தாதாமிராசிக்கு தமிழ் தெரியாது. நீ அப்பப்போ செட்டுக்கு வந்து அவருக்கு இங்கிலீஷ்ல சொல்லி புரிய வைக்கணும். பிள்ளையை பெத்துப் போட்டுட்டா மட்டும் போதுமா? அதை வளத்து நல்லா ஆளாக்கணும்ல. இது எனக்கு மட்டும் இல்லே. உனக்கும் ஒரு ‘பிரஸ்டிஜ்பிலிம்’. உன் சொந்தப்படம் மாதிரி நினைச்சுக்க. இதுக்கு மேலே நான் சொல்றதுக்கு ஒண்ணுமில்லே.
    இடைமறித்து எதுவும் பேசாமல் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தார் ஆரூர்தாஸ். இரண்டே எழுத்துக்களில் பதில் சொன்னார், `சரி’.
    இதைக் கேட்டு சிவாஜி மகிழ்ந்தார். ஆரூர்தாஸ் நெகிழ்ந்தார்.
    அடையாறு நெப்டியூன் ஸ்டூடியோவிலும், கோடம்பாக்கத்தில் விஜயா (வாஹினி) ஸ்டூடியோவிலும் `புதிய பறவை’க்கான செட் போடப்பட்டு தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.
    சிவாஜி விரும்பியவாறே ஆரூர்தாஸ் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வசனம் சொல்லிக்கொடுத்தார்.
    01.03.1964 அன்று விஜயா ஸ்டூடியோவில் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது. மாலை 5 மணி ….. ஆரூர்தாஸின் மனைவி அவரை போனில் அழைத்தார். திருத்துறைப்பூண்டியில் அவருடைய அப்பா – அதாவது ஆரூர்தாஸின் மாமனார் காலமாகிவிட்ட துயரச் செய்தியைத் தெரிவித்தார்.
    முக்கியமான காட்சிகள் படமாகிக்கொண்டிருந்தன. வேறு வழியின்றி, ‘காரியங்கள் நடந்து முடிந்தவுடன் உடனே தாமதிக்காமல் சென்னை திரும்பிவிடு. நீ வந்த பிறகு, மற்ற முக்கிய காட்சிகளை எடுத்துக்கொள்ளலாம்’ என்று கூறி ஆரூர்தாஸை ஊருக்கு அனுப்பி வைத்தார் சிவாஜி. ஊரிலிருந்து திரும்பி வந்ததும் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் ஆரூர்தாஸ்.
    இறுதிக்கட்ட படப்பிடிப்பில் அன்றைக்கு உச்சக்கட்ட காட்சி படமாக்கப்பட்டது. அத்துடன் ஷூட்டிங் முடிந்து இயக்குநர் ` பேக் –அப்’ சொல்லி விளக்குகள் எல்லாம் அணைக்கப்பட்டுவிட்டன.
    அந்தத் தருணத்தில் திடீரென்று ஆரூர்தாஸின் மூளையில் ஒரு மின்னல் மின்னிற்று.
    `அண்ணே! ஒரு நிமிஷம்’ என்று அவர் அழைத்ததும் செட்டை விட்டு நடந்து போய்க்கொண்டிருந்த சிவாஜி ` என்னப்பா?’ என்று கேட்டார்.
    ` சரோஜாதேவி, ` என்னை நம்புங்க கோபால், என்னை நம்புங்க’ ன்னு சொல்லி உங்க கால்ல விழுந்து குமுறி அழறதைப் பாத்துட்டு நீங்க பேசாம போறீங்களே, அது சரியா இல்லே. உங்க கேரக்டர் நினைவு பெற்றதா எனக்கு தோணலை. அந்த இடத்திலே நீங்க இரண்டு வார்த்தை பேசினா நல்லாயிருக்கும்’ என்றார் ஆரூர்தாஸ்.
    `நான் என்ன சொல்லணும்னு நினைக்கிறே?’
    `அதாவது `பெண்மையே! நீ வாழ்க ! உள்ளமே உனக்கு ஒரு நன்றி–’ இதை சொன்னீங்கன்னாத்தான் சரோஜாதேவி உங்களைக் காதலிச்சது உண்மை அப்படீங்றதை நீங்க ஒப்புக்கொண்டதா அர்த்தமாகும். அப்பத்தான் உங்க கதாபாத்திரம் நியாயப்படுத்தப்பட்டு உங்க மேலே ஒரு அனுதாபம் பிறக்கும்.
    இதை ஆரூர்தாஸ் சொன்னவுடனே சிவாஜியின் முகபாவனை மாறி, ‘அடப்பாவி! ஷூட்டிங் `பேக்- அப்’ ஆனதுக்கப்பறம் இப்ப வந்து சொல்றியே?’
    `இப்போதான் எனக்கு தோணுச்சு.’
    இதற்குள் இயக்குநர், ஒளிப்பதிவாளர் மற்றும் உதவியாளர்கள் வெளியில் சென்றுவிட்டார்கள். சிவாஜி தன் கைகளைத் தட்டி உரத்த குரலில் ` ஏ தாதா, பிரசாத் எல்லோரும் உள்ளே வாங்க’ என்றதும், அவர்கள் `என்னமோ ஏதோ’ என்று எண்ணி உடனே உள்ளே நுழைந்தனர். சிவாஜி சொன்னதன் பேரில் மீண்டும் `லைட் ஆன்’ ஆகி, ஆரூர்தாஸ் சிவாஜிக்கு சொன்ன வசனத்தை சொல்லி இன்னொரு ` டேக்’ எடுக்கப்பட்டது.
    `பெண்மையே… நீ வாழ்க ! உள்ளமே உனக்கு என் நன்றி!’
    இந்த மின்னல் வசனத்தை இன்றைக்கும் `புதிய பறவை’ படத்தில் கேட்கலாம்.
    (தொடரும்)

  11. #7
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like



  12. Likes Harrietlgy liked this post
  13. #8
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  14. Likes Harrietlgy liked this post
  15. #9
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  16. Likes Harrietlgy liked this post
  17. #10
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  18. Likes Harrietlgy liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •