-
14th April 2016, 07:39 PM
#751
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
14th April 2016 07:39 PM
# ADS
Circuit advertisement
-
14th April 2016, 07:40 PM
#752
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
14th April 2016, 07:40 PM
#753
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
14th April 2016, 07:41 PM
#754
Junior Member
Diamond Hubber
Last edited by senthilvel; 14th April 2016 at 07:49 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
14th April 2016, 07:42 PM
#755
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
14th April 2016, 07:50 PM
#756
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
14th April 2016, 07:52 PM
#757
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
14th April 2016, 07:53 PM
#758
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
14th April 2016, 07:53 PM
#759
Junior Member
Diamond Hubber
தொடரும்...
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
14th April 2016, 08:20 PM
#760
Junior Member
Devoted Hubber
From Mr.Sudhangan's FB.
செலுலாய்ட் சோழன் – 117
இப்படியாக நூல்களைப் புரட்டிப் பார்க்கப்ப் பார்க்க ஆஸ்தான வித்துவானுக்கே ஐயங்கள் அதிகரித்தன!
தெளிவு அவருக்கே பிறக்கவில்லை.
அதனால் உள்ளம் தளர்ந்து அமர்ந்துவிட்டார்!
சிறிது நேரம் சென்றது!
அரசரின் இரண்டாவது கேள்விக்காவது விடை கண்டுபிடிப்போம் எனு ஆராயப்புகுந்தார்.
`கடவுள் எந்தத் திசையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்’ என்பது இரண்டாவது கேள்வி!
பழனியில் மேற்குப் பக்கம் பார்த்துக்கொண்டிருக்கிறார்!
திருச்செந்தூரில் கிழக்குப் பக்கம் பார்த்துக்கொண்டிருக்கிறார்!
திருவரங்கத்திலும், சிதம்பரத்திலும் தெற்கு நோக்கியிருக்கிறார்.
ஆக, கடவுள் எந்தத் திசையை ஆராய்ச்சி செய்தும் ஆஸ்தான வித்துவானுக்குச் சந்தேகங்களாக அதிகரித்தனவேயறித் தெளிவு பிறக்கவில்லை.
இரண்டாவது கேள்வியை விட்டு மூன்றவது கேள்விக்கு விடை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
`கடவுள் என்ன செய்து கொண்டிருக்கிறார் ?’ என்பது மூன்றாவது கேள்வி.
ஸ்ரீரங்கத்தில் கடவுள் சயனித்து கொண்டிருக்கிறார்.
சிதம்பரத்தில் நடனமாடிக்கொண்டிருக்கிறார். ஒரிடத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்.
மற்றோரிடத்தில் அவர் நின்றுகொண்டிருக்கிறார்.
ஒரிடத்தில் சம்ஹாரம்!
மற்றோரிடத்தில் அநுக்கிரகம்!
ஒரிடத்தில் திருமணம்,
மற்றோரிடத்தில் சந்நியாசம்!
ஆக, கடவுள் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று சிந்தித்துப் பார்க்கப் பெரும் குழப்பம் தான்.
இப்படியே அன்றிரவு கழிந்தது!
அவர் கவலையோடு இருப்பதை அவரது பேத்தி கவனித்துவிட்டாள்!
தாத்தாவின் கவலைக்கு காரணத்தைக் கேட்டாள்.
அவரும் நிலைமையை விளக்கினார்!
அதற்கு அந்த பேத்தி தானே அரசவைக்குச் சென்று மன்னரின் கேள்விகளுக்கு பதில் சொல்வதாகச் சொன்னாள்!
இதுதான் பெரிய புராணத்தின் ஆரம்பம்!
இதையே ஏ.பி.நாகராஜன் திருவருட் செல்வரின் ஆரம்பக காட்சியில் பயன்படுத்தினார்!
மன்னனாக சிவாஜி!
குழந்தையாக குட்டி பத்மினி!
வித்துவானாக நாகையாவும் நடித்திருப்பார்கள்!
அந்தக் குழந்தை என்ன பதில் சொன்னாள்!
அடுத்த நாள் அரசவையில் மன்னன் புலவருக்காக காத்திருக்க, புலவரின் பேத்தி வந்திருப்பதாக சொல்வார்கள்!
அந்த சிறுமி சபைக்குள் நுழையும்போதே ` வாழ்க மன்னா!’ `வளர்க உன் ஆட்சி! ஒங்குக நின் புகழ்! உயர்க உனது செங்கோல்! தழைக்கட்டும் தர்மம்! வாழட்டும் மக்கள்! செழிக்கட்டும் நாடு! புலவரின் பேத்தி! பொன்னி என் பெயர்! வணக்கம்!
குழந்தையின் இந்தப் பேச்சை கண்டு மிரண்டு போவான் மன்ன!
`மீன் குட்டிக்கு நீந்தக் கற்றுக்கொடுக்க வேண்டியதில்லை! புலிக்கு பிறந்தது பூனையாவதுமில்லை! அதே போல் புலவfரின் பேத்தியின் பேச்சிலே அழகுக்கு பஞ்சமில்லை!
`கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் என்பார்களே! அப்படியிருக்க புலவர் பேத்தி நான் பேசுவதா உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கிறது ?’
இல்லை! அதிசயமாக இருக்கிறது! கண்முன்னே நடப்பது கனவா நினைவா என்று சந்தேகம் கூட தோன்றுகிறது!
`சந்தேகமே வேண்டாம்! நடக்கும் சம்பவம் கனவல்ல! நினைவுதான்!
என்றபடி அந்த சிறுமி மன்னன் உட்கார்ந்திருக்கும் அந்த ஆசனத்தின் படிக்கட்டுகளில் ஏறி மேலே வருவாள்!
இந்தக் காட்சியில் ஒவ்வொரு அங்குலமாக அந்தக் காட்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுத்திருப்பார் ஏ.பி.என்!
`எங்கு வந்தாய் ?’ இப்போது மன்னன் அந்தக் குழந்தையைப் பார்த்து கேள்வி கேட்பான்!
`தாத்தாவிடம் மூன்று கேள்விகள் கேட்டீர்களாம்! அதற்கு பதில் சொல்ல நானே வந்திருக்கிறேன்’ என்பாள் அந்தச் சிறுமி!
என்ன இது! மேலும் மேலும் வியப்பை உண்டாக்கிக் கொண்டே இருக்கிறாய்?’ உன் தாத்தாவிடம் நான் கேட்டது பெரும் பிரச்னை! அதற்கு பதில் சொல்ல அவரே திணறிக்கொண்டிருந்தார்!
`இது அத்தனை பெரிய பிரச்னையில்லை! சிறு பிரச்னை! அதற்காகத்தான் நான் வந்திருக்கிறேன்!’
`ஒரே திகைப்பில் ஆழ்த்துகிறாய் என்னை!’
`அதற்குள் திகைத்து விட வேண்டாம்! உங்கள் முதல் கேள்வி என்ன ?’
அதை சபையிலேயே சொல்லுங்கள்!’
`இறைவன் எங்கே இருக்கிறான்?’ அதுதான் என் முதல் கேள்வி!’
சிறுமி அருகிலிருக்கும் மேஜையருக்கே சென்று அங்கிருக்கும் ஒரு பெரிய கிண்ணத்தின் மூடியை திறப்பாள், ` மன்னா! இந்தப் பொற்கிண்ணத்தில் என்ன இருக்கிறது ?’
அந்தக் கிண்ணத்துக்குள்ளே பசுவின் பால் இருக்கிறது!
`அந்தப் பாலுக்குள்ளே என்னன்ன இருக்கிறது ?’
`அந்த பாலுக்குள்ளே மோர், தயிர், வெண்ணெய், நெய் என்று இருக்கிறது !’
அது எங்கே இருக்கிறது என்று சுட்டிக்காட்டுங்கள்!’
`அது……. அது…. சபையை சுற்றிமுற்றி பார்ப்பான் மன்னன், ` அது அதற்குள்ளே இருக்கிறது!’
`அப்படிச் சொன்னால் போதாது! இந்தப் பாலுக்குள்ளே தயிர், மோர், வெண்ணெய், நெய் எங்கே இருக்கிறது என்று தனித்தனியாக சுட்டிக்காட்ட வேண்டும்’
`இதென்ன சிறுபிள்ளைத்தனமான கேள்வி! அதற்குள்ளே எல்லாம் அடங்கி இருக்கிறது!
`அப்படித்தானே ! இறைவன் எல்லா இடங்களிலும் நிறைந்து இருக்கிறான்! இது புரியாமல் தாத்தாவிடம் இறைவன் எங்கே இருக்கிறான் என்று கேட்டிர்களாமே இதற்கு எப்படி பதில் சொல்வது ?’
மன்னர் இப்போது ஆசனத்தில் இருந்து எழுந்து இரண்டடி முன்னால் வைத்து, ` கண் முன்னே நிற்பது குழந்தையா ? அல்லது குழந்தை வடிவத்தில் வந்திருக்கும் பெண் குலத்தின் தெய்வமா ? இல்லை தெய்வத்தின் நாடகமா ? அல்லது அந்த நாடகத்தின் தத்துவத்தை விளக்க வந்த நாமகளின் பாத்திரமா ?’
`அதற்குள் அதிசயப்பட்டு விட வேண்டாம்! மன்னா ! உங்கள் அடுத்த கேள்வியைக் கேட்கலாம்!’
`இறைவன் எந்தத் திசையைப் பார்த்துக்கொண்டிருக்கிறான்?’ இதுதான் என்னுடைய இரண்டாவது கேள்வி குழந்தாய் ?’
குழந்தை இப்போது பக்கத்திலிருக்கும் ஒரு எரியும் விளக்கைக் காட்டும், ` இது என்ன?’
`இது தூங்கா விளக்கும்!’ மன்னன் பதில் சொல்வான்!
`இதில் இருப்பது என்ன ?’
`அணையா விளக்கு !’
`இந்த தீபம் எந்தத் திசையை நோக்கி ஒளியை வீசிக்கொண்டிருக்கிறது ! என்று தங்களால் சொல்ல முடியுமா ?’
அது எப்படி முடியும்! எரியும் விளக்கிலிருக்கும் தீபம் நாற்புறமும் ஒளி வீசி பிரகாசித்துக்கொண்டு தானே இருக்கும்! அது எந்தத் திசையை நோக்கி பிரகாசித்துக்கொண்டிருக்கிறது என்று கேட்டால் அதற்கு எப்படி பதில் சொல்ல முடியும்?’
`அப்படித்தானே இறைவன் எல்லா திசையையும் நோக்கிக் கொண்டிருக்கிறான்!’ இது புரியாமல் எந்த திசையை நோக்கிக் கொண்டிருக்கிறான் என்று கேட்டால் எப்படி பதில் சொல்வது?’
மன்னன் அசந்து போய் இரண்டடி முன்னால் வைத்து, ` ஆண்டவா! அரசனை குழந்தையாக்கி1 குழந்தையை தெய்வமாக்கிக் கொண்டிருக்கிறாய்! இச்சிறு பெண்ணுள்ளிருந்து கேள்வியை நீ கேட்பது உண்மையானால், என்னுள்ளிருந்து இந்த கேள்விகளை கேட்க வைத்ததும் நீ தானே! இப்படியும் உனக்கு ஒரு விளையாட்டா ?
`வேந்தே! மூன்றாவது கேள்வியையும் கேட்டு விடுங்கள்’ என்று சொல்லும் குழந்தை!
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks