Page 4 of 400 FirstFirst ... 234561454104 ... LastLast
Results 31 to 40 of 3994

Thread: Makkal Thilagam MGR Part - 20

  1. #31
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

  2. Thanks mgrbaskaran, orodizli thanked for this post
    Likes mgrbaskaran, orodizli, Richardsof liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #32
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  5. Thanks orodizli thanked for this post
    Likes orodizli, Richardsof liked this post
  6. #33
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    சில நேரங்களில் சில மனிதர்கள் .
    முறையான ,சார்பற்ற ,உண்மையான ,நேர்மையான பதிவுகளை தரும் இந்து பத்திரிகையில் வெளிவரும் மக்கள் திலகத்தின் தொடர் கட்டுரை ஒரு சிலருக்கு மன உளைச்சலும் , ஆத்திரமும்உருவாகி இருப்பது அவர்களுடைய எரிச்சல் பதிவுகளே சாட்சி . பரிதாபத்திற்கு உரியவர்கள் .

  7. Thanks orodizli thanked for this post
    Likes mgrbaskaran, orodizli liked this post
  8. #34
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by mgrbaskaran View Post
    (Mr Loganathan's post from last year)

    உலகம் சுற்றும் வாலிபன் - 44 வது ஆண்டு துவக்கம்
    ---------------------------------------------------------------------------------

    1.உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் சந்தித்த சோதனைகள் ஏராளம் .

    2.உலகம் சுற்றும் வாலிபன் சாதித்த/சாதிக்கின்ற /சாதிக்க போகின்ற
    சாதனைகள் அதைவிட ஏராளம்.

    3.உ.சு.வாலிபன் தயாரிப்பு பற்றி , பொம்மை மாத இதழில் திரைகடலோடி
    திரைப்படம் எடுத்தோம் என்று புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள்.
    ஏற்கனவே பேட்டி அளித்துள்ளார்.

    4. தினமலர் வாரமலரில் கடந்த வருடம் , ஞாயிறு தோறும் உ.சு. வாலிபன் தயாரான விதம் பற்றி புரட்சி தலைவர் எழுதிய "நான் ஏன் பிறந்தேன் "
    தொடரிலும் செய்திகள் வெளியாகி இருந்தன.

    5. 1973ல் படம் வெளியாகும் முன்பே தி.மு. க.வினர் வரும் . ஆனால்
    வராது. என்றனர்.வந்தால் சேலை கட்டிக்கொள்ள தயார் என மதுரை முத்து அறிக்கை வெளியிட்டார். பின்னாளில் அதே மதுரை முத்துவை
    புரட்சி தலைவர் தன் வசமாக்கி அவருக்கு பதவி அளித்து பெருமை
    சேர்த்தார் என்பது வேறு விஷயம்.

    6.தி.மு.க.வினரின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதத்தில் சென்னை
    ஏழுகிணறு (வடசென்னை) பகுதியில் நடந்த பொதுகூட்டத்தில் 1973 மார்ச் மாதத்தின்போது , கூட்டத்தில் இருந்த பகுதியினர் ஆர்வமிகுதியில் உ.சு.வாலிபன் பற்றி கேட்ட போது மே மாதம் 2 வது வாரம் உ.சு. வாலிபன் திட்டமிட்டபடி வெளியாகும் என்று அறிவித்தபோது மக்கள் இடையே எழுந்த மகிழ்ச்சி ஆரவாரம் அடங்க வெகுநேரமானது.

    7.சத்யா ஸ்டுடியோவில் பின்னணி இசை சேர்ப்பு நடக்கும்போது, தி.மு.க. வின் அடக்கு முறை, அராஜக ஆட்சியில் வேண்டுமென்றே அந்த பகுதியில் மின்வெட்டை அதிகபடுத்தி மின் விநியோகத்தை சராசரி
    அளவைவிட குறைந்த அளவில் அளித்து தொல்லைகள் கொடுத்த காலமும் உண்டு.

    8. உ.சு. வாலிபன் வெளியாகும் தருணத்தில் சுவரொட்டிகளுக்கு
    மாநகராட்சிகள் வரி அதிகம் விதித்தால் சுவரொட்டிகள் ஓட்ட முடியவில்லை. முதல் வெளியீட்டில் சுவரொட்டி விளம்பரம் இல்லாமல் ஓடிய ஒரே படம்

    9. உ.சு. வாலிபன் வெளியான பெருவாரியான் அரங்குகளில், மின்வெட்டு
    அமுலில் இருந்த காரணத்தினால் , ஜெனெரேட்டர்கள் பொருத்தப்பட்டு
    படம் வெளியானது. மின்வெட்டை பற்றி வாய் கிழிய பேசும் தி,மு.க. வினர் இந்த திரைப்படம் வெளியிடாமல் இருக்க அந்த காலத்தில்
    எவ்வளவு நெருக்கடி கொடுத்தார்கள் என்பது ஊரறிந்த விஷயம்.

    10. திரை அரங்கு உரிமையாளர்களுக்கும் படத்தை திரையிட்டால் பல
    தொல்லைகளுக்கு ஆளாக நேரிடும் என பகிரங்கமாக அரசு இயந்திரம்
    பயன்படுத்தப்பட்டது.

    11. எக்ஸ்போ 70-ல் படமாக்கப்பட்ட ஒரே தமிழ் படம்.

    12. மலேசியா, சிங்கப்பூர் , ஜப்பான், பாங்காக் ஆகிய நாடுகளில் படமாக்கப்பட்ட முதல் தமிழ் படம்.

    13. 1973 க்கு முன்பும் , பின்பும் வெளியான/வெளியாகின்ற /வெளியாகபோகிற அனைத்து தமிழ் திரைப்படங்களின் வசூலையும் ,
    பார்வையாளர்கள் எண்ணிக்கையிலும்/ திரை அரங்குகளில் ஓடும்
    நாட்களையும் முறியடித்த /முறியடிக்கின்ற/முறியடிக்க போகின்ற
    ஒரே சாதனை திரைப்படம்.

    14.எப்போது திரையிட்டாலும் வசூலை வாரி குவிக்கும் விநியோகஸ்தர்களின் அமுதசுரபி.

    15.தமிழ் திரைப்பட உலகில் முதன் முறையாக 25 அரங்குகளுக்கு மேலாக 100 காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைந்தது

    16.சென்னை தேவி பாரடைசில் அட்வான்ஸ் புக்கிங்கில் 160 காட்சிகள்
    தொடர்ந்து அரங்கு நிறைந்தது. கரண்ட் புகிங்கில் தொடர்ந்து 227 காட்சிகள் அரங்கு நிறைந்தது.

    17.அகஸ்தியா , உமா, வில்லிவாக்கம் ராயல் ஆகிய அரங்குகளிலும்
    தொடர்ந்து 100 காட்சிகள் மேல் அரங்கு நிறைந்தது.

    18.மதுரை மீனாட்சியில் 250 தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகள்.

    19.25 அரங்குகள் மேல் 100 நாட்கள் ஓடிய படம்.

    20.சென்னை தேவி பாரடைஸ் 182 நாட்கள். அகஸ்தியாவில் 175 நாட்கள்
    (வட சென்னையில் தினசரி 3 காட்சிகளில் ஓடிய ஒரே படம் )
    உமாவில் 112 நாட்கள். வில்லிவாக்கம் ராயலில் 100 நாட்கள் ஓடிய ஒரே படம். திருச்சி பேலஸ் -203 நாட்கள். மதுரை மீனாட்சியில் 217 நாட்கள் பெங்களுரு -3 அரங்குகளில் 105 நாட்கள். இலங்கையில்
    கொழும்பு கேபிடல் -200 நாட்கள்..

    21.மறு வெளியீடுகளில் விநியோகஸ்தர்களின் நம்பிக்கை நட்சத்திரம்.

    22.பாடல்களில் / பின்னணி இசையில் பிரம்மாண்டம்.

    23.முதல் பாடலே (டைட்டில் ) அசத்தலானது. நமது வெற்றியை நாளை
    சரித்திரம் சொல்லும் - 1973-ல் திண்டுக்கல் பாராளுமன்ற தேர்தலில்
    வெற்றி. உ.சு. வாலிபன் தயாரிப்பு /படமாக்கம் / வெளியீடு வெற்றி
    என்று மக்கள் திலகம் ரசிகர்களுக்கும், புரட்சி தலைவர் தொண்டர்களுக்கும் இரட்டை இலையில் விருந்தளித்தார்.



    24 .இரண்டாவது வாரத்திற்கு பின் 25 வது நாள், 50 வது நாள், 75 வது நாள் 100வது நாள், 125 வது நாள், 150 வது நாள், 175 வது நாள் என வெளியான மூன்று அரங்குகளிலும் பார்த்து ரசித்த ஒரே படம்.


    25.முதல் நாள் ரிசெர்வேஷன் கியூ வரிசையில் தேவி பாரடைசில் டிக்கட்
    வாங்க அண்ணா தியேட்டர் அருகில் காலை 10 மணியளவில் நின்று
    இருந்தேன். அதன்பின்னர் வரிசையானது அண்ணா சிலை அருகே வரை சென்று விட்டது. இந்த செய்திகள் செய்திதாள்களில் வெளிவந்தன.
    எனக்கு 13 வது நாள் மாலை காட்சிக்குத்தான் டிக்கட் கிடைத்தது . அப்போது நான் எஸ்.எஸ்.எல்.சி., முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்த சமயம். மிகவும்
    சிரமத்திற்கு இடையே டிக்கட் ரிசர்வ் செய்தேன். நானும் மற்ற இரு நண்பர்களும்
    வீட்டில் இருந்து சுமார் 7 கிலோ மீட்டர் நடந்தவாறு உ .சு.வாலிபன் சிறப்புகள் பற்றி பேசியபடி அரங்கை சென்று அடைந்தோம். முதல் நாள் முதல் 100 காட்சிகள்
    அரங்கு நிறையும் வரை தினசரி மாலை காட்சிகளின்போது, ரசிகர்களின் பல்வேறு விமர்சனங்களை அறிந்து கொள்ள தேவி பாரடைஸ், அகஸ்தியா மற்றும் உமா திரை அரங்குகளுக்கு சைக்கிளில் சென்று வருவதை வழக்கமாக கொண்டிருந்தேன். அப்போது பல நண்பர்கள் அறிமுகம் ஆனார்கள். இப்போது சிலர் மறைந்து விட்டனர். ஆனாலும் பழைய நண்பர்களின் தொடர்பு நீடிப்பதில்
    மகிழ்ச்சி.

    26. தியேட்டர்கள் திருவிழா கோலம் பூண்டன. தினசரி மாலை காட்சிகளின்போது தேவி பாரடைஸ், அகஸ்தியா, உமா தியேட்டர்
    களில் ரசிகர்கள் கூட்டம் பெருக ஆரம்பித்து, படத்தை வரவேற்று
    ஆவலை அதிகபடுத்தி விமர்சித்தவாறு இருந்தனர்.

    27.பகல் மற்றும் மேட்னி காட்சிகள் கண்டுகளித்தவர்கள் மின்வெட்டு
    காரணமாக போதுமான அளவில் மின்விசிறிகள் இயங்காததாலும்
    ஏ சி வேலை செய்யாததாலும் பல சிரமங்களுக்கு இடையே படத்தை
    ரசித்து பார்த்து வெளிவரும்போது சட்டைகள் நனைந்தவாறு
    வந்தனர். அந்த அளவில் படத்தோடு ஒன்றி போய்விட்டனர்.

    28.,மிக குறைந்த செலவில் உலகம் சுற்றும் வாலிபன் படம் மூலம்
    உலகத்தையே சுற்றி பார்க்க வைத்த பெருமை மக்கள் திலகத்திற்கே.

    29. படத்தொகுப்பு மிக பிரமாதம்.அடுத்த காட்சி என்ன என்று ஆவலை
    தூண்டுவதுபோல் அமைந்தது.

    30. மெல்லிசை மன்னர் தன வாழ்நாளில் இந்த படத்திற்கு பின்னணி
    இசைக்காகவும், பாடல்களுக்காகவும் உழைத்த உழைப்பு வேறு எந்த
    படதிற்காகவாவது இருக்குமா என்பது சந்தேகமே. மக்கள் திலகம்.
    எம்.எஸ். வி.யின் திறமையை நன்கு பயன்படுத்தி கொண்டார்.

    31.சண்டை காட்சிகள் ஒவ்வொன்றும் ஒரு விதம். ஜூடோ ,
    , ஸ்கேடிங் என பலவித வகைகளில் சண்டை
    காட்சிகள் அமைத்து தன ரசிகர்களுக்கு மக்கள் திலகம் விருந்து
    படைத்தார்.

    32. பாடல்கள் புதுமை.இனிமை.அருமை. சிறந்த டைரகஷன் -எம்.ஜி. ஆர். என பெயர் பெற்ற படம்.


    33. பத்திரிகைகள் பாராட்டு மழை பொழிந்தன. வெளிநாடுகளில் எடுக்கப்பட்ட மிக சிறந்த பொழுது போக்கு படம் என விமர்சித்தன.

    ஆர். லோகநாதன்.

    நன்றி நண்பர் திரு. எம்.ஜி.ஆர். பாஸ்கரன் அவர்களே.

  9. Thanks orodizli thanked for this post
  10. #35
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தற்போது ஜெயா மூவிஸில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த
    "என் கடமை " ஒளிபரப்பாகி வருகிறது. கண்டு களியுங்கள்.

  11. Thanks orodizli thanked for this post
  12. #36
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    எம்ஜிஆர் 100 | 63:

    சொன்னதையும் சொல்லாததையும் செய்தவர். ஆனால்...


    m.g.r. பிறர் கஷ்டப்படுவதை காண சகிக்காதவர். அவர் கண் முன்னால் யாரும் துன்பப்படுவதைப் பார்த்தால், அவர்கள் கேட்காவிட்டாலும் உடனடியாக உதவி செய்வார். தனிப்பட்ட முறையில் மட்டுமின்றி; அரசு மூலம் திட்டங்களை செயல்படுத்தி உதவி செய்ய வேண்டும் என்றாலும் அதற்காக மத்திய அரசிடம் உரத்துக் குரல் கொடுக்கவும் தயங்க மாட்டார்.

    தமிழக முதல்வராக எம்.ஜி.ஆர். இருந்தபோது, 1980 ஜனவரி மாதம் கர்நாடகாவில் குண்டு ராவ் முதல்வரானார். அவர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர் என்றே தன்னை அறிவித்துக் கொண்டவர். பெங்களூரில் உள்ள தன் வீட்டுக்கு வரவேண்டும் என்று எம்.ஜி.ஆரை அழைத்துக் கொண்டே இருந்தார். ஒருமுறை குண்டுராவின் பிறந்த நாளன்று பெங்களூருக்கு சென்று அவரை வாழ்த்த எம்.ஜி.ஆர். முடிவு செய்தார்.

    அதற்காக தனது tmx 4777 எண் கொண்ட அம்பாசிடர் காரில் மனைவி ஜானகி அம்மை யார் மற்றும் ஜானகி அம்மாளின் சகோதரர் மகள் லதா ஆகியோருடன் ஒருநாள் மதியம் பெங்களூர் புறப்பட்டார். பின்னால் ஒரு வேனில் எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் சென்றனர்.

    பெங்களூர் சென்று அங்குள்ள ‘வெஸ்ட் எண்ட்’ ஓட்டலில் இரவு தங்கிவிட்டு மறுநாள் காலை 9 மணிக்கு குண்டுராவின் வீட்டுக் குச் சென்ற எம்.ஜி.ஆர்., அவருக்கு பரிசளித்து வாழ்த்தினார். அவரது காலில் விழுந்து ஆசிபெற்றார் குண்டுராவ். எம்.ஜி.ஆருக்கும் உடன் வந்தவர்களுக்கும் விருந்தளிக்கப்பட்டது. சாப்பிட்டுவிட்டு, காரில் எம்.ஜி.ஆர். சென்னைக்கு புறப்பட்டார்.

    இப்போது போலவே அப்போதும் சுட்டெரிக் கும் கோடைகாலம். உச்சி வெயில் நேரத்தில் ஓசூர் அருகே வந்து கொண்டிருந்தபோது சாலை ஓரத்தில் ஒரு மூதாட்டியும் பத்து வயது சிறுமியும் தலையில் பெரிய புல்கட்டை சுமந்தவாறு காலில் செருப்பு இல்லாமல் வெயிலில் தவித்தனர். பத்து தப்படி ஓட்டமும் நடையுமாக செல்வதும் பிறகு, வெயிலுக்காக ஓரமாக ஒதுங்கி நின்று மீண்டும் நடப்பதுமாக இருந்தனர். அவர்களை தூரத்தில் வரும்போதே காரில் இருந்து எம்.ஜி.ஆர். கவனித்துவிட்டார். அவர்கள் அருகில் கார் வந்ததும் டிரைவரை நிறுத்தச் சொன்னார். முன் சீட்டில் அமர்ந்திருந்த உதவியாளரைவிட்டு அந்த மூதாட்டியை விசாரிக்கச் சொன்னார்.

    காரில் இருந்து இறங்கி விசாரித்த உதவியாளரிடம் அந்த மூதாட்டி, ‘‘தூரத்தில் இருந்து புல்லை அறுத்துக் கட்டி தலையில் சுமந்துபோய் விற்றால் தலைச்சுமைக்கு ஒரு ரூபாய் கிடைக்கும். வெயிலுக்கு கால் சுடுதுய்யா. அதான் நின்று நின்று செல்கிறோம்’’ என்றார். அவர் கூறியதை எம்.ஜி.ஆரிடம் உதவியாளர் தெரிவித்தார். இதைக் கேட்ட எம்.ஜி.ஆர்., காரில் இருந்த ஜானகி அம்மையார், அவரது உறவினர் லதா ஆகியோர் அணிந்திருந்த செருப்புகளை கழற்றச் சொன்னார். அதோடு, தன் பையில் இருந்த கணிசமான பணத்தையும் உதவியாளரிடம் கொடுத்து மூதாட்டியிடமும் சிறுமியிடமும் கொடுக்கச் சொன்னார். அதை பெற்றுக்கொண்ட மூதாட்டிக்கு ஒன்றும் புரியவில்லை.

    அப்போது, காரின் கருப்புக் கண்ணாடியை இறக்கிவிட்டு மூதாட்டியை எம்.ஜி.ஆர். வணங் கினார். அவரை பார்த்த பிறகுதான் தனக்கு உதவி செய்தது எம்.ஜி.ஆர். என்றே அந்த மூதாட்டிக்குத் தெரிந்தது. நன்றி கூட தெரிவிக்காமல் பிரமை பிடித்தவர்கள் போல மூதாட்டியும் சிறுமியும் பார்த்துக் கொண்டிருக்க, சிரித்தபடியே எம்.ஜி.ஆர். புறப்பட்டார்.

    எம்.ஜி.ஆர். மீது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்டவர். இலங்கைத் தமிழர் நலன் கருதி ஏற்படுத்தப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தம் தொடர்பாக சென்னையில் பொதுக் கூட்டம் நடந்தது. அதில் எம்.ஜி.ஆரை ராஜீவ் காந்தி மிகவும் புகழ்ந்தார். எம்.ஜி.ஆர். பேசிக் கொண்டிருக்கும்போது ராஜீவ் எழுந்துவந்து ‘மைக்’கை சரி செய்தார். மக்களின் கரகோஷம் அடங்க வெகுநேரமானது. அந்த அளவுக்கு எம்.ஜி.ஆர். மீது மதிப்பு வைத்திருந்தார்.

    ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது, தமிழக கோரிக்கைகளுக்காக பிரதமரை சந்திக்க எம்.ஜி.ஆர். டெல்லி சென்றார். தமிழக அரசு அதிகாரிகளை அழைத்து, ‘‘எல்லா பள்ளி பிள்ளைகளுக்கும் சீருடை வழங்க பிரதமரிடம் மாநில அரசின் சார்பில் நிதி கேட்கலாம் என்று இருக்கிறேன். எவ்வளவு தேவைப்படும் என்று கணக்கிட்டு வாருங்கள்’’ என்று எம்.ஜி.ஆர். கூறினார். அதிகாரிகள் கணக்கிட்டு 120 கோடி ரூபாய் தேவைப்படுவதாக தெரிவித்தனர்.

    ராஜீவ் காந்தியுடனான சந்திப்பின்போது, எம்.ஜி.ஆரின் மற்ற எல்லாக் கோரிக்கைகளையும் அவர் ஏற்றுக் கொண்டார். சீருடைத் திட்டத்துக்கு மானியம் வழங்குவதை மட்டும் ஏற்கவில்லை. ‘‘பின்னர் பார்க்கலாம்’’ என்று கூறிவிட்டார். அதற்கு எம்.ஜி.ஆர். சம்மதிக்கவில்லை. ‘‘தமிழ்நாட்டுக்கு மானியமே வேண்டாம்’’ என்று எழுந்துவிட்டார்.

    பிறகு, தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த எம்.ஜி.ஆரை பிரதமர் அலுவலகத்தில் இருந்து ஆர்.கே.தவான் தொடர்பு கொண்டு, ‘‘மாலையில் வேண்டுமானால் நீங்கள் மீண்டும் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்கிறேன்’’ என்றார். அதற்கு எம்.ஜி.ஆர். சம்மதித்தார். ராஜீவை மீண்டும் சந்திக்க புறப்படும் முன் அதிகாரிகளிடம், ‘‘பிரதமர் நமது கோரிக்கையை ஏற்றுக் கொண்டால் பார்ப்போம். இல்லாவிட்டால் தமிழக அரசின் நிதி நெருக்கடியை மக்களிடம் சொல்லி, வீட்டுக்கு கொஞ்சம் பணம் வாங்கி நாமே சீருடைத் திட்டத்தை செயல்படுத்துவோம்’’ என்றார் எம்.ஜி.ஆர்.!

    ஆனால், அதற்கு அவசியம் ஏற்படவில்லை. எம்.ஜி.ஆர். மீது கொண்டிருந்த அன்பு, மதிப்பு காரணமாக மத்திய அரசின் சார்பில் மானியம் வழங்க ராஜீவ் காந்தி சம்மதித்துவிட்டார். ‘‘சிறுவயதில் ஒருவேளை சோற்றுக்கும் ஒரு ஜோடி துணிக்கும் எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்று எனக்குத்தான் தெரியும். அதனால்தான் சத்துணவோடு சீருடையும் கொடுக்க விரும்புகிறேன்’’ என்று எம்.ஜி.ஆர். கூறினார்.

    இந்த திட்டங்களையெல்லாம் தேர்தல் அறிக் கையில் வாக்குறுதியாக அவர் சொன்னதில்லை. எம்.ஜி.ஆர். சொன்னதை செய்தார்; சொல்லாத தையும் செய்தார். இவற்றைவிட முக்கியமாக...

    செய்ததை சொல்ல மாட்டார்!




    முதல்வராக இருந்தபோது பாட்டாளி மக்கள், ஏழைகள் ஆகியோரின் நலனுக்கு எம்.ஜி.ஆர். முன்னுரிமை கொடுப்பார். ஓசூர் அருகே மூதாட்டியும் சிறுமியும் வெயிலில் தவிப்பதை பார்த்ததாலோ என்னவோ, கல்லிலும் முள்ளிலும் வேகாத வெயிலிலும் வெறும் காலுடன் நடந்து கஷ்டப்படக் கூடாது என்பதற்காக ஏழைகளுக்கு இலவச காலணி வழங்கும் திட்டத்தை எம்.ஜி.ஆர். செயல்படுத்தினார்!

  13. Thanks mgrbaskaran, orodizli thanked for this post
    Likes mgrbaskaran, orodizli liked this post
  14. #37
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    பொன்மனச்செம்மலின் நூற்றாண்டு விழாக்கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நல சங்கம், ராஜாமணி பைன் ஆர்ட்ஸ் உடன் இணைந்து, வரும் 22-05-16 ஞாயிற்றுக்கிழமை காலை,10.00 மணி அளவில், சென்னை காமராஜர் அரங்கில், நடத்தவுள்ள மெல்லிசை - இன்னிசை நிகழ்ச்சிக்காக அச்சடிக்கப்பட்டுள்ள நுழைவு சீட்டு .



    விரைவில் ஒலிக்கவிருக்கும் "பொன்மனம்" பண்பலை வரிசை விளம்பரமும் இடம் பெற்றுள்ளது, குறிப்பிடத்தக்கது.
    Last edited by makkal thilagam mgr; 12th May 2016 at 12:04 PM.

  15. Thanks mgrbaskaran, orodizli thanked for this post
    Likes mgrbaskaran, orodizli liked this post
  16. #38
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    திட்டங்களையெல்லாம் தேர்தல் அறிக் கையில் வாக்குறுதியாக அவர் சொன்னதில்லை. எம்.ஜி.ஆர். சொன்னதை செய்தார்; சொல்லாத தையும் செய்தார். இவற்றைவிட முக்கியமாக... செய்ததை சொல்ல மாட்டார்!


    GOLDEN WORDS


    முதல்வராக இருந்தபோது பாட்டாளி மக்கள், ஏழைகள் ஆகியோரின் நலனுக்கு எம்.ஜி.ஆர். முன்னுரிமை கொடுப்பார். ஓசூர் அருகே மூதாட்டியும் சிறுமியும் வெயிலில் தவிப்பதை பார்த்ததாலோ என்னவோ, கல்லிலும் முள்ளிலும் வேகாத வெயிலிலும் வெறும் காலுடன் நடந்து கஷ்டப்படக் கூடாது என்பதற்காக ஏழைகளுக்கு இலவச காலணி வழங்கும் திட்டத்தை எம்.ஜி.ஆர். செயல்படுத்தினார்![/size][/b][/QUOTE]
    Last edited by makkal thilagam mgr; 12th May 2016 at 12:40 PM.

  17. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  18. #39
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    1985

  19. Thanks orodizli, mgrbaskaran thanked for this post
    Likes mgrbaskaran liked this post
  20. #40
    Junior Member Senior Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Muthaiyan Ammu View Post
    super..............

  21. Thanks orodizli thanked for this post
Page 4 of 400 FirstFirst ... 234561454104 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •