Page 111 of 400 FirstFirst ... 1161101109110111112113121161211 ... LastLast
Results 1,101 to 1,110 of 3994

Thread: Makkal Thilagam MGR Part - 20

  1. #1101
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    http://tamil.thehindu.com/opinion/bl...cle8810535.ece


    எம்ஜிஆர் 100 | 100 -அவர் புகழுக்கு முடிவேது?



    m.g.r.மீது ஏதோ ஒரே நாளில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு திடீரென பற்று வந்துவிடவில்லை. ‘‘அரசியல் களத்தில் எதிரெதிர் அணியில் இருந்தாலும் எம்.ஜி.ஆரின் செயல்பாடுகளையும் மனிதாபிமான நடவடிக்கைகளையும் அறிந்து படிப்படியாக அவர் மீதான மதிப்பு உயர்ந்தது. அவரது மனிதாபிமான நடவடிக்கைகள் காரணமாக இங்குள்ள தமிழர்கள் மட்டுமல்ல; ஈழத் தமிழர்களும் அவரை தெய்வமாக வணங்குகிறார்கள்’’ என்று கூறும் வைகோ, தனது அனுபவங்களைத் தொடர்கிறார்!

    பெரும்பாலோருக்குத் தெரியாத, அறிந்து கொள்ள முடியாத வாய்ப்பு வைகோ வுக்கு கிடைத்துள்ளது. 2004-ம் ஆண்டு எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்ட இல்லத்துக்கு வைகோ சென்றார். அப்போது, எம்.ஜி.ஆர். பயன் படுத்திய பொருட்களை பார்வையிட்டார். அவர் பயன்படுத்திய ஒரு நாட்குறிப்பில் இசை சம்பந்தப்பட்ட இலக்கணங்களையும், குறிப்புகளையும் அவர் எழுதி வைத்திருப்பதை யும் அவரது இசை ஞானத்தையும் அறிந்து வைகோ அசந்துவிட்டார். இங்கே ஒரு வருத்தமான விஷயம் என்னவென்றால், கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் அந்த நாட்குறிப்பு மட்டுமின்றி, எம்.ஜி.ஆர். பயன்படுத்திய பல பொருட்களும் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன.

    ஈழத் தமிழர் பிரச்சினை தொடர்பாக 1987-ம் ஆண்டு ஜூலை மாதம் 29-ம் தேதி, இந்திய - இலங்கை ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனேவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். ‘‘இந்த ஒப்பந்தத்தில் விடுதலைப் புலிகளுக்கு விருப்பம் இல்லை. எம்.ஜி.ஆருக் கும் இந்த ஒப்பந்தத்தில் உடன்பாடு இல்லை. சென்னை கடற்கரையில் ராஜீவ் காந்தியுடன் கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில்கூட எம்.ஜி.ஆர். பட்டும் படாமலும்தான் பேசினார்’’ என்று வைகோ கூறுகிறார்.

    பின்னர், அமெரிக்காவில் மருத்துவப் பரிசோதனைக்காக எம்.ஜி.ஆர். சென்றார். அவர் அங்கிருக்கும் சமயத்தில், இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்திய அமைதிப்படை விடுதலைப் புலிகள் மீது தாக்குதல் நடத்தியது. ‘‘அந்தச் சமயத்தில் பிரதமர் ராஜீவ் காந்தியும் அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் சென்றார். டென்னிஸ் விளை யாட்டில் இந்தியாவுக்கு புகழ் தேடித்தந்த விஜய் அமிர்தராஜ், அமெரிக்க அரசு வட்டாரத்தில் செல்வாக்கு மிக்கவர்.

    இந்திய அமைதிப்படை யின் தாக்குதலை நிறுத்தச் சொல்லி விஜய் அமிர்தராஜ் மூலம் ராஜீவ் காந்திக்கு எம்.ஜி.ஆர். கடிதம் அனுப்பியிருக்கிறார். உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவப் பரிசோதனைக் காக வந்திருக்கும் நிலையிலும் எம்.ஜி.ஆரின் இந்தச் செயல், அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதையையும் மதிப்பையும் ஏற்படுத்தியது’’ என்கிறார் வைகோ.

    அமெரிக்காவில் எம்.ஜி.ஆர். இருந்தபோது நடந்த இன்னொரு நிகழ்ச்சியையும் வைகோ நினைவுகூர்கிறார். அந்த நேரத்தில் சென்னை யில் இருந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த கிட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். இதை அறிந்து அவரது வீட்டுக்குச் சென்ற வைகோவை போலீஸார் கைது செய்து இரவு 1 மணிக்கு விடுவித்தனர். மீண்டும் நேராக கிட்டு வீட்டுக்கு சென்ற வைகோவை போலீஸார் மறுபடியும் கைது செய்து காலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாள் ரிமாண்ட் செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.

    மாலையில் அவரை போலீஸார் திடீரென விடுவித்தனர். காரணம் கேட்ட வைகோவுக்கு இன்ப அதிர்ச்சி! ‘‘நீங்கள் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதை அறிந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., உங்களை விடுவிக்கச் சொல்லி அமெரிக்காவில் இருந்து உத்தரவிட் டுள்ளார். கிட்டுவை பார்வையாளர்கள் சந்திப் பதை போலீஸார் தடுக்க வேண்டாம் என்றும் முதல்வர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்’’ என்று போலீஸ் அதிகாரிகள் கூறியபோது வைகோ வின் மதிப்பில் எம்.ஜி.ஆர். மேலும் உயர்ந்தார்.

    எம்.ஜி.ஆர். பற்றி கிட்டு கூறியதைக் கேட்டு வைகோ கண்கலங்கிய சம்பவமும் உண்டு. அப்போது, வைகோ திமுகவில் இருந்தார். சென்னை அடையாறில் உள்ள கிட்டுவை அவர் ஒருநாள் சந்தித்தார். ‘‘முதல்வர் எம்.ஜி.ஆரிடம் விடுதலைப் புலிகள் நெருக்க மாக உள்ளனர். திமுக தலைமை யோடும் நீங்கள் நெருக்க மாக இருக்க லாமே?’’ என்று கிட்டுவிடம் உரிமையோடு கேட்டார்.

    அப்போது கிட்டு சொன்ன பதில் வைகோவை கலங்கடித்துவிட்டது. கிட்டு அமைதி யாக தன் வயிற்றைத் தடவிக் காட்டி, ‘‘இங்கே இருக்கிற பொடியன்களுக்கு (புலிகள் இயக்க இளைஞர்கள்) வயிறு இருக்கிறதே, சாப்பிட ணுமே அண்ணே? இரண்டு நாட்கள் முன்பு முதல்வர் எம்.ஜி.ஆரைப் பார்க்க அவரது வீட்டுக்குச் சென்று எங்கள் கஷ்டத்தைச் சொன்னேன். உடனே அவர் பெரிய தொகை கொடுத்தார்.

    முகத்தைப் பார்த்து பசி அறியும் தாயைப் போல எம்.ஜி.ஆர். எங் களுக்கு உதவுகிறார். அதனால்தான் அவரோடு நெருக்கமாக இருக்கிறோம். மற்றபடி, திமுக மீது எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை’’ என்று கிட்டு சொன்னதைக் கேட்டு கண்கலங்கிய வைகோ, உணர்ச்சிப் பெருக்குடன் கிட்டு வைப் பார்த்து கைகுவித்து, ‘‘தவறாகக் கேட்டுவிட்டேன்’’ என்றார். அப்போது வைகோ வின் மனதில் எவரெஸ்ட் சிகரமாய் உயர்ந்தார் எம்.ஜி.ஆர்.!

    மாறிவிட்ட அரசியல் சூழலில் 1989-ம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்ததற்குப் பிறகு, இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை சந்திக்க வன்னிக் காட்டுக்குச் செல்ல வைகோ முடிவு செய்தார். ‘‘பட்டுக்கோட்டை வழியாகக் கோடியக்கரை சென்று, விடுதலைப் புலிகள் உதவியுடன் படகில் புறப்பட்டு கடற்படை கப்பல்களிடம் இருந்து தப்புவதற்காக 180 கிலோ மீட்டர் சுற்றி, நாயாறு பகுதி கடற்கரையில் இறங்கினோம். அங்கிருந்து அடர்ந்த காடுகள் வழியாக இரண்டு நாட்கள் நடந்து சென்று வன்னிக் காட்டில் பிரபாகரனை சந்தித்தேன். அப்போதுதான் எம்.ஜி.ஆர். பற்றி அவர் என்னிடம் கூறினார்’’ என்று மனதில் அழியாத நினைவுகளை வெளியிடுகிறார் வைகோ!

    விடுதலைப் புலிகள் இயக்கத்தை தோற்று வித்த ஆரம்ப காலத்தில், எம்.ஜி.ஆர். மீது பிரபா கரனுக்கு பெரிய பற்று கிடையாது. திரைப்படங் களில் அவரது சண்டைக் காட்சிகளை பார்த்து ரசித்திருக்கிறார். ‘‘தமிழகம் வந்த சில காலத் துக்குப் பிறகுதான் எம்.ஜி.ஆர். என்ற பிரம்மாண் டத்தை நேரில் கண்டு நான் உணர்ந்தேன்’’ என்று வைகோவிடம் கூறிய பிரபாகரன், அதற்கான காரணங்களையும் அடுக்கியிருக்கிறார்!



    முதல்வர் எம்.ஜி.ஆருடன் ஆலோசிக்கிறார் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன்.

    ‘‘ஆரம்ப காலத்தில் விடுதலைப் புலிகளுக்கு மத்திய அரசும் உதவி செய்திருக்கிறது. அப் போது புலிகள் இயக்கம் தடை செய்யப்பட வில்லை’’ என்று கூறும் வைகோ, சில விநாடிகள் கண்களை மூடி பிரபாகரன் தன்னிடம் கூறியதை நினைவுகூர்கிறார்.

    எம்.ஜி.ஆரை ஒருமுறை அவரது வீட்டில் பிரபாகரனும் ஆன்டன் பாலசிங்கமும் சந்திக்கச் சென்றனர். இருவருக்கும் விருந்தளித்து உப சரித்துவிட்டு, ‘‘நான் உங்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டுமா?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டிருக்கிறார். புலிகள் இயக்கத்துக்கு அப் போது நிதி தேவைப்பட்டது. ‘என்ன பெரிதாக கொடுத்துவிடப் போகிறார்’ என்று நினைத்த பிரபாகரன், ஒரு குறிப்பிட்ட தொகையை எம்.ஜி.ஆரிடம் கோரியுள்ளார். ‘‘நாங்கள் எதிர் பார்க்காத ஒரு பெரும் தொகையை எம்.ஜி.ஆர். தங்களுக்குக் கொடுத்ததாக வன்னிக் காட்டில் பிரபாகரன் என்னிடம் தெரிவித்தார். தன்னை எப்போது வேண்டுமானாலும் பிரபாகரன் சந்திக்க வசதியாக ஒரு தொலைபேசி எண்ணை யும் ஒரு அடையாள அட்டையையும் அவரிடம் எம்.ஜி.ஆர். கொடுத்திருக்கிறார்’’ என்கிறார் வைகோ!

    பின்னர், பிரபாகரன் கூறிய கருத்து வைகோவை தூக்கிவாரிப் போடவைத்திருக் கிறது. ‘‘இந்திரா காந்தி மறைவுக்குப் பிறகு ராஜீவ் காந்தி பிரதமரானதும் அதுவரை எங்களுக்கு வழங்கிவந்த உதவிகள் தொடர்பாக பேசவேண்டும் என்று வெளியுறவு அமைச்சகம் அழைத்ததால் டெல்லி சென்று சந்தித்தோம். ஆனால், ‘இனி எந்த உதவியும் செய்ய முடியாது’ என்று அரசு கைவிரித்துவிட்டது’’ என்று வைகோவிடம் பிரபா கரன் கூறியிருக் கிறார்.

    தொடர்ந்து அவர் கூறியதைக் கேட்ட வைகோவின் மனதில் எம்.ஜி.ஆர். விஸ்வரூபம் எடுத்து நின்றார். ‘‘அந்த நேரத்தில் டெல்லி வந்திருந்த முதல்வர் எம்.ஜி.ஆரை பிரபாகரன் சந்தித்தார். மத்திய அரசு நான்கு கோடி ரூபாய் தருவதாகச் சொல்லி பின்னர், மறுத்ததை பிரபாகரன் மூலம் அறிந்த எம்.ஜி.ஆர்., ‘அந்த தொகையை நான் தருகிறேன்’ என்று கூறி, தமிழக அரசு மூலம் வெளிப்படையாகவே நான்கு கோடி ரூபாயை வழங்கியதாக பிரபாகரன் என்னிடம் கூறினார்’’ என்று உணர்ச்சிபூர்வமாக கூறுகிறார் வைகோ!

    ‘‘ஈழத் தமிழர்களுக்காக அவர் செய்த உதவி களைப் பார்க்கும்போது, எம்.ஜி.ஆர். இருந்திருந் தால் தமிழ் ஈழம் மலர்ந்திருக்கும். சுமார் ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்கள் அநியாயமாக கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்’’ என்று சொல்லி ஏக்கப் பெருமூச்சு விடுகிறார் வைகோ. அந்தப் பெருமூச்சின் உஷ்ணம் இதயத்தைச் சுடு வது கலங்கிய அவரது கண்களில் தெரிகிறது.

    **********

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன் னிட்டு நமது நாளிதழில் வெளியிடப்பட்ட ‘எம்.ஜி.ஆர். 100’ தொடர் கட்டுரைகளும் அவரது படங்களைப் போலவே, இன்றோடு 100 நாட்கள் ஓடியிருக்கின்றன. இந்த அளவுக்கு தொடர் வெற்றிகரமாக வர காரணம் வாசகர்கள்தான்! தொடர் ஆரம்பித்த நாளில் இருந்தே ஏராளமான வாசகர்களும் எம்.ஜி.ஆர். ரசிகர்களும் கடிதம், தொலைபேசி, இ-மெயில் மூலம் தொடர்பு கொண்டு தங்கள் ஆதரவையும் வரவேற்பையும் ஆலோசனைகளையும் தெரிவித்தனர். ஆர்வத் துடன் தகவல்களையும் நூல்களையும் கொடுத்து பலர் உதவினர். அவர்கள் அனைவருக்கும் நன்றி!

    தொடரின் ஆரம்பத்தில் குறிப்பிட்டதுபோல, ஒருவர் ஒருதுறையில் வெற்றிபெறுவதே கடி னம். ஆனால், திரைப்படம், அரசியல் என இரு துறைகளிலும் ஈடு, இணையற்ற வெற்றியைப் பெற்று, அவற்றில் முதலிடம் பிடித்தவர் எம்.ஜி.ஆர்.! வெற்றி பெறுவதைவிட அதைத் தக்கவைத்துக் கொள்வது இன்னும் கடினம். கடைசிவரை முதலிடத்திலேயே இருந்ததுதான் எம்.ஜி.ஆர். என்ற மூன்றெழுத்தின் அதிசயம்!



    இப்போதும் அரசியல் கட்சிகள் அவரது பெய ரைச் சொல்லி ஓட்டு கேட்கின்றன. மறுவெளி யீட்டு படங்களைப் பட்டியலிட்டால் எம்.ஜி.ஆரின் படங்கள்தான் அதிக அளவில் மறுவெளியீடு செய்யப்பட்டு மக்களால் விரும்பிப் பார்க்கப்படு கிறது. 2014-ம் ஆண்டு ‘ஆயிரத்தில் ஒருவன்’ படம் மறுவெளியீட்டில் சென்னையில் வெள்ளி விழா கொண்டாடியது ஒரு உலக சாதனை!

    திரைப்பட வெற்றி ஒரு சாதனைக் குறியீடு தான். அதைத் தாண்டிய விண்ணைத் தொடும் எம்.ஜி.ஆரின் புகழுக்கு அவரிடம் நிறைந்திருந்த மனிதாபிமானமும் மக்கள் சேவையும்தான் காரணம்! அப்படிப்பட்டவருக்கு ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் வெளியிட்ட ‘எம்.ஜி.ஆர். 100’ தொடர் கட்டுரைகளை சிறப்பு மரியாதையாகக் கருது கிறோம். இந்தக் கட்டுரைகள் அவரது பல்வேறு சிறப்புகளின் ஒரு துளிதான். தொடர் முடியலாம்; எல்லையற்ற பிரபஞ்சம் போல விரிந்து பரந்திருக்கும் அவரது புகழுக்கு முடிவேது?



    எம்.ஜி.ஆர். இன்னும் மறையவில்லை; தனது அழியாப் புகழால் மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். அப்படி வாழ்வாங்கு வாழ்பவருக்கு வாழ்த்துப்பா பாடுவதுதானே முறை! அதற்கும் அவரது படப் பாடல்தான் கைகொடுக்கிறது. ‘ஊருக்கு உழைப்பவன்’ படத்தில் ‘பிள்ளைத் தமிழ் பாடுகிறேன்…’ என்ற அருமையான பாடல். குழந்தையை வாழ்த்திப் பாடும் அந்தப் பாடலில் வரும் வரிகள், குழந்தை உள்ளம் கொண்ட எம்.ஜி.ஆருக்கு கச்சிதமாய் பொருந்துகிறது…

    ‘நீலக்கடல் அலைபோல நீடூழி நீ வாழ்க!

    நெஞ்சமெனும் கங்கையிலே நீராடி நீ வாழ்க!

    காஞ்சி மன்னன் புகழ்போல காவியமாய் நீ வாழ்க!

    கடவுளுக்கும் கடவுளென கண்மணியே நீ வாழ்க!’


    நிறைந்தார்.

  2. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #1102
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் கருத்துகள்



    Nedunchezian
    ஆதாரபூர்வமான செய்திகள், அதை உறுதிப்படுத்தும் பத்திரிகை கட்டிங்குகள், புகைப்படங்கள், புத்தக மேற்கோள்களுடன் எம்.ஜி.ஆர். 100 என்ற அற்புதமான தொடரை வெளியிட்டு எங்கள் இதயத்தை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்க வைத்த தி இந்து நாளிதழுக்கும் கட்டுரையாளர் திரு.ஸ்ரீதர் சுவாமிநாதன் அவர்களுக்கும் கோடான கோடி நன்றிகள்.

    எம்.ஜி.ஆர். இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்ற வரிகளைப் படிக்கும்போது கண்கலங்கிவிட்டேன். இன்னும் ஒரு 50 பாகங்களாவது நீட்டித்திருக்கலாம் என்பதைத் தவிர வேறு எந்தக்குறையும் இல்லை. பொறாமை இல்லாமல் எம்.ஜி.ஆரை அணுகினால் அவரது சிறப்புகளை எல்லாரும் உணர்ந்து கொள்ளலாம். விரைவில் புத்தகமாக போடுங்கள்.
    இந்து நாளிதழ் வலைத்தள பொறுப்பாளர்கள், கருத்து பதிவிட்ட நண்பர்களுக்கு நன்றி.
    வாழ்க புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். புகழ்!
    155
    about 5 hours ago (2) · (0) reply (0)
    Baskar · zeing Up Voted
    GG.Kanagaraj
    எம்.ஜி.ஆர் அவர்கள் நடிகராக வளர்ந்து, மக்கள் திலகமாக மலர்ந்து, புரட்சித்தலைவராக உயர்ந்து, தமிழ் நாட்டை ஆண்டது மட்டுமல்ல, உலகமெங்கும் உள்ள தமிழர்களின் மனங்களில் அன்றும் இன்றும் என்றும் நிறைந்திருப்பவர்! மற்றவர்களால் அது முடியாமல் போனதற்கு காரணம், சிறு வயது முதலே (2 வயதில் தொடங்கியது தமிழ்நாட்டில்) வறுமையில் உழன்று, பிறரின் (தனது தாய் உட்பட) துயரை உணர்ந்து வளர்ந்த சூழல்தான்! தனக்கு கிடைத்தை தான் மட்டும் உண்ணாமல் அடுத்தவருக்கும் அள்ளிக் கொடுத்த வள்ளலை யார் தான் தொடமுடியும்?! ரசிக்கத்தான் நம்மால் முடியும்!
    995
    about 5 hours ago (3) · (0) reply (0)
    Baskar · nedunchezian · zeing Up Voted
    KKathir
    என்னை போன்ற இளம் வயதினருக்கு MGR பற்றி பல செய்திகளை தெரிந்து கொள்ள இந்த தொடர் மிகவும் உதவியது ... நன்றி தி ஹிந்து
    545
    about 6 hours ago (1) · (0) reply (0)
    Baskar Up Voted
    Aravind Ranganathan
    ஏன் இதை புத்தகமாக வெளியிட கூடாது
    about 9 hours ago (4) · (0) reply (0)
    Baskar · Prabakaran · sakthi · Josh Up Voted
    SSivasankar
    சினிமாவில் நான் ரஜினி ரசிகன் அரசியலில் நான் காமராஜர் ரசிகன் ஆனாலும் இந்தத்தொடர் என்னை மிகவும் கவர்ந்தது நன்றி, இத்தொடருக்கு பிறகு வள்ளல் தன்மையில் நான் M.G.R ரசிகனாகிவிட்டேன் . பொன்மனச்செல்வருக்கு நான் தலை வணங்குகிறேன்.
    190
    about 9 hours ago (5) · (0) reply (0)
    Baskar · Prabu · sakthi · Reginald · Josh Up Voted
    MM.Kumar
    சிறு வயது முதல் தீவிர MGR ரசிகரான நான் (முதலில் 6 வயதில் சென்னை சித்ரா தியேட்டரில் பெரிய இடது பெண் 100 வது வெற்றி விழா ) இன்று வரை மாறாமல் அவரின் அருமையான செய்திகளை எனக்கு பிடித்த ஹிந்து பத்திரிகையில் கண்டு படித்ததை என்றும் மறவேன். காலத்தின் இந்த பெட்டகத்தை என்றும் வைத்து கொள்வேன்
    855
    about 11 hours ago (2) · (0) reply (0)
    Prabu · Reginald nedunchezian · indian · zeing · M · Josh Up Voted

    GG.Kanagaraj
    எம்.ஜி.ஆர் அவர்கள் நடிகராக வளர்ந்து, மக்கள் திலகமாக மலர்ந்து, புரட்சித்தலைவராக உயர்ந்து, தமிழ் நாட்டை ஆண்டது மட்டுமல்ல, உலகமெங்கும் உள்ள தமிழர்களின் மனங்களில் அன்றும் இன்றும் என்றும் நிறைந்திருப்பவர்! மற்றவர்களால் அது முடியாமல் போனதற்கு காரணம், சிறு வயது முதலே (2 வயதில் தொடங்கியது தமிழ்நாட்டில்) வறுமையில் உழன்று, பிறரின் (தனது தாய் உட்பட) துயரை உணர்ந்து வளர்ந்த சூழல்தான்! தனக்கு கிடைத்தை தான் மட்டும் உண்ணாமல் அடுத்தவருக்கும் அள்ளிக் கொடுத்த வள்ளலை யார் தான் தொடமுடியும்?! ரசிக்கத்தான் நம்மால் முடியும்!
    995
    about 5 hours ago (2) · (0) reply (0)
    Baskar · Reginald Up Voted

    பாரதி
    திரு ஸ்ரீதர் சுவாமிநாதன் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள். என்னைப்போல் தற்கால இளைஞர்களுக்கு எம்.ஜி.ஆர் வாழ்க்கையை மிக எளிதாக புரியவைத்துள்ளார். ------- யாரையும் மனம் புண்படும்படி வசைபாடாமல் அரசியலில் மிக பெரிய இடத்தை அவரால் பிடிக்க முடிந்தது. வாழ்க எம்.ஜி.ஆர் புகழ்.
    3590
    about 15 hours ago (4) · (0) reply (0)
    indian · sakthi · Reginald · Josh Up Voted
    SGs. Gokarnesan
    அருமையான தொடர். இப்படி ஒரு மனித தெய்வம் நம் காலத்தில் வாழ்ந்தார் என்பதே நமக்கு பெருமை தான்.
    3900
    about 20 hours ago (4) · (0) reply (0)
    indian · sakthi · Reginald · Josh Up Voted
    AAnand
    கடைசி தொடர் என்று நினைக்கும் போது என்னை அறியாமல் கண்கள் கலங்குகிறது. இந்து நாளிதழுக்கு நன்றி. இன்னும் பல தகவல்கள் திரட்டி மறுவெளியீடு செய்யலாம்.
    about 22 hours ago (4) · (0) reply (0)
    indian · sakthi · Reginald · Josh Up Voted
    Aarulkumar1111111
    MGR என்ற மூன்று எழுத்து, வெறும் ஒரு பெயர் மட்டும் அல்ல. அது ஒரு மாந்திர சொல். அதை நல்ல மணம் கொண்டவர்கள் மட்டுமே உணர முடியும்.
    about 22 hours ago (4) · (0) reply (0)
    indian · sakthi · Reginald · Josh Up Voted
    GG.Kanagaraj
    எம்.ஜி.ஆர் மீது காட்டும் வெறுப்பை விட, மக்கள் திலகத்தின் ரசிகரும் தொண்டருமான நம் மீது கடும் தாக்குதலை நடத்தும் மற்றவர்க்கு நாம் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம்! ஏனென்றால், எந்த அளவுக்கு அவர்கள் நம்மை மட்டம் தட்டுகிறார்களோ அந்த அளவுக்கு நமக்கு தெளிவு உண்டாகிறது! எம்.ஜி.ஆர் என்றுமே யாரையும் தரம் தாழ்த்தி பேசியதும் இல்லை ஏசியதும் இல்லை. அதுவே, அவரிடம் நாம் கற்ற பாடமும் ஆகும்!
    995
    about 23 hours ago (6) · (0) reply (0)
    nedunchezian · indian · sakthi · M · Anand · Reginald Up Voted
    RRavishankar
    மிக்க நன்றி ஹிந்து, என்றுமே எங்கள் மனதில் இருந்து அழியாதது இரண்டு விஷயம் ஒன்று எம் ஜீ ஆர் இன்னொன்று ஹிந்து நாளேடு
    230
    about 24 hours ago (2) · (0) reply (0)
    sakthi · Reginald Up Voted
    KPkathirvel pandian
    அவர் நினைத்திருந்தால் தமிழ்நாடு சொத்து மொத்தம் எடுத்துக்குக்கொண்டு கேரள வில் நிம்மதியாக வாழ்ந்திருக்கலாம் ...என்ன ஒரு மாமனிதர் .....என்னுடைய தந்தைக்கு MGR என்றால் உயிர் அதற்க்கான காரணத்தை இன்று அறிந்து கொண்டேன் ....அவர் மனித வடிவில் ஒரு அற்புத இறை படைப்பு ...நான் MGR பார்த்ததில்லை ...ஆனால் நானும் அவர் ரசிகன் இன்றிலிருந்து ............
    about 24 hours ago (6) · (0) reply (0)
    Prabu · indian · sakthi · M · Anand · Reginald Up Voted
    CVchennai vasagan
    மிக்க நன்றி .புத்தகமாக வெளியிடுங்கள் . இடம் பெற்ற அனைத்து படங்களையும் வெளியிடுங்கள்.
    nandri
    385
    a day ago (7) · (0) reply (0)
    Prabu · VISWANAATHAN · Raana · indian · பாரதி · sakthi · Reginald Up Voted
    MVM Vinothkumar
    மிக்க நன்றி ஹிந்து..
    140
    a day ago (3) · (0) reply (0)
    பாரதி · sakthi · Reginald Up Voted
    MM.RATHINAM
    இந்த மாமனிதர் இன்னும் சிலகாலம் வாழ்ந்திருப்பாரேயானால் கண்டிப்பாக தமிழ் ஈழம் மலர்ந்திருக்கும். இவர் நடித்து வெளிவந்த பல நூறு சமூகம் மற்றும் தத்துவக் கருத்துள்ள திரைப்படப்பாடல்கள் அந்தக்காலத்தில் என் போன்ற பலரின் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக அமைந்தது என்றால் அது மிகையாகாது. வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார் என்ற பாடலின்படி இன்றும் அவர் நம்மிடையே வாழ்ந்து வருகின்றார். மு.இரத்தினம், கரூர்.
    a day ago (7) · (0) reply (0)
    Prabu · Raana · indian · sakthi · M · Arasappan · Reginald Up Voted
    RReginald
    நல்லவன் வாழ்வான் இது அவர் நடித்த படத்தின் தலைப்பு மட்டும் அல்ல , அவருடைய தரிசனம், நல்லவர் M G R என்றும் வாழ்வார் , வறியவர் தம் நெஞ்சத்தில் , முடிவில்லா புகழ் அவருடையது !
    2285
    a day ago (8) · (0) reply (0)
    Prabu · Raana · indian · பாரதி · sakthi · M · Arasappan · GKanagaraj Up Voted
    சசரத்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன்
    250
    a day ago (5) · (0) reply (0)
    indian · sakthi · M · Arasappan · Reginald Up Voted
    VKVenkatesan Kumaran
    Any ideas to publish a book consolidating the complete epic episodes of MGR 100 series?
    a day ago (6) · (0) reply (0)
    indian · M · Arasappan · Abul · Reginald · Josh Up Voted
    VKVenkatesan Kumaran
    Any plans to release a book consolidating all epic episodes of MGR 100 ?
    a day ago (6) · (0) reply (0)
    indian · M · Arasappan · Abul · Reginald · Josh Up Voted
    a day ago (6) · (0) reply (0)
    Prabu · nedunchezian · indian · sakthi · M · Arasappan Up Voted
    கசகணபதி சுப்பையா
    எம்.ஜி.ஆர் மாற்றுக் கட்சிக் காரர்களால் (திமுக உட்பட)
    அதிகம் நேசிக்கப்பட்டவர்.
    இப்போதைய அதிமுக அவரை
    விளம்பரப் பொருளாக்கிவிட்டது.
    இல்லையென்றால் ராமாபுர
    தோட்டத்தை அழிய விட்டிருக்காது.
    "வாழ்ந்தாலும் மறைந்தாலும்
    பேர் சொல்ல வேண்டும்
    இவர் போல யாரென்று ஊர்
    சொல்ல வேண்டும்"
    வாழ்க எங்கள் தங்கத்தின் புகழ்
    12005
    a day ago (8) · (0) reply (0)
    Prabu · indian · sakthi · M · Devarajan · Abul · Reginald · Josh Up Voted
    RRamaseshan
    a beautiful biography in tranches, well done
    3950
    a day ago (3) · (0) reply (0)
    Abul · Reginald · Josh Up Voted
    Load more
    Talk of the Town

    M.kumar
    ஏன் இந்த கட்டுரை இன்றோடு நிறுத்த வேண்டும் 17-1-17 வரை நீட்டிக்கலாமே
    855
    a day ago (9) · (0) reply (0)
    Prabu · indian · sakthi · M · Anand · Arasappan · Rajan · Reginald · Josh Up Voted
    Tthiru
    கடைசி ரெண்டு கட்டுரை படிச்ச உடனே, என் மனசுலயும் MGR இமயமா ஒசந்துட்டார்.
    650
    a day ago (8) · (0) reply (0)
    Prabu · indian · sakthi · M · Anand · Arasappan · Reginald · Josh Up Voted
    SSsivakumar Sivakumar
    அவருக்கு நிகர் எவரும் இல்லை.
    375
    a day ago (7) · (0) reply (0)
    indian · sakthi · M · Anand · Arasappan · Reginald · Josh Up Voted
    PVponniah vinuraj
    தி இந்து .........................................வணக்கம் ..........
    205
    a day ago (4) · (0) reply (0)
    indian · sakthi · Arasappan · Reginald Up Voted
    MVM Vinothkumar
    ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவது இல்லை.. அது தான் என் தலைவர்.. அவர் நல்லதை மட்டுமே திரைப்படங்கள் வாயிலாக சொன்னார்.. எனக்கு அடுத்த தலைமுறைக்கு நான் தைரியமாக இவரை ரோல் model ஆக சொல்வேன்..
    140
    a day ago (6) · (1) reply (0)
    Prabu · indian · Anand · kathirvel · Reginald · GKanagaraj Up Voted

    about 24 hours ago (1) · (0) reply (0)
    Prabu Up Voted
    RRajaram
    ஹிந்து தமிழ் பேப்பர் மற்றும் எம்ஜியார் 100 வெற்றி கரமாக முடிந்ததற்கு என்னை போன்ற உயிரினும் மேலான ரத்தத்தின் ரத்தமான தலைவரின் தொண்டர்களின் சார்பாக கோடான கோடி நன்றியை தெரிவித்து கொள்கிறேன். பகுதி 2 எம்ஜியார் 100 எப்போது ஆரம்பிக்க போகிறீர்கள் என்ற கேள்வியோடு எம்ஜியார் வாழ்க என்று விடை பெறுகிறேன்.
    நன்றி. வணக்கம்.
    a day ago (6) · (0) reply (0)
    Prabu · indian · M · Anand · Arasappan · Reginald Up Voted
    RRSR
    இந்தத் தொடர் நன்றாகத் தொடங்கியது. எம்.ஜி.ஆர். ஒரு இந்திய தேசபக்தர், காங்கிரஸ் ஆதரவாளர், காமராஜர் எனது தலைவர் என்று வெளிப்படையாக அறிவித்தவர், இந்திரா காந்தியின் அவசர நிலைப் பிரகடனத்தை வரவேற்றவர் , ராஜீவ் காந்தியின் நெருக்கமான நண்பர், மனித நேயபண்பாளர், கர்நாடக இசை முதல், நவீன திரைப்பட இசை நுணுக்கங்கள் அறிந்தவர். என பல நல்ல விஷயங்களை சிலவற்றை சொல்லியும் பலவற்றை சொல்லாமலும், முடிக்கும்போது, நேரத்திற்கு ஒன்று கற்பனையும், உண்மையும் கலந்து பேசும் , எம்ஜிஆர் அவர்களுக்கு சற்றும் தொடர்பில்லாத ,வைகோ மற்றும் அவரது hobby horse LTTE support ல் முடித்து, ஒரு குடம் பாலில் , ஒரு துளி என்றாலும் கடும் விஷம் சேர்த்து, இந்தக் கட்டுரையின் நோக்கம் என்ன என்பதை தெரிவித்து , கடும் வெறுப்பு மிஞ்ச விடை பெற வைத்துள்ளார். மன்னிப்பு சற்றும் கிடையாது.
    5785
    a day ago (2) · (0) reply (1)
    Baskar · indian Up Voted
    GG.Kanagaraj
    தொகுப்பாசிரியர் தன்னால் இயன்ற அளவுக்கு, செய்திகளையும் மற்றும் படங்களையும் திரட்டி, கடவுளுக்கு போடும் ஒரு கதம்ப மாலை போல், மக்கள் திலகத்திற்கு சாற்றியுள்ளார். எம்.ஜி.ஆர் அவர்களின் பூவுலக வாழ்வில் நிகழ்ந்தவைகளும் அதில் தொடர்புடையவர்கள் பற்றியும் வெளியிட்ட செய்தி தொகுப்பு தான் எம்.ஜி.ஆர் 100 ! இதில் உள்நோக்கம் கற்பிப்பது அறிவுடைமை ஆகாது !
    995
    a day ago (3) · (1) reply (0)
    Prabu · sundar · indian Up Voted
    Reginald Down Voted
    Sசsugumar சுகுமார்
    அறிய புகைப்படங்கள். அறியாத பல செய்திகள். ‘எம்.ஜி.ஆர். 100’ கட்டுரைகளை தொடர்ச்சியாக வாசித்து வந்திருக்கிறேன். 100 நாட்கள் ஓடியதே தெரியவில்லை. சிறு வயதிலிருந்தே எம்ஜியார் எனும் நடிகரின் ரசிகராக இருந்த எனக்கு அவரது மனிதாபிமான செயல்களைப் பற்றி அவ்வளவு அறிந்திருக்கவில்லை. அதனை முழுமையாக அறிய செய்தது ‘இந்து தமிழ்’. ஓர் நடிகர், அரசியல்வாதி... எனும் பிம்பத்துக்கும் அப்பால், எம்ஜியார் ஓர் சிறந்த மனிதாபிமானி என்பதை எடுத்துக்காட்டிய இந்து தமிழுக்கு எம்ஜியார் ரசிகன், ‘இந்து தமிழ்’ வாசகன் என்ற முறையில் எனது வணக்கங்கள், வாழ்த்துக்கள். நன்றி.
    3110
    a day ago (5) · (0) reply (0)
    Prabu · indian · Mkumar · Anand · Reginald Up Voted
    BBalu
    இந்த தொடரில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் .
    1340
    a day ago (3) · (0) reply (0)
    indian · Arasappan · Reginald Up Voted
    BBalu
    பலகோடி நன்றிகள் ....தமிழ் ஹிந்து
    1340
    a day ago (3) · (0) reply (0)
    indian · Arasappan · Reginald Up Voted
    BBalu
    உண்மை தான் ..தெய்வங்களும் பலரால் வழிபட்டும் சிலரால் தூற்றப்பட்டுக்கொண்டும் இருப்பதால் அந்த தெய்வத்தின் சக்திக்கோ தெய்வீகத்திற்கோ எந்த ஒரு குறையும் நிகழ்ந்து விட போவதில்லை .ஒருவரை குறை சொல்வதற்கும் ஒரு தகுதி வேண்டும் . ஒரு தலைவரைப் பற்றி இந்த தொடர்களில் அனாவசியமாக விமர்சித்திருப்பது மிகவும் வருத்தமான செயலாகும் ... அவர்கள் யார் என்று அவர்களுக்கே தெரியும் .... உண்மையில் துணிவிருந்தால் நேருக்கு நேர் விவாதங்கள் செய்யுங்கள் பார்க்கலாம். ஒரு மாமனிதரை ஒரு மாபெரும் தலைவரை ஈடில்லாத மக்களின் சக்தியை இது போல் விமர்சிப்பது நல்ல விஷயம் அல்ல. மறப்போம் மன்னிப்போம் .இது கூட எங்கள் தலைவரின் கொள்கைகளில் மிக முக்கியமான ஒன்று தான். நாங்கள் அதன் வழி நடப்பவர்கள் .வாழ்க புரட்சி தலைவர் நாமம்..உலகம் உள்ளவரை .... திரு. ஸ்ரீதர் ஸ்வாமிநாதன் மற்றும் படத்தொகுப்பு திரு. செல்வகுமார் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் .எம்ஜிஆர் பக்தர்கள் சார்பில் ஒரு வேண்டுகோள் . தொடரை மேலும் நீடிக்கவும்..
    1340
    a day ago (7) · (0) reply (0)
    Baskar · Prabu · indian · Anand · Arasappan · Reginald · arulkumar1111111 Up Voted
    VValavan
    எம் ஜி ஆர் 1000 எப்பொழுது ஆரம்பிக்க போகிறீர்கள் ....அருமையான தொடர் ....
    a day ago (6) · (0) reply (0)
    Baskar · indian · Mkumar · Anand · Arasappan · Reginald Up Voted
    Rradhakumar
    மீண்டும் ஒரு எம் ஜீ ஆர் 100 யை ஆரம்பியுங்கள் . படிக்க படிக்க இப்படி ஒரு மனிதரா என்ற பிரமிப்பு அடங்க வில்லை .
    a day ago (5) · (0) reply (0)
    Prabu · VISWANAATHAN · indian · Anand · Arasappan Up Voted
    Ooorvambu
    அவர் கூட வாழ்ந்தவர்களுக்கு அந்த ஒழுக்கம், கண்ணியம் கட்டுப்பாடு,, பெருந்தன்மை ,, இல்லாமல் போனது வேதனை தான்,,
    11445
    a day ago (2) · (0) reply (0)
    indian · Anand Up Voted
    Ooorvambu
    இன்னும் ஒரு 20 வருடம் அவர் வாழ்ந்து இருக்கலாம்,,,, சில நேரங்களில் இறைவனின் பொறாமை குணம் ,,,
    11445
    a day ago (2) · (0) reply (0)
    Mkumar · Arasappan Up Voted
    RReginald
    உண்மையிலும் உண்மை பேருண்மை ! மக்கள் திலகம் இன்னும் மறையவில்லை , அவரால் மறையவும் முடியாது . வானும் ,நீரும் காற்றும் இந்த வய்யம் உள்ளவரை அவரின் பெயரும் ,புகழும் நிலைத்து இருக்கும் . எங்கள் தங்கம் M G R நமது இதயத்தில் இன்றும் வாழுகிறார் . அவரின் புகழ் பாடிய இந்த தொடரை வெளியிட்ட எங்கள் இந்துவுக்கும், திரு ஸ்ரீதர் அவர்களுக்கும் , விருப்புடனும் , விரைவுடனும் தங்களின் இதய துடிப்பை தவறாமல் பதிந்து வந்த திரு கனகராஜ் முதலான அநேக உறவுகளுக்கும் , புரியாமலும் , தெரியாமலும் எதிர்மறை கருத்தினை பதிவு செய்த திரு தங்கமணிக்கும் என் இதயம் நிறைந்த நன்றி !
    " பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும் சாமிக்கு நிகர் அல்லவா
    பிறர் தேவை அறிந்து கொண்டு வாரிக்கொடுப்பவர்கள்
    தெய்வத்தின் பிள்ளை " ஆமாம் M G R தெய்வத்தின் பிள்ளை ! அவரின் புகழுக்கு என்றும் முடிவே இல்லை !
    2285
    a day ago (4) · (0) reply (0)
    Prabu · indian · Anand · arulkumar1111111 Up Voted
    MHM.Abul Hassan
    மிக்க நன்றி தமிழ் ஹிந்து
    a day ago (3) · (0) reply (0)
    indian · Arasappan · Reginald Up Voted
    RRaj
    மிக சிறந்த தொகுப்பு. தமிழ்நாட்டில் பலரையும் மலரும் நினைவுகளில் ஆழ்த்திய கட்டுரை. தமிழ்நாடு ஒரு தகுதியும் இல்லாத பலரையும் அடுத்தவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக தலைவராக கொண்டாடுகிறது. தமிழ்நாட்டின் உண்மையான ஒரே தலைவர் MGR தான். ஒரு குறை, இப்படி ஒரு தீவிரவாதிக்கு உதவியதை சொல்லி முடித்திருக்கத் தேவையில்லை.
    730
    a day ago (3) · (1) reply (2)
    indian · Arasappan · Reginald Up Voted
    sathishkumar Down Voted
    அசோக்குமார் கொன்றையாண்டி
    தீவிரவாதமல்ல அது இன சுய உரிமை போராட்டம் ராஜ், வேறுபாடு புரிந்து கொள்ளுங்கள்,புரியவில்லை என்றாலும் கொச்சை படுத்தாதீர்கள்
    a day ago (2) · (0) reply (0)
    indian · Reginald Up Voted
    GG.Kanagaraj
    யார் தீவிரவாதி?! "யார், எப்படி ஆனால் என்ன? தானுண்டு, தன் குடும்பம் மட்டுமே பிழைத்தால் மட்டும் போதும்!" என்று பொதுச்சொத்துக்களை கொள்ளை அடித்து கும்மாளம் போடும் கூட்டத்திலே, தன் இனம் மானத்தோடு வாழ வேண்டும் என்று உறுதி பூண்டு, தங்கள் வாழ்க்கையே அர்ப்பணித்த வீரரா தீவிரவாதி? கொள்கை வேறுபாடுகள் ஆயிரம் இருக்கலாம்! ஆனால், உலகத்தின் மிகவும் பழமையான, செழுமையான தமிழ் மொழி பேசும் மக்கள் வீழ்ந்தாலும், என்றும் இவ்வுலகில் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்கள். காட்டிக்கொடுக்கும் எட்டப்பர்கள் என்றும் கூடவே இருந்ததால் தான் நம்மால் முன்னேற முடியவில்லை. ஆனால், வீரர்கள் என்றும் நம் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்கள்!
    995
    a day ago (1) · (0) reply (0)
    indian Up Voted
    GG.Kanagaraj
    தமிழுக்கும் அமுதென்று பேர்! அந்த தமிழ் மண்ணில் சின்னஞ்சிறு கால்களை ஊன்றி, பெரும் ஆலமரமாகி நின்று, பலரின் துயரங்களை தன் எண்ணத்தாலும் சொல்லாலும் செயல்களாலும் தாயன்போடு களைந்த எம்.ஜி.ஆர் அவர்களை, நல்லவரா, இல்லை கெட்டவரா என ஆராய்ந்து முடிவெடுக்கும் தகுதி, பல பெயர்களால் பெரும்பாலோர் வழிபடும் மற்றும் சிலரால் தூற்றப்படும் கடவுளுக்கே உண்டு. அந்த ஆண்டவனே அவர் மூலம் தமிழின மக்களுக்கு உதவினார் என்பதே உண்மை!
    995
    a day ago (5) · (0) reply (0)
    indian · Mkumar · Arasappan · muthuraj · Reginald Up Voted
    GG.Kanagaraj
    தமிழ் "ஹிந்து", தொகுப்பாளர் ஸ்ரீதர் சுவாமிநாதன் மற்றும் படங்கள் உதவி: ஞானம், செல்வகுமார் அவர்களுக்கும், வலைத்தளத்தினை திறம்பட வழங்கிய வலைதள நிர்வாகிகளுக்கும் எங்களது கருத்துக்களை பதிவேற்றி விளங்க வைத்ததற்கும் நன்றிகள் 100!
    995
    a day ago (4) · (0) reply (0)
    indian · Arasappan · muthuraj · Reginald Up Voted

  5. Thanks orodizli, siqutacelufuw thanked for this post
    Likes orodizli, siqutacelufuw liked this post
  6. #1103
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like


    ‘வானமழைத் துளி யாவும் முத்தாக மாறாது! வண்ணமிகு மலர் யாவும் உன்போல சிரிக்காது...!’ ஓவியம் : ஏ.பி. ஸ்ரீதர்

  7. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  8. #1104
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இந்து பத்திரகைக்கு நன்றி நன்றி நன்றி!!!!


    ஸ்ரீதர் சுவாமி நாதன் அவர்களுக்கு



  9. Thanks orodizli, siqutacelufuw thanked for this post
    Likes orodizli, siqutacelufuw liked this post
  10. #1105
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    45 ஆண்டுகளுக்குப் பிறகு புதுப் பொலிவுடன் எம்.ஜி.ஆரின் ரிக்ஷாக்காரன்!

    மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த ப்ளாக்பஸ்டர் வெற்றிப் படமான ரிக்ஷாக்காரன் புதிய பொலிவுடன் மீண்டும் வெளியாகிறது.

    எம்ஜிஆர் - மஞ்சுளா, பத்மினி, அசோகன், மேஜர் சுந்தரராஜன் உள்ளிட்டோர் நடித்த ரிக்ஷாக்காரன் படத்தை சத்யா மூவீஸ் தயாரித்தது. 1971, மே 29-ம் தேதி வெளியான இந்தப் படம் வசூலில் புதிய சாதனை நிகழ்த்தியது.

    எம்ஜிஆருக்கு தேசிய விருது

    இந்தப் படம்தான் எம்ஜிஆருக்கு தேசிய விருதினைப் பெற்றுத் தந்தது. எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையமைத்த இந்த படத்தை எம் கிருஷ்ணன் இயக்கியிருந்தார். அழகிய தமிழ் மகள் இவள்..., அங்கே சிரிப்பவர்கள், கொல்லிமலைக் காட்டுக்குள்ளே, கடலோரம் வாங்கிய காற்று, பொன்னழகுப் பெண்மை... என மிக இனிய பாடல்கள் இடம்பெற்றிருந்தன.

    பல முறை

    இந்தப் படம் பல முறை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பட்டது. பல ஊர்களில் திரும்பத் திரும்ப புதிய பிரிண்டாக வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்தது. எப்போது வெளியிட்டாலும் வசூலைக் குவித்த படம் இது.

    டிஜிட்டலில்

    இப்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் படத்தை முழுமையாகப் புதுப்பித்து வெளியிடும் வேலையில் இறங்கியுள்ளனர். ஏற்கெனவே எம்ஜிஆரின் ஆயிரத்தில் ஒருவன் புதிய வடிவில் வெளியாகி வெள்ளிவிழாக் கண்டது.

    ட்ரைலர்

    அதே பாணியில் இப்போது ரிக்ஷாக்காரனை வெளியிடும் பணிகள் நடக்கின்றன. விரைவில் படத்தின் ட்ரைலர் வெளியாக உள்ளது







    Courtesy : http://mlife.mtsindia.in/nd/?pid=166...து போக்கு&pag=HPAGES&anam=Oneindia&pi=8&rgn=tn

  11. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  12. #1106
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like
    இனிய ரமலான் வாழ்த்துக்கள்..


  13. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  14. #1107
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like

  15. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  16. #1108
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like


    1974ல், நம் தலைவர் கண்ட இயக்கம் அ.தி.மு.க.வின் முதல் ஆட்சி புதுவையில் அமைந்தது. அ.தி.மு.க.வின் முதல் முதல்வர் யார் என்றால் திரு. ராமசாமி தான். அந்த பெருமையை தான் அடையாமல், மற்றவருக்கு அளித்த மாபெரும் தலைவர் தான் நம்
    புரட்சித்தலைவர். பட்டியலில் இது சேர்க்கப்பட வேண்டிய ஒன்று !

  17. Thanks orodizli thanked for this post
    Likes orodizli, oygateedat liked this post
  18. #1109
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  19. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  20. #1110
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    இனிய ரமலான்
    நல்வாழ்த்துக்கள்

  21. Thanks orodizli thanked for this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •