Page 234 of 400 FirstFirst ... 134184224232233234235236244284334 ... LastLast
Results 2,331 to 2,340 of 3994

Thread: Makkal Thilagam MGR Part - 20

  1. #2331
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2332
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  4. #2333
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like

  5. #2334
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று (16/09/2016) முதல் சென்னை பாலாஜியில் , புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த
    தேவரின் "தாய்க்கு பின் தாரம் " தினசரி 3 காட்சிகள் (11.30. 3.00, 6.00) நடைபெறுகிறது .

    தகவல் உதவி : ஓட்டேரி திரு. பாண்டியன்

  6. #2335
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று (16/09/2016) முதல் சென்னை மகாலட்சுமியில் , மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.
    "இதயக்கனி " தினசரி 2 காட்சிகள் (மேட்னி , மாலை ) நடைபெறுகிறது .


    தகவல் உதவி : ஓட்டேரி திரு. பாண்டியன் .

  7. #2336
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

    இன்று இரவு (16/09/2016) 7 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் புரட்சி நடிகர் /மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் கலக்கிய " எங்க வீட்டு பிள்ளை "
    ஒளிபரப்பாகிறது .

  8. #2337
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    திரு லோகநாதன் அவர்களுக்கு,

    பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளில் தாங்கள் பதிவிட்ட புகைப்படங்கள் அனைத்தும் அருமை.

  9. #2338
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  10. #2339
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by makkal thilagam mgr View Post


    பேரறிஞர் அண்ணாவின் பெருமைகள் ......
    உயிருக்கு உயிராய் தொண்டர்களிடம் பாசத்தை கொட்டிய மற்றொரு உத்தமப்பிறவி (ஏற்கனவே ஒரு தனிப்பிறவி உண்டு அவர்தான் மக்கள் நெஞ்சை கொள்ளை கொண்ட மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.) வைரக்கல்லாய் ஒளி பரப்பிய ஓர் அறிவுச்சுடர், மக்களாட்சி நெறிமுறைக்கு தக்க மதிப்பளிக்கும் ஒரு மணி விளக்கு, அகந்தை என்பதே அணுவும் இல்லாத ஓர் அன்புக்கடல். பெருந்தன்மையின் சிகரம்,

    மேல் நாட்டு பேச்சாளர்களான டெமாஸ்தனிஸ், ஆன்டனி, சிசரோ, சர்ச்சில், ஆட்லாய், ஸ்டிவன்சன் முதலான பேச்சுப்புலிகளின் மொத்த உருவமாக பேரறிஞர் அண்ணா அவர்கள் விளங்கினார்.

    தமிழ் நாட்டின் சிறந்த பேச்சாளர்களான சர். ஏ. இராமசாமி, ரைட் ஆனரபிள் சீனிவாச சாஸ்திரி, ஞானியார் சாமிகள், திரு.வி.க., மறைமலையடிகள், சோமசுந்தர பாரதியார், எஸ். சத்யமூர்த்தி, ரா. பி. சேதுப்பிள்ளை, பா. ஜீவானந்தம், தந்தை பெரியார் போன்றவர்களால், தலை சிறந்த சொற்பொழிவாளர் என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் பாராட்டப்பட்டார்.

    பேரறிஞர் அண்ணா அவர்கள் அமெரிக்கா சென்றிருந்தபோது, அவரிடம் கேட்கப்பட்ட வினாக்களுக்கு அவர் உடனக்குடன் அளித்த பதில்கள் :

    கொலம்பியா பல்கலை கழக பேராசிரியர் டாக்டர் ஷெட்டி எழுப்பிய வினா : மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறீர்களே, தொழிலுக்கும், கல்விக்குமல்லவா முக்கியத்துவம் கொடுத்திருக்க வேண்டும், அப்போதல்லவா நாடு முன்னேறும் ?

    பேரறிஞர் அண்ணா அவர்களின் பதில் : எங்கள் நாட்டில், அரசாங்கம் மொழிப்பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவதால், நாங்கள் சமாளிப்பதற்காக அதனை மேற்கொண்டோம். மொழிப்பிரச்சினை உள்நாட்டு போரில் முடியுமோ என்று அஞ்சுவதால், அதற்கு முக்கியத்துவம் அளிக்க நேரிடுகிறது.

    தொடர்ந்து, கொலம்பியா பல்கலை கழகத்தில் விடுக்கப்பட்ட வினா (பேரறிஞர் அண்ணா அவர்களின் உலக அரசியல் ஞானம் பற்றி தொடுக்கப்பட்ட சம்பந்தமில்லாத வினா) :

    1. இத்தாலியில் வடக்கு வளமுடனும், தெற்கு ஏழ்மையிலும் இருக்கிறதே ?

    பேரறிஞர் அண்ணா அவர்களின் பதில் : செல்வம் கொழிக்கும் அமெரிக்காவில் கூட ஏழ்மையும், நிற வேற்றுமை கொண்ட நீக்ரோக்கள் வாழும் பகுதிகள் இருக்கின்றன. இந்தப்பிரச்சினைகளும், வேறுபாடுகளும் உள்நட்டு போரை கொண்டு வந்து விட்டன. பிரச்சனையிலிருந்து நழுவப்பார்ப்பவர்கள் உள்நாட்டு போர் வந்து விடும் என்று பயமுறுத்தி பிரச்சினையிலிருந்து தப்பிக்க பார்க்கிறார்களோ என்றுதான் நான் அஞ்சுகிறேன். நாம் பிரச்சினைகளை தீர்க்க முயல வேண்டுமேயன்றி அவற்றிலிருந்து நழுவ முயலக்கூடாது.

    2. மற்றொரு வினா .....உங்கள் கொள்கைகளால் இந்திய ஒற்றுமை பாதிக்கப்படாதா ?
    பேரறிஞர் அண்ணா அவர்களின் பதில் : நாங்கள் பிரிவினை கொள்கையை விட்டு விட்டோம். நான் ராஜ்ஜிய சபாவில் இது பற்றி பேசும்பொழுது, இனி எல்லோரும் ஒற்றுமையாக சேர்ந்து வாழ்வோம் என்று கூறியபொழுது, பாரளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மகிழ்ச்சி ஆராவாரம் செய்தனரே !

    3. வேறொரு வினா : உங்கள் கல்விக் கொள்கையை காட்டி டில்லி அரசு இடையூறு கொடுக்காதா ?

    பேரறிஞர் அண்ணா அவர்களின் பதில் : "கல்வி" என்பது ஒரு மாநில விஷயம் - டில்லிக்கு அதில் உரிமை ஏதும் கிடையாது.

    ======== ================================================== ================================================== =

    யேல் பல்கலை கழக மாணவர்களின் வினாக்களும், பேரறிஞர் அண்ணா அவர்களின் பதில்களும் ......

    1. நீங்கள் திராவிட நாடு பிரிவினை வேண்டுமெனக் காங்கிரஸை எதிர்க்க வில்லையா ?

    பேரறிஞர் அண்ணா அவர்களின் பதில் : "ஏன் செயின்ட் பால் கூடத்தான்

    2. உங்கள் நாட்டில் மாணவர் போராட்டம் அதிகமாகி கொண்டு வருகிறதே ?

    பேரறிஞர் அண்ணா அவர்களின் பதில் : எங்கள் நாட்டில் மட்டுமா மாணவர் போராட்டம் நடைபெறுகிறது ! உலகம் பூராவிலும் தான் நடைபெறுகிறது. நேற்று இரவு உங்கள் நாட்டு செய்திகளை அலசியபொழுது,கொலம்பியா பல்கலை கழக மாணவர்கள் நீக்ரோ இனத்தவருக்கு சம உரிமை தர வேண்டும் என்று கல்லூரியில் மறியல் செய்து, கல்லூரி தலைவரை வெளியே வராதபடி அறைக்குள் விட்டு அடைத்துள்ளனர்.

    3. கள் குடி உங்கள் நாட்டில் உண்டா ?

    பேரறிஞர் அண்ணா அவர்களின் பதில் : "எங்களைப்போன்ற வெப்ப நாட்டில் "கள்" தேவையில்லாத ஒன்று.

    4. ஏன் பிரிவினை கொள்கையை கை விட்டீர்கள் ?

    பேரறிஞர் அண்ணா அவர்களின் பதில் : சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் இந்தியா மீது படையெடுத்ததினால், நாட்டின் ஒருமைப்பாட்டினை கருத்தில் கொண்டு, தனித்திருப்பது அபாயகரமானது என்பதால் கைவிட்டோம்.

    5. காங்கிரஸ் கட்சி உங்களை ஆட்சி பீடத்திலிருந்து வெளியேற்ற முயல்கிறது என்று கூறுகிறார்களே !

    பேரறிஞர் அண்ணா அவர்களின் பதில் : " நான் அதை நம்ப வில்லை. ஏன் அவர்கள் செய்ய வேண்டும் ? நான் உள்ளே இருப்பதை விட்டு வெளியே இருந்தால் அவர்களுக்கு தான் தலைவலி அதிகம்.

    அப்போதைய பிரதமர் இந்திரா பற்றிய கருத்து பற்றி அமெரிக்கர்கள் கேட்டதற்கு .... இந்தியாவில் பல்வேறு சிக்கல்கள் உள்ள நிலையில், இந்தியப்பிரதமர் திருமதி இந்திராகாந்தி அவர்கள் செயல் புரிகிறார் என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் கூறினார்.

    அடுக்கடுக்காய் வினாக்கள் பல தொடுக்கப்பட்டாலும், சளைக்காது அவற்றுக்கு ஆணியடித்தாற்போல் நெத்தியடி பதில்களை தந்த பேரறிஞர் அண்ணா அவர்களை, "தமது கொள்கைகளின் மூலம் பொது மக்களின் ஆதரவை திரட்டுவதில் வல்லமை பெற்றவர் " என்று யேல் பல்கலை கழக ஏடு கட்டுரை வெளியிட்டு பாராட்டியது.

    பேரறிஞர் அண்ணா அவர்களின் இத்தகைய பெருந்தன்மையான பேச்சுக்களும், பண்புகளும், அவர் தெரிவித்த உன்னதமான கருத்துக்களும், அவர் திறமை மிக்கதொரு மாநிலத்தலைவர் மட்டுமல்லர், இந்தியாவின் தேசியத்தலைவராகவும் உயர்ந்து வருகிறார் என்று "ராம்ப்ளர்" என்ற ஆங்கில வார ஏடு வெகுவாக பாராட்டியிருந்தது.


    1968ம் ஆண்டு செப்டம்பர் 8ம் நாள் அண்ணாமலை பல்கலைக்கழகம், அப்போதைய குடியரசு தலைவர் டாக்டர் ஜாகிர் உசேன் அவர்களோடு, அறிஞர் அண்ணா அவர்களுக்கும் இலக்கிய அறிஞர் என்கின்ற DOCTOR OF LITERATURE பட்டத்தை அளித்து பெரும் மகிழ்வு கொண்டது.

    பேரறிஞர் அண்ணா அவர்களின் படைப்புக்கள் :

    ..... தம்பிக்கு மடல்கள் 315
    ..... கட்டுரைகள் 560
    ..... நாடகங்கள் 13
    ..... குறு நாடகங்கள் 18
    ..... புதினங்கள் 6
    ..... சிறு கதைகள் 118
    ..... கவிதைகள் 77

    பத்திரிகை உரைகள் : சுமார் ஆயிரத்துக்கும் மேல்

    பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையிலான தி.மு.க. வின் முதல் மாநகராட்சி வெற்றி ..

    1959ம் ஆண்டில் நடைபெற்ற சென்னை மாநகராட்சி தேர்தலில் 90 இடங்களில் போட்டியிட்டு 45 இடங்களில் வெற்றி பெற்று, ஏப்ரல் திங்கள் 24ம் நாளில், தி.மு. க. வை சார்ந்த அ. பொ. அரசு மேயராக பதவி ஏற்றார். 100 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 37 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

    பேரறிஞர் அண்ணா அவர்கள் ராஜ்ய சபா (மாநிலங்களவை)வில் ஆற்றிய முதல் உரையை பற்றி பத்திரிகைகள் கருத்து :

    "தி ஹிந்து" ஆங்கில நாளேடு : கொள்கையில் கொண்ட உண்மைப்பிடிப்பாலும், தமது ஆற்றல் மிக்க திறமையாலும், சந்தேகத்துக்கு இடமின்றி, அண்ணாத்துரை அவர்கள் இராஜ்ஜிய சபாவை கவர்ந்து விட்டார்.

    "ஹிந்துஸ்தான் டைம்ஸ்" : தி. மு. க. தலைவர் அண்ணாதுரை அவர்கள் தென்னகத்துக்கு சுய நிர்ணய உரிமை வேண்டும் என்ற கோரிக்கையைத் தெளிவாக எடுத்துரைத்தார். மாநிலங்களவை, இன்று திராவிட நாட்டின் கொள்கைக்காக பாடுபடும் சொல்லாற்றல் மிக்க தலைவரின் பேச்சை கேட்டது., தேசியத்துக்கு அவர் ஒரு புதிய விதியை தந்தார்.

    "டைம்ஸ் ஆப் இந்தியா" : இந்தியாவிலிருந்து பிரிந்து போக வேண்டும் என்னும் குரல் முதன் முதலாக சுதந்திர இந்தியாவின் பாராளுமன்றத்தில் இன்று (01-05-1962) ஒலித்தது. இந்த முழக்கத்தை தி. மு. க. தலைவர் திரு அண்ணாத்துரை அவர்கள், மாநிலங்கள் அவையில் முழக்கினார். இந்திய யூனியனிலிருந்து தென்னகம் பிரிந்து போக வேண்டும் என்ற அவரின் துணிவான வாதம், பாராளுமன்றத்தையே நிலை குலையச் செய்து விட்டது.

    "மாத்ரு பூமி" : ஆட்சி அமைப்பு முறையின் எதிரி என்ற அளவில் அறியப்பட்ட திரு. அண்ணாத்துரை அவர்களின் சொற்பொழிவு என்ன இருந்தாலும் பல முறை குறிப்பாக வட இந்தியாவிலிருந்து வந்திருந்த பல உறுப்பினர்களை வியப்பில் ஆழ்த்தியது. சிறந்த பேச்சாளர் என்றுள்ள நிலையில் சிறந்த பெயர் பெற்றுள்ள அண்ணாத்துரை அவர்கள் அன்று மாநிலங்கள் அவையில் தம் திறமை முழுவதையும் வெளிப்படுத்தினார். சாதாரணமாக தமிழிலிருந்தும், ஆங்கிலத்திலிருந்தும் தான், பொன்மொழிகளை மேற்கோள் காட்டி பேசுவதை நாம் கேட்டிருக்கிறோம். ஆனால், இந்த முதல் மாநிலங்களவை சொற்பொழிவு .. அவரால் வட மொழியிலிருந்தும் பொன்மொழிகளை மேற்கோள் காட்ட முடியும் என்பதை எடுத்தனுப்பியது.


    அந்த முதற் சொற்பொழிவினால் மட்டுமின்றி பின்னர் தாம் ஆற்றிய ஒவ்வொரு உரையினாலும், பாராளுமன்ற பேச்சுக்கலைக்கே ஒரு புத்துயிரும், புதிய பொலிவும் அளித்து விட்டார் பேரறிஞர் அண்ணா அவர்கள்.

    இந்தி திணிப்பை கண்டித்தும், சீன ஆக்கிரமிப்பைக் கண்டித்தும் பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய பாராளுமன்ற உரைகள் வரலாற்று புகழ் படைத்தவை ஆகும்.

    பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையிலான தி. மு. க. வின் வெற்றி :

    உலகில் வேறு எந்தக் கட்சியும் தனது அடிப்படை இலட்சியத்தை கை விட்ட பிறகு, தொடர்ந்து வளர்ந்ததாக வரலாறு உண்டா ?
    பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையிலான தி. மு. க. வோ, தன் உயிர் கொள்கையை கைவிட்ட பிறகும் ஓங்கி வளர்ந்தது. காங்கிரஸ் பேரியக்கத்தை கதி கலங்கிட செய்து ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது. இந்த மாபெரும் வெற்றிக்கு, பின்னணியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் இருந்தது உலகறிந்த உண்மை.

    பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையிலான தி. மு. க. என்பது வெறும் கொள்கை ஒன்றினால் மட்டும் கட்டப்பட்டது அன்று. அண்ணாவின் தனி ஆற்றல், தனிப்பண்பாடு, தனிக்குடும்ப பாசம், ஆகிய அடித்தளங்கள் மீதே எழுப்பப்பட்டது.

    தொண்டர்களை வெறும் தொண்டர்கள் மட்டுமே என்று நினைக்காமல், உடன் பிறந்த தம்பிகளை விட மேலானவர்களாக, அன்புக்குழந்தைகளாக பாவித்து, பேரறிஞர் அண்ணா அவர்கள் பொழிந்த தாய்மைபாசமே தி. மு.க. வை இந்த அளவுக்கு செழிக்க செய்தது.

    தமிழக முதல்வரான பின், 26-02-1967 அன்று நடந்த பேரறிஞர் அண்ணா அவர்களின் முதல் பொதுக்கூட்ட, நன்றியறிவிப்பு உரை
    மதிப்பிற்குரிய பேராசிரியர் செல்வகுமார் அவர்களுக்கு,

    பேரறிஞர் அண்ணாவின் பெருமைகளை தொகுத்து பதிவிட்டமைக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

  11. #2340
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தற்போது மெகா டிவியில் , மாலை 4 மணி முதல் , புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த
    தேவரின் "நல்ல நேரம் " ஒளிபரப்பாகி வருகிறது .

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •