-
5th August 2017, 05:24 AM
#1
Senior Member
Devoted Hubber
நடிகர் திலகத்தின் சிலை
வைப்பதற்கு முன்னரான செய்தி
மீள் பதிவு
Sukumar Shan
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சென்னை கடற்கரைச் சாலையில் சிலை வைக்கப்படும்’ _ என்று முதல்வர் கலைஞர் ஆளுநர் உரை வாயிலாக அறிவித்த போதே, சிவாஜி ரசிகர்களும் திரை உலகினரும் சந்தோஷத்துடன் வரவேற்றார்கள்.
இந்நிலையில், ஜூன் 25_ம் தேதியன்று சின்னத்திரை கலைஞர்கள் சார்பில் கலைஞருக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில், நடிகர் சிவகுமார் பேசும்போது, ‘பராசக்தி படம் வெளியானபோது இருந்த சிவாஜி மாதிரி, இளமையும் அழகும் நிறைந்த சிவாஜியின் உருவத்தைச் சிலையாக வைக்க வேண்டும்’ என்று கலைஞரிடம் கோரிக்கை வைத்தார். இறுதியில் கலைஞர் பேசும்போது, இதை ஏற்க இயலாததைக் குறிப்பிட்டார். ‘‘பெரியார் என்றால், முதிர்ந்த வயதில் தாடி, தடியுடன் இருந்தால்தான் அடையாளம் தெரியும். சாக்ரடீஸ் என்றவுடன் நம் நினைவுக்கு வரும் உருவம், அவரது இறுதிக்கால உருவம்தான். என் படத்தையே எனது இளமைக்கால உருவம் போல வரைந்தால் பலருக்கும் அடையாளம் தெரியாது. எனவே, சிவாஜி மறையும் காலத்தில் இருந்ததுபோல, அவருக்குச் சிலை வைப்பதுதான் சரி. அப்படித்தான் சிலையும் தயாராகி வருகிறது?’’ என்றார் கலைஞர்.
கூடவே, ‘‘அந்தச் சிலை அமைக்கப்பட்டவுடன் இந்த இடத்திலா? என்று எல்லோரும் ஆச்சரியப்படுவீர்கள். அந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இடம் அது’’ என்று சொல்லி, இடத்தையும் சொல்லாமல் ஒட்டுமொத்த திரை உலகினரின் ஆர்வத்தையும் அவ்விழாவில் தூண்டிவிட்டு விட்டார் கலைஞர்.
‘அந்த இடமா....? இந்த இடமா?’ என்று நடிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ள நிலையில், நமக்கும் ஆர்வம் மேலிட விசாரித்தோம்.
சிலை வைப்பது என்று அறிவிப்பு வெளியானவுடன், சிவாஜி குடும்பத்தினர் கலைஞரைச் சந்தித்து நன்றி சொல்லப் போயிருக்கிறார்கள். ‘‘எங்கள் குடும்பத்தின் சார்பில் தனிப்பட்ட முறையில் நன்றி’’ என்று ராம்குமாரும் பிரபும் சொல்லும்போதே இடைமறித்த கலைஞர், ‘‘எனக்கு எதற்கு நன்றி? நான் வாழும் காலத்தில் கணேசனுக்கு நான் சிலை வைக்காமல் வேறு யார் வைப்பது? அவருடன் நான் கொண்டிருந்த நட்புதான் உங்களுக்குத் தெரியுமே...’’ என்று சொல்லி உடைந்து கண்ணீர் சிந்தியிருக்கிறார்.
இதைப் பார்த்து சிவாஜியின் மகள்களான சாந்தி, தேன்மொழி என்று எல்லோருமே கண்ணீர் வடிக்க, அந்தச் சந்திப்பே உணர்ச்சிப் பிழம்பாக நடந்து முடிந்திருக்கிறது.
அதன் பிறகுதான் சிலையை எப்படி, எங்கே அமைப்பது என்று கலைஞர் தன் மனதுக்குள்ளேயே விவாதித்திருக்கிறார் என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள். சமீபத்தில் தன் சொந்த ஊரான திருக்குவளை போனபோது, பாண்டிச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள சிவாஜியின் சிலையை, தான் பயணம் செய்த வேனை நிறுத்திப் பார்த்தார் கலைஞர்.
தான் இறந்த பிறகு இந்த ‘போஸில்’தான் சிலை வைக்க வேண்டும் என்று சிவாஜியே தன் குடும்பத்தினரிடம் சொல்லி, ஒரு ஸ்டில்லைக் கொடுத்திருந்தார். அந்த போட்டோவில் உள்ளபடியே செய்த சிலைதான், தற்போது பாண்டிச்சேரியில் உள்ள சிலை. இதைக் கேள்விப்பட்ட கலைஞர், அதேபோல் சென்னையிலும் அமைக்க முடிவெடுத்தார்.
அதன்பிறகுதான் இடம் பற்றிய கேள்வி எழுந்தது. கடற்கரைச் சாலையிலேயே பல இடங்கள் பரிசீலிக்கப்பட்டிருக்கிறது. இறுதியில் கலைஞரே ஆசைப்பட்டு, ஓர் இடத்தை முடிவு செய்து, முதலில் சிவாஜி குடும்பத்தினரிடம் அந்த இடத்தைக் குறிப்பிட்டு, அவர்களின் எண்ணத்தைக் கேட்டிருக்கிறார். அவர்களும் ஆச்சரியத்துடன் சந்தோஷமும் அடைந்து ‘முழு திருப்தி’ என்று சொல்லியிருக்கிறார்கள்.
இதுபற்றி நாம் சிவாஜியின் மகனும் நடிகருமான பிரபுவிடம் பேசினோம்.
‘‘சிவாஜி சாருக்கு சிலை வைக்க எல்லோருமே ஆசைப்படுகிறார்கள். ஆனால் அரசே வைப்பது அவரை அங்கீகரித்து, கௌரவப்படுத்துவது மாதிரி உள்ளது. இது பெரியப்பா (கலைஞர்), அப்பா மீது வைத்துள்ள அன்பின் வெளிப்பாடு. எங்கள் இரு குடும்பத்தின் உறவு நீண்ட கால வரலாறு கொண்டது. குறிப்பாக, அப்பாவுக்கும் பெரியப்பாவுக்குமான உறவு பற்றி நாடறியும். அதனால்தான் நாங்கள் நன்றி சொல்ல அவரைச் சந்தித்தபோதுகூட, ‘சிலை வைப்பது என் கடமை’ என்று சொன்ன பெரியப்பா, ‘‘இப்போதும் டி.வி.யில் கணேசனைப் பார்க்கும்போது, திரையிலேயே அவர் கன்னத்தைக் கிள்ளத் தோன்றுகிறது’’ என்று சொல்லி, கண்ணீர் வடித்தார். அந்த அன்பின் வெளிப்பாடாக, சிலை வைப்பதையே பெருமையாக நினைத்தோம். ஒரு முக்கியமான இடத்தில் அதை நிறுவ முடிவு செய்திருப்பது, எங்களை இன்னும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது’’ என்றார் பிரபு. ‘‘எந்த இடம் என்பதை அரசே அறிவிப்பதுதான் முறை. நான் சொல்வது சரியல்ல’’ என்று மறுத்த பிரபு, கடைசிவரை இடத்தைச் சொல்லவேயில்லை. எனினும், செய்தித்துறை வட்டாரங்களில் தொடர்ந்து விசாரித்ததன் பலனாக இடத்தை அடையாளம் காட்டினார் ஓர் அதிகாரி. கடற்கரை காமராஜர் சாலையில் டி.ஜி.பி. அலுவலகம் முன்பாக, ராதாகிருஷ்ணன் சாலையும் கடற்கரைச் சாலையும் சந்திக்கும் இடம்தான் தன் நண்பனுக்காக கலைஞர் தேர்வு செய்துள்ள இடம். அந்த இடத்தில், ரோட்டின் மையத்திலேயே இந்தியக் குடியரசின் பொன்விழா நினைவாக ஒரு அசோகர் ஸ்தூபி இருக்கிறது. அதன் அருகிலேயே உள்ள மணிக்கூண்டை எடுத்துவிட்டு அந்த இடத்தில் சிலையை வைக்க ஏற்பாடாகியிருக்கிறது. மூன்று சாலைகள் சந்திக்கும் அந்த இடத்தில், ராதாகிருஷ்ணன் சாலையை நோக்கி சிலையை வைக்க தற்போது ஏற்பாடாகியிருக்கிறது. ஆனாலும் இடம் பற்றிய சர்ச்சையைத் தவிர்க்க, இப்போதைக்கு இடத்தை வெளியே சொல்லவேண்டாம் என்று கலைஞரே, செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதியிடமும், சிவாஜி குடும்பத்தினரிடமும் கேட்டுக்கொண்டாராம்.
பாண்டிச்சேரியில் உள்ள சிலையைச் செய்த ஸ்தபதி மணி நாகப்பாதான் இந்தச் சிலையையும் செய்கிறார். தற்போது அவர் அமெரிக்காவில் இருப்பதால், அவரது உதவியாளர், ஸ்தபதி ரவிதான் இறுதிக்கட்ட வேலைகளைச் செய்துவருகிறார்.
‘‘சிவாஜி விருப்பப்பட்ட போஸில்தான் பாண்டிச்சேரியில் சிலையைச் செய்தோம். இந்தச் சிலையும் அதே மாதிரிதான். 750 கிலோ எடை கொண்ட வெண்கலத்தில் சிலை தயாராகி வருகிறது. நடிகர்களில் எம்.ஜி.ஆர். தவிர்த்து என்.எஸ்.கே. மற்றும் சிவாஜிக்குத்தான் சிலை உள்ளது. ஒரு மகா கலைஞனின் சிலையை வடிக்கும் பொறுப்பை, ஒரு பெருமையாகவே உணர்கிறேன்’’ என்கிறார் ஸ்தபதி ரவி.
மிக விரைவில் திறப்புவிழா காண இருக்கிறது இந்தச் சிலை. இடத்தைத் தேர்வு செய்ததற்கான காரணத்தை கலைஞர் அந்த விழாவில் விவரிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.
நாராயணி
Philosopher
நாராயணி
Active Members
0
1,550 posts
Posted 30 Jun 2006
mayoori said:
முள்ளை வளைத்தது மகுடம் அணிந்தது
ஆணி அடித்தது சிலுவையில் அறைந்தது
அன்று நடந்தது ஆவி துடித்தது
இன்று நடப்பது நெஞ்சு துடிக்குது....
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
5th August 2017 05:24 AM
# ADS
Circuit advertisement
-
5th August 2017, 05:31 AM
#2
Senior Member
Devoted Hubber
Abdul Razack
ஒருமனித சிலையை எப்போது அகற்றுவார்கள் ஒரு நாட்டில் சர்வாதிகாரமாக கொடுங்கோலன் ஆட்சி புரிவான் அங்கு புரட்சி ஏற்பட்டு ஜனநாயகம் மலர்ந்த பின் அந்த கொடுங்கோலனின் சிலையை அகற்றுவார்கள் அதே போல் இங்கு உங்கள் ஆட்சியை அகற்றும் புரட்சி ஏற்பட்டு பஞ்சம் பிழைக்க வந்தவர்களின் சிலையை அகற்றி இருக்க வேண்டும் ஆனால் சாரயத்துக்கும் பணத்துக்கும் தன் மானத்தையே விற்பவன் எதை புரட்சி என்று அழைக்கிறான் திருட்டு கொள்ளை துரோகம் ஆணவம் இதை செய்பவர்களைத்தானே புரட்சி என்று சொல்லி அதன் அர்த்ததையே கேவலபடுத்துகிறான்,
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
5th August 2017, 05:33 AM
#3
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
5th August 2017, 05:45 AM
#4
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
5th August 2017, 05:54 AM
#5
Senior Member
Devoted Hubber
சிவாஜியின் புதிய சிலையை மெரினா கடற்கரையில் அமைக்க வேண்டும்: ராமதாஸ்
Published : 03 Aug 2017 16:53 IST
Updated : 03 Aug 2017 16:55 IST
சிவாஜியின் புதிய சிலை ஒன்றை தயாரித்து அதை மெரினா கடற்கரையில் காந்தி, காமராசர் சிலைகளுக்கு இடையில் நிறுவ வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''சென்னை கடற்கரை சாலையில் ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில் கடந்த 11 ஆண்டுகளுக்கும் மேலாக கம்பீரமாக நின்று கொண்டிருந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலை இரவோடு இரவாக அகற்றப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. இது நீதிமன்ற ஆணைப்படி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்று கூறப்பட்டாலும் கூட, இதன் பின்னணியில் சில சதிகள் அரங்கேற்றப்பட்டதை மறுக்க முடியாது.
தொடர்புடையவை
வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ. சிதம்பரனார் உள்ளிட்ட வரலாற்றுப் பாத்திரங்களுக்கு திரையில் உயிரூட்டிய நடிகர் திலகத்திற்கு சென்னையில் சிலை வைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை எழுப்பியதைத் தொடர்ந்து கடந்த 2006-ஆம் ஆண்டு அவரது நினைவுநாளான ஜூலை 21-ஆம் தேதி கடற்கரை சாலையில் காந்தி சிலை திறந்து வைக்கப்பட்டது.
அப்போதே இச்சிலையால் விபத்துகள் ஏற்படுவதாகவும், அதனால் அதை அகற்றக்கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. ஆனால், சிவாஜி சிலையை அகற்ற முடியாது என்று உயர் நீதிமன்றம் இடைக்காலத் தீர்ப்பளித்தது. அதன்பின் 7 ஆண்டுகள் கழித்து 2013-ஆம் ஆண்டு இவ்வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, சிவாஜி சிலையால் சாலை விபத்துகள் எதுவும் ஏற்படவில்லை என்றும், சிவாஜி சிலையை அகற்றத் தேவையில்லை என்றும் தமிழக அரசு தெரிவித்தது.
ஆனால், அடுத்த ஒரு வாரத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்ட தமிழக அரசு சிவாஜி சிலையால்தான் அப்பகுதியில் அதிக விபத்துக்கள் ஏற்படுவதாகவும், அதனால் சிலையை அகற்றலாம் என்றும் கூறியது. இதன் அடிப்படையில் தான் சிவாஜி சிலையை அகற்ற உயர் நீதிமன்றம் ஆணையிட்டது. சிலை அமைக்கப்பட்ட 7 ஆண்டுகளில் அப்பகுதியில் எந்த விபத்தும் ஏற்படாத நிலையில், விபத்துகள் ஏற்பட்டதாக பொய்யான தகவலை நீதிமன்றத்துக்கு வழங்கி சிலை அகற்றும்படி நீதிமன்றமே உத்தரவிடும் நிலையை ஏற்படுத்தியது அப்போதைய ஜெயலலிதா அரசு திட்டமிட்டு செய்த சதி என்பதில் ஐயமில்லை.
இப்போதும் கூட சிலையை அகற்ற வேண்டும் என்பது உறுதியாகிவிட்ட நிலையில், அந்த சிலையை சிவாஜி மணிமண்டபத்தில் வைப்பதற்கு பதிலாக கடற்கரைச் சாலைக்கும், சர்வீஸ் சாலைக்கும் இடைப்பட்ட பகுதியில் காந்தி சிலை, காமராசர் சிலைக்கு நடுவில் அமைக்க ஆணையிட வேண்டும் என்று கோரி சிவாஜி சமூகநலப் பேரவை சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
அவ்வழக்கு கடந்த 17-ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, இதுகுறித்து ஆலோசித்து முடிவை அறிவிப்பதாக நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்திருந்த தமிழக அரசு, அதன் முடிவை தெரிவிக்காமலேயே சிவாஜி சிலையை இரவோடு இரவாக அகற்றியிருப்பது இரண்டாவது சதி என பகிரங்கமாக குற்றஞ்சாட்டுகிறேன்.
கடற்கரைச் சாலையில் சிவாஜி சிலை இருந்ததால் விபத்துகளோ, போக்குவரத்து பாதிப்புகளோ ஏற்பட்டதில்லை. சென்னை அண்ணா சாலையின் நடுவில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோரின் சிலைகள் உள்ளன. தமிழகம் முழுவதும் சாலைகளின் நடுவில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட சிலைகள் உள்ளன. இவற்றால் போக்குவரத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை என்று கூறிவரும் தமிழக அரசு, இந்த உண்மையை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்து சிவாஜி சிலை தொடர்ந்து அதே இடத்தில் நீடிக்க வகை செய்திருக்க முடியும். ஆனால், அதை செய்ய தமிழக அரசு தவறிவிட்டது.
இவ்வாறாக சிவாஜி சிலையை அகற்றுவதற்காகவே தமிழக அரசு திட்டமிட்டு பல நடவடிக்கைகளை எடுத்ததை அவரது ரசிகர்கள் மன்னிக்க மாட்டார்கள். இப்போது கடற்கரை சாலையிலிருந்து அகற்றப்பட்ட சிவாஜி சிலை அவரது மணி மண்டபத்தில் வைக்கப்பட்டு விட்ட நிலையில், அதேபோன்ற புதிய சிலை ஒன்றை தயாரித்து அதை மெரினா கடற்கரையில் காந்தி, காமராசர் சிலைகளுக்கு இடையில் நிறுவ வேண்டும். சிவாஜி கணேசனின் 90-ஆவது பிறந்தநாள் வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், அந்த நாளில் அவரது புதிய சிலையை அரசு திறக்க வேண்டும்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
Bookmarks