-
1st October 2017, 05:19 AM
#1091
Senior Member
Devoted Hubber
Subbiah
ஒரு சண்டைக்கார நடிகரின் நட்சத்திரச் சுமையை சண்டை, சமூக நீதிப் பாட்டு, கவர்ச்சி நாயகிகள், ஆடம்பர அரங்குகள், வில்லன்கள் போன்றோர் சுமந்தனர். வேறு சிலர்க்கு ஹாலிவுட்டிலிருந்து சுடப்பட்ட கதையும், வித்தியாசமான மேக் – அப்பும், மணிரத்தினம் – ஷங்கர் போன்ற இயக்குநர்களும் வேண்டியிருந்தது. ஆனால் சிவாஜி மட்டும் தன் சுமையை – தனது நடிப்பாற்றலால் – தானே சுமந்தார் என்பதே அவருக்குள்ள திறமையாகும்.
Last edited by sivaa; 1st October 2017 at 05:31 AM.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
1st October 2017 05:19 AM
# ADS
Circuit advertisement
-
1st October 2017, 05:31 AM
#1092
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
1st October 2017, 05:40 AM
#1093
Senior Member
Devoted Hubber
raghavan nemili vijayaraghavachari
இன்று ( 01.10.2017 ) நடிப்புலக இமயம் , நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்த நாள்.
நடிகனாக நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்திய இந்த மாபெரும் கலைஞன் நடிப்பைக் கொண்டு , அரசியல் வாழ்க்கையில் தானே தலைவனாக விரும்பியிருந்தால், பல படங்களில் மக்களை கவரும் விதத்தில் பொய் உரைத்து, தன் முனைப்பில் மட்டுமே கவனம் செலுத்தி எல்லாப் படங்களிலும் நடித்து இருக்கலாம்.
மேற்படி எண்ணம் இல்லாமல் , நடிப்பை, நடிப்பாக மட்டுமே கொண்டு நடித்ததினால், இளம் வயதிலும் 80 வயது ஆன முதியவராகவும் ( குழந்தைகள் கண்ட குடியரசு ), சுமார் 40 வயதிலேயே , 20 வயதை தாண்டிய செல்வி.ஜெயலலிதா உள்பட பலருக்கும் தகப்பனாக ( மோட்டார் சுந்தரம் பிள்ளை ) நடித்தார். அது போல தன்னை விட வயதில் பெரியவரான ஒரு நடிகருக்கு அண்ணனாக ஒரு படத்தில் ( பந்த பாசம் ) நடித்தார். தன்னுடைய இமேஜை மட்டுமே நிலை நிறுத்திக் கொள்ள விரும்பியிருந்தால் வில்லனாகவோ, வயதானவராகவோ, பலருக்கும் தந்தையாகவோ நடிக்காமல் இருந்திருப்பார். ஆனால் அவர் விரும்பியது திரைப்படங்களில் எல்லாம் ஒரு நடிகனாகவே நடித்து , நடிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்ற ஆர்வம் மட்டுமே காரணம்.
நடிப்புலக சக்ரவர்த்திக்கு இணையான நடிகர்கள் எவருமே கிடையாது. சில படங்கள் பாடல்களே இல்லாமலும், தனக்கு பாடல்கள் இல்லாமலும், தன்னுடன் இணையாக நடிக்க நடிகைகள் இல்லாமலும் படங்களில் நடித்தவர் இவர் ஒருவரே.
பாடல்களே இல்லாத படம் அந்த நாள். அது போல் தனக்கு பாடல்களே இல்லாமல் நடித்த படங்கள் மோட்டர் சுந்தரம் பிள்ளை, எதிரொலி,
ஜோடி இல்லாத படங்கள் – லக்ஷ்மி கல்யாணம் , கந்தன் கருணை, சரஸ்வதி சபதம் , பழனி, பந்தம், தாவனிக் கனவுகள் , மூன்று தெய்வங்கள் , துணை , விடுதலை, வெள்ளை ரோஜா , மருமகள் , மனிதரில் மாணிக்கம் , அன்புள்ள அப்பா ,
தெய்வத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட காரணத்தினால், அவர் அக் காலத்தில் ஆரம்பத்தில் இருந்த ஒரு கட்சியின் தலைவர்கள் கடவுள் மறுப்பு எண்ணம் கொண்டவர்களாதலால், இவரை பல வகைகளில் ஏளனம் செய்தனர். வாய் வார்த்தை ஜாலங்களால் மயங்கிய அன்றைய மக்களில் சிலர் இவர் மீது வெறுப்பை காட்டும் விதமாக , தமிழக நடிகர்களில் மட்டுமின்றி, பாரத நாட்டு நடிகர்களிலேயே , தேஸத்திற்கும் மற்றும் பல ஏழை மக்களுக்கும் பலவிதமாக நன்கொடைகள் வழங்கிய இவரின் கொடை வள்ளல் தனத்தை மறைத்து, இவரை ஒரு கருமியாக சித்தரித்தனர். அதனால் தான் இவரை வெறுத்த கட்சியில் இருந்த பலரும் இன்றும் இவரின் கொடை வள்ளல் தனத்தை மறைக்கும் விதமாக செயல் பட்டுக் கொண்டுள்ளனர்.
அது போல் உலக அளவிலே மிகச் சிறந்த ஹாலிவுட் நக்ஷத்திரமான மார்லன் ப்ராண்டோ அவர்களே, தன்னை விட நடிப்பில் மிகச் சிறப்பானவர் என்று வர்ணித்து, தான் நடிக்கும் பாத்திரங்களில் சிவாஜியால் மிகச் சுலபாக நடிக்கமுடியுமென்றும், ஆனால் அவரின் நடிப்பில் ஒரு பாதி அளவுக்குக் கூட தன்னால் நடிக்க முடியாது என்று கூறினார். அது போலவே பாலிவுட் நக்ஷத்திரமான திலீப்குமார் அவர்களும் , தெலுங்கு நடிகர் நாகேஷ்வர ராவ் , என்.டி.ராமராவ் போன்றவர்களும் சொன்னார்கள். சிறப்பான நடிகர்களான இவர்களே தாங்கள் நடிகர் திலகம் சிவாஜியின் நடிப்புக்கு இணையானவர்கள் அல்ல என்று உண்மையை உரைத்தபோது, தமிழ் நாட்டில் திராவிட , நாத்திகவாதிகளின் பால் ஈடுபாடு கொண்டவர்கள் இவரின் நடிப்பை மிகை நடிப்பு என்றெல்லாம் பொய் உரைத்தனர். அதையும் சிலர் இன்றும் நம்பிக் கொண்டு அவரை பழித்துப் பேசி வருகின்றனர்.
மிக உரத்த குரலில் பேசுவது குறை கூறுபவர்களுக்கு அவர் , ஒரு படத்தில் பல நேரம், வசனம் பேசாமலே நடித்தவர் என்பது தெரியாது போலும். வெறும் முக பாவத்திலே மட்டும் நடிப்புத் திறனை காட்டியவர். மிக கம்பீரமாக நிற்கும் நிலையிலும், நவரச பாவங்களை முகத்திலே காட்டுவதிலும் எந்த ஒரு நடிகரும் இவருக்கு இணை இல்லை. இன்னும் சொல்லப் போனால் , பல நடிகர்களுக்கு ஒரு படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கும் போது, வசன உச்சரிப்பின் இலகுவை மாற்ற முடியாமலும், முக பாவத்தை மாற்றமுடியாமலும் இரண்டு வேடங்களிலும் நடிப்பவர் ஒருவரே என்று மக்கள் நினைக்கும் அளவுக்குத் தான் அவர்கள் வேடங்களும் , குரலும் அமைந்திருக்கும். ஆனால் நடிப்புலக சக்ரவர்த்தியான நடிகர் திலகம் அவர்கள் மட்டும்தான் மிக அதிகமான படங்களில் இரண்டு வேடங்களில் நடித்தவர் என்பதோடு அல்லாமல் மூன்று படங்களில் மூன்று வேடங்களில் நடித்தும், அந்த மூன்று வேடங்களிலும் வெவ்வேறு நடிகர்கள் நடித்தது போலவும் அவருடைய உடம்பின் ஒப்பனைகளும், வசன உச்சரிப்பும் அமைந்திருக்கும். நவராத்திரி படத்தில் ஒன்பது விதமான வேடங்களில் நடித்து அசத்தியவர்.
அரசியல் ரீதியாக அவரை எதிர்ப்பவர்கள் , அவரின் சிறந்த நடிப்புத் திறமையை ஒப்புக் கொள்ளமாட்டார்கள். எந்த அரசியல் தொண்டர்கள் அவரை வெறுக்கிறார்களோ, அந்த கட்சியை தோற்றுவித்தவரே, நடிகர் திலகத்தின் நடிப்புத் திறமையை போற்றியதோடு, அவருக்கு இணையான நடிகர்கள் முன்பும் இல்லை, இனி பிறக்கப் போவதும் இல்லை என்று கூறியுள்ளது அந்த தொண்டர்களுக்குத் தெரிந்திருந்தாலும், வெறுப்பின் காரணமாக அவரை தூற்றுவதிலேயே இன்றும் குறியாக உள்ளனர்.
மிக அதிகமான திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தவர், மிக அதிகமான வெள்ளி விழா படங்களில் நடித்தவர், ஒரே ஆண்டில் இரண்டு முறை இரண்டு வெள்ளி விழா படங்களை கொடுத்தவர், மிக அதிகமான 100 நாள் வெற்றிப் படங்களில் நடித்தவர், ஒரே நாளில் இரண்டு படங்கள் வெளியிட்டும் இரண்டு முறை இரண்டு படங்களுமே 100 நாள்கள் ( ஊட்டி வரை உறவு, இரு மலர்கள் மற்றும் சொர்க்கம், எங்கிருந்தோ வந்தாள் ) கடந்து வெற்றிக் கொடி நாட்டியதோடு, மேலும் இன்னும் சில படங்களில் ஒன்று 100 நாள்கள் ஓடியும் மற்றொன்ரு 100 நாள் ஓடாவிட்டாலும் வெற்றிப்படமாக அமைந்ததும் இவருக்கு மட்டுமே. உண்மையான வசூல் சக்ரவர்த்தி இவர்தான்.
ஆனால் கடவுள் பத்தி காரணமாகவும், நடிப்பில் அவருக்கு இணையானவர் எவரும் இல்லை என்பதை உணர்ந்துள்ள பொதுமக்களின் ஆதரவு காரணமாகவும், இன்றும் நடிகர் திலகத்தின் பல படங்கள் தமிழகம் முழுவதும் பல திரை அரங்குகளில் திரையிடப்பட்டு, மீண்டும் வெற்றிக் கொடி நாட்டி வருவதையும், பல தொலைக்காட்சி ஊடகங்களில் அவரின் படங்கள் மீண்டும், மீண்டும் ஒளிபரப்புவதையும் காணும் போது, இன்னும் பல்லாயிரம் ஆண்டுகள் ஆனாலும் நடிப்புலக சக்ரவர்த்தியின் புகழ் நிலை பெற்றிருக்கும் என்பதை அவரின் இந்த பிறந்த நாளன்று உறுதிபட உரைக்கின்றேன்.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
1st October 2017, 05:58 AM
#1094
Senior Member
Devoted Hubber
கள்ளம் கபடம் இல்லாத களங்கம் ஏதுமற்ற
வெள்ளைமனம்கொண்ட வெள்ளைரோஜா வின்
89 வது பிறந்தநாள்
சிவாஜி ஜெயந்தி 89
வெள்ளைமனம் கொண்ட அனைத்த உள்ளங்களுக்கும்
சிவாஜி ஜெயந்தி தின வாழ்த்துக்கள்
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
1st October 2017, 07:47 AM
#1095
Senior Member
Devoted Hubber
Sekar Parasuram
01/10/2017
நடிகர் திலகம் பிறந்த நாள் வாழ்த்துக்கள்,
தொலைக்காட்சி சேனல்களில் ஒளிப் பரப்பாக இருக்கும் நடிகர் திலகம் திரைப்பட காவியங்கள்,
12 pm -- மெகா டிவி-- " தீபம்"
1:30pm-- புது யுகம் -- ஊட்டி வரை உறவு
1:30pm-- கேப்டன் டிவி-- தாம்பத்யம்...
2:00pm --வசந்த் டிவி- திருவிளையாடல்
3:00pm-- மெகா டிவி-- தியாகம்
4:00pm -- கலைஞர் டிவி-- உயர்ந்த மனிதன்,
7:30 pm -- முரசு டிவி-- தங்கப் பதுமை
வெற்றிக் காவியங்களைக் கண்டு மகிழ்வோம்!!!
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
1st October 2017, 07:52 AM
#1096
Senior Member
Devoted Hubber
muthurengan thayumanavan
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
1st October 2017, 07:59 AM
#1097
Senior Member
Devoted Hubber
Sridharan Renganathan
...
விருதுக்கே விருதான விற்பலன்!
********************************************
வியத்தகு வித்தகன்! விசித்திரன்!
********************************************
பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!
***************************************
நடிப்பில் நிஜமாக, நெகிழும் விதமாக, நிறைந்த திரை இமயமே! புவி
வியக்கும் திறனாக, விண்ணின் புகழாக, விளைத்த விசித்திரனே!
சிம்மக்குரலோடு, சொல்லின் செறிவோடு, சிலிர்த்திடச் செய்யும் செம்மையனே!
செந்தமிழையே சொக்கவைக்கும் சொல்லாளும் சிந்தயள்ளும் சீலனே!
உன்னின் நீங்கா நினைவோடு, நெகிழும் நிலையாளும் நடிப்பின் நாயகனே!
ஈடு இணை இல்லா ஈர்ப்பில் இதம் காணும் திரைக் கலைப் பொக்கிஷமே!
இறையடி சேர்ந்தும், நின் திரைவழி திறன்கள் இன்றளவும் திக்குமுக்காடச்
செய்துகொண்டிருக்கும் பெரும்புகழ் பெற்றவனே! நின் வழித் தடங்கள் திரையுலகிற்கே
அரண்களாய், வழிகாட்டும் கலங்கரை தீபமாய் திகழும்
வண்ணம் வளம் கண்ட வல்லோனே! நின் பராக்கிரம சாதனைகளை
நினைத்துப் பார்க்க உள்ளமெல்லாம் உவகைகொண்டு, பரவஸத்திலாழ்ந்து
பூரித்துப் போகின்றன; தமிழ் கண்ட வரமென பெருமிதம் கொள்கின்றன;
நின் காவியங்கள் சரித்திரம் காணும் ஒயிலான ஓவியங்கள்;
திரையுலகத்திற்கே வாய்க்கப்பெற்ற விலையிலா திரவியங்கள்!;
செந்தமிழின் சொத்துகள்! வான்புகழ் காணும் வித்துகள்!; ஏழேழு
பிறவியிலும், ஏகமான ஏற்றத்துடன், எதிரிணையில்லா மாண்புடனும், நிலைப்
புகழ் கொண்டு நீடித்து, நிலைபெற்று நிறைந்திருக்கும் என்பது
நிச்சயமானவொன்று!
‘’நடிப்பின் இமயமே! நடிகர் திலகமே! அன்னையில்லத்து ஆசானே!
அகிலலோக கலைத்தடத்தின் கலங்கரை தீபமே! கரை காணமுடியாக்
கலைக் கடலே! சிம்மக்குரலே! சிங்கத்தமிழே! எங்கள் சிவாஜிகணேசனே!
விருதுக்கு விருதானவனே! தங்கத்திற்கு தங்க முலாம் பூசுவதுபோல உந்தன் புகழுக்கே
புகழ்மாலை சூட்டுகிறோம்
என்றென்றும் உந்தன் நினைவலையில் மிதந்துகொண்டிருக்கும்
’’அன்பு ரசிகர்கள்.’’
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
1st October 2017, 08:45 AM
#1098
Senior Member
Devoted Hubber
எதிரிகளுக்கு சிம்ம சொப்பனம்,
வஞ்சனையற்றவர்களுக்கு வெள்ளை ரோஜா ,
மென்மனம் கொண்ட, தேவை அறிந்து
கொடை கொடுத்த வள்ளல், சிவாஜி கணேசனின்
வெற்றித் திரைக்காவியங்களின்
அக்டோபர் மாத வெளியீடுகள்
1) துணை 1 /10 1982
2) சபாஷ் மீனா 3/10 /1958
3) நாம் பிறந்த மண் 7 / 10 /1977
4)திருடன் 10/ 10 /1969
5) அண்ணன் ஒரு கோயில் 10/ 10 /1977
6) பராசக்தி 17 /10 /1952
7)பாபு 18 /10/ 1971
8)பட்டாக்கத்தி பைரவன் 19/10/1979
9)பாவை விளக்கு 19/10/1960
10)பெற்ற மனம் 19/10/1960
11)எங்க ஊர் ராஜா 21/10/1968
12) அம்பிகாபதி 22/10/1957
13)சித்திரா பெளர்ணமி 22/10/1976
14)வம்ச விளக்கு 23/10/1984
15) கௌரவம் 25/10/1973
16)தேவர் மகன் 25/10/1992
17)கீழ்வானம் சிவக்கும் 26/10/1981
18)தச்சோளி அம்பு (மலையாளம்) 27/10/1978
19) பந்தபாசம் 27/10/1962
20) சொர்க்கம் 29/10/1970
21) எங்கிருந்தோ வந்தாள் 29/10/1970-
22) அவள் யார்? 30/10/1959
23)பைலட் பிரேம்நாத் 30/10/1978
24)பாகாப் பிரிவினை 31/10/1959
Last edited by sivaa; 2nd October 2017 at 08:09 PM.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
1st October 2017, 08:50 AM
#1099
Senior Member
Devoted Hubber
இன்றைய நாளில் வெளிவந்த
அண்ணனின் திரைக்காவியம்
1) துணை 1 /10 1982
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
1st October 2017, 08:57 AM
#1100
Senior Member
Devoted Hubber
subbiah
வீரபாண்டிய கட்டபொம்மன்" படத்தை ஆப்பிரிக்க ஆசிய திரைப்பட விருதுக்காக அனுப்பி வைக்க இந்திய அரசு முடிவு செய்தது. விழா நடந்த எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோவிற்கு சிவாஜி அவர்கள் சென்றார்கள். அவருடன் பி.ஆர். பந்துலு, பத்மினி ஆகியோரும் சென்று கலந்துக் கொண்டனர். சிறந்த நடிகர், சிறந்த இசை, சிறந்த நடன கலைஞர், சிறந்த கதை என்று பல விருதுகள் பெற்றது. சிறந்த நடிகருக்கான விருதைப் பெறுவதற்காக மேடைக்கு சிவாஜி கணேசன் சென்றபோது எல்லோரும் எழுந்து நின்று ஐந்து நிமிடம் தொடர்ந்து கைதட்டி தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்தார்கள். இது சிவாஜிகணேசனுக்கு மட்டும் கிடைத்த விருது அல்ல- இந்தியாவே பெருமைப்படும் அளவிற்குக் கிடைத்த விருதாகும்.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
Bookmarks