-
11th October 2017, 04:21 AM
#1291
Senior Member
Devoted Hubber
Murali Srinivas
திருடன்
10.10.1969 அன்று வெளியாகி இன்றைக்கு 48 வருடங்களை கடந்து பயணிக்கும் நம் மனம் கவர்ந்த திருடன் பற்றி சில குறிப்புகள்.
சிறு வயதில் அனாதையான சிறுவன் சந்தர்ப்ப சூழ்நிலையால் சில சமூக விரோதிகளால் திருடனாகப்பட்டு அவன் வளர்ந்து வாலிபனாவது வரை அந்த தொழிலை தொடர வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. விடுதலையாகும் அவன் திருந்தி வாழ நினைக்கிறான், அதற்கு அவனை பயன்படுத்திய கூட்டமும் சமூகமும் எதிர் நிற்க அதை சவாலாக ஏற்று வேலை செய்து தனக்கென ஒரு குடும்பத்தையும் அமைத்துக் கொண்டு வாழும்போது மீண்டும் பழைய கூட்டம் அவன் வாழ்வில் தலையிட, அவனை பின்தொடரும் போலீஸ் அவனுக்கு தொல்லை கொடுக்க எப்படி சிக்கலிலிருந்து மீள்கிறான் என்பதுதான் சுருக்கமான கதை.
தங்கை படத்தின் போது முதன் முறையாக action படம் செய்ய ஆரம்பித்த நடிகர் திலகம், இந்த படத்திற்கு வரும்போது action கலந்த குடும்ப கதைகளை செய்வதில் தேர்ந்திருந்தார் என்றே சொல்ல வேண்டும். நாம் இங்கே பலமுறை சுட்டிக் காட்டியது போல அந்தக் காலகட்டத்தில் மாஸ் ரசிகர்கள் என்பவர்கள் நடிகர் திலகத்திற்கு மிக மிக அதிகமாக வளர்ந்திருந்த நேரம். எனவே அவர்களையும், தன் படங்களுக்கு எப்போதும் ஆதரவு கொடுக்கக் கூடிய மிடில் கிளாஸ்,அப்பர் கிளாஸ் மற்றும் தாய்க்குலத்தையும் ஒரே நேரத்தில் கவரக்கூடிய இது போன்ற கதைகளை படமாக்கினார்.
என் தம்பி அளவிற்கு ஸ்டைல் சாம்ராஜ்யம் இல்லையென்றாலும் கூட இந்த படத்திலும் அது போதுமான அளவிற்கு இருந்தது. முதல் காட்சி அறிமுகமே பிரமாதமாக இருக்கும். நடந்து வரும் அவரின் கால்களை மட்டுமே சிறிது நேரம் காண்பித்து பிறகு முகத்தை காட்டுவார்கள். அதிலும் கீழே நடந்து வரும் மேஜர் அண்ணாந்து பார்ப்பது போல் காட்சிக் கோணம் அமைக்கப்பட்டிருக்க, நடிகர் திலகத்தின் முகம் தோன்றும் அந்த காட்சி மிகப் பெரிய ஹிட் [இந்த படத்திற்கு முன் வந்த தெய்வ மகனிலும் அவரது அறிமுகம் இது போலவே அமைந்திருக்கும். ஆக தொடர்ச்சியாக வந்த இரண்டு படங்களிலும் இப்படி அசத்தலான அறிமுகக் காட்சி இருந்ததால் அடுத்த படமான (ரசிகர்கள் வெகு ஆவலுடன் எதிர்பார்த்திருந்த) சிவந்த மண் படத்திலும் இப்படி ஒரு அறிமுக காட்சிக்காக காத்திருந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்த படமும் சிவாஜி வெகு காஷுவலாக செய்த படங்களில் இடம் பெறும். படத்தின் பெரும்பான்மையான காட்சிகளில் அவரது இயல்பு தன்மையை காணலாம். விடுதலையாகும் போது மேஜரிடம் பேசுவதாகட்டும், மீண்டும் தன் கூட்டத்தில் சேரச் சொல்லி மிரட்டும் ஜெகநாத்திடம் முடியாது என்று அமைதியாக ஆனால் அழுத்தமாக சொல்வதாகட்டும், ஆண் வேடம் போட்டு வரும் விஜயாவை இளமை துள்ளலோடு கிண்டல் அடிப்பதாகட்டும், தன் பழைய கதையை விவரிக்கும்போது காட்டும் முகபாவம் ஆகட்டும், ஜெகநாத்திடம் வேலை செய்த போது நடத்திய சாகச நிகழ்வுகள் ஆகட்டும் அதிலும் குறிப்பாக சினிமா இயக்குனர் போல் வந்து கொள்ளையடிப்பதிலாகட்டும் இவை அனைத்துமே இயல்பு + ஸ்டைல் வகையில் ரசிக்கக் கூடியவை. படத்தில் சிறுவனாக இருந்து வாலிபனாக மாறும் காட்சி- White பான்ட், ஜிப்பா போன்ற டைட் ஷர்டில் ரிவால்வர் வைத்து சுட்டுக்கொண்டே வரும் காட்சியும் குறிப்பிட வேண்டிய ஒன்று. குழந்தையை கடத்தி அதன் தாயின் மரணத்திற்கு காரணமாகி விட்டோமே என்ற குற்ற உணர்வில் தவிப்பை வெளிப்படுத்தும் போது உணர்ச்சிகரமான சிவாஜியை ரசிக்கலாம்.
இந்த காலக்கட்டத்தில்தான் உணர்ச்சி பொங்க வசனம் பேசும் முறையை பின்பற்ற ஆரம்பித்தார் என்று சொல்லலாம். கே.ஆர்.விஜயாவிடம் நல்லவனாக வாழ இந்த சமூகம் அனுமதிக்கவில்லை எனவே மீண்டும் பழைய தொழிலுக்கு போகிறேன் என்று சொல்லும் காட்சியும் சரி, அதே போன்ற உணர்வை மேஜரிடம் வெளிப்படுத்தும் காட்சியிலும் சரி இந்த மானரிஸம் வெளிப்படும். ஒரு சாதாரண குடும்பத்தலைவன் மனைவியையும் குழந்தையையும் எப்படி நடத்துவான், எப்படி அவர்கள் மேல் அன்பு செலுத்துவான் என்பது இயல்பாக வெளிப்படுத்தியிருப்பார். சண்டை காட்சிகளில் நல்ல முன்னேற்றம் தெரியும். அதிலும் குழந்தையை கடத்தும் காட்சியில் வரும் சண்டைக் காட்சி அலப்பறையாக இருக்கும்.
படத்தில் டூயட் பாடல் கிடையாது. ஒரு கமர்ஷியல் படத்திலும் கூட இது போன்ற சில முயற்சிகளை நாற்பது எட்டு வருடம் முன்பே செய்திருக்கிறார்கள்.
கே.ஆர். விஜயா நாயகி. ஆனால் செய்வதற்கு பெரிதாக ஒன்றுமில்லை. விஜயா உடல் பெருக்க தொடங்கிய நேரம். அந்த கோலத்தில் ஒரு ஹோட்டல் டான்ஸ் ஆடி நிறைய கஷ்டப்படுவார்/படுத்துவார். ஜெகநாத் என்ற வில்லன் - பாலாஜிக்கு ஏற்ற வேஷம். அவரது பாணியிலே செய்திருப்பார். இன்ஸ்பெக்டராக மேஜர். அந்தக் காலக்கட்டத்தின் படங்களுக்கே உரித்தான [அதாவது இன்ஸ்பெக்டர் என்றால் கொஞ்சம் ஓவர் முறுக்கு போன்றவை] நடிப்பை வழங்கியிருப்பார். கிளீனர் பையனாக நடிகர் திலகத்தின் கூடவே முக்கால்வாசி படம் வருவார் நாகேஷ். ஜோடி அம்முக்குட்டி புஷ்பமாலா. ஆனால் சொல்லிக் கொள்ளும்படியான காமெடி படத்தில் மிஸ்ஸிங். குழந்தை மகாலட்சுமியாக பேபி ராணி. பாலாஜியின் கூட்டத்து பெண்ணாக விஜயலலிதா. இரண்டு பாடல்களுக்கு மட்டுமே பயன்படுவார். பாடல் இல்லாமல் பின்னணி இசை மட்டும் ஒலிக்கும் ஹோட்டல் டான்ஸ் காட்சியில் ஏ.சகுந்தலா தோன்றுவார்.
தங்கை, என் தம்பி படங்களை போன்று பாசத்தை அடிப்படையாக கொள்ளாமல் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக வழி தவறி சென்ற ஒருவன் திருந்தி வாழ முற்படும் போது அவனுக்கு ஏற்படும் சோதனைகளே கதையின் களனாக அமைந்திருந்த படத்தை ஏ.சி.டி. இயக்கியிருந்தார். இந்த படத்தில் ஒரு முக்கியமான அம்சம் சென்னையின் முக்கிய தெருக்களில் அதுவும் நடிகர் திலகத்தை வைத்து படப்பிடிப்பு நடத்தியதை குறிப்பிட வேண்டும். அதுவும் மவுண்ட் ரோடில் ஸ்பென்சர் அருகே சினிமா ஷூட்டிங் நடத்துவது போல கொள்ளையடிக்கும் காட்சி, நன்றாக எடுத்திருப்பார்கள். அது போல் சென்னை சிறைச்சாலை, அண்ணா நகர் டவர் போன்ற இடங்களிலும் ஷூட்டிங் நடத்தியிருப்பார்கள்.
கவியரசர்-மெல்லிசை மன்னர் கூட்டணி இந்த படத்திலும் தொடர்ந்தது. ஆனால் முந்தைய இரண்டு படங்களைப் போல் பாடல்கள் அவ்வளவு பிரபலமானது என்று சொல்ல முடியாது.
1.பழனியப்பன் பழனியம்மாவா- டி.எம்.எஸ்.
ஆண் வேடம் போட்ட பெண் என்று தெரிந்தவுடன் சிவாஜி விஜயாவை கிண்டல் செய்து பாடும் பாடல். இந்த பாடல் காட்சியை பார்த்தால் நடிகர் திலகம் ரொம்ப எனர்ஜிடிக்காக செய்திருப்பார், இது பிரபலமான பாடல்.
2.கோட்டை மதில் மேலே ஒரு வெள்ளைப் பூனை- டி.எம்.எஸ். - எல்.ஆர். ஈஸ்வரி.
சூப்பர் ஹிட் பாடல். படத்தில் நடிகர் திலகம் ஸ்டைலில் கலக்கியிருப்பார். ஹோட்டல் விருந்துக்கு வரும் சமஸ்தானத்து ராணியின் கழுத்திலிருக்கும் விலையுயர்ந்த நெக்லசை திருடும் காட்சி. நடிகர் திலகத்துடன் கூட விஜயலலிதா. பாடல் வேகம் பெற ஆட்டமும் வேகம் பெறும். ஒவ்வொருவருடன் ஆடி விட்டு இறுதியில் ராணியுடன் சேர்ந்து ஆடிக் கொண்டே நெக்லசை மாற்றி போலியை வைப்பதை த்ரில்லிங்காக எடுத்திருப்பார்கள்.
3.என் ஆசை என்னோடு- சுசீலா.
படத்தில் விஜயாவிற்கு இந்த ஒரு பாடல்தான். ஹோட்டலில் ஆடும் பாடல். சுசீலா அருமையாக பாடியிருப்பார். நல்ல மெட்டு. இருந்தும் பெரிய அளவில் பிரபலமாகவில்லை.
4.நினைத்தபடி நடந்ததடி வராதவன் வந்து விட்டான் - எல்.ஆர்.ஈஸ்வரி.
பாலாஜியின் கூட்டத்தில் மீண்டும் வந்து சேரும் சிவாஜியை வரவேற்று விஜயலலிதாவும் கூட்டத்தினரும் ஆடும் பாடல். நடிகர் திலகம் தன் Trade மார்க் நடை நடந்தே கைதட்டலை வாங்கி விடுவார்.
தங்கை என் தம்பி படங்களுக்கு பிறகு நடிகர் திலகத்தை வைத்து மூன்றாவது படம் தயாரித்தார் பாலாஜி. அதுதான் திருடன். மீண்டும் தெலுங்கு படத்தின் உரிமையை வாங்கியிருந்தார் பாலாஜி. ஆனால் தெலுங்கு படமே Once a thief என்ற ஆங்கிலப் படத்தை தழுவி எடுக்கப்பட்டதாகும். என் தம்பியை போலவே இதுவும் ஜெகபதி ஆர்ட் பிக்சர்ஸ் தெலுங்கில் தயாரித்த படம். நடிகர் திலகம் என்றைக்குமே இமேஜ் பற்றி அலட்டிக் கொள்ளாதவர் என்பதற்கு மேலும் ஒரு உதாரணம் இந்த படத்தின் டைட்டில்.
பாலாஜியின் படங்களுக்கு அன்று பைனான்சியராக இருந்தவர் சுதர்சன் சிட்ஸ் வேலாயுதன் நாயர், அதாவது கே.ஆர்.விஜயாவின் கணவர். இந்த படத்தின் வேலைகள் முடிந்து படம் பார்த்த வேலாயுதன் நாயருக்கு கோபம். காரணம் புன்னகை அரசியின் பெயர் தனியாக டைட்டிலில் வராமல் எல்லோருடனும் சேர்ந்து வந்து விட்டது. இது தயாரிப்பு நிர்வாகியின் கவனக்குறைவால் ஏற்பட்ட தவறு. ஆனால் வேலாயுதன் நாயர் சமாதானமாகவில்லை. இந்த படத்திற்கு பிறகு பாலாஜியின் படங்களுக்கு பைனான்ஸ் செய்வதை நிறுத்திக் கொண்டார். இந்த படத்திற்கு பிறகு வெகு காலம் பாலாஜியின் படங்களில் கே.ஆர்.விஜயாவும் இடம் பெறாமல் இருந்து பதினான்கு வருடங்களுக்கு பின் நீதிபதி படத்தில்தான் மீண்டும் நடித்தார்.
இந்த படத்தின் பாக்ஸ் ஆபிஸ் பற்றி பேசுவதற்கு முன் பாலாஜி பற்றி ஓரிரு வார்த்தைகள். பாலாஜி என்ற நடிகர் எப்படியோ, பாலாஜி என்ற தயாரிப்பாளர் மிகவும் பிடிவாதக்காரர். தான் நினைத்ததை செய்துக் காட்ட வேண்டும் என்று இருந்தவர். நடிகர் திலகத்தை வைத்து action படமா என்று சிலர் தடுத்த போது பிடிவாதமாக நடிகர் திலகத்தை ஒரு ஸ்டைலிஷ் action ஹீரோவாக ரசிகர்களுக்கு பிடித்த முறையில் அவரை present செய்து நடிகர் திலகத்தின் ரசிகர்களுக்கு பிடித்தமானவராக மாறினார். ஆனால் தான் நிச்சயிக்கும் பட ரிலீஸ் தேதியை பொறுத்தவரை அதே பிடிவாதத்தில் உறுதியாக இருந்தவர். சிவாஜி படங்களே சிவாஜி படத்திற்கு போட்டியாக வந்தது பற்றி பலமுறை பேசியிருக்கிறோம். அந்த விஷயத்தில் பாலாஜியும் குற்றவாளியாக இருந்திருக்கிறார்.
நடிகர் திலகத்தை வைத்து அவரது முதல் தயாரிப்பு தங்கை. அந்த படம் நடிகர் திலகத்தின் அதற்கு முன் வெளி வந்த பேசும் தெய்வம் வெளியாகி ஐந்து வாரங்களில் வெளியானது. சென்னை கெயிட்டியில் 14.04.1967 அன்று வெளியான பேசும் தெய்வம் 34 நாட்களில் நடைபெற்ற 100 காட்சிகளும் ஹவுஸ்புல் [100 Continuous House full Shows விளம்பரம் 17.05.67 அன்று சென்னை தினத்தந்தியில் வெளியானது]. ஆனால் அதற்கு அடுத்த நாட்களிலே [19.05.1967] தங்கை வெளியானது. இதனால் பேசும் தெய்வம் 100 நாட்கள் ஓடுவது பாதிக்கப்பட்டது.
சென்னையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த ராமன் எத்தனை ராமனடி படம் பாலாஜியின் எங்கிருந்தோ வந்தாள் படத்திற்காக மாற்றப்பட்டது.
ரோஜாவின் ராஜா வெளியாகி 30 நாட்கள், அவன் ஒரு சரித்திரம் வெளியாகி 11 நாட்களே ஆன நிலையில் தன் தீபத்தை 26.01.1977 அன்று வெளியிட்டார் பாலாஜி. விளைவு ரோஜாவின் ராஜா, அவன் ஒரு சரித்திரம்
படங்களின் ஓட்டம் பாதிப்பு.
வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த அண்ணன் ஒரு கோயில் சென்னையில் பாலாஜியின் தியாகத்திற்காக தூக்கப்பட்டது.
கவரிமான் (06.04.1979) வெளிவந்து 4 வாரங்கள் கூட ஆகாத நிலையில் தன் நல்லதொரு குடும்பத்தை 03.05.1979 அன்று வெளியிட்டார்.
வசந்தத்தில் ஓர் நாள் படத்திற்கு இரண்டே வாரங்கள் மட்டுமே இடைவெளி விட்டு தீர்ப்பு படத்தை ரிலீஸ் செய்தார்.
சாதனை படத்திற்கு 15 நாட்கள் இடைவெளியில் மருமகள் வெளியானது.
இவ்வளவு ஏன், நடிகர் திலகத்தை வைத்து பாலாஜி எடுத்த கடைசிப் படமான குடும்பம் ஒரு கோயில் கூட அதற்கு முந்தைய சிவாஜி படமான ராஜ மரியாதை வெளியான 11 நாட்களில் வெளியானது.
இவ்வளவு பெரிய லிஸ்ட் எதற்கென்றால் திருடன் படத்திற்கும் இதுதான் நடந்தது. 1969-ம் வருடத்தை பொறுத்தவரை மாதம் ஒரு சிவாஜி படம் வந்துக் கொண்டிருந்தது.
ஆகஸ்ட் மாதம் வெளியான நிறைகுடம் நான்கு வாரங்களே ஆன நிலையில் தெய்வ மகன் 05.09.1969 வெளியானது. தெய்வ மகன் வெளியான 35 நாட்களில் பாலாஜி திருடன் திரைப்படம் அக்டோபர் 10 அன்று வெளியாகும் என்று அறிவிக்கிறார்.
ரசிகர்களும் மற்றவர்களும் அவரிடம் வேண்டாம் என்கிறார்கள். காரணம் ஏற்கனவே இரண்டு படங்கள் ஓடிக் கொண்டிருகின்றன. நவம்பர் 9 அன்று ரசிகர்கள் பேராவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சிவந்த மண் வெளியாகப் போகிறது. எனவே இதற்கு நடுவில் திருடன் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டாம் என்ற சொல்கிறார்கள்.
மேலும் சென்னையில் திருடன் ஒப்பந்தம் செய்யப்பட்ட அரங்குகள் [பிளாசா,ராக்ஸி,பாரத், ராம்] 10 ந் தேதி ப்ரீயாக இல்லை. 17ந் தேதிதான் ரிலீஸ் பண்ண முடியும் என்ற சூழ்நிலை. இந்த நேரத்தில் செய்யாமல் சிவந்த மண் படத்திற்கு பின் ரிலீஸ் செய்யலாம் என்கிறார்கள். ஆனால் பாலாஜி யார் சொன்னதையும் கேட்கவில்லை. அவரது விருப்படியே சென்னை நீங்கலாக அக்டோபர் 10- ந் தேதியும், சென்னையில் 17-ந் தேதியிலும் படம் ரிலீஸ் ஆனது.
சென்னையில் வெளியான நான்கு தியேட்டர்களிலும் தமிழகத்தின் முக்கிய ஊர்களிலெல்லாம் 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக 8 வாரங்கள் ஓடியது. ஆனால் தெய்வ மகன், சிவந்த மண் என்ற இரண்டு மலைகளுக்கு நடுவே சிக்கிகொண்ட திருடனால் அதற்கு மேல் ஒரு வெற்றியை பெற முடியவில்லை.
ஆனால் இது போன்ற சிக்கல்களெல்லாம் எதுவும் இல்லாத இலங்கையில், வணிக ரீதியாக பெரிய வெற்றிப் பெற்ற திருடன், தலைநகர் கொழும்பில் சென்ட்ரல் திரையரங்கில் 100 நாட்களை கடந்து ஓடியது. 100 நாட்களில் பெற்ற வசூல் Rs 3,22,374/-
.
இது அந்த நேரம் வெளியான பல பெரிய படங்களின் வசூலை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. சற்று நிதானித்து பாலாஜி செயல்பட்டிருந்தால் தமிழகத்திலும் திருடன் அந்த 100 நாட்கள் என்ற இலக்கை எட்டிப் பிடித்திருக்கும் என்பது திண்ணம். முதல் வெளியீட்டில் லாபம் பார்த்த விநியோகஸ்தர்கள் மறு வெளியீடுகளிலும் லாபத்தை அள்ளிக் குவித்தார்கள்.
மதுரையில் படம் ஸ்ரீதேவியை ரிலீஸ். படம் வெளியான மூன்றாம் நாள் (12.10.1969) படத்திற்கு மதியக் காட்சி போனோம். தர்மம் எங்கே பட விமர்சனத்தில் ஸ்ரீதேவி நீள வாக்கில் அமைந்த அரங்கம் என்பதை சொல்லியிருப்பேன். அது மட்டுமல்ல திரையரங்க வாசல் கேட் முதல் அரங்கம் அமைந்திருக்கும் இடம் வரை நீளமான வளாகம். படம் முடிந்து வரும்போது அடுத்த காட்சிக்கு நிற்கும் வரிசையை கவனிக்கிறேன். போய்க் கொண்டேயிருக்கிறது. கிட்டத்தட்ட வாசல் கேட் வரை வரிசை. மறக்கவே முடியாது. [அந்த வரிசையின் நீளத்தை முறியடித்தது சவாலே சமாளி வரிசை. அதையும் தாண்டியது தர்மம் எங்கே வரிசை]. முன்பே சொன்னது போல் சற்று இடைவெளி கிடைத்திருந்தால் பிரமாதமாக இருந்திருக்கும்.
மீண்டும் தன்னால் எந்த வகைப் படமும் செய்ய முடியும் என்று நடிகர் திலகம் நிரூபித்த படம்.
அன்புடன்
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
11th October 2017 04:21 AM
# ADS
Circuit advertisement
-
11th October 2017, 04:26 AM
#1292
Senior Member
Devoted Hubber
Puvai Srr
தொன்னைக்கு நெய் ஆதாரமா இல்லை நெய்க்கு தொன்னை ஆதாரமா என்பது போல சிவாஜியால் கருணாவின் வசனமா இல்லை கருணாவின் வசனத்தால் சிவாஜியா என்று ஒருவர் முன்னொரு சமயத்தில் கேட்டிருந்ததாக சமீபத்தில் படித்தேன். அதற்கான விடை எனக்கு சிறுவயதிலேயே தெரிந்திருந்தாலும் அது நேற்றைய முன்தினம் உறுதி செய்யப் பட்டது. ஏதோ ஒரு சானலில் நடிகர் சிவகுமார் கருணா எழுதிய சாம்ராட் அசோகன் வசனத்தைப் பேசிக் காண்பித்தார். அதைப் பார்த்த போது சிவாஜி the great, எப்படி அதே வசனங்களுக்கு உயிரூட்டியிருந்தார் என்பது தெள்ளத் தெளிவாக தெரிந்தது. It is Sivaji, Sivaji only Sivaji!
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
11th October 2017, 04:27 AM
#1293
Senior Member
Devoted Hubber
T.N.Radhakrishnan
வசந்தமாளிகை படத்தில் மயக்கமென்ன பாடலுக்கு முன்பு வாணிஸ்ரீக்கு அந்த மாளிகையைச் சுற்றிக்காட்டியபடியே தன் காதலை விவரிப்பார். அந்த வசனம் மிகச் சாதாரண வசனம். ஆனால் கொஞ்சுகிற, குலவுகிற, தன் காதலை வெகு உணர்ச்சியோடு எடுத்து வைக்கிற பாவனைகளோடு அழகு உச்சரிப்பில் அந்தச் சாதாரண வசனத்தை மெனக்கேட்டு மெருகேற்றும் விதம் இருக்கிறதே - அடா அடா அடா- கேட்பதற்கு நம் காதுகள் தவம் செய்திருக்க வேண்டும்.
இதற்கெல்லாம் மூலகாரணம் என்ன தெரியுமா? எல்லோரும் வசனத்தை வெறுமனே உச்சரிப்பார்கள். சிவாஜி மட்டும்தான் ஒரு musical sense சேர்த்துக் கொடுப்பார். மதிப்பிற்குரிய Puvai Srr குறிப்பிட்ட சத்ரபதி சிவாஜி வசனத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு பாராவையும் ஒவ்வொரு பாணியில் - ஒவ்வொரு சந்தத்தில் பேசுவார். "அதோ புரந்தர்" எனும்போது ஒருவிதமாய், "போகாதீர்கள்-படைபலம் அதிகம்" எனும்போது ஒருவிதமாய் - "நான் என்ன அரசியல் தெரியாதவனா ஹஹ்ஹஹா - ராஜதந்திரம் அறியாதவனா- ஹஹஹ்ஹ - " எனும்போது ஒரு விதமாய் - பேசும் பாணியை மாற்றி மாற்றி - பேசுவதே ஓர் இசை போல அவர் செய்து , அதாவது அவர் மட்டுமே செய்து காண்பித்ததால்தான் அந்த வசனங்களெல்லாம் சாகாவரம் பெற்று நம் நெஞ்சக் கூட்டில் நிரந்தரமாய்த் தங்கிவிட்டன.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
11th October 2017, 04:32 AM
#1294
Senior Member
Devoted Hubber
vee yaar
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
11th October 2017, 04:34 AM
#1295
Senior Member
Devoted Hubber
Meenakshi Sundaram
அன்பார்ந்த #நடிகர்திலகவிசுவாசிகளே
திரு.சேகர் பரசுராம்சார் நேற்று ஒரு புகைப்படம் வெளியிட்டிருந்தார். இன்றைய இளைஞிகள் சிவாஜி மணிமண்டபத்தில் அன்னாரது திருவுரச்சிலை முன் செல்பி எடுத்ததை.பார்க்கவே கண்கொள்ளாக்காட்சி.அதையொத்த ஒரு நிகழ்வினை இங்கே உங்களுடன் பகிர ஆசைப்படுகிறேன்.இரண்டு தினங்களுக்கு முன் நடந்தது. நான் மதுரை திருமலை நாயக்கர் மகாலுக்குப்பின் உள்ள ஒரு அலுவலகத்தில் பணிபுரிகிறேன்.தினமும் மகாலை சுற்றிப்பார்க்க வெளியூர் வாசிகள் வருவார்கள்.போன சனியன்று சில கல்லூரி மாணவிகள் அவ்வ...ழியே செல்லும்போது என்னிடத்தில் வந்து (மகாலை ஒடிய டீ கடையில் தினமும் டீ குடிப்பது வழக்கம்) மதுரையில் சிவாஜி மணிமண்டபம் இல்லையா என்று கேட்டனர் நான் இல்லை சென்னையில் இப்போதுதான் கட்டியுள்ளார்கள் என்றேன்.பின்னர் அவர்களிடம் சிவாஜிசாரைப்பற்றித்தெரியுமா எனக்கேட்டேன, இல்லை அவ்வளவாக தெரியாது முன்னாள் நடிகர் என்று தெரியும் என்றார்கள்.அவரைப்பற்றிச் சொல்லுங்களேன் என்றனர். நானும் இதுதான் சந்தர்ப்பம் என்று நம் திலகத்தின் வரலாற்றை எனக்குத் தெரிந்தவரை சொன்னேன் அ வர்களுக்கு ஒரே ஆச்சரியம் இவ்வளவு சிறந்த நடிகரா என்று கூறிவிட்டு கட்டாயம் சென்னை செல்லும் போது மணிமண்டபத்தை பார்க்கிறோம் என்றனர். எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது.அதிலும் அவர்கள் என்னுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.அதை அவர்களிடம் கேட்டு வாங்கக்கூட மறந்துவிட்டேன்.அவ்வளவு ஆனந்தம் எனக்கு. இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால் நம் அய்யன் இன்றைய தலைமுறையிரையும் கவர்ந்து விட்டார் என்பதுதான். எனவே ஊடகங்களோ அல்லது யாராலும் நம் திலகத்தின் புகழை அழிக்கவோ களங்கப்படுத்தவோ தகுதியில்லாவர்கள்.இன்னும் வருங்காலத்திலும் அன்னாரின் புகழ் ஓங்கும் என்பது திண்ணம்.நன்றி
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
11th October 2017, 04:43 AM
#1296
Senior Member
Devoted Hubber
vaannila vijayakumaran
"அரசியலை ஒரு கருவியாக வைத்துக் கொண்டும், சினிமா உலக செல்வாக்கைச் சேர்த்துக் கொண்டும், உங்களைப் ' பிழைக்கத் தெரியவில்லை ' என்று சிலர் குறை கூறுகிறார்களே... அதற்க...ு பதில் என்ன சொல்லப் போகிறீர்கள் " என்று பிரபல பத்திரிகை ஒன்றில் வாசகர் கேட்ட கேள்விக்கு நடிகர்திலகம் சொன்ன பதில் என்ன தெரியுமா? "என் திறமையையும், புகழையும் தவறான காரணங்களுக்கு பயன் படுத்த எனக்குத் தேவையுமில்லை..எனக்கு அவசியமுமில்லை.." என்பதுதான் அது.. அதே பகுதியில், நடிப்புத் திறமையைத் தவிர உங்களிடம் குடிகொண்டிருக்கும் இன்னொரு திறமை எது? என்று வேறொரு வாசகர் கேட்ட கேள்விக்கு, "நான் ஏமாறுவதிலே திறமைமிக்கவன் " என்றும் பதில் அளித்திருந்தார்.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
12th October 2017, 05:59 AM
#1297
Senior Member
Devoted Hubber
Vasudevan Srirangarajan
இயக்குநர் சேரன் அவர்களுக்கு தங்களின் சிவாஜி கணேசனின் ராசி பலன் பற்றிய பதிவுக்கு முதலில் என் பாராட்டுகள்.
அத்துடன் கூடுதலாக சில தகவல்களை பதிவு செய்திட விரும்புகிறேன்.
தயாரிப்பாளர் பாலாஜி "அண்ணாவின் ஆசை" எடுத்து அனைத்து சொத்துக்களையும் இழந்து நடிகர் திலகம் காலில் தன் மகனுடன் அன்னை இல்லத்தின் போர்ட்டிகோவில் விழுகிறார். நடிகர் திலகம் என்ன என்று விசாரிக்க "நாளை என் சொத்துக்களை கோர்ட் ஜப்தி செய்ய இருக்கிறது" என்று கண்ணீர் விடுகிறார். "நான் என்ன செய்ய வேண்டும் என நடிகர் திலகம்" க...ேட்க, அதற்கு பாலாஜி "நீங்கள் என் அடுத்த படத்தின் நாயகன் என்ற விளம்பரம் பத்திரிக்கைகளில் கொடுக்க என்னை அனுமதித்தால் போதும். என் சொத்துக்கள் திரும்பிவிடும்" என்கிறார்.
சரி என்கிறார் நடிகர் திலகம். "தங்கை" பட விளம்பரங்கள் வர இழந்த சொத்துக்கள் திரும்புகின்றன. அதன்பின் பாலாஜிக்கு ஏற்றம்தான். ஆனால் ஒன்று நடிகர் திலகத்திடம் இறுதிவரை நன்றி மறவாமல் இருந்தவர் பாலாஜி என்பது குறிப்படத்தக்கது.
முனைவர். கா.வெ.சே. மருதுமோகன்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வாழ்க்கை வரலாறும் அவரது கலைப்பணிகளும்- ஓர் ஆய்வு
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
12th October 2017, 06:01 AM
#1298
Senior Member
Devoted Hubber
Raj Raj
நடிகர் திலகம் குறித்து
நாகேஷ் சொன்ன காமெடி கமெண்ட்....
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
12th October 2017, 06:06 AM
#1299
Senior Member
Devoted Hubber
Vasudevan Srirangarajan
·
நன்றி திரு சேரன் அவர்களுக்குநடிகர்திலகத்தின் ராசியால் உயர்ந்தவர்கள்...
1. AVM நிறுவனம் சிவாஜியை வைத்து பராசக்தி எடுத்தபின்னர் காணாமல் போகவில்லை.. எண்ணிலடங்கா படங்கள் எடுத்து மிகப்பெரிய நிறுவனம் ஆனது
2) பீம்சிங் என்ற இயக்குனர் சிவாஜியை வைத்து படம் எடுத்து முதல் படத்திலேயே தெருவுக்கு வரவில்லை காணாமல் போகவில்லை.. தொடர்ந்து "ப" வரிசையில் மிகப்பெரிய வெற்றிப்படங்களைத்தந்தார்
3) K.பாலாஜி அவர்கள் தொடர்ந்து சிவாஜியை வைத்து அனைத்தும் வெற்றிப்படங்களாக தந்தார். ஏழையாகி நடுத்தெருவில் நிற...்கவில்லை.
4) சிவாஜியை ஒருநாள் மேயராக கெளரவித்த நியூயார்க் நகரம் அழிந்துவிடவில்லை
5) சிவாஜியுடன் ஜோடியாக நடித்த பத்மினி, கேஆர் விஜயா, வாணிஶ்ரீ, ஶ்ரீப்ரியா ஶ்ரீதேவி என எல்லா நடிகைகளும் நன்றாகவே இல்லற வாழ்க்கையில் வாழ்ந்தார்கள் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்.
6) சிவாஜி பேசியதால் கலைஞரின் வசனம் எழுதிய எந்த படங்களும் ஓடாமல் போனதில்லை. மாறாக சிவாஜி பேசியதால் மட்டுமே அவர் வசனம் புகழ்பெற்றது
7) சிவாஜி கட்டிவைத்த நடிகர்சங்கம் அடுத்தநாள் இடிந்து விழுந்துவிடவில்லை. இன்றும் நடிகர்களுக்கான அடையாளமாய் திகழ்கிறது
இப்படி அவரின் ராசியையும் அவரால் உயர்ந்தவர்களையும் அடுக்கிக்கொண்டே போகலாம்
அவரை நம்பாமல் கெட்டவர்களும் அவரின் நேர்மையை சோதித்து கெட்டவர்களும் பரப்பிய வீண் பொய்தான் இந்த ராசி விவகாரம். அரசியலில் அவர் வெற்றியடைய முடியாதது மக்கள் போலிகளை நம்பி ஏமாறத்தொடங்கிய காலம்.. நல்லவர்களை அடையாளம் காணத்தெரியாமல் கைவிட்டார்கள் அதன் பலனை இன்று மக்கள் அனுபவிக்கிறார்கள்..
சிவாஜியைப்போல நல்லவர்களுக்கு ராசியான மனிதரை தலைவரை பார்க்கமுடியாது இனி ஒருவர் பிறக்கப்போவதுமில்லை...
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
12th October 2017, 06:09 AM
#1300
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
Bookmarks