-
24th October 2017, 10:50 PM
#1
Senior Member
Devoted Hubber
Sukumar Shan
அருணாசலம் ஸ்டுடியோஸ் ஏ.கே. வேலன் (வணங்காமுடி கதை , வசனகர்த்தா , அருணாசலம் ஸ்டூடியோஸ், வேலன் பிக்சர்ஸ் உரிமையாளர் ) அவர்களுடன் நடிகர் திலகம் !
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
24th October 2017 10:50 PM
# ADS
Circuit advertisement
-
24th October 2017, 10:43 PM
#2
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
25th October 2017, 09:40 AM
#3
-
25th October 2017, 10:04 AM
#4
Senior Member
Devoted Hubber
-
25th October 2017, 10:11 AM
#5
Senior Member
Devoted Hubber
Abdul Razack
நீயா? நானா? பாகம் .5.......
.ஆரம்பிக்கும் முன் உங்களிடம் தாமதத்திற்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன் காரணம் சில நாட்களாக அதிக பணிசுமை..,,,
சிவாஜி படத்தின்சிறப்பை ஒருவார்த்தையில் சொல்லவேண்டும் என்று கோபிநாத் கூறியதும் மைக்கை நடிகர்திலகத்தின் அன்புதம்பி M.L,கான் வைத்து இருந்தார் இவரைபற்றி சில குறிப்புகள் நாம் சிவாஜியை திரையில் பார்த்துதான் ரசித்து இருப்போம் ஆனால் இவர் அன்னைஇல்லத்தில் வீட்டின் அறையினிலே அவரை பார்த்து ரசித்து பழகியவர் மேலும் கடந்த 1984ம் ஆண்டு இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக சென்னை மெரினா கடற்கரையில் சிவாஜி அவர்கள் தன் ரசிகர்களுடன் உண்ணாவிரதம் இருந்தார் நீண்ட நேரம் சம்மனமிட்டு அமர்ந்து இருந்ததால் கால் வலிக்க ஆரம்பித்து தன்கால்களை தானே அமுக்கி கொண்டார் நடிகர்திலகம் ,.,,,,,அதை பார்த்து அருகில் அமர்ந்து இருந்த கான் பாய் சிவாஜியின் காலைபிடித்து அமுக்கிவிட்டார் முதலில் வேண்டாம் என்று சொன்னவர் பிறகு அமுக்குவிடு என்று சொல்லி இருக்கிறார் அந்த பாக்கியம் பெற்றவரின் கையில் மைக் அவர் சொன்ன வார்த்தை சிவாஜி படத்தை குடும்பத்தோடு அனைவரும் பார்க்கலாம் மற்றவர்கள் படத்தை பார்க்க முடியாது என்றார் உடனே கோபிநாத் இல்லை சிவாஜியின் 5 படங்களை குடும்பத்தோடு பார்க்க முடியாது அது என்ன படம் என்று சொல்லவா என்றார் உடனே கான் பாய் எழுந்து எங்கே சொல்லுங்கள் என்ன படம் அது மோசமான படம் என்று சொன்னீர்களே என்று சத்தமாக கேட்டுவிட்டார் நிகழ்ச்சி முடிந்து சொல்கிறேன் என்று கோபிநாத் சொல்ல நீங்கள் சொல்லிவிட்டு நிகழ்ச்சியை நடத்துங்கள் என்று கான் பாய் சொல்ல இருவருக்கும் நீயா?நானா? என்ற ரீதியில் வாக்குவாதம் இந்த சம்பவத்தால் நிகழ்ச்சியை ஒளிபதிவு செய்த கேமராமேன்கள் எல்லாம் கேமராவை ஆப் செய்து விட்டு வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள் பிறகு நாங்கள் எல்லாம் சமாதானபடுத்தி இருவருக்கும் சமரசம் செய்து அமைதியான பிறகு நிகழ்ச்சி தொடர்ந்தது அந்த M.L கான் அவர்களோடு தான் நான் போட்டோவில் இருக்கிறேன் ஒரு வழியாக இது முடிந்தவுடன் எம் ஜி ஆர் பாடலின் தனி சிறப்பு சொல்லுங்கள் என்று கேட்டதும் சில பாடல்கள் எதிர் அணியிலிருந்து வந்ததது சிவாஜி பாடலின் சிறப்புக்கு நம் பக்கம் நண்பர் ராம் குமர் மிகவும் அழகாக சிவாஜி பாடல்களில் தான் மூன்று மதமக்களுக்கும் ஏற்ற பாடல்கள் உள்ளது என்றார் உடனே கோபிநாத் எம்ஜி
ஆர் பாடலிலும் இருக்கிறது என்றுசொல்லிவிட்டு இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக டைரக்டர் மிஷ்கின் வந்து உள்ளார் இருவரது படங்களின் சிறப்பையும் சொல்லுவார் என்ற உடன் மிஷ்கின் பேச ஆரம்பித்தார் இருவரின் படங்களையும் பேசியவர் எங்கள் குடும்பமே சிவாஜி ரசிகர் குடும்பம் என் அம்மா அப்பா எல்லோரும்,,.,,, சின்னபிள்ளையில் நான் ஏதாவது கேட்டு திடீரென்று அழுவேன் என் அப்பா சொல்லுவார் சிவாஜி மாதிரியே அழுகிறியேடா என்பார் நான் சினிமா டைரக்டர் ஆனதற்கு காரணமே சிவாஜியின் படங்களான உயர்ந்த மனிதன் தெய்வமகன் போன்ற படங்கள்தான் காரணம் என்று சொல்லிகொண்டே போனார் அவர் பேசியதை கேட்டவுடன் நம் அணியினர் பலத்த கரகோசம் செய்தனர் அந்த சத்தம் கேட்டவுடன் அவர் எம் ஜி ஆரின் படமும் நல்ல இருக்கும் பாடல்காட்சிகள் சண்டைகள் சிறப்பாக இருக்கும் என்று சில எம்ஜிஆர் பாடல்களை பாடினார் அந்த அளவிற்கு சிவாஜி பாடல்களை பாட அவர்க்கு வரவில்லை இறுதியாக இரண்டுபேருமே தங்களது வழியில் சிறந்தவர்கள்தான் என்று அருமையாக பேசிபுறபட்டு சென்றார் அதன் பிறகு நமக்கு என்றே ஏற்படுத்தபட்ட களத்திற்கு எங்களை அழைத்து சென்றார்கோபிநாத் பீல்டர்களே இல்லாத கிரவுண்டில் ஆடியது போல் எங்கள் அணியினர் உற்சாகமாக ஆடினார்கள் பாடினார்கள் அது என்ன தலைப்பு? தொடரும்-,,,
-
25th October 2017, 10:22 AM
#6
Senior Member
Devoted Hubber
Rajaram Msr
இப்பொழுது சன் சினிமா கிளப் சேனலில் பலே பாண்டியா
-
25th October 2017, 10:29 AM
#7
Senior Member
Devoted Hubber
கரடி கரடி
வருது வருது
விலகு விலகு
புதிய கரடி வருது வருது
விலகு விலகு
-
25th October 2017, 04:51 PM
#8
Senior Member
Devoted Hubber
Sundar Rajan
Sundar Rajan
அன்பிற்குரிய சிவாஜியவாதிகளே,
பத்திரிக்கையாளர்களுக்கும், மீடியாக்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் ஒரு மாபெரும் குழப்பம்,
சிவாஜி அவர்கள் இறந்து 16 வருடங்கள் ஆகிவி...ட்டது, ஆனால் அவர் மீது அன்பு வைத்திருந்த ரசிகர் கூட்டம் குறைந்தபாடில்லை. எந்தவித அரசு பதவிகளை வகித்தவரில்லை. பணம் கொடுத்து கூட்டம் சேர்க்க முடியாமல், பள்ளி மாணவர்களை வைத்தும் கூட்டம் சேர்க்க முடியவில்லை. ஆனால்
சிவாஜி என்று சொன்னால் தானாக கூட்டம் வந்து விடுகிறது என்பது புதிராக இருக்கிறது.
இதோ இந்த படத்தைப் பாருங்கள், இந்த போட்டோ கிட்டத்தட்ட 72ல் இருந்து 78க்குள் இருக்கும் என்று நினைக்கிறேன். அப்போது நமது மக்கள்தலைவர் அவர்கள் உச்சத்தில் இருந்த நேரம். அதையெல்லாம் பொருட்படுத்தாமல், தன் ரசிகர்களுக்கு மத்தியில் எப்படி அமர்ந்திருக்கிறார் பாருங்கள்.
இப்போது சில நடிகர்களை பார்ப்பதே குதிரைக்
கொம்பாக இருக்கிறது. பிறகு எப்படி போட்டோ எடுப்பது.
உலகில் எந்த நடிகரும் இப்படி தன் ரசிகர்ளுடன் அளவளாவியது கிடையாது என உறுதியாக சொல்லலாம்.
அது போல், அதிக ரசிகர்கள் திருமணத்திலும், அவர்களது இல்ல விழாக்களிலும் கலந்து கொண்டு சிறப்பித்தவர் நமது மக்கள்தலைவர் சிவாஜி அவர்கள் தான்.
இது தான் இன்றும் சிவாஜி என்ற மந்திர வாா்த்தைக்கு மயங்கி கிடக்கிறோம்.
என்றும் மயங்கிக் கிடப்போம்.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
25th October 2017, 04:57 PM
#9
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
25th October 2017, 04:59 PM
#10
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
Bookmarks