-
21st July 2017, 10:05 PM
#1
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
21st July 2017 10:05 PM
# ADS
Circuit advertisement
-
22nd July 2017, 01:48 AM
#2
Junior Member
Devoted Hubber
From Vikatan,
செவ்வியல் தன்மையுடன் மக்களால் நினைவுகூறப்படும் சிவாஜி!
ஒரு பேட்டியில் சிவாஜியின் இறப்பைப் பற்றி கமல்ஹாசன் நினைவு கூறுகையில் அவரின் திறமைக்கு ஏற்ற கதாபாத்திரம் அமையவில்லை என்கிற ஆதங்கத்தை `சிங்கத்துக்கு தயிர்சாதம் கொடுத்தே கொன்னுட்டாங்க' என்று மேற்கோள் காண்பித்து வருந்தியிருப்பார் .
சிவாஜியின் நினைவுநாளான இன்று, தமிழ் சினிமா அவரை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லையா எனச் சிந்தித்துப் பார்க்கிறபோது கமலின் கூற்று, சற்று மிகையாகவேத் தோன்றுகிறது. தமிழ் சினிமாவில் வித்தியாசமான பாத்திரங்களை ஏற்று நடித்ததில் சிவாஜி முதன்மையானவர். வித்தியாசம் என்பதையும் தாண்டி அவர் நடிப்புக்கான தீனியை அன்றைய இயக்குநர்கள் சமைத்துக் கொடுக்கவே செய்தார்கள். எழுதி வைக்கப்பட்ட கதைகளில் அவர் நடித்தார் என்பதிலிருந்து அவருக்காகக் கதைகள் எழுதப்பட்டன. சிங்கத்துக்கு தயிர்சாதம் கொடுக்கப்பட்டிருந்தால், அதில் சிவாஜியின் பங்கும் இருந்தது என்பதையும் சேர்த்து மதிப்பிட வேண்டும்.
தவிர, சிவாஜி இந்த மதிப்பீடுகளைத் தாண்டியவர். பாடல்கள் மட்டுமே முழு நீள சினிமாவாக வெளிவந்த காலத்திலிருந்து அதில் வசனங்கள் அதிகமாக இடம்பெற்று நவீன சினிமாவாகப் பரிணாமம் அடையத் தொடங்கியபோது தன் ஆட்டத்தை தொடங்கியவர் சிவாஜி. வசனம் பேசி நடிப்பதே புதுமையாக இருந்த சமயத்தில் அவருடைய வசன உச்சரிப்புகளில் தமிழ் சினிமா அவரை உச்சி முகர்ந்தது. வாய்மொழியாகவும் ஏடுகளிலும் அறிந்துவந்த சரித்திர நாயகர்களை நம் கண் முன் கொண்டுவந்து நிறுத்துவதில் சிவாஜிக்கு முக்கியப் பங்குண்டு.
அண்ணா, கலைஞர் போன்றோரின் அனல்பறக்கும் வசனங்கள்கொண்ட பகுத்தறிவை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படங்களை மக்களிடம் கொண்டுசேர்த்தவர். அதே சமயம் புராணங்களும் இதிகாசங்களும் சினிமாவாக எடுக்கப்பட்டபோது, படைப்பாளிகளின் முதல் தேர்வு சிவாஜி கணேசனாகவே இருந்தார். அவரின் நடிப்புத்தன்மை தண்ணீரைப் போன்றது. எந்தப் பாத்திரத்தில் ஊற்றினாலும் அதன் வடிவாகவே மாறக்கூடியவராக இருந்தார்.
மக்களின் துன்பங்களைப் போக்குபவராக, ஏழைப் பங்காளனாக, வெகுஜனங்களின் அபிப்பிராயத்தை வெல்வது மாதிரியான வசனங்களும், பாடல்களும், காட்சிகளும் அமைக்கப்பெற்று எம்.ஜி.ஆர் கோலோச்சிக்கொண்டிருந்தார். எம் .ஜி.ஆருக்கும் மக்களுக்கும் இடையே இந்த மாதிரியான அதீத உணர்ச்சிக்கு இடம் வகுக்கக்கூடிய விஷயங்கள் இருந்தன. ஆனால், சிவாஜி முழுக்கவும் தன் நடிப்பாற்றலாலும் விதவிதமான கதாபாத்திரத் தேர்வுகளாலும் மக்கள் மனதை வென்றவர். தன் திரைப்படங்களில் கதாநாயகப் பிம்ப வழிபாடுகளை முன்னிறுத்தாமல் அவர் நடித்துவந்தது அவருக்குப் பிறகு வந்த நடிகர்களுக்கு ஒரு செயலூக்கத்தை அது அளித்தது.
பேசி நடிப்பதற்கு கொடுக்கும் முக்கியத்துவம் பாடல் வரிகளுக்கு உதட்டை அசைப்பதிலும் இருக்க வேண்டும் என்பதில் தன்னை அறியாமலேயே ஒரு பாடமாக அவர் விளங்கினார். அவருக்கு முந்தைய காலத்தில் பாடலை சொந்த குரலில் பாடியவர்களே திரையிலும் பாடியதால் வரிகளுக்கு ஏற்றாற்போல் உதட்டை அசைப்பது சவாலானதாக இல்லை. அந்தச் சவாலில் முதல் தலைமுறையாக இருந்த அவர் சிறப்புற எதிர்கொண்டார். சொற்களின் அர்த்தத்தை முழுவதும் உள்வாங்கி வெறும் வாயை மட்டுமின்றி கண்களிலும் பாடல்களின் பொருளை வெளிப்படுத்தினார். சிவாஜியின் எந்தப் பாடல்களை எடுத்துப் பார்த்தாலும் இதை உணர முடியும். உதாரணத்துக்கு, சில பாடல்களை இங்கே பட்டியலிடுகிறேன். அதைக் கேட்ட பிறகு மேற்கூறியதை இன்னொரு முறை வாசித்துப்பாருங்கள். ஓர் ஒற்றுமையை உணர முடியும்.
1) என்னை யாரென்று எண்ணி எண்ணி... (பாலும் பழமும்)
2) பொன்னொன்று கண்டேன்.. (படித்தால் மட்டும் போதுமா)
3) எங்கே நிம்மதி (புதிய பறவை)
4) தெய்வமே தெய்வமே (தெய்வ மகன் )
5) நீயும் நானுமா (கெளரவம்)
‘அவரின் நடிப்பு, யதார்த்தத்தைக் காட்டிலும் மிகையானது' என்றொரு கருத்து புழங்கி வருகிறது. சரியாக அணுகிப்பார்த்தால் மிகையான நடிப்பு என்று அவர் மீது வைக்கப்பட்ட விமர்சனம், அவருக்கு அடுத்த தலைமுறை ரசிகர்கள் வைத்ததாகவே இருக்கும். காலத்துக்கேற்றாற்போல் ரசனைகள் மாறுவது தவிர்க்க இயலாதது. அந்த வகையில் முந்தைய தலைமுறை படைப்புகள் மீதும் படைப்பாளிகள் மீதும் வைக்கப்படும் விமர்சனங்களைத் தாண்டி செவ்வியல்தன்மையுடன் மக்களால் நினைவுகூறப்படுவர் சிவாஜி என்பதில் ஐயமில்லை.
இந்த மிகை நடிப்பை இன்னொரு விதத்தில் ஆராய்கிறபோது அவர் திரை நடிப்புக்கு வந்த பின்புலத்தையும் பரிசீலிக்கவேண்டியிருக்கிறது. படிப்பைவிட நடிப்பில் தன்னால் சிறந்து விளங்க முடியுமென்று நினைத்தவர் மிகச்சிறிய வயதிலேயே பெற்றோருக்குத் தெரியாமல் வீட்டைவிட்டு ஓடிப்போய் ஒரு நாடக கம்பெனியை வந்தடைந்தார். “அப்பா அம்மா இல்லாத அநாதை" என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு பாய்ஸ் கம்பெனியில் நாடங்களில் நடித்தார். பல ஆண்டுகால நாடக அனுபவத்துக்குப் பிறகே அவர் சினிமாவுக்கு வந்தார். கூத்து, நாடகம் போன்ற கலை நிகழ்ச்சிகளுக்கு வரும் கடையிருக்கைப் பார்வையாளனுக்கும் உணர்வுகளைக் கடத்த வேண்டும் என்பதில் குரலை உயர்த்திப் பேசுவதும் மிகையான உடல்மொழியை வெளிப்படுத்துவதும் இயல்பானதே. அந்த மரபில் ஊறிப்போய் சினிமாவுக்கு வந்த சிவாஜி. அதையொற்றி இருப்பது ஆச்சர்யமில்லை. அதே சமயம் `சிவாஜியைப்போல நாடகத்திலிருந்து சினிமாவுக்கு வந்தவர்களிடமும் இதே மிகை உணர்ச்சி நடிப்பு வெளிப்பட்டதா?' எனக் கேட்டால், இல்லைதான். ஆனால், அவர்களெல்லாம் சிவாஜி அளவுக்கு இன்றளவும் பேசப்படுகிறார்களா என்பதையும் ஒப்பிட்டுப்பார்க்க வேண்டும்.
எம்.ஜி.ஆர் போன்ற மக்கள் செல்வாக்கு மேலோங்கி இருந்தவரின் சமகாலத்தில் தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தியவர் சிவாஜி. கட்சி அரசியலில் சேர்ந்து தன்னால் சோபிக்க முடியாவிட்டாலும், அரசியலில் இறங்குவதற்கு முன்பும் பின்பும் மக்கள் நலனில் அவர் அக்கறைகொண்டிருந்தார் என்பது அவர் பற்றிய செய்திகளை அறிய வருகிறபோது மறுப்பதற்கில்லை.
அவரின் நினைவுநாளான இன்று, அவர்தம் கலைத் திறமையைக்கொண்டு மக்களுக்கு ஆற்றிய சிலவற்றைத் தெரிந்துகொள்வது அவருக்கான அஞ்சலியை முழுமையடையச் செய்வதாக இருக்கும்.
மதிய உணவுத் திட்டத்துக்கு முதல் நபராக நன்கொடையாக ஒரு லட்சம் ரூபாயை அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் தந்தார்.
* 1962-ம் ஆண்டில் சென்னையில் வெள்ளம் வந்தபோது உறைவிடத்தையும் உடமைகளையும் இழந்துத் தவித்த குடிசைவாழ் மக்களுக்கு உணவுப் பொட்டலங்களும் பண உதவியும் செய்தார்.
* `வீரபாண்டிய கட்டபொம்மன்' நாடகத்தை பல இடங்களில் மேடையேற்றி அதில் கிடைத்த 32 லட்சம் ரூபாய்க்கும் மேலான தொகையை பல நல்ல காரியங்களுக்குக் கொடையாக வழங்கினார்.
* பாகிஸ்தானுடன் எல்லைத் தகராறு நடந்தபோது எல்லையில் பணியாற்றும் ராணுவ வீரர்களுக்காக கலை நிகழ்ச்சி நடத்தி, சுமார் 17 லட்சம் ரூபாயை அரசுக்கு அளித்தார்.
*இலங்கைத் தமிழர்களுக்கு உதவியாக 1,10,000 ரூபாய் கொடுத்தார்.
நடிப்பு சம்பந்தமாக பல விஷயங்களில் நடிகர்களுக்கு முன்னோடியாக இருந்த அமரர் சிவாஜி கணேசன், திரைக்கு வெளியேயும் ஒரு கலைஞனுக்கு சமூகப் பணிகளில் தொடர்பும் பொறுப்பும் இருக்கிறது என்பதற்கும் முன்னோடியாகத்தான் வாழ்ந்தார்.
-
22nd July 2017, 05:31 AM
#3
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
22nd July 2017, 05:38 AM
#4
Senior Member
Devoted Hubber
Thambirajah Pavanandarajah
இன்று நடிகர் திலகம் அவர்களின் நினைவுநாளையொட்டி........ அவர் ஒருமுறை இலங்கை வந்தபோது பத்திரிகையாளர்கள் கேட்டபல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்திருந்தார் .அதிலிருந்து ஒரு கேள்வியும் .நடிகர் திலகம் அவர்களின் பதிலும் கேள்வி உங்களிடம் எல்லாத் திறமைகள் இருந்தும் உரிய விருதுகள் ஏன் உரிய நேரத்தில் அளிக்கப்படவில்லை ?அது இப்படிக்கேட்டா எப்படிப்பதில் சொல்வது அத வாங்கிற அளவுக்கு எனக்கு திறமையில்லேன்னு நினைக்கிறேன் .இப்பதான் திறமை வந்திருக்கலாம்.நான் நல்ல சரக்கா இருந்தா உள்ளுர்ல விலைபோகும் ...நம்ம சரக்கு எங்கையும் விலை போகல்ல இப்பதான் நமக்கு பக்குவம் வந்திருக்குன்னு நெனைச் சிருப்பாங்க போலிருக்கு அதான் கொடுத்திருப் காங்க .ஆஹா...கிடைத்துவிட்டதல்லவா?கிடைக்காம இருந்திருந்தால் சொல்லலாம் சேச்சே இந்தப் பழம் புளிக்கும்னு சொல்லலாம். என்னவோ நான் அதப் பற்றி நினைக்கவே இல்ல.. ஏன்னா நான் சின்ன வயசுல கொஞ்சம் சுப்பீரியர் காம்ப்ளெக்ஸ் உள்ளவன் .நான் பயப்படவே மாட்டேன்.எதுக்குமே ..என்னோட பிறப்பு ,வளர்ப்பு எல்லாமே சேர்ந்தது .அதேமாதிரி அவார்டு கிடைக்கலேன்னு நான் கவலைப் படறதேயில்லை சின்னப்புள்ளையில வெளியூர்ல போயி பெரிய அவார்டை யெல்லாம் வாங்கிக் கிட்டு வந்தவன் நான்.இந்தியாவிலே ஒரு ஓரத்திலே தமிழகத்தைச் சேர்ந்த ஒரு சிறிய நடிகன் உலகத்திலே மிகச் சிறந்த விருதை எல்லாம் பெற்றுக் கொண்டு வந்திருக் கிறேன் .ஆகையால் உள்ளுர்ல விருது கிடைக்கவில்லையென்று நான் கவலைப்பட்டது இல்லை ஆனால் நான் நெனைக்காதபோதுதான் எல்லாம் நடக்கும் .அதுபோல இந்த அவார்டு வந்தது .அதைப் பற்றி விமர்சனம் செய்ய வேண்டியது ஏன்? சின்ன வயசுல நான் மேயர் இன் அமெரிக்கா உங்களுக்குத் தெரியுமா?அமெரிக்காவில இரண்டே பேர்தான் மேயரா இருந்திருக்கிறாங்க ஒண்ணு இந்தியப் பிரதமர் நேருஜி .அடுத்தது உலகமே தெரியாத நான் ....ஒருகோல்டன் கீ கொடுப்பாங்க அந்த ஊரோடகேட் கீ .அதுபோல சின்ன வயசுல கெய்ரோவில இருந்து நாசர் அவார்டு கொண்டுவந்திருக்கேன் வேர்ல்ட் பெஸ்ட் அவார்டு அது .அதைக்கொண்டு வந்திருக்கேன்.பிரான்ஸ்லேருந்து ஒன்பது ஜட்ஜைப் போட்டு எனக்கு இந்த செவாலியே அவார்டைக் கொடுத்திருக்காங்க .இந்திய துணைக் கண்டத்தில இல்லாத அவார்டை எல்லாம் கொண்டு வந்து கொடுக்கிற ஒரு சாதாரண ஆளு.எங்க ஊர்ல எனக்கு புளிக்குழம்பு கிடைக்கலேன்னா கவலைப்பட்டுக்கிட்டு இருப்போம் ?சாம்பார் தின்னுகிட்டு இருப்போம் .குருமாவா தின்னுக்கிட்டு இருக்கோம் வருத்தமெல்லாம் எனக்கு இல்லீங்க தயவு செய்து தப்பா எடுத்துக் காதீங்க .(இந்தப் பேட்டி இலங்கை ரூபவாகினிக் கூட்டுத்தாபனத்தில். முன்னர்கடமையாற்றிய iதிரு இளையதம்பி தயானந்தா அவர்கள் எழுதிய! வானலையின் வரிகள் !என்ற நூலிலிருந்து பெறப் பட்டது அவருக்கு எனது நன்றிகள் )
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
22nd July 2017, 05:18 AM
#5
Senior Member
Devoted Hubber
நிஜவள்ளல் நடிகர் திலகத்தின் 151 வது
திரைக்காவியம்தேனும் பாலும்
வெளிவந்த நாள் இன்றுதேனும் பாலும் 22 யூலை 1971
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
22nd July 2017, 05:50 AM
#6
Senior Member
Devoted Hubber
Sivaji Rajesh SivajiRajesh
நடிகர் திலகம் சிவாஜி கனேசன் அவர்களின் நினைவு நாள் முதியோர் இல்லத்திற்கு அண்னதானம் வழங்கப்பட்டது பவிழம் நகைக்கடை உரிமையாளர்,தலைமை சிவாஜி சக்திவேல்,விக்ரம்பிரபு மாவட்டத்தலைவர் ,சிவாஜி லோகநாதன்23-வது வார்டு தலைவர், வெள்ளிங்கிரி (Ex) Mc பறக்கும்படை ராஜ்குமார்,சிவாஜி திவாகர்,சிவாஜி சிவா,சிவாஜி கோப்பால்,அட்டோ குமார் வடகோவை,கோவை துல்லா,மாஸ்டர் நித்தின்
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
22nd July 2017, 07:57 AM
#7
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
22nd July 2017, 08:40 AM
#8
Senior Member
Devoted Hubber
தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ் நடிகர் சங்கமாக ஆகவேண்டும்!” கொந்தளிப்பில் சிவாஜி ரசிகர்கள்
எஸ்.கிருபாகரன்
‘இவருக்கு நிகராக நடிக்கக் கூடிய ஒரு நடிகர் அகில உலகிலும் இல்லை. ஒருவேளை, ஹாலிவுட் நடிகர் மார்லன் பிராண்டோ முயற்சி செய்தால், இவரைப் போல நடிக்கக்கூடும்' என 60 களில், அந்த நடிகரின் நாடக விழாவில் பங்கேற்ற அண்ணா பேசினார். நடிகரின் திறமையை உயர்த்திக்காட்ட அண்ணா மிகைப்படுத்தி சொன்ன வார்த்தைகளை அந்த ஹாலிவுட் நடிகரே நேரில் கூறக் கேட்கும் அதிர்ஷ்டத்தை அடுத்த இரு ஆண்டுகளில் பெற்றார் அந்த நடிகர். அவர், நடிப்புப் பல்கலைக்கழகம் என இந்திய சினிமா கொண்டாடும் நடிகர் திலகம் சிவாஜிகணேசன்.
1962 ம்ஆண்டு அமெரிக்க அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் சிறப்பு விருந்தினராக அமெரிக்கா சென்ற சிவாஜிகணேசனுக்கு அத்தனை இடங்களையும் சுற்றிப்பார்த்தபின் நடிப்பில் தன்னுடன் ஒப்பிடப்படும் உலகப் புகழ் நடிகர் மார்லன் பிராண்டோவை நேரில் பார்க்கும் ஆசை பிறந்தது. 'அக்ளி அமெரிக்கன்' என்ற படத்தில் நடித்துக்கொண்டிருந்த பிராண்டோவுக்கு அந்தத் தகவல் போனபோது, ' அப்படி ஒரு சந்திப்பு நடந்தால் அவரைவிடவும் எனக்குத்தான் அதில் மகிழ்ச்சி” என உடனே சம்மதித்தார்.
அரைமணிநேரத்திற்கும் மேலாக தனிமையில் பேசினர் இருவரும். சிவாஜியின் நடிப்பை வெகுவாக சிலாகித்துப்பேசிய பிராண்டோ, சிவாஜி கிளம்பிய சமயம் அவரைக் கட்டிப்பிடித்த பிராண்டோ, “ நான் அல்ல எந்த ஒருநடிகரை விஞ்சியும் நீங்கள் நடித்துவிடமுடியும். ஆனால் உங்களைப்போல் நடிப்பதுதான் எங்களுக்குச் சிரமம்” என்று சொல்லி நெகிழ்ந்தார். உலகப்புகழ் நடிகனால் இப்படி சிலாகிக்கப்பட்ட ஒரு நடிகருக்குதான் உள்ளுரில் ஒரு சிலை அமைக்க பல ஆண்டுகளாகப் பெரும்பாடுபடவேண்டியதிருக்கிறது என்பது வரலாற்றுச் சோகம்.
நடிகர் திலகத்தின் நினைவுநாளில், தன் நடிப்பால் திரையுலகைக் கட்டி ஆண்ட அந்த மகாநடிகனுக்குத் தமிழ்த்திரையுலகமோ தமிழக அரசோ ஒரு சிலை அமைக்கும் பணியில் கூட உரிய மதிப்பளிக்கவில்லை எனக் கூடுதல் வருத்தத்தில் உள்ளனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய சிவாஜி ரசிகர் நற்பணி மன்றத் தலைவர் கே.சந்திரசேகரன், “தன் நடிப்பினால் இந்தியாவை நிமிர்ந்து பார்க்க வைத்தவர் சிவாஜி. தமிழகத்தின் கலை அடையாளங்களில் தவிர்க்கமுடியாதவர். ஆனால் ஒரு சிலை விவகாரத்தில் அவருக்கு இழைக்கப்படும் அநீதி எங்களைப்போன்ற ரசிகர்கள் மத்தியில் பெரும் வேதனையை ஏற்படுத்திவருகிறது” என்று பேசத் துவங்கினார்.
“கடந்த தி.மு.க. ஆட்சியின்போது, சிவாஜியைக் கவுரவிக்கும்விதமாக சென்னை டிஜிபி அலுவலகம் அருகே, அவரது முழு உருவ வெண்கலச்சிலை அமைக்கப்பட்டது. இது போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி நாகராஜன் என்பவர் வழக்குத் தொடுத்தார். கடந்த 10 வருடங்களில் அந்த சிலையால் எந்த விபத்து அசம்பாவிதங்களும் நடக்கவில்லை என நாங்கள் தெரிவித்த கருத்தை நீதிமன்றம் ஏற்கவில்லை; சிலையை அங்கிருந்து அகற்ற உத்தரவிட்டது. இதையடுத்து அடையாறில் சிவாஜிக்குக் கட்டப்பட்டுவரும் மணிமண்டபத்தில் அதை வைக்கப்போவதாகத் தெரிவித்த அரசு மணிமண்டப பணிகள் முடியும் வரைகால அவகாசம் கேட்டுப்பெற்றது.
இந்த நிலையில் அகற்றப்படும் சிலையை அதே பகுதியில் பொதுமக்கள் பார்வையில் படும் ஓரிடத்தில் வைக்க உத்தரவிடும்படி நீதிமன்றத்தில் மனு செய்தேன். விசாரணையில் சிலையை மணிமண்டபத்தில் வைக்கும் முந்தைய தீர்ப்பை உறுதி செய்துள்ளது நீதிமன்றம்” என்றவர் சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு பேசினார்.
“தமிழகத்தில் சிலை வைக்கும் கலாசாரம் நீண்டகால வழக்கம். எம்.ஜி.ஆர் ,அண்ணா. காமராஜர், இன்னும் பல தேசியத் தலைவர்களை கவுரவிக்கும் விதமாக தமிழகம் முழுவதும் இவர்களுக்குச் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. சிவாஜிக்கு ஒரே ஒரு சிலை சென்னையில் மட்டும்தான் உள்ளது. ஆனால் அந்த ஒரு சிலையையும் அகற்ற நடக்கும் முயற்சிகள் வேதனையைத் தருகிறது.
கடந்த பத்து வருடங்களில் அந்த சிலையால் எந்த விபத்துகளும் ஏற்பட்டதில்லை என்றாலும் நீதிமன்ற உத்தரவுக்கு மதிப்பளித்தோம். ஆனால் பொது இடத்திலிருந்து அகற்றுகிற சிலையைத் திரும்பவும் வேறொரு பொது இடத்தில் வைப்பதுதானே நடிப்புக்கு இலக்கமான ஒரு கலைஞனுக்குச் செய்கிற மரியாதை?!... அரசு அதை மணிமண்டபத்தில் வைப்பதாக முடிவெடுத்துள்ளது. மணிமண்டபம் என்பது ரசிகர்கள் மட்டுமே வந்துசெல்லும் இடம். அங்கு வைப்பது சிவாஜிக்குக் கவுரவம் செய்வதாக இருக்காது.
மணிமண்டபத்தில் வைக்க அரசுக்கு வேறொரு சிலை கிடைக்காதா..தமிழகத்தில் பிறந்து நடிப்பில் உலகளாவிய புகழ்பெற்ற ஒரு கலைஞனுக்கு அவன் பிறந்தமாநிலத்தில் சிலைவைக்க வேண்டுகோள் வைப்பது என்பதே வெட்கக்கேடானது. தன் மூத்த கலைஞனுக்கு இழைக்கப்படும் அவமரியாதையை நடிகர் சங்கம் வேண்டுமென்றே கண்டும் காணாமலும் இருக்கிறது.
எம்.ஜி.ஆர் - சிவாஜி காலத்தில் நடிகர் சங்கத்தில் அரசியலோ மதமோ மற்ற எந்தப்பிரச்னையும் இருந்ததில்லை. சிவாஜி அமெரிக்க அரசின் அழைப்பில் அமெரிக்கா சென்று வந்ததற்கு விமானநிலையத்திலிருந்து மாலை மரியாதையோடு அழைத்துவந்து நடிகர் சங்கம் சார்பாக பாராட்டுக்கூட்டம் நடத்தியவர் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர் பாரத் விருது பெற்றதற்காக அதேநடிகர் சங்கம் சார்பாக மிகப்பெரிய பாராட்டுவிழா நடத்தியவர் சிவாஜி. இப்படி அன்றைக்கு கட்சிமாச்சர்யங்களின்றி நடிகர் சங்கம் இயங்கியது. ஆனால் இன்று அரசியல் கட்சியின் கிளை போல் சங்கத்தை ஆக்கிவிட்டனர். ஆளும் அரசை துதிபாடி ஆதாயம் பெறுவதுதான் சங்கத்தின் முதன்மைப் பணி என்றாகிவிட்டது. நடிகர்கள் ஆளுக்கொரு அரசியல் கட்சியில் இருப்பதால் சங்கத்தை தங்களின் அரசியல் நடவடிக்கைக்குப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். அதிமுகவின் 3 அணிகளில் எதை ஆதரிப்பது என்பதுதான் இப்போதைக்கு அவர்களின் ஆகப்பெரிய கவலை. அதனால் அவர்களுக்குத் தங்கள் முன்னோடிகளைப்பற்றிய அக்கறை துளியும் இல்லை. தமிழகத்தின் கலை அடையாளமான ஒரு கலைஞனின் சிலை விவகாரத்தில் இன்றுவரை அவரது ரசிகர்களாகிய நாங்கள்தான் சட்டப்போராட்டம் நடத்திவருகிறோம். இது அரசும் நடிகர்சங்கமும் வெட்கப்படவேண்டிய விஷயம்.
முதலில் இந்த சங்கத்தின் பெயரே முரணானது. அன்றைக்குச் சென்னையை மையமாகக் கொண்டு எல்லா மொழிப்படங்களும் தயாரானபோது தென்னிந்திய நடிகர் சங்கம் உருவாக்கப்பட்டது. ஆனால் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிந்தபின் தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிப்படங்கள் தனித்தனியே தயாரிக்கப்படத்துவங்கி மொழியின் அடிப்படையில் அந்தந்த மாநிலங்களில் தனித்தனியே நடிகர் சங்கங்களை உருவாக்கிக்கொண்டுவிட்டனர். அவை தங்கள் மொழித்தனித்துவத்துடன் இன்றளவும் இயங்கிவருகிறது. ஆனால் தமிழகத்தில் இன்றும் அபத்தமாக தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரில் தொடர்கிறார்கள். மலையாளத்தில் யாத்ரா மொழி என்ற படத்தில் சிவாஜி நடிக்கப்போனபோது, மலையாள நடிகர் சங்கமான 'அம்மா,' சிவாஜி, தங்கள் சங்கத்தில் உறுப்பினராகவில்லையென்றால் நடிக்க அனுமதிக்கமாட்டோம் என பிரச்னை கிளப்பினர். இத்தனைக்கும் படத்தில் கெஸ்ட் ரோல் தான் சிவாஜிக்கு. இப்படி மற்ற மாநிலங்களில் தனித்துவத்துடன் நடிகர் சங்கங்கள் செயல்பட்டுவருகின்றன.
ஆனால், தமிழகத்தில் தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரில் முரணான பெயரில் செயல்படுகிறது. அப்படித் தமிழ் நடிகர் சங்கமாக இருந்திருந்தால் சிவாஜி சிலைக்கு இந்த நிலை நேர்ந்திருக்காது. தலைமைப் பொறுப்பில் இருக்கும் தமிழர், சிவாஜியின் மதிப்பை உணர்ந்து அவருக்குக் கவுரவம் கிடைக்க பாடுபட்டிருப்பார். ஆனால் சிவாஜி, எம்.ஜி.ஆரால் அரும்பாடுபட்டு உருவாக்கிய சங்கத்தில் எந்த சிரமுமின்றி வந்து உட்கார்ந்துகொண்டவர்களுக்கு சிவாஜியைப்பற்றி நினைக்கவோ அவர்களின் பிரச்னைக்குக் குரல் கொடுக்கவோ நேரமில்லை.
ஆந்திராவில் என்.டி.ஆர் ஓர் அரசியல் கட்சியைச் சேர்ந்தவரானாலும் அவருக்கான மரியாதையை அந்த மாநில அரசும் மக்களும் தரத்தவறவில்லை. கர்நாடகாவிலும் ராஜ்குமாருக்கு மணிமண்டபம் கட்ட அத்தனை அரசியல் கட்சிகளும் நடிகர்களும் ஒருங்கிணைந்து குரல் கொடுத்தனர். அங்கு யாருக்கும் ராஜ்குமார் சிலையை அகற்றச் சொல்ல துணிச்சல் வரவில்லை. ஆனால் தமிழகத்தில் மட்டும்தான் கலைஞர்களை அரசியலோடு பொருத்திப்பார்க்கிற அவலம் இருக்கிறது.
உடனே சில அறிவாளிகள் சிவாஜி நடித்துசம்பாதித்தாரே அவரது பிள்ளைகள் தங்கள் சொந்த செலவில் சிலை அமைக்கலாமே என்கிறார்கள்...விளையாட்டு மற்றும் மற்ற துறைகளில் பணியாற்றியவர்களும் அதன்மூலம் வருமானம் ஈட்டுகிறார்கள். தேசத்திற்கு தேடித்தரும் புகழுக்காக அவர்களுக்கு விருது கொடுத்தும், சிலை அமைத்தும் கவுரவிப்பார்கள். அதுபோலத்தானே இது. இந்த சிறுவிஷயத்தைக் கூட உணராமல், பேசுகிறார்கள்; சிலையை அகற்றக் கோரிக்கை வைக்கிறார்கள். காலம் முழுவதும் தன் நடிப்பாற்றலால் தமிழகத்திற்கு புகழ்சேர்த்த ஒருவரின் சிலை விவகாரத்தில் ஆயிரத்தெட்டு பிரச்னைகளை எழுப்புகிறார்கள். இதற்கு ஆதரவாக குரல் கொடுக்கவும் யாரும் முன்வராதது சோகம்.
இப்போதும் நாங்கள் சிலையை அகற்றாதீர்கள் என்றெல்லாம் சவால் விடவில்லை. எடுக்கிற சிலையை மீண்டும் அதே இடத்தில் எங்கேயாவது வையுங்கள் என்றுதான் கேட்கிறோம். கோயம்பேட்டில் அம்பேத்கர் சிலை, கத்திபாரா நேரு சிலை, ஆலந்துார் அண்ணா சிலை ஆகியவை மெட்ரோ பாலத்திற்காக அப்புறப்படுத்தப்பட்டு அதே இடத்தில் போக்குவரத்துக்கு இடையூறின்றி அமைக்கப்பட்டது. அதைப்போலவே இந்த சிவாஜி சிலையை மக்கள் பார்வை படும் இடத்தில் வைக்கக் கோருகிறோம். சிவாஜி தன் காலம் முழுவதும் சாதி மத அடையாளங்களுமின்றி ஒரு கலைஞனாக மட்டுமே இருந்தவர். ஒருவேளை அதுதான் அவரது பலகீனமோ என்று இப்போது நினைக்கிறோம்.
தன் சமூகத்தைச் சார்ந்த ஒரு தலைவர் அரசியலில் பேரும்புகழோடும் இருந்தபோதும் சிவாஜி அவருக்கு நேர் எதிராக அரசியல் செய்த காமராஜரின் புகழை வளர்க்க இறுதிக்காலம் வரை பாடுபட்டார். அந்தக்கட்சியின் வளர்ச்சிக்குத் தன் உடல், பொருள், ஆவி அத்தனையும் செலவிட்டார். அப்படிப்பட்ட நேர்மையாக வாழ்ந்து மறைந்த கலைஞனுக்கு அரசும் நடிகர் சங்கமும் செய்கிற கவுரவம் இதுதானா...கலைஞனையும் கலையையும் புறக்கணிக்கிற ஒரு சமூகம் முன்னேற்றமடையாது என்பதை அரசு உணரவேண்டும்.” என்று வேதனையான குரலில் சொல்லிமுடித்தார் கே. சந்திரசேகரன்.
காலம் முழுவதும் தன் நடிப்பாற்றலினால் தமிழர்களை மகிழ்வித்த கலைஞனின் சிலையை மீண்டும் அதே இடத்தில் வைத்து கவுரவிப்போம்; மன்னிக்கவும் 'கவுரவம் பெறுவோம்!'
cinemavikatan
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
22nd July 2017, 08:49 AM
#9
Senior Member
Devoted Hubber
நடிகர்திலகம் சிவாஜி அவர்களின் 16 ஆம் ஆண்டு நினைவு நாள் –
By Cinema Pokkisham -
July 21, 2017
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 16-ம் ஆண்டு நினைவு நாள் நடிகர் சங்கம் மரியாதை.:—..
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களது 16- ஆண்டு நினைவு நாள்
21-7-2017 அன்று நடைபெற்றது. தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில், செயலாளர் விஷால், நடிகர் சங்கம் பொருளாளர் கார்த்தி,துணை தலைவர் பொன்வண்ணன் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஏ.எல்.உதயா,விக்னேஷ், எம். ஏ.பிரகாஷ், காஜாமொய்தீன்,பொது மேலாளர் பாலமுருகன் ஆகியோர் நடிகர் சங்க அலுவலகத்திலும்.,மெரினா கடற்கரையில் உள்ள நடிகர் திலகத்தின் சிலைக்கும் பிறகு
நடிகர் திலகத்தின் இல்லத்திற்க்குச் சென்றும் அவரது உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
சிவாஜி பேரவை சார்பில் அதன் தலைவர்
K . சந்திரசேகரன் தலைமையில் காலை 8 மணிக்கு
– சென்னை, மயிலாப்பூர், வடக்கு மாடவீதியிலுள்ள முதியோர் இல்லத்தில், நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில் அன்னதானமும்
காலை 9 .30 மணி க்கு.- சென்னை கடற்கரை காமராஜர் சாலையிலுள்ள நடிகர்திலகம் சிலைக்கு மாலை அணிவித்தும்
மரியாதை செலுத்தினர்கள்.
காலை 11 .00 மணிக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நடிகர்திலகம் சிவாஜி திருவுருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்கள்.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
22nd July 2017, 08:57 AM
#10
Senior Member
Devoted Hubber
Shankar Muthuswamy
சிவாஜியின் பன்முகங்கள்:
அண்ணன் தங்கை பாசத்திற்கு ஒரு பாசமலர்.......
சகோதர பாசத்திற்கு ஒரு பழனி...........
நேசத்திற்கு ஒரு பார்த்தால் பசி தீரும்.........
மாறுபட்ட நடிப்பிற்கு ஒரு நவராத்திரி......
வீரத்திற்கு ஒரு வீரபாண்டிய கட்டபொம்மன்........
பண்புக்கு ஒரு பாபு..............
நகைச்சுவைக்கு ஒரு சபாஷ் மீனா...........
வில்லன் நடிப்பிற்கு ஒரு திரும்பிப்பார்.......
தேச துரோகத்திற்கு ஒரு அந்தநாள்...........
தேசபக்திக்கு ஒரு ரத்த திலகம்.............
நேச ஒருமைப்பாட்டுக்கு ஒரு பாரதவிலாஸ்..........
மர்மத்திற்கு ஒரு புதிய பறவை...........
சந்தேக கணவனுக்கு ஒரு தெய்வ பிறவி.......
மித்ர துரோகத்திற்கு ஒரு ஆலயமணி.......
வெறுக்கவைக்கும் நடிப்புக்கு ஒரு கூண்டுக்கிளி......
ஆன்மீகத்திற்கு ஒரு ஆண்டவன் கட்டளை..........
நாதீகதிர்க்கு ஒரு மனிதனும் தெய்வமாகலாம்.........
கருணைக்கு ஒரு ஞானஒளி...........
தியாகத்திற்கு ஒரு அவன்தான் மனிதன்............
ஏழ்மைக்கு ஒரு நான் பெற்ற செல்வம்..........
செல்வசெழுமைக்கு ஒரு மோட்டார் சுந்தரம்பிள்ளை.............
கம்பீரத்திற்கு ஒரு கெளரவம்...........
குதூகல கொண்டாட்டத்திற்கு ஒரு கலாட்டா கல்யாணம்.......
பொறுப்புள்ள தந்தைக்கு ஒரு வியட்நாம்வீடு..........
கடமைக்கு ஒரு தங்கபதக்கம்........
நேர்மைக்கு ஒரு உயர்ந்த மனிதன்............
உழைபிற்கு ஒரு எங்க ஊர் ராஜா........
நட்புக்கு ஒரு கர்ணன்.............
இளமை காதலுக்கு ஒரு வசந்த மாளிகை...........
முதுமை காதலுக்கு ஒரு முதல் மரியாதை.......
வெகுளிதனதிர்க்கு ஒரு படிக்காத மேதை..........
அப்பாவிதனதிற்கு ஒரு ராமன் எத்தனை ராமனடி............
நடனத்திற்கு ஒரு பாட்டும் பரதமும்..............
நளினதிர்க்கு ஒரு உத்தம புத்திரன்..........
குடும்ப நல்லினதிர்க்கு ஒரு பாகபிரிவினை..............
மத நல்லினதிர்க்கு ஒரு பாவமன்னிப்பு.............
ராஜநடைக்கு ஒரு ராஜராஜ சோழன்............
சிங்க நடைக்கு ஒரு திருவருட்செல்வர்..............
ஜூலிஅஸ் சீசருக்கு ஒரு சொர்க்கம்............
ஒதல்லோவிர்க்கு ஒரு ரத்தத்திலகம்..............
சாம்ராட் அசோகனுக்கு ஒரு அன்னையின் ஆணை...........
பாரதியாருக்கு ஒரு கைகொடுத்த தெய்வம்..............
சிதம்பரனாருக்கு ஒரு கப்பலோட்டிய தமிழன்............
விகடதிற்கு ஒரு தெனாலிராமன்............
வாஞ்சிநாதனுக்கு ஒரு சினிமாபைத்தியம்................
பாதிரியாருக்கு ஒரு வெள்ளை ரோஜா...........
சமுதாய கொடுமைகளை சாடும் இளைகனாக ஒரு பராசக்தி..........
மாவட்ட ஆட்சியாராக ஒரு அவன் ஒரு சரித்திரம்.............
இன்னும்பல.................
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
Bookmarks