Page 334 of 402 FirstFirst ... 234284324332333334335336344384 ... LastLast
Results 3,331 to 3,340 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #3331
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    From 20.3.2020 to 20.4.2020
    Sunlfe
    Murasu
    Jaya
    Mega
    Vasanth TV channels.
    MGR's 62. MOVIES TELECASTED.
    1. Adimaipenn
    2. Namnadu
    3. Mattukkaravelan
    4. En Annan
    5. Thedi vantha mappillai
    6. Engal thangam
    7. Kumarikottam.
    8. Rikshakaran
    9. Neerum neruppum.
    10.oru thai makkal.
    11.sange muzhanku.
    12.Nalla neram
    13.Raman thediya seethai
    14.Naan yen PIRANTHEN.
    15.Idhaya veenai
    16.ulagam sutrum valiban
    17.pattikattu ponniah
    18.urimai kural
    19.Ninaiththai mudippavan
    20.Naalai namadhe.
    21.Idhayakani
    22.Pallandu VAZHGA.
    23.Neethikku thalai vananku.
    24.uzhaikkum karangal
    25.oorukku uzhaippavan.
    26.Navarathinam.
    27.kadhal vaganam
    28.kanavan
    29.Puthiya bhoomi
    30.kannan en kadhalan
    31.Ther tiruvizha
    32.kudiyiruntha koil
    33.Ragasiya police 115
    34.vivasayi
    35.kavalkaran
    36.Arasakattalai
    37.Thaikku thalaimagan
    38.Petralthan pillaya
    39.Thanipiravi
    40.Chandrothayam
    41. Mugarasi
    42. Naan anayittal
    43.Anbe vaa
    44.Enga veettu pillai
    45.Ayirathil oruvan
    46. Kalangarai vilakkam
    47. Kannithai
    48. Thazhampoo
    49. Thayin madiyil
    50. Padakoti
    51.Thozhilali
    52.Deiva thai
    53.panakkara kudumbam
    54.vettaikaran
    55.Dharmam thalai kakkum
    56.Periya idathu penn
    57.Neethikku pinpasam
    58.Thayaikathathanayan
    59.Tirudathe
    60.Thai solla thattathe
    61. NALLAVAN VAZHVAN
    62.qulebagavali
    63 anandha jothi
    64 koduthu vaithaval
    65 vikramathithan
    Mannadhi mannan
    Alibabavum 40 tirudargalum
    Nadodimannan
    Mahadevi

    Total 69 movies.


    Thanks to MR.Vinod, Bangalore
    Last edited by ravichandrran; 20th April 2020 at 08:03 PM.

  2. Thanks orodizli thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #3332
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம்ஜிஆர் எனும் எழுத்து மீது மை சிந்தினாலே தாங்க மாட்டார்கள் எம்ஜிஆர் பக்தர்கள் இப்படி பட்ட பக்தர்கள் கோடிகணக்கில் அன்றும் இன்றும் இருப்பதால் தான் எம்ஜிஆர் ஒரு தனிப்பிறவி , அபூர்வப்பிறவி, பேரற்புதப்பிறவி...........என்பது... Thanks.........

  5. #3333
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இந்த உலகத்தில் நம் புரட்சிதலைவருக்கு போல உண்மை ரசிகர்கள் வேறு எந்த நடிகருக்கும் இல்லை.

    அவரின் வரலாற்று வெற்றிகளுக்கு அன்று முதல் இன்றுவரை அவரின் தடம் மாறாத ரசிகர்களே காரணம்.

    இன்று அளவும் அவர் புகழ் நிலைத்து நிற்க தலைவரின் நல்ல பண்புகளும் அவரின் தன்னலம் அற்ற செயல்களும் அவருக்காக எதையும் இழக்க துணிந்த ரசிகர்கள் காரணம் ..

    எம்ஜியார் ரசிகர்கள் என்று தலை நிமிர்ந்து சொல்லுவோம்.

    வாழ்க எம்ஜியார் புகழ். வாழ்க அவர் ரசிகர்கள்
    நன்றி...தொடரும்..
    உங்களில் ஒருவன் நெல்லை மணி....

    இன்றைய செய்தி.

    மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.. அவர்கள் எப்பவும் உபயோகிக்கும் ஹார்மோனிய பெட்டி இசை கருவியை அவருக்கு பரிசாக அளித்தவர் நம் புரட்சிதலைவர் என்பது இதுவரை அறியாத புதிய செய்தி ஆக இருக்க கடவது...நன்றி

    ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு...No man can serve to his masters.... என்று...அதாவது ஒரு மனிதன் இரண்டு துறைகளில் பிரபலம் ஆவது நடக்காத செயல் என்று பொருள்.

    ஆனால் சினிமா அரசியல் இரு துறைகளிலும் அவர் வெற்றி அடைய அவரின் உழைப்பும் உண்மை தன்மையும் அவரின் ரசிகர்களின் உழைப்பும் , அதோடு இறைவன் அருட்பார்வையும்
    இந்த பழமொழியை தகர்த்து எறிந்தது வரலாறு............ Thanks.........

  6. #3334
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1963 ம் வருடம் மக்கள் திலகத்திற்கு மொத்தம் 9 படங்கள் வெளியானது. அதில் 3 படங்கள்
    ஜனவரி,பிப்ரவரியில் வெளியானது. ஜனவரி 11ல் பணத்தோட்டம், பிப் 9 ல் கொடுத்து வைத்தவள், பிப் 22 ல்
    தர்மம் தலைகாக்கும் முதலானவை.
    இந்த மூன்று படங்களும் சென்னையில் 9 திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருந்த போது வெளியான விளம்பரம்தான் இது.. இந்த மூன்று படங்களுமே சென்னையில் எம்ஜிஆர் பிக்சர்ஸ் வெளியீடுகள்.

    ஒன்றன்பின் ஒன்றாக வந்தாலும் மூன்று படங்களுமே வெற்றிக்கொடி நாட்டின.
    பணத்தோட்டம் சென்னையில் 84 நாட்களும், கொடுத்து வைத்தவள் சென்னையில் 91 நாட்களும், தர்மம் தலைகாக்கும் சென்னையில் 70 நாட்களும் இலங்கையில் 100 நாட்களும் ஓடி.யது.

    எம்ஜிஆருக்கு ஒன்றன்பின் ஒன்றாக படங்கள் வந்தால் எந்தப்படமும் ஓடாது என்று கூறியவர்கள் வாயடைத்துப் போனார்கள். மாற்று நடிகர் படம் ஏதாவது ஒரு தியேட்டரில் 75 நாட்கள் ஓடினால் போதும் , ரசிகர்கள் ஒன்று கூடி படத்தை 100 நாட்கள் ஓட்டி முழுபக்க விளம்பரம் கொடுத்து விடுவார்கள்.
    அவர்கள் படம் 100 நாட்கள் பெறும் வசூலை எம்ஜிஆர் படங்கள் 5 வாரங்களிலே பெற்று விடும் என்பதே விநியோகஸ்தர்கள சொல்லும் உண்மை.

    ஒரு தியேட்டரில் 100 நாட்கள் ஓடிய படங்களை தவிர்த்து பார்த்தால் 100 நாட்கள் ஓடிய படங்கள் மிகசொற்பமே. எத்தனை நாட்கள் தியேட்டரில் படம் இருந்தது என்பது முக்கியமில்லை. அது எப்படி ஓடியது என்பதை உணர்ந்தால் படத்தின் வெற்றி புரிந்து விடும்......... Thanks SKR.,

  7. #3335
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அது தெரிந்தது தானே சகோ. புரட்சி நடிகர் படங்கள் இயற்கையான முறையில் ஓடிய விபரங்களை எல்லோரும் அறிவர். மாற்று நடிகர் படங்கள் 50 நாட்கள் ஓடி விட்டால் போதும். அதை எப்பாடுபட்டாவது டிக்கெட்டுகள் கிழித்தே 100 நாட்கள் ஓட்டுவதற்கு எதுவாக மவுண்ட் ரோட்டில் தியேட்டரேயே அவர்கள் வாங்கி ஓட்டியதே அனைவரும் அறிந்த ஒன்று தானே?!...... Thanks...

  8. #3336
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மக்களின் நேரடி தொடர்பாளர், மக்களின் நேசக்கரம், மக்களின் ஏழைப்பங்காளன், மக்களின் இதய தொடர்பாளர், மக்களின் பொறுப்பாளர், மக்களின் பற்றாளர், மக்களின் தேவையை புரிந்தவர், மக்களின் பசியைப் போக்க துடித்தவர், மக்களின் துன்பத்தை போக்க நினைத்தவர், மக்களின் கண்ணீர் துடைக்க வந்தவர், மக்களின் எண்ணத்தை புரிந்தவர், மக்களின் பொறுப்பாளர், மக்களின் தேவையை அரிந்தவர், மக்களுக்காக வாழ்ந்தவர், மக்களுக்காக வாழ்ந்து கொண்டிருப்பவர், மக்களுக்காக வருபவர், மக்களோடு மக்களாக வாழ துடிப்பவர், மக்களுக்காக சேவை செய்தவர், சதா மக்களை நினைப்பவர், மக்களோடு மக்களாக உறைந்துச் செல்பவர், மக்கள்திலகம் ஆனவர், மக்கள் என்ற சொல்லுக்குச் சொந்தமானவர், உலகையே காக்க துடிப்பவர், மக்கள் திலகம் என்று போற்றப்பட்டவர், புரட்சித் தலைவர் என்று போற்றப்பட்டவர்.... நம் குலதெய்வம் ஆனவர், முற்றுப்புள்ளி அற்றவர், நம்மோடு எப்போதும் பயணம் செய்பவர், நாம் வாழும் வாழ்க்கைக்கு அழகு சேர்த்தவர், நாம் வாழும் வாழ்க்கையை கற்றுக் கொடுத்தவர், நம்மை புரிந்து கொண்டவர், நம்மை தெரிந்து கொண்டவர், நம்மில் கலந்தவர், இவையெல்லாம் தற்போது வரை நடந்தவை........... Thanks.........

  9. #3337
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    வரலாற்றில் 15 நவம்பர் 1983 முதல்வர் #எம்ஜிஆர். சட்டமன்ற விவாத்தில் அளித்த பதில்..

    பழ.நெடுமாறன் 1000 பேருடன் யாழ்ப்பாணம் செல்லும் போராட்டம் அறிவித்த நிலையில் உரிய நாள் வந்ததும், ராமேஸ்வரத்தில் இருந்து அனைத்து படகுகளும் அப்புறப்படுத்தப்பட்டன.

    இதுகுறித்து எழுந்த விமர்சனத்துக்குச் சட்டப்பேரவையில் 15 நவம்பர் 1983 அன்று முதல்வர் எம்.ஜி.ஆர். அளித்த பதிலில்..

    "நெடுமாறன் படகில் அங்கே போய், இடையில் யாராவது சுட்டால் அவரிடம் துப்பாக்கி இருக்கிறதா? தடுப்புக் கருவிதான் இருக்கிறதா?

    ஒன்றும் இல்லை; மனத்துணிவுதான் இருக்கிறது.

    அங்கே போய் ஆபத்து ஏற்பட்டால் என்ன செய்வது?

    அதனால்தான் படகுகள் இல்லாமல் செய்தோம்... நான் போய் பிரசாரம் செய்யமுடியாது; நெடுமாறன் செய்கிறார்;

    ஆட்கள் வருகிறார்கள்; பத்திரிகைகளில் செய்தி வருகிறது;

    வரட்டும். அது, அந்த நாட்டுக்கு நல்லதாக அமையட்டும்.

    உணர்வுகள் பெருகுமானால் பெருகட்டும் என்பதற்காகவே அவரைக் கைது செய்யாமல் விட்டோம்"

    நன்றி துரை வேலுமணி.......... Thanks...

  10. #3338
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    டைரக்டர் K சங்கர் இயக்கத்தில்,ஒரே சமயத்தில், சிவாஜி கணேசன் நடித்த ஆலயமணியும், தலைவர் நடித்த பணத்தோட்டம்,படப்பிடிப்பும் நடைபெறுகின்ற சூழல் ஏற்பட்டது.

    காலை7 மணியில் இருந்து 1 மணி வரை ஆலயமணி படப்பிடிப்பு, மதியம் 2 மணியில் இருந்து இரவு 9, மணிவரை பணத்தோட்டம் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது,
    ஒரு நாள் காலை ஆலயமணியின் படப்பிடிப்பை முடித்துவிட்டு மதியம் 2 மணிக்கு பணத்தோட்டம் படப்பிடிப்பிற்கு வந்த K சங்கர் அவர்கள்,படப்பிடிப்பை ஆரம்பித்தார், எம் ஜி ஆர் நடிக்க ஆரம்பித்தார், ஏனோ தலைவர் நடித்த நடிப்பில் இயக்குனர் சங்கருக்கு திருப்தியில்லை, டேக் 1,2,3, என்று 5 டேக்குகள் போய்க்கொண்டு இருந்தது,சாதாரணமாக தலைவர் படத்தில் ரெண்டாவது டேக்குக்கு மேல் எடுக்க எந்த டைரக்டரும் துணிய மாட்டார்கள், பெரும்பாலும் முதல் டேக்கே ஓகே ஆகி விடும்,அபூர்வமாக ரெண்டாவது டேக் அமையும். மூன்றாவது நான்காவது டேக் என்பதெல்லாம் எம் ஜி ஆர் அவர்களின் படங்களை பொறுத்த வரை நடந்ததே இல்லை, அப்படி இருக்க இவர் 5 டேக் எடுத்தும் திருப்தி அடையாத நிலையில் ஒன்ஸ் மோர் என இயக்குனர் கேட்க சுற்றி உள்ள அனைவரும் இயக்குனர் கே சங்கரையும் எம் ஜி ஆர் அவர்களையும் மாறி மாறி பார்க்க, புரட்சி தலைவர் புன்சிரிப்புடன் இயக்குனர் சங்கரை அழைத்து அவர் தோளில் கை போட்டு செட்டிற்கு வெளியே கூட்டி சென்று, என்ன பா காலையில் ஆலயமணி படப்பிடிப்பு நல்லபடியாக நடந்ததா?, என்று கேட்டவாறே, ஒரு முக்கியமான விஷயம் சொல்றேன் கேட்டுக்குங்க சங்கர், காலையில் அவர் கிட்ட எதிர்ப்பார்த்த நடிப்பெல்லாம் என்கிட்ட எதிர்ப்பார்த்தீங்கன்னா, கண்டிப்பா கிடைக்காது, அது மாதிரி சீன் எடுக்கணும்னு நீங்க நெனச்சீங்கன்னா இன்னிக்கு முழுக்க நீங்க எடுத்துட்டு இருக்க வேண்டியது தான், ஏன்னா நடிப்பில் என் பாணி வேறு,அவர் பாணி வேறு, முதல்ல அத புரிஞ்சுக்குங்க என்றார்.

    எம் ஜி ஆரின் பலமே தான் யார் என்பதை அவர் சரியாக உணர்ந்திருந்தது தான் பல நுணுக்கங்களை சரியாக புரிந்து கொண்டு அவர் கையாளும் விதமே அலாதி. அன்று அவர் மனம் விட்டு பேசிய பிறகு தான் நான் செய்த தவறே எனக்கு புரிந்தது, அன்று அவர் கொடுத்த அதிர்ச்சி வைத்தியத்தில் தான் அடுத்தடுத்து எம் ஜி ஆரை வைத்து நான் எடுத்த படங்கள் வெற்றி அடைய காரணம் என்றுK சங்கர் அவர்கள் ஒரு பேட்டியில் கூறி இருந்தார்.

    அதனால்தானோ என்னவோ,
    தலைவரின் இரண்டாவது வெற்றித் தயாரிப்பான,
    அடிமைப்பெண் படத்தை
    டைரக்டர் சங்கரே இயக்கினார்---!
    படம் பிரமாண்ட வெற்றியைப் பதிவு செய்தது--!
    அந்தப் படத்தில் இடம்பெற்ற
    சூப்பர் பாடல் இது---!........... Thanks...

  11. #3339
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    வள்ளுவரும் வள்ளல் எம்ஜிஆரும் :::

    அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
    பகவன் முதற்றே உலகு.

    எழுத்துக்களுக்கெல்லாம் அகரமே முதலானது. அதைப்போல ஆதிபகவன் என்னும் தெய்வமே உயிர்களின் முதலானது என்று இதற்குப் பொருள் கொள்ளலாம்.

    ஆனால் அறிஞர்களின் சிலரின் கருத்துப்படி. திருவள்ளுவரின் தாய் ஆதி என்றும் , பகவான் என்பவர் அவருடைய தந்தை என்றும் சொல்லப்படுகிறது. இதன்படி பார்த்தால் தாயும் தந்தையுமே உலகத்தில் உயிர்களுக்கும் முதல் என்றும் பொருள் ஆகிறது. வாழும் மனிதர் ஒவ்வொருவரும் இதை ஒப்புக் கொள்ளத்தானே வேண்டும் ?

    புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தன் தாய் திருமதி சத்தியபாமாவை தெய்வத்துக்கு நிகராகவே வைத்திருந்தார் என்பது உலகறிந்த உண்மை. தான் வாழ்ந்து வந்த ராமாவரம் தோட்டத்தில் தன் தாய்க்கு ஒரு கோயிலே கட்டியிருந்தார் அந்த உத்தம மகன். ஒவ்வொரு நாளும் அவர் வெளியில் செல்லும்போதும் கார் ஒரு நிமிடம் அந்தக் கோயிலின் முன் நிற்கும். வலதுபக்கம் திரும்பி தன் தாயின் திருவுருவத்தை அவர் வணங்கிய பிறகே கார் முன்னோக்கி நகரும்.

    எந்த ஒரு செயலையும் செய்ய ஆரம்பிக்கும் போதும் தாயே துணை என்று சொல்வார் . அதைப்போலவே எதையாவது எழுதும்போதும் தாயே துணை என்று காகிதத்தின் மேலே எழுதுவார். உலகம் போற்றும் சத்துணவுத் திட்டத்தை ஆரம்பிக்கும்போது அதன் தொடர்பான முன் குறிப்புகளை எழுதும்போது ஒவ்வொரு பக்கத்தின் மீதும் தாயே துணை என்று தமிழ்நாட்டு முதல்வர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் எழுதிய முப்பத்தாறு குறிப்புகள் உலகப் பிரசித்தி பெற்றவை.

    நினைவழியா இரண்டரை வயதில் இறந்து விட்ட தந்தையாரின் திருவுருவப் படத்தையும் பூஜை அறையில் தாயின் படத்தோடு வைத்து வணங்கினார்.

    தாயையும் தந்தையையும் சேர்த்து வணங்கியதால் தான் அவர் மக்களின் தலைவராக உயர்ந்தார். மற்றவர்களுக்கும் அவருடைய முக்கியமான அறிவுரை, தாயைப் பெருமைபடுத்துங்கள். தாயின் வயிறு எரியாமலும் தனது செய்கையால் தாயின் மனம் புண்படாமல் இருக்கும்படி நடந்து கொள்வது தான் ஒரு மகனுடைய மிகப்பெரிய கடமையாகும் என்பது தான்.

    அதனால்தான் தன் தாயை பற்றி ஒரே வரியில் சொன்னார். நான் காணாத கடவுளை விட காணும் கடவுளைத்தான் கண்ணால் கண்ட என் தாயை தான் பெரிதும் மதிக்கிறேன்.

    மக்கள் திலகம் எம்ஜிஆர் புகழ் வாழ்க... Thanks...

  12. #3340
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சி நடிகர் நடித்த "குலேபகாவலி",திருச்சி - பிரபாத் தியேட்டரில்1974 வரை ஓடிய படங்களில் அதிக நாட்கள் பெரும் வசூலுடன் 166 நாட்கள் சாதனை கண்டது புரட்சி நடிகர் நடித்த "குலேபகாவலி". 25 வாரங்கள் வெள்ளிவிழா கொண்டாடினால் போனஸ் தரவேண்டி எடுக்கப்பட்டது.இணைந்த 5 வாரங்கள் தொடர்ந்து ராக்சி தியேட்டரில் ஓடி 201 நாட்கள் ஓடியது. மிக பெரிய வசூல் சாதனை படைத்தது.........

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •