Page 190 of 210 FirstFirst ... 90140180188189190191192200 ... LastLast
Results 1,891 to 1,900 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #1891
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தாய்மையைப் போற்றிய மாமனிதர்

    தாய்மையைப் போற்றும் எம்.ஜி.ஆரின் குணத்தைப் பற்றி, எம்.ஜி.ஆருக்கு அம்மாவாக நடித்த எஸ்.என்.லட்சுமி பகிர்ந்து கொண்டவை.

    “எம்.ஜி.ஆர். அவர்களுக்கு எப்போதுமே என் மீது அளவு கடந்த அன்பும், பாசமும் உண்டு. படப்பிடிப்பிலோ அல்லது வேறு பொது நிகழ்ச்சிகளிலோ அவரைக் கண்டால் உடனே நான் எழுந்து நின்றுவிடுவேன். அவர் முன் உட்காரவே மாட்டேன்.

    இதைக் கண்டு பலமுறை அவர் என்னிடம் செல்லமாக கோபித்துக் கொண்டு, “நீங்க நின்னா நானும் நிப்பேன். நீங்க உட்கார்ந்தா தான் நானும் உட்காருவேன்” என்பார். பிறகு உட்கார்ந்து கொள்வேன்.

    ‘தொழிலாளி’ படத்தில் ஒரு முக்கியமான காட்சி. “அம்மா எனக்கு வேலை கிடைச்சிடிச்சு”ன்னு சொல்லிகிட்டே அந்த வேலைக்கான கடிதத்தை என்னிடம் கொடுத்து ஆசி பெறுவார். அப்போது சற்றும் எதிர்பாராமல் திடுதிப்பென்று என் கால்களை கட்டிக் கொண்டு உட்கார்ந்து விட்டார்.

    எனக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. “ஐயய்யோ எந்திரிங்க…” என்றேன்.

    உடனே ஸ்டில் போட்டோகிராபர் நாகராஜன்ராவை கூப்பிட்டு அந்தக் காட்சியை உடனே ஸ்டில் எடுக்கும்படி கூறினார்.

    படத்தில் இதுபோல் காலைக் கட்டிப்பிடித்து ஆசி பெறுவது போல் இருக்காது. என் அம்மாவிடம் ஆசி பெறுவதாக நினைத்து இதை செய்தேன் என்றார். அதை இன்று நினைத்தாலும் என் உடம்பெல்லாம் புல்லரிக்கிறது”.

    நன்றி: நடிகன் குரல் இதழ்...mj

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1892
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நவரத்தினம் படம் தோல்வின்னு கணேசன் ரசிகர்கள் பிதற்றுவார்கள். ஆனா, சாவித்திரிய காவு வாங்கின பிராப்தம் படம் நட்டம் இல்லை என்பார்கள். பேசும் படத்தில் 1976 வந்த செய்தி பாருங்க. நவரத்தினம் படத்தொடக்கவிழா நடக்கும் 8 நாளுக்குள் எல்லா ஏரியாவும் வித்துவிட்டது. ஏ.பி.நாகராஜனும் இதை பேட்டில சொல்லிருக்கார். பதிவோட இணைப்புல இருக்கு. நாகராஜனுக்கும் நட்டமில்லை. 100 நாள் ஓடாட்டியும் சென்னை,50 நாள் ஆசியாவின் பெரிய தியேட்டரில் மதுரை தங்கத்தில் 61 நாள், பல நகரங்களில் நன்றாக ஓடி நல்ல வசூல் பெற்றது. விவரம் அடுத்து பதிவில்....rrn...

  4. #1893
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நடிகப் பேரரசர் நண்பா.. பட்டிக்காடா பட்டணமா படத்துக்கு டிக்கட் எடுக்க மதுரயில அந்த பிள்ளை முரளி சீனிவாசன் பட்ட பாட்டை நீயும் படிச்சியா. நானும் சிரிச்சேன். இதில் ஒரு விசயம். கடைசியில அந்தாளுக்கும் அவரோட உற்வுப் பையனுக்கும் டிக்கட் கொடுத்தது நம்ம ஆளு ஒருத்தராம். எம்ஜிஆர் மாதிரியே எம்ஜிஆர் ரசிகனும் எப்பயும் குடுக்கற, ஆபத்துல அவசரத்துல காப்பாதுறவனாதான்யா இருப்பான். அப்பயும் டிக்கட்டுல கவுண்டர் பாயில் கிழிஞ்சி இருந்துச்சாம். அப்புறம் உள்ள போயிட்டாராம். கேட்டுல இருந்தவர் விட்டுட்டாரம். இதுல என்ன வேடிக்கயின்னா குரங்கு தன் குட்டிய விட்டு சூடு பாக்க சொன்னா மாதிரி முதல்ல இந்த ஆள இவரோட உறவுபையன் உள்ள விடறானா பாருன்னு டெஸ்ட் பண்ண அனுப்பிருக்காரு. இவரை உள்ள விட்டதும் அவரு வந்தாராம். பொய் டிக்கட்டுன்னா அடிவாங்கினா நான் மட்டும் வாங்கணுமா.. சுயநலமா இருக்கியே, நீயும் வா ந்னு சொல்லத்தெரியல. ஆனா, டிக்கட் கிழிஞ்சு இருந்ததைப் பாத்ததும் எம்ஜிஆர் ரசிகர் நம்மை போட்டுப் பாத்துட்டாரோன்னு நினைச்சாராம். சீ.. அற்பங்கள்....rrn

  5. #1894
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    "எம்.ஜி.ஆர். நிஜ வாழ்விலும் ஹீரோ தான்!"
    -இயக்குநர் எம்.ஏ.திருமுகம்

    அறுபதுகளில் வந்த தேவர் பிலிம்ஸ் படங்கள் என்றாலே அதில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும் சரோஜாதேவியும் நடித்திருப்பார்கள். நடிகவேள் எம்.ஆர்.ராதா வில்லனாக வருவார். கே.வி.மகாதேவன் இசையமைத்திருப்பார். கவியரசர் கண்ணதாசன் பாடல்களை எழுதியிருப்பார். தேவரின் இளைய தம்பியான எம்.ஏ. திருமுகம், படத்தை இயக்கியிருப்பார்.

    சிங்கம், புலி, யானை போன்ற விலங்குகளை வளர்ப்பதிலும், அவற்றுடன் பழகுவதிலும் சாண்டோ சின்னப்பா தேவருக்கு நேர் எதிரானவர் எம்.ஏ.திருமுகம். விலங்குகள் என்றால் அவருக்கு அவ்வளவு பயம்!

    ஒருமுறை வேட்டைக்காரன் (1964) படத்துக்காக சிங்கத்தை வைத்து வெளிப்புற படப்பிடிப்பு நடந்திருக்கிறது. பழகிய சிங்கம்தான் என்றாலும் கூண்டை விட்டு வெளியே வந்த பிறகு சிங்கத்தின் நடவடிக்கை எப்படியிருக்கும் என்பதை யாராலும் ஊகிக்க முடியாது.

    அந்தக் காட்சியில் எம்.ஜி.ஆர் வேறு நடிக்க இருந்தார். சாண்டோ சின்னப்பா தேவர் அன்று படப்பிடிப்புக்கு வரவில்லை. அவர் வெளியூர் சென்றிருந்தார். எனவே, முழுவிழிப்பு நிலையில் படக்குழு இருந்தது.

    சிங்கம் ஏதாவது கலாட்டா செய்தால், எடுத்த எடுப்பில் அதை கூண்டில் அடைத்து விட முடியாது. எனவே சிங்கத்தை வலையுடன் வளைத்துப் பிடிக்க, அதற்கென பயிற்சி பெற்ற தேவர் பிலிம்ஸ் குழு ஒன்று தயாராக இருந்தது. படப்பிடிப்பு நடந்த இடத்தில் கிணறு போன்ற பத்தடி பள்ளமும் தோண்டப்பட்டு இருந்தது.

    சிங்கம் ஏதாவது தகராறு செய்தால், வலையால் அதைச் சுற்றிவளைத்து முதல்வேலையாக அந்தப் பள்ளத்தில் தள்ளிவிட்டுவிடுவார்கள். சிங்கம் இயல்பு நிலைக்குத் திரும்பியபிறகு பள்ளத்தின் ஒருபகுதியை இடித்துத் தகர்த்து, சிங்கத்தைப் பிடித்து, மீண்டும் அதை கூண்டில் அடைப்பார்கள்.

    இப்போது படப்பிடிப்பு ஆரம்பமானது. இயக்குநர் எம்.ஏ.திருமுகம், ஒளிப்பதிவாளரின் அருகே நின்றார். ‘கேமரா ஸ்டார்ட், ரெடி’ என்று அவர் சொன்னதுதான் தாமதம், சிங்கம் திருமுகத்தை நோக்கிப் பாய்ந்தது.

    தேவர் பிலிம்ஸ் படங்களில் நடிக்கும் விலங்குகளில் எந்த விலங்கு குழப்பம் அடைந்தாலும் அது எம்.ஏ.திருமுகத்தை நோக்கித்தான் பாயும். அவரது ராசி அப்படி. அதனால் சிங்கம் தன்னை நோக்கி பாய்ந்து வந்தபோது திருமுகம் திரும்பி தலைதெறிக்க ஓட ஆரம்பித்தார்.

    ஓடிய திருமுகம் கால்தவறி அந்த பத்தடி பள்ளத்தில் விழுந்தார். (கால்தவறி விழுந்தாரா அல்லது பாதுகாப்பு கருதி பயத்தில் உள்ளே குதித்தாரா என்பது தெரியாது) ஆனால், கெடுவாய்ப்பாக சிங்கமும் அந்த பத்தடி பள்ளத்தில் குதித்து விட்டது.

    இப்போது சிங்கமும், திருமுகமும் ஒரே பள்ளத்தில் கிடக்க, திருமுகம் பயந்து அலற ஆரம்பித்தார். சிங்கத்தைப் பிடிக்க வேண்டிய தேவர் பிலிம்ஸ் ஆள்களோ, பள்ளத்தைச் சூழ்ந்து நின்று செய்வதறியாமல் கையைப் பிசைந்து கொண்டிருந்தார்கள்.

    அப்போது ஒருவர் துணிச்சலாக உள்ளே குதித்தார். குதித்தவர் சிங்கத்துக்கும், திருமுகத்துக்கும் நடுவில் அரண் போல நின்று கொண்டார். அப்படி குதித்த நபர் வேறு யாருமில்லை. எம்.ஜி.ஆரேதான்.

    எம்.ஜி.ஆரே உள்ளே குதித்துவிட்டார், அவருக்கு ஏதாவது ஆகிவிட்டால் சாண்டோ சின்னப்பா தேவருக்கு யார் பதில் சொல்வது என்ற பயத்தில் தேவர் பிலிம்ஸ் ஆள்கள் அத்தனைப் பேரும் இப்போது பொத்பொத்தென வலையுடன் பள்ளத்தில் குதித்தார்கள். வேறு வழியில்லாமல் சிங்கத்தை அவர்கள் மடக்கினார்கள்.

    ‘அண்ணன் எம்.ஜி.ஆர் வெறும் சினிமா கதாநாயகன் இல்லை. நிஜவாழ்விலும் அவர் ஹீரோதான்’ என்று இந்த நிகழ்ச்சியை பின்னாளில் நினைவுகூர்ந்தார் எம்.ஏ.திருமுகம்.

    நன்றி: மோகன ரூபன் முகநூல் பதிவு.........Pgd

  6. #1895
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆர் நினைவு இல்லம் என்பது தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை தியாகராய நகரில் உள்ள ஆற்காடு முதலித் தெருவில் அமைந்துள்ளது. இது மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் எம்ஜிஆரின் அலுவலகமாக இருந்த இடமாகும். அவருடைய இறப்பிற்குப் பிறகு நினைவிடமாக பராமரிப்பு செய்யப்பட்டு வருகிறது.

    டாக்டர் எம்.ஜி.ஆர் நினைவு இல்லம்

    எம்.ஜி.ஆரின் அம்பாசடர் கார்
    நினைவிடத்தின் அமைப்பு மற்றும் உள்ளவை தொகு
    இல்லத்தின் முன்புறம் டாக்டர் எம்.ஜி.ஆர் நினைவு இல்லம் எனும் அரைவட்ட வடிவிலான பெயர்ப் பலகை அமைக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆரின் மார்பளவு சிலையொன்று அழகிய சிறு மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இச்சிலைக்கு எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் மற்றும் நினைவுநாளில் எம்.ஜி.ஆர் ரசிகர்களும், அரசியல்வாதிகளும், கட்சி தலைவர்களும் மாலை அணிவிக்கின்றனர்.

    இங்கு எம்.ஜி.ஆர் பத்தாண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்திய tmx 4777 எண்ணுள்ள அம்பாசிடர் கார் வைக்கப்பட்டுள்ளது.

    எம்.ஜி.ஆர் இந்த இல்லத்தினை தனது அலுவலகமாக பயன்படுத்தி வந்தார். மேலும் எம்.ஜி.ஆருக்கு வழங்கப்பட்ட பரிசு பொருள்களும், அவர் பயன்படுத்திய பொருள்களும் இந்த இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளன.

    நினைவு இல்லத்தில் உள்ள நினைவுப் பொருள்கள் தொகு
    எம்.ஜி.ஆர் வளர்த்த ஆண் சிங்கம் ராஜா பாடம் செய்து பதப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது.
    எம்.ஜி.ஆர் படித்த நூல்கள்
    எம்.ஜி.ஆர் பயன்படுத்திய பொருள்கள்
    அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் முதன் முதலாக இணைந்த 12 பேரின் உறுப்பினர் படிவங்கள்.
    எம்.ஜி.ஆரின் அம்பாசிடர் கார்
    எம்.ஜி.ஆர் உபயோகித்த உடற்பயிற்சி கருவிகள்.
    துப்பாக்கி சூட்டினை அடுத்து அவர் கழுத்தில் இடப்பட்டிருந்த மாவுக் கட்டு போன்றவை நினைவு இல்லத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

    இந்தியா, இலங்கை, ரஷ்யா, அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், தென் ஆப்பிரிக்கா, பிரிட்டன், நார்வே, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் நாணயங்கள் உள்ளன

    நினைவு இல்லம் குறித்து எம்.ஜி.ஆர் உயில்====

    பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர் ஆகியோரது நினைவு இல்லங்கள் எல்லாம் தமிழக அரசின் செலவிலேயே ஏற்படுத்தப்பட்டன. அரசுக்கு இந்த செலவை தவிர்த்திட என்னுடைய வீட்டையே இந்த நினைவு இல்லமாக ஏற்பாடு செய்து இருக்கிறேன் என்று எம்.ஜி.ஆர் தான் அலுவலகமாக பயன்படுத்திய வீட்டினை நினைவில்லமாக மாற்றுமாறும், இந்த இல்லத்தின் பராமரிப்பு செலவுக்காகவும், காவல் காப்பது போன்றவைகளுக்காகவும் ஆலந்தூர் மார்க்கெட் கட்டிடங்களில் இருந்து வரும் வருமானத்தை பயன்படுத்திக்கொள்ளுமாறும் தன் உயிலில் குறிப்பிட்டுள்ளார்

    #சிவதாஸ்_கிருஷ்ணசாமி ...

    .........

  7. #1896
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    "எட்டு திக்கும் எம்ஜிஆர்
    திருநாமம் மணக்குது"
    **********************************
    'ஞாபகம் வருதே' தொடர்! 'சத்துணவால் பக்தனான கதை'....1-5 ம் வகுப்புவரை கோதுமை கஞ்சி மதிய வேளை ஊற்றுவார்கள். ஒரு கரண்டி கஞ்சிதான் கிடைக்கும். ஒரு துண்டு அச்சு வெல்லம் தருவார்கள். அலுமினிய தட்டு ஒன்றன்மீது ஒன்று அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். தண்ணீர் குடிக்க அலுமினிய டம்ளர் பயன்படுத்தினோம். வீட்டிலிருந்து உயரமான கண்ணாடி பாட்டிலில் தண்ணீர் குடிக்க கொண்டு வருவோம். புத்தகப்பை துணிப்பையாக இருக்கும். அல்லது வயர் பின்னல் பையாக இருக்கும். அதிசயமாக ஒரு பையன் சிறிய அலுமினிய பெட்டியில் புத்தகம் வைத்து எடுத்து வருவான். காலில் செருப்பு அணிந்ததில்லை. ஓரிரு பையன்களின். கால் சட்டை பின்பக்கம் கிழிந்திருக்கும். அதை ஓட்டக் கால்சட்டை என கிண்டலடிப்பார்கள். கசங்கிய சட்டையில் பட்டன்கள் பெரும்பாலும் இருக்காது. பட்டன்களுக்குப் பதிலாக ஊக்கு குத்தி இருக்கும். மதியம் சாப்பிட்ட கோதுமை கஞ்சி மாலை பள்ளிக்கூடம் முடியும் போது வயிறை பதம் பார்க்கும். புதிய புத்தகங்கள் டீச்சர் அடுக்கி வைத்து ஒவ்வொருவராக அழைத்து தருவார். புதிய புத்தகத்தை திறந்து அதை முகர்ந்து பார்ப்போம். அந்த வாசனை மனதை மகிழ்விக்கும். இடைவெளியிட்டு சில பக்கங்களில் மயில் முடி சொருகி வைத்து மறுநாள் அதை பல துண்டுகளாக்கி மயில் முடி குட்டிப் போட்டுள்ளதாக குழந்தைகளை ஏமாற்றி சிரித்து மகிழ்ந்தோம். புதிய பாடப்புத்தகத்தில் முதலமைச்சர் எம்ஜிஆர் புகைப்படம் கண்டு பரவசமானோம். அவர் அருகில் கல்வி அமைச்சர் அரங்கநாயகம் புகைப்படமும் இருந்தது. திடீரென ஒருநாள் ' நம்ம பள்ளிக்கூடத்துல நாளையிலேர்ந்து சத்துணவு போடப்போறாங்க'' என்ற செய்தி கேட்டு ஓடோடிச் சென்று அம்மாவிடம் சொல்லி மகிழ்ந்தோம். சத்துணவு பொருட்கள் கொண்டு வரும் லாரியைப் பார்த்ததும் ' டீச்சர் டீச்சர் சத்துணவு அரிசி லாரி வருது' என ஆர்ப்பரிப்போம். ஜன்னல் வழியாக வேடிக்கையும் பார்த்தோம். சத்துணவு கூடத்தை எட்டிப் பார்த்து அரிசி, காய்கறிகள், தகரத்திலான கேன்களில் எண்ணெய் என உணவுக் கூடத்தில் நடந்துள்ள மாற்றங்களை ரசித்தோம்.புதிய யூனிபார்ம், பல்பொடி, காலணிகள் தரப்பட்டன. ஆரம்ப வகுப்புகளில் ஒரு கரண்டி கோதுமை கஞ்சியையும் ஒரு துண்டு அச்சு வெல்லத்தையும் சாப்பிட்டுவிட்டு இன்னொரு கரண்டி கோதுமை கஞ்சி கிடைக்காதா என அலுமினிய தட்டில் ஒட்டியிருந்த மிச்சத்தை நக்கிய காலம் போய் வயிறு நிறைய சோறு தந்த.... 1977-82 க்குள் இந்த மாற்றத்தை தந்தவர் புரட்சித்தலைவர் என்பதை அறிந்தோம். வீடுகளில் உள்ள பானைகளில் அரிசி நிரம்பி இருந்ததை முதன்முதலாக பார்த்து உணர்ச்சி வயப்பட்டோம். கடைகளில் அரிசி மிகமிக குறைந்த விலையில் விற்கப்படுவதாக அம்மா முகம் மலர கூறியது கேட்டு ஆச்சர்யமானோம்.
    1984-85 இடைப்பட்ட காலத்தில் ' எம்ஜிஆர் இறந்துவிட்டார' என்றும்' இல்லை இல்லை எம்ஜிஆர் உயிருடன்தான் இருக்கிறார்' என்றும் வீடுகளில் தெருக்களில் கடைவீதிகளில் அரசியல் கட்சி மேடைகளில் என மக்கள் கூடும் இடங்களில் எல்லாம் விவாதிப்பதை உற்றுக் கவனித்தோம். டிவி பெட்டியில் வீடியோ சுமந்து வந்த வாகனங்கள் அமெரிக்க மருத்துவமனையில் 'எம்ஜிஆர் உயிர்த்தெழுந்திருந்ததைக்' காட்டியது. புரட்சித்தலைவர் மீது ஈர்ப்பு அதிகரித்தது. தியேட்டர்களில் 1980-85 கால புதிய படங்களைவிட மக்கள் திலகம் மறுவெளியீடு காவியங்கள் பட்டைய கிளப்பிக் கொண்டிருந்தன. தேர்தல் காலங்களில் ஊரில் நாலைந்து பேர் தவிர அனைத்தும் இரட்டை இலை வாக்குகள். எட்டுத் திக்கும் ' எம்ஜிஆர் எம்ஜிஆர்' என்ற புகழே படர்ந்திருந்தது. 1987 ல் எம்ஜிஆர் பக்தனாக மாறி இருந்தோம். இன்றோ எம்ஜிஆர் எம்ஜிஆர் என்றே இதயம் துடித்துக் கொண்டிருக்கிறது.

    என்றும் நம் கடவுள்
    எம்ஜிஆர்

    ��...arm

  8. #1897
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் எம் ஜி ஆர் படங்கள் மறு வெளியீடு தொடர்ச்சி.......
    ________
    சென்னை மூலக்கடை ஐயப்பாவில் இன்று முதல் (5/2/21) பல்லாண்டு வாழ்க
    தினசரி 3 காட்சிகள்

    தகவல் உதவி திரு. சங்கர், மணலி.


    திருச்சி பேலஸ் அரங்கில் நினைத்ததை முடி ப்பவன் 6/2/21 முதல் தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது.
    : தகவல் உதவி திரு. கிருஷ்ணன், திருச்சி

  9. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  10. #1898
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    சேலம் அலங்கா ர் அரங்கில் 5/2/21 முதல்
    மக்கள் திலகம் எம் ஜி ஆர் இரு வேடங்களில் அசத்திய எங்க வீட்டு பிள்ளை தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது

    தகவல் உதவி திரு ராஜா, நெல்லை.

  11. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  12. #1899
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இந்துமதக் கடவுள் எவராயிருந்தாலும்-
    கிருத்துவ மதத்தின் ஏசுவாக இருந்தாலும்-
    இஸ்லாமியர்களின் நபிகள் நாயகமாக இருந்தாலும்-
    உண்மையான பக்தனிடம்,,தாம் தாழ்ந்து அவனை உயர வைத்துப் பார்ப்பார்கள்!
    எம்.ஜி.ஆர்,,எவ்வளவோ ஏழைப் பாழைகளின் திருமணத்தை நடத்தி வைத்துள்ளார்!
    தன் லட்சியப் பிடிப்பில் அந்த எம்.ஜி.ஆருக்கே சவால் விட்ட ஒருவரின் திருமணம் தான் இன்றையப் பதிவு!
    அது எம்.ஜி.ஆரின் உழைக்கும் கரங்கள் பட ஷூட்டிங்!
    எம்.ஜி.ஆரின் காருக்கு முன்னால் அந்த ஏழை இளைஞர் விழுகிறார்?
    எம்.ஜி.ஆரின் கார் டிரைவர்,கொஞ்சம் அசந்திருந்தாலும் கார்,,அந்த ஏழை மீது ஏறியிருக்கும்?
    காரிலிருந்து இறங்கிய எம்.ஜி.ஆர்,,அந்த இளைஞரைக் கண்டிக்க-- அவர் சொல்கிறார்--
    போரூருக்குப் பக்கத்துல கிராமத்துல விவசாயம் பார்க்கறேங்க. ரெண்டு மூணு வருசமா எனக்குக் கண்ணாலம் கட்டி வைக்க எங்க சொந்தக்காரங்கப் பிடிவாதமா இருக்காங்க.
    என் தலைவன் நீ மாலை எடுத்துக் கொடுக்காம நான் கட்டிக்க மாட்டேன்னு சொல்லிட்டேங்க!
    நீங்க என்னிக்கு சொல்லறீங்களோ,,எந்த இடத்துல சொல்றீங்களோ அங்கே உங்க முன்னாடி தாலி கட்டறேங்க--
    அதெல்லாம் தப்பு! பெரியவங்கப் பார்த்து ஏற்பாடு பண்ணற விஷயம் தான் கல்யாணம்!
    நீ,,கல்யாணப் பத்திரிகையோட வா. நான் அவசியம் வந்து கல்யாணத்த நடத்தி வைக்கறேன்!!
    எம்.ஜி.ஆரின் இந்த வாக்குறுதியால் இரண்டு இறக்கைகள் இளைஞன் உடலில் ஒட்டிக் கொள்ள-ஆனந்தமாகப் பறந்து செல்கிறார் தன் கிராமத்துக்கு?
    அன்றைய அந்த முகூர்த்த நாள்--
    நெடு நேரம் பார்த்தும் எம்.ஜி.ஆர் வரவில்லை?
    உன் மனசு நோகக் கூடாதுன்னு அவர் வர்ரதா சொல்லியிருப்பாரு! நம்ம தகுதிக்கெல்லாம் அந்த மகராசன எதிர்ப்பார்க்கறது தப்பு!
    பெற்றோரின் சமாதானத்தை மீறி அந்த இளைஞர் சினக்கிறார்--
    இப்பவேப் போய் என் தலைவனைக் கேக்கறேன்--
    உன் தொண்டனா இருக்கறதை விடப் பெரிய தகுதியா என்னத்த எதிர்ப்பார்க்கறே நீ--
    உன் பக்தனை அவ்வளவு சாதாரணமாக நினைச்சுட்டியா? உன் பேரச் சொல்லற உன் பக்தனோட நீ உசத்தியாப் போய்ட்டியா?
    இப்பவே மதறாஸ் போய் என் தலைவன்ட்டே நியாயத்தக் கேக்கறேன்--
    வெறி பிடித்தது போல் முழங்கிவிட்டு,,கல்யாண உடையிலேயே சென்னையை நோக்கி ஓடுகிறார் அந்த இளைஞர்??
    சென்னை!
    இடம்--சத்யா ஸ்டூடியோ--
    தார்ப் பாய்ச்சுக் கட்டின வேட்டியோடும்,ஜிப்பாவோடும் படப்பிடிப்புக்கு தயார் ஆகும் எம்.ஜி.ஆர்,,மேக்கப்-பெட்டிக்குள் இருந்த அந்தத் திருமண அழைப்பிதழ் எம்.ஜி.ஆரைப் பார்த்துப் புன்னகைக்க--
    ஏக டென்ஷனாகிறார் எம்.ஜி.ஆர்??
    இந்தக் கல்யாணத்தை ஏன் எனக்கு நினைவுப்படுத்தலே??
    காரமாகக் கேட்டபடியே காரில் பாய்கிறார்?
    உடையை மாற்றக் கூட நேரமில்லை!
    அதே ஒப்பனை உடை--வேஷ்டி--ஜிப்பா?
    கடுகிப் பறந்த எம்.ஜி.ஆரின் கார் அந்த கிராமத்தை அடைய-- நெக்குருகி அவரை வரவேற்ற அந்த இளைஞரின் பெற்றோர் அழுகையோடு விபரத்தைக் கூற--
    எம்.ஜி.ஆர்,,தம் டிரைவரோடு இன்னும் இரண்டு பேர்களை அனுப்புகிறார் --
    சத்யா ஸ்டூடியோ அருகில்--
    கல்யாண உடையோடு உன் மத்தம் கொண்டு ஓடியபடி இருக்கும் அந்த இளைஞனைக் காரில் போட்டுக் கொண்டு வர--
    இனிதே நடைபெறுகிறது எம்.ஜி.ஆர் முன்னிலையில் அந்தத் திருமணம்/
    இரண்டுக் கட்டு நோட்டுக்களை இளைஞன் கையில் திணித்த எம்.ஜி.ஆர்,,அவர் காதில் ஏதோ சொல்லிவிட்டு நகர--
    இந்த இளைஞன் உடலில் மீண்டும் இறக்கை?
    இம்முறை தன் மனைவியோடு ஆனந்தத்தில் பறக்கிறார்??
    ஆம்! மறு நாள் சத்தியா ஸ்டூடியோவில் அலங்கரிக்கப்பட்ட அந்த உயர் ரக இருக்கைகளில் அந்தக் கிராமத்து தம்பதிகள் அமர்ந்திருக்க--
    சத்யா ஸ்டூடியோ ஊழியர்களுக்கு அன்று எம்.ஜி.ஆர் செலவில் விருந்து??
    இங்கே ஒன்றை நன்றாக நோக்க வேண்டும்--
    பக்தனை நோக்கி எம்.ஜி.ஆர் ஓடியது ஷூட்டிங் உடையில் என்றால்--
    அந்த பக்தனோ,,தன் கல்யாண உடையிலேவ்யே தன் தலைவனை நோக்கி ஓடியிருக்கிறார்??
    சட்டையை சட்டைப் பண்ணாத உண்மையான உணர்ச்சி வேகம் இரு தரப்பிலும்??
    சரி! திருமணத்தை நடத்தி வைத்து தன் உயரத்தை எம்.ஜி.ஆர் காட்ட--
    எம்.ஜி.ஆருக்கு சற்றும் சளைத்தவரா அவர் பக்தர்?
    எம்.ஜி.ஆர்,,அமெரிக்காவில் சிகிச்சை பெற்றபோது-
    எம்.ஜி.ஆர் குணமாக வேண்டி,,தீ மிதித்த அந்த இளைஞர் காளிக்கு நேர்த்திக் கடனாக--
    தம் வலது கையையே வெட்டி பலி கொடுக்கிறார்???
    தலைவன் என்றால் எம்.ஜி.ஆர் போலவும்--
    பக்தன் என்றால் அவரது இத்தகைய விசுவாசி போலும்--
    எங்குமே இனிக் காண இயலாது என்பதில் உடன்பாடு தானே உங்களுக்கும்???...Baabaa

  13. #1900
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    "ஒருதாய் மக்கள்"., 5 வருசம் நீண்ட தயாரிப்பு. துப்பாக்கி சூடு சம்பவம், தேர்தல், நடிகர்கள் மாற்றம் என இழுத்து தாமதமாய் வெளியானது. ரிக்சாக்காரன், நீரும் நெருப்பும் என்று கலரில் பிரம்மாண்ட செட்களுடன் படங்கள் வந்த நேரத்துல கறுப்பு வெள்ளையில் வந்தது. பிரம்மாண்டம் செட் எல்லாம் இல்லை. கனவுப் பாட்டு இல்லை. தனி கொள்கைப்பாட்டும் இல்லை. நம்பாளுக்கு சாதாரண காஸ்டூம் டிரஸ். தலைவர் படத்துலயே ரொம்ப சின்ன படம் .15 ரீல். படத்துக்கு பெரிய செலவும் இல்ல. மொத்தமே 3 வீடு, நம்பியார் பதுக்கல் குடோன், தலைவரை அடைச்சு வெச்சிருக்கும் டஞ்சன் ரூம், நம்பியார் சண்டை குளம் செட், பாட்டுக்கு ஸ்டுடியோ, அவுட்டோர் கிராமம் வயல், கிளைமாக்சில் அவுட்டோர் மலை அவ்வளவுதான். படத்துக்கு எதிர்பார்ப்பும் இல்ல. பெரிய வெற்றியும் இல்ல. ஆனா, 5 பாட்டும் ஒண்ணு சுசீலா ரிப்பீட்டு. முத்து. சூப்பர் இட். தலைவர வெச்சு குறைஞ்ச முதலீடு படம். அப்புறம் லாபத்துக்கு என்ன....rrn

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •