Page 206 of 210 FirstFirst ... 106156196204205206207208 ... LastLast
Results 2,051 to 2,060 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #2051
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    "குடியிருந்த கோயில்", படத்தில் "ஆடலுடன் பாடலைக்கேட்டு ரசிப்பதிலே" பாடல் படப்பிடிப்பு,நடனப்பயிற்சி பற்றி நண்பர்கள் பதிவுகள் மூலம் விவாதித்து வருகின்றனர்.இந்த பாடல் மற்றும் படப்பிடிப்பு பற்றி தயாரிப்பாளர் வேலுமணி,டைரக்டர் சங்கர்,நாயகன் தலைவர் ஆகியோர்களிடையே நடைபெற்ற சம்பாஷனைகள் பற்றி,எம்.ஜி.ஆருடன் உடனிருந்து 1950ல் இருந்து திரையுலகில் பயணித்த ரவீந்தர் (இவர்தான் நாடோடிமன்னனுக்கு இணை வசனகர்த்தா) பொம்மை இதழில் எழுதிய சுருக்கம் தந்துள்ளேன்.
    ஆடலுடன் பாடலுக்கு செம்மலுடன் ஆட விஜயலட்சுமி ஒப்பந்தம் ஆயிருந்தார்.இளமையும்,திறமையும் உள்ள நடிகையுடன் உடன் ஆட செம்மல் தயங்கினாராம்.
    அப்போது தலைவர் சொன்னாராம் நான் "விக்கிரமாதித்தன்", "மன்னாதிமன்னன்" படங்களில் நடனம் ஆடியுள்ளேன்.ஆனால் பரதம் என்றால் காட்சிகளில் அட்ஜஸ் செய்து கொள்ளலாம்.ஆனால் பங்கரா நடனத்துக்கு மூவ்மெண்ட்ஸ் முக்கியம் என்று சொல்லிவிட்டு உடன் படப்பிடிப்பை ஒருவாரம் தள்ளிவைக்க சொன்னாராம்.தயாரிப்பாளர் வேலுமணி எவ்வளவோ சொன்னாராம்.அந்த நாட்களில் பங்கரா டான்ஸ் மூவ்மெண்ட்ஸ் பயிற்சி எடுத்தாராம்.டைரக்டர் சங்கர் சொன்னாராம் அண்ணே உங்க திறமையிலே நம்பிக்கை இல்லாம பேசாதிங்க.நான் இந்த பாடலை எடுத்துக்காட்டறேன்.தலைவர் உடன் ஒரு வேண்டுகோள் சொன்னாராம்.பாடல் படப்பிடிப்பை நான் தான் முதலில் பார்க்கணும்.அப்புறம் தான் மத்தவங்களுக்கு காண்பிக்கணும் என்று சொல்லிவிட்டு சீக்கியர் வேஷம் போட சென்றுவிட்டாராம்.எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த ஒப்பனை கலைஞர் பீதாம்பரம் (பி.வாசுவின் தந்தை) தலைவரை ,இத்துடன் பதிவு செய்துள்ள படத்தில் உள்ளபடி சீக்கியர் வேஷம் போட்டாராம்.இந்த ஆடலுடன் பாடலைக்கேட்டு பாடல் மூன்று நாட்கள் நடைபெற்றது.தலைவரின் மூவ்மெண்ட்ஸ் பார்த்த விஜயலட்சுமி அசந்து பிரமித்துப்போய் சொன்னாராம் "உங்க ஆட்டத்துக்கு முன்னால நான் இல்லை.என்னையே காணோம்".ரஷ் வந்ததும் சங்கர் தலைவரை பார்க்கும்படி சொன்னாராம்.படத்தொகுப்பு செம்மல் பார்த்ததும் ரவீந்தரும் பார்த்தாராம்.செம்மலின் ஆட்டத்தின் திறனை டைரக்டர் மெச்சினார்.டைரக்டர் படப்பிடிப்பு திறனை தலைவர் மெச்சினாராம்.படத்தின் சிறப்பான வெற்றிக்கு அப்பாடல் ஒரு அம்சமாக இருந்தது என்றார் .
    இந்த செய்தி பொம்மை இதழில் தலைவரின் வசனகர்த்தா ரவீந்தர் எழுதியுள்ளார்..........nssm...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2052
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சித்தலைவர்
    #மக்கள்திலகம்
    மன்னாதி மன்னன்
    பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.
    அவர்களின் ஆசியோடு நண்பர்கள் அனைவருக்கும் இனிய புதன்கிழமை
    காலை வணக்கம்...

    புரட்சி தலைவர் எம்ஜிஆர் நடித்த படங்கள் பற்றிய தகவல்களை பகிர்ந்து வரும் இந்த தொடர் பதிவில் இன்று நாம் தலைவர் நடித்த அவரின் 35 வது படமான
    #"மதுரைவீரன் " திரைப்படம் பற்றி காண்போம்..

    முன்னதாகவும் படங்கள் ஓடியிருக்கின்றன. வசூல் குவிந்திருக்கின்றன. ஆனால் அப்படியொரு வசூலை அதற்கு முன்பு வேறு எந்தப் படங்களும் கொடுத்ததில்லை எம்ஜிஆருக்கு. மட்டுமல்ல, தென்னிந்தியா அளவில்... அதேபோல், அவரை ரசிக்கத் தொடங்கிய கூட்டம் முன்னமே இருந்ததுதான். ரசிகர் மன்றங்களும் கூட முன்பே வைக்கத் தொடங்கிவிட்டார்கள்தான். ஆனால், அந்தப் படம் வந்த பிறகுதான், எம்ஜிஆரின் திரை வாழ்வில், பட்டொளி வீசிப் பறக்கத் தொடங்கியது சின்னவரின் கொடி. அந்தப் படம்... ‘மதுரை வீரன்’.

    இன்றைக்கும் தென்மாவட்டங்களில் பலராலும் வணங்கப்பட்டு வரும் தெய்வம்... மதுரை வீரன். தமிழ் கூறும் நல்லுலகில், மதுரை வீரன் குறித்தும் அவருடைய மனைவியர் குறித்தும் கர்ண பரம்பரைக் கதை உண்டு. அந்தக் கதையையே ஆதாரமாகக் கொண்டு, மிகப்பெரும் தயாரிப்பாளரான லேனா செட்டியார், எம்ஜிஆரின் கால்ஷீட்டை வாங்கி, ‘மதுரை வீரன்’ படத்தை பிரம்மாண்டமாக உருவாக்கினார்.

    அநேகமாக, எம்ஜிஆருக்கு மிகப்பெரிய ஹிட்டும் ‘யாரது எம்.ஜி.ராமசந்திரன்?’ என்று எல்லோரும் வியந்து கொண்டாடியதுமான முதல் படம், முக்கியமான படம் ‘மலைக்கள்ளன்’ திரைப்படமாகத்தான் இருக்கும். திரையிட்ட தியேட்டர்களிலெல்லாம் நூறுநாட்களைக் கடந்து ஓடியது.

    இதையடுத்து மாடர்ன் தியேட்டர்ஸின் ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ திரைப்படமும் செம ஹிட்டைச் சந்தித்தது. ‘அண்டாகா கஸம், அபூக்கா குகும், திறந்திடு சீசேம்’ என்கிற வசனத்தைச் சொல்லாத தமிழ் ரசிகர்களே இல்லை. தமிழின் முதல் கேவா கலர்ப் படத்தில் நடித்த பெருமையும் இதனால் எம்ஜிஆருக்கு வந்து சேர்ந்தது.

    எம்ஜிஆரின் வேகத்தையும் சுறுசுறுப்பையும் முக வசீகரத்தையும் முக்கியமாக அவரின் தெள்ளுதமிழ் வசன உச்சரிப்பையும் கண்டுணர்ந்த டி.ஆர்.ராமண்ணா, ‘குலேபகாவலி’ திரைப்படத்தை எடுத்தார். எம்ஜிஆரை சாகசக்காரனாக்கினார்.

    படத்தின் பாடல்களை கண்ணதாசன், உடுமலையார் (உடுமலை நாராயண கவி), தஞ்சை ராமையாதாஸ் முதலானோர் எழுத, படத்தின் திரைக்கதையையும் வசனத்தையும் எழுதினார் கண்ணதாசன். வசனங்கள் ஒவ்வொன்றுக்கும் விசில் பறந்தன. கைதட்டலால் அரங்கையே அதிரவைத்தார்கள் ரசிகர்கள்.

    காமெடியுடன் நகரும் திரைக்கதை, படத்துக்குப் பலம் சேர்த்தது. ஜி.ராமனாதனின் எல்லாப் பாடல்களும் மிகப்பெரிய ஹிட்டடித்தன. ‘நாடகமெல்லாம் கண்டேன்’, ‘வாங்க மச்சான் வாங்க’ என்று எல்லாப் பாடல்களும் ரசிகர்களைக் கவர்ந்தன.

    இந்தப் படம் தமிழகமெங்கும் நூறு நாட்களைக் கடந்து, இருநூறு நாட்கள், அதற்கும் மேலே என்றோடியது. மிகப்பெரிய வசூல் சாதனை செய்தது. ’மதுரை வீரன்’ திரைப்படம், முக்கியமாக மதுரை சென்ட்ரல் தியேட்டரில் தொடர்ந்து ஹவுஸ்புல் காட்சிகளாக, 200 நாட்களைக் கடந்து ஓடியது. இந்தப் படத்தின் மூலமாக எம்ஜிஆருக்கு மூன்றுவிதமான வெற்றி கிடைத்தது என்கிறார்கள் ரசிகர்கள். அதாவது, எம்ஜிஆருக்கு இந்தப் படம் வெளிவந்த கையோடு, தமிழகமெங்கும் ரசிகர் மன்றங்கள் தொடங்கப்பட்டன. ‘மதுரை வீரன்’ படத்துக்குப் பிறகு எம்ஜிஆரின் மார்க்கெட்டும் சம்பளமும் திரையுலகில் கூடியது.

    இன்றைக்கு சூப்பர் ஸ்டார் என்று சொல்கிற அந்த அந்தஸ்தை எம்ஜிஆர் ஸ்டார் அந்தஸ்து எகிறியது. எம்ஜிஆர் நடித்தால், அந்தப் படம் ஹிட்டாகிவிடும் என்று பைனான்சியர்கள் நம்பினார்கள். தயாரிப்பாளர்கள் அவரைப் படையெடுத்தார்கள். விநியோகஸ்தர்கள் ஒவ்வொரு ஊரிலிருந்தும் பணப்பையோடு வந்து, அவரின் படங்களை பூஜை நாளின் போதே, வாங்கத் துடித்தார்கள். மூன்றாவதான விஷயம்... அப்போது எம்ஜிஆர், திமுகவில் இருந்தார். ‘மதுரை வீரன்’ படத்துக்குப் பிறகு திமுகவில் அவரின் செல்வாக்கு உயர்ந்தது. மெல்ல மெல்ல, திமுகவில் பலரும் எம்ஜிஆர் ரசிகர்களானார்கள்.

    1956-ம் ஆண்டு, ஏப்ரல் 13-ம் தேதி ரிலீஸானது ‘மதுரைவீரன்’. எம்ஜிஆரை, மாறு கால் மாறு கை வாங்குவதுடன் படம் முடியும். துக்கத்தோடும் அழுகையோடும் திரையரங்கை விட்டு வெளியே வந்தார்கள் தமிழ் ரசிகர்கள். ஆனால் இந்தப் படத்துக்குப் பிறகு எம்ஜிஆர், வேறு எந்தப் படத்திலும் தன் ரசிகர்களை அழவைக்கவே இல்லை.

    மதுரை வீரன் ஏப்ரல் 13, 1956 அன்று தமிழ் புத்தாண்டு அன்று வெளியிடப்பட்டது. இப்படம் ஒரு பெரிய வணிக வெற்றியாக மாறியது, மேலும் 200 நாட்களுக்கு மேல் ஓடி, வெள்ளி விழா திரைப்படமாக ஆனது. தமிழ்நாடு முழுவதும் 35 திரையரங்குகளில் முதன் முதலாக 100 நாட்கள் கடந்து மிக பெரிய வசூலுடன் ஓடி, மற்றுமொரு முதல் முறையாக ரூபாய் ஒரு கோடி வசூலை கடந்ததும் பிரம்மாண்ட சிறப்பு. இது புரட்சி தலைவர் மற்றும் பத்மினி ஆகியோருக்கு சினிமா வாழ்க்கையில் ஒரு மைல்கல்லாக அமைந்தது. மேலும் இது போன்ற பல படங்கள் உருவாக வழிவகுத்தது.

    கதை பற்றி காண்போம்...

    வாரணவாசியில் மன்னருக்கு ஒரு குழந்தை பிறக்கிறது, ஆனால் அது துரதிர்ஷ்டவசமாக ஒரு அடையாளத்துடன் மாநிலத்திற்கு ஒரு அழிவை கொண்டுவர விதிக்கப்பட்டுள்ளது. என்று ஜோதிடரின் கட்டளையின் படி, அக்குழந்தை காட்டில் விடப்படுகிறது. கபிலரும் அவரது மனைவியும் காட்டில் அக்குழந்தையை கண்டுபிடித்து, அவனை தங்கள் மகனாக வளர்க்கின்றனர். அவர்கள் அவனுக்கு வீரன் என்று பெயரிடுகிறார்கள், அதாவது போர்வீரன், ஏனெனில் காட்டில் வனவிலங்குகள் அவனை சுற்றி இருந்தாலும் அதற்காக அவன் அழவில்லை.

    வீரன் ஒரு துணிச்சலான மற்றும் உன்னதமான மனிதனாக வளர்கிறான். தொட்டியத்தின் இளவரசி பொம்மி, காவேரியில் மூழ்கடிப்பதில் இருந்து காப்பற்ற அவனுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. பொம்மி அவனை காதலிக்கிறாள். வீரன் ஆரம்பத்தில் அவளது காதலை மறுபரிசீலனை செய்யவில்லை என்றாலும், பொம்மி மனிதனாக உடையணிந்த யானை மீது சவாரி செய்து அவனை காப்பாற்றுகிறாள். அவளின் அன்பின் ஆழத்தை அவன் உணர்கிறான். பொம்மியின் மாமாவான கோழைத்தனம் மிக்க நரசப்பன், பொம்மியை திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தை கைவிடுகின்றான். வீரனின் குறைந்த பிறப்பை மேற்கோள் காட்டி, நரசப்பன் அவர்கள் இருவருக்கும் தேவையற்ற துன்பத்தை அளிக்கிறான். பொம்மியின் தந்தையின் எதிர்ப்பால், வீரன் இளவரசியை அழைத்து செல்கிறான். இறுதியாக திருச்சியின் ராஜாவிடமிருந்து நரசப்பன் உதவி கோரினார். வீரனும் பொம்மியும் குற்றவாளி அல்ல என்று அறிவித்து, அவர்கள் திருமணத்தில் தங்கள் சங்கத்தை புனிதப்படுத்துகிறார்கள். வீரனின் வீரத்தால் ஈர்க்கப்பட்ட மன்னர், அவனை தனது ராணுவ தளபதியாக நியமிக்கிறார்.

    மதுரை மக்களை அச்சுறுத்தும் கொள்ளை கும்பலை கட்டுப்படுத்த உதவுமாறு, மதுரையை சேர்ந்த திருமலை நாயக்கர் திருச்சியிடம் வேண்டுகோள் விடுக்கிறார். வீரன் மதுரைக்கு அனுப்பப்பட்டு, அங்கு அவர் நாயக்கரின் தளபதியாக நியமிக்கப்படுகிறார். அங்கு அவன் வெள்ளையம்மாவை பார்க்கிறான், அவள் ஒரு அழகான நீதிமன்ற நடனக் கலைஞர். அவளது நல்லொழுக்கங்கள் மற்றும் திறன்களால் அவன் ஈர்க்கப்படுகின்றான். வீரன் மற்றும் வெள்ளையம்மா பொருத்தமான மாறுவேடத்தில் சென்று, திருடர்களின் அழகர் மலை குகையில் நுழைகிறார்கள். மறைந்திருக்கும் வீரர்களின் உதவியுடன், அவர்கள் பெரும்பாலான கொள்ளையர்களை பிடிக்கவும், அவர்கள் கொள்ளையடித்த கொள்ளை பொருட்களையும் மீட்டெடுக்க நிர்வகிக்கிறார்கள்.

    வெள்ளையம்மாவை தனது காமக்கிழத்தியாக மாற்ற விரும்பும் நாயக்கர், வீரனை வெள்ளையம்மா காதலிக்கிறாள் என்பதை அறிந்து கோபப்படுகிறார். தீய குணமுடைய நரசப்பன் மற்றும் அவரது தளபதி குட்டிலனால், நாயக்கரின் மனம் மேலும் நஞ்சுப்படுத்தப்படுகிறது. வீரனை ஒரு தேசத்துரோகி என குற்றம் சாட்டி, அவனது கை கால் துண்டிக்கப்படுமாறு கட்டளையிடுகிறார். தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்னர், வீரன் கூட்டத்தில் திருடர்களின் தலைவர் சங்கிலிக்கருப்பனை அடையாளம் கண்டு, ஒரு சந்திப்பில் அவரை கொன்றுவிடுகிறார். அவன் இப்போது தனது பணியை நிறைவேற்றியுள்ளான் என்று திருப்தி அடைந்த வீரன், தன்னை சிதைப்பிற்கு உட்படுத்துகிறார். அவரது ஆத்மா விரைவில் அவரது உடலை விட்டு வெளியேறும்போது, ​​பொம்மியும் வெள்ளையம்மாவும் அவருடன் பரலோக வாசஸ்தலத்தில் ஒன்றுபடுகிறார்கள்...

    வீரன் - புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்

    நரசப்பன் -டி.எஸ்.பாலையா

    வீரனின் வளர்ப்பு தந்தை -என்.எஸ்.கிருஷ்ணன்

    செயின்ட் -பி.எஸ்.வெங்கடாச்சலம்

    குலதெய்வம் ராஜகோபால்

    கல்லபார்ட் நடராசன்

    திருமலை நாயக்கர் -ஓ.ஏ.கே.தேவர்

    அரசன் பொம்மன் -மா.பாலசுப்ரமணியம்

    சொக்கன் -திருப்பதிசாமி

    பொம்மி -பானுமதி ராமகிருஷ்ணா

    வெள்ளையம்மா -பத்மினி

    வீரனின் வளர்ப்பு தாய் -டி.ஏ.மதுரம்

    கிள்ளி -ஈ.வி.சரோஜா

    நடனம்

    லலிதா

    ராகினி

    சுகுமாரி

    மாடி லட்சுமி

    மதுரை வீரனின் முதல் காட்சி திரையில் 1939 ஆம் ஆண்டில் வி.ஏ.செல்லப்பா மற்றும் டி.பி.ராஜலட்சுமி நடித்த அதே பெயரில் வெளியிடப்பட்டது. இந்த நாட்டுப்புற புராணக்கதை தெய்வமாக மாறியது. புராணக்கதையை அடிப்படையாகக் கொண்ட ஒரு திரைப்படத்தை உருவாக்க மற்றொரு முயற்சி 1940 களின் பிற்பகுதியில் நவீனா பிக்சர்ஸ், பி.யு.சின்னப்பாவை நடிகராக வைத்து எடுத்து. ஆனால் இது செயல்படவில்லை. கிருஷ்ணா பிக்சர்ஸ் நிறுவனத்தின் லீனா செட்டியார் பின்னர் வெற்றிகரமாக மதுரை வீரன் என்ற பெயரில் ஒரு படத்தை தயாரிக்க முடிந்தது, இதில் தசரி யோகானந்த் இயக்குநராக இருந்தார். இந்த பதிப்பிற்கான திரைக்கதையை கண்ணதாசன் எழுதியுள்ளார், அவர் பாடலாசிரியராகவும் பணியாற்றினார். கலை இயக்கத்தை கங்கா கையாண்டார், வி. பி. நடராஜன் படத்தொகுப்பையும் மற்றும் ஒளிப்பதிவை எம்.ஏ.ரெஹ்மானும் கையாண்டனர். முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்த எம்.ஜி.ஆர் ஆரம்பத்தில் இந்த படத்தில் புராணக் குறிப்புகள் இருந்ததால் நடிக்க மறுத்துவிட்டார், ஆனால் ஆர்.எம்.வீரப்பன் வற்புறுத்திய பின்னர் இப்படத்தில் இணைந்தார்.

    அசல் புராணத்தில்
    வெள்ளையம்மாவின் பாத்திரம் "மோசமாக சித்தரிக்கப்பட்டுள்ளது" என்று புரட்சி தலைவர் எம்ஜிஆர் உணர்ந்தார், மேலும் அவரது திரை சித்தரிப்பில் மாற்றங்களை பரிந்துரைத்தார், அதற்கு தயாரிப்பாளர் ஒப்புதல் அளித்தார். எம்ஜிஆர் ஜோடியாக தனது முதல் படத்தில் பத்மினி நடித்தார்.

    அன்புடன்
    படப்பை
    ஆர்.டி.பாபு.........skt...

  4. #2053
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எண்ணெயுடன் தண்ணீரை எப்படித்தான் கலந்தாலும் இரண்டும் ஒன்று ஆகாதடி கிளியே!, அதன் இயற்கை குணம் மாறாதடி! ஆஹா எவ்வளவு பொருள் பொதிந்த பாடல்.
    பரந்த மனப்பான்மை கொண்ட தலைவர் ரசிகர்கள் எங்கே? தற்குறி எண்ணம் கொண்ட மாற்று அணியினர் எங்கே? அதனால்தான் காலம் கடந்தும் மாற்றம் வராமல் பழைய நிலையே தொடர்கிறது.

    தலைவரின் செயலுக்கும் வள்ளல்தன்மைக்கும் மாசு கற்பிக்க விழையும் மாற்று அணியினரின் செயலைக்கண்டு வாளாதிருந்தால் கயவர்களின் கனவு பலித்து விடும் அல்லவா?. அதன் பொருட்டே எனது பதிவில் தக்க பதிலடி கொடுப்பது அவசியமாகிறது. புரிந்தவர்கள் பொறுத்துக் கொள்வார்கள்.
    அய்யனின் கைஸ்கள் இரட்டை நாக்கு உடையவர்கள். அதிலும் நக்கீரன் என்ற கபட கைஸ் இரட்டை நாக்குடைய நாக்கீரன்.

    நாக்கு இரண்டாக கீறி விஷ ஜந்துவின் விஷத்தோடு அலைபவன். இவன் போற இடத்துக்கு புண்ணியம் சேர்ப்பவனாம். இவனுடைய கபடநாடகத்தை என்னிடம் காட்டி தோல்வியடைந்தவன். சர்வ வித்தைகளை காட்டி சாகஸம் பண்ணியும் காலை பிடித்துப் பார்த்தும் கதை நடக்காததால் தலையில் ஏறி அமர்ந்து கொண்டால் ஏதாவது நடக்குமா? என்று அலைபவன்.

    இப்போது நம்ம தலைவரின் அபிமானி a. முருகேசனிடம் ஒரு சில கைஸ்கள் காண்டாகி வருகின்றன. உண்மையை சொல்பவன் சதிகாரன்.
    இது உலகத்தில் ஆண்டவன் அதிகாரம் என்று பாடிய புரட்சியாரின் வாக்கிற்கிணங்க அலையும் வானரங்கள்.
    சரி நம் பங்கிற்கு அடுத்த பிரம்மாஸ்திரத்தை எடுப்போம்.

    நமது தளத்தில் நாம் சொன்ன பெ.இ.
    பெண் 25 திரையரங்கில் 50 நாட்கள் ஓடியது என்றவுடன் பாயி ஆதாரம் கேட்கிறார். தலைவர் படத்தின் 50 நாட்கள் விளம்பரத்தில் சென்னையை தவிர வேறு தியேட்டர்கள் போட இடம் இருக்காது.
    அய்யன் படங்களை போல் 4,5 தியேட்டரில் 50 நாட்கள் ஓடினால்தான் விளம்பரத்தில் போட முடியும் என்ற உண்மையை தெரிந்து கொண்டே பாய் கேட்கிறார்.

    தலைவர் படங்கள் 70 சதவீத படங்கள் சுமார் 20 திரையரங்கு முதல் 40,50 திரையரங்கில் ஓடுவதால் இதெல்லாம் நமக்கு சாத்தியமில்லை. ஆனால் முதன் முதலில் 30 திரையரங்குகளில் 50 நாட்கள் ஓட்டிய "சிவந்தமண்" விளம்பரத்தில் ஓடாத மேலும் சில அரங்குகளையும் சேர்த்து விளம்பரம் தந்து வானத்துக்கும் பூமிக்கும் குதித்தார்கள். "உரிமைக்குரல்" 50 நாட்கள் விளம்பரத்தில் அத்தனை திரையரங்குகளையும் சேர்ப்பதென்றால் இரண்டு பக்க விளம்பரம் கொடுத்தாலும் பற்றாது.

    ஆனால் 1 காட்சி 2 காட்சி என்று போட்டு மதுரை கல்பனாவில் மட்டும் 50 நாட்கள் ஓட்டிய "ஹரிச்சந்திரா" படத்துக்கு முழு பக்க விளம்பரம் கொடுத்து விளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்வு நிரந்தரமாகாது என்பதை நிரூபித்தார்கள். .மேலும் உலகத்திலேயே மிகப் பெரும் விளம்பரம் இதுதான். 6 தியேட்டரில் 50 நாட்கள் ஓட்டிய "தங்கைக்காக" "அருணோதயம்" போன்ற படங்களுக்கு தியேட்டர் போட்டு விளம்பரம் கொடுக்கலாம்.ஆனால் நாம் என்ன செய்வது எவ்வளவு சுமாரான படமானாலும் 20 தியேட்டரில் 50 நாட்கள் ஓடி விடுமே..........ksr.........

  5. #2054
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின்*104 வது*மனிதநேய*விழா மற்றும்*
    1971ல் வெளியான*மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரைக்காவியங்களின் பொன்விழா*
    நிகழ்ச்சியில் ஸ்ரீதர்*நவராக்ஸ் குழுவினர் இன்னிசையில் ஒலித்த*பாடல்கள்**
    விவரம்* *(21/02/21)
    -----------------------------------------------------------------------------------------------------------------------------
    1. தங்க தோணியிலே* - உலகம் சுற்றும் வாலிபன்*

    2. பாடும்போது நான் தென்றல் காற்று - நேற்று இன்று நாளை*

    3.சிரித்து சிரித்து என்னை* சிறையிலிட்டாய்** -தாய் சொல்லை தட்டாதே*

    4.தாய் மேல் ஆணை - நான் ஆணையிட்டால்*

    5. என்னை தெரியுமா -குடியிருந்த கோயில்*

    6.என்னை எடுத்து தன்னை கொடுத்து -படகோட்டி*

    7.அழகிய தமிழ் மகள் இவள் - ரிக் ஷாக் காரன்*

    8. அவள் ஒரு நவரச நாடகம் - உலகம் சுற்றும் வாலிபன்*

    9.எங்கே அவள் - குமரிக்கோட்டம்*

    10.மஞ்சள் முகமே வருக - வேட்டைக்காரன்*

    11.பாடினாள் ஒரு பாட்டு - ஒரு தாய் மக்கள்*

    12.பட்டு சேலை காத்தாட - தாய் சொல்லை தட்டாதே*

    13.நாம் ஒருவரை ஒருவர் - குமரிக்கோட்டம்*

    14.காலத்தை வென்றவன் நீ - அடிமைப்பெண்*

    15.கனிய கனிய மழலை* பேசும் - மன்னாதி மன்னன்*

    16.நாளை உலகை ஆள வேண்டும் -* உழைக்கும் கரங்கள்*

    17.இந்த புன்னகை என்ன விலை - தெய்வத்தாய்*

    18.அங்கே வருவது யாரோ - நேற்று இன்று நாளை*

    19.ஆயிரம் நிலவே வா - அடிமைப்பெண்*

    20.கண்ணை நம்பாதே -நினைத்ததை முடிப்பவன்*

    21.நாடு அதை நாடு - நாடோடி*

    22.போய் வா நதி அலையே - பல்லாண்டு வாழ்க*

    23.கடவுள் வாழ்த்து பாடும் - நீரும் நெருப்பும்*

    24.பால் வண்ணம் பருவம் கொண்டு* - பாசம்*

    25.இறைவா உன் மாளிகையில்* - ஒளி விளக்கு*

    26.பச்சைக்கிளி முத்துச்சரம் - உலகம் சுற்றும் வாலிபன்*

    27.பொன்னெழில் பூத்தது - கலங்கரை* விளக்கம்*

    28.உனது விழியில் எனது பார்வை - நான் ஏன் பிறந்தேன்*

    29.நாளை நமதே* இந்த நாளும் நமதே -நாளை நமதே*

  6. Thanks orodizli thanked for this post
  7. #2055
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    கடந்த*ஞாயிறு (28/02/21) அன்று சென்னை*ராஜா அண்ணாமலை மன்றத்தில்*
    நவீன்*பைன்* ஆர்ட்ஸ்*சார்பில்*நடைபெற்ற*இன்னிசை நிகழ்ச்சியில்*

    பிரபல*இசை அமைப்பாளர்* திரு. லஷ்மண் ஸ்ருதி* குழுவினர்* இசைத்த*

    பாடல்கள்*விவரம்* - தகவல் உதவி :: திரு.பி.ஜி.சேகர், பொன்மன*செம்மல்*

    எம்.ஜி.ஆர். நற்பணி சங்கம்*, சென்னை.*
    ------------------------------------------------------------------------------------------------------------------------
    1. அன்புக்கு நான் அடிமை - இன்று போல் என்றும் வாழ்க*

    2.ராஜாவின்* பார்வை ராணியின் பக்கம் - அன்பே வா*

    3.பேசுவது கிளியா - பணத்தோட்டம்*

    4.தொட்டால் பூ மலரும்* - படகோட்டி*

    5.அழகிய தமிழ் மகள் இவள் - ரிக் ஷாக் காரன்*

    6.உலகம் அழகு கலைகளின் சுரங்கம் -உலகம் சுற்றும் வாலிபன்*

    7.ஆடலுடன் பாடலை கேட்டு - குடியிருந்த கோயில்*

    8.பாடும்போது நான் தென்றல் காற்று - நேற்று இன்று* நாளை*

    9.ஒன்றே சொல்வான் நன்றே செய்வான் -சிரித்து வாழ வேண்டும்*

    10.பொன்னந்தி மாலை பொழுது - இதய வீணை*

    11.தங்க* பதக்கத்தின் மேலே -எங்கள் தங்கம்*

    12.விழியே கதை எழுது -* உரிமைக்குரல்*

    13.நானொரு குழந்தை* - படகோட்டி*

    14.சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ - சந்திரோதயம்*

    15.நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு* - என் அண்ணன்*

    16.என்னை தெரியுமா - குடியிருந்த கோயில்*

    17.குமரி பெண்ணின் உள்ளத்திலே - எங்க வீட்டு பிள்ளை*

    18.அவள் ஒரு நவரச* நாடகம்* - உலகம் சுற்றும் வாலிபன்*

    19.ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து* - நினைத்ததை முடிப்பவன்*

    20.மாசிலா உண்மை காதலே - அலிபாபாவும் 40 திருடர்களும்*

    21.ஆயிரம் நிலவே வா* *- அடிமைப்பெண்*

    2.உனது விழியில் எனது பார்வை - நான் ஏன் பிறந்தேன்*

    23.நாளை நமதே இந்த நாளும் நமதே - நாளை* நமதே*

  8. Likes orodizli liked this post
  9. #2056
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தனியார் தொலைக்காட்சிகளில் கலை வேந்தன்*எம்.ஜி.ஆர். நடித்த*
    திரைக்காவியங்கள் ஒளிபரப்பான*விவரம்* (21/02/21 முதல் 28/02/21வரை )
    ----------------------------------------------------------------------------------------------------------------
    21/02/21- சன்* லைப் -பிற்பகல் 3 மணி - நான் ஆணையிட்டால்*

    22/02/21- சன் லைப் - காலை 11 மணி - என் அண்ணன்*

    * * * * * * * *கிங் டிவி _ பிற்பகல் 1 மணி - ஆயிரத்தில் ஒருவன்*

    * * * * * * *எப் எம். தமிழ் -பிற்பகல் 1 மணி - தனிப்பிறவி*

    * * * * * * பாலிமர் டிவி - பிற்பகல் 2 மணி - நல்ல நேரம்*

    23/02/21- சன் லைப் - காலை 11 மணி - உழைக்கும் கரங்கள்*

    * * * * * * * முரசு டிவி -மதியம் 12 மணி /இரவு 7 மணி -விவசாயி*

    24/02/21-மெகா* 24- அதிகாலை 2.30 மணி - ராஜராஜன்*

    * * * * * * * *ஜெயா டிவி - காலை 10 மணி - குமரிக்கோட்டம்*

    * * * * * * * சன் லைப் - காலை 11 மணி - பல்லாண்டு வாழ்க*

    * * * * * * * கிங் டிவி - பிற்பகல் 1 மணி - மாட்டுக்கார வேலன்*

    * * * * * * மெகா டிவி -பிற்பகல் 1.30 மணி - குடியிருந்த கோயில்*

    * * * * * * வசந்த் டிவி - பிற்பகல் 1.30 மணி - ராமன் தேடிய சீதை*

    * * * * * * *ஜெயா டிவி -பிற்பகல் 1.30 மணி - ஆயிரத்தில் ஒருவன்*

    * * * * * * *வி. டிவி* - பிற்பகல் 2 மணி - பட்டிக்காட்டு பொன்னையா**

    * * * * * * *ஜெயா மூவிஸ் - மாலை 4 மணி - பட்டிக்காட்டு பொன்னையா*

    * * * * * *ஜெயா டிவி - இரவு 10 மணி - ஒரு தாய் மக்கள்*

    * * * * * * வி டிவி - இரவு 10 மணி - அடிமைப்பெண்*

    * * * * * * *பி.பி. டிவி - இரவு 10 மணி - மாட்டுக்கார வேலன்*

    * * * * * *பாலிமர் டிவி -இரவு 11 மணி - ராமன் தேடிய சீதை*

    25/02/21-சன்* லைஃப் -காலை 11 மணி -நீரும் நெருப்பும்*

    * * * * * * * முரசு -மதியம் 12 மணி/ இரவு 7 மணி - தாயை காத்த தனயன்*

    * * * * * * * வசந்த் டிவி - பிற்பகல் 1.30 மணி - விவசாயி*

    * * * * * * புதுயுகம் - பிற்பகல் 2 மணி - ராமன் தேடிய சீதை*

    26/02/21-சன் லைப்- காலை 11 மணி - நாளை நமதே*

    * * * * * * * சன் லைஃப்* - பிற்பகல் 3 மணி - தெய்வத்தாய்*

    * * * * * * பாலிமர் டிவி -இரவு 11 மணி -இன்று போல் என்றும் வாழ்க*

    27/02/21-சன் லைஃ- காலை 11 மணி - தேடி வந்த மாப்பிள்ளை*

    * * * * * * *மீனாட்சி டிவி -மதியம் 12 மணி - குடியிருந்த கோயில்*

    * * * * * * * *மெகா 24- பிற்பகல் 2.30 மணி - ஆனந்த ஜோதி*

    * * * * * * * *ஜெயா மூவிஸ் - இரவு 10 மணி -சிரித்து வாழ வேண்டும்*

    28/02/21- சன் லைஃப் - காலை 11 மணி - கண்ணன் என் காதலன்*



    * * * * * *

  10. Thanks orodizli thanked for this post
  11. #2057
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சித்தலைவர்
    பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.
    ஆசியோடு நண்பர்கள் அனைவருக்கும் இனிய வியாழக்கிழமை காலை வணக்கம்...

    புரட்சி தலைவர் திரை காவியங்களை பற்றிய என்னுடைய இந்த தொடர் பதிவில் இன்று நாம் புரட்சி தலைவர் நடித்த 36 வது படமான
    "#தாய்க்கு_பின்_தாரம்" படத்தை பற்றி காண்போம்...

    புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் பி.பானுமதி ஆகியோர் நடித்த 1956 ஆம் ஆண்டு படம் 21 செப்டம்பர் 1956 அன்று வெளியிடப்பட்டது.
    குடும்பம்,காதல் மற்றும் வீரம் கொண்ட ஒரு எளிய கிராமப்புற கதை. 1956 ஆம் ஆண்டின் பாக்ஸ் ஆபிஸ் வெற்றிகளில் ஒன்று மற்றும் முக்கிய நகரங்களில் 100 நாட்கள் ஓடியது.

    இயக்கியவர் எம். ஏ. திருமுகம் தயாரித்தவர்
    சாண்டோ எம். எம்.சின்னப்பா தேவர்

    முத்தையனாக புரட்சி தலைவர்
    ரத்னம் பிள்ளை மற்றும் மீனாட்சி ஆகியோரின் துணிச்சலான மகன். ஊரில் நல்ல மரியாதைகுரிய குடும்பம் மற்றும் அவர்களின் உன்னத குணங்களுக்காக கிராமத்தில் மிகவும் மதிக்கப்படுகிறார்கள்.

    மறுபுறம், மீனாட்சியின் சகோதரர் துரைசாமி ஊரில் ஒரு முக்கியமான ஆள் பண்ணையார் அவரது ஆணவம், கொடுமை மற்றும் நேர்மையற்ற வழிகளில் அனைவருக்கும் பிடிக்கவில்லை.
    ஒரு பொங்கல் பண்டிகை நாளில் கோவில் திருவிழாவில் ரத்னம் பிள்ளையின் பாரம்பரிய உரிமையான முதல் மரியாதையை கைப்பற்ற துரைசாமி முயன்றதிலிருந்து இரு குடும்பங்களும் பிரிந்து பகைமை ஏற்பட்டு பிரிந்து விடுகின்றார்கள்... துரைசாமியின் மகள் சிவகாமி, முத்தையனை காதலிக்கும் ஒரு நல்ல குணமுள்ள பெண். முத்தையனும் அவளுடைய காதலை ஏற்று கொண்டு விரும்புகின்றனர் மேலும் அவர்கள் எல்லா இடையூறுகளையும் தாண்டி திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருக்கிறார்கள்...
    ஒரு காரணத்திற்க்காக துரைசாமியை
    முத்தையன் அடித்து விடுகின்றார் அதனால் அவமான பட்ட துரைசாமி முத்தையனை பழிவாங்க துடித்து அவர் மேல் பகைமையை வளர்த்து வருகிறார்..

    ரத்தினம் பிள்ளையின் பயிர்களில் துரைசாமி தன்னுடைய காளையை மேய விட்டு விடுகின்றார் மாடு பயிர்களை மேய்ச்சலைப் பிடித்தபோது, ​​துரைசாமியின் மதிப்புமிக்க காளையின் மீது கற்களை எறிந்து விடுகின்றார் முத்தையன் என்ற காரணத்தால் அவரை மாயாண்டி மூலம் கடத்தி சென்று ஒரு அறையில் கைது செய்து வைக்கின்றார் துரைசாமி..
    இது முத்தையாவின் தந்தையான ரத்தினம் பிள்ளைக்கு தெரிய வருகிறது தன் மகனை காப்பாற்ற செல்லும்போது ஏற்ப்படும் வாய் சண்டையில் துரைசாமியின் காளையை அடக்க வேண்டும் என்று சவால் விடும் துரைசாமியிடம் ரத்தினம் பிள்ளை ஒப்பு கொள்ள அங்கு ஏற்படும் காளை அடக்கும் போட்டியில் காளையால் கொள்ள படுகிறார் ரத்தினம் பிள்ளை.. அதே நேரத்தில் சிவகாமி முத்தையனை மீட்க வருகிறார்...

    ரத்தினம் பிள்ளை இறக்கும் தருவாயில், மீனாட்சியிடமிருந்து ஒரு வாக்குறுதியை பெறுகிறார் துரைசாமி செய்த தவறுக்கெல்லாம் மன்னிப்பு கேட்க வைக்க வேண்டும் என்று கூறி இறந்து விடுவார் தந்தைக்கு இறுதி சடங்கு செய்ய கூட முடியாத நிலை ஏற்படும் முத்தையாவிற்கு இதனால் தன் தாய்மாமன் துரைசாமியை கொள்ள வேண்டும் என்று செல்லும் முத்தையனிடம் தன்னுடைய கணவரின் செய்த சத்தியத்தை நிறைவேற்ற வேண்டும் என்று சொல்லி தன் மகனை தடுத்து விடுகின்றார் முத்தையாவின் அன்னை..
    இது ஒரு புறம் இருக்க முத்தையனின் காதல் விவகாரம் தன்னுடைய தாய்க்கு தெரிகின்றது இதனால் தன்னுடைய மகன் சபதத்தை நிறை வேற்றாமல் காதல் மயக்கத்தில் சென்று விடுவானோ என்று எண்ணி சிவகாமியை சந்தித்து இனி முத்தையனை சந்திக்க கூடாது என்று சொல்லி விடுகின்றார்.. சிவகாமியும் இனி சந்திக்க மாட்டேன் என்று அவருக்கு வாக்குறுதி அளிக்கிறார்.
    சிவகாமியின் தந்தையும் அவளை வீட்டுக் காவலில் தனிமைப்படுத்தி, அவளுக்கு பொருத்தமான கணவனைத் தேடத் தொடங்கினார்.

    திருவிழா நடைபெறும் போது நடைபெறும் மாட்டு வண்டி போட்டியில் முத்தையனை கொள்ள மாயாண்டி மூலம் திட்டம் தீட்டி செயல்படுத்த அதில் காயம் அடைந்த முத்தையனை பார்க்க வரும் சிவகாமியிடம் மீனாட்சி அம்மையார் துரைசாமியின் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் போது, ​​சிவகாமியுடன் பேச வேண்டாம் என்று கூறுகிறார். இருவரும் எப்படியும் அன்றிரவு ஒருவரை ஒருவர் சந்திக்கிறார்கள், ஆனால் துரைசாமியின் வேலைக்காரர், மீனாட்சி ஆகியோரால் பார்க்கப்படுகிறார்கள்.
    அங்கு தன்னை முத்தையன் கொலை செய்ய வந்தான் என்று சொல்லி பழி போடுகிறார் துரைசாமி ஆனால் சிவகாமி தான் தான் அவரை பார்க்க வர சொன்னதாக உண்மையை கூற முத்தையா விடுவிக்க படுகின்றார்..
    சிவகாமிக்கு வேறு ஒரு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது திருமண நாளில் ஏதாவது பிரச்சனை முத்தையன் மூலம் ஏற்பட்டு திருமணம் நின்றுவிட்டால் தன் கௌரவம் பாதிக்கப்படும் என்று எண்ணி முத்தையன் வராமல் தடுக்க நினைக்கின்றார் துரைசாமி ஆனால் திருமணம் அன்று ஏற்படும் குழப்பத்தில் சிவகாமி முத்தையன் உடன் தப்பி செல்கின்றார் அவர்களை மடக்கி பிடித்து விடுகின்றார் பண்ணையார் துரைசாமி
    அங்கு நடக்கும் பேச்சு வார்த்தையில் காளையை அடக்க வேண்டும் அப்படி செய்தால் தங்கள் சொல்படி நடப்பதாக வாக்கு அளிக்கின்றார் துரைசாமி
    வலிமைமிக்க காளை செங்கோடனை முறியடித்து, தனது தந்திரமான மாமாவை சீர்திருத்திய பின்னர்
    தனது தாயின் காலடியில் மன்னிப்பு கேட்க வைக்கின்றார் முத்தையான் பிறகு சிவகாமியின் கையை பிடித்து முத்தையன் கைகளில் ஒப்படைத்து திருந்துவதாக கதை முடிகின்றது...


    ஆண் நடிகர்கள்

    முத்தையனாக எம். ஜி.ஆர்

    துரைசாமி பன்னையராக டி.எஸ்.பாலையா

    ரத்னம் பிள்ளையாக ஈ.ஆர்.சகாதேவன்

    வேலனாக காக்கா ராதாகிருஷ்ணன்

    மாயண்டியாக
    சாண்டோவ் எம். ஏ. சின்னப்பா (தேவர்)

    பெண் நடிகர்கள்

    சிவகாமியாக பி.பானுமதி

    மீனாட்சியாக பி.கண்ணம்பா

    சுராபி.செல்வாவாக பாலசரஸ்வதி

    வள்ளியாக ஜி.சகுந்தலா

    செங்கமலமாக கே.ரத்னம்

    பட்டியாக கே.ஆர்.சாரதாம்பாள்

    எம். ஏ.திருமுகம், இயக்குனராக அறிமுகமான தாய்க்குபின் தாரம் அப்போது புதிதாக உருவான தேவர் பிலிம்ஸ் சாண்டோவ் எம்.எம்.ஏ.சின்னப்ப தேவர் தயாரித்த முதல் படம்.

    கே.வி.மகாதேவன் இசையமைத்தார். பாடல் தஞ்சை என்.ராமையா தாஸ், ஏ.மருதகாசி, காவி லட்சுமணதாஸ்,
    டி. ஏ. நடராஜன் மற்றும்
    சின்னப்பா தேவர்.

    "மனுஷனை மனுஷன் சாப்பிடுராண்டா"
    என்ற தத்துவ பாடல் டி.எம்.சவுந்தரராஜன். அவர்களால் பாடபெற்று உள்ளது

    தந்தையைப் போல் உலகிலே தெய்வம் உண்டோ என்பது தேவர் பிலிம்ஸ்ஸின் முதற் படமான இத்திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு தமிழ்ப் பாடல் ஆகும். இந்தப் பாடலை டி.எம். சௌந்தரராஜன் பாடியிருந்தார்.

    தந்தை இறந்திருக்கும் போது பாடுவதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.

    ஒரு தாயின் அன்புக்கு இணையாக ஒரு தந்தையால் ஈடு கொடுக்க முடியாதென்றாலும் வாழ்க்கையின், வளர்ச்சியில் தந்தையின் பங்கும் அளப்பரியதே. தாயின் அன்பை உணர்ந்து கொள்ளும் அளவுக்கு தந்தையின் அன்பு பெரும்பாலும் உணர்ந்து கொள்ளப்படுவதில்லை. திரையுலகம் கூட இந்த விடயத்தில் கொஞ்சம் பாரபட்சமாகவே இருந்திருக்கிறது. தாயின் அன்பை மனசை உருக்கக் கூடிய வகையில் எத்தனையோ விதமாகப் பாடி வைத்த திரையுலகம் தந்தையின் அன்பை அவ்வளவாகப் பாடவில்லை. வழக்கமாக எம்.ஜி.ஆர். படங்களில் தாயை முன்னிறுத்தியே பாடல்கள் அமைந்திருக்கும். இப்படத்தில் சற்று வித்தியாசமாக தந்தையை முன்னிறுத்தி இப் பாடல் அமைந்துள்ளது. இப்பாடல் அவ்வளவாகப் பேசப்படவில்லை.

    #இதோ_அந்த_பாடல்_வரிகள்

    தந்தையைப் போல் உலகிலே
    தெய்வம் உண்டோ
    ஒரு மகனுக்கு சர்வமும் அவனென்றால்
    விந்தை உண்டோ

    அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
    ஒளவையின் பொன்மொழி வீணா
    ஆண்டவன் போலே நீதியைப் புகன்றாள்
    அநுபவமே இதுதானா

    உண்ணாமல் உறங்காமல்
    உயிரோடி மன்றாடி
    என் வாழ்வின் இன்பமே
    எதிர் பார்த்த தந்தை எங்கே?
    என் தந்தை எங்கே?
    கண்ணிமை போலே எனை வளர்த்தாரே
    கடமையை நான் மறவேனா
    காரிருள் போலே ----- பாழான சிதையில்
    கனலானார் விதிதானோ..!

    அன்புடன்
    படப்பை
    ஆர்.டி.பாபு.........skt.........

  12. #2058
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சித்தலைவர்
    பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.
    அவர்களின் ஆசியோடு நண்பர்கள் அனைவருக்கும் இனிய வெள்ளிக்கிழமை காலை வணக்கம்..

    புரட்சி தலைவர் எம்ஜிஆர் நடித்த திரைக்காவியங்களை பற்றிய தகவல்களை வரிசையாக பதிவிட்டு
    வரும் என்னுடைய இந்த தொடர் பதிவில் இன்றைய பதிவில் புரட்சி தலைவரின்
    38-வது படமான "#சக்ரவர்த்தி_திருமகள்" படத்தை பற்றி காண்போம்...

    சக்ரவர்த்தி திருமகள்
    புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்,
    அஞ்சலி தேவி மற்றும் எஸ்.வரலட்சுமி ஆகியோர் நடித்த திரைப்படம்.
    பி. நீலகண்டன் இயக்கிய இப்படம் ஜி.ராமநாதனின் இசையில் 13 அருமையான பாடல்களை கொண்ட திரைப்படம் ஜனவரி 18, 1957 அன்று வெளியிடப்பட்டது. இது ஆண்டின் பாக்ஸ் ஆபிஸ் வெற்றியைப் பெற்றது மற்றும் 8 மையங்களில் 100 நாட்களைக் கடந்தது.

    மருத நாட்டு நகரத்து இளவரசி கலாமணியை (அஞ்சலி தேவி) திருமணம் செய்ய கடுமையான போட்டியில் வெற்றி பெறும் இளவரசருக்கு மணம் முடித்து நாட்டையும் தருவதாக மன்னர் அறிவிக்கிறார்... இந்த போட்டியில் கலந்து கொள்ள இளவரசர் உதயசூரியன் (எம்.ஜி.ஆர்) கலந்து கொள்ள வருகின்றார்...
    ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறுகின்றார்...
    இதனால் இளவரசர் எம்ஜிஆர் மீது இளவரசிக்கு காதல் ஏற்படும்.. அதே சமயம் இளவரசியின் தோழியாக வரும்
    துர்கா (எஸ்.வரலக்ஷ்மி) இளவரசன் மீது காதல் கொள்வாள்..
    மற்றும் சேனாதிபதி பைரவன் (பி.எஸ். வீரப்பா) இளவரசி மீது ஆசை கொள்வான் கடைசி போட்டியில் இளவரசன் சேனாதிபதியுடன் மோத வேண்டும் அதில் வெற்றி பெறும் நபருக்கு மனம் முடித்து தருவதாக மன்னர் அறிவிப்பார்...

    இதை சாதகமாக பயன்படுத்தி கொண்டு பைரவன் சூழ்ச்சி செய்து வெற்றி பெற எண்ணுவார் ஆனால் போட்டியில் தோல்வி அடைந்து விடுவார்...
    இந்த நிலையில் சேனாதிபதி மனதில் ஆசையை தூண்டி விடும் தோழி துர்கா சதித்திட்டம் தீட்டுகின்றால்...
    இளவரசிக்கும் இளவரசனுக்கும் அரண்மனையில் திருமணம் நடக்கிறது... திருமணம் முடிந்த அன்று துர்கா மற்றும் பைரவன் ஆகியோரின் சூழ்ச்சி மூலம் இளவரசிக்கு பாலில் மயக்க மருந்து கொடுத்து பைரவன் மூலம் கடத்த பட்டு பைரவன் இளவரசி இருவரும் காதலர்கள் அதனால் இந்த திருமணம் பிடிக்காமல் ஓடி விட்டனர் என்று செய்தியை மன்னருக்கு தெரிவித்து இளவரசி மீது அவதூறு பரப்புகின்றனர்..
    மன்னரும் நம்பிவிடுகின்றார்..
    இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் மன்னரின் மானம் போய்விடும் என்றும் அதனால் தான் இளவரசி வேடத்தில் நடித்து வருவதாக மன்னரிடம் துர்கா கூறி நம்பவைத்து இளவரசன் (எம்ஜிஆர்) நாட்டிற்கு வருகின்றாள்..
    தான் தாலி கட்டிய இளவரசி துர்கா அல்ல என்று அடையாளம் கண்டு கொள்ளும் இளவரசன் அது அஞ்சலி தேவி என்றும் துர்கா அல்ல என்று தீர்க்கமாக எண்ணுகிறார் ஆனால் துர்கா அது தான் தான் என்று இளவரசரை நம்ப வைக்கின்றார் இதனால் குழப்பம் அடைந்த இளவரசன் இதில் உள்ள சூழ்ச்சியை எப்படி முறியடித்து வெற்றி கண்டார் என்பதை சுவாரஸ்யமான காட்சிகளால் படம் பிடித்து இருக்கின்றனர்...

    தோழியாக வரும் வரலட்சுமி தான்
    படத்தின் முதுகெலும்பு கதாபாத்திரம் சதி திட்டம் போட்டு காய் நகர்த்தி படத்திற்கு பலம் சேர்க்கின்றார்..
    பைரவனாக வரும் பி.எஸ்.வீரப்பாவும்
    மிரட்டுகிறார்...
    சொக்கன், சொக்கியாக வரும்
    என்.எஸ்.கிருஷ்ணன் மதுரம் தம்பதியினர் படத்திற்கு பலம் சேர்க்கின்றனர்...



    தயாரிப்பாளர்: ஆர்.எம்.ராமநாதன்

    தயாரிப்பு நிறுவனம்: உமா பிக்சர்ஸ்

    இயக்குனர்: பி.நீலகண்டன்ன்

    இசை: ஜி.ராமநாதன்

    பாடல்: தஞ்சை என்.ராமையா தாஸ், கே.டி.சந்தனம், கு. சா. கிருஷ்ணமூர்த்தி, கு. மா. பாலசுப்பிரமணியம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் & கோமாளி சுந்தரம்

    இந்த படம் 18 ஜனவரி 1957 அன்று வெளியிட பட்டு சக்ரவர்த்தி திருமகள் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது, ஆண்டின் அதிக வசூல் செய்தது, மேலும் 150 நாட்களுக்கு மேலாக திரையரங்குகளில் ஓடியது..........skt.........

  13. #2059
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ஒரு திரைப்படம் என்பது வெறும் பொழுதை கழிப்பதற்கு மட்டுமல்ல.சமூக அவலங்களை தோலுரித்துக் காட்ட வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு அதற்கு இருக்கிறது.

    15 - 07- 1969 நாரதர் இதழில் ஒரு கட்டுரையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.பாடுவதோடு ஆடுவதோடு நடிப்பதோடு ஒரு கலைஞனின் பொறுப்பு முடிந்து விடுவதில்லை என்பதை பல ஆண்டுகளுக்கு முன்பே விஸ்வநாத தாஸ் போன்ற கலைஞர்கள் நாட்டிற்காக போராடி சிறை சென்றிருக்கிறார்கள்.நாட்டில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டிய பொறுப்பு கலைஞர்களுக்கு இருக்கிறது என்கிற ரீதியில் அந்தக் கட்டுரை இருந்தது.அப்போதைய தமிழக அரசிடம் அவர் ஒரு நல்லாட்சியை எதிர்பார்த்தார். "அடிமைப் பெண்" தந்திருந்த மகத்தான வெற்றியால் அரசியலில் இருந்த ஆர்வத்தை கொஞ்சம் குறைத்துக்கொண்டு மீண்டும் திரையில் தனது கவனத்தைத் திருப்பினார்.திரைக்கு வந்தாலும் தனது கண்கள் அரசியலையும் கவனித்துக்கொண்டு தான் இருக்கிறது என்பதைக் காட்டவே அவர் " நம் நாடு" திரைப்படத்தை கையிலெடுத்தார்.நம் நாடு படத்தின் கதை தான் என்ன?.

    தர்மலிங்கம், ஆளவந்தான், புண்ணியகோடி என்ற மூவர் கூட்டணி ஒரு நகரத்தை தன் கைப்பிடிக்குள் வைத்துக்கொண்டு ஆட்டம் போடுகிறது.வெளியே பெரிய மனிதர்களாக நடமாடும் இவர்கள் நிழல் உலகில் எமகாதகர்கள்.இவர்களது கொட்டத்தை அடக்க ஒரு இளைஞன் புறப்படுகிறான்.அவனது பெயர் துரை.நகரசபை அலுவலகத்தில் ஒரு சாதாரண க்ளார்க்.திருமணம் ஆகாத துரைக்கு முத்தைய்யா என்ற அண்ணன்.தர்மலிங்கத்திடம் கணக்குப் பிள்ளையாக பணியாற்றுகிறார்.மனைவி இரண்டு குழந்தைகள்.

    அதர்மத்தை தட்டிக் கேட்கும் குணமுள்ள துரைக்கு அலுவலகத்தில் எதிரிகள்.வேலை பறிபோக வீட்டிலும் அண்ணனோடு மனஸ்தாபம்.அவர் தெய்வமாக மதிக்கும் தர்மலிங்கம் ஒரு அயோக்கியன் என்பதில் அண்ணன் தம்பிக்கிடையே மனஸ்தாபம்.வீட்டை விட்டு வெளியேறும் துரைக்கு அடைக்கலம் தருகிறது அங்கிருக்கும் குப்பம்.ஏழை மக்களுக்கு அவர் செய்த உதவிகளுக்கு நன்றிக் கடன்.இதற்கிடையில் அலுவலகம் எதிரே இளநீர் விற்கும் அம்முவோடு பழக்கம்.மோதலில் தொடங்கி நட்பில் வளர குப்பத்து ஜனங்களின் அன்பைப் பெற்ற துரை அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நகரசபை தேர்தலில் நின்று வெல்கிறார்.பெருவாரியான கவுன்சிலர் ஆதரவோடு சேர்மனாகவும் உயர்கிறார்.பதவிக்கு வந்த பிறகு தான் தெரிகிறது புரையோடிப் போன ஊழல் நீக்கமற நிறைந்திருப்பது.ஒவ்வொன்றாக களைய எதிரிகளின் எண்ணிக்கை கூடுகிறது.

    துரையால் பாதிக்கப்பட்ட அனைவரும் ஒன்று கூட நேர்மை வெளியேற்றப்படுகிறது.மீண்டும் நகரசபை கோட்டான்களின் கூடாரமாகிறது.இதற்கிடையில் தெய்வமாக மதித்த தர்மலிங்கத்தின் கோர முகத்தை துரையின் அண்ணன் முத்தைய்யா நேரடியாகக் காண்கிறார்.மக்கள் நலத் திட்டத்திற்காக மக்களிடம் வசூலித்த பத்து லட்சத்தை ஆட்டையைப் போட இந்தக் கூட்டம் திட்டம் போட மக்கள் பணத்தைக் காப்பாற்ற முத்தைய்யா பணத்தை எடுத்துக்கொண்டு ஓட கொள்ளைக் கூட்டம் துரத்த அவர் அந்த பணப் பெட்டியை ஓரிடத்தில் புதைத்துவிட்டுத் திரும்பும்போது பிடிபடுகிறார்.துரை பதவியிழக்க அண்ணன் காணாமல் போக அண்ணி குழந்தைகள் பரிதவிக்க இந்தக் கொடுமைகளை தட்டிக் கேட்கப் போன துரை பலமாக தலையில் தாக்கப்பட்டு நடு வீதியில் வீசப்படுகிறான்.பிழைக்கத் தெரியாத முட்டாள் மடையன் என தூக்கி வீசப்பட்ட துரை இந்த அவலங்களில் இருந்து எப்படி மீண்டெழுந்தான்.?. அண்ணனின் மீது இருந்த களங்கத்தை எப்படிக் களைந்தான்?. அராஜக ஆட்டம் போட்ட கூட்டத்தின் கொட்டத்தை எப்படி அடக்கினான் என்பதை நம் நாடு படத்தின் மீதிக்கதை சொன்னது.

    எங்குமே தொய்வில்லாமல் போன விறுவிறுப்பான திரைக்கதை தான் இந்தப் படத்தின் ப்ளஸ் பாயிண்ட்.அடுத்தது அந்த அரசியல் கதைக்களம்.வெறும் நகரசபையிலேயே இத்தனை ஊழல்களா என ஆச்சர்யம்.துரை பதவியேற்றதும் பறக்கிறது பெரிய மனிதர்களுக்கு எதிரான நோட்டீஸ் ஆணைகள்.மக்களிடம் ஏமாற்றி வசூல் செய்த பல லட்சங்களுக்கு முறையான கணக்குகள் தாக்கல் செய்ய தர்மலிங்கத்திற்கு ஒரு நோட்டீஸ்.அவரு சொஸைட்டியில பெரிய மனுஷனுங்க.பி.ஏ.ரவி சொல்ல எவ்வளவு பெரிய மனுஷனா இருந்தாலும் தவறு செய்தா தண்டனை அனுபவிச்சுத் தான் ஆகணும்.காலம் மாறிப்போச்சு மிஸ்டர் ரவி.துரையின் அதிரடி கண்டு ஆடிப்போகும் ரவி.ஐயா கும்பிடறோங்க.வாங்க வாங்க.நாலைந்து கவுன்சிலர்கள்.ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கோரிக்கை.மீன் மார்க்கட் டெண்டரு என ஒருவர் தலையைச் சொறிய பதினாரு பேருக்க்கு வேலை என இன்னொருவர்.காசு வாங்கியாச்சா?.நாகேஷ்.நமட்டுச் சிரிப்போடு ஆச்சுங்க.மொத்தத்தில எல்லாரும் சம்பாரிக்க வந்திருக்கீங்க.எலக்ஷன்ல எவ்வளவு செலவு செஞ்சிருக்கோம் .எடுக்க வேணாங்கிளா?. அப்போ நீங்க உங்க ஏரியா மக்களுக்காக வரல. இது பொழைக்கிற இடமில்லே சார் ஒழைக்கிற இடம்.69 ன் அரசியல் நமது முகத்தில் அறைகிறது.தர்மலிங்கம் லஞ்சம் தர முயல அவன் இதுக்கெல்லாம் மசியமாட்டாங்க.யோவ் உங்களுக்கெல்லாம் பணம் சம்பாதிக்கத்தான் தெரியும் அதன் மதிப்பு தெரியாது.ஒருத்தனுக்கு நூறு போதும் இன்னொருத்தன் ஆயிரத்துக்கு அசையுவான்.லட்சம் குடுத்தா அடிமையே ஆயிடுவான்.உனக்கு அரசியல் தெரியல துரை.பணக்காரன்கிட்ட இருந்து காப்பாத்துறேன்னு சொல்லி ஏழைங்ககிட்ட ஓட்டை வாங்கணும்.ஏழைங்ககிட்ட இருந்து ஓட்டை வாங்கிறேன்னு சொல்லி பணக்காரன்கிட்ட பணத்தை வாங்கணும்.இது தான் நான் படிச்ச அரசியல்.ஒவ்வொரு ஃபிரேமும் அரசியல் இல்லாம நகரவே இல்லை.

    நடிகர்களின் பங்களிப்பு அசாத்தியமானது.அநீதிகளை தட்டிக்கேட்டும் நாயகனாக மக்கள் திலகம்.அத்தனை பாரத்தையும் தன் மீது சுமக்கிறார்.ஏழைகளின் காவலனாக பொங்கியெழும் நேரங்களில் புயலாக எதார்த்த நடிப்பில் மிளிர்கிறார்.அவரது காதலி அம்முவாக ஜெயா மற்றுமொரு எதார்த்தம்.மோதலில் சந்தித்த நட்பு உடனே காதலாகவில்லை என்பது ஒரு ஆறுதல்.தன் மனதில் நினைத்த காதலியை கேட்ட பின்பும் உங்களது ஜோடியை நான் தான் செலக்ட் பண்ணுவேன் என்கிற அளவிற்கு ஒரு டீஸண்டான காதல்.தான் தான் காதலி என்றதும் அவரையும் மழையில் ஆடவிட்டு அழகு பார்க்காமல் அவர் மட்டுமே ஆடி மகிழ்வது அழகு.மூன்று வில்லன்களில் முத்தாய்ப்பான வில்லன் தர்மலிங்கமாக ரங்கா ராவ்.மனிதர் தனது இமேஜை கழற்றி வைத்துவிட்டு ஆடித் தீர்த்திருக்கிறார்.அசோகனும் தங்கவேலுவும் ஆளவந்தான் புண்ணிய கோடியாக சில இடங்களில் சிரிப்பு மூட்டுகிறார்கள்.அசத்தலான அண்ணன் பாத்திரத்தில் பகவதி.மனைவியாக பண்டரிபாய்.குழந்தைகள் குட்டி பத்மினி ஸ்ரீதேவி என பக்காவான பாத்திரங்கள்.குடும்ப சென்டிமெண்ட் சில இடங்களில் கண் கலங்க வைக்கிறது.குறிப்பாக அந்த குழந்தைகள்.முதல் பாதியில் எளிமையாக வந்த மக்கள் திலகம் இரண்டாவது பாதியில் வட்டியும் முதலுமாக மிஸ்டர் மெட்ரோ கோல்ட் ராபர்ட்டாக அட்டகாசம் செய்கிறார்.நாகிரெட்டி பணமெல்லாம் ராபர்ட் கரைத்துத் தள்ளுகிறார். படத்தின் மகத்தான வெற்றிக்கு மற்றொரு காரணம் அதன் பாடல்கள்.

    வின்னவய்யா ராமய்யா போலவே இங்கொரு வாங்கய்யா வாத்தியாரய்யா.மேகலா தியேட்டரில் சத்தமில்லாமல் நாகிரெட்டியோடு எம்.ஜி.ஆர்.இந்தப் பாடல் வந்தது தான் தாமதம்.தியேட்டரே அதிர்ந்தது.அருகிலிருந்த நாகிரெட்டி கையை அழுத்தமாகப் பிடித்து உணர்ச்சிவசப்பட்டார் எம்.ஜி.ஆர்.என அவரே பதிவு செய்திருக்கிறார்.எங்க வீட்டுப் பிள்ளையின் இமாலய வெற்றிக்குப் பிறகு இன்னொரு வெற்றி.இருவரும் அன்றைய அரசியல் பேசித் தான் இந்தப் படத்தில் இணைந்தார்கள் என்ற பேச்சும் அப்போது எழுந்தது.அதை உறுதிப்படுத்த அரசியலில் நான் ஜெயிச்சுட்டேன் என இந்த வாத்தியாரய்யா பாடலைக் கேட்டதும் அவரது ஆழ் மன ஆசையை வெளிப்படுத்தினார் மக்கள் திலகம்.அடுத்த அதிரடி நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் நான்.மக்கள் திலகத்தின் மனசாட்சியான வாலியின் வரிகளில் எவ்வளவோ விஷயங்கள் இருந்தது.

    குழந்தைச் செல்வங்களுக்காக நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே ஒரு சிறந்த சமூக சீர்திருத்தம். கதையோடு ஒட்டி வந்த நாயகியின் குரலாக ஏழு வயசிலே எளனி வித்தவ என்ற ஈஸ்வரி குரல்.இதே படம் இந்தியில் வெளியாக ஏ பாபு லேலேனா நாரியல் என்ற லதாவின் குரல் ஞாபகம் வருகிறது.மன்னரின் அருமையான இன்னொரு பாடல் ஆடை முழுதும் நனைய நனைய .இசையரசியின் இன்னொரு இனிமை.ஈஸ்வரியின் அதிரடியான குடிகாரன் பேச்சு விடிஞ்சாலே போச்சு மற்றொரு அதிரடி.வாலியின் அத்தனை பாடல்களையும் ஹிட்டாக்கிவிட்டே ஓய்ந்தார் மன்னர்.அவருக்கு மிகப் பெரிய சவாலாக இருந்தது இந்தப் படம்.போட்டிக்கு ரெடியாக வந்து நிற்கிறது சிவந்தமண்.பாடல்கள் பட்டையைக் கிளப்புகிறது.சின்னவருக்கும் அவர் ஹிட் தர வேண்டிய நிர்பந்தம்.மத்தளத்திற்கு இரு பக்கமும் அடி என்பதைப் போல நிறைய வாத்தியக் கருவிகளை பயன்படுத்தி இங்கொரு பாடலையும் தர வேண்டிய சூழ்நிலை.நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் நான் என மன்னர் நினைத்ததை நடத்திக் காட்டினார்.

    இந்தப் படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா சேலம் பேலஸ் தியேட்டரில்.மக்கள் திலகம் உட்பட அனைவருமே ஏற்காடு எக்ஸ்பிரஸ் மூலம் சேலம் வந்திறங்கி துவாகராவில் ரூமைப் போட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுங்கப்பா மூணு மணி ஆட்டம் இருக்கு.ஆர்டர் போட்டு விட்டு அதன்படியே மூணு மணி ஆறு மணி ஆட்டங்களை ஜன சமுத்திரத்தில் மிதந்துகொண்டு மேடையேறி அழகாகக் காட்சி தர ஆரவாரம் செய்து குதூகலித்தது கூட்டம்.இரவுக் காட்சியிலும் எல்லோரும் இருக்கணும் என்று சொல்லிவிட்டு துவாரகா திரும்ப பிடித்தது அடைமழை.அப்படி அடித்துத் துவைக்க நைட் ஷோ கேன்சல்.அசோகன் மூலம் எல்லோருக்கும் தெரியப்படுத்த ஆளாளுக்கு ரூமில் ஒதுங்க என்னடா ஸ்ரீரங்கம் ரங்கராஜா ப்ரோக்ராம் தான் கேன்சல் ஆயிடுச்சே கச்சேரியை ஆரம்பிக்கலாமா.?. என நாகேஷ் வாலியிடம்.கொட்டும் மழையிலும் ஆர்கனைஸர் ஜெயசீலன் ஒரு ஸ்காட்சோடு வர வாலி வாயெல்லாம் பல்லாக நாகேஷ் எம்.எஸ்.வி.ஜோடி சேர கச்சேரி களை கட்டியது.அவர்களது பொல்லாத நேரம் மழை நிற்க எல்லோரும் வாங்க என அழைத்து வர அசோகன்.கதவைத் திறந்தவர் அடப் பாவிகளா என கீழே இறங்கி ஓட அடித்துப் பிடித்து மூவரும் முகம் கழுவி வாசனை திரவியங்களைத் தெளித்து குங்குமம் விபூதி ஒப்பனையில் ஈடுபட்டு மன்னரின் பெட்டியில் இருந்த அவருடைய ஜரிகை வேட்டி பட்டு சட்டை எடுத்து மாட்டி கீழே இறங்கி வர சின்னவர் ரெடியாக காத்திருக்க இந்த கோலத்தைக் கண்டதும் அவருக்கு கன்பார்ம் ஆனது.ஏற்கனவே ஓடிய அசோகன் வத்தி வைத்திருக்க என்ன மூணு பேரும் ஒரே ட்ரஸ்? . ஆமாண்ணே ஒரே ட்ரஸ். நாகேஷின் கோணங்கிச் சிரிப்பு காட்டிக் கொடுத்தது.அடுத்த நாள் வாலிக்கு சகட்டு மேனிக்கு டோஸ்.நம் நாடு படத்தின் நூறாவது நாளை மறக்க முடியாது என வாலி இந்த சம்பவத்தை பதிவு செய்கிறார்.நீண்ட அனுபவம் அது.எந்தவித ஏற்பாடுகளும் செய்யாமல் ஜம்பு அருமையாக இயக்கிய படம்.ஏற்கனவே அவர் பல படங்களில் தனது எடிட்டிங் திறமையைக் காட்டியிருக்கிறார்.இந்தப் படத்திலும் அருமையான எடிட்டிங். அதனால் தான் படம் தொய்வில்லாமல் சென்றது.ஐம்பது ஆண்டுகள் உருண்டோடிவிட்டது.ஆனாலும் கண்ணை உறுத்தாத அந்த கலர் படம் இப்போதும் நம்மை மகிழ்வித்துக்கொண்டிருக்கிறது.

    நன்றி..அப்துல் ஸமாத் ஃபையஸ்.
    அவர்கள்.........

  14. #2060
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    M.G.R. உதவி செய்ய வேண்டும் என்று நினைத்துவிட்டால் நேரம், காலம் பார்க்க மாட்டார். தான் எவ்வளவுதான் கடினமான பணியில் இருந்தாலும் தேவைப்படும் நபருக்கு சரியான நேரத்தில் உதவி செய்யக் கூடியவர். அதிலும் வசதியுடன் வாழ்ந்து பின்னர் நொடித்துப் போனவர் என்றால் அவர்களுக்கு உதவும்வரை அவர் மனம் அமைதி அடையாது.,

    அந்த உதவி இயக்குநரின் பெயர் கோபாலகிருஷ்ணன். பல படங் களில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். ‘நாடோடி மன்னன்’ படத்தில் எம்.ஜி.ஆருக்கு உதவியாக இருந்தவர். வேறு பல படங்களுக்கும் உதவி இயக்குநராக இருந்துள்ளார். நல்ல நிலையில் இருந்தவர், காலச் சூழலில் நொடித்துப் போனார். சென்னை நங்கநல்லூரில் வாடகை வீட்டில் தனது குடும்பத்துடன் சிரமப்பட்டு வந்தார்.

    கிடைத்த சிறிய வேலைகளை செய்து குடும்பத்தினரின் பசியாற்றுவதே அவ ருக்கு பெரும்பாடாக இருந்தது. வீட்டு வாடகையைக்கூட அவரால் கொடுக்க முடியவில்லை. சில மாதங்கள் வாடகை பாக்கி இருந்த நிலையில், வீட்டின் உரிமையாளர் பொறுமை இழந்தார். ஒருநாள், வீட்டில் உள்ள தட்டுமுட்டு சாமான்களை எடுத்து வெளியே வீசி விட்டு வீட்டையும் உரிமையாளர் பூட்டி விட்டார். நிர்க்கதியாக நின்ற குடும்பத் தினரை நெருங்கிய நண்பர் வீட்டில் விட்டுவிட்டு தனது உறவினர்கள், நண் பர்களிடம் உதவி கேட்டார் கோபால கிருஷ்ணன். அவருக்கு கிடைத்தது ஏமாற்றம் மட்டுமே.

    என்ன செய்வது என்று தெரியாத நிலையில், கோபாலகிருஷ்ணனுக்கு எம்.ஜி.ஆரின் நினைவு வந்தது. பல ஆண்டுகளாக எம்.ஜி.ஆரோடு அவ ருக்கு தொடர்பு இல்லை. தன்னை எம்.ஜி.ஆர். நினைவில் வைத்திருப்பாரா? நினைவில் இருந்தாலும் நெருக்கம் இல் லாத நிலையில் உதவி செய்வாரா? என்று அவருக்கு சந்தேகம். இருந்தாலும், கடைசி முயற்சியாக எம்.ஜி.ஆரை பார்த்துவிடலாம் என்று அவரைத் தேடிச் சென்றார்.

    அப்போது, வாஹினி ஸ்டுடியோவில் ‘பட்டிக்காட்டு பொன்னையா’ படப்பிடிப் பில் எம்.ஜி.ஆர். இருந்தார். படப்பிடிப்பு முடியும்வரை காத்திருந்தார் கோபால கிருஷ்ணன். படப்பிடிப்பு முடிந்து வெளியே வந்த எம்.ஜி.ஆர்,, சோகத் துடன் நின்றிருந்த கோபாலகிருஷ்ணனை பார்த்ததும் அடையாளம் கண்டுகொண் டார். அகமும் முகமும் மலர அவரை அழைத்து நலம் விசாரித்தார்.

    கோபாலகிருஷ்ணனின் முகத்தையும் உடையையும் பார்த்தே அவரது நிலை மையை எம்.ஜி.ஆர். தெரிந்துகொண் டார். அவர் அன்போடு விசாரித்ததைப் பார்த்து, கோபாலகிருஷ்ணனுக்கு அது வரை அடக்கி வைத்திருந்த அழுகை வெடித்தது. அவரை சமாதானப்படுத்தி எம்.ஜி.ஆர். ஆறுதல் கூறினார். ஆசு வாசப்படுத்திக் கொண்டு, தனது நிலை மையையும் குடும்பத்தினரை நண்பர் வீட்டில் விட்டுவிட்டு வந்திருப்பதையும் குமுறித் தீர்த்தார் கோபாலகிருஷ்ணன்.

    அதைக் கேட்டு துடித்துப்போன எம்.ஜி.ஆர்., ‘‘உங்கள் நிலைமையை ஏன் முன்பே என்னிடம் தெரிவிக்கவில்லை?’’ என்று அவரை அன்போடு கடிந்து கொண் டார். ‘‘வாடகை பாக்கி எவ்வளவு?’’ என்று கேட்டார். ‘‘மூவாயிரம் ரூபாய்’’ என்று பதிலளித்தார் கோபாலகிருஷ்ணன். அவரை சாப்பிட வைத்து கைச்செலவுக்கு சிறிது பணம் கொடுத்ததுடன், தனது உதவியாளர்களிடம் அவரது வீட்டு முக வரியை கொடுத்துவிட்டு போகச்சொன் னார். எம்.ஜி.ஆரை கோபாலகிருஷ்ணன் பார்த்தது பிற்பகலில். அன்று மாலை முதல் பலத்த மழை பெய்தது.

    ‘எம்.ஜி.ஆரிடம் சொல்லிவிட்டோம். எப்படியும் உதவி கிடைக்கும்’ என்ற நம்பிக்கையில் கொட்டும் மழையிலும் பூட்டப்பட்டிருந்த தனது வாடகை வீடு முன்பு தாழ்வாரத்தில் ஒடுங்கியபடி அமர்ந்து, சாலையைப் பார்த்துக் கொண்டிருந்தார் கோபாலகிருஷ்ணன்.

    அவரது நம்பிக்கை வீண்போக வில்லை. அவர் வீட்டுக்கு இரண்டு வீடுகள் தள்ளி ஒரு கார் வந்து நின்றது. அதில் இருந்தவர்கள் எம்.ஜி.ஆரின் உதவி யாளர்கள். தன்னைப் பற்றி அவர்கள் விசா ரிப்பதை அறிந்து, ஓடோடிச் சென்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் கோபாலகிருஷ்ணன். அவரிடம் எம்.ஜி.ஆர் கொடுக்கச் சொன்னதாக பேப்பரில் சுற்றப்பட்ட ஒரு பொட்டலத்தை உதவியாளர்கள் கொடுத்தனர்.

    ‘‘இதில் பத்தாயிரம் ரூபாய் இருக் கிறது. வாடகை பாக்கியான மூவாயிரம் ரூபாய் போக மீதிப் பணத்தை உங் களையே வைத்துக்கொள்ளச் சொன் னார்’’ என்று கோபாலகிருஷ்ணனிடம் எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் தெரி வித்தனர். நன்றிப் பெருக்கில் மழை யுடன் போட்டியிட்டபடி, கோபால கிருஷ்ணனின் கண்களில் இருந்து ஆனந் தக் கண்ணீர் கொட்டியது. பின்னர், அவ ருக்கு சில வாய்ப்புகளும் கிடைத்தன. இது எம்.ஜி.ஆரின் உதவிதான் என்று தெரிந்து கொண்டார் கோபாலகிருஷ்ணன்.

    இதில் முக்கியமான விஷயம் என்ன வென்றால், அன்றிரவு வெகுநேரம் வரை எம்.ஜி.ஆர். சாப்பிடாமல் இருந்தார். தனது உதவியாளர்கள் திரும்பி வந்து, ‘‘கோபாலகிருஷ்ணனிடம் பணத்தை கொடுத்துவிட்டோம்” என்று தெரிவித்த பிறகுதான் சாப்பிடச் சென்றார்.

    எம்.ஜி.ஆர். நடித்த ‘அரச கட்டளை’ படம், பல மாற்றங்கள் செய்யப்பட்டு, துப் பாக்கிச் சூடு சம்பவத்தால் எம்.ஜி.ஆர். பல மாதங்கள் நடிக்க முடியாமல் இருந்து, பின்னர், 1967-ம் ஆண்டு சட்டப்பேர வைத் தேர்தல் முடிந்து தாமதமாக வெளியானது. படத்தில், ‘‘அண்ணா... அண்ணா... என்று நாங்கள் அழைக்கும் காலம் போய் மன்னா... மன்னா... என்று அழைக்கும் காலம் வரப்போகிறது’’ என்ற வசனம் இடம்பெறும். அதாவது, பேர றிஞர் அண்ணா விரைவில் முதல் அமைச் சர் ஆவார் என்பதை விளக்குவதுபோல வசனம். ஆனால், படம் வந்தபோது அண்ணா முதல்வராகவே ஆகிவிட்டார்.

    இந்தப் படத்தில், கவிஞர் வாலி எழுதி, பி.சுசீலாவின் இனிமையான குரலில் ‘என்னைப் பாட வைத்தவன் ஒருவன், என் பாட்டுக்கு அவன்தான் தலைவன்…’ என்ற அருமையான பாடல் உண்டு. படத்தில் ஜெயலலிதா பாடுவது போல காட்சி. எம்.ஜி.ஆரின் ஈகை குணத்தைப் புகழும் பின்வரும் வரிகள் வரும்போது, தியேட்டரில் ரசிகர்களின் ஆரவாரம் கூரையைப் பிளக்கும்.

    ‘அவன் வீட்டுக்குக் கதவுகள் இல்லை

    அந்த வாசலில் காவல்கள் இல்லை

    அவன் கொடுத்தது எத்தனை கோடி

    அந்தக் கோமகன் திருமுகம் வாழி…வாழி!’...........Png

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •