Page 207 of 210 FirstFirst ... 107157197205206207208209 ... LastLast
Results 2,061 to 2,070 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #2061
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தமிழ்திரையுலகம் எத்தனையோ சாதனை காவியங்களை தந்திருக்கின்றன. ஆரம்ப காலத்தில் m.k.t பாகவதர் p.u. சின்னப்பா சாதனை நாயகர்களாக இருந்தாலும்
    அன்றைய காலகட்டத்தில் தேவையான அளவு திரையரங்குகள் இல்லை. போட்டியாளர்கள் அதிகம் இல்லை. அதிகபட்சம் ஒரு நாளைக்கு இரண்டு காட்சிகள் நடந்த காலத்தில் வெளியான "ஹரிதாஸ்", "சிந்தாமணி" "ஜகதலபிரதாபன்" "மனோண்மணி"
    "சந்திரலேகா" போன்ற படங்கள் வெளியாகி வெற்றி கொடி நாட்டின.

    இதில் "ஹரிதாஸ்" சென்னையில் மூன்று தீபாவளி கண்ட படம். அது போல் நெல்லை ராயலில் ஓராண்டு பூர்த்தி செய்த படம். தமிழின் முதல் பிரமாண்ட படமான "சந்திரலேகா" சென்னையில் ஓராண்டும் நெல்லையில் வெள்ளி விழாவும் கண்ட படங்கள். முதன்முதலில் வசூலில் அகில இந்திய அளவில் "சந்திரலேகா"தான் சாதனை செய்த படம். தயாரிப்பு செலவு 30 லட்சம் என்றாலும் வட்டியை சேர்க்கும் போது சுமார் 60 லட்சத்தை தாண்டியது என்றார்கள்.

    ஆனால் அவர்களாலும் தொடர் வெற்றி படங்களை தர இயலவில்லை. அவர்கள் காலத்தை தாண்டியவுடன் தியேட்டர்களும் படம் பார்ப்போர் எண்ணிக்கையும் கிடுகிடு என்று உயர ஆரம்பித்தது.
    எம்ஜிஆர், அய்யன் காலத்தை நாம் எடுத்து கொள்வோம். அதுதான் சினிமா உலகின் பொற்காலம் என்றே சொல்ல வேண்டும். எம்ஜிஆர் காலத்தை 1947 ராஜகுமாரியிருந்து பார்த்தால் எம்ஜிஆர் 115 படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தார்.

    ஒவ்வொன்றும் ஒரு சாதனையை செய்தது என்று கூட சொல்லலாம்.
    அய்யனின் காலம் 1952 தொடங்கி 1977 வரை சுமார் 190 படங்களை நாம் எடுத்துக் கொள்ளலாம்.
    முதன் முதலில் தமிழ்ப்படங்களில் அதிகம் 100 நாட்கள் ஓடிய படத்தை பார்த்தால் சந்தேகமே இல்லாமல். அது "மதுரை வீரனை" யே சேரும். தமிழகத்தில் மட்டும் சுமார் 31 திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடி மிகப்பெரும் சாதனையை செய்தது. அந்த சாதனையை 1977 வரை யாராலும் சமன் செய்ய முடியவில்லை.

    மொத்தத்தில் 20 திரையரங்குகள் அல்லது அதற்கு மேல் 100 நாட்கள் ஓடிய படங்களை
    அசுர சாதனை செய்த படங்கள் என்று எடுத்துக் கொண்டால் அதில் வரும் முதல் இரண்டு படங்களும் எம்ஜிஆர் படங்களே. 2வதாக வருகின்ற படம்தான் "உலகம் சுற்றும் வாலிபன்". சுமார் 20 திரையரங்குகளில் 100 நாட்களும் , பெங்களூர், இலங்கையை சேர்த்தோம் என்றால் 25 அரங்சுகளிலும் 100 நாட்கள் ஓடியது.

    மேலும் "உலகம் சுற்றும் வாலிபன்" திரையிட்டு 91 வது நாளில் வெளிவந்த "பட்டிக்காட்டு பொன்னையா" மேலும் 10 திரையரங்குகளை காவு வாங்கி விட்டது. இல்லையென்றால் மதுரைவீரன் சாதனையை முறியடித்திருப்பார் வாலிபன்.
    இந்த இரண்டு படங்களை தவிர வேறெந்ந படங்களும் இந்த சாதனையை நெருங்கவில்லை எனலாம்.

    அதனால் தமிழ் படத்தின் அசுர சாதனை செய்த படமாக இந்த இரண்டு படங்களையும் எடுத்து கொள்ளலாம். அய்யனோட படங்கள் எதுவும் அசுர சாதனை செய்ய முயற்சிக்கவில்லை என்பதால் புரட்சி நடிகரே அசுர சாதனைக்கு சொந்தம் கொள்கிறார்.

    அங்கம், வங்கம், கலிங்கம் போன்ற 56 தேசங்களை வென்று ஆட்சி செய்யும் ராஜாவை "சக்கரவர்த்தி" என்று அழைப்பார்கள். அதுபோல் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி போன்ற எல்லா மொழிப்படங்களின் சாதனையை தன்னகத்தே வைத்திருப்பதால் "திரையுலக சக்கரவர்த்தி" என்று விநியோகஸ்தர்களால்
    அழைக்கப்பட்டார். ஒரு படம் நடித்து விட்டால் போதும் அது அவர் மறைந்த பின்னும் பணமழை கொட்டுவதை நிறுத்துவதில்லை என்பதால் "நிருத்திய சக்கரவர்த்தி" என்ற பெயரிட்டு இலங்கையில் அழைக்கப்படுகிறார்... ......ksr.........

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2062
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    DESTINATION – TAMIL NADU ,INDIA

    Its been a while since I posted a post – as in write about a destination and I hope to do that in my next post. Until then, here is an attempt to be alive in the blogging world. I have been travelling extensively all of August and all roads pointed to Tamil Nadu. I started with Chennai aka Madras , then drove down to Thanjavur, Kumbakonam, Pondicherry and smaller villages and towns around these places. The next trail took me to Madurai and Kodaikanal and then again to Chennai, the capital city which recently celebrated its birthday. I will be doing more of TN in the next few months. For now, I am back in Bangalore with a sore throat .

    This picture of MGR,(M G Ramachandran) former Chief Minister and famous actor framed on the wall was taken on the roads of Triplicane . In a way he represents the spirit of the people there .There is a reason why I say this. I saw a carton of cardboard boxes lying on a bench and this picture of MGR hanging on the wall. Not a soul around. .When I was busy framing a shot, a lady ran from the other end of the road, screaming in Tamil which I’m penning down without editing a single word.

    “Avaroda sethu ennaiyum oru photo edungama ..Avar en deivam .Avarthan innivarikkum ennakku saapaad poduraru..”
    Please take a photograph of me along with his picture. He is my God .He is the one who feeds me even till day ..........

  4. #2063
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    By Vaishali VijaykumarExpress News Service
    CHENNAI: Ask anyone in the neighbourhood of Star theatre in Triplicane for MGR and they will guide you to an auto stand. No, we are not talking about legendary actor-politician MG Ramachandran, but his die-hard fan, Santhana Krishnan. When we reach his auto, we are stunned. One look at his auto and his love for the yesteryear stalwart is evident. It is entirely decked up with posters of MGR. Junior MGR, as he is fondly called, has curly hair and a dyed mustache.

    Dressed in a red velvet shirt, yellow tie, and sporting black sunglasses, he asks us to take a seat inside his auto for a chat. Buddhan yesu gandhi song plays in the background. Krishnan used to work in a lottery ticket shop. But he wanted to be his own boss. He purchased an auto 20 years ago. As a father of two daughters and a son, Krishnan has been juggling parenting and his work since his wife’s death in 2015. “Every day, my routine begins with a shave. I pick my costume for the day from the 40 garments, five pairs of shoes and four pairs of glasses.

    Then, I gear up for the savaris,” says Krishnan, who spends his free time watching MGR movies. There have been instances when people mistook him for MGR. When Star theatre used to play MGR films, Krishnan would get a paal abhishekam. From childhood, Krishnan has idolised MGR and followed his principles. When he offers a ride to the poor, or kids, he doesn’t charge money, but accepts what they offer. Recalling the political era of MGR, he says, “Every weekend I would go to MGR’s house to serve tea and breakfast to the people.

    MGR used to feed even his enemy before getting into a battle with him. That’s one of his qualities that I follow. Out of the `10 I earn, I give `5 to kids or the needy,” says Krishnan, who earns around `750- `900 a day. The only difference between the star and the fan is that Krishnan is a vegetarian. “I’ve been following the same diet for 25 years and weight fluctuates between 53 kg and 54 kg,”he laughs. Krishnan is 54 years old now. He has never missed any important day related to MGR. On MGR’s birthday, he goes to MGR memorial at Marina to spend some time.

    He hopes to continue inspiring people and live by the principles of his ‘God’. “Passersby hoot when they spot me on the road. I have loyal customers. Nobody has stopped me from doing what I like and it’s that respect that keeps me going. The lyrics from my God, MGR’s film songs are so meaningful that they keep motivating me. I’ve been living more as MGR than Santhana Krishnan by following every mannerism of his and I am proud of it.

    Even a good night’s sleep is assured only after listening to his songs,” he says. Krishnan has also played cameos in films like Mersal. During state elections, he canvasses along with the area councillors. As we chat, junior MGR sings certain verses from MGR’s movies. “The smile on Krishnan’s face lights up our day. One day he dresses up like the fisherman from the film Padagotti, and on another day, like the slave from Aayirathil Oruvan,” says Kannan, a fellow auto driver....

  5. #2064
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    " ஒன்றரை அணா டிக்கெட் எடுத்து , தரையிலே அமர்ந்து கொண்டு , நம்முடைய நடிப்பைப் பார்த்து , கைதட்டி மகிழ்கிற ரசிகர்கள் தான் நாம் தேடி வைக்கும் நிரந்தர செல்வம் . அந்த ரசிகன் கொடுக்கிற ஒன்றரை அணாவில் ஓரளவாவது மீண்டும் அவர்களுக்கே சென்று சேரும்படி, நல்ல காரியங்களுக்கு உதவுவதே நல்ல கலைஞனுக்கு இலக்கணம் "

    என்று மக்கள் திலகம் எம்ஜியாருக்கு அடிக்கடி சுட்டிக் காட்டியவர் கலைவாணர் .........

  6. #2065
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ��மக்கள்திலகம்��

    படித்ததில் பிடித்தது��

    நான் நாடோடி மன்னனுக்கு இந்தப் பொண்ணைப் போடப்போறேன் என்ன சொல்றீங்க?. நீங்க தைரியமா இருந்தா எனக்கும் ஓகே தான் என்று ஏ.எல்.எஸ்.இறங்கினார்.எந்த தேதியில் கால்ஷீட் கொடுத்தாலும் அவங்க வந்து நடிக்கணும்.மறக்காம இதைச் சொல்லீடுங்க.ஒரு வழியாக சரோஜா ஒப்பந்தமானார்.ஒரு பெண்ணை நடிக்க வைக்க இந்தப் பிரபலங்கள் இவ்வளவு யோசிக்க இந்தப் பெண்ணிற்காக இவர்கள் காத்துக்கொண்டிருந்தது தான் காலச் சக்கரத்தின் விளையாட்டு.

    ஆரம்பக் காட்சிகளுக்கு சரியான ஒத்துழைப்பைத் தந்தார் சரோஜா.மக்கள் திலகத்தின் பொதுச் சேவைகளோடு நாடகங்களும் நடக்க பொறுமையாகக் காத்திருந்து கேட்டபோதெல்லாம் கால்ஷீட் வழங்கினார்.அப்போது தான் எம்.ஜி.ஆரின் இன்பக் கனவு நாடக போஸ்டர் சீர்காழியில் ஒட்டப்பட்டது.மக்கள் திரளாக ஆதரவு தர கொட்டகையில் விசில் சத்தம் பறந்தது.காரணம் ஒரு சண்டைக் காட்சி.குண்டுமணி மற்றும் மாணிக்கத்தோடு எம்.ஜி.ஆர்.மோதவிருக்கிறார்.முதலில் மாணிக்கம் ஓடி வர அவரை அப்படியே பக்கவாட்டில் தூக்கி ஒரு போடு.அடுத்து குண்டுமணி.வெப்பத்தில் வேர்க்க விறுவிறுக்க ஓடி வருகிறார் மணி.அதே போல் ஒரு தூக்கு.தூக்கிவிட்டு ஒரு அடி பின்னால் நகர கால் இடற வேர்வையில் இருந்த மணி நழுவ அப்படியே தரையில் உட்கார்ந்த எம்.ஜி.ஆரின் இடது காலில் அந்த 250 பவுண்ட் பொத்தென இறங்கியது.மளுக்கென ஒரு சத்தம் உள்ளே கேட்டது.ஜோலி முடிந்தது என அப்போதே உணர்ந்தார்.கைகளை ஊன்றி எழ முயற்சிக்கிறார் முடியவில்லை.சைகையால் சைடில் திரையை இறக்கச் சொன்னார்.கைத் தாங்கலாக இருவர் தூக்க ஒரு அடி எடுத்து வைக்க முடியவில்லை.உடனே காரெடுத்து சென்னை விரைய திருடாதே தொங்கலில் நின்றது.தனியாக இருந்த ஜானகியம்மா சதானந்தவதியோடு இணைந்தார்.இருவரும் சேர்ந்து அவரை கவனிக்க இந்தப் படத்தை அவரால் கவனிக்க முடியாமல் போனது.

    எம்.ஜி.ஆர்.கதை அவ்வளவு தான் என சிலர் குதூகலமாக தனது வாழ்வில் முக்கியமான திருப்பம் இந்தப் படம் தானே இப்படி ஆகிவிட்டதே என அவரும் சங்கடமானார்.ஒரு வழியாக ஓய்வெல்லாம் முடிந்து ஸ்டுடியோ வந்தால் சரோஜா எங்கேயோ போயிருந்தார்.நாடோடி மன்னனில் அவர் பரவலாகப் பேசப்பட சபாஷ் மீனா, தேடி வந்த செல்வம், பாகப் பிரிவினை, கல்மாணப் பரிசு, இரும்புத் திரை, கைராசி, பாலும் பழமும் , பனித்திரை, பார்த்திபன் கனவு வாழ வைத்த தெய்வம் போக பல தெலுங்குப் படங்கள் மட்டுமல்ல இந்திப் படங்கள் பைகாம் மற்றும் சசூரல் என அவர் இந்திய நட்சத்திரமாகிவிட்டார்.பகல் முழுவதும் பம்பரமாக சுழன்று விட்டு மாலை ஆறு மணிக்கு வந்தால் மக்கள் திலகம் அவருக்காக மேக்கப்போடு காத்துக்கொண்டிருப்பார்.இதை ஒளிவு மறைவின்றி தனது சுய சரிதையிலும் அவர் சொன்னார்.அவரது கால்ஷீட்டை அனுசரித்து நான் கால்ஷீட் கொடுத்தேன் என்றார்.ஒரே காரணம் அவர் தன்னை தக்க வைத்துக்கொள்ள இந்தப் படம் முடிந்ததாக வேண்டும்.ராஜா வேஷத்தில் கத்தியைச் சுழற்றத் தான் இவர் லாயக்கு என காதுபடவே பேசினார்கள்.கால் முறிவில் அரைகுறையாக படங்கள் அப்படியே நிற்கிறது.பணம் போட்ட முதலாளிக்கு பதில் சொல்ல வேண்டும்.பரணி ஸ்டுடியோவில் பிரபல நடிகர் பாராட்டு விழா.பேசிய பலரது டார்கெட் எம்.ஜி.ஆர்.ஒத்துழைக்காததால் பட முதலாளிகள் பிச்சையெடுக்கும் நிலைக்கு வந்துவிட்டார்கள்.இவரால் ரூபாய் ஒரு கோடி நஷ்டம் என ஒரு பிரபலம் பேச நொந்தே போனார்.அடுத்த நாள் கொட்டை எழுத்துக்களில் செய்தித் தாள்கள் தங்களது பங்கை ஆற்ற நான் சமூகப் படங்களுக்கு லாயக்கா என்பதை விட கலைத் துறைக்கு லாயக்கா என்ற மிகப் பெரிய கேள்வி அவர் முன்பு நின்றது.இந்தப் படம் வெளியானால் தான் எல்லாக் கேள்விகளுக்கும் விடை கிடைக்கும்.ஆனால் சரோஜாவிற்கு இந்தப் படம் வந்து தான் தன்னை காப்பாற்ற வேண்டும் என்ற சூழ்நிலை இல்லை.யார் என்ன நிபந்தனை போட்டாலும் தலையாட்ட வேண்டிய சூழல் மக்கள் திலகத்திற்கு.பல படங்களில் சரோஜா கால்ஷீட் கொடுத்திருந்ததால் அங்கிருந்து பிடுங்கவும் முடியாது.மாலை ஆறு மணிக்குத் தான் அவர் வருவார்.அவர் சம்பந்தப்பட்ட கடா எடுத்து உடனே அவரை அனுப்பி விட வேண்டும்.சிங்கிள் ஷாட்டில் அவர் இருக்கமாட்டார்.ஒவ்வொரு நாளும் பலரும் அவருக்கு காத்திருந்தார்கள்.காத்ததற்கு பலன் கிடைத்தது.படம் சூப்பர் ஹிட்டானது.

    .மக்கள் திலகம் பாலுவாக சரோஜா சாவித்திரியாக நம்பியார் பொன்னம்பலம் துளசிங்கமாக படம் தொடங்கியதில் இருந்து முடிவு வரை விறுவிறுப்பாக இயக்கித் தந்தார் நீலகண்டன்.கவியரசு கதை திரைக்கதையோடு பாடல்கள்.ஆரம்பிக்கும்போது ஒன்றாக இருந்தவர்கள் முடியும்போது வெளியே பிரிந்திருந்தார்கள்.அன்றைய அரசியல் சூழல் அப்படி.ஆனாலும் அவரது வசனங்கள் சோடை போகவில்லை.வயிறு புரட்சி பண்ண ஆரம்பிக்கும்போது கை தானாக நீளுது.காலம் கெட்டுப் போச்சுங்க.காலமெல்லாம் கெட்டுப் போகலை.மனுஷங்க தான் காலத்தை கெடுத்துட்டாங்க.அவன் இரும்பு மனுஷன்.இரும்பு நெருப்புகிட்ட உருகிடும் சித்தப்பா.உலகத்திலேயே ஈனமான தொழில் திருடுறது தான்.வாழ முடியாதுண்ணா செத்தாவது போகலாம்.நான் திருடிக்கிட்டு இருக்கும்போது யாரும் ஒண்ணும் சொல்லலை.திருந்தி வாழ்ந்தா திருடங்கிறாங்க.எனக்காகவா திருடினே. என் வயிறு குளிரும்போதெல்லாம் ஊரார் வயிறு பத்தி எரிஞ்சிருக்குமே.கவிஞரின் பேனா சிந்திய எழுத்துக்கள் படத்தின் விறுவிறுப்பை இன்னும் கூட்டியது.

    மக்கள் திலகம் சமூகப் படங்களிலும் வெளுத்து வாங்குவார் என்பதை ஆணித்தரமாக நிரூபித்த படம்.நீண்ட இடைவெளியை அவரது ஹேர் ஸ்டைல் காட்டித் தரும்.ஒரிஜினல் ஹேரில் அம்சமாக பேண்ட் ஷர்ட் இன் பண்ண ஷர்ட்டை மடித்து விட்டதில் ஒரு நேச்சுரல் இருந்தது.வசனங்களில் அவரது எதார்த்த நடிப்பு அந்த பாலு கேரக்டர் படம் முழுவதும் பல வித உணர்ச்சி கொந்தளிப்புகளோடு வலம் வந்தது.செய்த தவறுக்கு அவர் வருந்தியபோதெல்லாம் நாமும் வருந்தினோம்.பிராயசித்தத்திற்கு அவர் எடுத்த முயற்சிகளில் எள்ளளவும் செயற்கை இல்லை.அந்த பாலுவாகவே அவர் வாழ்ந்தார்.காதலியோடு அவர் காட்டிய ஈடுபாடு அத்தனை இயல்பாக இருந்தது.கூட நடித்த சரோஜா அட்டகாசம் செய்தார்.சரியான ஜோடி என ஊரார் புகழ எத்தனை படங்களில் இந்த ஜோடி வாழ்ந்துகாட்டியது.நம்பியார் தன் பங்கிற்கு அசத்தினார்.தாராவாக வந்தஎம்.என்.ராஜம் இந்தி நாதிராவின் பாத்திரம் ஏற்றார்.தாயாக வந்த பெண்கள் கலங்க வைத்தார்கள்.மோகனாக வந்த முஸ்தபா பண்பட்ட தடிப்பைத் தர அவரது மனைவியாக வந்த சகுந்தலா அசத்தினார்.ஜம்புவாக வந்த தங்கவேலு சரோஜா ஜோடி கலகலப்பூட்டியது.

    இசையமைப்பாளர் பங்கை சொல்லியே ஆக வேண்டும்.நாயுடு அவர்கள் எம்.ஜி.ஆரின் நீண்ட கால நண்பர்.கோவையில் ஏற்பட்ட பழக்கம்.அவரது சொந்தப் படமான நாடோடி மன்னனில் அவர் தான் இருந்தார்.காலத்தால் அழியாத திருடாதே பாப்பா திருடாதே பாடலை அனுபவிக்க பட்டுக்கோட்டைக்கு கொடுத்து வைக்கவில்லை.ஓ மிஸ்டர் பாலு இங்கே வா மிஸ்டர் கேளு சும்மா ஓடாதய்யா அழகான பாடல்.பாத்தா பழகாத ஜோடி போலத் தோணுது ஆத்தாடி இவ கோவக்காரி சரியான டப்பாங்குத்து.மாமா மாமா மக்கு மாமா நீ மண்ணாரு போல நிக்கலாமா?.இந்த மலையைப் பாத்து சொக்கலாமா?. இன்னொரு ஜாலியான அனுபவம்.அச்சா பகூத் அச்சா உனக்கு அழகை யாரு வெச்சா.கிருஷ்ணன் ரத்னமாலா ஜோடி தங்கவேலு ஜோடிக்காக.

    என்னருகே நீயிருந்தால் இயற்கையெல்லாம் சூழலுவதேன் மெல்லிசை மன்னர்கள் போட்ட பாடல் சும்மா கிடந்தது.அதை தூசி தட்டி இந்தப் படத்தில் பயன்படுத்தினார் ஏ.எல்.எஸ்.அட்டகாசமான பி.பி.எஸ்.கரு எம்.ஜி.ஆர் பாட கவிஞரின் வஞ்சி இடை கெஞ்சுவதேன் பிஞ்சு மொழி கொஞ்சுவதேன் தேனாக இனித்தது.கெஞ்சுவதும் கொஞ்சுவதும் வஞ்சியரின் சீதனமே இசையரசியின் இனிய குரலில் காலமெல்லாம் வாழ்கிறார் கவியரசு.கண்ணும் கண்ணும் பேசுது காதல் பாட்டு ஆணும் பெண்ணும் சேர்ந்துகிட்டு ஆடுறாங்க டான்ஸ்.இந்த பாடலைப் பேச ஒரு தனிப் பதிவே போட வேண்டும்.அப்படியொரு வெஸ்டர்னில் கலக்கியிருப்பார் நாயுடு.

    விறுவிறுப்பான திரைக்கதை.கதை மாந்தர்களின் பக்குவமான நடிப்பு கலக்கலான பாடல்களோடு சண்டைக் காட்சிகளையும் சொல்லியே ஆக வேண்டும்.குறிப்பாக நீண்ட க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சி.கால் ஒடிந்து அவ்வளவு தான் இவரது எதிர்காலம் என்பவரின் வாயை அடைக்கவே இந்த நீண்ட சண்டை.ரிஸ்கான சண்டையில் நம்பியார் பங்கு அசாத்தியம்.கிடைத்த பொருட்கள் கையிலெடுத்து எறிந்து எறிந்து விளையாடும் ஜாக்கி சான் ஸ்டைல்.ஒரே ஒரு சீலிங் பல்ப் சுழல அதன் ஒளியில் ராமமூர்த்தி படமாக்கிய இந்த ஃபைட் பல படங்களுக்கு முன்னோடி.சமூகத்திற்கு ஒரு ஸ்ட்ராங்கான மெஸ்ஸேஜ்.மக்கள் திலகம் ஒரு ஃபார்முலாவை நோக்கி நகர உதவிய படம்.ஆரம்பமே அசத்தல்.இருட்டில் ஏற்பட்ட சிநேகம் இருட்டிலேயே போகட்டும்.திருட்டில் இவன் ராஜாண்ணா நான் சக்கரவர்த்தி.எதிர்பார்ப்பை எகிற வைத்தது.கடைசியாக எனக்கு ஏதாவது சொல்லீட்டு போங்க மாமா என அந்த பிஞ்சு கேட்க திருடாதே பாப்பா திருடாதே என்பதோடு நிறைவாக நிறைவுறுகிறது இந்ததிரைப்படம்.திருடாதே என பாப்பாவிற்கு மட்டுமா சொன்னார்?.

    நன்றி..
    அப்துல் ஸமாத்ஃ பையஸ்.அவர்கள்...........

  7. #2066
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #வாத்தியார் #என்ற #ஆயிரங்காலத்துப் #பயிர்

    (செல்லியல் நிர்வாக ஆசிரியர் இரா.முத்தரசன் எழுதிய அமரர் எம்ஜிஆர் குறித்த இந்தக் கட்டுரை மலேசியாவில் கடந்த 10 செப்டம்பர் 2017-இல் கோலாலம்பூர் மலாயாப் பல்கலைக் கழகத்தில் கொண்டாடப்பட்ட எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட சிறப்பு மலரில் இடம் பெற்றது)

    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். 1987-இல் மறைந்தபோது, அடுத்து வரும் பத்தாண்டுகளில் அல்லது இருபது ஆண்டுகளில் அவரது புகழும், செல்வாக்கும் தமிழக மக்களிடையேயும், சினிமா இரசிகர்களிடையேயும், மெல்ல மெல்ல மங்கி, ஒரு காலகட்டத்தில், அவர் மறக்கப்பட்டு விடுவார் என நினைத்தவர்களில் நானும் ஒருவன்.

    ஆனால், அதற்கு நேர்மாறாக, சுமார் 30 ஆண்டுகளுக்குப் பின்னரும், எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் இந்தத் தருணத்தில், அவரது புகழ் அடுத்த தலைமுறைக்கும் கடத்தப்பட்டு, நீடித்து நிலைத்திருப்பதற்கும், தொடர்வதற்கும் என்ன காரணம் என பல தருணங்களில் நான் சிந்தித்ததுண்டு.

    கீழ்க்காணும் மூன்று முக்கிய அம்சங்கள் காரணமாக அவரது புகழ் இன்றும் தொடர்ந்திருக்கிறது – நிலைத்திருக்கிறது – என்பது எனது சிந்தனையின் முடிவு:

    தமிழக அரசியலில் தொடர்ந்து அதிமுக கட்சி ஜெயலலிதாவின் ஆளுமையாலும், திறனாலும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டதோடு, முக்கிய மாற்று அரசியல் சக்தியாகவும் திகழ்ந்ததால், அவர்களால் எம்ஜிஆரின் புகழை ஒரு வாக்கு வங்கியாக மாற்றி மக்களிடையே அவரது பெயரை நிலைத்திருக்கச் செய்ய முடிந்தது.

    இரண்டாவதாக, எம்ஜிஆரின் மறைவுக்குப் பின்னர் விஸ்வரூபமெடுத்து இல்லம்தோறும் இன்று பரவிக் கிடக்கும் தொலைக்காட்சி ஊடகங்கள் எம்ஜிஆரின் புகழ் நிலைத்திருப்பதற்கு இன்னொரு காரணமாகும். தனது சொந்தத் திரைப்படத் தயாரிப்புகளைக் கூட தொலைக்காட்சிகளுக்கு உரிமம் கொடுக்காமல் பாதுகாத்தவர் எம்ஜிஆர். ஆனால், நாளடைவில், அவரது திரைப்படங்களும், காட்சிகளும், குறிப்பாகப் பாடல் காட்சிகளும் அடிக்கடி தொலைக்காட்சிகளில் ஒளியேறி வர இதன் மூலம் அவர் காலத்து இரசிகர்கள் அவரை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக் கொண்டாட முடிந்தது என்பதோடு, அடுத்த தலைமுறையின் புதிய, இளம் இரசிகர்களும் அவரது இரசிகர்களாக இணைந்தார்கள். எம்ஜிஆரின் தீவிர இரசிகர்கள் பலர் அடிக்கடி எம்ஜிஆர் படங்களை தொலைக்காட்சிகளில் பார்க்க, அவர்களோடு அந்தப் படங்களைப் பார்த்த அவர்களின் பிள்ளைகளும் எம்ஜிஆரை இரசிக்கத் தொடங்கினார்கள் என பல குடும்பங்களில் நானே சொல்லக் கேட்டிருக்கிறேன். இது மற்ற எந்த நடிகருக்கும் நேராத அதிசயம்.

    மூன்றாவதாக எம்ஜிஆர் மிகவும் கவனமுடன் கடைப்பிடித்த ‘இமேஜ்’ எனப்படும் அவரது வெளித்தோற்ற நடவடிக்கைகள், மனித நேயத்தை மையமாகக் கொண்டு அவர் கடைப்பிடித்த பொது உறவுப் பண்பாடுகள் இன்றுவரை பலராலும் பெருமிதத்துடனும், ஆச்சரியத்துடன் பேசப்பட்டு வருவதால், அந்த விவரங்கள் அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்லப்பட்டு, எம்ஜிஆர் இப்படியெல்லாம் நடந்து கொண்டாரா, எம்ஜிஆர் அவ்வளவு நல்லவரா என இன்றைய மக்களும் அதிசயப்படும் வண்ணம் அவரது புகழ் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

    மேற்கூறிய மூன்றாவது அம்சத்தை மையமாகக் கொண்டதுதான் இந்தக் கட்டுரை.

    எம்ஜிஆரைப் பொறுத்தவரை என்னை மட்டுமின்றி பலரையும் இன்றுவரை ஆச்சரியப்பட வைக்கும் விஷயம் என்னவென்றால்,

    "ஒரு கூட்டத்தினரிடையேயும், கோடிக்கணக்கான மக்களிடத்திலும் அவர் தனது தோற்றத்தையும், தனது பிம்பத்தையும் பாதுகாத்து வந்த அதே நேரத்தில் மிகச் சாதாரண தனி மனிதர்களிடத்திலும் சரிசமமாக உண்மையாக அவர்களுக்கு
    மரியாதை கொடுத்து நடந்து
    கொண்டார் என்பதுதான்........bsm

  8. #2067
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இது எப்படி இருக்கு?
    ---------------------------
    எம்.ஜி.ஆர் தான் எனக்குத் தெரிஞ்சு நல்லா நடிக்கறவன்! சண்டைக் காட்சிகளில் கூட இங்கே நிறைய யுக்திகளைக் கொண்டு வரணும்ன்னு நினைக்கறவன்.
    யாரோட பாணியையும் காப்பி அடிக்காம,,நடிக்கறது யாருன்னு கேட்டால் நான் ராமச்சந்திரனைத் தான் சொல்லுவேன்--
    மேற் படிக் கருத்தை அழுத்தம் திருத்தமாகச் சொன்னவர்-
    நடிகவேள் எம்.ஆர்.ராதா!
    இயற்கை செய்த எத்தனையோ ஏடாகூடங்களில்-
    எம்.ஜி.ஆர்--எம்.ஆர்.ராதா மோதலும் ஒன்று என்பேன்!
    நகைச்சுவை,,யதார்த்தம்,,வில்லன் இப்படி எந்த பாத்திரத்திலும் எம்.ஆர் ராதாவின் நடிப்பு,,ஒரு ஹீரோவுக்கான நிறைவைக் கொடுக்கும்!
    அன்று திரையுலகமே பயந்து,,பின் வாங்கிய குஷ்டரோகி பாத்திரத்தைத் துணிந்து ஏற்று நடித்ததோடல்லாமல் -
    ரத்தக் கண்ணீர் படத்தை பெரிய அளவில்,,தன் நடிப்பினால் வெற்றி பெறச் செய்தவர் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது!
    மனதில் பட்டக் கருத்தை பளிச்சென்று கூறுவது இவர் பாங்கு!
    நாத்திகராக இருந்தாலும்,,காட்சிக்கு ஏற்பக் கடவுள் பக்தராகவும் வந்து அசத்துவார்!
    அது பாகப்பிரிவினை படத்தின் வெற்றி விழா!
    இந்தி நடிகர் சுனில்தத்,,ராதாவைத் தனிப்பட்ட முறையில் பாராட்ட விரும்பியவர் ராதாவைக் கண்டபோது திகைத்துப் போகிறார்--
    லுங்கியை மடித்துக் கட்டியபடி கரண்டியும் கையுமாக நடிகர்களுக்கான சமையலைச் செய்தபடி இருந்தவரைக் கண்டதால் வந்த திகைப்பு--
    ராதாவைக் கட்டித் தழுவி பாராட்டி,,வேகமான ஆங்கிலத்தில்;உரையாடத் தொடங்க--
    சுனில்தத் பேசி முடிக்கும்வரை பொறுமையாக இருந்த எம்.ஆர்.ராதா,,அருகிலிருந்தவரிடம் கேட்கிறார்--
    என்னய்யா சொல்றான் இவன்??
    அப்போது தான் சுனில்தத்துக்குத் தெரிகிறது,,,எம்.ஆர் ராதாவுக்கு இங்கிலீஷ் தெரியாது என்று?
    மேலும் திகைப்படைகிறார் சுனில்--
    காரணம்,,அந்தப் படத்தில் பிரிட்டிஷ் ஆங்கிலத்தை இலக்கணப் பிழை இல்லாமலும் சரளமாகவும் வேகமாகவும் பேசியிருப்பார் ராதா
    ஒரு முறை,,தமது சொந்த நாடகத்தில்--
    போலீஸைப் பார்த்து ஏன் பயப்படறே என்னும் வசனம் பேசிய ராதா,,வசனம் பேசிக் கொண்டே கூட்டத்தை நோக்கித் திரும்பி--
    இங்கே பாரு,,பல போலீஸ்காரங்க ஓஸி டிக்கட் வாங்கினவங்க முன் வரிசையிலே உட்கார்ந்திருக்கானுங்க.
    துட்டு குடுத்து டிக்கட் வாங்கினவங்க பின் வரிசையிலே நின்னுக் கிட்டிருக்காங்க--என்று டைமிங்-சென்ஸாக அடிக்க--
    மறு நாளிலிருந்து பல ஓசி டிக்கட்டுங்க எஸ்கேப்??
    ஒருமுறை ராதாவை நோக்கி ரசிகர்கள் கல்லால் அடிக்க,,அந்தக் கற்களை அவர்களை நோக்கியே திரும்ப எறிந்திருக்கிறார் ராதா??
    திரையுலகம் செய்த பல அதிர்ஷ்டங்களில் எம்.ஆர் ராதாவும் ஒன்று என்பது நம் கருத்து!
    உண்மை தானே உறவுகளே???
    !...vtr

  9. #2068
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நன்றி- Abdul samsth Fayaz .அவர்கள்...

    ஸ்கிரிப்ட் ரெடி பண்ணீடுங்க நாம ஒரு படம் சேர்ந்து பண்ணீடுவோம்.எதிரே அமர்ந்திருந்த சகோதரர்களின் முகம் மலர்ந்தது.அது ராமாவரம் தோட்டம்.மாநிலத்தின் முக்கிய முகமான மக்கள் திலகத்தின் உறைவிடம்.முகம் மலர்ந்த சகோதரர்கள் ஏ.வி.எம்மின் வாரிசுகள்.உங்க கூட ஒர்க் பண்ண ஃபாதர் பிரியப்படுறாரு.நாகிரெட்டிக்கு செய்தது போல் எங்க பேனருக்கும் ஒரு படம் பண்ணித் தருணும் என கேட்க வந்த இடத்தில் தான் உடனடியாக பச்சைக் கொடி காட்டினார் மக்கள் திலகம்.ஸ்கிரிப்ட் ரெடியா இருக்குங்க.

    அப்படியொரு ஸ்கிரிப்டை அதற்கு முன்பு எம்.ஜி.ஆர்.பார்த்ததே இல்லை.பக்காவாக பைண்ட் செய்யப்பட்டிருந்தது.அதில் நேர்த்தியான எண்களைப் போட்டு எடுக்கப்போகும் காட்சிகள் சீன் வாரியாக பிரிக்கப்பட்டு பேச வேண்டிய வசனங்கள் பங்கு பெறும் பாத்திரங்கள் என பக்காவான ஸ்கிரிப்ட். இப்படியெல்லாம் இருக்குமா?.ஆச்சர்யமானார் எம்.ஜி.ஆர். எங்க எல்லா படங்களுக்கு இப்படித் தாங்க.அது அன்பே வா ஸ்கிரிப்ட் என சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

    ஏ.வி.எம்.என்ற பிரமாண்டமான நிறுவனத்தில் எம்.ஜி.ஆர்.தன்னை இணைத்துக்கொண்டது திரையுலகிற்கு பெரிய விஷயம்..அது வரை அவருக்கென்றே ஒரு ஃபார்முலா இருந்தது.தாய் தங்கை செண்டிமெண்ட் வில்லன் அநியாயம் தட்டிக் கேட்டு பாதிக்கப்பட்டு வீறுகொண்டு எழுந்து துவம்சம் செய்து வெற்றிக்கொடி நாட்டி என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்த எதுவுமே அன்பே வாவில் இல்லை.படித்துப் பார்த்த அவர் இது என் படம் இல்லை.இருந்தாலும் எனக்கிது பிடிச்சிருக்கு.திருலோக் படத்தில நான் இருக்கேன் அவ்வளவு தான்.அப்பாவிற்கு ஸ்கிரிப்ட் ஓகேன்னா எனக்கும் ஓகே தான்.ஏ.வி.எம்.பேனரில் பசங்களுக்காக ஒரு யூனிட் தயாராக இருந்தது.குமரனுக்காக மியூசிக் டிபார்ட்மெண்ட் முருகனுக்காக அக்கௌண்ட் பிரிவு சரவணன் ஸ்டார் காஸ்டிங் வெளிப்புற படப்பிடிப்பு என செட்டியார் கொஞ்சம் ரிலாக்ஸாக இருந்த நேரம்.இந்த யூனிட்டில் ஏ.ஸி.திருலோக்கும் இணைய காதலை மையமாக வைத்து ஒரு ஜாலியான கதைக் களம்.சின்ன பட்ஜெட்டில் யாரைப் போடலாம்.?. ஜெய் செட்டாவார் என பேசிக்கொண்டிருந்தபோது தான் சரவணன் எம்.ஜி.ஆரை ட்ரை பண்ணலாமா என்றார்.அதற்குக் காரணம் அசோகன்.பார்க்கும்போதெல்லாம் நச்சரித்துக்கொண்டே இருப்பார்.ஏ.ஸி.யை உள்ளே நுழைத்ததும் அவர் தான்.அவரது முதல் படமான வீரத் திருமகனில் வில்லன் அசோகன் முக்கியப் பாத்திரம்.செட்டியாருக்கு அந்தப் படம் பிடிக்கவில்லை.எதிர்பார்த்த வெற்றியும் கிடைக்கவில்லை.பசங்க என்னவோ பண்றாங்க என அமைதியாக இருக்க இந்த ஸ்கிரிப்ட்டில் எம்.ஜி.ஆர்.ஓகே சொன்னதும் அதன் கலரே மாறிவிட்டது.செட்டியாரும் முகம் மலர்ந்தார்.படத்தை கிராண்டா பண்ணுங்கப்பா என்றார்.இதன் கதை ரொம்ப சிம்ப்பிள்.

    கம் செப்டம்பரை ஞாபகப்படுத்தும் கதை.பெரிய பிரமாதம் எல்லாம் இல்லை.பணக்கார பாலு வேலைப் பளுவிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு விடுமுறைக்காக ரிலாக்ஸாக தனது சிம்லா பங்களாவிற்கு வர பங்களாவை கவனித்துக்கொண்டிருந்த வேலைக்கார தம்பதி காசிக்குச் செல்ல வந்து பார்க்கும் பாலு பங்களா வாடகைக்கு விடப்பட்டது கண்டு அதிர அங்கு தங்கியிருக்கும் சுற்றுலா வந்த குடும்பத்தோடு ஒன்றி விடுகிறான் பாலு.கூட இருக்கும் பொண்ணோடு மோதலில் தொடங்கி காதலில் முடிய அடுத்தடுத்த நிகழ்வுகளை சுவாரசியமாக சொன்னது அன்பே வா திரைக்கதை.இந்த எளிய வாழ்க்கை பாலுவிற்கு பிடித்துப்போவது தான் ட்விஸ்ட்.இதில் எம்.ஜி.ஆரை தேடினாலும் கிடைக்கமாட்டார்.

    இப்படியொரு படத்தை இது வரை அவர் முயற்சித்ததே இல்லை.முக்கியமாக அது வரை அவர் பார்க்காத அவுட்டோர்.கதைக் களம் சிம்லா என்றதும் கண்களுக்கு குளிர்ச்சி.கலர்ஃபுல் லொகேஷன்.நாகேஷின் அதிரடி நகைச்சுவை.தொய்வே இல்லாமல் நகரும் கதையில் அட்டகாசமான பாடல்கள் இன்னொரு சிறப்பு.இது வரை மக்கள் திலகம் சந்திக்காத புதுவித அனுபவம்.அவரது படத்தில் முழு ஆதிக்கம் அவர் தான் என்பது ஊரறிந்த விஷயம்.ஆனால் அன்பே வா பாடல் கம்போஸிங்கில் மக்கள் திலகத்தின் பங்களிப்பு எங்குமே இல்லை என்பது தான் ஆச்சரியம். மியூச்க்கை கவனித்த குமரன் தான் இதற்கெல்லாம் காரணம்.

    குமரனுக்கு பிடித்தமான இசையமைப்பாளர் எம்.எஸ்.வி.இருவரும் ஜாலியாக எதையாவது முயற்சித்துக்கொண்டே இருப்பார்கள்.உயர்ந்த மனிதனில் கூட குமரனின் டேஸ்ட் இருக்கும்.அப்படித் தான் அன்பே வாவிற்கும் இருவரும் அமர்ந்தார்கள்.அட்டகாசமான பாடல்கள் கிடைக்க காரணம் குமரனின் பங்களிப்பு தான்.ஒன்ஸ் ஏ பப்பா இலங்கை பைலா பாடலில் கூட அவரது பங்களிப்பு இருந்தது.ட்விஸ்ட் டான்ஸ் டெஸ்ட் மேட்ச் என பார்த்துப் பார்த்து அவர் செய்தார்.எந்த பாடலுக்கும் எம்.ஜி.ஆர். நேரடி தொடர்பில் இல்லை.ஓகே வாங்குவதற்கு மட்டும் போட்டுக் காட்டியதோடு சரி.எம்.எஸ்.விக்கே இது ஆச்சர்யம்.அவரு வந்து உட்கார்ந்தா என்னை ஒரு வழி பண்ணிடுவாரு.எதுக்கும் நீங்க கொஞ்சம் கேர்ஃபுல்லா இருங்க.கடைசி நேரத்தில கூட பாட்டை மாத்திடுவாரு என அவரது அனுபவத்தைச் சொல்ல குமரன் பயந்தது என்னவோ உண்மை.செட்டியாரு கேட்டாரா?. கேட்டாருங்க.என்ன சொன்னாரு.நல்லாயிருக்கப்பா இதையே வெச்சுக்கலாம்னு சொல்லீட்டாரு.செட்டியாருக்கு பிடிச்சிருந்தா எனக்கும் ஓகே தான்.இப்படித் தான் ஒவ்வொரு பாடலுக்கும் அவர் ஏ.வி.எம்மிற்கு மரியாதை தந்தார்.உங்க நிறுவனம் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு.நீங்க எது செய்தாலும் கரெக்டா இருக்கும்.எங்கிட்ட ஒப்பீனியன் கேட்க வேண்டிய அவசியமே இல்லை.நேரா சூட்டிங் போயிடலாம்.அவுட்டோரில் இருக்கும்போது டேப்பில் ஒலிக்கும் பாடலை இயக்குநர் டேஸ்டிற்கு நடித்துக் கொடுத்த எம்.ஜி.ஆரை அது வரை திரையுலகம் கண்டதே இல்லை.அதிலொரு பாடலை இன்றைய தினத்தில் பார்க்கலாம்.பட்டி தொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பிய ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்.இதிலும் குமரனின் ஆதிக்கம் இருந்தது.

    நாயகனும் நாயகியும் நெருக்கத்தில் இருக்க நாயகி ட்ரீம் போகிறார்.திருலோக் இந்த இடத்தில் பாடல் வைத்திருந்தார்.குமரனும் எம்.எஸ்.வி.யும் அவரோடு உட்கார நாலைந்து நாளாச்சு டியூன் வந்தபாடில்லை.மன்னரின் விரல்கள் ஆர்மோனியத்தில் விளையாடிக்கொண்டே இருக்க குமரன் குனிந்த தலை நிமிரவே இல்லை.எம்.எஸ்.வி.பொறுமை இழக்கிறார் கிட்டத்ட்ட 15 டியூன் போட்டும் அவருக்கு திருப்தியில்லை.எம்.எஸ்.வி.ஆர்மோனியத்தை மூடிவிட்டு என்ன தான் எதிர்பார்க்கிறீங்க என்றார்.ப்ரீலூட் கொஞ்சம் கேட்சியா இருக்கணும்.நேத்து ஒரு படம் பார்த்தேன்.பாரீஸ் ஷாம்பெய்ன்.அதில ரெண்டு குதிரை பூட்டின கோச்சில லவ்வர்ஸ் உட்கார்ந்து போறாங்க.அப்போ ஒரு மியூசிக் குடுக்கிறான் . சும்மா ஜில்லுனு இருக்கு.நமக்கே குதிரைல போற ஃபீலிங் கெடைக்குது.அது மாதிரி ஒரு ஃபீலிங் இந்த பாட்டிலும் இருந்தா பெட்டரா இருக்கும்.அவ்வளவு தானே.ஆர்மோனியத்தை எம்.எஸ்.வி.தொடவே இல்லை.இதில வேண்டாம் பியானோ அரேன்ஜ் பண்ணுங்க.பியானோ ஆர்.ஆர்.ல இருக்கு.ரெக்கார்டிங் தியேட்டர் போக மன்னர் வாசிச்ச முதல் டியூனே அசத்தல். மெதுவாக ஆரம்பித்து டன் டன் டான்.பியானோ அலறுகிறது.பிரமாதம் சார்.இது தான் நான் எதிர்பார்த்தது.இதே ஸ்பீடில் வாலியை கூப்பிடுங்க இங்கேயே பாட்டை முடிச்சிடலாம்.வாலி வீட்டிற்கு ஃபோன் பண்ண நான் வாஹினி கெளம்பீட்டு இருக்கேனே.அதை முடிச்சிட்டு வந்திடுறேன்.நீங்க முதல்ல இங்க வந்திட்டு போயிடுங்க.குமரன் வேண்ட வாலியின் ஃபியட் ஏ.வி.எம்.காம்பவுண்டிற்குள் நுழைந்தது.

    என்னண்னே என அவசரமாக அவரும் வர இதென்ன பியானோ?. வாலிக்கு ஆச்சரியம். வாங்க சார் .உங்களுக்காகத் தான் வெயிட்டிங்.குமரன் அவசரம் தெரிந்தது.சாருக்கு இந்த மெட்டு பிடிச்சிருக்கு. எழுதிக்கொடுங்க.என்ன சிச்சுவேஷன் என்ன சமாச்சாரம். ஏதோ கோச் வண்டிங்கிறாரு.ராஜா ராணிங்கிறாரு.ட்ரீம் சாங் தானே.இப்படி போடலாமா ?. ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்.அட! .. நல்லாயிருக்குங்க!..குமரன் முகம் மலர்ந்தது.என்ன திருலோக்.நல்லாயிருக்கு !.. கண்டினியூ பண்ணலாம்.பியானோவில் வாசிக்க வாசிக்க ராணியின் முகமே ரசிப்பதில் சுகமே.பூரண நிலவோ புன்னகை மலரோ?. இசையரசியோடு ஐயா டி.எம்.எஸ்.வாலியின் வரிகளில் தெரிந்த உணர்வுகளை அப்படியே பிரதிபலிக்க மன்னரின் கை வண்ணத்தில் எழிலாக மிளிர்ந்த பாடல்.ரெக்கார்டிங் போவதற்கு முன்பாக வழக்கம் போல் எம்.ஜி.ஆர்.பாட்டு ரொம்ப நல்லா வந்திருக்கு.அந்தப் பாடலை எப்படி எடுக்க வேண்டும் என சத்தியமா அப்போது திருலோக்கிற்கு ஐடியாவே இல்லை.ஒரு ஓரத்தில் குவித்து வைத்திருந்த சாரட்டின் பாகங்களை பார்க்கும் வரை.

    ஏதோ ஒரு தெலுங்கு படத்திற்காக பயன்படுத்திவிட்டு அக்கு வேறு ஆணி வேராக கிடந்த சாரட்டின் பகுதிகளை ஆர்ட் டைரக்டர் சேகர் அசத்தலாக பொருத்தினார்.ஆசாரிகள் தங்களது திறமைகளைக் காட்ட பக்காவான பெயிண்டிங்.ஒரே ஒரு குதிரையின் க்ளோஸப் வேண்டுமே.அழகான வெள்ளைக் குதிரையின் முன்னால் நின்று புல்லுக்கட்டைக் காட்ட அது தலையை இசைக்கேற்ப ஆட்டியது.இது போதும்.வெறும் சாரட்டை வைத்து சமாளிக்கலாம்.பாடலுக்கு வந்த மக்கள் திலகம் காஸ்டியூமைப் பார்த்தார்.ரிச்சா பண்ணிருக்கீங்க.அணிகலன்கள் அசத்த ராணிக்கும் ஒரு பளபளக்கும் கிரீடம்.ஸ்லீவ்லெஸ் கவுனில் அசத்தல் வேலைப்பாடுகள்.

    நாயகி தோளில் சாயும் நாயகன்.அப்படியே கண் மயங்க இசையரசி தாலாட்டும் மூடில் ஒரு ஆலாபனை.ம்ம்ம்.ஆஆ ஆஹா...ஆஹா...மன்னரின் பியானோ மெல்லிய கோடுகளாக வரைய ஒரு இன்பமான ஃபீலிங்.அப்படியே கனவுலகம்.ஜோடிகளாக கலரில் கண் முன்னே ஆட மணியோசையோடு வருகிறது அந்த சாரட்.அதிலேறி பயணிக்கும் அனுபவம்.ஒரு கையில் சாரட் கயிறு.அதை ஆட்டிக்கொண்டே புஷ்டியான மக்கள் திலகம்.குண்டடி படாத 65ல் ஆரோக்கியமான அழகான முகம்.அசத்தனலான உடையலங்காரம்.அருகே அழகான ராணியாக சரோஜா.இசையரசி குரலுக்கு லிப் மூவ்மெண்ட் தருகிறார்.

    ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
    கண் தேடுதே சொர்க்கம்
    கை மூடுதே வெட்கம் பொன்
    மாலை மயக்கம் பொன் மாலை மயக்கம்.

    எடுத்தவுடன் ஆரோகணத்தில் தொடங்கிய மெட்டு.நீட்டி முழக்கிய ராஜாவை நெருங்கி அணைக்கும் ராணி.அவர் பாடுவதையே பார்த்துக்கொண்டிருக்கும் ராஜா.சாரட்டின் கயிற்றில் கவனம்.கண் தேடும் சொர்க்கமும் கை மூடும் வெட்கமும் கனிவாக வந்து விழுகிறது.பொன் மாலை மயக்கம் இரு வேறு ஸ்டைல்களில்.சாரட்டிலிருந்து எழுந்து அப்படியே வளைந்து நெளிந்து சிருங்கார ரசத்தைக் கொட்ட சோப்ரா மாஸ்டர் சொல்லிக் கொடுத்த அதே அபிநயம்.அழகாக அருகில் அமர ஐயா டி.எம்.எஸ்.மறுமொழி பகர

    ராணியின் முகமே ரசிப்பதில் சுகமே
    பூரண நிலவோ புன்னகை மலரோ
    அழகினை வடித்தேன் அமுதத்தை குடித்தேன்
    அணைக்கத் துடித்தேன்.

    சினிமா பாடலுக்கு சந்தம் எவ்வளவு அழகு.முகமே சுகமே நிலவோ மலரோ வடித்தேன் குடித்தேன்.அந்தக் கால பாடல்கள் ஏன் நம் நெஞ்சை விட்டு அகலாமல் அங்கேயே கிடக்கிறது.?. வஞ்சனையில்லாமல் கவிஞர்கள் வாரி வழங்கிய சுந்தரத் தமிழ் தான் காரணம்.தமிழ் இலக்கியங்கள் சாதாரண மக்களுக்கு அந்நியமாகப் போனாலும் இம் மாதிரி பாடல் வரிகள் தான் இலக்கியத்தின் பால் ஈடுபாடு கொள்ள வைக்கிறது.மன்னரின் மெட்டில் வகையாக பொருந்தும் வரிகளில் வளமான தமிழ் இருந்தது.அதே நேரத்தில் அந்தப் பாத்திரங்கள் என்ன உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டுமோ அதை டீஸண்டாக சொல்லுவும் வேண்டும்.அதனால் தான் வாலி போன்ற கவிஞர்களால் இவ்வளவு காலத்திற்கு இங்கே குப்பை கொட்ட முடிந்தது.எல்லாவற்றிற்கும் மேலாக அந்த இசை.பாமரனையும் கட்டிப்போட்ட லாவகம்.குமரனுக்கு எப்போதுமே ப்ராஸ் வாத்தியங்களில் அலாதி பிரியம்.பியானோ வயலின் அக்கார்டியனை மீறி அந்த ட்ரம்பெட் ஒரு ரிச்சான ஃபீலிங்கைத் தரும்.யானையின் பிளிறலோடு ஆங்காங்கே அது தென்படும்.நேர்த்தியான மிக்ஸிங்.அந்த மணியோசையோடு நெருக்கமாக வரும் ட்ரம்பெட்.முடிவில் பியானோ தரும் ஃபினிஷிங்.தாளங்களை கச்சிதமாகத் தரும் பேங்கோஸ்.காட்சிகள் மாற சாரட்டிலிருந்து இறங்கி ஊட்டிக்குச் செல்கிறது ஜோடி.பச்சைப் புல்வெளியில் ஒரு பக்கம் மஞ்சள் புகை வெளியேற வெள்ளுடை தரித்த ஜோடி.

    ஆசையில் விளைந்த மாதுளங் கனியோ
    கனி இதழ் தேடும் காதலன் கிளியோ

    விதவிதமான கோணங்களில் இந்த அவுட்டோர் அழகாகிறது.கனி இதழ் தேடும்போது அழகாக க்ளோஸப் வருகிறது.அப்படியே புல் தரையில் படுத்து விலகி நெருங்கி என வித்தைகள் காட்டி விழியோடு விழி சேர

    உனக்கென பிறந்தேன்
    உலகத்தை மறந்தேன்
    உறவினில் கலந்தேன்

    அதே அழகான சந்தங்கள்.இயற்கையோடு இணைந்த ஜோடி இதயத்தைப் பகிர்கிறது.இயல்பாக நகரும் மெட்டிற்காக எம்.ஜி.ஆரும் கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டிய சூழல்.ஆரத் தழுவும் வேலையின்றி அவரவர் பங்களிப்பைத் தர இடையிசையில் தேவதைகளின் குரல் மட்டும் கோரஸாக ஒலிக்கிறது.எக்ஸ்ட்ராக்கள் இல்லாத கோரஸ் பாடலுக்கு மேலும் அழகூட்டுகிறது.வெஸ்டர்ன் ஸ்டைலில் ஒரு ஒபேரா கேட்ட ஃபீலிங்.வாலியின் கடைசி சரணத்திலும் அதே கோரஸ்.ஐயா டி.எம்.எஸ்.குரலில் அருமையான சரணம்.ஊட்டியின் பொட்டானிக்கல் கார்டனின் வண்ணப் பூக்களுக்கு மத்தியில் மலர்ந்து நிற்கும் இரு மலர்களாக இந்த ஜோடி.நெருக்கத்தில் வந்து அப்படியே லாங் ஷாட் போகும் கேமிரா.மெல்லிய ஆட்டத்தோடு நடை பழகும் மக்கள் திலகம்.ஐயாவின் குரலில்

    பாவலன் மறந்த பாடலில் ஒன்று
    பாவையின் வடிவில் பார்த்ததும் இன்று
    தலைவனை அழைத்தேன்
    தனிமையைச் சொன்னேன்
    தழுவிடக் குளிர்ந்தேன்.

    எந்த இசையரசி ஆரம்பித்து வைத்தாரோ அவரே முடிக்கும் அருமையான சரணம்.அந்தக் குரலில் அவர் காட்டிய எக்ஸ்ப்ரஷன் அருமையாக வந்திருக்கும்.பாடல் முடிவில் எங்கோ ஒரு பக்ஙத்திலிருந்து ஒலிக்கும் அந்த கோரஸ் நம்மை என்னவோ செய்யும்.மணியோசை மெல்லிசை வழங்க மெதுவாக முடியும் இந்தப் பாடலை எப்போது கேட்டாலும் ஒரு இனம் புரியாத இன்பம்...........

  10. #2069
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆர்., நடிப்பில் வெளியான, "விக்ரமாதித்தன்" படத்தின் சண்டைக் காட்சி ஒன்று, வாஹினி ஸ்டூடியோவில் மூன்று நாட்கள் படமாக்கப்பட்டது. அப்போதெல்லாம் ஸ்டன்ட் குழுவினருக்கு, யூனியன் அமைக்கப்படாத சமயம். ஒப்பந்த அடிப்படையில், நாங்களே நேரடியாக தயாரிப்பாளர் ஊதிய தொகையை முடிவு செய்வோம். அதன்படியே, அப்படத்தின் தயாரிப்பாளரிடம் பேசினோம். படத்தின் சண்டைக் காட்சி மூன்று நாட்கள் சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்டு விட்டது.

    அதன் பின் ஒரு வாரம் கழித்து நானும், படத்தில் நடித்த மற்ற ஸ்டன்ட் கலைஞர்களும் படத்தில் நடித்ததற்கான ஊதியத்தை பெற, சென்னை தேனாம்பேட்டை தற்போதைய டி.எம்.எஸ்., வளாகத்திற்கு சற்று தள்ளி அமைந்திருந்த, தயாரிப்பாளரின் இல்லத்திற்கு சென்றிருந்தோம். தயாரிப்பாளரிடம் ஊதியம் கேட்டோம்.உடனே கோபம் கொண்ட அவர், 'அடுத்த மாதம் வந்து பாருங்கள்' என்று வெறுப்புடன் கூறினார். ஸ்டன்ட் சோமுவிடம் விபரத்தை கூறியபோது, அவரோ, 'எனக்கும், 'அட்வான்ஸ்' தொகை கொடுத்ததோடு சரி... முழு தொகையும் வரவில்லை' என, தன் நிலையை கூறினார்.

    பின்னர் படத்தின் இயக்குனர்களில் ஒருவரான, என்.எஸ்.ராமதாசிடம் சொன்னபோது, தன்னால் இவ்விஷயத்தில் தலையிட முடியாது என்று அவரும் ஒதுங்கினார்.எம்.ஜி.ஆரிடம் செல்லாததற்கு காரணம், எம்.ஜி.ஆரின் மனைவி சதானந்தவதி மறைந்து, இரண்டு மாதங்களே ஆகியிருந்தது. துக்கத்தில் இருந்த அவரிடம், எப்படி சொல்வது என்ற தயக்கம்.விபரத்தை கேள்விப்பட்ட எம்.ஜி.ஆர்., மிகவும் கோபமுற்றார்.

    உடனடியாக தொலைபேசியில் தயாரிப்பாளரை தொடர்பு கொண்டு, 'ஏன் இன்னும் தொகையை கொடுக்காமல் இருக்கிறீர்கள்?' என்று கேட்க, 'கொடுக்க மாட்டேன் என்று சொல்லவில்லையே... பின்னர் கொடுக்கிறேன் என்று தானே சொன்னேன்' என்று தயாரிப்பாளர் கூற, பதிலுக்கு எம்.ஜி.ஆர்., 'படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில், தாமதம் செய்வது சரியில்லை. 'அவர்கள் கஷ்டப்பட்டு, தங்கள் தொழிலை செய்பவர்கள். அவர்களுக்கான ஊதியத்தை, காலநேரம் அறிந்து கொடுக்க வேண்டாமா?

    'படம் வெளியானபின், பணம் கிடைப்பதில் என்ன உத்தரவாதம் உள்ளது... இன்று மாலை என் உதவியாளரை அனுப்புகிறேன்; அவரிடம், தொழிலாளர்களிடம் பேசிய ஊதியத் தொகையை கொடுத்து அனுப்புங்கள்...' என்று கோபத்துடனேயே தொலைபேசியை வைத்து விட்டார்.அதன்படி, எம்.ஜி.ஆரால் எங்களுக்கு உடனடியாக ஊதியத்தொகை கிடைத்தது.

    தன் மனைவியின் துக்கம் முழுவதுமாக மாறாத நிலையிலும், எங்கள் விஷயத்தில் தாமதமின்றி, உடனடியாக செயல்பட்டு உதவி செய்தார். இந்தப் படத்தின் ஒரு சிறப்பு என்னவெனில், இந்தியா - சீனா யுத்தம் நடந்து கொண்டிருக்கும்போது, இப்படம் வெளியானது. அந்த சமயத்தில், பிரதமர் நேருவின் வேண்டுகோளுக்கு இணங்க, யுத்த நிவாரண நிதியாக, 75 ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக, எம்.ஜி.ஆர்., அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

    படத்தில் நடிக்கும் கலைஞர்களுக்கு போதிய சமயத்தில் பணம் கிடைப்பதற்கு, இப்போது அமைக்கப்பட்ட யூனியன் எல்லாம் அப்போது இல்லாத நிலையில், எங்களை போன்ற கலைஞர்களுக்கு பணத்திற்கு பாதுகாப்பு கிடைக்கும் வகையில், ஒரு பாதுகாப்பு யூனியனாகவே இருந்து உதவினார், எம்.ஜி.ஆர்.,சினிமாவில் எம்.ஜி.ஆர்., இருந்தது வரை, சினிமா தொழிலாளர்களுக்கு அவரது காலம் பொற்காலம் என்றே சொல்ல வேண்டும்.இது போன்ற எண்ணற்ற மனித உதவி செயல்களால் தான் காலங்களையெல்லாம் கடந்து, மக்களின் உள்ளங்களில், எம்.ஜி.ஆர்., சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளார்.- ஆர்.கோவிந்தராஜ்

    வள்ளுவரின் குறள் நெறிப்படி

    எம்.ஜி.ஆரை பிடிக்காதவர்கள், யாரும் இருக்க முடியாது. அதே சமயம் எம்.ஜி.ஆருக்கு பிடிக்காத சிலர் உண்டு. அவர்கள் எம்.ஜி.ஆரிடம் பழகியபடியே, எம்.ஜி.ஆர்., மீதுள்ள பொறாமை காரணமாக, அவரைப் பற்றி மறைமுகமாக மற்றவர்களிடம் தேவையின்றி விமர்சிப்பவர்களாக இருந்திருப்பர் அல்லது எம்.ஜி.ஆருக்கு பிடிக்காத செயல்களை செய்பவர்களாக இருந்திருப்பர். எம்.ஜி.ஆருக்கு இது தெரியாது என்ற எண்ணத்தையும் கொண்டிருப்பர். விஷயத்தை நன்கு விசாரித்து அறியும் எம்.ஜி.ஆரும், எதுவும் தெரியாதது போல் இருந்து விடுவார்.அப்படியானவர்களை நிகழ்ச்சிகளில் எதிரெதிரே பார்க்க நேர்ந்தால், எம்.ஜி.ஆர்., அவரைத் தவிர்க்க, தன் கண்ணெதிரே தென்படும், தனக்குத் தெரியாத நபரிடம், நலம் விசாரிப்பது போல பேசி, நகர்வார். நலம் விசாரிக்கப்பட்டவருக்கு ஒன்றுமே புரியாது.

    எம்.ஜி.ஆர்., நலம் விசாரித்ததில், ஆனந்தம் கொள்வார் அந்த நபர். எதிரே வரும் தனக்கு பிடிக்காதவர்களை பார்த்து முகம் சுளித்துப் பேசுவதை தவிப்பதற்காக, எம்.ஜி.ஆர்., மேற்கொள்ளும் வித்தியாசமான செயல் இது.எம்.ஜி.ஆரின் வெறுப்பிற்கு ஆளானவர், கூனிக் குறுகி போய் விடுவார். எம்.ஜி.ஆர்., தன்னை தவிர்த்து விட்ட நிலையை எண்ணி வருந்துவார். அதுவே, எம்.ஜி.ஆர்., அவர்களுக்கு கொடுக்கும் தண்டனை. எம்.ஜி.ஆருக்கு தவறிழைத்த அந்த நபர் பின் தன் தவறை உணர்ந்து எம்.ஜி.ஆரிடம் வரும் பட்சத்தில் அவரது நிலையுணர்ந்து அரவணைத்துக் கொள்வார். வள்ளுவரின் குறள் படி, 'இன்னா செய்தாரை ஒருத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்' என்பதே, எம்.ஜி.ஆரின் கண்ணியமான செயலாக இருந்தது.

    மற்றவர் பொறுக்க மாட்டார்

    எம்.ஜி.ஆரின் மாபெரும் வெற்றிக்கு, பல்வேறு சிறப்புகளை உதாரணமாக கூற முடியும் என்றாலும், அவற்றில் மிக முக்கியமானது, மற்றவர்களின் பசி உணர்வை அவர் பொறுக்க மாட்டார் என்பது தான். எங்கு சென்றாலும் மற்றவருக்கு உணவு தேவை எனும் செய்தியை கேள்விப்பட்ட மாத்திரத்தில், உடனே அதற்கு ஏற்பாடு செய்யும் அவர், தன்னுடனேயே இருப்பவர்களின் பசியை உணர்ந்து கொள்ளாமல் இருப்பாரா என்ன! அதற்கான சம்பவம் இது.கடந்த, 1972ல் கட்சி துவங்கியபின் தமிழகம் முழுதும் மக்களை சந்தித்து கருத்து கேட்க சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த சமயம். எம்.ஜி.ஆரின் சுற்றுப் பயணங்கள் சூறாவளியை போன்றது.

    இரவு பகல் பாராது, ஓய்வைப் பற்றி கவனத்தில் கொள்ளாமல், தமிழகத்தின் ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று, மக்களை சந்தித்தார் எம்.ஜி.ஆர்., சாப்பிடுவதற்கு நேரம் நிச்சயிக்க முடியாது. மதியம் 2:00 மணிக்கு ஒரு ஊரில் உணவு சாப்பிட தீர்மானித்தால், அது சாத்தியப்படாமல், மாலை, 4:00 மணி கூட ஆகிவிடும். காரணம், வழியெங்கும் மக்கள் வெள்ளம், உணர்ச்சிப்பெருக்கு தென்படும். அவர்களைத் தாண்டிப் போக, அவர் மனம் இடம் கொடுக்காது.

    இடையில் ஆங்காங்கே கொடியேற்றும் நிகழ்ச்சிகள் ஏற்பட்டு விடும். அதையெல்லாம் முடித்து, மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அங்கிருந்து கடந்து செல்வார். அப்படியான சூறாவளி சுற்றுப்பயணம், ஒரு நாள் கும்பகோணத்தில், காலை, 10:00 மணியளவில் துவங்கியது.

    மதிய உணவை பட்டுக்கோட்டையில் வைத்துக் கொள்ளலாம் என்று தீர்மானித்து புறப்படுகிறார் எம்.ஜி.ஆர்., வழக்கம் போல் மக்கள் அலை அலையாக வழியெங்கும் எம்.ஜி.ஆரை காண காத்திருந்ததால் பட்டுக்கோட்டை செல்ல மதியம், 4:00 மணி ஆகிவிட, எம்.ஜி.ஆர்., உட்பட உடனிருந்த எங்கள் அனைவருக்கும் அதிகமான பசி.நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தரையில் நீண்ட வரிசையாக உணவு பரிமாறி எம்.ஜி.ஆருக்கு தனியாக ஒரு தனி அறையில் ஏற்பாடு செய்ய, எம்.ஜி.ஆரோ அதை ஏற்றுக் கொள்ளாமல், தரையில் அமர்ந்தார்.அருகே மெய்க்காப்பாளர்கள் நாங்கள் அமர்ந்து விட, திடீரென சுற்றும் முற்றும் பார்க்கிறார் எம்.ஜி.ஆர்., யாரையோ தேடுகிறார் என்பதை அறிந்த நாங்கள், 'என்ன அண்ணே...' என்று கேட்க, 'எங்கப்பா நம்ம கதிரேசன், ஆறுமுகம்...' எனக் கேட்க, 'முகம் கழுவப் போயிருக்காங்கண்ணே...' என்றோம்.

    கதிரேசன், எம்.ஜி.ஆரின் கார் ஓட்டுனர்; ஆறுமுகம், புகைப்படக்காரர். அவர்கள் வந்ததும், எம்.ஜி.ஆர்., 'எங்கேப்பா போனீங்க... பசிக்கலியா... பந்திக்கு முந்திக்க வேண்டாமா... ஊர்க்காரங்க எல்லாரும் உட்கார்ந்துட்டாங்களே...' எனச் சொல்லியபடி, 'டக்'கென எழுந்து விட்டார்.
    'நீங்களெல்லாம் சாப்பிடுங்க. நான் அப்புறம், என் கூட வந்தவங்களோடு சேர்ந்து சாப்பிடுகிறேன்' என்று கூறி நகரத் துவங்கினார். அந்த இடமே பரபரப்பானது; பலரும் சங்கடத்தில் நெளிந்தனர்.

    சிலர் தங்கள் இலையிலிருந்து எழுந்து, எம்.ஜி.ஆர்., உட்பட மூவருக்கும் இடம் கொடுத்து அமரச் சொல்லி வற்புறுத்திய பின், திருப்தியுடன் அமர்ந்தார் எம்.ஜி.ஆர்., யாராவது சாப்பிட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில், எம்.ஜி.ஆர்., அங்கு வந்தால், சாப்பிடுபவர் எழுந்து நிற்பதை அவர் விரும்ப மாட்டார்.'நாம் எந்நேரமும் உழைப்பது, இந்த உணவிற்காக தான். அத்தகைய உணவிற்கு மரியாதை கொடுக்க வேண்டும். எனக்கு மரியாதை வேண்டாம். சாப்பிடும் போது, யாருக்காகவும் இடையில் நிறுத்தக் கூடாது' என்று அறிவுரை வழங்குவார்.இது போன்ற இன்னும் எத்தனையோ சிறந்த குணங்களால் மட்டுமே, எம்.ஜி.ஆர்., இன்றளவிலும் மக்களின் உள்ளங்களில் நீக்கமற நிறைந்து வாழ்ந்து வருகிறார்!

    வாழ்ந்தவர் கோடி... மறைந்தவர் கோடி... மக்களின் மனதில் நிற்பவர் யார்! :பணியாளர்கள் வீடு தேடி வந்த வண்ண 'டிவி'

    எம்.ஜி.ஆர்., மறைந்து, 33 ஆண்டுகளான பிறகும், அவரை முன்னிறுத்தி தான் இன்றும் அரசியல் நகர்கிறது. மக்கள் மனதில், அவர் இன்னமும் வாழ்கிறார். எம்.ஜி.ஆரால் பலன் பெற்ற பல்லாயிரம் பேரும், இன்னும் அவர் புகழ்பாடுகின்றனர். அவர்களில் ஒருவர், பழநியாண்டவர்.தேனி மாவட்டம், சின்னமனுாரில், அந்நாளில் பிரபல புகைப் படக்கலைஞரும், தந்தையுமான பவுனுடன் ஸ்டூடியோ நடத்திக் கொண்டு இருந்தார், பழநியாண்டவர்.

    கடந்த, 1986ல், ராஜ்யசபா, அ.தி.மு.க., - எம்.பி.,யாக இருந்த கம்பம் ஆர்.டி.கோபால் இல்ல திருமணத்தில், புகைப்படம் எடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட போது, எம்.ஜி.ஆரிடம் அறிமுகமானவர்.திருமணத்தை நடத்தி வைத்த, எம்.ஜி.ஆர்., தன்னையும் அழைத்து, தன்னுடன் படம் எடுத்துக் கொண்டது தான், தன் வாழ்நாளின் உச்சக்கட்ட மகிழ்ச்சி என்றார், பழநியாண்டவர்.அவர் நினைவுகூர்ந்ததாவது: நான் எம்.ஜி.ஆரின் ரசிகன் மட்டுமில்லை; பரம பக்தன். எம்.ஜி.ஆரை படம் எடுக்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சியில் இருந்தவனை, என்னை அழைத்து, படம் எடுத்துக் கொண்டது பெரும் பாக்கியம்.

    எம்.ஜி.ஆர்., மறைவுக்கு பின், அவர் வாழ்ந்த, சென்னை, ராமாபுரம் தோட்டத்தில், அவர் மனைவி ஜானகியின், தனி வீடியோகிராபராக பணிபுரிந்தேன்.எம்.ஜி.ஆர்., அமெரிக்காவில் இருந்து ஆசைப்பட்டு வாங்கி வந்த, 'என்3' வீடியோ கேமராவை, நான் தான் உபயோகித்தேன்.எம்.ஜி.ஆரின் வள்ளல் தன்மையும், கொடை குணமும் மக்களுக்கு மட்டுமல்ல; வீட்டு பணியாளர்களுக்கும் தாராளமாக கிடைத்தன. அதை சொல்லி சொல்லி, அவர்கள் மகிழ்வது வழக்கம்.ஒரு முறை, 'டிவி'யில், எம்.ஜி.ஆர்., நடித்த, நம்நாடு படம் ஒளிபரப்பாக இருந்தது. வீட்டில் வேலை பார்த்தவர்கள், வேலை நேரம் முடிந்தும், வீட்டிற்கு போகவில்லை. வீட்டில் 'டிவி' இல்லாததால், எம்.ஜி.ஆர்., அவர்களை படம் பார்க்கச் சொல்லிவிட்டு, படத்துக்கு நடுவே ருசிக்க, பலகாரம், டீயும் ஏற்பாடு செய்தார். படம் முடிந்த பின், சாப்பாடும் ஏற்பாடு செய்யப்பட்டது. பணியாளர்கள் யார் வீட்டில் எல்லாம், 'டிவி' இல்லை என கணக்கெடுத்தார். அத்தனை பேர் வீட்டிலும், 'டிவி' பொருத்த, 'ஆர்டர்' கொடுத்தார்.

    எல்லார் வீட்டிலும், 'ஒனிடா' என்ற நிறுவனத்தின் வர்ண 'டிவி' பொருத்தப்பட்டது.அன்றைய தினத்தில், நடுத்தர வர்க்கத்தினருக்கு கூட, அப்படிப்பட்ட வண்ண 'டிவி' வாங்குவது, ஒரு கனவாகவே இருந்தது.வீட்டில், 'டிவி' பொருத்தப்பட்ட போது தான், அது எம்.ஜி.ஆர்., சொல்லி வந்தது என்பது, பணியாளர்களுக்கு தெரியவந்தது. இது போல, எத்தனையோ சம்பவங்களை சொல்வர்.ராமாபுரம் தோட்டத்தில் உள்ள அவரது பரிசுப்பொருட்களை, தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர்., நினைவு இல்லத்திற்கு மாற்றிய பின், ராமாவரம் வீட்டில் வேலை இல்லை. வெளியில் வேலை பார்க்கவும் விருப்பம் இல்லை.

    நான் தலைவரது நினைவு இல்லத்தை பார்வையிட வரும் பார்வையாளர்களுக்கு, புகைப்படம் எடுத்துக் கொடுத்து, அதில் வரும் வருமானத்தில் வாழ்கிறேன். இன்றைக்கும், என் குடும்பத்திற்கு, அவர் தான் சோறு போட்டுக் கொண்டு இருக்கிறார். இவ்வாறு, பழநியாண்டவர் கூறிய போது, அவர் நா தழுதழுத்தது.

    அ.தி.மு.க., உருவாக என்ன காரணம்?

    எம்.ஜி.ஆரின் நினைவகளை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார், நிழல் போல உதவியாளராக வலம் வந்த கே.மகாலிங்கம்.இது குறித்து அவர் கூறியதாவது:குடும்பத் தலைவரை இழந்து, நிர்க்கதியாய் நின்ற, நடிகர் குண்டு கருப்பையா குடும்பத்திற்கு ஆறுதலாக இருப்பதற்காக, அவரின் மகனான, என்னை தனி உதவியாளராக அமர்த்தினார் எம்.ஜி.ஆர்., எனக்கு மட்டுமல்ல, என் உடன்பிறந்த சகோதர - சகோதரியர் அனைவருக்கும், அவர் தான், தந்தை போல இருந்து, திருமணத்தை நடத்தி வைத்தார்.மனதிற்கு பிடித்தவர்களுக்கு, 200நுாறு ரூபாய் நோட்டுகளை வழங்குவது, அவரது வழக்கம். முதல் முதலாக அவரை சந்தித்த போது, எனக்கும் 200 ரூபாய் வழங்கினார். உதவி கேட்டு வந்தவர்களுக்கு, 200 ரூபாய்களாக, அள்ளி அள்ளி கொடுப்பார்.
    தோட்டத்தில், எப்போதும் சாப்பாடு தயாராகியபடி இருக்கும். யார் வந்தாலும், முதலில் சாப்பிட்டுவிட்டு தான் பேசச் சொல்வார்.

    தி.மு.க.,வில் இருந்து, எம்.ஜி.ஆர்., நீக்கப்பட்டபோது, அவர் 'சத்யா ஸ்டூடியோ'வில் படப்பிடிப்பில் இருந்தார். அவரின் கருத்தறிய, ராமாபுரம் தோட்டத்தில் குவிந்தனர், பத்திரிகையாளர்கள். படப்பிடிப்பில் இடைவெளியில், மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டு இருந்த எம்.ஜி.ஆருக்கு போன் செய்து, விஷயத்தைச் சொன்னேன். குழப்பத்தில் நான், 'பத்திரிகையாளர்களிடம் என்ன சொல்ல' என, கேட்டேன். அவர் சொன்ன பதில், ''நான் பாயசம் சாப்பிட்டுக் கொண்டு
    இருக்கிறேன்!'' வீடு திரும்பிய எம்.ஜி.ஆர்., அமைதியாக இருந்தார். நாஞ்சில் மனோகரன், எஸ்.டி.எஸ்., போன்றவர்கள், எம்.ஜி.ஆரை மீண்டும் தி.மு.க.,வில் சேர்க்கும் பேச்சில் இறங்கினர். ஆனால், வீட்டு வாசலில் திரண்டு ரசிகர்கள் நின்று, கண்ணீர் விட்டு அழுதனர்; கதறினர். தி.மு.க.,வினரால் தாக்கப்பட்ட முசிறிபுத்தன் போன்றவர்கள், ரத்தம் வழிய, எம்.ஜி.ஆரை பார்க்க வந்தனர்.

    ரசிகர்களின் கண்ணீரில் நெகிழ்ந்து போய் இருந்த எம்.ஜி.ஆர்., அவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் வெகுண்டு எழுந்தார். இது, அவரை உறுதியான முடிவுக்கு அழைத்துச் சென்றது. 'இனி, எந்த சமாதானத்தையும் ஏற்பதாக இல்லை' என்று சொன்னவர், அ.தி.மு.க.,வை
    துவக்கினார்.அவரது எண்ணம், கொள்கை, லட்சியம் மூலை முடுக்கெல்லாம் பரவியது. இதில், 'தினமலர்' நாளிதழும் முக்கிய பங்காற்றியது. 'தினமலர்' தனக்கு பெரும் பலமாகவும் உறுதுணையாகவும் இருந்ததாக, எம்.ஜி.ஆர்., கருதினார். எம்.ஜி.ஆர்., துவக்கிய கட்சி, அசுர வளர்ச்சி பெற்று, வெற்றிகளை குவித்தது. அவர் முதல்வரானதும், என்னை அதிகாரபூர்வமாக உதவியாளராக்கி அழகு பார்த்தார். அவர் பச்சை குத்திக் கொள்ளச் சொன்ன போது, பலரும் தயங்கினர். நான் ஒரு கையில், இரட்டை இலையையும், இன்னொரு கையில் எம்.ஜி.ஆர்., படத்தையும் பச்சை குத்திக்கொண்டேன்.
    இதை எல்லாம் மனதில் வைத்து தான், 'கட்சியை நடத்திச் செல்வதில், மகாலிங்கத்திற்கு பெரும் பங்கு உண்டு' என்று பொது வெளியில் என்னை பாராட்டினார்.அவர் இறக்கும் வரை, அவரது உதவியாளராகவே இருந்தேன். அது எனக்கு மட்டுமல்ல; என் குடும்பத்துக்கே பாக்கியம். அதன் பின், அவரது நினைவுகளோடு இன்று வரை வாழ்ந்து வருகிறேன்.

    குண்டு கருப்பையா குடும்பம்

    எம்.ஜி.ஆரின் படங்களில், நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர், குண்டு கருப்பையா. அவர் மறைந்த போது, அவர் இறுதிச் சடங்கை முன்னின்று நடத்திக் கொடுத்தவர்.குண்டு கருப்பையாவின் மகன், கே.மகாலிங்கத்தையும் எம்.ஜி.ஆர்., அரவணைத்துக் கொண்டார்.
    நாடு போற்றும் நடிகராக இருந்த காலத்தில் இருந்து, 1987ம் ஆண்டு, அவர் உலகம் போற்றும் முதல்வராக இருந்து மறைந்தது வரை, எம்.ஜி.ஆர்., நிழல் போல தனி உதவியாளராக, கூடவே இருந்தார் கே.மகாலிங்கம். தற்போது, சென்னை, ராஜாஅண்ணாமலைபுரத்தில் குடியிருக்கிறார்.

    எப்போதும் பிரகாசிக்கும் நட்சத்திரம் எம்.ஜி.ஆர்.,

    முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்., பாவேந்தர் பாரதிதாசன் விருதுக்கான பரிந்துரை பட்டியலில், 'கவிஞர் மு.மேத்தாவுக்கு இந்த விருதை வழங்கவும்' என, தன் கையால் எழுதியிருந்தார். இதை, இன்றும் நினைவுகூர்கிறார், 'சாகித்ய அகாடமி' விருது வென்ற, மு.மேத்தா.
    எம்.ஜி.ஆர்., குறித்து, அவர் கூறியதாவது:எம்.ஜி.ஆர்., என்ற பெயருக்கு, இப்போதும் இருக்கிற மந்திர சக்தியை கொடுத்தவரே, எம்.ஜி.ஆர்., தான். ஏராளமானோர் மக்களால் புகழப்பட்டாலும், குறிப்பிட்ட காலத்துக்கு பின், அந்த பெயரும், புகழும் மறக்கப்படும்.

    எம்.ஜி.ஆர்., நல்ல நடிகர் என்பதைத் தாண்டி, முழுமையான மதிக்கத்தக்க மாண்புமிகு மனிதர்.எம்.ஜி.ஆரின் இரக்க குணம், ஈகை குணம், வாழ்த்துகிற குணம், அவரை எல்லார் மனதிலும் நிலைநிறுத்தியுள்ளது. தன்னைப் போல் மற்றவர்களையும் மதித்து, தன்னைப் போல் பிறரும் நன்றாக வாழ வேண்டும் என்ற குணம், அவரிடம் இருந்தது.எந்த துறையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அன்புடன் அரவணைத்தார்.கஷ்டப்பட்டு வாழ்க்கையில் உயர்ந்தவர்களை மதித்தார்.மாற்றுக் கட்சியில் இருந்தாலும், உண்மையான கலைஞர்கள், எழுத்தாளர்கள் மீது, எம்.ஜி.ஆருக்கு மதிப்பும், மரியாதையும் உண்டு.

    நடிகராக இருந்தபோதும், தலைவராக இருந்தபோதும், முதல்வராக இருந்தபோதும், அவரது நடவடிக்கைகள், மக்கள் நலம் சார்ந்தவையாக, மக்களுக்காக சிந்திப்பவையாக இருந்தன.நடிகர் சிவாஜி நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். ஆனால், எம்.ஜி.ஆரின் சினிமாவில், அவரையே அவரின் ரசிகர்கள் நேரில் பார்ப்பதாக உணர்ந்தனர். மக்களை காப்பாற்றுபவராக சினிமாவில் வந்தார். மக்களைக் காப்பவராகவும் வாழ்ந்து காட்டினார்.

    எதிரிகள் கூட, இவரை நேரில் ஒருமுறை சந்தித்தால் நண்பர்களாவர். இது தான், அவரது செல்வாக்குக்கு காரணம்.வர்த்தகமான சினிமாவில், நிறைய பேர் தங்களின் வளர்ச்சியை மட்டும் கவனிப்பார்களே தவிர, மற்றவர்களின் நலத்தைப் பற்றி யோசிக்க மாட்டார்கள். ஆனால், எம்.ஜி.ஆர்., மற்றவர்களின் நலத்தையும் பார்த்தார். அது அவருக்கு பெரிய பலத்தைக் கொடுத்தது. அவரது கோபம் கூட ஒரு தீபம் தான். அது அழுக்குகளையும், இருட்டையும் அகற்றும்.மக்கள் வெள்ளம் ஒருவரைச் சந்திக்க எதையும் பொருட்படுத்தாமல் காத்திருந்தது என்றால், அது எம்.ஜி.ஆரை சந்திக்கத் தான். எம்.ஜி.ஆரின் உயர்வு, அவரது உருவத்தால் ஏற்பட்டதல்ல; பரந்த அவரது உள்ளத்தால் ஏற்பட்டது. எளியவர்களுக்கு உதவும் பண்பு, இயற்கையிலேயே அவருக்கு இருந்தது. எளிய மக்களின் வாழ்க்கை கஷ்டங்களை புரிந்து, அதைப் போக்கும் மருத்துவராக எம்.ஜி.ஆர்., வாழ்ந்தார். அதனால் தான், அவர் எப்போதும் பிரகாசிக்கும் நட்சத்திரமாக திகழ்கிறார்.இவ்வாறு, மு.மேத்தா கூறினார்..........Baabaa

  11. #2070
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரைக்காவியங்கள் மறு வெளியீடு தொடர்ச்சி .........05/03/21முதல்*----------------------------------------------------------------------------------------------------------------------
    சென்னை பாடி லட்சுமி பாலா -*
    மதுரை - சக்தி சினிமாஸ்*
    திண்டுக்கல் விஜய்* அரங்குகளில்*
    நம் நாடு தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது*


    தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் பி.என்.எஸ். அரங்கில்*
    அடிமைப்பெண் - தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .


    காஞ்சிபுரம் பாலசுப்ரமணியாவில்* நினைத்ததை முடிப்பவன்*
    தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .

  12. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •