Page 183 of 210 FirstFirst ... 83133173181182183184185193 ... LastLast
Results 1,821 to 1,830 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #1821
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எங்கே_தேடுவோம் ...?!

    பிரபல திரைப்பட கதை வசனகா்த்தா*
    சக்தி கிருஷ்ணசாமி .

    வீரபாண்டிய கட்டபொம்மன்*
    போன்ற பல திரைப்படங்களுக்குக்*
    கதை வசனம் எழுதியவா் .

    அவரது மகளுக்குத் திருமணம்*
    நடைபெறுவதாக இருந்தது .

    ஒருநாள் , அமைச்சராகவும்*
    பேரவைத் தலைவராகவும்*
    இருந்த க.இராஜாராமிடம் இதுபற்றி*
    சக்தி கிருஷ்ணசாமி பேசிக்*
    கொண்டிருந்தபோது ,

    'உங்களுக்குத்தான் எம்.ஜி.ஆரைத்*
    தொியுமே . அவா் படங்களுக்கும்*
    வசனம் எழுதி இருக்கிறீா்களே ,*
    அவாிடம் உதவி கேட்கலாமே' என்றாா்*
    இராஜாராம் .

    'நான் தொழில் ரீதியாகத்தான்*
    அவருடன் பழகி் இருக்கிறேன் .*
    இதுபோல் உதவி கேட்கும் அளவுக்கு*
    நெருங்கிப் பழகியதில்லையே' என்று*
    சக்தி கிருஷ்ணசாமி சொல்லி இருக்கிறாா் .

    'அதனால் என்ன, நான் கூட்டிப்*
    போகிறேன் வாருங்கள்' என்று*
    சொல்லிவிட்டு இராஜாராம் , அவரை*
    அழைத்துச் சென்று எம்.ஜி.ஆாிடம்*
    அவாின் நிலைமையை எடுத்துச்*
    சொன்னாா்.

    உடனே புரட்சித் தலைவா்*
    எம்.ஜி.ஆா்., சக்தி கிருஷ்ணசாமியைப்
    பாா்த்து 'எவ்வளவு பணமிருந்தால்*
    திருமணத்தை நன்றாக நடத்துவீா்கள்'
    என்று கேட்டாா் .

    உடனே 'இருபதாயிரம் இருந்தால்*
    சிறப்பாகச் செய்து விடுவேன்' என்று*
    கிருஷ்ணசாமி சொல்ல ,*

    உடனே இருபத்தைந்தாயிரம் ரூபாய்*
    கொடுத்து , திருமணத்தைச் சிறப்பாக*
    நடத்துங்கள்'

    என்று சொல்லிவிட்டு ,

    பொருளாதார ரீதியில் மேலும் உதவும்*
    வகையில் , அப்போது தான் நடிக்க*
    ஒப்பந்தமாயிருந்த "எங்க வீட்டுப் பிள்ளை" , படத்திற்கு வசனம் எழுதவும்*
    வாய்ப்பளித்தாா் .

    புரட்சித் தலைவா் எம்.ஜி.ஆா்., போன்ற
    ஒரு மாமனிதரை இனி நாம் எங்கே*
    தேடுவோம் ?...

    ♥♥

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1822
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நம் தங்க தலைவரின் "மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்", படத்தின் படப்பிடிப்பு வட மாநிலம் ஜெய்ப்பூர் பகுதியில் படம் ஆகி கொண்டு இருந்த நேரம்.

    ஒரு ஓய்வு நாளில் பட குழுவினர் அருகில் இருந்த அஜ்மீர் தர்காவில் வழி பாடு நடத்த செல்ல...அங்கே வரும் பயணிகளை அழைத்து கொண்டு செல்லும் குதிரை வண்டிகளில் ஒரு வண்டி பின் புறம் ..

    நம் தலைவரின் பெரிய படம் ஒட்ட பட்டு இருக்க கண்ணை நம்ப முடியாமல் குழுவினர் அருகில் சென்று அந்த வண்டியின் பின் புறம் பார்க்க அது தலைவர் படமே தான்...

    தன் குதிரை வண்டி அருகில் ஒரு கூட்டம் நிற்பதை பார்த்த அதன் உரிமையாளர் அருகில் வர நம்மவர்கள் இவர் படத்தை நீங்கள் ஏன் ஒட்டி இருக்குறீர்கள் என்று வியந்து ஹிந்தி தெரிந்தவர் கேட்க.

    அதற்கு அந்த வட இந்திய வண்டிக்காரர் இவர் எனக்கு கடவுள் போல...இவர் நடித்த படம் ஒன்று அதாவது "அடிமைப்பெண்", பட பிடிப்பின் போது மொத்த குழுவினருக்கும் மற்றும் ஒட்டகங்களுக்கும் எங்கு இருந்தும் தண்ணீர் நிரப்பி பட பிடிப்பு நடக்கும் இடத்துக்கு கொண்டு வந்து சேர்ப்பேன்.

    படத்தில் நாயகன் இவர் என் உண்மை உழைப்பை பார்த்து எல்லா காட்சிகளும் எடுக்க பட்டு அவர் ஊர் திரும்பும் வேளையில்.

    நான் அணுதினம் கொடுத்த தண்ணீர் லோடுகள் கணக்கை தினம் தினம் சரியாக பணம் கொடுத்த போதும்...

    ஊர் திரும்பும் நாள் அன்று இந்த எளிய குதிரை வண்டி காரன் எதிர் பார்க்காத ஒரு பெரும் தொகையை எனக்கு கொடுத்து என்னை கை குலுக்கி விடைபெற்றார்.

    நானும் எத்தனையோ பெரிய மனிதர்கள் செல்வந்தர்கள் நடிகர்கள் எல்லோரையும் பார்த்து இருக்கிறேன்...ஆனால் அவர் கண்ணில் இருந்த நேர்மை உண்மை வேறு எங்கும் இது வரை நான் பார்க்க வில்லை...அந்த நொடி முதல் நான் என்னை அவரிடம் இழந்தேன் என்று சொல்ல...

    குழுவினர் திகைத்து போய் இப்போ அவரை பார்க்க வர விருப்பம் ஆ என்று கேட்க அவரும் எங்கே எங்கே என்று ஆவலுடன் கேட்க அவரை அழைத்து கொண்டு நம் மன்னவர் முன்பு விவரம் சொல்லி அவரை நிறுத்த.

    தலைவர் மனம் நெகிழ்ந்து அவரை வரவேற்று தொழில் எப்படி இருக்க என்று கேட்க உங்க புண்ணியத்தில் அருமை என்று அவர் பதில் சொல்ல..

    இப்போ என்ன வேண்டும் உங்களுக்கு என்று தலைவர் கேட்க ஐயா எனக்கு ஒன்றும் வேண்டாம்...உங்கள் உடன் ஒரு புகைப்படம் படம் மட்டும் போதும் என்று சொல்ல.

    அவரை அருகில் அழைத்து அவர் தோளில் கையை போட்டு கொண்டு அவர் தலைவர் உடன் எடுத்து கொண்ட அந்த படம் இன்னும் அஜ்மீர் தர்கா பகுதியில் அவர் குதிரை வண்டியில் ஒட்ட பட்டு சுற்றி கொண்டு இருப்பதை.

    நம்பித்தான் ஆக வேண்டும்...வாழ்க தலைவர் புகழ்.

    உங்களில் ஒருவன். நெல்லை மணி...
    நன்றி தொடரும்...

    பூவுடன் சேர்ந்த நாறுக்கு கிடைக்கும் புகழ் எல்லாம் பூக்களுக்கு மட்டுமே சொந்தம் என்பது உலக பொது விதி..நன்றி.........

  4. #1823
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    'கண் நிறைந்த தலைவரை இதயத்தில் பூஜிக்கும் கண்பார்வையற்ற தாய்'- உங்கள் நெஞ்சை பதம் பார்க்கும் உருக்கமான செய்தி.....'என்ன உடம்புயா...சும்மா கல்லு மாதிரி இருக்காரே தலைவரு'- இப்படி பாத்திமாபீவி மெய்சிலிர்த்தது இன்று மட்டுமல்ல. 1969 லேயே தனது இளம் வயதில் தலைவரின் மீது உள்ள அன்பில் அழகில் மெய்சிலிர்த்து சொன்ன வார்த்தைகள். சேலம் லைன்மேடு பகுதியில் வசிப்பவர் 70 வயதான மூதாட்டி பாத்திமாபீவி. கடந்த 13 நாட்களாக(28.01.2021) சேலம் அலங்காரில் வெற்றிநடைபோடும் அடிமைப்பெண் காவியத்தை ஒருநாள் விட்டு ஒருநாள் பார்த்து வருகிறார். தலைவரின் எந்த காவியமானாலும் வசனங்களை அச்சு பிறழாமல் மனப்பாடமாக சொல்கிறார். கண்கண்ட கணவரை இழந்த இவர் தற்போது கண் பார்வை இன்றி உள்ளார். என்றாலும் தலைவர் காவியத்தை காதால் கேட்டு ரசிக்க வருகிறார். எவரது உதவியும் இன்றி தனது பணத்தை கொண்டே டிக்கெட் எடுக்கிறார். தாயை தியேட்டருக்கு அழைத்து வருவது இந்த தெய்வத்தாயின் மகன் ரபீக். சமையல் வேலைக்கு சென்று தாயை வாழவைக்கிறார். மிகவும் ஏழ்மையில் குடிசை ஒன்றில் வசிக்கிறார்கள்." அடிமைப்பெண்" காவியத்தை 1969 ல் சாந்தி தியேட்டரில் 15 க்கும் மேற்பட்ட தடவை பார்த்தாராம். தலைவரின் கொள்ளை அழகில் மனதை பறிகொடுத்த பல்லாயிரம் ரசிகர்களில் இவரும் ஒருவர். இந்த அலங்கார் தியேட்டரில் தலைவரின் "ரிக்சாக்காரன்", "என் அண்ணன்" உள்ளிட்ட பல காவியங்கள் நூறு நாட்களை தாண்டி ஓடி வெற்றி பெற்றுள்ளது என்றும் என் அண்ணன் காவியத்திற்கு 107 அடி உயர கட்அவுட் வைக்கப்பட்டது என்றும் இந்த தியேட்டரை முன்னாள் அமைச்சர் திரு. ராஜாராம் திறந்து வைத்துள்ளார் என்றும் தலைவர் இந்த தியேட்டரில் நடந்த தனது காவியத்தின் வெற்றிவிழாவுக்கு வருகை தந்துள்ளதாகவும் கூறும் திரு. மாஸ்டர் சுப்பிரமணி, தலைவர் வீட்டில் அவரை சந்தித்து தலைவர் கைகளை பிடித்து மகிழ்ந்ததையும் நினைவூட்டினார். தீவிர தலைவர் பக்தரான மாஸ்டர் திரு.சுப்பிரமணி பல நாள் காத்திருந்து பாத்திமாபீவி அம்மாளை கண்டுபிடித்து அவருக்கு சிறப்பு செய்ய ஏற்பாடு செய்தார். இந்த அம்மாவைப்பற்றி அறிந்த நாளிலிருந்து 'எனக்கு புகைப்படம், வீடியோ பேட்டி எடுத்து அனுப்புங்கள்'என நச்சரித்துக் கொண்டே இருந்தேன். அதை அடிமைப்பெண் 10 வது நாள் விழாவான கடந்த ஞாயிறன்று நிறைவேற்றி வைத்தனர் தலைவர் பக்தர்கள். அதன்படி பகுதி கழக எம்ஜிஆர் மன்ற செயலாளர் திரு.ஜெ.மாணிக்கம் அவர்கள் பாத்தீமாபீவி மற்றும் அவரது மகனுக்கு புத்தாடைகள் உள்ளிட்ட பல உதவிகள் வழங்கி பாராட்டி மகிழ்ந்தார். தியேட்டரில் படம் பார்க்க வந்த 130 க்கும் மேற்பட்ட ரசிகர்களுக்கு எவர்சில்வர் தட்டு பரிசு வழங்கினார். தியேட்டர் ஊழியர்கள் 10 க்கும் மேற்பட்டோருக்கு எவர்சில்வர் குடம் வழங்கினார். செய்தி தொகுப்பு நான்- (சாமுவேல்,சத்தியமங்கலம்).பேட்டி- சுப்பிரமணி. புகைப்படங்கள் திரு.ஜெ.மாணிக்கம் அவர்களின் மகன் திரு.சவுந்திரராஜன். உங்கள் கருத்துகளை, வாழ்த்துகளை பாத்திமாபீவி அம்மாளுக்கு நேரில் தெரிவிக்க முடியாவிட்டாலும் திரு.சுப்பிரமணி அவர்களுக்கு தெரிவிக்கலாம்.(9566537161).........

  5. #1824
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நமது தலைவர் எம்.ஜி.ஆர் திரையுலகில் கதாநாயகனாக தெரிவு செய்யப்பட்டு நடித்த முதல் படம் ராஜகுமாரி.எம்.ஜி.ஆர் கதாநாயகனாக டைரக்டர் ஏ.எஸ்.ஏ.சாமி பெரு முயற்சி மேற்கொண்டவர்.ராஜகுமாரி படத்தை இயக்கியவரும் ஏ.எஸ்.ஏ சாமி தான்.படம் 11.4.1947ல் வெளியாகி வெற்றி பெற்று 168 நாட்கள் ஓடியது.அந்த ஏ.எஸ்.ஏ சாமி ,கலைமணி ஜூன் 1952 இதழில் ஒரு பேட்டி கொடுத்தார்.அதில் எம்.ஜி.ஆர் கத்திசண்டையில் கைதேர்ந்தவர்,வசனங்கள் உதவி செய்தால் வீர ரசம் இவரிடம் நன்றாக இருக்கும் என்று புகழாரம் செய்துள்ளார்.ஆம்.நமது தலைவர் சரித்திர ராஜாங்க படங்களில் பேசும் வீர வசனங்களில், தமிழ் உச்சரிப்பில் வீர ரசம் சொட்டியது உண்மைதானே !.........nssm

  6. #1825
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரைப்படங்கள் மறுவெளியீடு*தொடர்ச்சி ................இந்த வாரம் வெளியான* படங்கள்*
    ---------------------------------------------------------------------------------------------------------------------
    சென்னை* மூலக்கடை ஐயப்பாவில்* 28/1/21* முதல்* நீரும் நெருப்பும்*
    தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .*

    தகவல் உதவி : திரு. ராமு, மின்ட்.*



    29/01/21* முதல் மதுரை* ராம் அரங்கில்* எங்க வீட்டு பிள்ளை*
    தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .

    தகவல் உதவி : திரு.எஸ். குமார், மதுரை .


    29/01/21 முதல் கோவை சண்முகாவில்* தொழிலாளி* தினசரி 3 காட்சிகள்*
    நடைபெறுகிறது .

    தகவல் உதவி : திரு.ஜெய்குமார் .,கோவை .

  7. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  8. #1826
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #வாத்தியாருன்னா #மாஸ்

    #Real #Action #Hero

    திரைப்படத்துறையில் பெரும்பாலான ஆக்ஷன் ஹீரோக்கள் நிஜவாழ்வில் ஆக்ஷன் ஹீரோக்களாக இருப்பதில்லை...உடலை மட்டுமே கட்டுமஸ்தமாக வைத்துக்கொண்டு என்ன பயன்? நெஞ்சுல 'தில்'லு வேணுமே!!!

    வாத்தியார் நிஜவாழ்விலும் ஆக்ஷன் ஹீரோ தான்...கேள்விப்பட்ட சில சம்பவங்களைப் பகிர்கிறேன்...

    என் தந்தையார் சொன்னது :

    ஒருமுறை பெங்களூரில் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும் போது, படப்பிடிப்பு குழுவினரைத் தாக்கமுயன்ற கன்னடவெறியர்களை தனியொருவராக சமாளித்தது...

    வாத்தியாரின் மெய்க்காப்பாளர் திரு.கே.பி.இராமகிருஷ்ணன் கூறியது :

    இரயிலில் இரவு நேரம் பயணம் செய்துகொண்டிருக்கும் போது, தலைவர் இருந்த கோச்சில் 'ஐயோ, அம்மான்னு' அலறல் சத்தம்...நாங்கள் ஓடிச்சென்று பார்க்க, தன்னைத் தாக்கவந்த சில சமூகவிரோத கும்பலை தனியாளாக 'பெண்டு' நிமிர்த்துக்கொண்டிருந்தார்.

    புத்தகத்தில் படித்தது :

    ஒருமுறை இரவு நேரம் காரில் வரும்போது, கத்தியுடன் தன்னைத் தாக்க வந்த வழிப்பறிக்கொள்ளையர்களை துணிச்சலாக எதிர்கொண்டது...

    மேலும், உ.சு.வா படப்பிடிப்பில் கதாநாயகியிடம் வம்பு செய்த ஜப்பான்காரனைப் பதம் பார்த்தது...

    இறுமாப்புடன் அறைகூவல் விடுத்த தாராசிங்கிடம், 'தான் உங்களுடன் மல்யுத்தம் செய்யத்தயார்' என பகிரங்கமாக சவால் விட்டது...

    இப்படிப் பட்டியல் நீளும்............BSM...

  9. #1827
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ��"எம்.ஜி.ஆர் பாடம் புகட்டுவதில் அவர் ஒரு நிஜ வாத்தியார்"��

    மைசூரில் :

    கங்கா கெளரி படத்தின் ஷூட்டிங் மைசூரில் நடந்தபோது சிலர் அங்கிருந்த ஜெயலலிதாவிடம் வந்து நீங்கள் கர்நாடகாவில் தானே பிறந்தீர்கள் அதனால் ‘கன்னடம் வாழ்க, தமிழ் ஒழிக’ என்று சொல்லுங்கள் என்று வற்புறுத்தினர். ஜெயலலிதா தமிழ் ஒழிக என்று சொல்ல மறுத்துவிட்டார். கூட இருந்த படப்பிடிப்புக் குழுவினர் வற்புறுத்தியும் ஜெயலலிதா சொல்லவில்லை. கன்னடர்கள் படப்பிடிப்பு நடத்தவிடமாட்டோம் என்று கலாட்டா செய்தனர். இந்த விஷயம் தெரிந்து அருகில் வேறு ஊரில் ஷூட்டிங்கில் இருந்த எம்.ஜி.ஆர் அங்கு வந்துவிட்டார். இப்போது படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் பாதுகாப்பாக உணர்ந்தனர். எம்.ஜி.ஆர் இங்குதான் இருக்கிறார் அவர் பார்த்துக்கொள்வார் என்று நம்பினர். ஜெயலலிதாவிடம் பேசி ஆறுதல் கூறினார். தக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கும்படி தயாரிப்பாளருக்கு ஆலோசனை வழங்கினார்.

    ஒரு சமயம் மைசூரில் எம்.ஜி.ஆரும் லதாவும் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன. அப்போது படப்பிடிப்பு இடைவேளை விடப்பட்டது. எம்.ஜி.ஆர் சற்று தூரத்தில் அமர்ந்திருந்தார். அதை கவனிக்காத சில வாலிபர்கள் லதாவையும் மற்ற நடிகைகளையும் பார்த்து ஆபாசமாக பேசி சிரித்தனர். இதை கவனித்த எம்.ஜி.ஆர் விரைந்து வந்து அவர்களை அடித்து உதைத்தார். அநியாயம் நடக்கும்போது ஸ்டன்ட் நடிகர்களை அழைத்து அடிக்கச் சொல்வோம் என்று எம்.ஜி.ஆர் காத்திருக்க மாட்டார். எதிரிகள்மீது விழும் முதல் அடி அவர் அடியாகத்தான் இருக்கும். அவர்கள் தம் வாழ்நாளில் திரும்பவும் அந்தத் தப்பை செய்ய நினைக்காத அளவுக்குப் பாடம் புகட்டுவதில் அவர் ஒரு நிஜ வாத்தியார்..........mgn...

  10. #1828
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #வியப்பும் #பக்தியும்

    பேராசிரியர். திரு.கு.ஞானசம்பந்தம் ஒரு நிகழ்ச்சிக்காக இலங்கைக்குச் சென்றிருந்தார்...நிகழ்ச்சியை முடித்துவிட்டுக் 'கண்டி' நகரம் வழியாக டாக்ஸியில் வந்துகொண்டிருந்தார்...

    திடீரென அந்த டாக்ஸி டிரைவர் வண்டியை நிறுத்தி ஒரு காலியிடத்தை நோக்கிக் கும்பிட்டுவிட்டு பின்னர் காரை ஓட்டத்தொடங்கினார்...

    டிரைவரின் செய்கையைப் பார்த்த
    ஞானசம்பந்தன் அவர்களுக்கு ஒரே வியப்பு..."அந்த இடத்தில் கோயிலோ வேறொன்றுமோ இல்லை!!! ஒரு காலியிடத்தைக் கும்பிடுகிறாரே!!!!"

    ஏன் தம்பி! அந்த இடத்தில் ஒன்றுமே இல்லையே! அதை ஏன் கும்பிட்டீர்கள்...???

    அதற்கு டிரைவர்,
    "இந்த இடத்தில் தான் ஒரு காலத்தில் எங்க எம்ஜிஆர் பிறந்தவீடு இருந்தது..."
    என்றதும்...!!!

    ஞானசம்பந்தன் அவர்கள் அப்படியே ஒருகணம் ஆடிப்போய்விட்டார்...
    'ஒரு காலியிடத்தில் தங்கள் மனங்கவர்ந்த தலைவன் பிறந்தவீடு என்ற ஒரே காரணத்திற்காக வணங்குகிறார்களென்றால் அந்தத் தலைவன் எப்படிப்பட்ட தலைவனாக இருந்திருக்கிறார்...அப்படிப்பட்ட தலைவன் மேல் இந்த மக்களுக்கு எந்தளவு பக்தி...!

    பிரமித்துப்போனார்...பேராசிரியர்.........bsm.. .

  11. #1829
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    'பூனை கண்ணை மூடினால் உலகமே இருண்டது' என்று நினைக்குமாம். அதுபோல சில கிணற்று கைஸ்கள்
    அய்யனின் முதல் படம் வெளியான நாளான அக் 17 ல் புரட்சி தலைவர் கட்சி ஆரம்பித்தாராம். அதனால் யாரும் அழிக்க முடியாத பெருவெற்றி பெற முடிந்ததாம். இந்த அரை பைத்தியங்களை என்ன சொல்லி அழைப்பது என்று அகராதியை புரட்டி பார்த்தும் சரியான வார்த்தைகள் கிடைக்காமல் அலைகிறேன்.

    சரியான அரைவேக்காடுகளாக திரியும் இவர்களை போன்றோர்கள் கொடுத்த பில்ட் அப்களில்தான் பேஸ்மென்ட் வீக்காகி அய்யன் ஆல் அவுட் ஆனதை மனதில் கொள்ளாமல் இன்னமும் அதை சொல்லியே திரிகிறார்கள். இனியும் இவர்களை விட்டு வைத்தால் ஆண்டவனை படைத்தது அய்யன்தான் என்ற புது ஆராய்ச்சியில் இறங்கி விடுவார்கள்.

    அதனால் என்ன சொன்னாலும் அய்யனின் கைஸ்கள் திருந்ந மாட்டார்கள் என்பதால் அந்த புலம்பலை காதில் வாங்காமலே விட்டு விடலாம். மக்கள் திலகம் முதல் கதாநாயகனாக நடித்த "ராஜகுமாரி" வெளியான ஆண்டு 1947 ல் தான். ஆனால் அந்த முதல் படமே அந்த ஆண்டில் வெளியான படங்களில் வசூலில் முதலிடம் பெற்று சாதனையின் சிகரமாக விளங்கியது அய்யனின் அரைவேக்காடுகளுக்கு தெரியாதா?.

    "ராஜகுமாரி" 9 திரையரங்குகளில் 100 நாட்களை தாண்டி அதிகபட்சமாக 168 நாட்கள் வரை ஓடி மகத்தான வெற்றி பெற்றது. அந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் படம் ராஜகுமாரிதான். புரட்சி நடிகரின் நடிப்பில் தெரிந்த எழுச்சி அனைவரையும் உற்று நோக்க வைத்தது. ஆனால் "பராசக்தி"யின் வெற்றிக்கும் அய்யனுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. அது ஓடியது தீய சக்தியின் தீயான வசனத்துக்காக மட்டும்தான் என்பதை கூட மறைக்க முயல்கிறார்கள்.

    அதேபோல் "மனேகரா"விலும் தீய சக்தியின் பங்கு அபரிமிதமானது. இந்த இரண்டு படங்களுக்கும் இடையே வந்த அய்யனின் அனைத்து படங்களுமே தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்பதே உண்மை. சில படங்கள் படுதோல்வி அடைந்தது.
    அய்யனின் நடிப்பால் கூட படத்தை நிலை நிறுத்த முடியவில்லை என்பதே மறுக்க முடியாத உண்மை. "பராசக்தி", "மனோகரா" தவிர தீயசக்தியின் பங்களிப்பு இல்லாத அய்யனின் படங்கள் எடுபடவில்லையா? அப்படியானால் அய்யனின் நடிப்பில் வெளிவந்த அனைத்து படங்களும் அம்போவா.

    ஆனால் புரட்சி நடிகரோ 1950 ல் அவர் நடித்த இரண்டு படங்களுமே மெகா ஹிட்டாக அமைந்தது. "மருதநாட்டு இளவரசி" "மந்திரி குமாரி" ஆகிய படங்கள்தான். இரண்டுமே பல சென்ட்டர்களில் 100 நாட்களை தாண்டி ஓடியது. "மந்திரி குமாரி" படத்தில் தலைவர் காங்கிரசில் அமைதியாக இருந்த போதிலும் திரைப்படத்தில் சீறிப் பாய்ந்ததை மக்கள் வெகுவாக ரசித்தார்கள்.

    எம்ஜிஆருக்கு புயல் வேகத்தில் ரசிகர் மன்றங்கள் தோன்றின. அடுத்து 1951ல்
    வெளியான "மர்மயோகி" "சர்வாதிகாரி" போன்ற படங்கள் திரையிட்ட அநேக சென்டர்களில் 100 நாட்களை தாண்டி ஓடியது. "மர்மயோகி"யில் குதிரையில் புழுதியை கிளப்பி வரும்போதே எழும்பும் கரவொலியே சொல்லும் தலைவருக்கு உச்ச நடிகர் அந்தஸ்து கிடைத்தாயிற்று என்று. அவர் பேசும் 'கரிகாலன் குறி வைத்தால் குறி தவறாது' என்ற பஞ்ச் டயலாக் இளைஞர்களின் நெஞ்சத்தை கொள்ளை கொண்டது. திரையுலகில் புரட்சியை ஏற்படுத்திய ஆளுமையை என்னவென்று சொல்வது. அதுவரையில் திரைத்துறையில் கால் பதிக்க முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்த அய்யன் தலைவருக்கு போட்டியாக யாரால் அவரை நினைக்க முடியும். தன்னம்பிக்கை இல்லாதவன்தான் கைத்தடியாக கழகத்தை பயன்படுத்துவான் என்பதற்கு அய்யனே சாட்சி.

    "மந்திரி குமாரி" 1950 ஆண்டும் "மர்மயோகி" 1951 ம் ஆண்டும் வசூலில் முதன்மை ஸ்தானத்தை பிடித்ததை எண்ணி பார்க்க வேண்டும். பலபேர் தாங்கிப் பிடித்து நடிக்க வைத்த மீன்வாய் அய்யனை, (மீன்வாய் என்று சொன்னது நானல்ல உயர்திரு மதிப்பிற்குரிய திரு ஏவிஎம் அவர்கள்), போய் தலைவருக்கு போட்டியாக நினைக்கத்தான் முடியுமா? ஆண்டிற்கு ஒரு படம் 100 நாட்கள் ஓடினால் அய்யனுக்கு அதிசயம்.ஆனால் தலைவருக்கோ ஒரு படம் ஓடாவிட்டால் அது அதிசயம். அதிசயமே அசந்து போகும் தலைவரே ஒரு பேரதிசயம்.

    அதே ஆண்டு வெளியான "என்தங்கை" படம்தான் "பராசக்தி"யை காட்டிலும் அதிகமாக(351 நாட்கள்)
    ஓடியதை அறியவில்லையா ஆப் பாயில்டு அய்யன் கைஸ்கள்?.
    இப்படி திமுக மூலம் நுழைந்த அய்யனை தீயசக்தி தாங்கி அழைத்து வராவிட்டால் அய்யன் அன்றே புழக்கடை வழியாக சென்றிருப்பார். கனல் தெறிக்கும் வசனங்களை கத்தி பேசும் அய்யனை காட்டிலும் கனல் தெறிக்கும் விழிகளால் வசனத்தை புரட்சி நடிகர் பேசும் பாங்கு அனைவரையும் கவர்ந்திழுத்ததால்தான் இறுதி வரை நம்பர் ஒன் இடத்திலே இருந்தார் என்பதை யாரும் புறந்தள்ள முடியாது..........ksr..........

  12. #1830
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    உப்பு இட்டவரை உள்ளலவும் நினை!
    என்பார்கள் !அந்த வகையில் அதை சிரமேற்கொண்டு தன் உயிர் போனாலும் நிறைவேற்றுபவர்!
    புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள்!
    தன் இளமைக்
    காலத்தில் இதை நன்கு உணர்ந்தவர் மக்கள்திலகம் அவர்கள் !ஆரம்ப காலத்தில் தான் பட்ட அனுபவங்களை நாடகம் சினிமா அரசியல் என எல்லா நிலைகளிலும் நடத்திக்காட்டியவர் பொன்மனச் செம்மல் எம்ஜிஆர் அவர்கள் ! ஒரு மனிதர் எப்படிப்பட்ட சூழ் நிலையிலும் அதை நிறைவேற்ற பகீரத முயற்ச்சி எடுத்து நடத்திக்காட்டியவர்!
    நினைத்ததை முடிப்பவன் என பெயர் வாங்கியவர் மன்னாதி மன்னன் எம்ஜிஆர் அவர்கள்! *இந்த வைராக்கியம் எல்லோரும் எளிதில் செயல்படுத்த முடியாது !ஆனால்
    அதை மிக எளிதாக நிறைவேற்றிய
    ஆயிரத்தில் ஒருவர் தனிப்பிறவி எம்ஜிஆர் அவர்கள்! இந்த அரிய செயல்களை நல்ல
    மனம் கொண்டவர்களாகலேயே நினைக்க முடியும் !சூது வாது வெள்ளை மனம் வெளுத்ததெல்
    லாம் பால் என நினைக்கும் பொன்மனம் கொண்டவர்களால் தான் இத்தகைய காரியங்களை நிறைவேற்ற முடியும் !
    அரசியலில் இவர் உருவாக்கிய திட்டங்கள் அதை நிறைவேற்ற சந்தித்த தடங்கல்கள் சிரமங்கள் உலகில் இவர் ஒருவரால்தான் கடந்து பொற்கால ஆட்சி தரமுடிந்தது !
    இதற்கு சாதாரமனம் இருந்தால் போதாது !வீரம் நெஞ்சுரம் நற்சிந்தனை தாராள குணம் வாரி வழங்கும் கொடைத்திறன் இத்தனையும் ஒரு சேர இருந்ததால்தான் சாதிக்க முடிந்தது !
    சரித்திரநாயகன் என பெயர் எடுக்க முடிந்தது ! இந்த நூற்றாண்டின் இனையற்ற மனிதர் வரலாற்று நாயகர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஒருவரே! 104 வது பிறந்த நாளை கொண்டாடி மகிழும் இவ்வேளையில் அவர் புகழ் பெருமை கீர்த்தி சாதனை வெற்றி இவைகளை நாம் என்றும் நினைத்து அவர் புகழ் என்றும் ஓங்கி ஒலிக்க இரத்தத்தின் இரத்தங்கள் ! தங்கள் உயிர் போனாலும் புரட்சித்தலைவர் பெருமையை அவர் ஆட்சி சாதனைகளை ஊர் தோறும் பரப்பி வாழும் தெய்வம் !
    ஏழை எளிய மக்களின் இறைவன் எங்கள் எம்ஜிஆர் என முழக்கமிட வேண்டும் அவர் இன்றி இந்த நாட்டின் தலையெழுத்தை யாராலும் மாற்ற முடியாது !தேர்தல்
    என்று வந்தால் புரட்சித்தலைவர் புகழ் பாடுபவர்களுக்கே ஓட்டு என்ற சாதனை படைத்த புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களை வணங்கி வருவோம் !
    வாழ்வில் வளம் பெறுவோம் !
    இனிய மாலை வணக்கம் !����. ����✌️✌️����✌️✌️����✌️✌️�������������������� ����. -எம்.எஸ்.சேகர்
    கோவை-641103..........

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •