-
10th March 2021, 07:52 AM
#11
Junior Member
Diamond Hubber
MGR உடன் சேர்ந்து நடித்து கொண்டு இருந்த சோ தான் வாத்தியார் என்று பெயர் வைத்து அழைக்க ஆரம்பித்து வைத்தார். (கண்ணன் என் காதலன், ஒளிவிளக்கு, நம்நாடு, எங்கள் தங்கம்..இப்படி பல படங்களில் சோ வை வாத்தியாரோடு பாக்கலாம்.)
சோ அவர்களின் வாயில் இருந்து வரும் வார்த்தைக்கு சாகாவரம் உண்டு.
வாத்தியார் என்ற வார்த்தை MGR அவர்களுக்கு பிடித்து அவரே இதை அனுமதித்து இருக்கிறார்.
MGR குண்டடிப்பட்டு மருத்துவ மனையில் இருந்து பரங்கிமலை திமுக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவர் தொடர்ந்து நடிப்பாரா இல்லையோ என்று ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து கொண்டு இருந்தார்கள்.
அந்த கால கட்டத்தில் தமிழ் திரையின் முன்னணி நடிகர்கள் MGR மற்றும் சிவாஜி படங்கள் ஒரே நேரத்தில் வெளி வரும் கொண்டாட்டம் நிறைந்த நேரம்.
சிவாஜி அவர்கள் நடித்த ஸ்ரீதர் அவர்களின் சொந்தப்படமான சிவந்த மண் திரைப்படம், அந்த காலகட்டத்தில் மிக பிரமாண்டமாக தயாரித்து இருந்தார்கள்.
அதே நேரத்தில் MGR அவர்களின் படமான சின்ன பட்ஜெட் படமான நம்நாடு படமும் வெளியிட ரெடியாக இருந்தது.
(MGR அரசியலில் நேரடியாக ஈடுபட்டால் என்ன வரவேற்பு இருக்கும் என் கருதி அவசரமாக 15 நாட்களுக்கு கால்ஷீட் கொடுத்து எடுத்த படம்.)
நம்நாடு படத்தின் தயாரிப்பாளர் திரு.நாகிரெட்டி அவர்கள் MGR இடம், சிவந்த மண் வெளியிடும் நேரத்தை சொல்லி நம்நாடு படத்தின் வெளியீட்டை தள்ளி போடலாம் என்று கேட்டு உள்ளார்.
MGR - நாகிரெட்டியுடம், சிவாஜி அவர்களுக்கும், எனக்கும் தனித்தனியான ரசிகர்கள் உள்ளனர். என்னுடைய ரசிகர்கள் மேலே எனக்கு நம்பிக்கை உண்டு என்று கூறி படத்தை வெளியிட கூறி உள்ளார்.
1969.சிவந்த மண் மற்றும் நம்நாடு இரண்டும் 2 நாட்கள் இடைவேளையில் வெளியிடு.
MGR அவர்களும் நாகிரெட்டி அவர்களும் சேர்ந்து, சென்னை மேகலா தியேட்டரில் இந்த படத்தை பார்த்து மகிழ்ந்தனர்.(நாகிரெட்டி நினைவுகள்.19. பத்தே நாளில் ஒரு MGR படம்)
.…. வாங்கையா ... வாத்தியாரையா.. பாடல் வரவேற்பை பார்த்து சந்தோசம் அடைந்தாராம்.
வாத்தியார் என்ற வார்த்தை MGR அவர்களுக்கு பிடித்து அவரே இதை அனுமதித்து இருக்கிறார்.
என் அண்ணன்(1970) படத்தில் இருந்து உடன் நடித்த தேங்காய் சீனிவாசன் வாத்தியாரே என்று எல்லா படங்களிலும் (பல்லாண்டு வாழ்க, இதயக்கனி (1976), உழைக்கும் கரங்கள்) இதை பிடித்து கொண்டார்.
ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கியவர்கள் சாமானிய மக்களால் வாத்தியார் என்று அழைக்கப்பட்டனர்.
வாத்தியார் என்றால் ஆசிரியர் என்பதோடு முன்னோடி என்றும் பொருள் படும்.
திரைத்துறையில் முதன்முதலாக வெகு அழகாக நடிப்புத் திறனை நயம்பட, இனிமையாக ,இலகுவாக ,இயற்கையாகக் கலையம்சத்துடன் மென்மையாக வெளிப்படுத்தியவர்
நூற்றாண்டுகளைக் கடந்தும் அவருக்கு ரசிகர்கள் உண்டு. தலைமுறைகளைத் தாண்டி அவரை ரசிப்பவர்கள் உண்டு.
அவரைத் தங்கள் வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டனர், எனவே வாத்தியார் என்று அன்போடு அழைக்க ஆரம்பித்தனர்.
அதற்கேற்ற பாடலாக, வாங்கய்யா வாத்தியாரய்யா என்ற திரைப்பாடல் பிரபலமானது.
போக்கு அமைப்பாளர் என்று சொல்லப்படும் Trend Setter அவர்.
அவருக்கு இன்னும் பல செல்லப் பெயர்களும் சூட்டப்பட்டன.
ஏழைகளுக்கு வாரி வழங்கிய வள்ளல் தன்மை காரணமாக போற்றப்பட்டார்
பொன்மனச் செம்மல் என்ற பட்டம் வழங்கப்பட்டது. காலத்தை வென்று காவியமானவருக்கு மக்கள் திலகம் புரட்சித் தலைவர் போன்ற பல பட்டங்கள் வழங்கப்பட்டன.
அதே சமயம் அரசியலிலும் முத்திரை பதித்ததால் அவரை பலரும் திரையுலகிலும் அரசியல் உலகிலும் வாத்தியார் ஆகவே ஏற்றுக்கொண்டனர்
பலரும் அவரைப் பின்பற்றி நடித்தனர், பலருக்கும் அவர் ரோல் மாடல். (சத்யராஜிலிருந்து சிவகார்த்திகேயன் வரை) அரசியலிலும் அவர் வழி வந்தவர் பலரும் இருந்தனர், இருக்கின்றனர்.
அந்த வகையிலும் சரித்திரம் படைத்தவர் நமது முன்னாள் முதல்வர் திரு எம் ஜி ராமச்சந்திரன் அவர்கள்........Baa
-
10th March 2021 07:52 AM
# ADS
Circuit advertisement
Bookmarks