-
11th October 2020, 07:23 AM
#991
Junior Member
Diamond Hubber
வாரிக் கொடுக்கும் வள்ளல்
பாரி வழி வந்த கலைஞர்
இல்லை என்று கைவிரித்துப் பார்த்ததில்லை
இவர் ஏழை துயர் துடைக்க சளைத்ததில்லை
வானத்தில் சிதறிக் கிடக்கும் கோடிக்கணக்கான நட்சத்திரங்களில் ஒன்றே ஒன்றுக்குத்தான் சிறப்புண் . இருளகற்றிப் பிரகாசிக்கும் வீடி வெள்ளிக்குத் தான் பெருமையுண்டு.
சிப்பியில் விளையும் எல்லா முத்துக்களும் சிறந்து விடுவதில்லை. ஒன்றிரண்டு மட்டுமே விலைக்கு அடங்காமல் மதிப்புக்கு நிற்காமல் முற்றி வினைந்து முழுமை பெறகிறது.
வைரத்தின் வரிசையிலும் அப்படித்தான்.
நம்மில் நடமாடும் கோடிக்கணக்கான உயிர்களில் விடி வெள்னியாக . முற்றி விளைந்த முத்தாக, வைரமாக வாழ்த்து காட்டுகிறவர்கள் எண்ணிக்கை அளவில் இல்லை . சட்டிக்காட்ட மட்டுமே அபர்வமாகச் சிலர் உண்டு.
அவர்களின் செயல்களைத் தான் வரலாறு தான் வரலாறு தன் இதயத்தில் வடித்து வைத்துக்கொண்டு காட்டிப் பெருமைபட்டுக் கொண்டிருக்கிறது.
பற்றிப் படரக் கொம்பில்லாமல் துவண்டு கொண்டிருந்த கொடிக்குக் தேர்கொடுத்த பாரி, வறுமையிலும் செம்மையாக நடந்து கொண்ட குமணன் இவர்களெல்லாம் வள்ளல் தன்மைக்கு , கொடயின் சிறப்புக்கு வழிகாட்டியாய் அமைந்தனர்.
இவர்களின் அடிச்சுவட்டில் எல்லோருடைய பாதங்களும் பதித்துவிடவில்லை. கலை உலகப் பொறுத்தவரை தனக்கென எதுவும் சேமித்துக் கொள்ளாமல் வந்ததையெல்லாம் ஏழைகளின் துயர் துடைக்க பிறர் கேட்காமலேயே வாரி வழங்கி, வழிகாட்டியவர் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன்.
கொடைத் திறனுக்கு அவர் கோபுரம் அமைத்துவிட்டுப் போனார். அந்தக் கோடாக்கின் கலசமாக இன்று விளங்குபவர் புரட்சி நடிகர் எம்.ஜி. ஆர். எங்கே துயர் இருக்கிறதோ, அங்கே இவர் துணைநிற்பார் துயர் துடைப்பார்!
மக்களைப் பற்றி ஒரு அரசுக்கு இருக்க வேண்டிய கவல தனிப்பட்ட இவர் உள்ளத்தில் எப்பொழுதும் குடைந்துகொண்டே இருக்கும் . சென்னையைச் சுற்றியுள்ள சேரிகள் எப்பொழுது அகற்று குடிசைகள் இருக்கு மிடத்தில் நல்ல குடில்கள் அமைத்து கொடுப்பது. அவர் மேடையில் பேசும்போது மட்டுமல்ல, தனிமையில் இருக்கும் பொழுதுகட இதே சிந்தனயில் அவர் எண்ணம் இழுக்கப்பட்டிருப்பதைக் காணலாம் .
மழை பெய்து கொண்டிருக்கிறது. படப்பிடிப்பிற்காக எம்.ஜி.ஆர் . காரில் சென்றுகொண்டுஇருக்கிறார். கொட்டும் மழை மேனியில் வழிய ரிக்ஷா ஓட்டிக் கொண்டு வருகிறான் ஒரு தொழிலாளி . நாம் காரில் பாதுகாப் பாகச் செல்கிறோம். அவன் மழையில் நனைந்துகொண்டு வருகிறான். காரில் செல்லும் வசதி அவனுக்கு ஏற்படாவிட்டாலும் மழையிலிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டாமா. இந்தச் சின்ன உதவியைக்கூட அவனுக்கு நம்மால் செய்து கொடுக்க இயலாதா?
இரண்டு திங்களில் அதை செயல்படுத்தி பேரறிஞர் அண்ணா தலைமையில் ஆயிரக்கணக்கான ரிக்ஷா தொழிலாளர்களுக்கு மழைக்கோட்டு வழங்கினார். ...sb...
-
11th October 2020 07:23 AM
# ADS
Circuit advertisement
-
11th October 2020, 07:24 AM
#992
Junior Member
Diamond Hubber
"நீரும் நெருப்பும் " காவியம் மிகப்பெரிய வெற்றியை பதித்தது ஏ சென்டர்களில்*
பி சென்டர்களிலும்*
சி சென்டர்களிலும் மிகப்பெரிய ஓட்டம் கண்டு வசூலையும் பெரிய அளவில் வெற்றி கொண்டது. பல நடிகர்களின் 100 நாள் ஓடிய வசூலை குறைந்த நாளில் வென்று காட்டிய காவியம் நீரும் நெருப்பும் ஆகும். தமிழகத்தில் 22 திரையரங்குகளில் 50 நாட்களை கடந்து இலங்கையில் பெரிய அளவில் வெற்றி பெற்றது.
சென்னையில் நீரும் நெருப்பும் தேவிபாரடைஸ்*
67 நாள் : 4,16,715.90
ஸ்ரீகிருஷ்ணா
67 நாள் : 2,65,278.45
மேகலா
53 நாள் : 1,87,112.65
ஒடிய மொத்த நாள் : 187
மொத்த வசூல் : 8,69,107.00
++++++++++++++++++++++++
சென்னையில்
100 நாள் ஒட்டபட்ட
ஞானஒளி, தவப்புதல்வன்
குலமா குணமா போன்ற படங்களின் வசூலை முறியடித்த காவியம் நீரும் நெருப்பும்...
தெய்வமகன்* ( சா/ கி/புவ)
300 நாள் வசூல் : 8,71,870.76
நீதி*
99 நாள் வசூல்: 9,91,013.41
எ.வந்தாள்*
300 நாள் : 10,21,074.00
1973 பாரத விலாஸ்
சா/கி/புவ (75 நாள்)
225 நாள் வசூல் : 9,84,577.10
நீரும் நெருப்பை விட*
117 நாட்கள் அதிகம் ஒடி...
சொர்க்கம் (304 நாள்)
4 தியேட்டரில் ஒடி முடிய
வசூல் : 10,73,183.00
இப்படி குறைந்த நாளில்*
அதிக வசூலை ஏற்படுத்திய காவியம் நீரும் நெருப்பும் ஆகும்.
50 லட்சம் செலவில் எடுக்கப்பட்ட தர்மம் எங்கே டப்பா படம் படுத்தோல்வி காண்டது
3 லட்சம் கூட வசூலாகாது போண்டியானது.
சென்னை தேவிபாரடைஸ்*
67 நாள் வசூல்...4,16,715.90
தர்மம் எங்கே
ஒடியன் 41 நாள்
மகாராணி 35 நாள்
மேகலா 42 நாள்
ராம் 34 நாள்
வசூல் :3,78,112.00
152 நாள் ஒட்டபட்டும் மேலே
நீரும் நெருப்பும் 67 நாள் ஒடிய*
4 லட்சத்தை கடக்க முடியவில்லை..
மேலும் சாதனை தொடரும்......... ராஜூ.
-
11th October 2020, 07:25 AM
#993
Junior Member
Diamond Hubber
மதுரை சென்ட்ரல் திரையரங்கில்12 வாரங்கள் சாதனை படைத்தது. வசூல் கிட்டத்தட்ட மூன்று லட்சத்தை எட்டியது. அதேபோல திருச்சி சேலம் ஈரோடு கோவை மாநகரங்களில் எல்லாம் சாதனையை படைத்தது. புதுச்சேரியில் மற்ற நடிகர்களின் நூறாவது நாள் படங்களை இங்கு தவிடு பொடியாக்கியது. 54 நாட்கள் ஓடி அதிக வசூலை தந்தது நீரும் நெருப்பும் காவியம்.
50 நாள் திரையரங்குகள்...
++++++++++++++++
நெல்லை மதுரை விருதுநகர் திண்டுக்கல் சேலம் திண்டுக்கல் ஈரோடு கோவை திருச்சி தஞ்சை கும்பகோணம் மயிலாடுதுறை கரூர் பட்டுக்கோட்டை வேலூர் புதுச்சேரி ஆகிய இடங்களில் 50 நாட்களை கடந்து சரித்திரம் படைத்த காவியம் நீரும் நெருப்பும் ஆகும்.
1971 ஆம் ஆண்டு வெளியான மற்ற நடிகர்களின் திரைப்படங்கள்
ஓடியதைவிட அதிக திரையரங்குகளில்
50 நாட்களை வெற்றிகொண்ட காவியம் நீரும் நெருப்பும் ஆகும்
பாபு திரைப்படம் 13 அரங்கில் மட்டுமே
50 நாட்கள் பட்டிக்காடா பட்டணமா 13 அரங்கில் 50 நாட்கள்
ராஜா திரைப்படம்
13 அரங்கில் 50 நாட்கள் நீதி படம் 11 அரங்கில் 50 நாட்கள்
இப்படி இந்த படங்களை விட அதிகமான திரை அரங்குகளில்
50 நாட்களை வெற்றி கொண்ட காவியம்
நீரும் நெருப்பும் திரைப்படம் ஆகும்.
சென்னையில் பல திரைப்படங்களின் வசூலை வென்று காட்டியது.
தெய்வமகன் விளையாட்டுப் பிள்ளை ராமன் எத்தனை ராமனடி பாதுகாப்பு அருணோதயம் குலமா குணமா இரு துருவம் சுமதி என் சுந்தரி தேனும் பாலும்
மூன்று தெய்வங்கள் ஞான ஒளி
தர்மம் எங்கே தவப்புதல்வன்
திரைப்படங்களை விட மக்கள் திலகத்தின் நீரும் நெருப்பும் திரைக்காவியம் கிட்டத்தட்ட 160 தினங்களில் 8 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேல் வசூலை வாரிக் கொடுத்தது.
இலங்கை மாநகரில் மகத்தான வெற்றியைப் படைத்தது...
மேலும் தொடரும்...........ur...
-
11th October 2020, 07:25 AM
#994
Junior Member
Diamond Hubber
இந்தியாவின் தனிப்பெரும் கதாநாயகன்
நமது மக்கள் திலகம் ...
காவியங்கள் திரையிடப்படும் அனைத்து அரங்கிலும் வெற்றியை ...
சாதனையை படைத்துள்ளது.
வேட்டைக்காரன்
சென்னையில்..
வெளியான 14.01.1964 அன்றே ஒரு சாதாரண நடிகரை மட்டும் வைத்து படம் எடுத்தால் போனி ஆகாது என நினைத்து ...
என்.டி. ராமாராவ் என்ற நடிகருக்கு கிருஷ்ணன் வேடம் தரபட்டது.
அவரையும் சேர்த்து எடுக்கப்பட்ட வண்ணபடமே
அந்த படம்.....
வேட்டைக்காரன்
சித்ரா, பீராட்வே, மேகலா
101 நாட்கள்...
ஆனால் இந்த படம் சாந்தியில் 100 நாள் ஒடிய வசூல் படுகேவலமாக இருக்கிறது...
மேலும்... பிரபாத்...சயானி
100 நாள் உண்மையில் ஒடீயதா..
அதை முதலில் கண்டு பிடிக்க வேண்டும்...
சென்னையில் 5 லட்சம் கூட கண்டிப்பாக போலி படம் வசூல் படைத்திருக்க வாய்பில்லை...
வேட்டைக்காரன் 3 அரங்கில் 6 லட்சத்திற்கு மேல் வசூல் ஆகியிருக்கும்...
சேலத்தில்...
நியுசினிமா 107 நாளும்
சித்தேஸ்வரா 42 நாட்களும் ஒடி மொத்தம் 149 நாள் ஒடியது.
போலி படம் 50 நாள் தான் ஒடியது.
அடுத்து வேட்டைக்காரன் 20 அரங்கில் 50 நாட்கள் ஒடியது...
மதுரை 84
திருச்சி 91
கோவை 77
ஈரோடூ, ஆத்தூர், வேலூர்
தி.மலை, பாண்டி, தஞ்சை, குடந்தை, மாயூரம், கரூர், ப.கோட்டை, விருது நகர்,
திண்டுக்கல், நெல்லை
காஞ்சிபுரம், ஆகிய இடங்களில் 50 நாட்களை கடந்தது...
வேட்டைக்காரன் செலவு
10 லட்சம்....
முதல் வெளியீட்டில் ஒடி முடிய 40 லட்சம் வசூல்...
10 லட்சம் போட்டு மேலும் 10 லட்சம் லாபத்தை தேவர் பிலிம்ஸ் பெற்றது.
இது 6மாதத்தில் மட்டும்..
அடுத்தடுத்து 5 ஆண்டுகளில் விற்பனை பன்மடங்கு லாபமாகும்.
7ஏரியா....
1969...1974...1979....1984.
1989....1994....1999...2004
2009... 2014...2019...
இப்படி ஒவ்வொரு 5 ஆண்டிலும் வேட்டைக்காரன் பெற்ற வசூல்...ஒவ்வொரு மாவட்டத்திலும் கைமாறி...கைமாறி போய்
எத்தனையே விநியோகஸ்தர்கள் லாபம் பெற்றதை... போலி க...படம் பெற்றதுண்டா...
1976 ல் சென்னையில் 7அரங்கு வெளியிடப்பட்டது
1982 ல் 5 அரங்கு வெளியிடப்பட்டது.
1990 முதல் 2019 வரை சென்னை சரவணா..
பாலாஜியில் மட்டும் 22 முறை வெளியிடப்பட்ட வசூல் பேரரசின் வேட்டைக்காரன்...
ஒரே தியேட்டர் இப்படி என்றால்... தமிழகமெங்கும் வேட்டைக்காரன் கடந்த 55 ஆண்டில் எப்படி என்பதை யூகித்துக் கொள்ளுங்கள்....
கறுப்பு வெள்ளை படங்களின் தொடர் வெளீயீட்டின் ஒரே திரையுலக சக்கரவர்த்தி..
இந்திய திரைவானில்
மக்கள் திலகம் மட்டுமே..
எல்லா ஏரியாவிலும் 100 க்கு 100 மார்க்கை வசூலில் படைப்பவரிடம்
4,5 தியேட்டரை மட்டுமே வைத்து ஓதும் பெயில் மார்க்கை பெறும் சாதாரண நடிகரின் படத்தை தயவு செய்து ஒப்பிட வேண்டாம் சார்.....
எத்தனை எங்க வீட்டுப்பிள்ளை தலைவரின் சவுக்கடி கொண்ட பதிவை தாங்கள் கொடுத்தாலும்
உறைக்குமா என்பது தெரிவில்லையே சார்..
மேலும் தங்கள் பதிவை விரைவில் எதிர் பார்க்கிறேன்... Ur...
-
11th October 2020, 06:49 PM
#995
Junior Member
Diamond Hubber
கர்ணன் படத்தின் மதுரை தங்கம் வசூல் விவரம் 100 நாள் தேய்த்து ஓட்டியும் மிகவும் குறைவாக இருப்பதால் இப்போது சிவாஜி கணேசன் ரசிகர்கள் வெட்கப்பட்டு ஒரு டெக்னிக் கடைபிடிக்கிறார்கள். வசூல் பகுதியை மறைத்துவிட்டு 100 நாள் என்று உள்ள மேல் பகுதியை மட்டுமே போடுகிறார்கள்.
அதெல்லாம் இருக்கட்டும். இவ்வளவு விளக்கமே வேண்டாம். சென்னை மாநகராட்சி தேர்தல் பிரச்சாரத்தில் மக்கள் திலகம் பிரச்சாரம் செய்ய வந்தால் ஓட்டுக்கள் அவர் பக்கம் விழும் என்பதை புரிந்து கொண்ட காமராஜர், ‘வேட்டைக்காரன் வருவான்.. ஜாக்கிரதையா இருங்க.." என்று பேசினார். சினிமா பார்க்காத காமராஜர் மனதிலேயே வேட்டைக்காரன் பதிந்து விட்டார் என்றால் அவரின் வெற்றி வீரியத்தை உணர்ந்து கொள்ளலாம். ‘கர்ணன் (??????) வருவார், காங்கிரசுக்கு ஓட்டு போடுங்க’ என்று காமராஜர் பேசவில்லை. சிவாஜி கணேசனின் செல்வாக்கு அவருக்குத் தெரியும். அவரது ராசியும் தெரியும். அதனால்தான் கடைசி வரை கட்சியில் பெரிய பதவி கொடுக்காமல் சிவாஜி கணேசனை ஒதுக்கியே வைத்திருந்தார். இருந்தாலும் விதி யாரை விட்டது. 1975 அக்டோபர் 1 ம் தேதி சிவாஜி கணேசன் வீட்டுக்குப் போய் பிறந்த நாள் வாழ்த்து சொன்னார். மறுநாள் மண்டையைப் போட்டார். பின்குறிப்பு: எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடைசியாக தனது யூ டியூப்பில் சிவாஜி கணேசன் பற்றி பேசினார். அதுதான் அவர் கடைசி பதிவு. விதி வலியது......... Swamy...
-
11th October 2020, 06:50 PM
#996
Junior Member
Diamond Hubber
#திமுகவை விட்டு #எம்ஜிஆர் நீக்கப்படுவதற்கு இரண்டு தினங்களுக்கு முன்.....
1972, அக்டோபர் 8ம் தேதி திருக்கழுகுன்றத்திலும், பின்னர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதிலும் நடந்த தி.மு.க. கூட்டங்களில் எம். ஜி. ஆர்.பேசியது... "எம். ஜி. ஆர்., என்றால் தி. மு. க.; தி. மு. க என்றால்
எம். ஜி. ஆர்." என்று சொன்னேன். உடனே ஒருவர், 'நாங்கள் எல்லாம் தி. மு. க., இல்லையா?' என்று கேட்டார். நான் சொல்கிறேன், நீயும் சொல்லேன்... உனக்கும் உரிமை இருக்கிறது !
முன்பு ஒரு முறை காமராஜர் அவர்களை `என் தலைவர்` என்றும் அண்ணா அவர்களை `வழிகாட்டி' என்றும் சொன்னேன். தலைவர்கள் பலர் இருப்பார்கள். ஆனால் கட்சிகளுக்கு கொள்கைகளைத் தருகிற வழி காட்டி ஒருவர்தான் இருக்க முடியும். அண்ணா அவர்கள் தான் தி.மு.க., வின் வழிகாட்டி. காங்கிரசுக்கு மகாத்மா காந்தி தான் வழிகாட்டி.
கழக நண்பர்களுக்குச் சொல்கிறேன், நான் மக்களை சந்திக்கிறவனே தவிர, தலைவர்களைத் தேடிப் போய், வாழ்க்கையை உயர்த்திக்கொள்ள வேண்டிய நிலையில் என் தாயும், தமிழகமும், அண்ணாவும் வைக்கவில்லை.
நான் யாருக்கும் பயந்து கொள்கையை மாற்றிக் கொண்டவன் அல்ல. அப்படிப்பட்ட தேவையும் இல்லை. தேர்தல் நேரத்தில் "தி.மு.க.,வுக்கு வாக்குத் தாருங்கள். இன்னென்ன காரியங்களை நிறைவேற்றுவோம், ஊழல் இருக்காது, நேர்மை இருக்கும்" என்று சொல்கிறோம். அதெல்லாம் கழகத்திலும் இருக்க வேண்டும் என்று விரும்புவதற்கு எனக்கு உரிமை இல்லையா?
மந்திரிகள், சட்டசபை, பார்லிமென்ட் உறுப்பினர்கள் கணக்குக்காட்ட வேண்டும் என்று சொல்கிறோம். கணக்கு அங்கே
காட்டிக்கொண்டிருக்கிறோம். ஆனால் இவர்களின் சொந்தக்காரர்களுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது என்ற கணக்கை தி.மு.க., பொதுக்குழு ஏன் கேட்கக்கூடாது.?
ராமச்சந்திரன் சினிமாவிலும் நடிக்கிறான், சம்பாதிக்கிறான், நீ சம்பாதித்தால் அதற்கு கணக்கு காட்டு. மாவட்ட செயலாளர்கள், கிளை கழகச் செயலாளர்கள், வட்டச் செலாளர்கள் பதவிகளில் இருப்பவர்கள் குடும்பத்திற்கு வாங்கியிருந்த சொத்துக்கள் இருந்தால் கணக்கு காட்ட வேண்டும். அவை எப்படி வந்தன என்று விளக்கம் சொல்ல வேண்டும். பொதுக் குழுவில் நிறைவேற்றி அதற்காக குழு அமைத்து, அதனிடம் ஒவ்வொருவரும் தங்கள் கை சுத்தமானது என்பதை கூறி, மக்கள் முன் நிரூபிக்கலாம். நிரூபிக்க முடியாதவர்களை மக்கள் முன்னாள் நிறுத்தி, அவர்கள் தவறு செய்திருந்தால் தூக்கி எறிவோம். அண்ணாவின் கொள்கைக்கு ஊறு தேடியவர்களை எல்லாம் மக்கள் முன் நிறுத்தி தூக்கி எறிவோம்."
#இதயக்கனி எஸ். விஜயன்...
-
11th October 2020, 06:51 PM
#997
Junior Member
Diamond Hubber
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1980ல் மீண்டும் ஆட்சியை பிடித்தது முதலே
எம்.ஜி.ஆர் அரசு கலைக்கப்படும் என்ற செய்தி பரவிக் கொண்டிருந்தது..
முந்தைய ஜனதா ஆட்சியில் காங்கிரஸ் ஆளும் மாநில அரசுகள் கலைக்கப்பட்டன.
அதே வேளையில்,1980-ல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில்
அஇஅதிமுக வெறும் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றதால், இந்திரா காந்தி
அவர்கள் எம்.ஜி.ஆர் ஆட்சியை கலைத்தார்.
அந்த சமயம் ஆளுநரிடம் புகார் பட்டியல் ஒன்றை கொடுத்தார் கருணாநிதி .
புகார் கொடுத்த மூன்றாம் நாள் அதிமுக அரசு கலைக்கப்பட்டது.
"சவாலை சந்திக்க தயார்" என்று அறிவித்தார் எம்.ஜி.ஆர். 1980ல் மே மாதம் 28 முதல் 31 வரை தேர்தல் என அறிவிக்கப்பட்டது.
சட்டமன்ற
தேர்தலைச் சந்திக்க
விரிவான, வலுவான கூட்டணியை உருவாக்கினார் தலைவர் எம்ஜிஆர்.
ஜனதா கட்சி 60க்கு மேற்பட்ட தொகுதிகளை கேட்டதால் அதை நிராகரித்து,
இடதுசாரிக் கட்சிகளுக்கு தலா 16 தொகுதிகள், குமரி ஆனந்தனுக்கு 12 தொகுதிகள் (கா .கா .தே. க.) பழ. நெடுமாறனுக்கு 7 தொகுதிகள் அளித்து,
168 தொகுதிகளில் அஇஅதிமுக போட்டியிடும் என அறிவித்தார்.
மேலும் சில உதிரி கட்சிகள் இரட்டை இலைச் சின்னத்திலேயே போட்டியிட்டன.
தொகுதி பங்கீட்டில் அதிகம் சிக்கல்கள் இல்லை.
எம்.ஜி.ஆரின் சூறாவளி பிரசாரத்திற்கு பதில் கொடுக்க கலைஞர் கருணாநிதிக்கு நடிகர் சிவாஜி கணேசன் உதவியாக இருந்தார். நாடாளுவதற்கு கலைஞர், நடிப்பதற்கு எம்.ஜி.ஆர். என கூட்டங்களில்
சிவாஜி கணேசன் பேசினார்.
பதிலுக்கு தி.மு.க.- இ .காங்கிரஸ் அணியை சந்தர்ப்பவாத கூட்டணி என்று எம்.ஜி.ஆர்.விமர்சித்து பிரசாரம் செய்தார்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் தோல்விக்கு காரணமாக சொல்லப்பட்ட இட ஒதுக்கீடு விஷயத்தில் சில மாற்றங்களை செய்தார்.
முக்கியமாக பிற்படுத்தப்பட்டோர் சலுகைக்கான 9000 ருபாய் வருமான வரம்பு வாபஸ் பெறப்பட்டது.
தவிர, பிற்பட்டோருக்கான இட ஒதுக்கேடு 31 சதவிகிதத்தில் இருந்து 50 ஆக உயர்த்த பட்டிருந்தது.
அதனால் திராவிடர் கழகத்தின் ஆதரவும் அஇஅதிமுகவுக்கு கிடைத்தது.
கூட்டங்களில் மக்கள் மத்தியில் நியாயம் கேட்டார் எம்.ஜி.ஆர்..
"நாங்கள் என்ன தவறு செய்தோம்" என்ற தலைப்பில் கேள்விகள் தயார் செய்யப்பட்டு மேடைக்கு மேடை அக்கேள்விகளையே எழுப்பினார்.
ஆட்சியில் லஞ்சம் இருக்க கூடாது என்று ஆசைபட்டேனே, அது தவறா ?
ஊழலை ஒழிக்க வேண்டும் என்று சொன்னேனே,
அது தவறா??
சட்டத்துக்கு முன், நீதிக்கு முன் கட்சி கண்ணோட்டம் இருக்க கூடாது என்றேனே அது தவறா???
கோட்டை வராண்டாவில் அரசியல்வாதிகள் நடமாடக்கூடாது என்றேனே, அது தவறா????
தவறு செய்பவர்கள் என் கட்சிகாரர்கள் என்றாலும் தயங்காமல் நடவடிக்கை எடுங்கள் என காவல்துறைக்கு சுதந்திரம் அளித்தேனே,
அது தவறா???
புயல், வெள்ளம், தீ விபத்து போன்றவற்றில் மக்கள் பாதிக்கபட்டபோது ஓடோடி சென்று உதவி செய்தேனே , அது தவறா?, எது தவறு என்று சொல்லுங்கள்,
என்ன காரணத்திற்காக ஆட்சியை கலைத்தார்கள்.?????
எம்.ஜி.ஆர். எழுப்பிய கேள்விகள் வாக்காளர்கள் மத்தியில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தின..
தமிழ் மக்களே,. நாடாளுமன்ற தேர்தலில் நீங்கள் தந்த தீர்ப்பு தவறு என்று நினைத்தால் அதை இப்போது திருத்தி எழுதுங்கள்..
அஇஅதிமுகவுக்கு வாக்களியுங்கள் என்று எம்.ஜி.ஆரின் வேண்டுகோள் தேர்தல் களத்தில் திரும்ப திரும்ப
எதிரொலித்தன..
தேர்தல் முடிவுகள் வந்த போது எம்.ஜி.ஆர் அபார வெற்றி பெற்றிருந்தார்...
அஇஅதிமுக மட்டும் 129 இடங்களை கைப்பற்றியது.
சட்டமன்ற தேர்தலில் அஇஅதிமுக கூட்டணி இமாலய வெற்றியை அடைந்தது..
முதல்வர் நாற்காலியை மீண்டும் எம்.ஜி.ஆர். வசமே மக்கள் ஒப்படைத்தனர்.
அஇஅதிமுக அணியில் இடம் பெற்ற சி.பி.எம்.முக்கு 11, சி.பி.ஐ க்கு 10, கா.கா.தே கா. வுக்கு 6, நெடுமாறனின் காமராஜ் காங்கிர*ஸ் 5 தொகுதிகளில் வெற்றி பெற்றன. இவ*ற்றில் காமராஜ் காங்கிர*ஸ் மற்றும் காந்தி காமராஜ் தேசிய காங்கிர*ஸ் புதிய க*ட்சிகள். புதிய சின்னங்க*ளுட*ன் போட்டியிட்ட*ன.
அவ*ற்றையும் மக்களிட*ம் கொண்டு சேர்த்தார் த*லைவ*ர்.
1977ல் சென்னையில் ஒரு தொகுதியில் மட்டுமே (ஐச*ரி வேலன்-ராதாகிருஷ்ணன் நகர்) வென்ற அதிமுக 1980ல் 6 இட*ங்க*ளில் வென்றது..
மேலும் அண்ணா ந*க*ரில் ஹ*ண்டேவை எதிர்த்து போட்டியிட்ட க*ருணாநிதிக்கு வாயில் நுரைத*ள்ளி, தோற்றதாக அறிவிக்கப*ட்டு, பின் எம்ஜிஆரின் க*ருணையால் 510 ஓட்டுக்கள் வித்தியாச*த்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட*து.
தி.மு.க. 38 இடங்களையும், இ. காங்கிரஸ் 30 இடங்களையும் பெற்றன.
1980ல் ஜூன் மாதம் 9ம் தேதி தமிழக முதல்வராக 2-ம் முறை பதவி ஏற்றார் தலைவர்..
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் என்பது எப்போதும் தவிர்க்க முடியாத ஒரு வரலாறு... ❤❤❤❤...da...
-
11th October 2020, 06:51 PM
#998
Junior Member
Diamond Hubber
செருப்பின்றி நடந்து செருக்கின்றி வளர்ந்த தலைவா...
அனைத்தும் அறிவோம்...
பாருங்க... பொறுங்கள்.* என்றும் உங்கள் புகழ் காப்போம்....
இதுவே ஆரம்பம் என்று எப்போதும் எடுத்து கொண்டு பயணம்.
உங்கள் பயணங்கள் என்றும் முடிவதில்லை.....
உண்மை நெஞ்சங்கள் இருக்கும் வரை...
ஓடவிட்டு பின் முறையாக செய்வோம்.
வாழ்க தலைவர் புகழ்
நாங்க நெருப்புல நடந்தவங்க...ஆனால் நீதிக்கு பயந்தவங்க
தருமத்தை அழிக்க வந்தா எங்களை தந்து காப்போம் என்றும்.
இன்னும் இருக்கிறோம் உங்கள் விசில் அடித்த குஞ்சுகள்...
உங்கள் பாட்டு பாடி சொல்ல போனால் நல்லவற்கு நல்லவர் கெட்டவற்கு கெட்டவர் நாங்க...உங்கள் விழுதுகள்....என்றும்
மறக்க முடியாத நாள் நேற்று 10.10.1972..
பழிக்கு பழி...*
நீங்கள்* கொலுவில்* வைத்தவரை கீழே இறக்கி தெருவுக்கு கொண்டு வர சபதம் ஏற்ற நாள் இது..
வென்றோம் தலைவரே வென்றோம் நாம்.*.......... Sudharshan...
-
11th October 2020, 06:52 PM
#999
Junior Member
Diamond Hubber
மழை வரும்
நல்ல மனிதர்கள் மண்ணை ஆள வந்தால் மழை பெய்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் என்பதை உண்மையை நிஜம் ஆக்க....
முதன் முறையாக மக்கள் திலகம் முதல்வரான காலம் 1977 அந்த ஆண்டு பருவ மழை தென் மாவட்டம் முழுவதும் பெய்து ஒரு வழியாக வெள்ள காடாக மாற்றி சேதாரத்தை ஏற்படுத்தி விட்டது
வெள்ள சேதாரத்தை பக்கத்து மாவட்டம் என பாதித்த பல பகுதிகளை சுற்றி பார்த்த முதல்வர் மதுரையில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கி மாவட்ட ஆட்சியாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் ஆலோனையில் ஈடு பட்டிருந்தார்
செளராஷ்டிரா பள்ளியை சேர்ந்த மாணவர்கள் தலைவராக இருந்த ஏ.ஜி.எஸ் ராம்பாபு தலைமையில் ஒரு சில மாணவர்கள் தாங்கள் திரட்டிய வெள்ள நிவாரண தொகையை முதல்வரிடம் கொடுக்க முற்பட்டனர் முன் அனுமதி பெறாத காரணத்தால் உள்ளே செல்ல விடாமல் காவலர்கள் தடுத்தி நிறுத்தினர்
பத்திரிக்கை புகைப்பட காரர்கள் அவர்களை சுற்றி வளைத்து என்னவென்று விசாரித்ததில் மாணவர்கள் வெள்ள நிவாரணம் கொடுக்க வந்த மாணவர்களை பாராட்டி அதை எப்படியாவது முதல்வரிடம் சேர்க்க முற்பட்டனர்
பேச்சுவார்த்தை முடித்து மாவட்ட கலெக்டர் ஒருவர் வெளியே வந்தார் அவரிடம் செய்தியாளர்கள் முறையிட்டனர்.உடனே அவர் உள்ளே சென்று முதல்வர் உதவியாளரிடம் தகவலை சொல்ல சொன்னார்.
விசயத்தை கேள்வி பட்ட முதல்வர் உடனே அவர்களை உள்ளே வர அனுமதி தந்தார் மாணவர்களுக்கு எல்லை இல்லா மகிழ்ச்சி உடனே உள்ளே சென்றார்கள்
முதல்வர் அவர்களை கண்டதும் எழுந்து வரவேற்றார் காரணம் பாதிக்கப் பட்டவர்களுக்கு கொடுத்து உதவ முன் வந்த அந்த உயர்ந்த மனங்களுக்கு மதிப்பளித்தார் என்பதே உண்மை அவர்களை ஆரதழுவி வரவேற்று என்ன படிக்குறீர்கள் பெயர் என்ன? அப்பா அம்மா என்ன? செய்கிறார்கள் என்று தாய் உள்ளத்தோடு பேசிய வார்த்தைகளை வச்ச கண் வாங்காமல் பார்த்த மாணவர்களுக்கு வார்த்தையே வராமல் அந்த ரோஜா முகத்தை அருகில் பார்த்து மலைத்து நின்றனர்.
அவர்கள் திரட்டி வந்த 901 ரூபாய் நிதியை முதல்வரிடம் கொடுத்து புகைப்படம் எடுத்து கொண்டு விடை பெற்றனர்.
மீண்டும் சந்திக்கும் வரை
#எல்லா புகழும் எம்ஜிஆர்கே...
-
11th October 2020, 07:02 PM
#1000
Junior Member
Diamond Hubber
துப்பாக்கி ஆப்ரகாம் லிங்கனை கொன்றது ...
துப்பாக்கி ஜான் கென்னடியை கொன்றது ...
துப்பாக்கி காந்திஜீயை கொன்றது ...துப்பாக்கி இந்திரா காந்தியை கொன்றது ...
உலகில் பலரை கொன்ற துப்பாக்கி பொன்மனசெம்மலிடம் மட்டும் தோற்றது ...
துளைக்க வந்த தோட்டாவும் தங்கியது சிலகாலம் வந்தாரை வயிறு குளிரவைப்பவர் அல்லவா மக்கள் திலகம் ...
தர்மதேவதை காக்க தர்மதேவன் தர்மம் தனின் சிறப்பை காட்ட தோட்டா துளைக்க வைத்ததோ...
ஏழுவள்ளலும் ஒரு செய்கை மூலம் அறிய பட
எட்டாம் வள்ளல் எம்ஜிஆர் வாழ்நாள் முழுவதும் பதித்தார் வள்ளல் குணத்தை...
வாழ்க எம் ஜி ஆர் புகழ் ...
Bookmarks